மீன ராசி - குரு பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 


குரு பெயர்ச்சி பொது பலன்கள்

மீன ராசிக்கு அதிபதியும் மற்றும் பத்தாம் வீட்டு அதிபதிமான குரு பகவான் நான்காம் வீட்டுக்கு வருகிறார். இது பெரிய தவறு இல்லை. என்றாலும் பெரிய நற்பலன்கள் கொடுக்காது. மேலும்  பெரிய ஏற்றம் எதுவும் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

வீடு, ரியல் எஸ்டேட் மற்றும் பராமரிப்பு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு  வளர்ச்சிகான  வாய்ப்புகள்கிடைக்கும் .

என்றாலும் முதலீடு , பங்கு சந்தை மற்றும் எல்லா பண விஷயத்தில் மிகவும்  கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நெருங்கியவரே பிரச்சனைகளை தரும் வாய்ப்பு உள்ளது.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஆனாலும் வேலை கட்டாயம் கிடைக்கும். என்றாலும் வருமானம் திருப்திகரமாக இருக்காது.

திருமணத்திற்கு காத்து இருப்பவர்களுக்கு திருமணம் சற்று தாமத படும்.

உடல் நலத்தில் பெரிய பிரச்சனைகள் வராது. என்றாலும் மன நலத்தை பாதுக்க வேண்டும். மன அழுத்தங்கள் ஏற்படலாம்.

மீன ராசி மாணவர்களுக்கு அதிக கவனம் மற்றும் பொறுமை இருந்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி கட்டாயம் உண்டு.

அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். நேர்மையான  உழைப்பும், நேரடி கவனமும் இருந்தால், எதிர்பார்க்கும் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் வரும்.

மீன ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் வியாபாரத்தில், வாடிக்கையாளர்களை  திருப்தி மற்றும் நம்பிக்கை பெற முயற்ச்சிக்க வேண்டும்.

யாருடைய தனிப்பட்ட தவறையும் பெரிதுபடுத்த வேண்டாம். அனுபவம் மிக்கவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சங்கடங்கள் தீரும். வரவு சீராகும். குழந்தைகளிடம்  வீண் கண்டிப்பு வேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

குரு பெயர்ச்சி 2025 அக்டோபர் மாதத்தில் குரு பகவான் ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கும் போது, ​​அந்த நேரம் குழந்தைகளுக்கும், பொருளாதார வளத்திற்கும் ஏற்றதாக இருக்கும். காதல் உறவுகளிலும் வெற்றிக்கான நேரம் இருக்கும்.

அதன் பிறகு, குரு வக்ர நிலையில் டிசம்பரில் மீண்டும் நான்காவது வீட்டிற்குள் நுழையும் போது, ​​குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக மாறும் மற்றும் நீங்கள் பணியிடத்திலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் அப்போதுதான் நீங்கள் வெற்றியைப் பெற முடியும்.

குரு பார்வையின் பலன்கள்




ஸ்தான பலத்தை விட பார்வை பலனை  அதிகம் பெற்ற குரு பகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக, முறையே எட்டாம்   வீடு  , பத்தாம்   வீடு மற்றும் பனிரெண்டாம் வீடுகளை  பார்க்கிறார். அதாவது துஸ்தானம் ர் ஸ்தானம், தொழில் ஸ்தானம் மற்றும்  விரைய மற்றும்  மோட்ச ஸ்தானத்தை  பார்க்கிறார். 

இந்த பார்வைகளால்   சாதகங்கள் அதிகரித்து சங்கடங்கள் குறையும். அதேசமயம் உங்கள் செயலிலும் வார்த்தையிலும் நிதானம் இருந்தால் மட்டுமே நல்லவை நிலைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

குருவின் பார்வைகளால், மீனம் ராசிக்காரர்களுக்கு சில சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம். பணப்புழக்கம், கௌரவம் மற்றும் குடும்பத்தில் அமைதி போன்ற பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.