இந்த வருடம் - 2025 குரு பெயர்ச்சி எப்போது?
குரு பெயர்ச்சி பொது பலன்கள்
இந்தப் பெயர்ச்சியில் குரு பகவான் துலா
ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம்வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார் .
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான
வாய்ப்புகள் உண்டு.
ஒன்பதாவது வீட்டிற்கு குரு பெயர்ச்சியான பிறகு பொருளாதார வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம்
இருக்கும்.
உத்தியோகத்தில், அனுகூலமான சூழ் நிலை
நிலவும். உடனிருப்போர் ஆதரவு ஊக்கம் தரும். மேலதிகாரிகளிடம் பேசும்போது பணிவே நல்லது.
இடமாற்றம், பதவி
மாற்றம் வரும். அது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.
புதிய வேலைக்கான முயற்சியில் உள்ளவர்களுக்கு, உங்கள் திறமைக்கேற்ற சிறப்பான வாய்ப்புகள் அமையும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த உயர்வை அடையலாம்.
தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு பலவிதத்தில் லாபம்,
முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
புதிய சொத்து வாங்குதல், விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் ஏற்பட வாய்ப்புள்ளது.
குருவின் பெயர்ச்சியால் , சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல யோகமான காலம்.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விலகி இருந்த நட்பும் உறவும் வீடுதேடி
வரும். யாரிடமும் கடுஞ்சொல் பேசவேண்டாம்.
நண்பர்கள் உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
திருமணத்திற்கு காத்து இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம்
ஆனவர்களுக்கு, வாழ்க்கைத்துணையுடன்
அன்யோன்யம் உருவாகும். குழந்தைகளால் பெருமை சேரும்.
புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். பணத்தைக் கையாளும் பொறுப்பில்
கவனச்சிதறல் கூடாது.
இந்த பெயர்ச்சியால், உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம்
அதிகரிக்கும். ஆன்மிக பயணங்கள், யாத்திரைகள் போவதற்கான சூழ் நிலை அமையும்.
குரு துலா ராசிக்கு 3ம் வீட்டுக்கும், 6ம் வீட்டுக்கும் உடையவர் என்பதால்,இந்த பெயர்ச்சியால் எல்லா விசயங்களிலும் அதிக முயற்சி,
போராட்டம் மேற்கொண்ட பின்னரே வெற்றி கிட்டும். ஆனால் அதித வெற்றி
கிடைக்கும்.
முத்த சகோதர மற்றும் சகோதரியால் சில பிரச்னைகள் உண்டாகும்,
மேலும் அவர்களின் உடல் நலம் பாதிக்கலாம். கவனம் அவசியம்
அக்டோபரில் குரு பத்தாம் வீட்டிற்குச் செல்வதால் பணியிடத்தில் சில குழப்பங்கள்
இருக்கும். அதீத நம்பிக்கையால் சில பிரச்சனைகளை பார்க்க நேரிடும்.
வக்ர நிலையில், டிசம்பரில் குரு உங்கள் ஒன்பதாம் வீட்டில் நுழைவார். இந்த நேரத்தில் வேலையில்
தடைகள் இருக்கலாம் மற்றும் தந்தைக்கு
உடல்நலப் பிரச்சினைகள் வந்து தொந்தரவு செய்யலாம்.
குரு பார்வையின் பலன்கள்
ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7,ஒன்பதாம் பார்வையாக முறையே ஒன்றாம் வீடு அதாவது ராசி ,
முன்றாம் வீடு மற்றும் ஐந்தாம் வீடுகளை பார்க்கிறார். அதாவது ராசி அதாவது உடல்
நலம் , தைரிய ஸ்தானம்
மற்றும் புத்திர ஸ்தானம் பார்க்கறார்.
குருவின் ஐந்தாம் பார்வை ராசி மீது விழுவதால் அனைத்து விதமான நன்மைகளும் கிட்டும். மேலும்
தாராளமான பணப்புழக்கம் ஏற்படும்.
குரு பகவான் உங்கள் ராசியிலிருந்து முதல் வீடு, மூன்றாம் வீடு மற்றும் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் துலா
ராசி மாணவர்களுக்கு கல்வி மற்றும் உயர்கல்வியில் நல்ல பலன் கிடைக்கும்.
குழந்தைக்காக காத்து இருப்பவர்களுக்கு
குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.