சிம்மம் ராசி - குரு பெயர்ச்சி - 2025

  


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

மிதுனம் ராசி

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

சிம்மராசிக்கு 10ம் வீட்டில் இருந்து 11ம் வீடான மிதுனத்திற்கு குரு வருகிறார். குரு பெயர்ச்சியால் மிகுந்த நற்பலன்கள் அனுபவிக்கும் ராசியில் சிம்ம ராசியும் ஒன்று ஆகும்.

இந்த பெயச்சியால் செய்யக்கூடிய வேலை, தொழில், வியாபாரத்தில் மிகச் சிறப்பான லாபம் கிடைக்கும். மேலும் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும்.

சரியான திட்டமிட்டு செயல்பட்டால் எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பலவகையில் பண வரவு உண்டாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு  திருமணம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்வு ஏற்படும்.

பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். என்றாலும் அஷ்டம சனி நடைபெறுவதால் முதலிடுகளில் மிகுந்த கவனம் அவசியம்.

சிம்மராசிக்கு 10ம் வீட்டில் இருந்து 11ம் வீடான மிதுனத்திற்கு குரு வருகிறார். குரு பெயர்ச்சியால் மிகுந்த நற்பலன்கள் அனுபவிக்கும் ராசியில் சிம்ம ராசியும் ஒன்று ஆகும்.

இந்த பெயச்சியால் செய்யக்கூடிய வேலை, தொழில், வியாபாரத்தில் மிகச் சிறப்பான லாபம் கிடைக்கும். மேலும் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும்.

சரியான திட்டமிட்டு செயல்பட்டால் எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பலவகையில் பண வரவு உண்டாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு  திருமணம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்வு ஏற்படும்.

பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். என்றாலும் அஷ்டம சனி நடைபெறுவதால் முதலிடுகளில் மிகுந்த கவனம் அவசியம்.

குரு பார்வையின் பலன்கள்


ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது ஐந்தாம் பார்வை சிம்ம ராசியின் 3ம் வீட்டையும், ஏழாம்பார்வை  சிம்ம ராசியின் 5ம் வீட்டையும்,ஒன்பதாம் பார்வை 7ம் வீட்டையும் பார்க்கிறார். அதாவது தைரிய ஸ்தானம் , புத்திர ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் பார்க்கறார்.

குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் குழந்தையைப் பெற விரும்புபவர்களுக்கு  குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மேலும் 7ம் வீட்டை குரு பார்ப்பதால் வாழ்க்கை துணையுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.  குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நிகழும்.

அஷ்டம சனி பாதிப்பு இருக்கும் இந்த சமயத்தில், குரு 3ம் வீட்டை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும்.