பூரம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகி கொண்டவர்களாக இருப்பார்கள். அழகாக ஆடை அணிகலன்களை அணிவதிலும் மிடுக்கான நடை நடப்பதிலும் நாட்டம் இருக்கும். பிறக்கும்போதே சுக்கிர தசை எனவே தந்தைக்கு யோகத்தை ஏற்படுத்தும்.

“தத்துவங்களைக் கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள். தாய், தந்தையரைப் பேணக்கூடியவர்கள்” என்று காக்கேயர் நாடி என்ற நூல் கூறுகிறது. பொதுவாக பூர நட்சத்திர ஆண்களும் பெண்மையின் சாயலுடன் காணப்படுவார்கள்

காம உணர்வு அதிகம் இருப்பதால் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். நல்ல அறிவும் அறிவுக்கூர்மையும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும் அதிகமிருக்கும். மற்றவர்களை அனுசரித்து சென்று அவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்வார்கள் என்றாலும் கோபம் வந்து விட்டால் கட்டு படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறமை இருக்கும். எதார்த்த குணமும், ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள். குறுக்கு வழியில் பணம் சேர்வதற்கான வாய்ப்புகளும், எண்ணங்களும் உண்டு.


குடும்ப வாழ்க்கை

பொதுவாக சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. ஆனால் பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். காதலில் வெற்றி பெற கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்களின் பேச்சாற்றலால் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளை நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். மேலும் அனைவரையும் தன் வசப்படுத்தி வைத்து இருப்பார்கள்.


நண்பர்கள்

நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர்.


நட்பு நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திர நண்பர்கள் அமைவதும், வாழ்க்கை துணை அமைவதும் மிகப்பெரிய அதிஷ்டம் ஆகும்


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பூர நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் - ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகும். இந்த 3 நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் அவர்களால் துரோகத்தை சந்திக்க வேண்டி வரும். வாழ்க்கைத் துணையாக இந்த நட்சத்திரக்காரர்கள் அமைந்தால், வாழ்க்கை மொத்தமும் நிம்மதியே இருக்காது. பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.


தொழில்

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒயாது உழைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அரசு உத்தியோகம் மற்றும் சொந்த தொழில் சம்பாதிக்கும் யோகம் உண்டு. நடிப்புத் துறையில் சிறந்து விளங்குவார்கள். கலை, இசை, அரசியல், ஆன்மீகம், ஆடல் பாடல் ஆர்வம் அதிகமாக இருக்கும்


தசா பலன்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை முதல் தசையாக வரும். சுக்கிர தசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சுக்கிர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்

சுக்கிரன் தசை:
இளம் வயதில் சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சுக்கிர தசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை அணிகலன்களின் சேர்க்கை, உற்றார் உறவினர்கள் ஆதரவு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடைய முடியும். மேலும் இளமையில் வரும் சுக்கிரன் தந்தைக்கு நல்லது செய்யும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இளமை கால வாழ்க்கையில் பல போராட்டங்கள் உண்டாகும்.
சூரியன் தசை:
இரண்டாவதாக வரும் சூரிய தசையின் மொத்த காலங்கள் 6 வருடங்களாகும். இத்தசை காலங்களில் சிறு சிறு உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் சூரியன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்
சந்திரன் தசை:
மூன்றாவதாக வரும் சந்திர தசையின் காலங்கள் 10 வருடங்களாகும். இத்தசை காலங்களில் தேவையற்ற மனக் குழப்பங்களும் முன்னேற்ற தடையும், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.
ராகு தசை:
நான்காவதாக வரும் ராகு தசையின் காலங்கள் 18 வருடங்களாகும். இத்தசை காலங்களின் முற்பாதி யானது யோகத்தை கொடுத்தாலும் பிற்பாதியில் கண்டங்களை உண்டாக்கி உடல் உஷ்ணத்தையும் மேலும் சிலருக்கு மாரகத்தை ஏற்படுத்தும்.
குரு தசை:
ஐந்தாவதாக வரும் குரு தசை ஆகும். குரு நல்ல பலத்துடன் இருந்தால் மட்டுமே நல்லது வயதான காலத்தில் நன்மைகள் பிள்ளைகளால் நடக்கும்


பொது பரிகாரம்

பூர நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பலா மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பூர நட்சத்திர நாளில் நவகிரக சாந்தி செய்வது. நோயாளிகள் மருந்து உண்பது, குளிப்பது, சித்திரம் வரைவது, வழக்குகளை வாதிடுவது போன்றவற்றை செய்யலாம்


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம்br>
பொருந்தா நட்சத்திரங்கள்:

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. உத்திரட்டாதி வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஸம் பூஜயாமி அர்ய மானம்
பல்குனி தார தேவதாம் தூம்
ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்

பூரம்

நட்சத்திரம் - பூரம்


பூரம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 11 வது பிரிவு ஆகும். நட்சத்திர கூட்டத்தின் பின் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூரத்தின் (δ, θ லியோனிசு) பெயரைத் தழுவியது. பூரத்தின் சமஸ்கிருத பெயரான பூர்வ பால்குனி (Purva Phalguni) என்பது "முந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் இரண்டு கால்கள்" ஆகும். மேலும் இரண்டு கண்களின் கருமணிகள் போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். “பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான்” என்று ஒரு வாக்கு இருக்கிறது.



நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

முதுகெலும்பு, இதயம்

பார்வை

கீழ்நோக்கு.

பாகை

133.20 &  146.40

தமிழ் மாதம்

ஆவணி

நிறம்

 வெண்மை.

இருப்பிடம்

கிராமம்.

கணம்

மனுஷ கணம்

குணம்

உக்கிரம்/குரூரம்,  ராஜசம்

மிருகம்

பெண் எலி

பறவை

பெண் கழுகு

மரம்

பாலுள்ள பலா மரம்

மலர்

வெள்ளை அரளி

தமிழ் அர்த்தம்

பாராட்டத்தகுந்தது

தமிழ் பெயர்

கணை

நாடி

மத்திம நாடி, பித்தம்

ஆகுதி

பச்சைப் பயறு

பஞ்சபூதம்

நீர்

நைவேத்யம்

சியாமக அன்னம்

தேவதை

தேவர்களில் ஒருவரும், பத்ரி நாராயணனின் அம்சமுமான பகன்.

அதி தேவதை

ஸ்ரீகாஞ்சி காமாட்சி

அதிபதி

சுக்கிரன்

நட்சத்திரம் தன்மைகள்

அப சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

கட்டில் கால்களைப் போன்ற இரண்டு நட்சத்திரங்களின் தொகுப்பு.

மற்ற வடிவங்கள்

கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை

மற்ற பெயர்கள்

எலி, உமை,கணை,இடைசளி, துர்க்கை, நாவிதன்

வழிபடவேண்டிய தலம்

அக்னீசுரர் கற்பகாம்பிகை, கஞ்சனூர்

அதிஷ்ட எண்கள்

1, 4, 6

வணங்க வேண்டிய சித்தர்

பராசரா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

மோ, ட, டி, டு

அதிஷ்ட நிறங்கள்

இளஞ் சிவப்பு, வெள்ளை

அதிஷ்ட திசை

தென்கிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வெள்ளி, செவ்வாய்

அணியவேண்டிய நவரத்தினம்

சிர்கான் (Zircon).

அதிஷ்ட உலோகம்

வெள்ளி (Sliver)

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

 ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

பார்வதி,மீனாட்சி,ஆண்டாள்

குலம்

க்ஷத்திரிய குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

மகம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

கலைத் திறமை உள்ளவர்கள். தலைமை தாங்கும் இயல்புகளும், விருப்பம் கொண்டவர்கள். கோபம், ஆத்திரம், பிடிவாதம், ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியம் ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள். புகழுக்காக எதையும் இழக்க துணிந்தவர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்கள். சிறந்த பேச்சாளர்கள், வாதத் திறமை மிக்கவர்கள். மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழைய நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் எல்லாருக்கும் அந்த யோகம் அமைவதில்லை. எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் விஷயங்களில் மற்றவர்கள் தலையிட்டு செய்வதை விரும்ப மாட்டார்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மிக்கவர்கள். எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பதற்கேற்ப நியாமான கோபமும், குணமும் இருக்கும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள்.

எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடியவர்கள். இளமையிலேயே சுக்கிர தசை வருவதால், சிறுவயதிலேயே சுகபோகங்களை அனுபவிப்பார்கள். அனுபவ அறிவு அதிகம். கல்வியில் தடை ஏற்படும்.


குடும்ப வாழ்க்கை

கவர்ச்சியான மெலிந்த உடலழகைப் பெற்றிருப்பார்கள். சிற்றின்ப வேட்கை மிக்கவர்கள். குரு நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

இவர்களுக்கு ஆண் குழந்தை பாக்கியமே அதிகம். வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு அதிகமிருந்தாலும் எப்பொழுதும் எதையாவது மனதில் போட்டு குழப்பி கொண்டேயிருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் கூட வலிய சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையை விட மாட்டார்கள். மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசம் இருக்கும். மேலும் உங்கள் குழந்தைகள் அதிஷ்டசாலிகளாக இருப்பார்கள்


நண்பர்கள்

சில நண்பர்கள் மட்டும் இந்த நட்சத்திர காரர்களிடம் மிக உண்மையாக இருப்பார்கள். பொதுவாக இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கை துணையாக அமைவது மற்றும் நண்பர்கள் இருப்பது மிகுந்த நன்மைகளைத் தரும்.


நட்பு நட்சத்திரங்கள்

பூசம் நட்சத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை செய்யும் நட்சத்திரங்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்களின் நட்பு மிகவும் நன்மை தரும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நண்பர்களாக இருந்தால் வேண்டாத சிக்கல்களில் சிக்கி சீரழிய வேண்டியது வரும். பொதுவாக, மகம் நட்சத்திரக்காரர்கள் எந்த பிரச்சனை வந்தாலும், அதிலிருந்து எப்படியும் தப்பிவிடுவார்கள். மேலும் பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி நடப்பை தவிர்ப்பது நல்லது.


தொழில்

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கஷ்டமான பணியை எடுத்துக் கொண்டாலும் அதை பாடுபட்டு செய்து முடிப்பது உடன் பெரும் பணம் சம்பாதிக்க ஆசைபடுவார்கள்.

பிறரிடம் கைகட்டி அடிமையாக வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். எந்த பணியிலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புராண, இதிகாசம் ஆகியவற்றில் அதீத ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். சிலர் பழம்பெரும் கலைகளை ஆராய்ச்சி செய்வார்கள். வாழ்க்கை செல்வ வளங்களுடன் அமைந்திருந்தாலும் அவ்வப்போது ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் இடையே சிக்கி, மன நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள். தோல்வியை இவர்களால் தாங்க முடியாது. சிறந்த பேச்சாளர்கள், வாதத் திறமை மிக்கவர்கள்.


தசா பலன்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் திசையாக வரும். கேது தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேது தசை:
இத்தசை காலங்களில் உடல் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலை, தாய்க்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் உண்டாகும். கேது தசை நன்மை செய்வது இல்லை.
சுக்கிரன் தசை:
இரண்டாவதாக வரும் தசை வரும் சுக்கிர தசை மொத்தம் இருபது வருடங்கள் நடைபெறும் இளம் வயதிலேயே சுக்கிர தசை வருவதால் திருமண வாழ்க்கையும் இளம் வயதிலேயே நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இல்லற வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.

சூரியன் தசை:
மூன்றாவதாக வரும் சூரிய தசை காலங்களில் சூரியன் பலமாக இருந்தால் தந்தை வழியில் அனுகூலங்களை பெற முடியும். சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் மற்றும் தந்தையாருக்கும் சில கெடுபலன்கள் உண்டாகும்.
சந்திரன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சந்திர தசை ஆகும் இது மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும்.. குடும்பத்தில் நிம்மதி குறையும். சந்திரன் நல்லவர் பார்வை பெற்றால் வெளிநாடு யோகங்கள் உண்டாகும் ஆனாலும் தேவையற்ற மன குழப்பங்கள் தோன்றி மறையும்.
செவ்வாய் தசை:
ஐந்தாவதாக வரும் செவ்வாய் தசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். மக நட்சத்திரம் கேதுவின் சாரம் என்பதால் செவ்வாய் தசை மாரக திசையாகும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் செல்வம் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.


பொது பரிகாரம்

மக நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் ஆலமரம் ஆகும். இந்த மரத்தினை வழிபாடு செய்தால் நற்பலனை அடைய முடியும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மக நட்சத்திரத்தில் திருமணம், தாலிக்-கு பொன் உருக்குவது, வாகனம் வாங்குவது, வேத விரதங்களை பூர்த்தி செய்வது, வாஸ்து படி வீடு கட்ட ஆரம்பிப்பது, ஆயிதம் பயிலுவது, களஞ்சியத்தில் தானியம் சேமிப்பது போன்றவற்றை தொடங்கலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

அஸ்வினி, ஆயில்யம், கேட்டை, மூலம், ரேவதி

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸீர்ய ப்ரசோதயாத்

மகம்

நட்சத்திரம் - மகம்


மகம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 10 வது பிரிவு ஆகும். மகத்தின் சமஸ்கிருதப் பெயரான மகா (Magha) என்பது "மகத்துவமான ஒன்று" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு சிம்மாசனம் அல்லது பல்லக்கு ஆகும்.

மேலும் “மகம் ஜகம் ஆளும்” என்ற பழமொழி நடைமுறையில் உள்ளது.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

இதயம், முதுகு,  இடுப்புக்கு மேற்பகுதி

பார்வை

கீழ் நோக்கு

பாகை

120.00  & 133.20

தமிழ் மாதம்

ஆவணி

நிறம்

கருப்பு

இருப்பிடம்

பட்டினம்

கணம்

ராட்ஷ கணம்

குணம்

உக்கிரம், தாருணம் / தீக்ஷணம், தாமசம்

மிருகம்

ஆண் எலி

பறவை

ஆண் கழுகு

மரம்

பாலுள்ள ஆலமரம்

மலர்

செண்பகம்

தமிழ் அர்த்தம்

மகத்தானது

தமிழ் பெயர்

கொடுநுகம்

நாடி

வாம பார்சுவ நாடி, கபம்

ஆகுதி

தேன், அரிசி

பஞ்சபூதம்

நீர்

நைவேத்யம்

வெல்ல பட்சணம்

தேவதை

பித்ரு தேவதைகள், பித்ருக்கள்

அதி தேவதை

விநாயகர், சூரிய பகவான்

அதிபதி

கேது

நட்சத்திரம் தன்மைகள்

அப சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

ஊஞ்சல் அல்லது நுகத்தடி போன்ற அமைப்புடைய ஐந்து நட்சத்த்ரங்களின் கூட்டமைப்பு

மற்ற வடிவங்கள்

 வீடு,பல்லக்கு,நுகம்

மற்ற பெயர்கள்

நுகம், நாஞ்சில், கலப்பை, கொடுநுகம், மாசி,வாய்கால்

வழிபடவேண்டிய தலம்

பிள்ளையார்பட்டி, சூரியனார்கோவில்

அதிஷ்ட எண்கள்

2, 7, 9

வணங்க வேண்டிய சித்தர்

 வ்யாக்ரபாதா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ம, மி, மு, மே

அதிஷ்ட நிறங்கள்

பழுப்பு, ஊதா

அதிஷ்ட திசை

வடகிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், செவ்வாய்

அணியவேண்டிய நவரத்தினம்

புஷ்பராகம்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், அசுவினி, மகம், மூலம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

யம தர்மராஜன், அர்ச்சுனன், சுவாமி பரமானந்த சரஸ்வதி, மகரிஷி மகேஷ் யோகி, சிருங்கேரி சாரதா பீட ஸ்ரீ சந்திரசேகர பாரதி, மகாத்மா காந்தியடிகள், டாக்டர் ராதா கிருஷ்ணன், சீதை

குலம்

நீச்ச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

ஆயில்யம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்ற அறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகான கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், மென்மையான மனம் உடையவர்களாக இருப்பார்கள். கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். மேலும் மேலும் படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பொலிவான தோற்றம் கொண்டிருப்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேசிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள்


குடும்ப வாழ்க்கை

ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்ற அறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகான கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், மென்மையான மனம் உடையவர்களாக இருப்பார்கள். கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். மேலும் மேலும் படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பொலிவான தோற்றம் கொண்டிருப்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேசிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள்


நண்பர்கள்

எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வார்கள். தங்களுடை கனிவான பேச்சினால் கல்லையும் கரைய வைக்கும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள்.


நட்பு நட்சத்திரங்கள்

பூசம் நட்சத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை செய்யும் நட்சத்திரங்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்களின் நட்பு மிகவும் நன்மை தரும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி நடப்பை தவிர்ப்பது நல்லது.


தொழில்

மிமிக்ரி செய்யும் கலையை வரமாக பெற்றிருப்பார்கள். மற்றவர்களை அதிகாரம் செய்யும் அளவுக்கு உயர்ந்த பதவியில் இருப்பார்கள். வேலை செய்யும் இடத்துக்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள். மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள்


தசா பலன்கள்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தசை முதல் திசையாக வரும். புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் புதன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

புதன் தசை:
முதல் திசையாக வரும் புதன் தசை காலங்களில் கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும்.
கேது தசை:
இரண்டாவதாக வரும் கேது தசை ஆனது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலை ஆகியவை உண்டாகும். பொதுவாக கேது தசை யாருக்கும் நன்மை தராது.
சுக்கிரன் தசை:
மூன்றாவதாக வரும் சுக்கிர தசை 20 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். ஆனால் சுக்கிரன் கெட்டு இருந்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
சூரியன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சூரியன் 6 வருடம் நடைபெறும் இத்தசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் மேன்மையான பலன்களை பெற முடியும். பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்
சந்திரன் தசை:
ஐந்தாவதாக வரும் சந்திர தசை ஆகும். சந்திரன் ராசியாதிபதி ஆவார். பொதுவாக இந்த தசை நன்மையை தான் செய்யும். ஆனால் பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்


பொது பரிகாரம்

ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

நவகிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது. மூலம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே
சர்ப்ப ராஜாய தீமஹி
தந்நோ அனந்த ப்ரசோதயாத்