ரிஷப லக்கினத்தின் பொது பலன்கள்

 


அதிபதிசுக்கிரன்
யோககாரகர்கள்சூரியன், சனி, புதன்
யோகமில்லாதவர்கள்குரு, சந்திரன்
மாரக அதிபதிசந்திரன்,குரு , செவ்வாய்
நோய்காய்ச்சல் ,கழுத்தில் வியாதி, சிரங்கு, நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல்இருக்கக்கூடும்.
ஆயுள்சுபர் பார்க்க 77வயது வரை இருப்பர்

சனி ஒருவனே நல்ல ராஜயோகத்தை தருவார்

சில ஜோதிட நுல்கள் சந்தரன், குரு, செவ்வாய் கொல்லான் என்றும் கூருகிறது

ரிஷபம் லக்கினம்- சுப சேர்க்கை

  • சூரியன்+புதன்
  • சூரியன்+சனி
  • சூரியன்+சுக்கிரன்
  • புதன்+சுக்கிரன்
  • புதன்+சனி
  • சுக்கிரன்+சனி

ரிஷபம்  லக்கினம்- ஆகாத தசைகள் 

  • இந்த லக்னத்திற்கு குரு செவ்வாய் மாரகன் சந்திரன் குரு அசுபன் சனி ஒன்பதாம் அதிபதி என்றவகையில் பாதகாதிபதி.
  • 9, 10-க்குடைய சனி ஒருவனே உத்தம ராஜ யோககாரகன். சுக்கிரன் 6க்குடையவன் ஆனாலும் லக்னாதிபதியாகையால் அசுபம் குறைவு.
  • சந்திரன் 3 குடையவன் அதனால் அசுபன். சூரியன் 4க்குடையவன் ஆகிலும் அசுபனே.
  • செவ்வாய் 7, 12-க்குடையவன் ஆகையால் அசுபன். குரு 8 ,11-க்குடையவர் ஆகையால் அசுபன்

பொது பலன்கள் 

  • சூரியன், சனி ஒன்று சேர்ந்து,கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ராஜ யோகத்தைக் கொடுக்கும். 
  • ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, ஆடம்பர பிரியன், பொறுமைசாலி , பிறர் சொத்தை அபகரிக்க வல்லவன், கபடி, அகிமையுள்ளன, பிற்பகுதியில் புத்திரன் உடையவன், எதிர்ப்பால் நட்புகளை விரும்புபவன்
  • எருது சின்னம்:  கிருத்திகை -2, 3 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் -1, 2 பாதங்கள் வரை - வானவெளி கூட்டத்தில் எருது  உருவம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. ரிஷபம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் ‘எருது’ என்று பொருள். 
  • ரிஷப லக்கினகாரர்கள் எருதின் அமைப்பும் மற்றும் ஸ்திர தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். கொஞ்ச நடுத்தர உயரம், கம்பீரமாகத் தோற்றம், குனிந்தும், மிருதுவான காதுமடல் கொண்டவராகவும், தோல்கள் கடினத்தன்மையும், மெதுவான நடையும், விரிவான மூக்கும், பற்கள் சிறுத்தும் வரிசையாகவும், நெற்றி அகன்றும் காணப்படும். இதுதவிர பஞ்ச பூதங்களில் பிருத்வி(நிலம்) தத்துவத்திலும் ரிஷப லக்கின ஜாதகர் குணநலன்கள் பார்த்தால் பேச்சில் தேனாகவும், வசீகரத் தோற்றம் இருக்கும்
  • ரிஷப லக்கினகாரர்கள் முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும். தற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், சதைப்பற்றுமிக்கவன்
  • ரிஷப லக்கினகாரர்கள் ஸ்திர ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு நிதானம் உறுதியும்  இருக்கும். மேலும் இது நில ராசி ஆகும் 
  • கடின உழைப்பாளியாகவும், கோபம் தெரியாவண்ணம் இருக்கும். ஆனால் கோபம் அதிகமானால் அவர்கள் செயல் அதிரடியாக இருக்கும்..
  • அலங்காரப்பிரியராகவும், அழகும் கவர்ச்சியும், கலைநயம் கொண்டவராகவும், சரியான நேரத்தில் அறிவானது வெளிப்படும், ஞாபகசக்தி,  சகிப்புத் தன்மை, பிடிவாத குணம்,  மெதுவாக சாத்வ குணமாக தெரியும், எதிராளி பேசுவதை கவனமாக கேட்பார்கள்.
  • சிவபூஜையில் சிந்தை செலுத்துபவன், உண்மை பேசுபவன், உணவு குறைவாக உண்பவன், கொஞ்சம் குண்டானவன், பிறர்க் கீழே வேலை செய்பவன், புளிப்பு இவர்களுக்குப் பிடிக்கும், கணித வல்லுநர், உயர்ந்த ஆடை ஆபரணம் அணிபவன், புத்திசாலி, விளையாட்டுத்தனம் இருக்கும், பேராசை கொண்டவன், இருமல், கபம், கழுத்தில் வியாதி இவருக்கு இருக்கும் , மழலையர் பேசுவதைக் கேட்பவன், சிறுவயதில் அக்னி பயத்திற்கு ஆட்படுவான் என்று ஜாதக அலங்கார  நூலில் கூறப்படுகிறது.
  • நடுத்தரமான சதைப்பற்றுள்ள தோற்றம் உள்ளவர். அகன்ற நெற்றி, கருகருவென சுருள் சுருளான மயிர், பெரிய கண்கள், அழகிய முகம், வட்டமானது, சிவந்த பளபளக்கும் மேனி, ஆண்களும், பெண்களும் நளினத்தையும், அழகு, கவர்ச்சி இவற்றையும் உடையவர்.

புலிபாணி ஜோதிடம்- பாடல் - 24

ரிஷப & மிதுன லக்கினம்

கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


பொருள்:

இப்பாடலில் ரிஷபம் மற்றும் மிதுனம் லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

“ரிஷபம் மற்றும் மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் உண்டு. ஆனால் குரு கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 வீடுகளில் இருந்தால்  நல்லதல்ல. அவரால் செல்வம் நாசம் அடையும். மேலும் அரசால் கெடுதலும், நோயும் உண்டாகும். ஆனால்  குருவும் சந்திரனும் திரிகோணமாகிய 1, 5, 9 இருந்தால் நன்மை நடக்கும்.“

 விளக்கம்:

அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாக கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குரு பகவான் கேந்திரத்தில் நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம், உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக


திருமண வாழ்க்கை

  • ரிஷப லக்னத்தின் 7 மற்றும் 12ம் அதிபதி செவ்வாய். இவர்களுடைய இல்லற வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கக் கூடிய செவ்வாய் மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது. செவ்வாய் ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களை வாழ வைக்கவும் வைப்பார்.  செவ்வாய் முடிவெடுத்து விட்டால் ஜாதகரை கீழே வீழ வைக்கவும்  செய்வார்
  • இதில் பிறந்த ஆண்கள் நல்ல வீட்டு வாழ்வு உடையவர்கள். எல்லாம் வசதியும் செய்து வைப்பார்கள்.
  • இந்த ராசி பெண்கள் “மனைக்கு விளக்கம் மடவார்” என்ற வாக்கிற்கு உதாரணமாய் இல்லத்தரசிகளின் சிறந்தவர்கள்.
  • ரிஷப லக்கினக்காரருக்கு, விருச்சிக ராசி ஏழாமிடமாக அமைவதால் முழுப் பொறுப்பும் மனைவியிடமே அமையும். இன்றேல், வீண் தகராறுகள் விளையும்.
  • இவர்களின் வாழ்க்கை துணை பொதுவாக நல்ல தைரியசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பார். ஆனாலும் சிறு சிறு சண்டைகள் அடிக்கடி தோன்றி மறையும்.

தொழில்

  • இவர்கள் நளின உழைப்பினர். சொகுசு வேலைகளை செய்ய விரும்புவார்கள்.
  • உல்லாச பொருள்கள், வாணிகம், கம்பளி, பட்டு, வியாபாரம், சோப்பு, சென்ட் போன்ற வாசனைப் பொருட்கள் இவற்றின் மூலம் நிறைய பொருள் ஈட்டுவர்.
  • பேங்க் நிர்வாகம், நீதித்துறை அலுவல்கள், பந்தயம் நடத்துபவர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், ரேஸ் என்று வெல்லுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உண்டு.
  • உழவு விவசாயம் இவற்றிலும் இவர்களுக்கு லாபம் உண்டு என்பதை இவர்கள் ராசி (மண்) ராசியகையாலும் இந்த ராசியின் உருவம் காளை என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
  • இவர்கள் இடைத்தரகர் போன்ற தொழில் செய்தால் அந்தத் தொழிலில் இவர்களை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. பேச்சுத் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். எப்படிப்பட்ட விஷத்தையும் பேசியே ஜெயித்து விடுவார்கள். 
  • பொதுவாக அரசுத்துறையில் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்
  • ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் 9ம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவான் ஆவார். ரிஷப லக்னத்திற்கு 9 ஆம் வீடு பாதகஸ்தானம் ஆகும் எனவே சனி பாதகாதிபதி தன்மையையும் அடைகிறார் இருந்தாலும் பெரிய பாதகங்களை செய்ய மாட்டார் ஏன்னென்றால் ரிஷப லக்னாதிபதி சுக்கிரனுக்கு இவர் தீவிர நண்பர்,  அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு இவரே தொழில் வெற்றி, புகழ், அதிர்ஷ்டங்கள், முன்னேற்றத்தையும் தரவல்லார்.
  • அறிவிப்பாளர், பொது பேச்சாளர் (Public speaker), வரவேற்பாளர் (Receptionist), கணக்காளர் (Accountant), கல்வியாளர், என்ஜினியர் (Engineering), வக்கீல் (Lawyer), வடிவமைப்பாளர் (Designer), நிலம் தொடர்பான வேலை, சமையல் தொழில் (culinary profession) ஆகியவை சிறப்பாக இருக்கும். 
  • பெண்கள் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் பூமி,மனை போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில், பணம், கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் லாபம் சிறப்பாக அமையும் என்றாலும் கூட்டாளிகளை நம்பி எதையும் ஒப்படைப்பது கூடாது (நல்ல கூட்டாளிகள் அமைப்பு இல்லை)

கிரகங்கள்  

  • சூரியன் : 4ம்  வீட்டுக்கு உரியவர் எனபதால் சூரியன் நல்லவர் ஆனாலும் சுக்கிரன் & சூரியன் பகைவர்கள் அனைவரும் அறிந்தே. சூரியனின் பகை வீடுகளில் ரிஷபம் ஒன்றாகும். எனவே சூரியன் இவர்களுக்கு அவ்வளவு நன்மை செய்யாது 
  • சந்திரன் : 3ம் வீட்டுக்கு உரியவர். சந்திரன் இங்கு உச்சம் அடைகிறார். ஆனாலும் சந்திரன் பகைவரே. இவர் மாரகதிபதி ஆவார். சந்திர திசையில் மரகத்திற்கு ஒப்பான கெடுதலை செய்வார் 
  • புதன் : இவர்  2 மற்றும் 5 க்கு உடையவர். மிக நல்லவர். மிகவும் நல்லதே செய்வார். சனியை போல் இவரும் நன்மையே செய்வார்.
  • குரு: இவர்  8 மற்றும் 11 க்கு உரியவர். குரு ரிஷபத்திற்கு நல்லவர் அல்ல. இவர் மாரகதிபதி ஆவார் 
  • சுக்கிரன்: சுக்கிரன் லக்கினாதிபதியும் 6க்கு உடையவரும் அவர். எனவே நல்லைதியும் கெட்டதையும் கலந்தே தருவார். ஆனாலும் நல்லவரே. 
  • சனி: ரிஷப லக்னத்திற்கு சனி ஒருவரே நல்லவர் என்று சில நூல்கள் சொல்கிறது. 
  • ராகு & கேது : ரிஷப லக்னத்திற்கு ராகு & கேது நல்லவரே. ஆனாலும் ராகு தான் கேதுவை காட்டிலும் நல்லவர் 

சூட்சுமங்கள்  

  • ரிஷப லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள்  என்றால் புதன், சனி மற்றும் சுக்கிரன் 
  • சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அடைந்ததாலும் இவர் மராகாதிபதி ஆவார். 
  • மீனத்தில் சுக்கிரன் உச்சம் அடைந்தாலும் குருவும் மாராகதிபதி ஆவரர்.
  • சுக்கிரன் நல்லவர் என்றாலும் 6க்கு உடையவரும் ஆவரே.
  • குரியனும் பகைவரே ஆவார்.  

தசா பலன்கள் - சூரியன் 

ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன் . சுக்கிரனுக்கு சூரியன் பகை.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • சூரியன் நல்ல ஆதிபத்தியம் பெற்று சூரிய தசை நடக்கும் என்றால் மனதிற்கு பிடித்த வகையில் சொந்த வீடுகள் அமையும். புதிய வாகன சேர்க்கை உண்டாகும். தாய் வழி சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும்.
  • மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். 
  • உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். 
  • பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும் 
  • விவசாயம் தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும் 
  • அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சிறு தடைகளுக்கு பின்பே எண்ணிய வெற்றி கிடைக்கும்.சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

 தசா பலன்கள் - சந்திரன் 

    ரிஷப  லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்கு  சந்திரன் பகை என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • 3ம் அதிபதி என்பதால் சந்திரன் அமையும் இடத்தைப் பொறுத்து சாதகமான பலனை உண்டாக்குவார். 
    • ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். செவ்வாயின் ராசியில் சந்திரன் இருப்பதால் வர்த்தகத்தில் சிறு சிறு பிரச்சினை உண்டாகும்
    • காது தொடர்பான சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். 
    • மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
    • சிறு தூர பயணம் ஏற்படும். அது நல்ல விதமாக இருக்கும் 
    • தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் மேம்படும். பகைவர்களால் பிரச்சனைகள் இருக்கும். மிகவும் கவனமாக செயல்பட்டால் வெற்றி காணலாம் 
    • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

    தசா பலன்கள் -  செவ்வாய் 

      ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன், செவ்வாய் பகை மேலும் செவ்வாய் 7க்கு உடைவன்  . செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
      • வாழ்க்கை துணையின் தாய்வழியில் சொத்துக்கள் கிடைக்கும். லாபம் உண்டு  
      • குழந்தகைளை ஜாக்கிரதையாக பாத்துக்கொள்ள வேண்டும். 
      • குழந்தைகள், தந்தையுடன் கருத்து வேறுபாடு தோன்றும்
      • தொழிலில் ஜாக்கிரதை தேவை. புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம். வேலைக்கு செல்லும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
      • எதிரிகள், தாய்மாமன், தந்தை ஆகியவர்களின் விசயங்களிலும், அவர்களை சார்ந்த விசயங்களிலும் எச்சரிக்கை தேவை குடும்பத்தில் சில சில சலசலப்பு தோன்றி மறையும். 
      • வீடு, வீடு சார்ந்த விஷயம் சாதகமாக இருக்கும். வீடு சம்மந்த பட்ட விசயங்கள் சாதாகமாகும். பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்
      • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
      தசா பலன்கள் -  புதன் 
        ரிஷப லக்னத்திற்கு அதிபதி  சுக்கிரன். சுக்கிரன் நட்பு கிரகம் புதன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
        • புதன் ரிஷப லக்கினத்திற்கு 2, 5 ஆம் அதிபன் ஆகிய யோகாதிபதி ஆவார். 
        • திருமண வயது உடையவருக்கு திருமணமும், குழந்தையை எதிர்பார்ப்பவருக்கு குழந்தை பேரும் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழும் சூழ்நிலை உண்டாகும். 
        • பொருளாதாரம் மேம்படும். வாக்கு தொழில் சிறப்பாக இருக்கும். ஜோதிடம், வான்வெளி தொழில் இருப்பர்வர்கள் சிறப்பு பெறுவார்கள். பொதுவாக தொழில் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சிறக்கும். 
        • இன்பம், ராஜ மாரியாதை, மனதில் சந்தோஷம், பந்து சேர்க்கை ஆகியவை கிடைக்கும் 
        • புதன் கெட்டால் இருக்குமிடம் பெயர்தல், சண்டை சச்சரவு உண்டாகுதல், தலைவலி, அன்னியர் விரோதம், ரத்த சோகை, பெண்களால் சண்டை உண்டாகும். பொதுவாக புதன் திசை ரிஷப லக்கினத்திற்கு நல்லதே செய்வார் 
        • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

         தசா பலன்கள் -  குரு  

        மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு குரு நட்பு என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
        • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
        • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
        • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
        • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
        • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
        • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
        • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
        • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
        • ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன்க்கு குரு பகை  என்ற நிலையில் இருக்கிறது. குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

        • குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்று வர வாய்ப்பு உண்டு. ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்
        • குழந்தைகளால் செலவு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப செலவாகவும் இருக்கலாம்
        • இளைய சகோதர சகோதரி வகையில் பிரச்சனை வரலாம். 
        • Documentation பிரச்சனை மற்றும்  கேரண்டி கையழுத்து போட்டால் பிரச்சனை உண்டாகும். யாருக்கும் கேரண்டி கொடுக்க வேண்டாம். 
        • வெளி நாட்டு பயணம், தொழில் அலைச்சல் ஆகியவை அதிகமாக இருக்கும். அலைச்சல் இல்லை என்றால் விரயம் இருக்கம் வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
        • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

        தசா பலன்கள் - சுக்கிரன்  

          ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். மேலுமே அவர் 6க்கு உரியவர்  சுக்கிரன் செவ்வாய்க்கு சமம். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
          • சுக்கிரன் தனது தசையில் நல்லது கெட்டது கலந்து தான் தருவார் 
          • வெளிநாடு பயணங்கள், வெளிநாட்டு கல்வி சார்ந்த விசயங்கள் ஆதாயமாக இருக்கும்
          • தொழிலில் பிரச்சனை வரலாம். 
          • இளைய சகோதர சகோதரி வழியில் சில பிரச்னைகள் தோன்றும் 
          • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அல்லது வழக்கு வர வாய்ப்பு உண்டு 
          • உடலில் இருந்த சோர்வு நீங்கி  சுறுசுறுப்பு  உண்டாகும்.
          • பொருளாதாரம், குடும்பம் மற்றும் தொழில் கவனம் தேவை
          • தொழில் விரயம் தவிர்க்க கவனம் தேவை. 
          • உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணியில் பிரச்னைகள் தோன்றும் 
          • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் - சனி 

            ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன்,  சனி நட்பு.  சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
            • ரிஷபம் லக்கினம் ஸ்திர லக்கினம். 9ம் வீடு பாதாகதிபதி. சனி 9, 10க்கும் உரியவர். சுக்கிரன் சனி நட்பு கிரகம். ஆனாலும் சனி பாதாகதிபதியும் ஆவார். ஆனால் சனி நல்ல யோகாரகன் ஆவர்.
            • ரிஷபம் லக்னம்/ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும். 
            • சனிதசை வரும் போது அதிகம் ஆசைப்படாமல், இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைந்து, நேர் வழியில் சம்பாதித்தால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம். மாறாக அதிகம் ஆசைப்பட்டால் அதற்குரிய பாதிப்புகளை சந்தித்தே தீர வேண்டும். 
            • நல்ல வருமானம் உண்டு. அதனால் கெட்ட பழக்கங்கள், கெட்டவர்களின் தொடர்ப்பு வர வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 
            • வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்கும் அமம்ப்பு உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும் 
            • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  ராகு  

              ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • ராகு, கேதுக்கு உச்சம் நீசம் இல்லை என்று ஒரு ஜோதிட நூலும், சில நூல்கள் ரிஷபத்தில் ராகு உச்சம் , விருச்சிகத்தில் நீச்சம் என்றும், மேலும் சில நூல்கள் ரிஷபத்தில் இரண்டும் உச்சம் , விருச்சிகத்தில் இரண்டும் நீசம் என்றும் கூறகிறது. எதுவாக இருந்தாலும் ராகு ரிஷபத்திற்கு நல்லவரே.
              • தந்தை, தந்தை சார்ந்த விஷயம், தாய், தாய் சார்ந்த விஷயம், வீடு, வீடு சார்ந்த விஷயங்களில் நன்மையே உண்டாகும்.
              • மன அழுத்தம் அதிக இருக்கும். தியானம் மிக அவசியம்.  
              • குழந்தைகள் சார்ந்த விசயங்களில் மற்றும் வாழ்க்கை துணை சார்ந்த விஷங்களில் டென்ஷன் அதிகமாக இருக்கும்.
              • தொழிலில், செல்லும் வேலையில் சிறப்பு இருக்கும். தொழில் சார்ந்த விசங்களில் நல்ல லாபமே 
              • பலமிக்க கிரகத்துடன் இணைந்திருக்கும் ராகு அக்கிரகத்தின் ஆதிபத்தியத்தை ராகு திசையில் ராகுவே அப்பலன்களை செய்வார் என்பது ஒரு சோதிட விதி. 
              • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              தசா பலன்கள் -  கேது  

                ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன், கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                • பணம் விரையம் ஆகும். சுப யோகமாக மாற்றி கொள்ளுவது தனிப்பட்டவர்களின் திறமை.
                • தந்தை, தாய், குழந்தைகள் , வாழ்க்கை துணை, இளய சகோதர சகோதிரி  மற்றும் வீடு ஆகிய அவற்றின் சார்ந்த விஷயங்களில் பிரச்சனை தரும். கேது பகவான் ஞானகாரகன். கேது ஆன்மீக புத்தியை புகட்டுபவர்.
                • வேலை பளு அதிகாமாக இருந்தாலும் நல்ல வருமானம் இருக்கும் . உடl நலனில் பிரச்சனை  உண்டாகி மறையும். 
                • மற்றவர்கள் உங்களை பற்றி புறம் கூற வாய்ப்பு உண்டு. ஜாக்கிரதையாக இருக்கவும்.
                • போட்டிகளில் வெற்றி, நிலபுலன்களை வாங்கும் அமைப்பு, சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். ஒருவேளை செவ்வாயும், கேதுவும் கெட்டு இருந்தால், இதற்கு எதிர்மறையானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
                • கோவில்கள், புனித ஸ்தல்ங்கள், யாத்திரைகள் மற்றும் சித்தர் வழிபாடு செல்ல சூழநிலையை அமைத்து தருவார். 
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 
                ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் என்றால் அந்த லக்கினம் கிருத்திகை பாதம் – 2,3,4 , ரோகிணி, மிருகசிரிஷம் 1, 2 என்ற இந்த முன்று நட்சத்திரத்தில் இருக்கலாம்.  அதாவது லக்கினம் ஏறிய நட்சத்திரம்.
                அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம் 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

                ரிஷபம் லக்கினம்  – கிருத்திகை 

                கிருத்திகை 2,3,4  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன், செவ்வாய்  தாக்கத்துடன் இருப்பார்.
                கிருத்திகை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் கொண்டவர்கள். ரிஷப கிருத்திகையில் பிறந்தவர்கள் குணநலன்கள் பார்த்தால் சாஸ்திரம் தெரிந்தவர்கள், மகிழ்ச்சியைத் தேடிச் செல்பவர்கள்,   தேவையற்ற சினம் கொண்டவர்கள், வெற்றியுடையவர்களை சினேகமாகக் கொண்டவர், நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்கள், நண்பர்கள் கூட்டம் உண்டு, ஒழுக்கம் கடைப்பிடிக்கத் தவறியவன், நேசமும் நட்பும் உள்ளவர்கள், சுதந்திரத்தை விருபதக்கவர், ஒருசிலர் தீமை செய்பவராகவும் மற்றும் மற்றவர்களை மதிக்காதவராகவும் இருப்பார்கள். படிப்பு குறைவாக இருக்கும், பொறுமையற்றவர், எதாவது ஒருவகை துக்கம் இருக்கும், நல்ல தோற்றம் உள்ளவர்கள், சட்டென கோபம் வந்துவிடும், நேர்மையான எதிரிகள் உண்டு, கர்வம் கொஞ்சம் இருக்கும். முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும், சகோதர உறவுகளில் சச்சரவு உடையவர்,  கல்வியில் தடங்கல் உடையவர். ற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், அரக்கக் குணம் கொண்டவன், கோபக்காரன், கொஞ்சம் பொய் பேசுவான் கவர்ச்சியானவன், ஒழுக்கம் குறைவு, பெண்களை கவர்பவன், அன்பு கொண்டவன், முன் யோசனையாளி, நியாவழக்கு தொடுப்பான், தாய்நாட்டை மறக்காதவர்கள், சுய சிந்தனையோடு அதிகம் உண்டு, அபார நினைவாற்றல் இருக்கும்

                ரிஷபம்  லக்கினம்  – ரோகிணி 

                ரோகிணி  நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார். சந்திரனுக்கு மிக பிடித்த நட்சத்திரம் என்று புராண கதைகள் சொல்கின்றன.

                இந்த நட்சத்திரம் விண்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சௌபாக்கியமும், சௌந்தர்யமும்,  முரட்டுத்தன்மை இருக்கும், சிலருக்கு சிறு வியாதி இருந்துகொண்டு இருக்கும், கவிதை கற்பனையில் இருந்துகொண்டு இருப்பார். சினிமா துறை என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று, தன்மானமிக்கவன், கருணை அமைதி மிக்கவன், ஒழுக்கமானவன், வாய்மை மிக்கவன், சாந்த சொரூபி, ஜீவநேயம் கொண்டவன், குருவின் ஆசிர்வாதமிக்கவன், இசையில் ஆர்வ மிக்கவன், சூட்சம மந்திரம் ஜெபிப்பவன், இலக்கிய ஆர்வம் குறைவு, தெளிவான ஆராய்ச்சி ஈடுபடுவான், எல்லாரிடமும் இதமாக பேசி நோக்கை அடைவான்.பிறருக்கு சொல்லிக்கொடுப்பதில் வல்லவர்கள். பெரிய பதவி நோக்கிச் செல்பவர்கள், பெண்களுக்குப் பிரியமானவராகவும், அறிவுரைகளைக் கேட்பார்கள், வருங்காலத்தை பற்றி யோசிப்பார், மெல்லிய குரலில் பேசுவார்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள், செல்வம் அதிகப்படுத்துவதில் ஆர்வம், பிள்ளைகள் மீது அதிக அன்பு கொண்டவர், பாராட்டு பெறுவார்கள், சுகபோக வாழ்க்கையை வாழபிடிக்கும், சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கும். 


                ரிஷபம்  லக்கினம்  –மிருகசிரிஷம் 1,2 பாதங்கள்   

                மிருக சிரிஷம் 1,2  நட்சத்திர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், செவ்வாய்தாக்கத்துடன் இருப்பார்.
                மானின் தலை போலத் தோற்றமளிப்பதால் மிருகசீரிசம் எனப் பெயர் பெற்றது. அதாவது ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். முதல் இரண்டு  பாதங்கள் ரிஷபத்திலும் மற்றவை மிதுனத்தில் இருக்கும். இது செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் இந்த லக்கினத்தில் துணிச்சல் அதிகம் இருக்கும்,  திடமான நம்பிக்கை அதைவிட அதிகம் இருக்கும், சுறுசுறுப்பானவர், செல்வமுடையவன், சுறுசுறுப்பானவர்கள், மரியாதையுடன் நடப்பவர்கள், தற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், சதைப்பற்றுமிக்கவன், அரக்கக் குணம் கொண்டவன், கோபக்காரன், கொஞ்சம் பொய் பேசுவான் கவர்ச்சியானவன், ஒழுக்கம் குறைவு, பெண்களை கவர்பவன், அன்பு கொண்டவன், முன் யோசனையாளி, நியாவழக்கு தொடுப்பான், தாய்நாட்டை மறக்காதவர்கள், சுய சிந்தனையோடு அதிகம் உண்டு, அபார நினைவாற்றல் இருக்கும், மகிழ்ச்சியானவர். முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும், சகோதர உறவுகளில் சச்சரவு உடையவர்,  கல்வியில் தடங்கல் உடையவர்.

                மந்திரம் 

                ரிஷப  லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய முருகன் துதியை மனதார சொல்லி வருவது நல்லது 
                                                                  பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
                பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
                பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
                பெருமான் என்னும் பேராளா!
                சேரா நிருதர் குல கலகா!
                சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
                தேவா ! தேவர் சிறைமீட்ட
                செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
                பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
                பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
                வா, வா, என்று உன்னைப் போற்றப்
                பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
                வாராது இருக்க வழக்கு உண்டோ !
                வடிவேல் முருகா ! வருகவே !
                வளரும் களபக் குரும்பை முலை
                வள்ளி கணவா ! வருகவே !

                 ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்




                 

                மேஷ லக்கினத்தின் பொது பலன்கள்

                 

                அதிபதிசெவ்வாய்
                யோககாரகர்கள்குரு, சூரியன்
                யோகமில்லாதவர்கள்புதன், சுக்கிரன், சனி
                மாரக அதிபதிசுக்கிரன்
                நோய்அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும்
                ஆயுள்சுபர் பார்க்க 100 வயது வரை இருப்பர்

                சில ஜோதிட நூல்கள் சுக்கிரன் மாரகபதியாகினும் கொல்லான் மேலும் சனி கொல்லவர் என்பர் 

                சுக்கிரன் 2, 7-க்குடையவன் என்ற வகையில் சுபாவ மாராகன்  அதாவது இரு மாறாக ஆதிபத்தியம் உள்ளவன். மாரகம் கொடுக்க மாட்டான் என்பது விதி.

                 மேஷம் லக்கினம்- சுப சேர்க்கை

                  • சூரியன்  &  சந்திரன்
                  • சூரியன் & செவ்வாய்
                  • சூரியன் & குரு
                  • செவ்வாய் & குரு
                  • செவ்வாய் & சந்திரன்
                  • குரு & சனி

                மேஷம் லக்கினம்- ஆகாத தசைகள் 


                • புதன் தசை முழுவதும் சனி தசை, பிற்பாதி லாபம் என்றாலும் மாரகன் என்ற வகையில் தீங்கு செய்யும்.
                • லக்னாதிபதி மற்றும் ஆயுள்காரகன் வலுத்தால் 100 வயது வரை வாழ்வார்
                • பெளர்ணமி திதி, வியாழகிழமை, ரோகினி நட்சத்திரத்தில் இரவு நேரத்தில் தலையில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.

                பொது பலன்கள் 

                • தைரியவான் , மூர்க்கன், அடிமையுள்ளவன் , சமர்த்தியவான் , அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளவன் , புத்திமான், அற்ப புத்திரன் உடையவன், முன்கோபகரன்.
                • செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால், சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்
                • ஆடு சின்னம்: அஸ்வினி, பரணி, கிருத்திகை ஒன்றாம் பாதம் வரை - வானவெளி கூட்டத்தில் ஆடு உருவம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பழைய நூல்களில் அது போல் குறிப்பு இருப்பாதாக தெரியவில்லை. மேஷ லக்கினகாரர்கள் கொஞ்சம் ஆட்டின் குண நலன்கள் மற்றும் அதன் செயல்கள் இருக்கும். 
                • மேஷ லக்கினகாரர்கள் நீண்ட கழுத்துடையவர், மெலிந்த தேகம்,  மத்திம உயரம், சிலபேருக்கு சிவந்த கண், புஜசாலியாகவும், சுறுசுறுப்பாக கடின உழைப்பாளியாக இருப்பார்கள்.
                • மேஷ லக்கினகாரர்கள் சர ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு துடுக்குதனமும் வேகமும் இருக்கும்
                • நெருப்பு ராசி என்பதால் அதிகமான ஆவேசம் மற்றும் கோபத்தினால் தடுமாற்றம் இருக்கும் 
                • குறைந்த அழகு கொண்டவராகவும், பேச்சுதிறமை, தர்ம மிக்கவர் எழுத்துத்திறமை உடையவர், பிடிவாதம் மிக்கவர், மனஉறுதி வலிமை மிக்கவர்,  எடுத்த காரியத்தைத் திறமையாக முடிப்பவர்.
                • சிலர் பொறாமை குணம் மிக்கவராக இருப்பார்கள் .
                • அற்ப ஆசைகள் இல்லாதவர் வாக்கு வன்மை, கோபம், முரட்டு சுபாவம், வேடிக்கையாகப் பேசும் குணம், வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவது , பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். 
                • தீர்காயுளும், தெய்வ பக்தி, எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் தன்மை, கவலைகளை உடனுக்குடன் மறந்து போவது, ஆற்றலும் நல்ல திறமையும் இருந்தாலும் அகங்கார குணமும் சுயேச்சையாக முடிவு எடுக்கும் சுபாவத்தால் மேஷ லக்கினகாரர்கள்  மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிப்பர். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள்

                புலிபாணி ஜோதிடம்- பாடல் - 23

                மேஷ (மேட) லக்கினம்

                கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

                கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

                ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

                அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

                கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

                கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

                தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

                தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


                பொருள்:

                இப்பாடலில் மேஷ(மேட) லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

                “மேஷ லக்னகாரர்களுக்கு சனி தொல்லை தருவார். ஆனால் அந்த சனி வீடு, செல்வம் தருகிறார் என்றால் அந்த ஜாதகருக்கு ஆயுள் குறைவு என்று பொருள். சனி திரிகோணமாகிய  5, 9 யில் இருந்தால்  நன்மையையும், கேந்திரத்தில் இருந்தால் கெடு பலனையும் தன்  தசா புத்தியில்  தருவார்.“

                 விளக்கம்:

                மேடத்தை இலக்கினமாகப் பெற்று ஜனித்த ஜாதகருக்கு சூரிய பகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள் குறையும் என்பதையும் உணர்வாயாக. மேலும் அச்சனிபகவான் திரிகோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை விளையும். அதற்கு மாறாக கேந்திரத்தில்  இருந்தால் கெடு பலனே விளையுமாதலால் அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமி கடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். இதனை அவனது தசா புத்திகளில் சொல்க.

                குறிப்பு:

                மேஷம் என்பது கால புருஷனுக்கு தலை மற்றும் தலைமையான சூரியன் மேஷத்தில் உச்ச்மாவதால் அவரின் பலம் நிறைந்திருக்கும். சூரியன் மகனான சனி 10, 11 பாவத்திற்கு உரியவர். மேஷத்தின் அதிபதி செவ்வாய்க்கு சனி பகை கிரகம் மேலும் மேஷத்தில் சனி நீசம் அடைகிறது.எனவே மேஷ லக்கின காரருக்கு சனி அவ்வளவாக நம்மை செய்ய மாட்டார். ஆனால் சனி மறைவு, நீசம் அல்லது வக்கிரம் பெற்றால் பலன் மாறுபடும்.

                திருமண வாழ்க்கை

                • மேஷ இலக்கின காரர்களுக்கு வாய்க்கும் துணை குடும்ப பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவராக இருப்பார்கள் .
                • வாழ்கை துணையின் தலையிட்டை விரும்ப மாட்டார்கள். பொதுவாக எந் மேஷ இலக்கின பெண்களுக்கு பொருந்தும்
                • மண வாழ்க்கையில் அவ்வப்போது சில மனா கஷ்டங்கள் ஏற்பட்டு விலகும் ஆனாலும் குடும்பம் கெளரவமாகவே காட்சியளிக்கும்.
                • திருமணத்திற்கு முன்பாக வாழ்க்கை திட்டங்களை தீட்டிக் கொண்ட பின்னரே திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் .
                • ஆடல்-பாடல்-விநோதங்களில் மனதை பறிகொடுப்பர்கள் .
                • சுக்கிரன்-சுப கிரஹ சேர்க்கை பார்வை பெற்றால் அழகான வாழ்க்கை துணை அமையும் 
                • சுக்கிரன்-பாவ கிரக சேர்க்கை -பார்வை பெற்றால் சிறு வழக்கு வியாஜ்ஜியங்கள் தலை தூக்கலாம்.
                • வீட்டு வேலைகளை சரிவர கவனிக்க முடியாதபடி உடல் பலவீன படும்.
                •  2,5,7,11-ல் இருப்பவர், பார்த்தவர் தசாபுத்தி அந்தர காலங்களில் விவாகம் நடக்கும்.
                • வாழ்க்கை துணை அழகு குறைந்து உள்ளவராகவும் ,புண்ணிய காரியங்களில் ஆர்வமும், தர்ம பற்று, பெருத்த உடல்  உடையவராக அமையவர்கள் 

                தொழில்

                • மேஷ ராசியினரின் தைரியம் மற்றும் துணிச்சாலும் இருப்பதால் மீட்பு பணியாளர், காவல்துறை அதிகாரிகள் (police) ஆகிய தொழில்களில் அமையும். வெளிப்படை தன்மை காரணமாக மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத் துறையில் நல்ல பெயர் கிடைக்கும். அரசாங்கம், அரசியல், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை செய்யலாம். 
                • மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், எந்தச் சூழ்நிலையிலும், பங்குச் சந்தை - குதிரை பேரம் - பரிசுச் சீட்டு போன்றவற்றில் முதலீடு செய்தல் கூடாது. அதாவது நிலையற்ற தன்மை கொண்ட எந்த தொழிலை அல்லது முதலீட்டை மேற்கொள்ள கூடாது. அதாவது, மேஷ இலக்கனத்தை கொண்டவர்கள், நிலையான மற்றும் தெளிவான முதலீடுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்
                • பொதுவாக இரும்பு, நிலம், இயந்திரங்கள், வண்டிகள், பழைய பொருட்களை வாங்கி விற்றல் போன்ற தொழில்களைச் செய்தால் சிறந்த வருவாய் ஈட்டுவார்கள்.
                • பெரும்பாலும் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், உடலுழைப்பு சார்ந்த, வேர்வை சிந்தும் தொழிலை மேற்கொள்வர்.  அத்தகைய தொழில் செய்வோர் தமது வாழ்வில் பொருளாதார வெற்றி உறுதியாக பெறுவர்கள்.
                • லக்கனத்துடன் புதன் அல்லது சுக்கிரன் சேர்ந்து  இருக்கும் மேஷ இலக்கினகாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்து, பல பேரை வேலைக்கு அமர்த்தி, பெரிய அளவிலான தொழில் மேற்கொள்வர்கள்
                • லக்கனத்துடன் குரு வலுவுடன் சேர்ந்து இருந்தால் கடல்கடந்த தொழில் செய்யும்  அமைப்புகள் பெற்று இருப்பார்கள் அல்லது  சட்ட ஆலோசகர், நிதித்துறையின் ஆலோசகர், பாதுகாப்பு ஆலோசகர் என பிறருக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கான சிறந்த தொழிலை கொண்டிருப்பர்கள் 

                கிரகங்கள்  

                சூரியன் : 5ம் வீட்டுக்கு உரியவர். அதாவது மேஷ லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியான சூரியன் அற்புதமான யோகமளிக்கும் கிரகமாகும்

                சந்திரன் : 4ம் வீட்டுக்கு உரியவர். மிகவும் நன்மை செய்யும் கிரகம் ஆகும். மேலும் வளர்பிறை சந்திர என்றால் நல்ல நண்பன் போன்றவர் 

                புதன் : இவர் 3 மற்றும் 6க்கு உடையவர். யோகமில்லாதவர். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பின்னடைவான பலன்களை தரக் கூடியவர் புதன்.

                குரு: இவர் 9 மற்றும் 12க்கு உரியவர். குரு வலிமையடைந்தால்  ஜாதகருக்கு சொத்துக்கள் பெருமளவில் சேரும். ஆனால் பெரும் செலவாளியாக இருப்பர்கள். சிலசமயம் சொத்துக்கள் கரைந்து போகவும் வாய்ப்பிருக்கும். அதாவது பொதுவாக இரு ஆதிபத்ய கிரகங்கள் வலிமையடைந்தால் இரண்டு வீட்டு பலன்களையும் கலந்தே கொடுப்பார்
                சுக்கிரன்: சுக்கிரன் நல்லவன் இல்லை. தன் திசையில் மாராகம் அல்லது மாராகத்திற்கு ஒப்பான துன்பத்தை தருவார். நன்றாக இருந்தால் பலன் நிவர்த்தி கிடைக்கும் 

                சனி: மேஷ லக்னத்திற்கு சனி பலம் பெறாமல் இருப்பது விசேடம். மேஷ லக்னத்திற்கு 10 என்னும் தொழிலையும் 11 என்னும் லாபத்தினையும் கொடுக்கும் மிக முக்கியமான கிரகம் சனி. ஆனால் சனி இவர்களுக்கு சர லக்ன பாதகாதிபதியாக வருகிறார். எனவே  தொழிலை உத்யோகத்தினை வளம் பெற வைக்கும் சனியே தொழில் உத்யோகத்தினை வைத்தே பாதகத்தினையும் செய்ய துணிவார்

                ராகு & கேது: மேஷ லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது  மேஷம் கடகம் துலாம் மகரம் வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.

                கிரகங்கள்- சுக்கிரன்    

                • லக்னத்தின் 2 மற்றும் 7ம் பாவத்தின் அதிபதியாக வரும் சுக்கிரன் நன்மையை தரும் கிரகமாகும்.  
                • மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் துலாம் வீட்டில்   ஆட்சி பெற்றாலும்  பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் தருகிறது. ஆனால் 7ல் சுக்கிரன் பலம் பெறுவது நலமான அமைப்பல்ல.
                • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் வீடு என்னும் குடும்பம் மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,
                • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் வீடு என்னும் கணவன் மனைவி உறவென்னும்  மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,
                • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சர லக்ன மாரகாதிபதி சுக்கிரனே ஆவார். ஆனால் இவர் பெரும்பாலும் மாரகத்தினை தருவதில்லை.
                • மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் பலம் பெறாமல் மிதமான பலத்தில்  இருப்பது விசேடம். ரிஷபம், கடகம், தனசு, மீனம்  வீடுகளில் இருந்தால் நலம் தரும். 

                கிரகங்கள்- புதன்

                • மேஷ இலக்கினகாரர்களுக்கு  புதன் எந்தவிதத்திலும் உதவி நினைக்காதவர். 

                • மேஷ லக்னத்திற்கு புதன் எங்கிருந்தாலும் எதாவது ஒரு பிரச்னை தந்து விடுவார். குறிப்பாக இவர் 2 என்னும் குடும்பத்தில் அமர்ந்தாலும் 7 என்னும் களத்திர பாவத்தில்  அமர்ந்தாலும் 10 என்னும் தொழிலில்  அமர்ந்தாலும் மொத்தமாக பாதித்து விடுவார்.

                • மேஷ லக்னத்திற்கு புதன் மிதுனம் கன்னி விருச்சிகம்  ஆகிய இடங்களில் அமர்ந்தால் மிதமான பலன்களை வெளிப்படுத்தக் கூடியவர்.

                சூட்சுமங்கள்  

                • மேஷ லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் எதுவும் இல்லை. அதாவதுசெவ்வாய் புதன் சனி மூவரும்  6 வீடுகள் பலன்களை பலமிழக்க செய்து விடுகிறார்கள்.
                • குரு சுக்கிரன் தனது பங்கிற்கு 4 வீடுகளின்  பலன்களை  செய்கிறது ஆனால் குரு சுக்கிரன் பலம் பொருத்து மாறுபடும்.
                • இறுதியாக சூரியன் சந்திரன் நல்ல பலன்களை கொடுப்பார்கள். ஆனால் சந்திரனுக்கு 10 வருடமும் சூரியனுக்கு 6 வருடமும் ஆக  மொத்ததம்  16 வருடங்கள் தான். ஆனாலும்  இவர்கள் பலம் பெற இருத்தல் வேண்டும் .

                தசா பலன்கள் - சூரியன் 

                மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு சூரியன்  நட்பு மேலும் மேஷத்தில் சூரியன் உச்சம் அடைகிறார். சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • அரசு உதவிகள் அல்லது அரசு வேலைகள் சிரமம் இன்றி நடக்கும்
                • தைரியம் அதிகரிக்கும் 
                • பூர்வீக சொத்துக்களால் லாபம் மேலும் தந்தைவழி மற்றும் புத்திரர்கள் வழிகளில் ஆதாயம் கிட்டும்
                • மக்கள் தொடர்பான துறைகளில் கீர்த்தி உண்டாகும்
                • சுயதொழில் எண்ணிய லாபம் உண்டாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்
                • ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்
                • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

                 தசா பலன்கள் - சந்திரன் 

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு  சந்திரன் நட்பு, சமம் என்ற நிலையில் இருகிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
                • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
                • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
                • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
                • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
                • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
                • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
                • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
                • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  செவ்வாய் 

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி, 8க்கு உரியவரும் செவ்வாய். தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • உடல் தோற்றம் பொலிவு மேம்படும்.செய்யும் செயல்களில் கீர்த்தி உண்டாகும்
                • ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும்
                • பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும்
                • மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள்
                • வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்
                • சுய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்
                • குடும்ப பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்
                • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
                தசா பலன்கள் -  புதன் 
                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்
                • முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்
                • வாழ்க்கை பற்றிய அனுபவ அறிவு மேம்படும்
                • உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்
                • உயர் கல்வி சார்ந்த எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். புதிய ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல் அதிகரிக்கும்
                • கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களுடன் கேளிக்கை ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள் 
                • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                 தசா பலன்கள் -  குரு  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு குரு நட்பு என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
                • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
                • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
                • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
                • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
                • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
                • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
                • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
                • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                தசா பலன்கள் - சுக்கிரன்  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். சுக்கிரன் செவ்வாய்க்கு சமம். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • வெளிநாடு பயணங்கள், வெளிநாட்டு கல்வி சார்ந்த விசயங்கள் ஆதாயமாக இருக்கும்
                • தொழிலில் பிரச்சனை வரலாம். 
                • இளைய சகோதர சகோதரி வழியில் சில பிரச்னைகள் தோன்றும் 
                • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அல்லது வழக்கு வர வாய்ப்பு உண்டு 
                • உடலில் இருந்த சோர்வு நீங்கி  சுறுசுறுப்பு  உண்டாகும்.
                • பொருளாதாரம், குடும்பம் மற்றும் தொழில் கவனம் தேவை
                • தொழில் விரயம் தவிர்க்க கவனம் தேவை. 
                • உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணியில் பிரச்னைகள் தோன்றும் 
                • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் - சனி 

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். சனி செவ்வாய்க்கு பகை. சனி  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • வரவும் உண்டு. செலவும் உண்டு. ஆனால் செலவு அதிகரிக்கும் 
                • தொழிலில், வியாபாரம் சிறப்பாக இருக்கும் 
                • வாழ்க்கை துணையின் வழியில் நல்ல உதவி உண்டு. ஆனாலும் வாழ்க்கை துணை செலவுகள் அதிகம் செய்யும் சூழல்  அமம்யும் 
                • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அதாவது பரமத்து பணிகள் வர கூடும்.
                • ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. 
                • பொருளாதாரம், குடும்பம், குழந்தைகள் கவனம் தேவை
                • மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் 
                • முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்
                • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  ராகு  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். ராகு  செவ்வாய்க்கு பகை. ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • மனதுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்
                • வழக்கு தொடர்பான விஷயங்களிலும், செய்யும் செயல்களிலும் கவனம் தேவை
                • நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் 
                • நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் கவனம் வேண்டும் 
                • நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள் 
                • எளிதில் முடியும் என்று எதிர்பார்த்த சில செயல்கள் காலதாமதமாகும்
                • நெருக்கமானவர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்
                • உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்
                • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  கேது  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். கேது  செவ்வாய்க்கு பகை.  கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • செயல்படும் தன்மைகளில் மாற்றம் உண்டாகும். அஞ்ஞான சிந்தனைகள் தோன்றி மறையும் 
                • மனதில் எழும் ஆசைகள் குறையும். பல்துறை பற்றி அறிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் 
                • மனதில் பலவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும் 
                • குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும் 
                • புதுவிதமான செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும் 
                • பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும் 
                • தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும் 
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 
                மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் என்றால் அந்த லக்கினம் அஸ்வினி, பரணி, கிருத்திகை பாதம் – 1 என்ற இந்த முன்று நட்சத்திரத்தில் இருக்கலாம். 

                மேஷம் லக்கினம்  – அஸ்வனி 

                அஸ்வினி நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், கேது தாக்கத்துடன் இருப்பார்.
                அஸ்வினி நட்சத்திரம் தேவ குணம் கொண்டவர்கள், தெய்வீக அருள் கொண்டவர், ஜோதிட சாஸ்திரங்களில் மற்றும் இதிகாசம் ஆர்வ மிக்கவர். இவர்கள் கடமை தவறாதவர், கருமமே கண்ணாக திகழ்பவர்கள், பெண்கள் மீது அன்பு காட்டுவார்கள், தன்னலமற்றவர்கள், பராக்கிரமம் உடையவர்கள், உண்மை பேசுபவர், மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அணிகலன் மீது ஆசை கொண்டவர். நற்பெயர் பெற்றவர், கொஞ்சம் கோபக்காரர் ஆனால் வெளியே தெரியாது, சாதுர்யம் மிக்கவர், புத்திசாலித்தனம் கொண்டு புகழையும் பொருளையும் ஈட்டுவார், எதிர்கால திட்டம் புரிபவர், பரிசுத்தமானவன், அமைதியானவர், தெளிப்படுத்தி பின்பு வழக்கை நடத்துபவர், நல்லதே நினைப்பவர், ஒருசிலர் புறம் பேசுவார், உடல் உஷ்ணத்தால் நோய் பிறவியில் இருக்கும், நீதி, நேர்மை என்று பேசிக்கொண்டு இருப்பார். அழகில் சுமாராக இருப்பார்கள், பெரியவர்களிடம் கேட்டு நடப்பவர்.

                மேஷம் லக்கினம்  – பரணி 

                பரணி  நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், சுக்கிரன்  தாக்கத்துடன் இருப்பார்.
                பரணி நட்சத்திரம் மனுஷ குணம் கொண்டவர், வசதிமிக்கவன், தான் மனதையும் நற்பெயரும் காத்து வாழ்க்கை நடத்திச்செல்வர்கள். பேச்சில் உறுதி, மனைவியின் பேச்சை கேட்பவன், பெற்றோருக்கு மகிழ்வு தருவானாக, அறச்செயல் செய்பவன், எப்பொழுதும் கோபமாக இருப்பான், தூக்கம் குறைவு, மெய்யறிவு மற்றும் நன்நெறி மிக்க நீதிமான், தான தர்மம் செய்பவர், தெய்வ அருள் கொண்டவர், சுலபத்தில் வெற்றி அடைவார், பிடிவாத மிக்கவர், பருத்த தோற்றமிக்கவர், மனதில் வஞ்சகம் இருக்கும், நன்றியறிவுள்ளவர், பலசாலி, சோம்பல் உடையவர், சாஸ்திரப்படி இருப்பான், உடல் பருமனானவர், அரசுப் பணி செய்பவர் மற்றும் குணம் மாறுபட்டு கொண்டு இருக்கும்.

                மேஷம் லக்கினம்  – கிருத்திகை  


                கிருத்திகை நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், சூரியன்  தாக்கத்துடன் இருப்பார்.
                கிருத்திகை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் கொண்டவர்கள். கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் இரு நெருப்பு கிரகங்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் குணம் கோபம், ஆக்ரோஷமாக, சிலர் இதனால் ரத்த அழுத்தப் பாதிப்புடன் இருப்பார்கள், இரவில் தூக்கமில்லாதவர்கள், புலனின் விஷயங்களில் ஆர்வம் மிக்கவர், வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவான், பேச்சில் சாமர்த்திய மிக்கவர், தெளிவானவர்,  ஆசாரமுள்ளவர், வித்துவான், சூரன், புத்திமான், நிலம் வீடு, மாடு கன்று பாக்கியம் கொண்டவர், சாஸ்திரங்களை சம்பிரதாயங்கள் 

                மந்திரம் 

                மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய  தாயுமானவ சுவாமி பதிகத்தை மனதார சொல்லி வருவது நல்லது 

                அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய்
                அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்
                பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப்
                பரம்ஆகிச் சொல்லரிய பான்மை ஆகித்
                துகள் அறுசங்கற்ப விகற்பங்கள் எல்லாம்
                தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
                நிகர் இல் பசுபதியான பொருளை நாடி
                நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்

                 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



                காதலர் தின ராசி பலன்கள் - துலாம்

                 

                குறிப்பு :

                காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)

                திருமணமானவர்கள் ராசி பலன்

                துலாம் ராசியினர் நல்ல உணர்ச்சிபுறமான திட்டதோடு உங்கள் வாழ்க்கை துணைக்கு அன்பை கொடுபீர்கள்.  எதனால் நீங்களின் உங்கள் துணையும் காதல் வானில் பறக்கவும் உயரவும் சிறகுகளைத் தரும். தராசை எடுக்கமால் அன்பை பரிமாறுங்கள்.
                அனைத்து துலாம் ராசியினரும் கவர்ச்சியான மற்றும் இனிமையான அதிர்வுகளை அனுபவிப்பார்கள். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று உங்கள் குழப்பம் குறையும்.

                காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்

                காதலில் இருக்கும் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் சமநிலைப்படுத்தும் ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். ஒரு அற்புதமான காதல் வாழ்க்கையைப் பராமரிக்கும் அதே வேளையில்,உங்கள் துணையுடன் நெருக்கமான மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பெறப்போகிறார்கள். 


                உங்கள் காதலிக்கு அனுப்பிய பழைய வாட்ஸ்அப் ரசிப்பீர்கள். நாம் இந்த அளவுக்கு எழுதி இருக்கோம் என்று தோணும். உங்கள நெனச்சா உங்களுக்கே சிரிப்பா இருக்கும். 

                காதலை வெளிபாடுத்தல் :

                இது சரியா, தவறா என்பதை சீர்தூக்கி பார்ப்பதையும், எடைபோட்டுப் பார்ப்பதையும் விட்டு விட்டு, நீங்கள் காதலில் இருந்தால் அதை வெளிப்படுத்த தயங்காதீர்கள். 

                கிரகங்கள் மிக சிறப்பாக தான் இருக்கின்றன. இருப்பினும் நீங்கள் காதலின் மீதும், காதல் செய்ய நினைப்பவர் மீதும் சரியான முடிவுக்க வர முடியாமல் திணறி வருகின்றீர்கள். நீங்கள் காதல் செய்பவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் காதல் சொல்ல சரியான நாளாக தான் இருக்கும். உங்கள் குழப்பம் காதல் முறிவில் விடலாம் 

                ஏற்ற காதல் ராசிகார்கள் :

                நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்         

                • மேஷமாக இருந்தால் 90% - 100% நல்லது
                • மிதுனமாக இருந்தால் 80% - 90% நல்லது
                • சிம்மம் மற்றும் தனசு ஆக  இருந்தால் 50% நல்லது

                என்ன பரிசு தரலாம்:

                துலாம் ராசி நேயர்கள் அழகான விஷயங்களை விரும்புவார்கள். நீங்கள், உங்கள் துணை துலாம் ராசியாக இருக்கும் பட்சத்தில்  மலர்கள், நன்றாக மூடப்பட்ட சாக்லேட்டுகளின் பெட்டி, ஒரு இரவு உணவு அல்லது ஒரு திரைப்படம் டிக்கெட் போன்ற பரிசாக தரலாம் 

                பொது பலன் :

                ஏற்கனவே யார் மீதேனும் காதல் வயப்பட்டிருந்தால், அதுகுறித்து நல்லது கெட்டதை எடைப்போட்டு பார்ப்பதை விடுத்து, உங்களுக்கு அவரின் மேல் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அடுத்த முடிவை எடுங்கள். இல்லை என்றால் கடைசிவரை முரட்டு சிங்கிளாக தான் இருக்க வேண்டி வரும்.



                காதலர் தின ராசி பலன்கள் - கன்னி

                 

                குறிப்பு :

                காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)

                திருமணமானவர்கள் ராசி பலன்

                உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளி இடம், திரைப்படம் அல்லது முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்விர்கள். இந்த காதலர் தினம் கொஞ்சம் சிறப்பாகவே இருக்கும். நீண்ட காலமாக இழந்த உங்கள் துணையின் அன்பை புரிந்து கொண்டு திரும்ப பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்
                நண்பர்கள் தங்களின் சோக கதையை சொல்லி  புலம்பவர்கள். டென்சன் செய்வார்கள். உங்கள் குடும்பத்தை நீங்கள் கவனிங்கள். 

                காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்

                நீங்கள் இழந்த காதலை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மிகவும் சிறப்பான நாளாக அமையப் போகிறது.  

                சிறப்பான உறவு அமையக்கூடிய ஒரு அர்த்தமுள்ள காலமாக இருக்கும். இது உறவுகளை வளர்க்கக் கூடிய மிக சிறப்பான காலம். காதல் மட்டுமல்லாமல் உறவை வளர்த்தல், அது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுதல் என பல இன்பமான நிகழ்வுகள் இருக்கும். இருப்பினும் இதெல்லாம் நடக்க அமைதியும், நம்பிக்கையும் தேவைப்படும்.

                காதலை வெளிபாடுத்தல் :

                மிக சிறந்த நாள். காதலுக்குரிய மிக சிறந்த காலம். நண்பர்களால் தொல்லை உண்டு. அறிவால் காதலை வெல்ல முடியாது என்பதை புரிந்த கொண்டு காதலால் காதலை  வெல்லவும். உங்கள் தவறான புரிதல்கள் அனைத்தும் சரியாகிவிடும். 

                5யில் இருக்கும் சூரியன் உங்களுக்கு நன்மை செய்வார். அதிஷ்டமான நாள்

                ஏற்ற காதல் ராசிகார்கள் :

                நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்         

                • ரிஷபம் மற்றும் மகரமாக இருந்தால் 90% - 100% நல்லது
                • கடகம் மற்றும் விருச்சிகமாக இருந்தால் 80% - 90% நல்லது
                • கன்னி மற்றும் மிதுனமாக இருந்தால் 70% - 80% நல்லது

                என்ன பரிசு தரலாம்:

                கன்னி ராசிக்காரர்கள் சிறிய விசயங்களை விரும்புவார்கள். மேலும் சிறிய விசயங்களையும் பாராட்டுவதை விரும்புவர்கள் நீங்கள், உங்கள் துணை கன்னி ராசியாக இருக்கும் பட்சத்தில் உடல்நலம் குறித்த ஒரு புத்தகம், அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு செல்லப்பிராணி போன்ற பரிசாக தரலாம் 

                பொது பலன் :

                உங்கள் துணையுடன் உங்கள் நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். அன்பால் தான் காதலை வெல்ல முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் 


                காதலர் தின ராசி பலன்கள் - சிம்மம்

                 

                குறிப்பு :

                காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)

                திருமணமானவர்கள் ராசி பலன்

                சிம்ம ராசிக்காரர்கள் வார்த்தையில் கர்வத்தை குறைத்து, நல்ல வார்த்தைகளை பேசவும். இல்லை என்றால் சண்டையில் தான் முடியும். உங்கள் நண்பர்கள் அவர்களின் துணையுடன் உல்லாசாமாக இருப்பதை பார்த்து மனம் வெறுத்து போகும். மாலையில் உங்களுக்கு நன்றாக இருக்கும். நீங்களே சண்டையை  மறந்து பேசி இந்த காதலர் தினத்தை அனுபவிக்கவும் 

                காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்

                உண்மையில் சிம்ம ராசிக்கு இந்த காதலர் தினம் சிறப்பானது. கூற நினைக்கும் ஒரு சிறு அறிவுரை என்னவென்றால், வார்த்தைகளை மிக கவனமாக தேர்வு செய்து பயன்படுத்துவது மிக அவசியம்

                நீங்கள் உங்கள் துணையிடம் நீங்கள் அதிகம் ஈர்க்கப்படுவீர்கள். உங்கள் ஆழ்ந்த இரகசியங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன், உங்களின் ரகசியங்களை அவர்கள் தாங்கிக் கொள்வார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே உங்களின் பிரிவு உங்களுக்கு காரணமாக இருக்கலாம்.

                காதலை வெளிபாடுத்தல் :

                உங்களின் காதலை வெளிப்படுத்த நினைக்கும் போது அனைவரும் உங்களைப் பார்க்க வேண்டும் என நினைக்க வேண்டாம். நீங்கள் ஒரு அமைதியான இடத்தில் சற்று சிறப்பான வார்த்தைகளைப் பயன்படுத்த தவறாதீர்கள். 

                நீங்கள் காதலன் / காதலியை விரும்ப வைக்க விரும்பினால், உங்களுக்கு யாரேனும் துணையாக சில செயல்கள் செய்ய தேவைப்படலாம்

                ஏற்ற காதல் ராசிகார்கள் :

                நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்         

                • தனுசு மற்றும் மேஷமாக இருந்தால் 80% - 90% நல்லது
                • சிம்மமாக இருந்தால் 70% - 80% நல்லது

                என்ன பரிசு தரலாம்:

                சிம்ம  ராசிகாரர்கள் சோசியல் மீடியாவில் நாட்டம் இருக்கும்.. நீங்கள், உங்கள் துணை சிம்ம ராசியாக இருக்கும் பட்சத்தில் நியான் லைட்பாக்ஸ் அல்லது சிறந்த நகைகள் போன்ற பரிசாக தரலாம்.

                பொது பலன் :

                அதிகாரத்தையும் ஆணவத்தையும் கட்டாயம் ஒதுக்க வேண்டும். அகங்காரத்தை நீக்கி, உங்களைப் பற்றியும் உங்கள் துணைப் பற்றியும் மட்டுமே சிந்திப்பது இப்போது உங்களுக்கு நல்லது


                காதலர் தின ராசி பலன்கள் - கடகம்

                 




                குறிப்பு :

                காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)

                திருமணமானவர்கள் ராசி பலன்

                கடக ராசியினர்  மிகவும் softன குணம் உடையவர்கள். வேலையில் உள்ள அழுத்தம் இருந்தாலும்  உங்கள் துணையின் அரவணைப்பு கிடைக்கும்.. உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பு உங்களை வாழ்வின் அனைத்து துக்கங்களையும் வலிகளையும் மறக்கச் செய்கிறது என்பதை நீங்கள் உணரலாம், மேலும் நீங்கள் காதல் படகில் ஒரு இனிமையான பயணத்தை அனுபவிப்பீர்கள். .

                காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்

                காதலர் தினத்திற்கான பெரிய திட்டங்களை உருவாக்குவதில் நீங்கள் மும்முரமாக இருக்கும்போது, உங்கள் துணையின் நோக்கங்களையும் கவனிக்க வேண்டியது அவசியம். அதிக நகைச்சுவை உணர்வு மிக்கவர்களான நீங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் தயாராகஇருப்பிர்கள். 

                காதலை வெளிபாடுத்தல் :

                காதலர் தினத்திற்கான பெரிய திட்டங்களை உருவாக்குவதில் நீங்கள் மும்முரமாக இருக்கும்போது, உங்கள் துணையின் நோக்கங்களையும் கவனிக்க வேண்டியது அவசியம். அதிக நகைச்சுவை உணர்வு மிக்கவர்களான நீங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் தயாராகஇருப்பிர்கள்.

                ஏற்ற காதல் ராசிகார்கள் :

                நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்         

                • விருச்சிகம் மற்றும் மீனமாக  இருந்தால் 80% - 90% நல்லது
                • கன்னி மற்றும் ரிஷபமாக இருந்தால் 70% - 80% நல்லது

                என்ன பரிசு தரலாம்:

                கடக ராசிகாரர்கள் மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் உணர்திறன் வாய்ந்தவர்கள். நீங்கள், உங்கள் துணை கடக ராசியாக இருக்கும் பட்சத்தில் இருவரின் படங்களைக் கொண்ட புகைப்பட ஆல்பங்கள் பரிசாக தரலாம். மெழுகுவர்த்தி விளக்கு இரவு உணவை ஏற்பட்டு செய்யலாம். உங்கள் துணைக்கு பிடித்ததை செய்யுங்கள்.

                பொது பலன் :

                காதலர் தினத்திற்கும் கடக ராசியினருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் உள்ளது. காதல் முறிவு வாராமல் பார்த்து கொள்ளங்கள். பறப்பதை பிடிக்க இருப்பதை இழக்க வேண்டாம்.



                காதலர் தின ராசி பலன்கள் - மிதுனம்

                 

                குறிப்பு :

                காதலர் தின ராசி பலன்கள் என்றால் தின, வார, மாத, வருட பலன்களை போன்று சொல்ல படுபவை தான். இது பொது பலன் மட்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. தயவு செய்து இது மட்டும் சரி என்று குழப்பி கொள்ள வேண்டாம் நண்பர்ளே!!! (தச புத்தி, மற்றும் ஜாதக கட்டத்தை பாத்துதான் சொல்ல முடியும்.)

                திருமணமானவர்கள் ராசி பலன்

                மிதுன ராசியினர் காதலர் தின செயல்பாடு எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள ஆர்வப்பட்டால் அது இயலாத ஒன்றாக இருக்கும். மேலும் கண்டுபிடிப்பது கடினம் எனலாம்.
                அதே சமயம் இவர்கள் காதலர் தினத்தில் மோசமான சூழலை கூட சாதகமாக்கும் திறனுடைவார்கள் எனலாம். 
                திருமணமானவர்களின் வாழ்க்கையில், ஒரு புதிய மற்றும் சிறிய விருந்தினர் நுழையலாம். இந்த நற்செய்தியைப் பெறும்போது, ​​​​உங்கள் துணையின் மீதான உங்கள் அன்பு அதிகரிக்கும், மேலும் அவர்களுடன் சிறப்பு நேரத்தை செலவிட உங்கள் விருப்பத்தை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள்.

                காதலில் இருப்பவர்களின் ராசி பலன்கள்

                9ம் இடத்து சுக்கிரனால் காதலர் தினம் மிக சிறப்பாக இருக்கும். உங்கள் காதல் துணை உங்களை மிகவும் ஆச்சிரிய படுத்தவர். நீங்கள் மகிழ்ச்சியை உணருவீர்கள். இதன் காரணமாக உங்கள் உறவு மேம்படும், மேலும் நீங்கள் இருவரும் ஒரு பயணத்திற்கு செல்ல திட்டமிடலாம். 

                காதலில் இருப்பவர்கள் உங்கள் துணைக்கு ஏதாவது விசேஷமாகச் சலிக்காமல் செய்து உங்கள் உறவில் ஆர்வத்தையும், புத்துணர்ச்சியையும் தூண்டுதல் வேண்டும். 

                குருவின் பார்வை மிக சிறப்பாக இருப்பதால் உண்மையை சொல்லி இந்த தினத்தை சிறப்பு ஆக்குங்கள்

                காதலை வெளிபாடுத்தல் :

                காதலை வெளிப்படுத்த நினைக்கும் மிதுன ராசியினர் என்ன செய்து காதலனை / காதலியை தன் வசப்படுத்துவார் என்பதை அறிய முடியாது. இவர்கள் திடீரென ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்களின் காதல் வெளிப்படுத்தும் விதம் சுற்றியுள்ளவர்களை திகைப்பில் ஆழ்த்தும். 

                உங்கள் காதலை சொன்ன உடன் ஏற்கபடாது. காதலுக்காக போராட வேண்டி இருக்கும். அசிங்கப்பட்டாலும் துன்பப்பட்டாலும் துயரப்பட்டாலும் உங்கள் குறிக்கோள் காதலாக தான் இருக்கும். முயற்சி தான் திருவினையாக்கும்.  உங்கள் காதலை வெளிபடுத்த பயப்பட வேண்டாம் 

                ஏற்ற காதல் ராசிகார்கள் :

                நீங்கள் காதல் சொல்லும் காதலி அல்லது காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் நல்லது அல்லது ஏற்ற ராசிகள் யார் என்றால்         

                • துலாமாக இருந்தால் 90% - 100% நல்லது
                • கும்பமாக இருந்தால் 80% - 90% நல்லது
                • சிம்மம் மற்றும் மேஷமாக இருந்தால்  70% - 80% நல்லது

                என்ன பரிசு தரலாம்:

                மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் வாழ்க்கையில் நிறைய வேடிக்கையும் உற்சாகமும் தேவை. எனவே, இந்த காதலர் தினம் அவளை ஒரு குழு பயணத்தில் எங்காவது சிறப்புக்கு அழைத்துச் செல்லாம். புத்தகத்தை பரிசாக வழங்கலாம்.

                பொது பலன் :

                இந்த வருட காதலர் தினம் மிக சிறப்பாக இருக்கும். மேலும் இது மிதுன ராசி பெண்களுக்கு  மிக சந்தோஷத்தை தரும். உங்கள் காதலை தைரியமாக வெளிபடுத்தலாம்.