உத்திரட்டாதி தொடர்ச்சி

உத்திரட்டாதி- Uthrattathi / Uthra bhadrapada


பொதுவான குணங்கள்:

உத்திரட்டாதி நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் பேச்சுவதில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மை பேசக்கூடியவர்கள். சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றுவார்கள். மிகுந்த சாமர்த்தியசாலிகள். வெற்றிலை போடுவது மற்றும் அடிக்கடி பயணம் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். வெளி உலகுக்காகப் போலியாக வாழாத யதார்த்தவாதி. வேத, உபநிடதங்களில் கரைகண்டவர். நீதி, நேர்மை, உண்மை ஆகியவற்றை விட்டு விலகாதவர். இவர்களுக்குள் எப்போதும் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும். 

கல்வி சுமாராகத் தான் இருக்கும். பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவாகம் நிறைந்தவர்கள். ஆழமாக யோசித்து செயல் படுவதால் தொட்டதெல்லாம் துலங்கும். பேச்சை விட செயலில் தான்  ஈடுபாடு இருக்கும். நீதி, நேர்மையுடன் வாழ்வார்கள். எதிலும் நடு நிலைமையுடனிருப்பார்கள். தன்னுடைய கடினமான உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைந்து சுகமான வாழ்க்கை வாழ்வார்கள்

குடும்ப வாழ்க்கை

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பெண் நட்புகள் அதிகமிருக்கும். காதல் வயப்பட்டாலும் குடும்ப நலன் கருதி விலகி விட நேரிடும். வாழ்க்கை துணையிடம் அதிக பாசமும் பிள்ளைகள் மீது அன்பும் இருக்கும். இவர்களுக்கு ஆண் பிள்ளைகளே அதிகமிருக்கும். கலச்சாரம் பண்பாடு தவறாமல் வாழ விரும்புவார்கள். எல்லா வசதிகளும் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். தாய் மீது அதிக பாசம் இருக்கும் உணவு பிரியர்களாக இருப்பார்கள்.  இயற்கையான சூழலில் வீடுகளை அமைத்து அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வயதான காலத்தில் சிலர் இல்வாழ்க்கையை துறந்து துறவறத்தில் ஈடுபடுவார்கள்..

 நண்பர்கள்:

உறவினர், நண்பர்களை உடையவர் எனலாம்.  மேலும் கற்றறிந்தவர்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள் நடுநிலைமை நடந்து கொள்வார்கள். நட்பு வட்டாரங்கள் அதிகம் இருந்தாலும் யாரிடமும் எந்த உதவி கேட்க மாட்டார்கள். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உண்மையே பேசி பல நட்புகளைப் பெறுவார்கள்.

 நட்பு நட்சத்திரங்கள் :

ஆயில்யம், கேட்டை, ரேவதி, ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மகம், மூலம் இந்த நட்சத்திரங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிறு உதவி கூடசெய்ய மாட்டார்கள்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உதவியும், நன்மையும் கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் அந்த நட்சத்திரகார்களுக்கு செலவு செய்ய வேண்டியது வரும். உங்களுக்கு வரும் ஆதாயங்களில் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பங்கு தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கூடுதல் சுமையாகவே இருப்பார்கள். 

மிருகசீருடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரகார்களையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்

தொழில்:

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், எந்த தொழில் செய்தாலும் விரைவில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்பார்கள், குறிப்பாக உணவு தொழில் மிகுந்த பக்கபலமாக இருக்கும். மிக சிறந்த வளர்ச்சியைத் தரும். எனவே உணவு தொழில் செய்வதும், பயணங்கள் தொடர்பான தொழில் செய்வதும், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில்கள், வழக்கறிஞர், ஆசிரியர், பேச்சை தொழிலாக செய்தல், உபன்யாசம், கதாகாலட்சேபம், ஜோதிடம், நீதிபதி, மருத்துவர், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், மூலிகை வைத்தியம்/ தகவல் தொழில்நுட்பம், பத்திரிகை துறை, ஊடகத் துறை, கலை இலக்கிய ஆர்வம், கலைத்துறை சார்ந்த நடிப்பு, பாட்டு, இசை போன்ற துறைகளிலும் வெற்றி பெறுவார்கள்.

கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சட்டம் பயிலுபவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும் வானவியல், ஜோதிடம், மருத்துவம் வங்கிப் பணி போன்றவற்றிலும் பணி புரிவார்கள், பள்ளி கல்லூரி, கன்ஸ்ட்ரக்ஷன், சிட்பண்ட்ஸ், பதிப்பகம் போன்றவற்றையும் நடத்துவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகத்தை பெற்றவர்கள்.

ஆரோக்கியம் :

இளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்

தசா பலன்கள்:

உத்திரட்டாதி  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன்   தசை முதல் திசையாக வரும். சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சனி   தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சனி தசை:

சனி தசை காலங்களில் சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடு குடும்பத்தில் அசையா சொத்து சேர்க்கை, நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

புதன்  தசை:

இரண்டாவதாக வரும் புதன் தசை 17 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் நல்ல  ஞாபக சக்தி கல்வியில் உயர்வு, பெற்றோர் பெரியோர்களின் ஆசி ஆகியவை சிறப்பாக  அமையும். சுக வாழ்வு வாழ்வார்கள்.  

கேது  தசை:

மூன்றாவதாக வரும் கேது தசை சாதகமற்று இருக்கும். உடல் நிலையில் பாதிப்பு தேவையற்ற மனக்குழப்பங்கள், சோம்பல் தன்மை, திருமணமானவர்களுக்கு இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். நிம்மதி குறையும்.

சுக்கிரன்  தசை:

அடுத்து வரும் 4வது தசை சுக்கிர தசை 20 வருட காலங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் பொருளாதார மேன்மை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் சுப காரியம் நடைபெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சூரியன்  தசை:

ஐந்தாவதாக தசை சூரியன் தசை ஆகும். உடல் ஆரோக்கியம் பாதிப்பு இருக்கும். சிலர் இதை மராக தசை என்று சொல்வதும் உண்டு. குரியன் நல்ல பலம் பெற்று இருந்தால் மிக சிறப்பான சூழ்நிலை அமையும்.


பொது பரிகாரம்:

உத்திரட்டாதி நட்சத்திர காரர்களின் விருட்சம் வேப்ப மரமாகும். இம்மரம் உள்ள கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். 

நட்சத்திரம் வானில் தோன்றும் நாள்:

இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 12 மணிக்கு மேல் உச்சி வானத்தில் காண முடியும் 

செய்ய வேண்டிய  நல்ல காரியங்கள்:

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், பூ முடித்தல் சீமந்தம், குழந்தையை தொட்டிலில் இடுதல், பெயர் சூட்டுதல், மொட்டையடித்து காது குத்துதல், முதன் முதலாக சாதம் ஊட்டுதல், கல்வி ஆரம்பித்தல், ஆடை அணிகலன்கள் அணிவது, வாகனம் வாங்குதல், மருந்து உண்ணுதல் ஆகியவற்றை செய்யலாம். வங்கி சேமிப்பு தொடங்க, நாட்டியம் பயில, புது வேலைக்கு விண்ணப்பிக்க ஆயுதம் பயில, குளம், கிணறு வெட்ட  இந்த நட்சத்திரம் உகந்ததாகும்.

 பொருந்தும் மற்றும்  பொருந்த நட்சத்திரங்கள் :

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது திருவாதிரை  நட்சத்திரத்திற்கு

 பொருந்தும் நட்சத்திரங்கள் :

ஆயில்யம், கேட்டை, ரேவதி, ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள் :

பரணி, பூசம், அனுஷம், பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

(குறிப்பு: மிக பொருந்தும்  நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

 சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் காமகா மாய வித்மஹே

       ஸர்வசித்யை ச தீமஹி

     தன்னோ தேனு ப்ரசோதயாத்


நட்சத்திரம் - உத்திரட்டாதி

 உத்திரட்டாதி /   Uthrattathi / Uthra bhadrapada




உத்திரட்டாதி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 26 வது பிரிவு ஆகும். உத்திரட்டாதி நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பெகாசசு விண்மீன் கூட்டத்திலும் ஆன்ட்ரோமெடா விண்மீன் கூட்டத்திலும் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தரட்டாதியின்(ஆன்ட்ரோமெடாய்) பெயரைத் தழுவியது. உத்தரட்டாதியின் சமஸ்கிருதப் பெயரான உத்தர பத்ரபாத (Uttara Bhadrapada) என்பது "இரண்டாவது ஆசீர்வதிக்கப்பட்ட பாதங்கள்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் இரண்டு கால்கள்", அல்லது "இரட்டையர்" ஆகும்.மேலும் உத்திரட்டாதி காமதேனுவின் நட்சத்திரம் ஆகும்

 நட்சத்திர காரத்துவம்:

ஆளும் உறுப்புகள்

கால்கள்

பார்வை

மேல்நோக்கு

பாகை

333.20 - 346.40

தமிழ் மாதம்

பங்குனி

நிறம்

வெண்மை

இருப்பிடம்

கிராமம்

கணம்

மனுஷ கணம்

குணம்

உறுதி

மிருகம்

பசு

பறவை

கோட்டான்

மரம்

பாலில்லாத வேம்பு மரம்

மலர்

சந்தன புஷ்பம்

தமிழ் அர்த்தம்

பின் மங்கள பாதம்

தமிழ் பெயர்

முரசு

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

ஸ்திரம்

நாடி

மத்திம நாடி

ஆகுதி

உளுந்து

பஞ்சபூதம்

ஆகாயம்

நைவேத்யம்

வெல்ல சாதம்

தேவதை

அஹிர்புத்னியன் - சங்கு, சக்கரங்களைக் கைகளில் ஏந்தியவாறு காட்சியளிப்பவர்

அதி தேவதை

ஸ்ரீகாமதேனு

அதிபதி

சனி

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

சதுர வடிவில் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டது

மற்ற வடிவங்கள்

கட்டில்கால்

மற்ற பெயர்கள்

அரசு, கோ,மன்னவன், முறக, வரை, சீர், அரிவாள்

வழிபடவேண்டிய தலம்

சகஸ்ரலட்சுமீஸ்வரர்புதுகோட்டை

அதிஷ்ட எண்கள்

 5, 6, 8

வணங்க வேண்டிய சித்தர்

அகஸ்தியா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

து, , , ஸ்

அதிர்ஷ்ட நிறங்கள்

நீலம், வெளிர்ப் பச்சை

அதிர்ஷட திசை

கிழக்கு

அதிர்ஷட கிழமைகள்

திங்கள், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

ப்ளாக் ஸ்டார்

அதிர்ஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், புனர்பூசம், ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

காமதேனு, ஜடாயு, ராகவேந்திரர், அருணகிரிநாதர், வேதாத்ரி மகரிஷி

குலம்

சூத்திர குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்

மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

ரேவதி தொடர்ச்சி

 ரேவதி /  Revathi


பொதுவான குணங்கள்:

ரேவதி நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைப்பார்கள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை பிறருக்கும் எடுத்து சொல்லி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குவார்கள். கையில் எந்த முதலீடும் இல்லாவிட்டாலும் இவர்களின் மூளையே மூலதனமாக இருக்கும்.எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து இழுப்பார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அளவிற்கு பெரிய சாதனைகளை செய்வார்கள். அனைவரின் எண்ண ஒட்டங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். ஜீவ காருண்யம் பார்ப்பார்கள். எவ்வளவு வயதானாலும் இளம் வயது போலவே காட்சியளிப்பார்கள். அழகிய பல் வரிசையும், சிரித்த முகமும் இவர்களுக்கு மேலும் வசீகரத்தை கொடுக்கும். சபை நாகரிகம் தெரிந்து கொள்வார்கள்.

 
ரேவதி நட்சத்திரம் குருவின் சொந்த வீடான மீன ராசியில் அமைகின்றது. இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்திற்குரிய அறிவாற்றலும் மிக சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தை உணரக் கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.


அழகான குண அமைப்பு, முகத்தோற்றமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் உற்றார் உறவினர்களிடம் பழகுவதை விட அந்நியர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கை துணை, பிள்ளைகள் மீது அதிக அக்கறையும், பாசமும் பெற்று இருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பார்கள். மனம் தெளிந்த நீரோடை போல சுத்தமாக இருக்கும். உள்ளன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். அளவுக்கு அதிகமான இளகிய மனம் இருப்பதாக சில நேரங்களில் அதுவே ஆபத்தாக முடியும். பெற்றோர் பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தன்னுடைய பேச்சாற்றலால் உறவுகளை தன் பக்கம் வைத்திருப்பார். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏற்படாது. சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டானாலும் மனம் தளர்ந்து விடுவார்கள்.

காதல் திருமணம் செய்வார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். எனவே திருமணம் செய்யும்போது பொருத்தம் பார்த்தது செய்வது நல்லது.

 நண்பர்கள்:

இவர்கள் ஆண்ணாக இருந்தால் பெண் நண்பர்களும் பெண்ணாக இருந்தால் ஆண் நண்பர்களும் அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் வரம்பு மீறமாட்டார்கள். காதல் திருமணம் செய்பவராக இருப்பதால் நண்பர்கள் அதிகம். 

 நட்பு நட்சத்திரங்கள் :

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மிகவும் சிறந்த நண்பராக இருப்பார்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் நல்ல நண்பராகுவதுடன்  குடும்பத்தில் ஒருவராகவும் இருப்பர்கள்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் நன்மைகள் அதிகம் ஆகும்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மகம், மூலம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் எந்த அளவிலும் நன்மைகள் கிடைக்காது. பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்களால் தொல்லைகளும், சிரமங்களும் ஏற்படும்

தொழில்:

முதலீடே இல்லாமல் வாழ்வில் முன்னேறக் கூடியவர்கள். ஒவியர், எழுத்தாளர், கதை கவிதைகளை படைப்பவராக இருப்பார்கள். லயன்ஸ் கிளப், ரோட்டேரி கிளப் போன்ற துறைகளில் உயர் பதவிகளை வகிப்பார்கள். மிகவும் தைரியசாலி என்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அரசியலில் அமைச்சர் பதவிகளை வகிப்பார்கள். கோயில்களில் அறங்காவலர்களாகவும் இருப்பார்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் உடைய மனிதர்களாக வளம் வருவார்கள். தங்களுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியல் மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள். கை நிறைய சம்மாதிக்கும் யோகத்தை பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.:

ஆரோக்கியம் :

இளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்

தசா பலன்கள்:

ரேவதி   நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன்   தசை முதல் தசையாக வரும். புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் புதன்   தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

புதன் தசை:

புதன் பலம் பெற்று அமைந்தால் கல்வியில் ஈடுபாடும், நல்ல ஞாபக சக்தியும், பேச்சாற்றல் எழுத்தாற்றலும் பெரியோர்களை மதிக்கும் பண்பும் இருக்கும். பலமிழந்திருந்தால் அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பும்  அதனால் மருத்துவ செலவுகளும் உண்டாகும்.

கேது  தசை:

இரண்டாவதாக வரும் கேது தசை  7 வருட காலங்களாகும். இத்தசை காலங்களில் தேவையற்ற மனக்குழப்பம் பய உணர்வு, நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு உண்டாகும்.

சுக்கிரன்  தசை:

மூன்றாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் பொருளாதார மேன்மை திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு அசையும் அசையா சொத்து சேர்க்கைகள் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும். வாகன வசதி உண்டு.

சூரியன்  தசை:

அடுத்து வரும் நான்காவது தசை 6 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.

சந்திரன்  தசை:

ஐந்தாவதாக வரும் சந்திர தசையும் சூரிய தசை போல் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.

பொது பரிகாரம்:

ரேவதி  நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மரம் இலுப்பை மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

நட்சத்திரம் வானில் தோன்றும் நாள்:

இந்த நட்சத்திரத்தை நவம்பர் மாதத்தில் இரவு 12 மணிக்கு வானத்தில் காண முடியும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்:

ரேவதி நட்சத்தில் மஞ்சள் நீராட்டு மாங்கல் செய்தல், பூ முடித்தல், திருமணம் செய்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயர் வைத்தல், தொட்டிலில் இடுதல், மொட்டையடித்து காது குத்துதல், புதிய ஆடை ஆபரணங்களை வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். புது வீடு கட்டுதல், புது மனை புகுதல், ஆழ் குழாய் கிணறு அமைத்தல் வண்டி வாகனம் வாங்குதல், பொது சபை கூட்டுதல், புதிய வேலைக்கு சேருதல் நல்லது. சங்கீதம், நாட்டியம் கல்வி போன்றவற்றை கற்க தொடங்குவதும் நல்லது, வியாதியஸ்தர்கள் மருத்துண்ணலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள் :

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது ரேவதி நட்சத்திரத்திற்க

பொருந்தும் நட்சத்திரங்கள் :

கார்த்திகை, உத்திரம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பொருந்தாத நட்சத்திரங்கள் :

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை மூலம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. மகம்வேதை ஆகும்.

குறிப்பு:மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது

சொல்ல வேண்டிய மந்திரம்:

பூஷணம் பரமம் வந்தே ரேவதிசம்

ச மீருத்யே வராபயோஜ்வயகரம்

ரத்ன சிம்ஹாசனே ஸ்திதம்.