Showing posts with label ரேவதி. Show all posts
Showing posts with label ரேவதி. Show all posts

ரேவதி தொடர்ச்சி

 ரேவதி /  Revathi


பொதுவான குணங்கள்:

ரேவதி நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைப்பார்கள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை பிறருக்கும் எடுத்து சொல்லி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குவார்கள். கையில் எந்த முதலீடும் இல்லாவிட்டாலும் இவர்களின் மூளையே மூலதனமாக இருக்கும்.எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து இழுப்பார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அளவிற்கு பெரிய சாதனைகளை செய்வார்கள். அனைவரின் எண்ண ஒட்டங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். ஜீவ காருண்யம் பார்ப்பார்கள். எவ்வளவு வயதானாலும் இளம் வயது போலவே காட்சியளிப்பார்கள். அழகிய பல் வரிசையும், சிரித்த முகமும் இவர்களுக்கு மேலும் வசீகரத்தை கொடுக்கும். சபை நாகரிகம் தெரிந்து கொள்வார்கள்.

 
ரேவதி நட்சத்திரம் குருவின் சொந்த வீடான மீன ராசியில் அமைகின்றது. இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்திற்குரிய அறிவாற்றலும் மிக சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தை உணரக் கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.


அழகான குண அமைப்பு, முகத்தோற்றமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் உற்றார் உறவினர்களிடம் பழகுவதை விட அந்நியர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கை துணை, பிள்ளைகள் மீது அதிக அக்கறையும், பாசமும் பெற்று இருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பார்கள். மனம் தெளிந்த நீரோடை போல சுத்தமாக இருக்கும். உள்ளன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். அளவுக்கு அதிகமான இளகிய மனம் இருப்பதாக சில நேரங்களில் அதுவே ஆபத்தாக முடியும். பெற்றோர் பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தன்னுடைய பேச்சாற்றலால் உறவுகளை தன் பக்கம் வைத்திருப்பார். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏற்படாது. சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டானாலும் மனம் தளர்ந்து விடுவார்கள்.

காதல் திருமணம் செய்வார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். எனவே திருமணம் செய்யும்போது பொருத்தம் பார்த்தது செய்வது நல்லது.

 நண்பர்கள்:

இவர்கள் ஆண்ணாக இருந்தால் பெண் நண்பர்களும் பெண்ணாக இருந்தால் ஆண் நண்பர்களும் அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் வரம்பு மீறமாட்டார்கள். காதல் திருமணம் செய்பவராக இருப்பதால் நண்பர்கள் அதிகம். 

 நட்பு நட்சத்திரங்கள் :

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மிகவும் சிறந்த நண்பராக இருப்பார்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் நல்ல நண்பராகுவதுடன்  குடும்பத்தில் ஒருவராகவும் இருப்பர்கள்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் நன்மைகள் அதிகம் ஆகும்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மகம், மூலம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் எந்த அளவிலும் நன்மைகள் கிடைக்காது. பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்களால் தொல்லைகளும், சிரமங்களும் ஏற்படும்

தொழில்:

முதலீடே இல்லாமல் வாழ்வில் முன்னேறக் கூடியவர்கள். ஒவியர், எழுத்தாளர், கதை கவிதைகளை படைப்பவராக இருப்பார்கள். லயன்ஸ் கிளப், ரோட்டேரி கிளப் போன்ற துறைகளில் உயர் பதவிகளை வகிப்பார்கள். மிகவும் தைரியசாலி என்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அரசியலில் அமைச்சர் பதவிகளை வகிப்பார்கள். கோயில்களில் அறங்காவலர்களாகவும் இருப்பார்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் உடைய மனிதர்களாக வளம் வருவார்கள். தங்களுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியல் மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள். கை நிறைய சம்மாதிக்கும் யோகத்தை பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.:

ஆரோக்கியம் :

இளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்

தசா பலன்கள்:

ரேவதி   நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன்   தசை முதல் தசையாக வரும். புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் புதன்   தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

புதன் தசை:

புதன் பலம் பெற்று அமைந்தால் கல்வியில் ஈடுபாடும், நல்ல ஞாபக சக்தியும், பேச்சாற்றல் எழுத்தாற்றலும் பெரியோர்களை மதிக்கும் பண்பும் இருக்கும். பலமிழந்திருந்தால் அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பும்  அதனால் மருத்துவ செலவுகளும் உண்டாகும்.

கேது  தசை:

இரண்டாவதாக வரும் கேது தசை  7 வருட காலங்களாகும். இத்தசை காலங்களில் தேவையற்ற மனக்குழப்பம் பய உணர்வு, நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு உண்டாகும்.

சுக்கிரன்  தசை:

மூன்றாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் பொருளாதார மேன்மை திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு அசையும் அசையா சொத்து சேர்க்கைகள் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும். வாகன வசதி உண்டு.

சூரியன்  தசை:

அடுத்து வரும் நான்காவது தசை 6 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.

சந்திரன்  தசை:

ஐந்தாவதாக வரும் சந்திர தசையும் சூரிய தசை போல் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.

பொது பரிகாரம்:

ரேவதி  நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மரம் இலுப்பை மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

நட்சத்திரம் வானில் தோன்றும் நாள்:

இந்த நட்சத்திரத்தை நவம்பர் மாதத்தில் இரவு 12 மணிக்கு வானத்தில் காண முடியும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்:

ரேவதி நட்சத்தில் மஞ்சள் நீராட்டு மாங்கல் செய்தல், பூ முடித்தல், திருமணம் செய்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயர் வைத்தல், தொட்டிலில் இடுதல், மொட்டையடித்து காது குத்துதல், புதிய ஆடை ஆபரணங்களை வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். புது வீடு கட்டுதல், புது மனை புகுதல், ஆழ் குழாய் கிணறு அமைத்தல் வண்டி வாகனம் வாங்குதல், பொது சபை கூட்டுதல், புதிய வேலைக்கு சேருதல் நல்லது. சங்கீதம், நாட்டியம் கல்வி போன்றவற்றை கற்க தொடங்குவதும் நல்லது, வியாதியஸ்தர்கள் மருத்துண்ணலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள் :

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது ரேவதி நட்சத்திரத்திற்க

பொருந்தும் நட்சத்திரங்கள் :

கார்த்திகை, உத்திரம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பொருந்தாத நட்சத்திரங்கள் :

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை மூலம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. மகம்வேதை ஆகும்.

குறிப்பு:மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது

சொல்ல வேண்டிய மந்திரம்:

பூஷணம் பரமம் வந்தே ரேவதிசம்

ச மீருத்யே வராபயோஜ்வயகரம்

ரத்ன சிம்ஹாசனே ஸ்திதம்.

நட்சத்திரம் - ரேவதி

 ரேவதி / Revathi


ரேவதி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 27 வது பிரிவு ஆகும். ரேவதி நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் ரேவதியின் ( ζ ) ரேவதியின் சமஸ்கிருதப் பெயரான ரேவதியே ஆகும். இதற்கு என்பது "வளம் பொருந்தியது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடுகள் "மீன்", "முரசு" என்பனவாகும்.

 

ஆளும் உறுப்புகள்

கால்கள்

பார்வை

சமநோக்கு

பாகை

346.40  & 360.00

தமிழ் மாதம்

பங்குனி

நிறம்

தாமரை மலரின் நிறம்

இருப்பிடம்

நீருள்ள இடம்

கணம்

தேவ கணம்

குணம்

மென்மை

மிருகம்

பெண் யானை

பறவை

வல்லூறு

மரம்

பாலுள்ள இலுப்பை மரம்

மலர்

மந்தாரை

தமிழ் அர்த்தம்

செல்வம் மிகுந்தது

தமிழ் பெயர்

தோணி

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

மாம்பழம்

பஞ்சபூதம்

ஆகாயம்

நைவேத்யம்

எள் பொடி கலந்த அரிசி மாவு

தேவதை

ஆதித்தர்களில் ஒருவரான பூஷா

அதி தேவதை

ஸ்ரீரங்கநாதர்

அதிபதி

புதன்

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

மீன் வடிவத்தில் 32 நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்

மற்ற வடிவங்கள்

மீன்,படகு

மற்ற பெயர்கள்

ஓடம், நால்வாய், தோணி, பாதை,தாலம், கடைமீன், மரக்கலம்

வழிபடவேண்டிய தலம்

கைலாசநாதர், திருச்சி

அதிஷ்ட எண்கள்

1, 5, 9

வணங்க வேண்டிய சித்தர்

சந்தாயணா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

தே, தோ, ச, சீ

அதிஷ்ட நிறங்கள்

மெரூன், ரோஸ்

அதிஷ்ட திசை

தென்மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

திங்கள், வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

அபடைட்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், புனர்பூசம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

அபிமன்யு, ஏயர்கோன் கலிக்காம நாயனார், கலிக்கம்ப நாயனார், வாயிலார் நாயனார், குரு கோவிந்த சிங்

குலம்

க்ஷத்திரிய குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்

 


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

புதன்




கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :-புதன்

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

புதன்

புதன் சில குறிப்புகள் :

1. நட்சத்திரங்கள் : ஆயில்யம், கேட்டை, ரேவதி
2. மொத்த திசை இருப்பு : 17 வருடம்
3. தானியம் : பச்சைப்பயிறு
4. புஷ்பம் : வெண்காந்தல்
5. நிறம் : பச்சை
6. ஜாதி : வைசிய ஜாதி
7. வடிவம் : உயரமானவர்
8. உடல் உறுப்பு : கழுத்து
9. உலோகம் : பித்தளை
10. மொழி : தமிழ், கணிதம், சிற்பம், ஜோதிடம்
11. ரத்தினம் : மரகதம் (பச்சை)
12. வஸ்திரம் : நல்ல பச்சை
13 தூப தீபம் : கற்பூரம்
14 வாகனம் : குதிரை, நரி
15 மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 3, 6, 8, 12 ஆகும்
16. சமித்து : நாயுருவி
17. சுவை : உவர்ப்பு
18 பஞ்பூதம் : வாயு கிரகம்
19 நாடி : வாத நாடி
20. திசை: வடக்கு
21. அதிதேவதை : பெருமாள்
22 சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்
23. தன்மை : உபயக்கிரகம்
24 குணம் : தாமஸம்
25 ஆட்சி : மிதுனம், கன்னி உச்சம் : கன்னி , நீசம் : மீனம், மூல திரிகோணம் : கன்னி
26 நட்பு வீடுகள்: ரிஷபம், சிம்மம், துலாம்
27 பகை வீடுகள்: கடகம், விருச்சிகம்
28 பார்வை : 7 பார்வை மட்டும்
29 பலன் தரும் காலம் : காலம் முழுவதும்
30. மாத்ருகாரகன் : மாதுலகாரகன் (வித்யாகாரகன்)
31. தத்துவம் : அலி கிரகம்

புதன் லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் ( First House) இருந்தால் :

மேலும் படிக்க...