எண் ஜோதிடம் என்றால் என்ன?

 


ஜோதிடம் கலை (Tamil Astrology) போல் எண் ஜோதிடமும் மிகவும் பழமை வாய்ந்தே.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்"  என்பது தமிழ் மொழி. எண் கணிதம் நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சமஸ்கிருத மொழியில் ஆரம்ப காலத்தில் இருந்தே எண் கணித முறை காணப்படுகிறது. இதனை கடபயாதி ஸம்க்ஞை என்பர். எண்களுக்கும் கோள்களுக்கும் சம்பந்தம் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் “கீரோ” என்னும் மேல் நாட்டறிஞர் எண்களுக்குரிய கோள்களை அமைத்தார். இதற்கு நியூமராலாஜி என்று பெயரிட்டார்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழுமுயிர்க்கு"

இது குறள் நெறி கூறும் அறிவுரை.

எண்ணும் எழுத்தும் மனித வாழ்க்கையின் நிலைகளைப் பிரதிபலித்துக் காண்பிக்க உதவுகின்றன.  அல்லது மனித வாழ்க்கைத் தொடர்பான தொலைவிலுள்ள ஏதோ ஓர் அம்சத்தை நெருக்கத்தில் காண்பிக்க உதவுகின்றன.

மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் ஏதோ ஒரு வகையில ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது மேற்சொன்ன முன்னோர்களின் வாக்கு மூலம் நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.  எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்.  அதை மனிதன் அறிந்து கொண்டது தாமதமாகத்தான் என்றாலும், எண்கள் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்.  எவ்வாறெனில் ஒரே ஒரு நெருப்புக் கோளத்திலிருந்து இவ்வுலகம் தோன்றியிருக்கிறது என அறிந்துள்ளோம்.  எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கிறது..

மேலும் எண் கணித ஜோதிடத்தை,  நமது நாட்டில் தற்போது பலரும்  பின்பற்றுகிறார்கள். குறிப்பாக எண் கணிதத்தின் நிபுணராகக் கருதப்படும் பண்டிட் சேதுராமன் அவர்கள் இந்த முறையையே சிறந்த முறையாகக் கொண்டு எண் கணிதத்தைப் பற்றி நூலை எழுதியுள்ளார். பெயர் எண், விதி எண், உயிர் எண் என மூன்று எண்களைக் கொண்டு நியூமரலாஜி பலன்களைக் காண இயலும்.

சில வரலாற்று குறிப்பில் எண் சோதிடம் பல கிரேக்க அறிஞர்களால் ஆராய்ந்து எழுதபட்டது என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஆதராமாக புத்தகமும் இருக்கிறது

எண் ஜோதிடம், தமிழ் ஜோதிடத்தில் ஒரு அங்கமாக இல்லையெனிலும் தமிழ் ஜோதிடர்கள் கடந்த சில வருடங்களாக எண் ஜோதிடம் பற்றி ஆலோசனை வழங்குகிறார்கள்.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த கிரேக்க நாட்டுக் கணித மேதையான பிதாகரஸ் என்பவரையும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து மறைந்த ஜுரோ என்பவராலும் தான் இந்த எண் கணித சாஸ்திரமானது உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது..

எண் கணிதம்

 

 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே !!

 

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.

நம்முடைய பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து சில அந்த எண்களின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன்கள் கணித்துள்ளனர். அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். இது ஆங்கிலத்தில் ‘Numerology’ என அழைக்கபடுகிறது.

எண் ஜோதிடம்  (Numerology) என்பது எண்களுக்கும் வாழ்வின் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் வருங்காலத்தைக் கணிக்கும் ஜோதிடம்   ஆகும்.

எண் கணிதம் 3 வகையில் கணித்து சொல்லப்படுகிறது

v  பிறந்த தேதி எண்

v  கூட்டு எண்

v  பெயர் எண்

இந்த மூன்று எண்களில் பிறந்த தேதி எண் மற்றும் கூட்டு எண்களை நம்மால் மாற்ற இயலாது. ஆனால், பெயர் எண்ணை இந்த இரண்டு எண்களுக்கும் நட்பு விகிதத்தில் வரும்படி அமைத்துக் கொள்ளலாம்.

பிறந்த தேதி எண்

ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் மட்டும் கூறுவது பிறந்த எண் அல்லது பிறவி எண் அல்லது உடல் எண் என்று அழைக்கப்படுகின்றது.

அதாவது எண் கணித சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு ஜாதகரின் பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு அவர் பிறந்த ஆங்கில தேதி முக்கிய அங்கம் வகிக்கிறது.



மேற்கண்ட அட்டவணைப்படி கிரகங்களுக்கான எண்கள் நிர்ணயிக்கப்படுகிறது.  மேலும் மேற்கூறப்பட்ட எண்களுக்கு நட்பு, பகை எண்களை அறிந்துகொள்வோம்.

எண்

ஆட்சிக்கிரகம்

நட்புஎண்

பகை எண்

1

2

3

4

5

6

7

8

9

சூரியன்

சந்திரன்

குரு

இராகு

புதன்

சுக்கிரன்

கேது

சனி

செவ்வாய்

4

7

9

1

9

9

2

5

5, 6

8

8

6

8

6

3, 5

8

8

2

ஜோதிடத்தில் சூரியனுக்கு இராகுவும், சந்திரனுக்குக் கேதுவும் பகை என்று சொல்வார்கள். எண் கணிதத்தில் நட்பு எனக் குறிப்பிட்டுள்ளோம்.  சூரிய சந்திரர்களின் நிழலே இராகு, கேதுக்களாகும்.  எனவே தான் இவர்கள் எண் கணித சாஸ்திரத்தில் நட்பாக வருகிறார்கள்.

கூட்டு எண்

ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற எண்ணே கூட்டு எண் அல்லது உயிர் எண் என்று அழைக்கப்படுகின்றது.

அதாவது ஒரு ஜாதகரின் எண் என்ன என அறிய அவர் பிறந்த ஆங்கிலத் தேதியில் தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் மொத்த கூட்டுத் தொகையே அந்த ஜாதகரின்  கூட்டு எண்ணாகும்.

ஒருவர் 20-12-1967 அன்று பிறந்தார் என்றால் அவர் பிறந்த எண்   2 + 0 = 2 .

2+0+1+2+1+9+6+7  =>28 => 2+8 => 10 => 1+0=1

அவருடைய கூட்டு எண் 1 ஆகும்

அதாவது அவர் உடல் எண் 2 கூட்டு எண் 1 ஆகும். தனித்தனியாகவும், இரண்டும் சேர்த்தும் பலன் சொல்லாம்.

 

பெயர் எண்

ஒருவருடைய பெயரில் வருகின்ற அனைத்து எழுத்துக்களின் மதிப்பெண் அடிப்படையில் அமைவது பெயர் எண் ஆகும்.

ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒரு எண் உண்டு. ஆனால் எண் 9 மட்டும் ஆங்கில எழுத்துக்கள் இல்லை

தமிழ் எண்கணிதம் என்பது தமிழில் எழுதப்பட்ட ஆங்கில எண்கணித முறை அல்ல. முழுக்க முழுக்கத் தமிழ் முறைப்படி எழுதப்பட்ட எண்கணிதம் ஆகும். இதை பற்றி விரிவாக பிறகு பார்க்கலாம்

பிரமிடு மூலம் பெயரெண் காணல்

ஒரு ஜாதகரின் பெயருக்கான ஆங்கில எழுத்துக்களின் எண்களைக் கொண்டு பெயரெண் அமைக்கும்போது, அந்த எண்களில் இரண்டு, இரண்டு எண்களாகக்கூட்டி பிரமிடு மாதிரி அமைக்க வேண்டும். இது ஒருவகையில் மிக துல்லியமாக பெயர் வைக்க உதவும்.



ஜாதகருக்கான பெயரை ஆங்கிலத்தில் எழுதி, அதற்கான  இரண்டு, இரண்டு எண்களாகக்கூட்டி முடிவாக ஒரே ஒரு எண் வரும்வரை கூட்டிக்கொண்டு வரவும்.  ஜாதகரின் விதியெண்ணும் பெயரெண்ணும் ஒரே எண்ணாகவோ அல்லது விதியெண்ணுக்கு நட்பு எண்ணாகவோ அமைவது மிக உத்தமம்.  பிரிமிடின் முடிவாக வரும் எண்ணும், விதியெண்ணும் பெயரெண்ணும் ஒரே எண்ணாகவோ அல்லது ஒன்றுக்கொன்று நட்பு எண்ணாகவோ அமையும்பொழுது மிக உன்னதமான பலன்களைத் தரும்.

மேற்கூறிய ஜாதகியின் விதியெண்  எட்டு, எட்டாம் எண்ணில் பெயர் வைப்பது சிறப்பில்லை என்பதற்காக எட்டாம் எண்ணின் நட்பு எண்ணான ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தோம்.  ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தால் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக்கொள்ளமுடியும்.  அதற்குப்பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் ஐந்தாக வருவதால்  நிச்சயம் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக் கொள்ள முடியும்.  ஆனால் ஐந்தாம் எண்ணின் அதிபதியான புதன் ஜாதகத்தில் வலிமையுடையவராக இருந்து, அந்த ஜாதிக்கு இலக்ன சுபராகவும் இருந்தால் மிகமிக உன்னதமான பலனைத் தரும்.

மேலும் ஒரு ஜாதகருக்கு அவரின் நட்சத்திரத்திற்கான நாம் எழுத்துக்களின் பெயரைத் தேர்ந்தெடுப்பதும் சிறப்பாகும். 

ஒரு ஜாதகருக்குப்பிறந்த தேதியின் எண்ணும் விதியெண்ணும் ஒன்றாக அமைவது சிறப்பு.  அல்லது ஒன்றுக்கொன்று நட்பாக அமைவதும் சிறப்பு.  மேலும் அந்த ஜாதகருக்குப் பெயரெண்ணும் அதே எண்ணாகவோ அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும்.  அதற்குப் பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் அதே எண்ணாகவோ அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும்.


மீன லக்கினத்தின் பொது பலன்கள்

 



q  சித்திரை மாதம் பஞ்சமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் கூடிய வியாழக்கிழமை மாலையில் மரணமடையலாம்.

q  மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும் சந்திர தசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.

q  சந்திரன்  2ல் இருந்தால் தன யோகமாகும்.  சந்திரனும்  செவ்வாயும் கடகத்திலிருந்தால் சந்திர தசை யோகத்தை அளிக்கும். பஞ்சமாதிபதியாக மனோகாரகன் சந்திரன் வருவதால் சிந்தனை மேலோங்கும். பொதுவாக புத்தி கூர்மையுள்ள புத்திரம் உண்டு. பெண் குழந்தைகளுக்கு வாய்ப்பு அதிகம்

q  செவ்வாய் குருவுடனும் சந்திரனுடனும் அல்லது இவர்களில் யாராவது ஒருவருடன் சேர்ந்தால் ராஜயோகமாகும்

பொது பலன்கள்

q  இரட்டை மீன் சின்னம்: இவர்கள் மீன்களை போலவே துறு துறு என்று இருப்பவர்கள். தூக்கத்தில் கூட வேலை செய்ய சொன்னால் செய்வார்கள்.

q  ஞானி, பிராமணர், பெரியாரிடத்தில் மரியாதையுடையவன், சத்தியவான், பரிமளபிரியன், இரக்கமுடையவன், குளிர்ச்சியான கண்கள் உடையவன்

q  அழகான கண்களும் அனைவரையும் ஈர்க்ககூடிய தோற்றம் கொண்டவர்கள். தன்னடக்கத்துடனும் அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள்.இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மிகக் கம்பீரமான தோற்றத்தையுடையவர்கள்.

q  ஏழை எளியவர்களிடத்தில் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். வெகுசீக்கிரத்தில் பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவார்கள்.

q  தயாள குணம் நிரம்பியவர்களாகவும், திறமைசாலிகளாகவும் விளங்குவார்கள்.

q  இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் வாக்குவன்மை பெற்றவர்களாதலால் இவர்களுடன் பேச்சுக் கொடுத்து வெற்றி பெறுவது கடினம். வாய் ஓயாமல் பேசக் கூடியவர் அல்ல வெனினும் இவர்களுடன் மற்றவர்கள் பேசும்போது வெகு ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகளைக் காட்டிலும் ஆதாயங்களே மிகுந்து காணும்.

q  குடும்பத்தில் உள்ளவர்கள் யாவரும் உங்களுக்கு பெரு மதிப்பும், மரியாதையும், கௌரவமும், அளிக்க்க் கூடிய அளவிற்கு சிறந்து விளங்குவதோடு பிரியமாகவும், நடந்து கொள்வார்கள்.

q  கடவுளிடம் பக்தியுடையவர்கள் மற்றும் விருந்தோம்பல் இயல்புடையவர்கள். சமய ஈடுபாடு உடையவர்கள். எதிரிகளுக்குக்கூட உதவி செய்யக் கூடியவர்கள். கலை மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.

q  உணர்ச்சிவசப்படக்கூடியவர். திடீர் திடீரென்று சோர்வுறக் கூடியவர்கள், பிறருடைய மனதையும், உணர்ச்சிகளையும் எளிதில் புரிந்துகொள்வார்கள். இவர்களுடைய திறமை அமுங்கியே இருக்கும். வெளிப்படாது. ஆகையால் பல இன்னல்கள் அல்லது தோல்விகளுக்கு ஆளாவார்கள்.

q  கபடு சூதற்ற வெகுளிகள், தெய்வ பக்தியும் மதப்பற்றும் உள்ளவர்கள், தான தருமம் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள்.

q  தைரியம் குறைத்தவர்கள். கலை ஆர்வமுள்ளவர்கள். முகஸ் துதிக்கு ஆளாவார்களாதலால் பிறர் எளிதில் இவரைப் புகழ்ந்து பேசியே தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

q  இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் செல்ல பிள்ளையாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இவர்களுக்கு பெரு மதிப்பும், மரியாதையும், கௌரவமும், பிரியமாகவும், நடந்து கொள்வார்கள்.

q  பிறர் செய்கிற வேலைகளில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். இவர்கள் சுகபோகமாக வாழ வேண்டும் என்றே விரும்புவார்கள். தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனம் கொண்டவர்கள்.

q  நிறைய பணம் சம்பாதித்தாலும் பெருமளவிற்கு செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். சமய ஈடுபாடு உடையவர்

q  போகம், உணவு, பயணங்கள், ஞானம், மோட்சம் இவைகள் பொதுவாகவே ஜாதகரை ஈர்க்கும். நன்றாக உணவருந்தி இளைப்பாறலை மனம் தேடும்.

q  ஆழ்மன சிந்தனை தியானித்து செயல்படல், ஆலோசனை வழங்கல் முதலிய சிறப்பம்சம்கள் இந்த லக்னத்திற்கு இயல்பாகவே உண்டு.

திருமண வாழ்க்கை

q  தியாக மனப்பான்மை கொண்ட மீன லக்னக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை வந்த பிறகுதான் வாழ்வில் வசந்தம் என்பது ஏற்படும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை நுண்ணறிவு உடையவர்களாகவும், சிக்கனம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்.

q  மீன லக்ன வாழ்க்கை துணை  பொதுவாக பொறுமை உடையவர்களாகவும் , கோபம் வந்தால் கத்தித் தீர்ப்பவர்களாகவும் இருப்பர்.  வாழ்க்கை துணை நல்ல புத்திசாலிகள் சற்று ஆரோக்கியம் குறைந்தவர்கள் உழைப்பாளிகள் ஆவார்.

q  இவர்களின் 7 – ஆம் அதிபதி உச்சமானால், இவர்களுக்கு மிகப்பெரிய வேலை செய்பவரோ, நல்ல கல்வி கற்றவரோ, தொழிலில் கொடிகட்டிப் பறப்பவரோ வாழ்க்கைத் துணையாக அமைவார்.

q  மிகவும் புத்திசாலியாக இருப்பார் சிலர் வியாபாரத்தில் மிகச்சிறப்பாக இருப்பர்.

q  மீன லக்ன 7 – ஆம் அதிபதி நீசமானால் , மிகக் கஷ்டம் ஏனெனில் மீன லக்ன 7 – ஆம் அதிபதி மீனத்திலேயே நீசமாவார். கல்யாணம் ஆனவுடன் இவர்களுடனே தங்கி இவர்களுக்கு தர்மசங்கடத்தையும், கஷ்டத்தையும் கொடுப்பார். நீசபங்கம் ஆனால் சரியாகி விடும்.

q  மீன லக்கினத்தில் பிறந்தவர்கட்குக் கன்னி ராசி ஏழாமிடமாக வரும். அதனால் வாழ்க்கை துணை உடல் பலவீனப்படும். அடிக்கடி வாழ்க்கை துணை கும் சிறு நோய்கள் வரும்.

q  ராகு, கேது, கன்னியில் இருந்தால் அன்னியத்தில் அமையும். வாழ்க்கை துணை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பார்.

q  மீன இலக்கினகாரர்கள் ஆண்களாக இருந்தால் இல்லறத்தில் மனைவிகளிடம் திட்டு வாங்குபவர்கள் அதிகமாக இவர்களாகத்தான் இருக்க கூடும்.

q  இருதரா அமைப்பு உள்ள லக்னத்தில் இதுவும் ஒன்று. மீனத்தில் சுக்ரன் உச்சம் பெறும்போதுஏழாம் வீடான கன்னியில் சுக்ரன் நீசம்பெறும் என்பதால்  மீன இலக்கின ஆண்கள் அழகான பெண் அல்லது வெகுளியான பெண்களின் அன்புக்கு அடிமையாகி தனக்காக ஒரு வாழ்க்கையும் ஊருக்காக ஒரு வாழ்க்கையும் வாழ்வார்கள்

தொழில்

q  மீன லக்கினத்திற்கு லக்கினதிபதியும் 10க்கு உடையவனும் குரு என்பதால் பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும்

q  ஓரிடத்தில் அமர்ந்து செய்யும் சிந்தனை சார்ந்த துறையே இவர்களுக்கு வெற்றியை ஈட்டி தரும்

q  பக்திமார்க்கம், ஆராய்ச்சி, சோதிடம், தொல்லியல் வரலாற்று, துறை இவற்றில் ஒன்றினை தேர்ந்தெடுத்தல் சிறப்பு.

q  துறை சார்ந்த ஆராய்ச்சி மனோ பாவம் இருக்கும் எனவே சரியான துறையை தேர்ந்தெடுத்திருந்தால் அதில் மேன்மை அடைய வாய்ப்பு உள்ளது.

q  லக்னாதிபதி குருவே கர்ம ஸ்தானாதிபதியாகவும் வருவதால், ஆசிரியர், நீதிமன்றம், பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர் போன்ற உயரிய துறைகள் இயல்பாகவே கைகொடுக்கும்.

q  பெரும்பாலும் இவர்கள் கல்வித்துறை, ஆன்மிகம், மருத்துவம், நீதித்துறை, தூதரகம், வங்கியில் பணி செய்தல், கடற்படை சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுவார்கள்

q  மீன லக்னக்காரர்களுக்கு குரு பலம் நல்லபடியாக அமைந்தால் தொழிலதிபர்களாக பிரகாசிப்பார்கள். செவ்வாய், புதன் இருவரின் பலம் ஜாதகத்தில் உடன் சேரும் போது பல தொழில்கள் செய்யும் யோகம் உண்டாகும். கட்டிட கான்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், சூப்பர் மார்க்கெட், தங்கம், நவரத்தின வெள்ளி வகை வியாபாரத்தில் பெரிய டீலராக இருப்பார்கள். புதன் பலம் அதிகமாக இருந்தால் கூட்டுத் தொழில், பங்கு வர்த்தகம் கை கொடுக்கும்.

q  4ல் குரு  இருப்பது சிம்மாசன யோகம், உயர்ந்த பதவி அதிகாரம் அந்தஸ்து கிட்டும். மேலும் அரசியல், அரசு அலுவலகம் கல்வி, நீதிமன்றம், கஜானா, வருவாய்த்துறை, வங்கி, மருத்துவம், சமயம் ஆகிய துறைகளில் உத்தியோகம் அமையக்கூடும். கடலை, வாழை, தேன். கரும்பு தங்கம் புஷ்பராகம் ஆகியவற்றின் வியாபாரம் விருத்திபெறும்

q  10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும்.

q  10 ல் புதன் அமைந்தால் புதன் 7ம் அதிபதி என்பதால் நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது அல்லது உத்தியோகம் செய்வது நல்லது. குறிப்பாக மீன லக்னம் உபய லக்னம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

q  குரு, சந்திரன், கேது சேர்க்கை பெற்று 10 ல் இருந்தாலும் திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் சமூக நலப் பணிகளில் ஈடுபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பணிகள் செய்யும் அமைப்பு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

q  சூரியன் 10ல் அமைந்தால் அரசு சார்ந்த துறைகளிலும், செவ்வாய் 10 ல் அமைந்தால் நிர்வாகத் தொடர்புடையத் துறைகளிலும் மற்றும் பூமி, மனை, ரியல் எஸ்டேட், போன்றவற்றிலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

q  குரு  பகை நீசம் பெற்று பாவ கிரக சேர்க்கையுடன் பலமிழந்திருந்தாலும், அஸ்தங்கம் பெற்றிருந்தாலும், 6,8,12 ல் மறைந்திருந்தாலும் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்ய வேண்டியிருக்கும்.

q  10ம் வீட்டையோ 10ம் அதிபதி குருவையோ சனி பார்வை செய்தால் தகுதிக்கு குறைவான வேலை கிடைக்கப் பெற்று வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

கிரகங்கள்

       சூரியன் :  ரண, குண, ரோக, சத்துருஸ்தானமான 6ஆம் இடத்திற்கு அதிபதியானதால் அசுப ஆதிபத்தியம் ஏற்படுகிறது. இவர் குருவுக்கு நண்பர்.ஆனாலும் இவர் வலுத்தால் பலம் பொருந்திய விரோதிகள் ஏற்படுவார்கள். ஆனாலும் அவர்களை வெல்லும் சக்தி ஏற்படும்.6ல் ஆட்சி பெற்றால் வணங்காமுடி என்ற பெயரெடுப்பார். ஆனால் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார். நேரம், காலம், பொருள் ஆகியவற்றை வீணாக்குவார்.

       சந்திரன் :பூர்வ புண்ணிய ஸ்தானாதிபத்தியம் பெறுவதால் சுபராகிறார். இவர் வலுப்பது நல்லது. தனம், புத்தி, மேதாவிலாசம், தீர்க்க தரிசனம், அதிர்ஷ்டம் ஆகியவை அமையும். அறிவுள்ள சத் புத்திர பாக்கியம் ஏற்படும். தெய்வபக்தியும் தெய்வ பலமும் கிட்டும். இவர் கெட்டால் மேலே கூறிய நற்பலன்கள் கிடைக்காது.

       புதன் : 4, 7 ஆகிய இரண்டு கேந்திரங்களுக்கும் அதிபதியாவதால் உபய கேந்திராதிபத்திய தோஷம் பெற்றுப் பாபியாகிறார். லக்னாதிபதிக்குச் சத்துருவுமாகிறார். ஆனால் சுகம் வித்தை, தாயார், வீடு. வாகனம் ஆகியவைகளையும் வாழ்க்கைத்துணை, தொழிலில் கூட்டாளி, திருமண வாழ்க்கை, சுகம் ஆகிய முக்கிய மானவைகளுக்குக் காரகராகிறார். இவர் குரு,செவ்வாய் போன்றவர்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்று வலுத்தால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்; இவர் 2.6.8 ஆகிய இடங்களில் இருந்தால் ஆரோக்கியம் கெடும். இவர் 1 அல்லது 7ல் இருப்பது நல்லதல்ல. தோஷம் வலுக்கும். 10ல் இருந்தால் படிப்பும் உத்தியோகமும் சிறப்பாக அமையும்.

       செவ்வாய்: தனஸ்தானமான 2ஆம் இடத்திற்கும் பாக்கியஸ்தானமான 9ஆம் இடத்திற்கும் அதிபதியான செவ்வாய் யோகாதிபதியாகிறார். இவர் வலுத்தால், பணவசதி, அரசாங்க ஆதரவு, அதிர்ஷ்டம், உத்தியோகம் ஆகிய ஏற்றமான பலன்களை அளிப்பார். இவர் கெட்டால் நஷ்டம்.

       குரு: லக்னத்திற்கும் 10ஆம் இடத்திற்கும் அதிபதியான குரு 10ஆம் இட ஆதிபத்தியத்தால் உபய கேந்திராதிபத்திய தோஷம் பெறுகிறார் என்பது பொதுக் கருத்து. இவர் வலுத்தால் நீண்ட ஆயுள், நல்ல பண்புகள். தனவசதி, அதிகாரம், அந்தஸ்து, உத்தியோகம், அரசால் கவுரவம் ஆகிய நற்பலன்களை அளிப்பார். கெட்டால் மேலே குறிப்பிட்ட பலன்கள்  குறிப்பாகப் பெயரும் பொருளாதாரமும் கெடும்.  7ல் அல்லது லக்னத்தில் இருப்பது நல்லதல்ல

       சுக்கிரன்:  சுக்கிரன் 3,8 ஆகிய இரண்டு கெட்ட ஸ்தானாதிபத்தியம பெற்றதால் பாபியாகிறார். ஆனால் 8, 3 ஆகிய இரண்டு இடங்களும் ஆயுள் பலத்தைக் குறிப்பவை ஆகையால் இவர் வலுப்பது நீண்ட ஆயுளுக்கு முக்கியமாகும். இவர் வலுத்தால் பொருளாதாரம் நன்றாக இருக்காது. இவர் 8ல் ஆட்சி பெற்றால் சரள யோகமாகும். இவர் லக்னத்தில் உச்சம் பெற்றால் நீண்ட ஆயுள், பெயர், புகழ் கூடும்

       சனி: விரயஸ்தானமான 12ஆம் இடத்திற்கும் உபய லக்னத்திற்கு மாரகஸ்தானமான 11ஆம் இடத்திற்கும் அதிபதியான சனி பாபியாகிறார். இவர் கெட்டால் வருமானக் குறைவும் உடல் நலக் குறைவும் ஏற்படும். இவர் 3, 5, 6, 8, 11ல் இருப்பது நலம்

நட்சத்திர தன்மைகள்

மீன  லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: பூரட்டாதி  3, 4 பாதங்கள், உத்திராட்டாதி, ரேவதி லக்கின புள்ளி இருக்கும் பொது மீன லக்கின பலன்கள்  பார்ப்போம்.

இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும்.

அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்

மீனம் லக்கினம்  -  பூரட்டாதி  3, 4 பாதங்கள்

 

பூரட்டாதி  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு தாக்கத்துடன் இருப்பார்.

பூரட்டாதியின்  அதிபதி குரு  ஆவார். ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர்கள். வயதில் சிறியவர்களிடம்கூட மரியாதையுடன் பழகுவார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு முடிந்த உதவி செய்வார்கள். சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரும் மதிக்கத்தக்கப் பண்பாளர்களாக இருப்பார்கள். நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறிந்து கெட்டவற்றை விலக்கிவிடுவார்கள். வாழ்க்கைத்துணைக்குப் பூரண சுதந்திரம் கொடுப்பார்கள்.மற்றவர்கள் செய்த உதவியை மறக்க மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவார்கள். தன்னம்பிக் கையும் தைரியமும் கொண்டிருப்பார்கள். தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்கள். வெளிப்படையாக நடந்துகொள்வார்கள்.

 

மீனம் லக்கினம்  - உத்திராட்டாதி

உத்திராட்டாதி   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சனி, குரு தாக்கத்துடன் இருப்பார்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி ஆவார். பள்ளியில் படிக்கும் போதே போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவார்கள். அதிகாரம் செய்வதை விரும்ப மாட்டார்கள். உண்மையாக நடந்துகொள்வார்கள். மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தவறு செய்பவர்களைக் கண்டால் அவர்களைத் திருத்தப் பார்ப்பார்கள். முடியாவிட்டால் அவர்களை விட்டு விலகிவிடுவார்கள்.  மற்றவர்களின் கவனத்தையும் எளிதில் கவர்வார்கள். அன்பா கவும் ஆறுதலாகவும் பேசி மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.  உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தெய்வ பக்தி நிறைந்தவர்களாக இருப்வார்கள். பெற்றோரிடமும், மனைவி, பிள்ளைகளிடமும் அன்பும் கனிவுமாக நடந்துகொள்வார்கள். ஊர்ப்பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்வார்கள். எப்போதும் எதையேனும் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். பிள்ளைகள் தவறு செய்யக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள்.

 

மீனம் லக்கினம்  - ரேவதி

ரேவதி  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு,  புதன் தாக்கத்தில்  இருப்பார்.

ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார். இரக்க சுபாவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்' என்று விரும்புவார்கள். வயதை கணித்துச் சொல்லமுடியாதபடி இளமையான தோற்றம் பெற்றிருப்பார்கள். பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள். அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் கண்டிக்கவும் தயங்க மாட்டார்கள். அனுபவ அறிவால் மற்றவர்களை வழிநடத்துவார்கள். புதுப்புது சிந்தனைகள் உங்கள் மனதில் எழுந்தபடி இருக்கும். இனிமையான பேச்சாற்றலால் மற்றவர்களைக் கவருவார்கள்.  எத்தனை சோதனைகள் வந்தாலும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை இழக்க மாட்டார்கள். அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகுவார்கள். எப்போதும் இனிமையாகப் பேசுவார்கள். ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகமும் பெற்றிருப்பார்கள்

சொல்ல வேண்டிய மந்திரம்

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய ஸ்ரீரங்கநாதர் துதி மனதார சொல்லி வருவது நல்லது

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு

பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே !

ஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை

பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே ! ஓ கண்ணனே ! கதறுகின்றேன்

ஆருளர் களைக ணம்மா ! அரங்கமா நகருளானே !

ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.