இந்த வருடம் - 2025 ராகு , கேது பெயர்ச்சி எப்போது?
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த பெயர்ச்சியில் ராகு, மகர ராசிக்கு 2ம் வீடான கும்பத்திற்கும், மகர ராசியின் 8ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.
ராகு , கேது பெயர்ச்சி
பொது பலன்கள்
- இந்த ராகு கேது பெயர்ச்சி, மகர ராசிக்கு கலவையான பலன்களை தான் தரும். எட்டாம் வீட்டுக்கு கேது வருவது அவ்வளவு நல்லது அல்ல. ராகு 2ம் வீட்டில் குரு பார்வை பெற்று இருப்பது நல்லது தான்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் சில கவலைகள் மற்றும் சவால்களை சந்திக்க வேண்டி வரும். எனவே அமைதியாக இருப்பது முக்கியம்.
- இந்த பெயர்ச்சியால் வருமான ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெறுகும். பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.
- ராகு 2ம் வீட்டில் குரு பார்வையுடன் இருப்பதால், குடும்பத்தில் சண்டை வந்தாலும் உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
- பேச்சு, தொழில்நுட்பம், ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட தொழில்களில் உள்ளவர்களுக்கு சிறப்பான வளர்ச்சியும், வருமானமும் கிடைக்கும்.
- வேலை வாய்ப்பை எதிர்நோக்குபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிட்டும்.
- யார்க்கும் ஜாமீன் கொடுக்க கூடாது. பிரச்னை கட்டாயம் வரும். வேறு வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
- உறவுகளிடமும், தொழில் செய்யும் இடத்திலும் பேச்சில் பொறுமையும் எச்சரிக்கையும்
- வாழ்க்கை துணையுடன்சில கருத்து வேறுபாடுகள் வரலாம். வாழ்க்கைத்துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
- இந்த நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். மேலும் சிலர் கண்ணாடி போடும் சூழ் நிலை வரலாம்.
- இந்த பெயர்ச்சியில் மகர ராசிகாரர்கள் கட்டாயம், இரவு நேரத்தில் பயணம் மற்றும் நடு இரவில் உணவு உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எட்டாம் வீட்டு கேது, உங்களின் உடலில் இருக்கும் அமிலத் தன்மையை அதிகரிக்க செய்ய வாய்ப்பு உண்டு. எச்சிரிக்கை அவசியம்.
- இந்த பெயர்ச்சி உங்கள் காதல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரும் . பொதுவாக இந்த பெயர்ச்சியின் காரணமாக உங்களுக்கு காதல் வாழ்க்கை கசக்கும்.
- உடன்பிறந்தவர்களுடன் நிதி அல்லது சொத்து தகராறுகள் வர வாய்ப்பு உள்ளது. என்றாலும் பெற்றோரின் ஆதரவு நடுநிலையாக இருக்கலாம்.
- மேலும் மகர ராசி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சோம்பேறிதனத்தை தவிர்க்க வேண்டும். என்றாலும் வேறு நாட்டில் படிக்க விரும்பும் மகர ராசி மாணவர்களுக்கும் மற்றும் கல்விக்கான கடன் தேவை படும் மகர ராசி மாணவர்களுக்கும் , இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.
- மகர ராசிக்காரர்களுக்கு ராகு உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். குரு பார்வை ராகு பெற்று இருப்பதால், உங்களின் பேச்சி அனைவரையும் கவரும். இனிய வார்த்தைகளை பேசினால், அனைவரும் கவர முடியும். என்பதை மனதில் கொள்ளவும்.
- கோபத்தில் யாரிடமும் கசப்பான அல்லது கெட்ட வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
- ராகுவின் இந்த பெயர்ச்சியின் போது, உணவு தொடர்பான பிரச்சனைகள் அல்லது உடல் சார்ந்த பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். கவனம் அவசியம்.
- ராகுவின் பெயர்ச்சியால், வாழ்க்கை துணையின் பேச்சை கேட்பது, மேலும் அவர்களின் யோசனைகளை கேட்பதும் நல்லது.
- பலருக்கு மறைமுக வருமானம் மூலம் ஆதாயம் உண்டாகும். என்றாலும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்றால் சிக்கல்கள் உண்டாகும்.
- இந்த ராகு பெயர்ச்சி கலவையான பலன்களை தான் தரும்,, என்றாலும் நல்ல பலன்கள் அதிகமாக இருக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம் ஆகும்.
- மகர ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் ராசியிலிருந்து எட்டாம் வீட்டில் பெயர்ச்சிக்கிறார். எட்டாவது வீட்டில் கேதுவின் பெயர்ச்சி உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த பலன்களைத் தரும்.
- இந்த பெயர்ச்சியால், நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம் என்றாலும் உடல்ரீதியான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். அதாவது உடலில் பித்த உறுப்புகளின் தன்மை அதிகரிப்பதும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்
- கேது கிரகத்தின் இந்த மாற்றத்தின் தாக்கத்தால், உங்கள் மனமானவது மதம், ஆன்மீகம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும்.
- கேது பெயர்ச்சியால் , உங்களுக்கும் , உங்கள் வாழ்க்கை துணைக்கும் உடல்நல சம்மந்த பட்ட பிரச்சனைகள் வந்து தொந்தரவு செய்யலாம். உணவில் கவனம் செலுத்த வேண்டும்
- 8 ஆம் வீட்டில் கேதுவால், உளவியல், தத்துவம் அல்லது அமானுஷ்ய அறிவியல் போன்ற துறைகளில் மாணவர்களுக்கு இது ஒரு சாதகமான நேரம் .