ஆயுள் கணிப்பு

இலக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகிய வீடுகள் மூலம் ஆயுளை ஆராய்ந்து  கணிக்க முடியும் .

  • ஆயுள் 30 வயதுக்குள் இருந்தால் அது அற்பாயுள்
  • 30முதல் 60 வயது முடிய நடுத்தர ஆயுள் 
  • 60 வயதுக்குமேல் அது தீர்க்காயுள் 

(ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இந்த ஆயுள் கணிப்புதான்).


தீர்க்க ஆயுளையுடைய கிரக நிலைகள்:

  • லக்கினதிபதி தன் சொந்த வீட்டில்  அல்லது உச்ச வீட்டில்  , 8ம் வீட்டிலோ இருந்தால் 
  • ஆயுள் ஸ்தானமான  8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருந்தால்
  • சந்திரனும் லக்கினமும் நல்ல கிரங்கங்களின் சேர்க்கை பெற்று இருந்தால்
  • சந்திரனும் , லக்கினாதிபதியும்  கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருந்தால்
  • 8க்குயுடையவன் 8-ம் வீட்டிலோ அல்லது லக்கினத்திலோ இருந்தால்
  • 8க்குயுடையவன் 8-ம் வீட்டையோ  அல்லது லக்கினத்தியோ பார்த்தால் 
  • சந்திரனும், லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருந்தால்
  • குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தால்

வராஹமிஹிரர் நமக்கு அருளிய பிருஹத் ஜாதகம் போன்ற நூலும் , மந்திரேஸ்வரர் அருளிய பலதீபிகை என்னும் சோதிட நூலும் ஆயுள் பாவத்தைப் பற்றி விரிவாக விளக்கி உள்ளனர் 

அற்ப ஆயுளைக் காட்டுபவை :

8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும்
6, 12 வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.
லக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்
லக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும்,
6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,
லக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள் இருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்

1. ஆயுளைக் குறிப்பது 1, 3, 8-வது வீடுகள் ஆகும். இவற்றிற்கு  12-வது 12, 2, 7 வது வீடுகள் ஆகும். இவைகள் ஒருவரைக் கொல்லும் வல்லமை படைத்தவை. ஆகவே இவர்களை மாரகர்கள் என்றழைக்கலாம்.  7-வது வீட்டின் திசை கல்யாணவயதில்   போது திருமணத்தைக் கொடுத்த 7-ம் வீட்டின் அதிபர் ஒருவருக்கு ஆயுளை முடிக்கும்போது அவர் மரணத்தையும் கொடுப்பார். 2. ராசிகளில் மேஷம், கடகம், துலாம் , மகரம் ஆகியவை சரராசிகளுக்கு  11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும். ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம்  வீடு பாதகத்தைக் கொடுக்கும்

உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார்.  எனவே ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார் என்று ஜோதிட நூல் கூறுகிறது .


[இதில் இருக்கும் குறிப்புகள் நான் பல புத்தகத்தில் படித்தது. மேலும் இது எல்லா ஜாதகத்திற்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. தங்களின் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது ]

இது அனைத்தும் ஜோதிட நூல்களின் கருத்துக்களே . மேலும் ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து தான் ஆயுள் கணிக்க முடியும். மிக கடினமான ஒன்று.