Showing posts with label Thiruvonam. Show all posts
Showing posts with label Thiruvonam. Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மகரம்

 

 மகரம்  ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு வருகிறார்.  பாக்கிய ஸ்தானம் (9ம்  வீடு),  லாப ஸ்தானம் (11ம்  வீடு)   ராசி (1ம்  வீடு) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • இந்த அமைப்பு சகல விதத்திலும் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும் எனக் காட்டுகிறது.
  • அலுவலகத்தில்  செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளுடன் கலந்துரையாடும் அளவுக்கு மரியாதை உயரும். 
  • இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். சிலருக்குப் பலகாலக் கனவாக இருந்த பணிவாய்ப்பு தேடிவரும். 
  • உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.  
  • வீட்டில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். 
  • மனம் போல வீடு, மனை, வாகன வசதிகள் உண்டாகும்.
  • ஏழரை சனி நடந்தால் கூட, குரு ஐந்தாம் வீட்டில் இருப்பதும் ம், குருவின் பார்வை ராசியின் மீது விழுவதும்  சனியின் நெருக்கடிகளையும் போக்கும்
  • மறைமுக எதிர்ப்புகள் குறையும், சட்ட சிக்கல்கள் தீரும். 
  • மன நிம்மதியுடன், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். 
  • பழைய கடன்கள் பைசலாகும். பணவரவை சேமித்து வைப்பது நல்லது .
  • அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். 
  • பெற்றோர் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். 
  • வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு தவிர்ப்பது நல்லது .
  • பெண்களுக்கு திடீர் யோகத்தால் பொருட் சேர்க்கை ஏற்படும். மேலும் உறவினர்கள், குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு பெருகும் 
  • செய்யும் தொழிலில்கஷ்டங்கள்  நீங்கி, லாபங்கள் அதிகரிக்கும்.  
  • அரசியலில் உள்ளவர்களுக்கு திடீர் பதவி, பொறுப்புகளால் பெருமை சேரும். 
  • பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. 
  • யாருக்கும் வாக்குறுதிகள்  தரவேண்டாம். 
  • அரசுப்பணியில் உள்ளோர் புதிய வாய்ப்புகளால் ஆதாயம் கிடைக்கும். 
  • மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும்.  
  • கலைஞர்கள், படைப்பாளிகள் காலம் கனிந்து வாய்ப்புகள் சிறப்பாக அமையும். 
  • உறவுகளிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 
  • வெளியூர், வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்
  • நரம்பு, அடிவயிறு, முதுகு, கால்கள், தொடை, இடுப்பு உபாதைகள் வரலாம்.

உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும் என்றாலும் பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும்.  
  • குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.
  • மனக் குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். 
  • பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும். 
  • எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

திருவோணம்

  • இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். 
  • எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். 
  • வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. 
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். 
  • புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். 
  • குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். 
  • கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.
  • குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். 
  • மற்றவர்கள் ஆலோசனை கேட்டாக இவர்களை நாடி வருவார்கள்.

அவிட்டம் - 1, 2 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். 
  • எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். 
  • புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும்  நல்லபடியாக முடிக்க முடியும் . 
  • புதிய சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும்   திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள்  கிடைக்கும். 
  • பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

பரிகாரம்

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். விநாயகருக்கு அருகம்புல்லை  சாத்தி வழிபட்டால் நல்லது தடை இன்றி நடைபெறும் 

ரேவதி தொடர்ச்சி

 ரேவதி /  Revathi


பொதுவான குணங்கள்:

ரேவதி நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைப்பார்கள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை பிறருக்கும் எடுத்து சொல்லி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குவார்கள். கையில் எந்த முதலீடும் இல்லாவிட்டாலும் இவர்களின் மூளையே மூலதனமாக இருக்கும்.எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து இழுப்பார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அளவிற்கு பெரிய சாதனைகளை செய்வார்கள். அனைவரின் எண்ண ஒட்டங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். ஜீவ காருண்யம் பார்ப்பார்கள். எவ்வளவு வயதானாலும் இளம் வயது போலவே காட்சியளிப்பார்கள். அழகிய பல் வரிசையும், சிரித்த முகமும் இவர்களுக்கு மேலும் வசீகரத்தை கொடுக்கும். சபை நாகரிகம் தெரிந்து கொள்வார்கள்.

 
ரேவதி நட்சத்திரம் குருவின் சொந்த வீடான மீன ராசியில் அமைகின்றது. இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்திற்குரிய அறிவாற்றலும் மிக சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தை உணரக் கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.


அழகான குண அமைப்பு, முகத்தோற்றமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் உற்றார் உறவினர்களிடம் பழகுவதை விட அந்நியர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கை துணை, பிள்ளைகள் மீது அதிக அக்கறையும், பாசமும் பெற்று இருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பார்கள். மனம் தெளிந்த நீரோடை போல சுத்தமாக இருக்கும். உள்ளன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். அளவுக்கு அதிகமான இளகிய மனம் இருப்பதாக சில நேரங்களில் அதுவே ஆபத்தாக முடியும். பெற்றோர் பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தன்னுடைய பேச்சாற்றலால் உறவுகளை தன் பக்கம் வைத்திருப்பார். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏற்படாது. சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டானாலும் மனம் தளர்ந்து விடுவார்கள்.

காதல் திருமணம் செய்வார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். எனவே திருமணம் செய்யும்போது பொருத்தம் பார்த்தது செய்வது நல்லது.

 நண்பர்கள்:

இவர்கள் ஆண்ணாக இருந்தால் பெண் நண்பர்களும் பெண்ணாக இருந்தால் ஆண் நண்பர்களும் அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் வரம்பு மீறமாட்டார்கள். காதல் திருமணம் செய்பவராக இருப்பதால் நண்பர்கள் அதிகம். 

 நட்பு நட்சத்திரங்கள் :

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மிகவும் சிறந்த நண்பராக இருப்பார்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் நல்ல நண்பராகுவதுடன்  குடும்பத்தில் ஒருவராகவும் இருப்பர்கள்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் நன்மைகள் அதிகம் ஆகும்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மகம், மூலம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் எந்த அளவிலும் நன்மைகள் கிடைக்காது. பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்களால் தொல்லைகளும், சிரமங்களும் ஏற்படும்

தொழில்:

முதலீடே இல்லாமல் வாழ்வில் முன்னேறக் கூடியவர்கள். ஒவியர், எழுத்தாளர், கதை கவிதைகளை படைப்பவராக இருப்பார்கள். லயன்ஸ் கிளப், ரோட்டேரி கிளப் போன்ற துறைகளில் உயர் பதவிகளை வகிப்பார்கள். மிகவும் தைரியசாலி என்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அரசியலில் அமைச்சர் பதவிகளை வகிப்பார்கள். கோயில்களில் அறங்காவலர்களாகவும் இருப்பார்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் உடைய மனிதர்களாக வளம் வருவார்கள். தங்களுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியல் மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள். கை நிறைய சம்மாதிக்கும் யோகத்தை பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.:

ஆரோக்கியம் :

இளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்

தசா பலன்கள்:

ரேவதி   நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன்   தசை முதல் தசையாக வரும். புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் புதன்   தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

புதன் தசை:

புதன் பலம் பெற்று அமைந்தால் கல்வியில் ஈடுபாடும், நல்ல ஞாபக சக்தியும், பேச்சாற்றல் எழுத்தாற்றலும் பெரியோர்களை மதிக்கும் பண்பும் இருக்கும். பலமிழந்திருந்தால் அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பும்  அதனால் மருத்துவ செலவுகளும் உண்டாகும்.

கேது  தசை:

இரண்டாவதாக வரும் கேது தசை  7 வருட காலங்களாகும். இத்தசை காலங்களில் தேவையற்ற மனக்குழப்பம் பய உணர்வு, நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு உண்டாகும்.

சுக்கிரன்  தசை:

மூன்றாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் பொருளாதார மேன்மை திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு அசையும் அசையா சொத்து சேர்க்கைகள் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும். வாகன வசதி உண்டு.

சூரியன்  தசை:

அடுத்து வரும் நான்காவது தசை 6 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.

சந்திரன்  தசை:

ஐந்தாவதாக வரும் சந்திர தசையும் சூரிய தசை போல் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.

பொது பரிகாரம்:

ரேவதி  நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மரம் இலுப்பை மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

நட்சத்திரம் வானில் தோன்றும் நாள்:

இந்த நட்சத்திரத்தை நவம்பர் மாதத்தில் இரவு 12 மணிக்கு வானத்தில் காண முடியும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்:

ரேவதி நட்சத்தில் மஞ்சள் நீராட்டு மாங்கல் செய்தல், பூ முடித்தல், திருமணம் செய்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயர் வைத்தல், தொட்டிலில் இடுதல், மொட்டையடித்து காது குத்துதல், புதிய ஆடை ஆபரணங்களை வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். புது வீடு கட்டுதல், புது மனை புகுதல், ஆழ் குழாய் கிணறு அமைத்தல் வண்டி வாகனம் வாங்குதல், பொது சபை கூட்டுதல், புதிய வேலைக்கு சேருதல் நல்லது. சங்கீதம், நாட்டியம் கல்வி போன்றவற்றை கற்க தொடங்குவதும் நல்லது, வியாதியஸ்தர்கள் மருத்துண்ணலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள் :

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது ரேவதி நட்சத்திரத்திற்க

பொருந்தும் நட்சத்திரங்கள் :

கார்த்திகை, உத்திரம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பொருந்தாத நட்சத்திரங்கள் :

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை மூலம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. மகம்வேதை ஆகும்.

குறிப்பு:மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது

சொல்ல வேண்டிய மந்திரம்:

பூஷணம் பரமம் வந்தே ரேவதிசம்

ச மீருத்யே வராபயோஜ்வயகரம்

ரத்ன சிம்ஹாசனே ஸ்திதம்.

திருவோணம் தொடர்ச்சி




 பொதுவான குணங்கள்

திருவோண நட்சத்திர அதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள். அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வள்ளலார் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இதமாகப் பேசி பழகுவார்கள். ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் பெயர் புகழை பெறுவார்கள். எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொறுத்து கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளை விரும்பி அணிவார்கள்

குடும்ப வாழ்க்கை

வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பார்கள். வாழ்க்கை துணைக்கு பயந்து நடப்பார்கள் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள். அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுவார்கள். எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சாதனை படைப்பார்கள். செல்வத்துக்கும் அந்தஸ்துக்கும் குறைவேயில்லை என்று சொல்லும்படி அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெறுவர்கள். தாயின் மீதும் அதிக பாசம் இருக்கும். பழி பாவத்திற்கு அஞ்சுவார்கள்.

நண்பர்கள்

நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். நல்ல நண்பர்களை தேர்ந்து எடுப்பதில் கவனம் தேவை.

நட்பு நட்சத்திரங்கள்

அவிட்டம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த ஆறு நட்சத்திரக்காரர் நண்பர்களும் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வார்கள். எந்த பிரதிபலனும் பாராமல், குடும்ப நலன் பேசுபவர்களாகவும், பொருளாதார உதவிகளை செய்பவர்களாகவும், சுக துக்கங்களில் பக்கத் துணையுடனும் இருப்பார்கள். நீங்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் உங்களுக்கு உதவி செய்வதை அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் இந்த நட்சத்திரங்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். கார்த்திகை (மேஷம்) உத்திரம் (கன்னி) உத்திராடம் (தனுசு) மிருகசீரிடம் (மிதுனம்), சித்திரை(துலாம்) அவிட்டம் (கும்பம்) இந்த நட்சத்திரங்களையும் தவிர்க்க வேண்டும்.

தொழில்

பொதுவாக இவர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்கள் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் நிச்சயமாக தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அதில் கூட்டு தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். கூட பணிபுரிபவர்கள், நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்கள் என யாருடனாவது கூட்டாக தொழில் செய்வார்கள். மற்றவர்கள் வியக்கும் படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர், வங்கி பணி, எழுத்தாளர் பேராசியர்களாகவும் ஜொலிப்பார்கள்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள். மக்களை நேசிப்பவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர் களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஓவியம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள்.

தசா பலன்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை முதல் தசையாக வரும். சந்திரன் தசை மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சந்திர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சந்திரன் தசை:


இந்த தசை காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகள், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.


செவ்வாய் தசை:


இரண்டாவதாக வரும் செவ்வாய் தசை மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.


ராகு தசை:


மூன்றாவதாக வரும் ராகு தசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.


குரு தசை:


நான்காவதாக வரும் குரு தசை காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதார மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள்


சனி தசை:


ஐந்தாவதாக வரும் சனி தசை காலங்கள் சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயர் உண்டாகும்.

பொது பரிகாரம்

திருவோண நட்சத்திரத்தின் தலவிருட்சம் பாலுள்ள எருக்கு மரம். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிடுதல், மொட்டையடித்து காது குத்துதல்,புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு தொடங்குதல் மாடு ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசக்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல் கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்க தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், உத்திரட்டாதி ஆகும்.

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. திருவாதிரை வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்
ச்ரவண நட்சத்திர வல்லடம்
விஷணும் கமலபத்ராஷம்
தீயா யேத் கருட வாகனம்


 

நட்சத்திரம் -திருவோணம்

திருவோணம் -Shraavan/Thiruvonam


திருவோணம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 22 வது பிரிவு ஆகும். திருவோண நட்சத்திர பிரிவு அக்கிலா விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட திருவோணத்தின் (α, β and γ அக்குயிலய்) பெயரைத் தழுவியது. திருவோணத்தின் சமஸ்கிருதப் பெயரான ஷ்ரவன (Shravana) என்பது "கேட்டல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காது" ஆகும். ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளாவில் வாமன அவதாரத்திற்கு காரணமான மகாபலியை போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரில் மற்றும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, மகாவிஷ்ணு அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்த அசுர சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு. திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சுரப்பி, முட்டிகள்

பார்வை

மேல்நோக்கு

பாகை

280.00 - 293.20

தமிழ் மாதம்

தை

நிறம்

கருமை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

தேவ கணம்

குணம்

மென்மை

மிருகம்

பெண் குரங்கு

பறவை

நாரை

மரம்

பாலுள்ள எருக்கு மரம்

மலர்

ஜாதி பூ

தமிழ் அர்த்தம்

படிப்பறிவு உடையது, காது

தமிழ் பெயர்

முக்கோல்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 சரம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

சிவப்பு அரிசி

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

பால் ஏடு - அக்காரஅடிசில்

தேவதை

அம்பிகை, வெங்கடேச பெருமாள், ஸ்ரீமகாவிஷ்ணு.

அதி தேவதை

கருடவாகனத்தில் எழுந்தருளி இருக்கும் திருமால்.

அதிபதி

சந்திரன்

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

அம்பு போன்ற வடிவில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பு.

மற்ற வடிவங்கள்

பூங்கொத்து,மூலிகைகொத்து

மற்ற பெயர்கள்

சோனம், உலக்கை, சித்ரம், ரஷகன், மால், மாயன், மாதவன்

வழிபடவேண்டிய தலம்

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள், திருப்பாற்கடல், திருப்பதி, திங்களூர்

அதிஷ்ட எண்கள்

2, 6, 8

வணங்க வேண்டிய சித்தர்

அத்ரி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஜு, ஜே, ஜோ, கா

அதிஷ்ட நிறங்கள்

மயில் நீலம், வெளிர்ச் சிவப்பு

அதிஷ்ட திசை

மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

புதன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

முத்து, வைரம்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

பொய்கையாழ்வார், விபீஷணன், சுவாமி நரசிம்ம பாரதி, வேதாந்தாசார்யர், பிள்ளை லோகாசார்யர், விக்ரம் சாராபாய், கார்ல்மார்க்ஸ்.

குலம்

நீச்ச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்