Showing posts with label Aviṭṭam. Show all posts
Showing posts with label Aviṭṭam. Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - கும்பம்

கும்பம்  ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது நான்காம் இடத்திற்கு வருகிறார். அவர் அஷ்டம ஆயுள் ஸ்தானம் (8ம் வீடு ),தொழில் ஸ்தானம் (10ம் வீடு ), விரைய ஸ்தானம்(12ம் வீடு ) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • கடந்த காலத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். 
  • பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து வாங்கும் யோகம் சிலருக்கு அமையும். 
  • ஒரு சிலருக்கு சொத்து வாங்குவதில் இருந்து வந்த தடை விலகும். 
  • வாழ்க்கை மேம்படும். அம்மா வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். 
  • உடல்நலம் சீராகும், தொழிலமைப்பு ஏற்றம் பெறும். 
  • பணவரவு இருந்தாலும் செலவுகள் சேர்ந்து வரும். 
  • பணி செய்யும் இடத்தில்  பாராட்டுகள் கிடைக்கும். சிலருக்கு தொழில் நிரந்தரமாகி மகிழ்ச்சி சேர்க்கும். 
  • பல கால எதிர்பார்ப்புகளான ஊதியம், பதவி உயர்வு கிட்டும். 
  • திட்டம்  இடுதலும் , நேரம் தவறாமையும் உயர்வுகளை உறுதியாக்கும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். 
  • தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், பெரிய முயற்சிகள், முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 
  • அரசியலில் உள்ளவர்கள் அடக்கத்துடன் இருப்பதே நல்லது. 
  • அரசுப்பணி புரிபவர்கள் தொடர்ச்சியாக வளர்ச்சி உண்டு 
  • கலைஞர்கள், சினிமாத்துறையினர் கவனத்தை சிதற விட கூடாது.
  • பெண்களுக்கு பூர்வீக சொத்து சேரும். ஆனாலும் உடல் ரீதியான உபாதைகள் ஏற்படலாம் என்பதால் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை
  • பணிபுரியும் பெண்களுக்கு, வேலை பளு அதிகரித்து, சில நெருக்கடிகளும் ஏற்படலாம். இருப்பினும் உங்கள் கடின உழைப்புக்கு உரிய வெகுமதிகள் கிடைக்கும். 
  • வீட்டில் இருப்போரிடம்  விட்டுக் கொடுத்தல் முக்கியம். வார்த்தைகளில் கவனம் தேவை. உறவுகளால் சகாயம் உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். 
  • குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம். 
  • உடனிருப்போருடன் வீண் தர்க்கம் வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது.
  • குரு பெயர்ச்சியால் பெரிய பாதகங்கள் இல்லை என்றாலும்  இதர கிரகங்களின் சஞ்சாரம் மூலம் குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம்
  •  ஒற்றைத் தலைவலி, சுவாசக் கோளாறுகள், அடிவயிறு உபாதை, ரத்த அழுத்த மாற்றம் வரலாம்.

அவிட்டம் - 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் , இவர்கள் செய்த வேலைகளை  தாங்கள்  செய்ததாகக் கூறி, மற்றவர்கள் நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை. 
  • வியாபாரிகள் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவர்கள். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம். 
  • உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். . வெளியூர் பயணங்களால் லாபம் உண்டு. 
  • விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் படியான லாபத்துடன் கூடிய விற்பனை இருக்கும். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 
  • வேலையில் திருப்தி உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள்.

சதயம்

  • இந்த குரு பெயர்ச்சியால் எந்த காரியத்திலும் கவனம் தேவை. 
  • பெரியவர்களிடம் நற்பெயர் எடுப்பதால்  மகிழ்ச்சி உண்டாகும். 
  • மனம் தெளிவடையும்.  பணவரத்து அதிகரிக்கும். 
  • எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். எதிர்ப்புகள் விலகும். 
  • நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 
  • விரும்பிய காரியங்களை செய்வதுடன், அதற்கு நல்ல  சாதகமான பலன் கிடைக்கும் .
  • புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 
  • தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.
  • வியாபார போட்டிகள் குறையும். 
  • பழைய பாக்கிகள் வசூலாகும்.  
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.

பூரட்டாதி - 1, 2, 3 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். 
  • கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 
  • பிள்ளைகள்,  சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுபார்கள், அதனால்  சந்தோஷம் உண்டாகும். 
  • இடம், வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பார்கள். 
  • பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். 
  • ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டு  
  • வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்

விநாயகரை  வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். 
சனிக்கிழமை அன்று விநாயகருக்கு  தேங்காய் மாலை சாத்தி வழிபட உடல் ஆரோக்கியம் சிறப்பாகும் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மகரம்

 

 மகரம்  ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு வருகிறார்.  பாக்கிய ஸ்தானம் (9ம்  வீடு),  லாப ஸ்தானம் (11ம்  வீடு)   ராசி (1ம்  வீடு) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • இந்த அமைப்பு சகல விதத்திலும் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும் எனக் காட்டுகிறது.
  • அலுவலகத்தில்  செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளுடன் கலந்துரையாடும் அளவுக்கு மரியாதை உயரும். 
  • இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். சிலருக்குப் பலகாலக் கனவாக இருந்த பணிவாய்ப்பு தேடிவரும். 
  • உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.  
  • வீட்டில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். 
  • மனம் போல வீடு, மனை, வாகன வசதிகள் உண்டாகும்.
  • ஏழரை சனி நடந்தால் கூட, குரு ஐந்தாம் வீட்டில் இருப்பதும் ம், குருவின் பார்வை ராசியின் மீது விழுவதும்  சனியின் நெருக்கடிகளையும் போக்கும்
  • மறைமுக எதிர்ப்புகள் குறையும், சட்ட சிக்கல்கள் தீரும். 
  • மன நிம்மதியுடன், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். 
  • பழைய கடன்கள் பைசலாகும். பணவரவை சேமித்து வைப்பது நல்லது .
  • அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். 
  • பெற்றோர் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். 
  • வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு தவிர்ப்பது நல்லது .
  • பெண்களுக்கு திடீர் யோகத்தால் பொருட் சேர்க்கை ஏற்படும். மேலும் உறவினர்கள், குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு பெருகும் 
  • செய்யும் தொழிலில்கஷ்டங்கள்  நீங்கி, லாபங்கள் அதிகரிக்கும்.  
  • அரசியலில் உள்ளவர்களுக்கு திடீர் பதவி, பொறுப்புகளால் பெருமை சேரும். 
  • பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. 
  • யாருக்கும் வாக்குறுதிகள்  தரவேண்டாம். 
  • அரசுப்பணியில் உள்ளோர் புதிய வாய்ப்புகளால் ஆதாயம் கிடைக்கும். 
  • மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும்.  
  • கலைஞர்கள், படைப்பாளிகள் காலம் கனிந்து வாய்ப்புகள் சிறப்பாக அமையும். 
  • உறவுகளிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 
  • வெளியூர், வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்
  • நரம்பு, அடிவயிறு, முதுகு, கால்கள், தொடை, இடுப்பு உபாதைகள் வரலாம்.

உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும் என்றாலும் பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும்.  
  • குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.
  • மனக் குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். 
  • பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும். 
  • எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

திருவோணம்

  • இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். 
  • எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். 
  • வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. 
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். 
  • புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். 
  • குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். 
  • கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.
  • குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். 
  • மற்றவர்கள் ஆலோசனை கேட்டாக இவர்களை நாடி வருவார்கள்.

அவிட்டம் - 1, 2 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். 
  • எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். 
  • புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும்  நல்லபடியாக முடிக்க முடியும் . 
  • புதிய சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும்   திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள்  கிடைக்கும். 
  • பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

பரிகாரம்

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். விநாயகருக்கு அருகம்புல்லை  சாத்தி வழிபட்டால் நல்லது தடை இன்றி நடைபெறும்