Showing posts with label Poorattadhi. Show all posts
Showing posts with label Poorattadhi. Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மீனம்

மீனம்   ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தனவாக்கு ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இரண்டாம் வீட்டில், சுப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு, இந்த ஆண்டு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்துக்கு செல்கிறார். அவர்  சப்தம ஸ்தானம் (7ம் வீடு ), பாக்கிய ஸ்தானம் (9ம் வீடு ), லாப ஸ்தானம் (11ம் வீடு ) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • ராசிக்கு உப ஜெய ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி நடப்பதால், ள் பல விஷயங்களில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். 
  • கோபத்தை குறைத்துக் கொண்டு, பொறுமையாக, நிதானமாக பேசுவதும் அவசியம்.  
  • சிறப்பாக செயல்பட்டாலும், எதிர்பார்க்கும் ஆதாயங்கள் கிடைப்பதில் தாமதமாக நடக்கும்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும், பூர்வீக சொத்து சேரும், வரவு சீராக இருக்கும். அதேசமயம்  தலைகனம் தவிர்ப்பது அவசியம். 
  • அலுவலகத்தில் நன்மைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். 
  • பிறரைக் குறைகூறுவதும் கூடாது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். 
  • தவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், பொறுமை முக்கியம். 
  • வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வார்த்தையில் கவனம் இல்லை என்றாலும்  ஒற்றுமை காணமல் போகும். கவனம் அவசியம் . 
  • வாரிசுகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். வரவு சீரானாலும் செலவுகளும் சேர்ந்து வரும். 
  • வீண் ஆடம்பரம்வேண்டாம். 
  • கடன் தருவது, பெறுவதில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம்.
  • கடின முயற்சிகளின்  முலம்  வெற்றி உண்டாகும்.
  • சிறு தூர பயணங்கள்  செல்லும் சூழல் உண்டாகும்
  • எதிர்பார்க்கும் மாறுதல்கள் தாமதமாக கிடைத்தாலும், நல்ல பதவிகள், கௌரவமான பதவிகள் கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும். 
  • பல வகையான நெருக்கடிகள் இருந்தாலும், குருவின் பார்வை நல்ல முடிவுகளைத் தரும். 
  • அரசு வழி அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். அரசியலில் இருப்போர்க்கு தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்படும்.
  • மாணவர்கள் எதிர்கால நன்மைக்கு இப்போதே உத்தரவாதம் கிட்டும்.
  • அரசுப்பணி புரிவோர், திறமைக்கு ஏற்ப உயர்வுகள் கிட்டும். 
  • பெண்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. கடன் வாங்கவோ, குடுக்கவோ வேண்டாம்
  • பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் மாற்றங்கள் கிடைக்கும். 
  • வேற்று மொழி தொடர்பு, கமிஷன், ஏஜென்சி, போன்ற வேலைகளில் இருப்பவர்கள் நல்ல லாபம் பெற முடியும். 
  • வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். 

 பூரட்டாதி 4ம் பாதம் 

  • இந்த குரு பெயர்ச்சியால் புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். 
  • குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். 
  • கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். 
  • குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.
  • பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது

உத்திரட்டாதி 

  • இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
  • பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் யோகம் உண்டு. மனநிம்மதி கிடைக்கும். 
  • காரிய வெற்றி உண்டாகும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். 
  • மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். 
  • புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. 
  • வியாபாரிகளுக்கு காரிய தடை ஏற்படலாம். கவனம் தேவை.  காரியங்கள்  தாமதப்படும் என்றாலும் காரிய அனுகூலம் உண்டு.
  • எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும்.
  • கூட்டுத் தொழில் லாபம் அடையும். 
  • கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும். 
  • வெளியூர் சென்றுவர நேரிடலாம்.

ரேவதி 

  • இந்த குரு பெயர்ச்சியால் மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். 
  • எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும். 
  • அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. 
  • பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும் என்றாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். 
  • தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். 
  • புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.
  • குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். 
  • குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு 

பரிகாரம்

மாரியம்மனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும் 
சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை தரும் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - கும்பம்

கும்பம்  ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது நான்காம் இடத்திற்கு வருகிறார். அவர் அஷ்டம ஆயுள் ஸ்தானம் (8ம் வீடு ),தொழில் ஸ்தானம் (10ம் வீடு ), விரைய ஸ்தானம்(12ம் வீடு ) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • கடந்த காலத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். 
  • பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து வாங்கும் யோகம் சிலருக்கு அமையும். 
  • ஒரு சிலருக்கு சொத்து வாங்குவதில் இருந்து வந்த தடை விலகும். 
  • வாழ்க்கை மேம்படும். அம்மா வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். 
  • உடல்நலம் சீராகும், தொழிலமைப்பு ஏற்றம் பெறும். 
  • பணவரவு இருந்தாலும் செலவுகள் சேர்ந்து வரும். 
  • பணி செய்யும் இடத்தில்  பாராட்டுகள் கிடைக்கும். சிலருக்கு தொழில் நிரந்தரமாகி மகிழ்ச்சி சேர்க்கும். 
  • பல கால எதிர்பார்ப்புகளான ஊதியம், பதவி உயர்வு கிட்டும். 
  • திட்டம்  இடுதலும் , நேரம் தவறாமையும் உயர்வுகளை உறுதியாக்கும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். 
  • தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், பெரிய முயற்சிகள், முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 
  • அரசியலில் உள்ளவர்கள் அடக்கத்துடன் இருப்பதே நல்லது. 
  • அரசுப்பணி புரிபவர்கள் தொடர்ச்சியாக வளர்ச்சி உண்டு 
  • கலைஞர்கள், சினிமாத்துறையினர் கவனத்தை சிதற விட கூடாது.
  • பெண்களுக்கு பூர்வீக சொத்து சேரும். ஆனாலும் உடல் ரீதியான உபாதைகள் ஏற்படலாம் என்பதால் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை
  • பணிபுரியும் பெண்களுக்கு, வேலை பளு அதிகரித்து, சில நெருக்கடிகளும் ஏற்படலாம். இருப்பினும் உங்கள் கடின உழைப்புக்கு உரிய வெகுமதிகள் கிடைக்கும். 
  • வீட்டில் இருப்போரிடம்  விட்டுக் கொடுத்தல் முக்கியம். வார்த்தைகளில் கவனம் தேவை. உறவுகளால் சகாயம் உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். 
  • குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம். 
  • உடனிருப்போருடன் வீண் தர்க்கம் வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது.
  • குரு பெயர்ச்சியால் பெரிய பாதகங்கள் இல்லை என்றாலும்  இதர கிரகங்களின் சஞ்சாரம் மூலம் குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம்
  •  ஒற்றைத் தலைவலி, சுவாசக் கோளாறுகள், அடிவயிறு உபாதை, ரத்த அழுத்த மாற்றம் வரலாம்.

அவிட்டம் - 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் , இவர்கள் செய்த வேலைகளை  தாங்கள்  செய்ததாகக் கூறி, மற்றவர்கள் நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை. 
  • வியாபாரிகள் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவர்கள். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம். 
  • உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். . வெளியூர் பயணங்களால் லாபம் உண்டு. 
  • விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் படியான லாபத்துடன் கூடிய விற்பனை இருக்கும். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 
  • வேலையில் திருப்தி உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள்.

சதயம்

  • இந்த குரு பெயர்ச்சியால் எந்த காரியத்திலும் கவனம் தேவை. 
  • பெரியவர்களிடம் நற்பெயர் எடுப்பதால்  மகிழ்ச்சி உண்டாகும். 
  • மனம் தெளிவடையும்.  பணவரத்து அதிகரிக்கும். 
  • எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். எதிர்ப்புகள் விலகும். 
  • நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 
  • விரும்பிய காரியங்களை செய்வதுடன், அதற்கு நல்ல  சாதகமான பலன் கிடைக்கும் .
  • புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 
  • தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.
  • வியாபார போட்டிகள் குறையும். 
  • பழைய பாக்கிகள் வசூலாகும்.  
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.

பூரட்டாதி - 1, 2, 3 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். 
  • கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 
  • பிள்ளைகள்,  சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுபார்கள், அதனால்  சந்தோஷம் உண்டாகும். 
  • இடம், வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பார்கள். 
  • பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். 
  • ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டு  
  • வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்

விநாயகரை  வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். 
சனிக்கிழமை அன்று விநாயகருக்கு  தேங்காய் மாலை சாத்தி வழிபட உடல் ஆரோக்கியம் சிறப்பாகும்