Showing posts with label Astrology. Show all posts
Showing posts with label Astrology. Show all posts

Nakshatra Names In Tamil and English





Billions of stars are found in this sky. But only 27 Nakshatras are observed in astrology. Because these 27 Nakshatras affect the life signs living on earth. 

Nakshatra Names In Tamil and English (27 நட்சத்திரங்கள் பெயர்கள்)
English Name தமிழ் பெயர் Tamil Name
Aswini அசுவினி Aswini
Bharani பரணி Baraṇi
Krithika கிருத்திகை Kārthikai
Rohini ரோகிணி Rōhiṇi
Mrigashirsha மிருகசிரீஷம் Mirugasīridam
Aardhra / Arudra திருவாதிரை Thiruvādhirai
Punarvasu புனர்பூசம் Punarpoosam
Pushyami பூசம் Poosam
Ashlesha ஆயில்யம் Ayilyam
Magha/Makha மகம் Magam
Poorva Phalguni பூரம் Pooram
Uthra phalguni உத்திரம் Uthiram
Hastha ஹஸ்தம் Astham
Chitra சித்திரை Chithirai
Swaathi சுவாதி Swathi
Vishaakha விசாகம் Visakam
Anuraadha அனுஷம் Anusham
Jyeshta கேட்டை Kettai
Moola மூலம் Moolam
Poorva Ashaada பூராடம் Pooraadam
Uthra Ashaada உத்திராடம் Uthraadam
Shraavan திருவோணம் Thiruvonam
Dhanishta அவிட்டம் Aviṭṭam
Shathabhisha சதயம் Sadayam
Poorva bhadrapada பூரட்டாதி Poorattadhi
Uthra bhadrapada உத்திரட்டாதி Uthrattathi
Revathi ரேவதி Revathi

நட்சத்திரம் -திருவோணம்

திருவோணம் -Shraavan/Thiruvonam


திருவோணம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 22 வது பிரிவு ஆகும். திருவோண நட்சத்திர பிரிவு அக்கிலா விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட திருவோணத்தின் (α, β and γ அக்குயிலய்) பெயரைத் தழுவியது. திருவோணத்தின் சமஸ்கிருதப் பெயரான ஷ்ரவன (Shravana) என்பது "கேட்டல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காது" ஆகும். ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளாவில் வாமன அவதாரத்திற்கு காரணமான மகாபலியை போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரில் மற்றும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, மகாவிஷ்ணு அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்த அசுர சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு. திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சுரப்பி, முட்டிகள்

பார்வை

மேல்நோக்கு

பாகை

280.00 - 293.20

தமிழ் மாதம்

தை

நிறம்

கருமை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

தேவ கணம்

குணம்

மென்மை

மிருகம்

பெண் குரங்கு

பறவை

நாரை

மரம்

பாலுள்ள எருக்கு மரம்

மலர்

ஜாதி பூ

தமிழ் அர்த்தம்

படிப்பறிவு உடையது, காது

தமிழ் பெயர்

முக்கோல்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 சரம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

சிவப்பு அரிசி

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

பால் ஏடு - அக்காரஅடிசில்

தேவதை

அம்பிகை, வெங்கடேச பெருமாள், ஸ்ரீமகாவிஷ்ணு.

அதி தேவதை

கருடவாகனத்தில் எழுந்தருளி இருக்கும் திருமால்.

அதிபதி

சந்திரன்

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

அம்பு போன்ற வடிவில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பு.

மற்ற வடிவங்கள்

பூங்கொத்து,மூலிகைகொத்து

மற்ற பெயர்கள்

சோனம், உலக்கை, சித்ரம், ரஷகன், மால், மாயன், மாதவன்

வழிபடவேண்டிய தலம்

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள், திருப்பாற்கடல், திருப்பதி, திங்களூர்

அதிஷ்ட எண்கள்

2, 6, 8

வணங்க வேண்டிய சித்தர்

அத்ரி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஜு, ஜே, ஜோ, கா

அதிஷ்ட நிறங்கள்

மயில் நீலம், வெளிர்ச் சிவப்பு

அதிஷ்ட திசை

மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

புதன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

முத்து, வைரம்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

பொய்கையாழ்வார், விபீஷணன், சுவாமி நரசிம்ம பாரதி, வேதாந்தாசார்யர், பிள்ளை லோகாசார்யர், விக்ரம் சாராபாய், கார்ல்மார்க்ஸ்.

குலம்

நீச்ச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்


நட்சத்திரம் - பூராடம்

 பூராடம்  Poorva Ashaada/ Pooraadam



பூராடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 20 வது பிரிவு ஆகும். டி பூராட நட்சத்திர பிரிவு தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூராடத்தின் (δ மற்றும் ε சாகிட்டேரீ) பெயரைத் தழுவியது. பூராடத்தின் சமஸ்கிருத பெயரான பூர்வ ஆஷாடா (Purva Ashadha) என்பது "தொடக்க வெற்றி" அல்லது "வெல்ல முடியாதது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "விசிறி" அல்லது "முறம்" ஆகும். "பூர்வாஷாடா" என்றும் அழைக்கப்படும்.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

1, 2, 3-ம் பாதங்கள் - கணுக்கால்கள். 4-ம் பாதம் - கால், முன்னங்கால்.

பார்வை

கீழ்நோக்கு

பாகை

253.20 - 266.40

தமிழ் மாதம்

மார்கழி

நிறம்

கருமை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

மனுஷ கணம்

குணம்

உக்கிரம்

மிருகம்

ஆண் சிங்கம்

பறவை

உள்ளான்

மரம்

வஞ்சி அல்லது நாவல் மரம் (பாலுள்ள மாமரம்)

மலர்

எருக்கம் பூ

தமிழ் அர்த்தம்

 முந்தைய வெற்றி

தமிழ் பெயர்

உடைகுளம்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 ஸ்திரம்

நாடி

தட்சிண பார்சுவ நாடி

ஆகுதி

பூசணித் துண்டு

பஞ்சபூதம்

ஆகாயம்

நைவேத்யம்

தயிர், நெய் சாதம்

தேவதை

அஜைகபாதன் -  11 ருத்ரர்களில் ஒருவர்

அதி தேவதை

ஸ்ரீ லக்ஷ்மி குபேரன்

அதிபதி

 சுக்கிரன்

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

சதுர வடிவில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட தொகுப்பு

மற்ற வடிவங்கள்

கட்டில்கால்

மற்ற பெயர்கள்

நீர், புனல், பயம், அறல், கோ, பொய்வாவி,  உடைகுளம்

வழிபடவேண்டிய தலம்

ஆகாசபுரீஸ்வரர், தஞ்சாவூர்

அதிஷ்ட எண்கள்

2, 3, 7

வணங்க வேண்டிய சித்தர்

ஹரிதா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஸே, ஸோ, தா, தீ

அதிஷ்ட நிறங்கள்

ஊதா, கிரீம்

அதிஷ்ட திசை

வடகிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

மார்கா (மஞ்சள்)

அதிஷ்ட உலோகம்

வெண்கலம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், விசாகம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

குபேரன், கின்னரன், ராமகிருஷ்ண பரமஹம்சர்,நாராயண குரு, மறைமலையடிகள், காமராசர், கலிலியோ

குலம்

 பிரம்ம குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்



மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

ஜோதிடம் பாடம் - 4 (இலக்கினாதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்)



சென்ற பாடத்தில் 9 கிரகங்களின் காரகத்துவத்தையும் , 12 ராசிகளும் எதைக் குறிக்கிறது என்பதையும் பார்த்தோம்.
இந்த பாடத்தில் ஒவ்வொரு வீட்டின் அதிபதிகள் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம்


லக்கினம்

ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம் .

1. லக்கினாதிபதி 1ம் வீட்டில் (லக்கினத்திலே) இருந்தால்:

    • லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதோவது லக்னத்திலே இருந்தோல் அவர் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கிறார் என்று பொருள்
    • ஜாதகர் சுதந்திர மனப்பான்மையுடனும் தன் விருப்பம் போல் வாழ்பவராகவும் இருப்பர். யாருடைய உபசாரணையும் கேட்க மாட்டார்.
    • நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர்
    • சொத்துக்*கள், புகழ், வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வர். தெய்வ
    • நம்பிக்கையும் கொண்டவராக இருப்பர். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நன்கு பழக கூடியவராக இருப்பர்.
2. லக்கினாதிபதி 2ம் வீட்டில் இருந்தால்:
    • 2-ம் வீட்டில் அதாவது வாக்குஸ்தானத்தில் லக்கினாதிபதி இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் ,சுய சம்பாத்தியம் பெற்று இருப்பார்
    • நல்ல குடும்பத்தில் பிறந்தவராகவும் குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர்.
    • சபையில் அவருக்கென்று தனி மரியாதையை இருக்கும்.
    • தனது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். செல்வமும் செல்வாக்கும் மிகுந்தவர்.
    • மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்தவராக வாழ்வார்

மேலும் படிக்க

ஜோதிடம் பாடம் -2




சூரியன் (Sun) முன்பு பூமி(Earch) சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு லக்கினம் (Laginam)எனப்படும்.
ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

லக்கினம் எப்படி கணிப்பது என்பது பெரிய கணிதம். நாம் அவற்றை பின்னால் பார்க்கலாம். நமது ஜாதகத்தை எடுத்தல் "ல" என்று போட்டு இருப்பதுதான் லக்கினம்.

லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால் ஒவ்வொரு ராசியும் 2, 3, 4 ,5 ,6, 7, 8, 9, 10, 11, 12 என்று வரிசைப்படி வரும். லக்கினத்தை வைத்துதான் ஜாதகம் கணிக்கப் படுகிறது

ராசி (Rasi)கட்டம் :

எந்த ஜாதகத்தை கையில் எடுத்துப் பார்த்திர்கள் என்றால் அதில் பொதுவாக இரண்டு கட்டங்கள் போடப்பட்டிருக்கும் அவற்றில் ஒன்று ராசிகட்டம் (Rasi) மற்றொன்று அம்சம் கட்டம் (அம்சம் என்பது நவாம்சம்) (Amsam or NavaAmsam) என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்த ராசிச் கட்டத்தில் "ல" என்று குறிப்பிடப்பட்டு குறுக்கு வாக்கில் ஒரு கோடு போட்டிருப்பார்கள் இதைத்தான் லக்கினம் என்று குறிப்பிடப்படுகிறது.
மேஷம் (Mesham) முதல் மீனம் (Meenam) வரையில் எங்கு சந்திரன் (Moon) இருக்குகிறாரோ அதுதான் ராசியாகும் . உதாரணத்திற்கு ஒரு ராசி (Zodiac) கட்டம் பார்க்கவும் .


நவாம்ச (Nava Amsam)கட்டம் :

ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம். குறிப்பாக திருமணத்தின் (For Marriage Time) போது இந்த கட்டத்தை பார்ப்பார்கள் அதாவது இது கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்.

நவாம்சம் இல்லாமல் ஜோதிடரால் துல்லியம்மாகப் பலன் சொல்ல முடியாது. எனவே ராசி கட்டத்திற்கு அடுத்தபடி நவாம்ச கட்டம் மிக முக்கியம் .
கட்டத்தை சக்கிரம் என்று ஜோதிடத்தில் சொல்வார்கள் .மேலும் ஜோதிடத்தை மிக துல்லியமாக சொல்வதற்கு மேலும் சில கட்டங்கள் (சக்கிரங்கள்) உள்ளன .

    • பாவம்
    • திரேக்காணம்
    • ஓரை
    • திரிசாம்சம்
    • சப்தாம்சம்
    • சஷ்டியாம்சம்.