Showing posts with label லக்கினம். Show all posts
Showing posts with label லக்கினம். Show all posts

12 லக்கினத்தின் பொது பலன்கள்-4



மகரம் லக்கினம்:

அதிபதி  சனி
யோககாரகர்கள்  சுக்கிரன், புதன், செவ்வாய்
யோகமில்லாதவர்கள்  சந்திரன், குரு
மாரக அதிபதி  சந்திரன், குரு
நோய்  சுரம், விஷம் , ஜலம் இவைகளால் பீடை
ஆயுள்  சுபர் பார்க்க 67 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

துர் ஆசை உடையவர், திடபுத்திமான், கோபக்காரன், மனைவியிடத்தில் பிரியமுள்ளவன்



கும்பம்லக்கினம்::

அதிபதி     சனி
யோககாரகர்கள்     சுக்கிரன், புதன், சனி
யோகமில்லாதவர்கள்     சந்திரன், குரு, செவ்வாய்
மாரக அதிபதி     சந்திரன், செவ்வாய்
நோய்     ஜுரம், பித்த சரீரம் , மிகுந்த சன்னி, 
    வாதசுரம், பித்தசுரம்
ஆயுள்     சுபர் பார்க்க 80 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

பெண்களிடத்தில் பிரியமுடையவன், அகன்ற வயிறுடையவன், தன்னையே புகழ்ந்து பேசுபவன் , பிறர் செய்யும் உதவியை உடனே மறப்பவன் , அற்ப கல்வியுடையவன்



மீனம் லக்கினம்:

அதிபதி    குரு
யோககாரகர்கள்    சந்திரன், செவ்வாய்
யோகமில்லாதவர்கள்    சுக்கிரன், சூரியன், புதன், சனி
மாரக அதிபதி    சூரியன்
நோய்    உஷ்ண ரோக பிரச்சனை , ஜுரம், இருமல்
ஆயுள்    சுபர் பார்க்க 100 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

ஞானி, பிராமணர், பெரியாரிடத்தில் மரியாதையுடையவன், சத்தியவான், பரிமளபிரியன் , இரக்கமுடையவன் , குளிர்ச்சியான கண்கள் உடையவன்


ஜோதிடம் பாடம் - 4 (இலக்கினாதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்)



சென்ற பாடத்தில் 9 கிரகங்களின் காரகத்துவத்தையும் , 12 ராசிகளும் எதைக் குறிக்கிறது என்பதையும் பார்த்தோம்.
இந்த பாடத்தில் ஒவ்வொரு வீட்டின் அதிபதிகள் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம்


லக்கினம்

ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம் .

1. லக்கினாதிபதி 1ம் வீட்டில் (லக்கினத்திலே) இருந்தால்:

    • லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதோவது லக்னத்திலே இருந்தோல் அவர் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கிறார் என்று பொருள்
    • ஜாதகர் சுதந்திர மனப்பான்மையுடனும் தன் விருப்பம் போல் வாழ்பவராகவும் இருப்பர். யாருடைய உபசாரணையும் கேட்க மாட்டார்.
    • நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர்
    • சொத்துக்*கள், புகழ், வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வர். தெய்வ
    • நம்பிக்கையும் கொண்டவராக இருப்பர். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நன்கு பழக கூடியவராக இருப்பர்.
2. லக்கினாதிபதி 2ம் வீட்டில் இருந்தால்:
    • 2-ம் வீட்டில் அதாவது வாக்குஸ்தானத்தில் லக்கினாதிபதி இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் ,சுய சம்பாத்தியம் பெற்று இருப்பார்
    • நல்ல குடும்பத்தில் பிறந்தவராகவும் குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர்.
    • சபையில் அவருக்கென்று தனி மரியாதையை இருக்கும்.
    • தனது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். செல்வமும் செல்வாக்கும் மிகுந்தவர்.
    • மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்தவராக வாழ்வார்

மேலும் படிக்க

ஜோதிடம் பாடம் - 3


இனி எப்படி ஜாதகத்தை வைத்து பலன் சொல்வது என்பதை இனி வரும் படங்களில் பார்ப்போம் .
இலக்கினம் தான் (ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான்)முதல் வீடு எனப் படும். உதாரணத்திற்கு ஜாதகத்தில் கும்பம் தான் லக்கினம் என்றால் அதுதான் முதல் வீடு ஆகும் .. அடுத்த வீடு மீனம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் மகரம் தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு.அதைப்பற்றி இப்போது பார்ப்போம் .

முதல் வீடு (First House) (லக்கினம்):

    1. உடல்வாகு - நிறம், உருவம், உயரம், உடல் தோற்றம் ( color, figure, height, physical appearance)
    2. குணாதிசயங்கள் (Characteristics)
    3. குழந்தைப் பருவம் (Childhood)
    4. உடல்நலம் (உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடுதான்) (Heath)
    5. சுற்றுச்சூழல் (ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும்)

    6. மன வலிமை,வெற்றி, புகழ் & அவதூறு, ஆளுமை (Mental strength, Success, Slander, Personality)

முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.


இரண்டாவது வீடு (Second House):

    1. இது (Family) குடும்பத்தைக் குறிக்கிறது.
    2. பொருளாதாரம் (Economy)( பணவரவு, செலவு போன்றவை ,அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் , வங்கியில் உள்ள பண நிலைமை போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.) இதை தனஸ்தானம் என்பர் .

    3. இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.
      ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும்.

மூன்றாம் வீடு :
    1. சகோதர ஸ்தானம் (இளைய உடன்பிறப்புகள்)(Younger siblings)
    2. தைரியம்(Courage)(எதிரியை வெற்றி கொள்ளும் திறமை)
      இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.

    3. அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்து பலன் கூறலாம்.

    4. உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது.
நான்காம் வீடு(Fourth House) :
    1. இது தாயார் ஸ்தானம் (Mother)என்பர் .
    2. அசையா சொத்து மற்றும் வாகனம் (Immovable property and vehicle) (ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் )

    3. உயர் கல்வி (Higher Education)
    4. சிலர் பெண்களின் கற்பு (Chastity)மற்றும் தாயின் ஒழுக்கம் பற்றியும் குறிக்கும் என்பர்

முன்புறம்,     1,       2 ,      3