Showing posts with label Family Life. Show all posts
Showing posts with label Family Life. Show all posts

உத்திரட்டாதி தொடர்ச்சி

உத்திரட்டாதி- Uthrattathi / Uthra bhadrapada


பொதுவான குணங்கள்:

உத்திரட்டாதி நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் பேச்சுவதில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மை பேசக்கூடியவர்கள். சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றுவார்கள். மிகுந்த சாமர்த்தியசாலிகள். வெற்றிலை போடுவது மற்றும் அடிக்கடி பயணம் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். வெளி உலகுக்காகப் போலியாக வாழாத யதார்த்தவாதி. வேத, உபநிடதங்களில் கரைகண்டவர். நீதி, நேர்மை, உண்மை ஆகியவற்றை விட்டு விலகாதவர். இவர்களுக்குள் எப்போதும் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும். 

கல்வி சுமாராகத் தான் இருக்கும். பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவாகம் நிறைந்தவர்கள். ஆழமாக யோசித்து செயல் படுவதால் தொட்டதெல்லாம் துலங்கும். பேச்சை விட செயலில் தான்  ஈடுபாடு இருக்கும். நீதி, நேர்மையுடன் வாழ்வார்கள். எதிலும் நடு நிலைமையுடனிருப்பார்கள். தன்னுடைய கடினமான உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைந்து சுகமான வாழ்க்கை வாழ்வார்கள்

குடும்ப வாழ்க்கை

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பெண் நட்புகள் அதிகமிருக்கும். காதல் வயப்பட்டாலும் குடும்ப நலன் கருதி விலகி விட நேரிடும். வாழ்க்கை துணையிடம் அதிக பாசமும் பிள்ளைகள் மீது அன்பும் இருக்கும். இவர்களுக்கு ஆண் பிள்ளைகளே அதிகமிருக்கும். கலச்சாரம் பண்பாடு தவறாமல் வாழ விரும்புவார்கள். எல்லா வசதிகளும் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். தாய் மீது அதிக பாசம் இருக்கும் உணவு பிரியர்களாக இருப்பார்கள்.  இயற்கையான சூழலில் வீடுகளை அமைத்து அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வயதான காலத்தில் சிலர் இல்வாழ்க்கையை துறந்து துறவறத்தில் ஈடுபடுவார்கள்..

 நண்பர்கள்:

உறவினர், நண்பர்களை உடையவர் எனலாம்.  மேலும் கற்றறிந்தவர்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள் நடுநிலைமை நடந்து கொள்வார்கள். நட்பு வட்டாரங்கள் அதிகம் இருந்தாலும் யாரிடமும் எந்த உதவி கேட்க மாட்டார்கள். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உண்மையே பேசி பல நட்புகளைப் பெறுவார்கள்.

 நட்பு நட்சத்திரங்கள் :

ஆயில்யம், கேட்டை, ரேவதி, ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மகம், மூலம் இந்த நட்சத்திரங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிறு உதவி கூடசெய்ய மாட்டார்கள்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உதவியும், நன்மையும் கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் அந்த நட்சத்திரகார்களுக்கு செலவு செய்ய வேண்டியது வரும். உங்களுக்கு வரும் ஆதாயங்களில் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பங்கு தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கூடுதல் சுமையாகவே இருப்பார்கள். 

மிருகசீருடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரகார்களையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்

தொழில்:

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், எந்த தொழில் செய்தாலும் விரைவில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்பார்கள், குறிப்பாக உணவு தொழில் மிகுந்த பக்கபலமாக இருக்கும். மிக சிறந்த வளர்ச்சியைத் தரும். எனவே உணவு தொழில் செய்வதும், பயணங்கள் தொடர்பான தொழில் செய்வதும், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில்கள், வழக்கறிஞர், ஆசிரியர், பேச்சை தொழிலாக செய்தல், உபன்யாசம், கதாகாலட்சேபம், ஜோதிடம், நீதிபதி, மருத்துவர், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், மூலிகை வைத்தியம்/ தகவல் தொழில்நுட்பம், பத்திரிகை துறை, ஊடகத் துறை, கலை இலக்கிய ஆர்வம், கலைத்துறை சார்ந்த நடிப்பு, பாட்டு, இசை போன்ற துறைகளிலும் வெற்றி பெறுவார்கள்.

கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சட்டம் பயிலுபவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும் வானவியல், ஜோதிடம், மருத்துவம் வங்கிப் பணி போன்றவற்றிலும் பணி புரிவார்கள், பள்ளி கல்லூரி, கன்ஸ்ட்ரக்ஷன், சிட்பண்ட்ஸ், பதிப்பகம் போன்றவற்றையும் நடத்துவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகத்தை பெற்றவர்கள்.

ஆரோக்கியம் :

இளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்

தசா பலன்கள்:

உத்திரட்டாதி  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன்   தசை முதல் திசையாக வரும். சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சனி   தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சனி தசை:

சனி தசை காலங்களில் சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடு குடும்பத்தில் அசையா சொத்து சேர்க்கை, நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

புதன்  தசை:

இரண்டாவதாக வரும் புதன் தசை 17 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் நல்ல  ஞாபக சக்தி கல்வியில் உயர்வு, பெற்றோர் பெரியோர்களின் ஆசி ஆகியவை சிறப்பாக  அமையும். சுக வாழ்வு வாழ்வார்கள்.  

கேது  தசை:

மூன்றாவதாக வரும் கேது தசை சாதகமற்று இருக்கும். உடல் நிலையில் பாதிப்பு தேவையற்ற மனக்குழப்பங்கள், சோம்பல் தன்மை, திருமணமானவர்களுக்கு இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். நிம்மதி குறையும்.

சுக்கிரன்  தசை:

அடுத்து வரும் 4வது தசை சுக்கிர தசை 20 வருட காலங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் பொருளாதார மேன்மை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் சுப காரியம் நடைபெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சூரியன்  தசை:

ஐந்தாவதாக தசை சூரியன் தசை ஆகும். உடல் ஆரோக்கியம் பாதிப்பு இருக்கும். சிலர் இதை மராக தசை என்று சொல்வதும் உண்டு. குரியன் நல்ல பலம் பெற்று இருந்தால் மிக சிறப்பான சூழ்நிலை அமையும்.


பொது பரிகாரம்:

உத்திரட்டாதி நட்சத்திர காரர்களின் விருட்சம் வேப்ப மரமாகும். இம்மரம் உள்ள கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். 

நட்சத்திரம் வானில் தோன்றும் நாள்:

இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 12 மணிக்கு மேல் உச்சி வானத்தில் காண முடியும் 

செய்ய வேண்டிய  நல்ல காரியங்கள்:

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், பூ முடித்தல் சீமந்தம், குழந்தையை தொட்டிலில் இடுதல், பெயர் சூட்டுதல், மொட்டையடித்து காது குத்துதல், முதன் முதலாக சாதம் ஊட்டுதல், கல்வி ஆரம்பித்தல், ஆடை அணிகலன்கள் அணிவது, வாகனம் வாங்குதல், மருந்து உண்ணுதல் ஆகியவற்றை செய்யலாம். வங்கி சேமிப்பு தொடங்க, நாட்டியம் பயில, புது வேலைக்கு விண்ணப்பிக்க ஆயுதம் பயில, குளம், கிணறு வெட்ட  இந்த நட்சத்திரம் உகந்ததாகும்.

 பொருந்தும் மற்றும்  பொருந்த நட்சத்திரங்கள் :

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது திருவாதிரை  நட்சத்திரத்திற்கு

 பொருந்தும் நட்சத்திரங்கள் :

ஆயில்யம், கேட்டை, ரேவதி, ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள் :

பரணி, பூசம், அனுஷம், பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

(குறிப்பு: மிக பொருந்தும்  நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

 சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் காமகா மாய வித்மஹே

       ஸர்வசித்யை ச தீமஹி

     தன்னோ தேனு ப்ரசோதயாத்