ரிஷப லக்கினத்தின் பொது பலன்கள்

 


அதிபதிசுக்கிரன்
யோககாரகர்கள்சூரியன், சனி, புதன்
யோகமில்லாதவர்கள்குரு, சந்திரன்
மாரக அதிபதிசந்திரன்,குரு , செவ்வாய்
நோய்காய்ச்சல் ,கழுத்தில் வியாதி, சிரங்கு, நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல்இருக்கக்கூடும்.
ஆயுள்சுபர் பார்க்க 77வயது வரை இருப்பர்

சனி ஒருவனே நல்ல ராஜயோகத்தை தருவார்

சில ஜோதிட நுல்கள் சந்தரன், குரு, செவ்வாய் கொல்லான் என்றும் கூருகிறது

ரிஷபம் லக்கினம்- சுப சேர்க்கை

  • சூரியன்+புதன்
  • சூரியன்+சனி
  • சூரியன்+சுக்கிரன்
  • புதன்+சுக்கிரன்
  • புதன்+சனி
  • சுக்கிரன்+சனி

ரிஷபம்  லக்கினம்- ஆகாத தசைகள் 

  • இந்த லக்னத்திற்கு குரு செவ்வாய் மாரகன் சந்திரன் குரு அசுபன் சனி ஒன்பதாம் அதிபதி என்றவகையில் பாதகாதிபதி.
  • 9, 10-க்குடைய சனி ஒருவனே உத்தம ராஜ யோககாரகன். சுக்கிரன் 6க்குடையவன் ஆனாலும் லக்னாதிபதியாகையால் அசுபம் குறைவு.
  • சந்திரன் 3 குடையவன் அதனால் அசுபன். சூரியன் 4க்குடையவன் ஆகிலும் அசுபனே.
  • செவ்வாய் 7, 12-க்குடையவன் ஆகையால் அசுபன். குரு 8 ,11-க்குடையவர் ஆகையால் அசுபன்

பொது பலன்கள் 

  • சூரியன், சனி ஒன்று சேர்ந்து,கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ராஜ யோகத்தைக் கொடுக்கும். 
  • ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, ஆடம்பர பிரியன், பொறுமைசாலி , பிறர் சொத்தை அபகரிக்க வல்லவன், கபடி, அகிமையுள்ளன, பிற்பகுதியில் புத்திரன் உடையவன், எதிர்ப்பால் நட்புகளை விரும்புபவன்
  • எருது சின்னம்:  கிருத்திகை -2, 3 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் -1, 2 பாதங்கள் வரை - வானவெளி கூட்டத்தில் எருது  உருவம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. ரிஷபம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் ‘எருது’ என்று பொருள். 
  • ரிஷப லக்கினகாரர்கள் எருதின் அமைப்பும் மற்றும் ஸ்திர தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். கொஞ்ச நடுத்தர உயரம், கம்பீரமாகத் தோற்றம், குனிந்தும், மிருதுவான காதுமடல் கொண்டவராகவும், தோல்கள் கடினத்தன்மையும், மெதுவான நடையும், விரிவான மூக்கும், பற்கள் சிறுத்தும் வரிசையாகவும், நெற்றி அகன்றும் காணப்படும். இதுதவிர பஞ்ச பூதங்களில் பிருத்வி(நிலம்) தத்துவத்திலும் ரிஷப லக்கின ஜாதகர் குணநலன்கள் பார்த்தால் பேச்சில் தேனாகவும், வசீகரத் தோற்றம் இருக்கும்
  • ரிஷப லக்கினகாரர்கள் முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும். தற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், சதைப்பற்றுமிக்கவன்
  • ரிஷப லக்கினகாரர்கள் ஸ்திர ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு நிதானம் உறுதியும்  இருக்கும். மேலும் இது நில ராசி ஆகும் 
  • கடின உழைப்பாளியாகவும், கோபம் தெரியாவண்ணம் இருக்கும். ஆனால் கோபம் அதிகமானால் அவர்கள் செயல் அதிரடியாக இருக்கும்..
  • அலங்காரப்பிரியராகவும், அழகும் கவர்ச்சியும், கலைநயம் கொண்டவராகவும், சரியான நேரத்தில் அறிவானது வெளிப்படும், ஞாபகசக்தி,  சகிப்புத் தன்மை, பிடிவாத குணம்,  மெதுவாக சாத்வ குணமாக தெரியும், எதிராளி பேசுவதை கவனமாக கேட்பார்கள்.
  • சிவபூஜையில் சிந்தை செலுத்துபவன், உண்மை பேசுபவன், உணவு குறைவாக உண்பவன், கொஞ்சம் குண்டானவன், பிறர்க் கீழே வேலை செய்பவன், புளிப்பு இவர்களுக்குப் பிடிக்கும், கணித வல்லுநர், உயர்ந்த ஆடை ஆபரணம் அணிபவன், புத்திசாலி, விளையாட்டுத்தனம் இருக்கும், பேராசை கொண்டவன், இருமல், கபம், கழுத்தில் வியாதி இவருக்கு இருக்கும் , மழலையர் பேசுவதைக் கேட்பவன், சிறுவயதில் அக்னி பயத்திற்கு ஆட்படுவான் என்று ஜாதக அலங்கார  நூலில் கூறப்படுகிறது.
  • நடுத்தரமான சதைப்பற்றுள்ள தோற்றம் உள்ளவர். அகன்ற நெற்றி, கருகருவென சுருள் சுருளான மயிர், பெரிய கண்கள், அழகிய முகம், வட்டமானது, சிவந்த பளபளக்கும் மேனி, ஆண்களும், பெண்களும் நளினத்தையும், அழகு, கவர்ச்சி இவற்றையும் உடையவர்.

புலிபாணி ஜோதிடம்- பாடல் - 24

ரிஷப & மிதுன லக்கினம்

கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


பொருள்:

இப்பாடலில் ரிஷபம் மற்றும் மிதுனம் லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

“ரிஷபம் மற்றும் மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் உண்டு. ஆனால் குரு கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 வீடுகளில் இருந்தால்  நல்லதல்ல. அவரால் செல்வம் நாசம் அடையும். மேலும் அரசால் கெடுதலும், நோயும் உண்டாகும். ஆனால்  குருவும் சந்திரனும் திரிகோணமாகிய 1, 5, 9 இருந்தால் நன்மை நடக்கும்.“

 விளக்கம்:

அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாக கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குரு பகவான் கேந்திரத்தில் நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம், உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக


திருமண வாழ்க்கை

  • ரிஷப லக்னத்தின் 7 மற்றும் 12ம் அதிபதி செவ்வாய். இவர்களுடைய இல்லற வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கக் கூடிய செவ்வாய் மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது. செவ்வாய் ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களை வாழ வைக்கவும் வைப்பார்.  செவ்வாய் முடிவெடுத்து விட்டால் ஜாதகரை கீழே வீழ வைக்கவும்  செய்வார்
  • இதில் பிறந்த ஆண்கள் நல்ல வீட்டு வாழ்வு உடையவர்கள். எல்லாம் வசதியும் செய்து வைப்பார்கள்.
  • இந்த ராசி பெண்கள் “மனைக்கு விளக்கம் மடவார்” என்ற வாக்கிற்கு உதாரணமாய் இல்லத்தரசிகளின் சிறந்தவர்கள்.
  • ரிஷப லக்கினக்காரருக்கு, விருச்சிக ராசி ஏழாமிடமாக அமைவதால் முழுப் பொறுப்பும் மனைவியிடமே அமையும். இன்றேல், வீண் தகராறுகள் விளையும்.
  • இவர்களின் வாழ்க்கை துணை பொதுவாக நல்ல தைரியசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பார். ஆனாலும் சிறு சிறு சண்டைகள் அடிக்கடி தோன்றி மறையும்.

தொழில்

  • இவர்கள் நளின உழைப்பினர். சொகுசு வேலைகளை செய்ய விரும்புவார்கள்.
  • உல்லாச பொருள்கள், வாணிகம், கம்பளி, பட்டு, வியாபாரம், சோப்பு, சென்ட் போன்ற வாசனைப் பொருட்கள் இவற்றின் மூலம் நிறைய பொருள் ஈட்டுவர்.
  • பேங்க் நிர்வாகம், நீதித்துறை அலுவல்கள், பந்தயம் நடத்துபவர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், ரேஸ் என்று வெல்லுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உண்டு.
  • உழவு விவசாயம் இவற்றிலும் இவர்களுக்கு லாபம் உண்டு என்பதை இவர்கள் ராசி (மண்) ராசியகையாலும் இந்த ராசியின் உருவம் காளை என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
  • இவர்கள் இடைத்தரகர் போன்ற தொழில் செய்தால் அந்தத் தொழிலில் இவர்களை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. பேச்சுத் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். எப்படிப்பட்ட விஷத்தையும் பேசியே ஜெயித்து விடுவார்கள். 
  • பொதுவாக அரசுத்துறையில் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்
  • ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் 9ம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவான் ஆவார். ரிஷப லக்னத்திற்கு 9 ஆம் வீடு பாதகஸ்தானம் ஆகும் எனவே சனி பாதகாதிபதி தன்மையையும் அடைகிறார் இருந்தாலும் பெரிய பாதகங்களை செய்ய மாட்டார் ஏன்னென்றால் ரிஷப லக்னாதிபதி சுக்கிரனுக்கு இவர் தீவிர நண்பர்,  அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு இவரே தொழில் வெற்றி, புகழ், அதிர்ஷ்டங்கள், முன்னேற்றத்தையும் தரவல்லார்.
  • அறிவிப்பாளர், பொது பேச்சாளர் (Public speaker), வரவேற்பாளர் (Receptionist), கணக்காளர் (Accountant), கல்வியாளர், என்ஜினியர் (Engineering), வக்கீல் (Lawyer), வடிவமைப்பாளர் (Designer), நிலம் தொடர்பான வேலை, சமையல் தொழில் (culinary profession) ஆகியவை சிறப்பாக இருக்கும். 
  • பெண்கள் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் பூமி,மனை போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில், பணம், கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் லாபம் சிறப்பாக அமையும் என்றாலும் கூட்டாளிகளை நம்பி எதையும் ஒப்படைப்பது கூடாது (நல்ல கூட்டாளிகள் அமைப்பு இல்லை)

கிரகங்கள்  

  • சூரியன் : 4ம்  வீட்டுக்கு உரியவர் எனபதால் சூரியன் நல்லவர் ஆனாலும் சுக்கிரன் & சூரியன் பகைவர்கள் அனைவரும் அறிந்தே. சூரியனின் பகை வீடுகளில் ரிஷபம் ஒன்றாகும். எனவே சூரியன் இவர்களுக்கு அவ்வளவு நன்மை செய்யாது 
  • சந்திரன் : 3ம் வீட்டுக்கு உரியவர். சந்திரன் இங்கு உச்சம் அடைகிறார். ஆனாலும் சந்திரன் பகைவரே. இவர் மாரகதிபதி ஆவார். சந்திர திசையில் மரகத்திற்கு ஒப்பான கெடுதலை செய்வார் 
  • புதன் : இவர்  2 மற்றும் 5 க்கு உடையவர். மிக நல்லவர். மிகவும் நல்லதே செய்வார். சனியை போல் இவரும் நன்மையே செய்வார்.
  • குரு: இவர்  8 மற்றும் 11 க்கு உரியவர். குரு ரிஷபத்திற்கு நல்லவர் அல்ல. இவர் மாரகதிபதி ஆவார் 
  • சுக்கிரன்: சுக்கிரன் லக்கினாதிபதியும் 6க்கு உடையவரும் அவர். எனவே நல்லைதியும் கெட்டதையும் கலந்தே தருவார். ஆனாலும் நல்லவரே. 
  • சனி: ரிஷப லக்னத்திற்கு சனி ஒருவரே நல்லவர் என்று சில நூல்கள் சொல்கிறது. 
  • ராகு & கேது : ரிஷப லக்னத்திற்கு ராகு & கேது நல்லவரே. ஆனாலும் ராகு தான் கேதுவை காட்டிலும் நல்லவர் 

சூட்சுமங்கள்  

  • ரிஷப லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள்  என்றால் புதன், சனி மற்றும் சுக்கிரன் 
  • சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அடைந்ததாலும் இவர் மராகாதிபதி ஆவார். 
  • மீனத்தில் சுக்கிரன் உச்சம் அடைந்தாலும் குருவும் மாராகதிபதி ஆவரர்.
  • சுக்கிரன் நல்லவர் என்றாலும் 6க்கு உடையவரும் ஆவரே.
  • குரியனும் பகைவரே ஆவார்.  

தசா பலன்கள் - சூரியன் 

ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன் . சுக்கிரனுக்கு சூரியன் பகை.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • சூரியன் நல்ல ஆதிபத்தியம் பெற்று சூரிய தசை நடக்கும் என்றால் மனதிற்கு பிடித்த வகையில் சொந்த வீடுகள் அமையும். புதிய வாகன சேர்க்கை உண்டாகும். தாய் வழி சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும்.
  • மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். 
  • உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். 
  • பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும் 
  • விவசாயம் தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும் 
  • அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சிறு தடைகளுக்கு பின்பே எண்ணிய வெற்றி கிடைக்கும்.சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

 தசா பலன்கள் - சந்திரன் 

    ரிஷப  லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்கு  சந்திரன் பகை என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • 3ம் அதிபதி என்பதால் சந்திரன் அமையும் இடத்தைப் பொறுத்து சாதகமான பலனை உண்டாக்குவார். 
    • ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். செவ்வாயின் ராசியில் சந்திரன் இருப்பதால் வர்த்தகத்தில் சிறு சிறு பிரச்சினை உண்டாகும்
    • காது தொடர்பான சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். 
    • மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
    • சிறு தூர பயணம் ஏற்படும். அது நல்ல விதமாக இருக்கும் 
    • தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் மேம்படும். பகைவர்களால் பிரச்சனைகள் இருக்கும். மிகவும் கவனமாக செயல்பட்டால் வெற்றி காணலாம் 
    • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

    தசா பலன்கள் -  செவ்வாய் 

      ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன், செவ்வாய் பகை மேலும் செவ்வாய் 7க்கு உடைவன்  . செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
      • வாழ்க்கை துணையின் தாய்வழியில் சொத்துக்கள் கிடைக்கும். லாபம் உண்டு  
      • குழந்தகைளை ஜாக்கிரதையாக பாத்துக்கொள்ள வேண்டும். 
      • குழந்தைகள், தந்தையுடன் கருத்து வேறுபாடு தோன்றும்
      • தொழிலில் ஜாக்கிரதை தேவை. புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம். வேலைக்கு செல்லும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
      • எதிரிகள், தாய்மாமன், தந்தை ஆகியவர்களின் விசயங்களிலும், அவர்களை சார்ந்த விசயங்களிலும் எச்சரிக்கை தேவை குடும்பத்தில் சில சில சலசலப்பு தோன்றி மறையும். 
      • வீடு, வீடு சார்ந்த விஷயம் சாதகமாக இருக்கும். வீடு சம்மந்த பட்ட விசயங்கள் சாதாகமாகும். பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்
      • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
      தசா பலன்கள் -  புதன் 
        ரிஷப லக்னத்திற்கு அதிபதி  சுக்கிரன். சுக்கிரன் நட்பு கிரகம் புதன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
        • புதன் ரிஷப லக்கினத்திற்கு 2, 5 ஆம் அதிபன் ஆகிய யோகாதிபதி ஆவார். 
        • திருமண வயது உடையவருக்கு திருமணமும், குழந்தையை எதிர்பார்ப்பவருக்கு குழந்தை பேரும் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழும் சூழ்நிலை உண்டாகும். 
        • பொருளாதாரம் மேம்படும். வாக்கு தொழில் சிறப்பாக இருக்கும். ஜோதிடம், வான்வெளி தொழில் இருப்பர்வர்கள் சிறப்பு பெறுவார்கள். பொதுவாக தொழில் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சிறக்கும். 
        • இன்பம், ராஜ மாரியாதை, மனதில் சந்தோஷம், பந்து சேர்க்கை ஆகியவை கிடைக்கும் 
        • புதன் கெட்டால் இருக்குமிடம் பெயர்தல், சண்டை சச்சரவு உண்டாகுதல், தலைவலி, அன்னியர் விரோதம், ரத்த சோகை, பெண்களால் சண்டை உண்டாகும். பொதுவாக புதன் திசை ரிஷப லக்கினத்திற்கு நல்லதே செய்வார் 
        • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

         தசா பலன்கள் -  குரு  

        மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு குரு நட்பு என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
        • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
        • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
        • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
        • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
        • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
        • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
        • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
        • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
        • ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன்க்கு குரு பகை  என்ற நிலையில் இருக்கிறது. குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

        • குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்று வர வாய்ப்பு உண்டு. ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்
        • குழந்தைகளால் செலவு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப செலவாகவும் இருக்கலாம்
        • இளைய சகோதர சகோதரி வகையில் பிரச்சனை வரலாம். 
        • Documentation பிரச்சனை மற்றும்  கேரண்டி கையழுத்து போட்டால் பிரச்சனை உண்டாகும். யாருக்கும் கேரண்டி கொடுக்க வேண்டாம். 
        • வெளி நாட்டு பயணம், தொழில் அலைச்சல் ஆகியவை அதிகமாக இருக்கும். அலைச்சல் இல்லை என்றால் விரயம் இருக்கம் வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
        • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

        தசா பலன்கள் - சுக்கிரன்  

          ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். மேலுமே அவர் 6க்கு உரியவர்  சுக்கிரன் செவ்வாய்க்கு சமம். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
          • சுக்கிரன் தனது தசையில் நல்லது கெட்டது கலந்து தான் தருவார் 
          • வெளிநாடு பயணங்கள், வெளிநாட்டு கல்வி சார்ந்த விசயங்கள் ஆதாயமாக இருக்கும்
          • தொழிலில் பிரச்சனை வரலாம். 
          • இளைய சகோதர சகோதரி வழியில் சில பிரச்னைகள் தோன்றும் 
          • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அல்லது வழக்கு வர வாய்ப்பு உண்டு 
          • உடலில் இருந்த சோர்வு நீங்கி  சுறுசுறுப்பு  உண்டாகும்.
          • பொருளாதாரம், குடும்பம் மற்றும் தொழில் கவனம் தேவை
          • தொழில் விரயம் தவிர்க்க கவனம் தேவை. 
          • உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணியில் பிரச்னைகள் தோன்றும் 
          • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் - சனி 

            ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன்,  சனி நட்பு.  சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
            • ரிஷபம் லக்கினம் ஸ்திர லக்கினம். 9ம் வீடு பாதாகதிபதி. சனி 9, 10க்கும் உரியவர். சுக்கிரன் சனி நட்பு கிரகம். ஆனாலும் சனி பாதாகதிபதியும் ஆவார். ஆனால் சனி நல்ல யோகாரகன் ஆவர்.
            • ரிஷபம் லக்னம்/ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும். 
            • சனிதசை வரும் போது அதிகம் ஆசைப்படாமல், இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைந்து, நேர் வழியில் சம்பாதித்தால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம். மாறாக அதிகம் ஆசைப்பட்டால் அதற்குரிய பாதிப்புகளை சந்தித்தே தீர வேண்டும். 
            • நல்ல வருமானம் உண்டு. அதனால் கெட்ட பழக்கங்கள், கெட்டவர்களின் தொடர்ப்பு வர வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 
            • வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்கும் அமம்ப்பு உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும் 
            • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  ராகு  

              ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • ராகு, கேதுக்கு உச்சம் நீசம் இல்லை என்று ஒரு ஜோதிட நூலும், சில நூல்கள் ரிஷபத்தில் ராகு உச்சம் , விருச்சிகத்தில் நீச்சம் என்றும், மேலும் சில நூல்கள் ரிஷபத்தில் இரண்டும் உச்சம் , விருச்சிகத்தில் இரண்டும் நீசம் என்றும் கூறகிறது. எதுவாக இருந்தாலும் ராகு ரிஷபத்திற்கு நல்லவரே.
              • தந்தை, தந்தை சார்ந்த விஷயம், தாய், தாய் சார்ந்த விஷயம், வீடு, வீடு சார்ந்த விஷயங்களில் நன்மையே உண்டாகும்.
              • மன அழுத்தம் அதிக இருக்கும். தியானம் மிக அவசியம்.  
              • குழந்தைகள் சார்ந்த விசயங்களில் மற்றும் வாழ்க்கை துணை சார்ந்த விஷங்களில் டென்ஷன் அதிகமாக இருக்கும்.
              • தொழிலில், செல்லும் வேலையில் சிறப்பு இருக்கும். தொழில் சார்ந்த விசங்களில் நல்ல லாபமே 
              • பலமிக்க கிரகத்துடன் இணைந்திருக்கும் ராகு அக்கிரகத்தின் ஆதிபத்தியத்தை ராகு திசையில் ராகுவே அப்பலன்களை செய்வார் என்பது ஒரு சோதிட விதி. 
              • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              தசா பலன்கள் -  கேது  

                ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன், கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                • பணம் விரையம் ஆகும். சுப யோகமாக மாற்றி கொள்ளுவது தனிப்பட்டவர்களின் திறமை.
                • தந்தை, தாய், குழந்தைகள் , வாழ்க்கை துணை, இளய சகோதர சகோதிரி  மற்றும் வீடு ஆகிய அவற்றின் சார்ந்த விஷயங்களில் பிரச்சனை தரும். கேது பகவான் ஞானகாரகன். கேது ஆன்மீக புத்தியை புகட்டுபவர்.
                • வேலை பளு அதிகாமாக இருந்தாலும் நல்ல வருமானம் இருக்கும் . உடl நலனில் பிரச்சனை  உண்டாகி மறையும். 
                • மற்றவர்கள் உங்களை பற்றி புறம் கூற வாய்ப்பு உண்டு. ஜாக்கிரதையாக இருக்கவும்.
                • போட்டிகளில் வெற்றி, நிலபுலன்களை வாங்கும் அமைப்பு, சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். ஒருவேளை செவ்வாயும், கேதுவும் கெட்டு இருந்தால், இதற்கு எதிர்மறையானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
                • கோவில்கள், புனித ஸ்தல்ங்கள், யாத்திரைகள் மற்றும் சித்தர் வழிபாடு செல்ல சூழநிலையை அமைத்து தருவார். 
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 
                ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் என்றால் அந்த லக்கினம் கிருத்திகை பாதம் – 2,3,4 , ரோகிணி, மிருகசிரிஷம் 1, 2 என்ற இந்த முன்று நட்சத்திரத்தில் இருக்கலாம்.  அதாவது லக்கினம் ஏறிய நட்சத்திரம்.
                அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம் 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

                ரிஷபம் லக்கினம்  – கிருத்திகை 

                கிருத்திகை 2,3,4  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன், செவ்வாய்  தாக்கத்துடன் இருப்பார்.
                கிருத்திகை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் கொண்டவர்கள். ரிஷப கிருத்திகையில் பிறந்தவர்கள் குணநலன்கள் பார்த்தால் சாஸ்திரம் தெரிந்தவர்கள், மகிழ்ச்சியைத் தேடிச் செல்பவர்கள்,   தேவையற்ற சினம் கொண்டவர்கள், வெற்றியுடையவர்களை சினேகமாகக் கொண்டவர், நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்கள், நண்பர்கள் கூட்டம் உண்டு, ஒழுக்கம் கடைப்பிடிக்கத் தவறியவன், நேசமும் நட்பும் உள்ளவர்கள், சுதந்திரத்தை விருபதக்கவர், ஒருசிலர் தீமை செய்பவராகவும் மற்றும் மற்றவர்களை மதிக்காதவராகவும் இருப்பார்கள். படிப்பு குறைவாக இருக்கும், பொறுமையற்றவர், எதாவது ஒருவகை துக்கம் இருக்கும், நல்ல தோற்றம் உள்ளவர்கள், சட்டென கோபம் வந்துவிடும், நேர்மையான எதிரிகள் உண்டு, கர்வம் கொஞ்சம் இருக்கும். முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும், சகோதர உறவுகளில் சச்சரவு உடையவர்,  கல்வியில் தடங்கல் உடையவர். ற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், அரக்கக் குணம் கொண்டவன், கோபக்காரன், கொஞ்சம் பொய் பேசுவான் கவர்ச்சியானவன், ஒழுக்கம் குறைவு, பெண்களை கவர்பவன், அன்பு கொண்டவன், முன் யோசனையாளி, நியாவழக்கு தொடுப்பான், தாய்நாட்டை மறக்காதவர்கள், சுய சிந்தனையோடு அதிகம் உண்டு, அபார நினைவாற்றல் இருக்கும்

                ரிஷபம்  லக்கினம்  – ரோகிணி 

                ரோகிணி  நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார். சந்திரனுக்கு மிக பிடித்த நட்சத்திரம் என்று புராண கதைகள் சொல்கின்றன.

                இந்த நட்சத்திரம் விண்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சௌபாக்கியமும், சௌந்தர்யமும்,  முரட்டுத்தன்மை இருக்கும், சிலருக்கு சிறு வியாதி இருந்துகொண்டு இருக்கும், கவிதை கற்பனையில் இருந்துகொண்டு இருப்பார். சினிமா துறை என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று, தன்மானமிக்கவன், கருணை அமைதி மிக்கவன், ஒழுக்கமானவன், வாய்மை மிக்கவன், சாந்த சொரூபி, ஜீவநேயம் கொண்டவன், குருவின் ஆசிர்வாதமிக்கவன், இசையில் ஆர்வ மிக்கவன், சூட்சம மந்திரம் ஜெபிப்பவன், இலக்கிய ஆர்வம் குறைவு, தெளிவான ஆராய்ச்சி ஈடுபடுவான், எல்லாரிடமும் இதமாக பேசி நோக்கை அடைவான்.பிறருக்கு சொல்லிக்கொடுப்பதில் வல்லவர்கள். பெரிய பதவி நோக்கிச் செல்பவர்கள், பெண்களுக்குப் பிரியமானவராகவும், அறிவுரைகளைக் கேட்பார்கள், வருங்காலத்தை பற்றி யோசிப்பார், மெல்லிய குரலில் பேசுவார்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள், செல்வம் அதிகப்படுத்துவதில் ஆர்வம், பிள்ளைகள் மீது அதிக அன்பு கொண்டவர், பாராட்டு பெறுவார்கள், சுகபோக வாழ்க்கையை வாழபிடிக்கும், சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கும். 


                ரிஷபம்  லக்கினம்  –மிருகசிரிஷம் 1,2 பாதங்கள்   

                மிருக சிரிஷம் 1,2  நட்சத்திர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், செவ்வாய்தாக்கத்துடன் இருப்பார்.
                மானின் தலை போலத் தோற்றமளிப்பதால் மிருகசீரிசம் எனப் பெயர் பெற்றது. அதாவது ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். முதல் இரண்டு  பாதங்கள் ரிஷபத்திலும் மற்றவை மிதுனத்தில் இருக்கும். இது செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் இந்த லக்கினத்தில் துணிச்சல் அதிகம் இருக்கும்,  திடமான நம்பிக்கை அதைவிட அதிகம் இருக்கும், சுறுசுறுப்பானவர், செல்வமுடையவன், சுறுசுறுப்பானவர்கள், மரியாதையுடன் நடப்பவர்கள், தற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், சதைப்பற்றுமிக்கவன், அரக்கக் குணம் கொண்டவன், கோபக்காரன், கொஞ்சம் பொய் பேசுவான் கவர்ச்சியானவன், ஒழுக்கம் குறைவு, பெண்களை கவர்பவன், அன்பு கொண்டவன், முன் யோசனையாளி, நியாவழக்கு தொடுப்பான், தாய்நாட்டை மறக்காதவர்கள், சுய சிந்தனையோடு அதிகம் உண்டு, அபார நினைவாற்றல் இருக்கும், மகிழ்ச்சியானவர். முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும், சகோதர உறவுகளில் சச்சரவு உடையவர்,  கல்வியில் தடங்கல் உடையவர்.

                மந்திரம் 

                ரிஷப  லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய முருகன் துதியை மனதார சொல்லி வருவது நல்லது 
                                                                  பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
                பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
                பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
                பெருமான் என்னும் பேராளா!
                சேரா நிருதர் குல கலகா!
                சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
                தேவா ! தேவர் சிறைமீட்ட
                செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
                பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
                பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
                வா, வா, என்று உன்னைப் போற்றப்
                பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
                வாராது இருக்க வழக்கு உண்டோ !
                வடிவேல் முருகா ! வருகவே !
                வளரும் களபக் குரும்பை முலை
                வள்ளி கணவா ! வருகவே !

                 ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்