மிதுன லக்கினத்தின் பொது பலன்கள்




குருவும் சனியும் சேருமாயின் அவயோகமாகும்.

சந்திரன் துதியாதிபத்திய தோஷம் இருந்தாலும் மாரகம் கொடுக்க மாட்டான் என்றும் சொல்வர்.

குருவும், சனியும் தருமகருமாதிபதி ஆகையால் அவர்களும் யோகக்காரர் ஆவர்

மிதுனம் லக்கினம்- சுப சேர்க்கை

  • சூரியன்+புதன்
  • சூரியன்+சனி
  • சூரியன்+சுக்கிரன்
  • புதன்+சுக்கிரன்
  • புதன்+சனி
  • சுக்கிரன்+சனி

மிதுனம்  லக்கினம்-  தசைகள் 

  • மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.
  • மிதுன லக்கின சுபராக சுக்கிரனும்  அசுபராக குரு, செவ்வாய், சூரிய கிரகங்களும் மற்றும் சனி, சந்திரன் கொஞ்சம் குறைந்த அளவு நன்மை தருபவர், அதுதவிர இவருக்கு  அசுபராக  வருபவர் திசை நடக்கும் பொழுது மாரகம் நிகழும் என்று ஜாதக அலங்காரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது

பொது பலன்கள் 

  • இனிய வார்த்தை பேசுபவர் , கபடி, மைதுன பிரியர், வாழ்க்கை துணை (பொதுவாக ஆண்கள்  மனைவி)சொல் கேள்பவர், புகழை உடையவர் . கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உடையவர். 
  • மிதுன லக்கின ஜாதகர் குணங்கள் தனித்துப் பெற்றாலும் அவற்றோடு (லக்கினத்தோடு)சேர்ந்த கிரகங்கள் சுபத்துவ அதி வலுப்பெற்றால் அவர்களின் செயல்பாடு மற்றும் புகழ் நன்றாக வெளிப்படும்.
  • இராட்டையர் சின்னம்:  இரவு வானில் விண்மீன் கூட்டங்களில் உள்ள பொலிவான விண்மீன் கூட்டங்களில் மிதுனமும் ஒன்று. 
  • ரிஷப லக்கினகாரர்கள் பொதுவாக மிக அழகானவர்கள். அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்கள் செய்வார்கள், இளமையானவர்கள், பேச்சாளி, கணக்கில் ஆர்வ மிக்கவராகவும், அறிவு மிக்க சிறப்பான செயல் திறனாளி, வீடு, வாகனம், பணவரவு அதிகம் உண்டு அதற்கேற்ற செலவு, முயற்சி இருக்கும்.
  •  புகழ், அம்மாவிடம் அன்பு,  பல தொழில் செய்பவராகவும், சுறுசுறுப்பும் அதேநேரம் எடுத்த காரியத்தை முடிப்பார்கள்.
  • நுண்கலை வல்லுநர்கள், கதை ஆசிரியர்கள், சிற்பியாக, அதிகாரமிக்க வேலை அமையும்,  எதாவது ஒரு கலைகளில் வல்லுநராக இருப்பார்கள்.
  • உபய லக்கினகாரர்கள் உபய ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு மிகவும் நிதானமானவர்கள். மேலும் இது காற்று  ராசி ஆகியதால் கெட்டிக்கார தனமும் நல்ல குணமும் நிறைந்து இருக்கும். 
  • மாநிறமானவர்கள். நல்ல கம்பீரமான, எடுப்பான தோற்றமுடையவராகவர்கள் சூது நிறைந்தவர்கள்.  மற்றவர்களுக்கு உதவக்கூடிய  குணத்துடன் கவிதையுள்ளமும் நிறைந்தவர்கள். 
  • நல்ல உணவை, மிகவும் விரும்புகிறவர். ஞான ரீதியில் எதையும் அணூகும் மனப்போக்குடையவர். 
  • ஆரம்ப காலத்தில், உங்களுக்கு சில பிரச்சனைகள் அல்லது தொல்லைகள் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். அதாவது  32, 35 ஆம் வயதிலிருந்து, அதிருஷ்டவசமான ஒரு காலகட்டத்தில் செல்லும் யோகம் உண்டாகும்.
  • பல வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். மிகவும் சுறுசுறுப்பானவர்கள். பல புத்தகங்களையும் படிப்பதில் விருப்பம் கொண்டவர்கள்  புகழை  தேடி ஓயாமல் பாடுபவார்கள்.  நீண்ட உடல் உறுப்புக்கள் இருக்கும்.
  • ப்ளூயன்சா காய்ச்சல், மார்ச்சளி போன்ற நோய்கள் வாராமல் பார்த்து கொள்ளவது அவசியம். உணவில் கட்டுப்பாடு இருக்கும். இருந்தாலும் கட்டுபாட்டை கடைபிடிப்பது நல்லது.
  •  நல்ல, சிறப்பான உடல்வாகும் உறுதியான மனநிலையும் கொண்டவர்கள். நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் 
.

புலிபாணி ஜோதிடம்- பாடல் - 24

ரிஷப & மிதுன லக்கினம்

கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


பொருள்:

இப்பாடலில் ரிஷபம் மற்றும் மிதுனம் லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

“ரிஷபம் மற்றும் மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் உண்டு. ஆனால் குரு கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 வீடுகளில் இருந்தால்  நல்லதல்ல. அவரால் செல்வம் நாசம் அடையும். மேலும் அரசால் கெடுதலும், நோயும் உண்டாகும். ஆனால்  குருவும் சந்திரனும் திரிகோணமாகிய 1, 5, 9 இருந்தால் நன்மை நடக்கும்.“

 விளக்கம்:

அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாக கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குரு பகவான் கேந்திரத்தில் நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம், உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக


திருமண வாழ்க்கை

  • 7குடைய குருவும் நல்லவர் இல்லை. அது போல் உபய ராசி என்ற வகையில் குரு யோகமிள்ளதவரே. வாழ்க்கை துணை  அமைத்து கொள்ளும் பொது கவனம் தேவை. இல்லை என்றால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் 
  • வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ பக்தி , ஞானம் , ஒழுங்குபடுத்தப்பட்ட வீரம் , கட்டுப்படுத்தப்பட்ட காமம் என்று இருப்பார்கள். மேலும் எல்லாமே ஒழுங்கு முறைப்படிதான் இருக்க வேண்டும்என்ற எண்ணம் இருக்கும் . ஏனெனில் , தனுசு என்பது தெய்வீக நெருப்பு ராசி.
  • வாழ்கை துணையுடன் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வந்தாலும் , லக்ன 7 – ஆம் அதிபதிகள் சுப ராசி ஆதலால் பொறுத்துப்போய் விடுவர்.
  • திருமணத்திற்கு பிறகு தொழில் மேம்படும். சில பேருக்கு அப்புறம் தான் தொழிலே அமையும் 
  • காதல் திருமணம் செய்து கொள்ளும் லக்கினத்தில் மிதுனம் முதல் இடம் என்றால் மிகையாகாது.  
  • திருமணக் காலத்தில் எதனையாவது விட்டுக் கொடுப்பார். சமயச் சம்பிரதாயங்கள், சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுக் கொடுத்தே திருமணம் அமையும்

தொழில்

  • தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.
  • கூட்டுத் தொழிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தை பெற முடியும்.
  • இந்த லக்னக்காரர்கள் பொதுவாக வங்கி அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் ஆகிய துறைகளில் பணிபுரிவார்கள். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும் 
  • சூரியன் நன்றாக இருந்தால் மக்களுக்கு தொண்டு செய்ய தக்க மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் போன்ற பொறுப்பான பதவிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். 
  • சிறந்த அறிவாற்றல் கொண்டவராக, பள்ளி - கல்லூரிகளில் உயர்வான பொறுப்புகளில், பிறரை வழிநடத்தக் கூடிய, உயர்ந்த திறமை கொண்டவர்களாக விளங்குவர்.
  • இந்த லக்னகாரர்களுக்கு, குரு வலு குறைந்து, அதனுடன் சனி  அல்லது ராகு போன்ற தீய கோள்கள் சேர்க்கை பெற்றால், நிலையற்ற வருவாய் கொண்டவர்களாக வாழ நேரிடும்.
  • குரு, சனி  சுக்கிரனுடன் சேர்ந்து  இருக்கும் மிதுன லக்கினக்காரர்கள் , வண்டி வாங்கி விற்பது அல்லது போக்குவரத்து தொடர்புடைய தொழில் செய்வர்.  சிலர் கடல்கடந்த வெளிநாட்டு தொடர்பு ஏற்படுத்தி அதில் பெரும் செல்வம் ஈட்டுவர்.
  • குரு பகவான் செவ்வாய் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட் துறைகளில் அனுகூலங்கள் உண்டாகி சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பும் உண்டாகும். 
  • குரு சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றால் ஏஜென்ஸி, கமிஷன், உணவு வகைகள், ஜல தொடர்புடைய தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும்
  • குருவுடன் சந்திரன் இணைந்து உடன் புதன் அல்லது செவ்வாய் இருந்தால் கடல் சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, உணவகம் நடத்தும் வாய்ப்பு அமையும்.
  • பொடி வைத்து பேசுவதில் நிபுணர், சத்ருக்களை நேரடியாக எதிர்க்காமல் உறவாடி தந்திரமாக அழிப்பவர், ஜோதிட நிபுணர், கார்டூன், துணுக்கு எழுதுதல், ஸ்டெனோ கிராபர், ஆசிரியர், ஆடிட்டர், டெலிபோன், பத்திரிக்கை தொழில், தபால் துறை, சங்கீதம் முதலிய தொழில் செய்வார்.
  • தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கிரகங்கள்  

  • சூரியன் : 3ம்  வீட்டுக்கு உரியவர் எனபதால் சூரியன் சமம் ஆனவர். சூரியன் நன்றாக இருந்தால் அரசு உயர் பதவிகள் தருவார். ஆனாலும் இவர் யோகமில்லதவர் உங்களுக்கு என்பதும் உண்மை. 
  • சந்திரன் : 2ம் வீட்டுக்கு உரியவர். சந்திரன் சமம் நிலை அடைகிறார். இவர் மாராகதிபதி என்று சில நுல்களும், கொல்லான் என்று சில நுல்களும் சொல்கின்றான. ஆனாலும் அவர்களின் திசை, புத்தியில்  மாரகத்திற்கு ஒப்பான பாதகம் உண்டாக்கும் .
  • புதன் : இவர்  1 மற்றும் 4 க்கு உடையவர். மிக நல்லவர். மிகவும் நல்லதே செய்வார். இவர்களை “இரண்டு தாய்களிடத்தில் வளர்பவன்” என்று சில ஜோதிட நுல் சொல்கிறது. 
  • செவ்வாய்: 6, 12க்கு உடையவர். குறைந்த எண்ணிக்கையிலான சகோதர்களை பெற்று இருப்பார்கள். செவ்வாய் நல்லவர் இல்லை உங்களுக்கு.
  • குரு: இவர்  7 மற்றும் 10 க்கு உரியவர். குரு ரிஷபத்திற்கு நல்லவர் அல்ல. இவர் மாரகதிபதி ஆவார் 
  • சுக்கிரன்: சுக்கிரன் 5, 12க்கு உடையவர். எனவே நல்லைதியும் கெட்டதையும் கலந்தே தருவார். ஆனாலும் நல்லவரே. 
  • சனி: சனி 8, 9க்கு உடையவர். சனியும் தருமகருமாதிபதி ஆகையால் அவர்களும் யோகக்காரர் ஆவர்

தசா பலன்கள் - சூரியன் 

ரிமிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் சூரியன் சமம்.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
  • சூரியன் மிதுன லக்கினகாரர்க்கு யோகமில்லதவர். மேலும் 3க்கு உடையவர்.   
  • மிதுனம் ஜன்ம லக்னமாகி இதில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் தர்ம காரியங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் இவர்களுடைய கதவைத் தட்டும்.  கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும் எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள்.. 
  • தாய், தாய் சார்ந்த விஷயம், வீடு, வீடு சார்ந்த விஷயம் பிரச்சனை இருக்கும்   
  • பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். சூரியன் திசையின் முதல் பகுதியில் சிறப்பாக இருக்கும். 
  • இளைய சகோதர, குழந்தைகளால் வகையில் நன்மை   உண்டாகும். தொழிலில் partnership வகையில் பிரச்சனை உண்டாகலாம்  
  • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

 தசா பலன்கள் - சந்திரன் 

    சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்
    • மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன்க்கு சந்திரன் பகை என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • புதனுக்கு சந்திரன் பகை என்றாலும் சந்திரனுக்கு புதன் நட்பு ஆகும். மேலும் 2ம் வீட்டுக்குரியவர் ஆகையால் நன்மையை தருவார்.
    • தனஸ்தானாதிபதி என்பதால் இந்த திசை வரும் போது பணம் சேர்க்கை உண்டாகும். ஆனால் சந்திரன் வளர்பிறையாக இருத்தல் வேண்டும் 
    • இந்த திசை வரும் போது திருமணத்திற்கு எதிர்பார்த்தல் திருமணமும், குழந்தை பேறுக்கு எதிர்பார்த்தால் குழந்தை கிடைக்கும் 
    • பேச்சு சம்மந்தப்பட்ட தொழில் உதாரணமாக வக்கீல் உள்ளவர்கள் சிறப்பு அடைவார்கள்.  ஜல தொழில் செய்பவர்களுக்கும் நல்லது தான் இந்த திசை செய்யும் .
    • தாய், தாய் வழி சொந்தங்களால் லாபம் உண்டாகும். 
    • பயணத்தால் நன்மை தான். தொழில் சம்மந்தப்பட்ட் பயணம் என்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்
    • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

    தசா பலன்கள் -  செவ்வாய் 

      மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். செவ்வாய் பகை மேலும் செவ்வாய் 6, க்கு உடைவன் . செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
      • இது யோகமான திசை இல்லை. கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். இல்லை எனில் பல பிரச்னைகளை பார்க்க நேரிடும். 
      • முதல் திருமணம் முறிந்து 2வது திருமண செய்ய சூழ்நிலை உள்ளவர்களுக்கு 2வது திருமணம் கைக்கூடும் 
      • முத்த சகோதர சகோதிரியால் நன்மை உண்டு. எதிரிகள் அழிவார்கள் அல்லது அடங்குவார்கள் 
      • பயணங்களில் கவனம் தேவை. இரத்த காயங்கள் உண்டாகும் அல்லது உண்டாக்குவிர்கள் 
      • வீடு, வீடு சார்ந்த விஷயம் அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.
      • குடும்ப வாழ்க்கையுலும் கவனம் தேவை வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு வரும் வாய்ப்பு உண்டு. கோபம் குறைக்க விட்டால் பிரிவில் தான் முடியும் 
      • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
      தசா பலன்கள் -  புதன் 
        மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
        • புதன் ரிஷப லக்கினத்திற்கு 2, 5 ஆம் அதிபன் ஆகிய யோகாதிபதி ஆவார். 
        • தாய், தாய் வழியில் ஆதாயம். சொத்து சம்மந்த பட்ட விசயங்களும் ஆதாயமே. 
        • புதன் எந்த இடத்தில் இருந்தாலும் நல்லதே செய்வார். ஆனாலும் புதன் 4ம் வீட்டில் தனித்து இருந்தால்  கேந்திர ஆதிபத்திய தோஷம் உண்டாகும். புதன் 4ல் தனித்திருக்க கூடாது.
        • உடல் ஆரோக்கியம் மேம்படும். புகழ் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்விர்கள். சேமிப்பு அவசியம் என்பதை மறக்க வேண்டும்  
        • சகோதர வழியில் சில தொல்லைகள் , செலவுகள் உண்டாகும். தொழில் Partnership பிரச்சனைகள் தலை தலை தூக்கும்  
        • படிப்பு மேம்படும். அறிவால் செய்யக்கூடிய வேலை, படிப்பு  கிடைக்கும்.  வெளி நாட்டு படிப்பு, தொழில் அமைய வாய்ப்பு உண்டாகும் 
        • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

         தசா பலன்கள் -  குரு  

        மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதனுக்கு குரு பகை  என்ற நிலையில் இருக்கிறது. குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். . 
        • இவர்  7 மற்றும் 10 க்கு உரியவர். குரு ரிஷபத்திற்கு நல்லவர் அல்ல. இவர் மாரகதிபதி ஆவார்
        • தாய்க்கு உடல் கெடுதல், சகோதர வழியில் தொல்லை, குடும்பத்தில் பிரச்சனை என்று இருக்கும் 
        • தொழில் சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாக இருக்கும்வெளிநாட்டு வேலை விசயங்கள் அலைச்சல் இருந்தாலும் நன்மையாக இருக்கும்.
        • குழந்தைகளால் நன்மை உண்டு. உல்லாசத்தை மனம் நாடும். மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். இதனால் குடும்பத்தில் பிரச்சனை வராமல் பார்த்து கொள்ளவும் 
        • வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு வரும். எதிர்களின் பலம் கூடும் கவனம் தேவை.
        • தொழிலில் முன்னேற்றம் இருக்கும் ஆனாலும் தொழிலில் செலவு கூடும்.  உல்லாசத்தில் மனம் நாட்டம் இருக்கும் போது கவனம் இல்லை என்றால் தொழிலும் நஷ்டம் உண்டாகும் 
        • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

        தசா பலன்கள் - சுக்கிரன்  

          மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். சுக்கிரன் புதன் நட்பு. சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
          • சுக்கிரன் 5, 12 க்கு உடையவர். 5 க்கு உரியவர்.
          • 5 க்கு உடையவன் என்ற வகையில் புதனுக்கு நட்பு கிரகம் என்றா வகையில் இந்த திசை மிக நல்ல திசை தான் என்பதில் ஐயம் இல்லை. 
          • திருமண வயதில் வந்தால் திருமணமும், குழந்தைக்காக ஏங்கும் போது வந்தால் திருமணம் அல்லது குழந்தை பேறு கிடைக்கும் 
          • அனனவரிடமும் அன்பாக இருப்பிர்கள் 
          • சுக்கிரன் நன்றாக இருக்கும் பட்சத்தில் நல்லதே நடக்கும்.
          • 12குரியவர் என்ற வகையில் சுப செலவுகள் உண்டு. வீடு வாங்குதல், திருமணம், குழந்தை பேறு , வாகனம் வாங்குதல் ஆகியவற்றால் செலவு உண்டு.
          • 12குரியவர் என்ற வகையில் இந்த திசை முடிவதற்குள் ஒரு பெரிய உண்மை புரிய வைப்பார் 
          • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் - சனி 

            மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் சனி நட்பு. சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
            • மிதுன லக்னத்திற்கு சனிபகவான் எட்டு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி ஆவர். 
            • 9க்குடையர்வர் என்ற வகைகில் வயது ஏற்ப நல்ல பலன் தரும். செல்வம் பெருகும். குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும் 
            • தந்தையால் நன்மை, தந்தைக்கு நன்மை உண்டாகும் 
            • திடீர் என்று யோகம், அதிஷ்டம் உண்டாகும் வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்கும் அமைப்பு உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும்
            •  எட்டுக்கு  உரியவர் என்ற வகையில் உடலில் அக்கறை வேண்டும். ஆனாலும் கெடுதல் நடக்காது. 
            • சனி சம்மந்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு இந்த திசை நல்ல பலனே தரும். வேலை பளு இருந்தாலும் நல்லதே.
            • வெளிநாடு சம்மந்தப்பட்ட விசயங்களில் நல்லதே நடக்கும். பொதுவாக மிதுன ராசி அல்லது இலக்கின காரர்களுக்கு சனி திசை நல்லதே செய்யும்   
            • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  ராகு  

              மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • ராகு திசை மிக நல்ல திசை இவர்களுக்கு. இந்த திசை வரும் பொது இவர்கள் ஆசை பட்ட வாழ்க்கை அமையும் 
              • வெளி நாடு சம்மந்தப்பட்ட விசயங்கள் நல்லதே நடக்கும். வெளி நாடு செல்லும் யோகமும் உண்டாகும் . அங்கு தங்கி இருக்கும் சூழல் அமையும். 
              • உழைக்காமல் வருமானம் கிடைக்கும் கிடைக்கும். திடீர் அதிஷ்ட வாய்ப்பு கட்டாயம் உண்டு. 
              • மிதுன லக்கினத்திற்கு ராகு முழுமையான யோக கிரகம் ஆகும். ஏன் எனில் மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகிய திரிகோண ஸ்தானத்தில் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, ஸ்வாதி மற்றும் சதயம் நட்சத்திரம் முழுமையாக உள்ளது. மிதுன லக்கினத்திற்கு முழு யோகம் செய்யும் கிரகமாக ராகு வருகிறார்.
              •  மிதுன லக்கினகாரார்களுக்கு அவர் வீட்டின் அதிபதி போல் நல்லது செய்வார்.
              • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              தசா பலன்கள் -  கேது  

                மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                • முதல் 3 வருடங்கள் நல்லதே செய்வார். அடுத்து நல்லது நடக்கும்
                • இளைய சகோதரால் நன்மை அல்லது இளைய சகோதரக்கு நன்மை உண்டாகும். பயணங்களால் நன்மை உண்டு.
                • சிலருக்கு கரும செய்யும் அமைப்பு ஏற்படும். அதாவது இறப்பு போன்ற விசயங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.
                • குழந்தைகளால் பல சிரமங்களை சந்திக்க் நேரிடும்.
                • தொழிலில் நல்ல வாய்ப்பு, சூழல் உருவாகும். வேளையில் முன்னேற்றம் உண்டு.
                • கடன் வாங்கும் சூழல் உருவாகும். இல்லை என்றால் உடல் நலம் பாதிக்கும். 
                • உல்லாசத்தில் மனம் ஈடுபடும் அதனால் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் உண்டாகும். கெட்ட பழக்கம் அதிகரிக்கும் அல்லது புதிதாக உண்டாக வாய்ப்பு உண்டு கவனம் தேவை 
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                மிதுனம் லக்கினம்  – நட்சத்திரம் 

                மிதுனத்தில் உள்ள நட்சத்திரங்கள் மிருகசீரிஷம் 3, 4-ம் பாதங்களும், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தின் 1,2,3 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும்.
                அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம் 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

                மிதுனம் லக்கினம்  – மிருகசிரிஷம்  3,4 பாதங்கள்  

                மிருக சிரிஷம் 3,4  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சுக்கிரன், செவ்வாய்  தாக்கத்துடன் இருப்பார்.
                மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு செவ்வாயானவர் ஆதிக்கம் செலுத்துகிறார், இவற்றின் வடிவம் மானின் தலை கொண்டது. இந்த நட்சத்திரத்தில் பொதுவான குணநலன்கள் என்றால் சுறுசுறுப்பானவர், மன அழுத்தம் மிக்கவர், ஞாபக சக்தி உள்ளவர்கள், பிடிவாத குணம், எதாவது ஒரு துறையில் சிறப்பறிவு உடையவர்கள், உள்ளத்தில் பகையுணர்ச்சி உடையவர்கள், உள்ளுணர்வுகளைப் பதுக்கி வைப்பவர்கள் முக்கியமாக வெளியில் தெரியாத அளவு கோபம் இருக்கும், உள்ளங்கையில் வேல் போன்ற ஆயுத ரேகை உடையவர்கள், எண்ணியதை முடிப்பவர்கள், யாருக்கும் பயப்படாதவர்கள், கீழ்ப்படியாதவர்கள், சுய சிந்தனையாளர்கள், வசீகரமான தோற்றம் கொண்டவர்கள், பிறர் பொருள் மீது கொஞ்சம் ஆசை இருக்கும், தர்மவான், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், பிறருக்கு உபதேசம் செய்வார்கள்.

                மிதுனம் லக்கினம்  – திருவாதிரை

                திருவாதிரை   நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், ராகு   தாக்கத்துடன் இருப்பார்.
                திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு  மனித தலை, வைரம் வடிவம், கண்ணீர்த்துளி ஆகும். என் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். திருவாதிரையில் ராகுவின் ஆதிக்கம் உண்டு அதன்படி லக்கின புள்ளியின் பொதுவான குண நலன்கள் - உடல் பலமானவர்கள்,  முரட்டுப் பிடிவாதம், பண விஷயத்தில் சாதூர்யமானவர்கள், உண்மைக்குப் புறம்பானவர், உயரமானவர்கள், கண்டிப்பானவர், புத்தாடையில் அவ்வளவு நாட்டம் இருக்காது, தற்புகழ்ச்சியைப் பிடிக்கும், கலகம் மற்றும் ஆத்திரம் இருக்கும், எதிலும் அவசரமாக முடிவெடுப்பார்கள், ஏதாவது நோய் இருந்துகொண்டிருக்கும் முக்கியமாக மூட்டு வியாதி இருக்கும். பல்வேறு நட்புகள் உண்டு, பந்துகள் விரோதம் இருக்கும், சாடல் என்று யோசனை வந்துகொண்டேயிருக்கும், நீதி நேர்மை குறைவானவர்கள், எந்த வேலையும் செய்யும் திறன் கொண்டவர்கள், தனம் ஈட்டுவதற்காக நாட்டம் கொண்டவர்கள், ஆன்மீக வழிபாடு செய்வார்கள்.

                மிதுனம்  லக்கினம்  –புனர்பூசம்  1,2,3 பாதங்கள்   



                மந்திரம் 

                மிதுன  லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய பெருமாள் துதி மனதார சொல்லி வருவது நல்லது  

                                                    திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
                                                    அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
                                                    பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
                                                    என்னாழி வண்ணன்பால் இன்று !
                                                    தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
                                                    சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
                                                    திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
                                                    இரண்டுருவு மொன்றாய் இசைந்து !

                 ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்