கும்ப லக்கினத்தின் பொது பலன்கள்

 






v  செவ்வாயும், சுக்ரனும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள்.

v  குரு மாரகம் கொடுக்க மாட்டார். செவ்வாய், சந்திரனுடன் கூடி இருந்தால் மாரகம் கொடுப்பார். மாரகதிபதிகள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்

v  கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புத திசையும், சனி திசையும், சுக்கிர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்

v  சித்திரை மாதம், பஞ்சமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், வியாழக்கிழமை மாலை மரணம் ஏற்படலாம்.

v  சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை நல்லது அல்ல. மேலும்   சுக்கிரன், செவ்வாய், ராகு  மற்றும் சுக்கிரன், சூரியன், செவ்வாய்  சேர்க்கை இருந்தால் உடல் நலம் பாதிக்கும்

 பொது பலன்கள்

v  குடம் சின்னம்: கும்பம் என்பது ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீரினை குறிப்பதாகும். இதனை நீர் தாங்கி சின்னம் என்றும் சொல்வது உண்டு.

v   பெண்களிடத்தில் பிரியமுடையவன், அகன்ற வயிறுடையவன், தன்னையே புகழ்ந்து பேசுபவன் , பிறர் செய்யும் உதவியை உடனே மறப்பவன் , அற்ப கல்வியுடையவன்.

v  இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் பிறருடன் அன்பாகவும்,பெருந்தன்மையுடனும் பழகுவார்கள். நம்பிக்கை மற்றும் நட்புக்கு பாத்திரமானவர்கள். அதிக நினைவாற்றல் உள்ளவர்கள். உள்ளத்தில் தோன்றிதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவார்கள். சிலர் குடும்ப பொறுப்பை சிறு வயதிலே ஏற்பார்கள். வாழ்க்கை வசதி நன்கு அமையும். இவர்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.

v  பழைய சம்பிரதாயங்களில் ஆர்வம் காட்டாது சமூகசீர்திருத்த கொள்கையில் நாட்டம் கொண்டவர்கள். இவர்கள் எதையும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்து விளக்கம் காண்பவர்கள். எதையும் ஆழ்ந்து நோக்கும் தன்மையும் தீர ஆலோசித்து செயல்படும் தன்மை உண்டு. கும்ப லக்னத்தில் தோன்றியவர்கள் நியாயம் அநியாயம் இவற்றைத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துச் சொல்வார்கள்.

v  வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை இவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். பெண்களுக்கு கும்ப லக்னம் உகந்தது. இந்த லக்னத்தில் பிறந்த பெண் ஒருவருக்கு வாழ்க்கை துணைவியாக கிடைக்க பெற்றால் வாழ்வு சிறக்கும்.

v  எலக்டிரிகல் என்ஜினீயரிங், மருத்துவம், கணிதம், அன்னிய பாஷைகள் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகளாக விளங்குவர்

v  இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள். கல்வியில் தேர்ச்சி இல்லாதவர்கள். நன்றி மறப்பவர்கள், பழி பாவத்திற்கு அஞ்சாத குணம் உடையவர்கள். சிவந்த கண்களையுடையவர்கள்.

v  நேர்மை, ஒழுக்கம், நற்குணம், அறிவுத்திறன், வாக்கு வன்மை இவை உள்ளவர். சிற்றின்ப இச்சையும் அதிகம் உள்ளவர்.

v  பல கஷ்டங்கள் இருந்தாலும் அச்சமின்றி செயல்படுவார்கள் சமயோசிதமாக செயல்படக் கூடியவார்கள். புத்திர, மித்திரர் மேல் பாசம் வைப்பவர். எல்லாரையும் பகைத்துக் கொள்வதால் வேண்டாதவர்களே அதிகம் இருப்பர். கலை, இலக்கியம், நாட்டியப் பயிற்சி, சிற்பக் கலைகளில் தேர்ச்சி பெறுவார். மனித இனத்திற்குச் சேவை செய்யும் மனப்பான்மையும் உண்டு.

v  இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதி வழங்குவதில் சமர்த்தர். இதனால், நீதிபதி போன்ற பதவிகளையும் வகிப்பார். எழுத்துத் தொழில், வேதாந்தம், தத்துவம், ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு உண்டு. விஞ்ஞானத் துறைகளிலும் ஈடுபாடு உண்டு.

v  தியானம், யோகம், ஆசனம், ஜபம், பூஜை, பிராணயாமம் இவற்றில் பற்று அதிகம். மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் பிறருக்கு உதவி செய்வார்.

v  வலுவான  உடற்கட்டையுடையவார்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவார்கள். பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விருப்பம் அதிகம்  அதன் விளைவாய் அவப் பெயரும் ஏற்படு வாய்ப்பு உண்டு.

v  வாழ்வின் பிற்பகுதியில் தான் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அந்த சமயத்தில் செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும்.

திருமண வாழ்க்கை

 

v  கும்ப லக்கினத்தில் பிறந்தவருக்கு இல்லறம் இவர்களுக்கு பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை. விசித்திரமான ஜோடி பொருத்தமற்ற திருமணமே அமையலாம்.

v  இவர்களின் 7-ம் வீடு சிம்மம். அதிபதி சூரியன். இவர்களின் வாழ்க்கைத் துணைவர் மிக கம்பீரமானவராக கோபமுடையவராக யாருக்கும் அஞ்சாதவராக தான் எனும் எண்ணம் கொண்டவராக இருப்பார். மேலும் சிம்ம ராசி வறண்ட ராசியாகும எனவே வாழ்வில் போதிய திருப்தி அமையாது.

v  கும்ப லக்ன ஜாதகரை அவரின் வாழ்க்கைத் துணைவர் அடக்கி ஆள்வார் . கும்ப லக்ன 7 – ஆம் அதிபதி உச்சமானால் சொல்ல முடியாத வீரத்தோடும் புகழோடும் செல்வாக்கோடும் இருப்பார். அவரே நீசமாகிவிட்டால் அதிர்ஷ்டம் இல்லாதவராகவும் , திறமை இல்லாதவராகவும் அமைந்துவிடுவார் .

v  பொதுவாக தம்பதியர்க்கு சினிமா, நாடகம், நாட்டியம் முதலிய கலைகளில் ஆர்வம் அமையும். கும்ப லக்கினகாரர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் மனைவி  நற்குணங்களும், பெருந்தன்மையும் உடையவராகக் கணவனைக் கவர்வார்கள்.

v  இவர்களுடைய வாழ்க்கைத் துணை சற்று உயரமாகவும், எடுத்த முடிவுகளில் மாறாதவராகவும், தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்லக்கூடிய அளவிற்கு தங்களை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.

v  தான் எந்த அளவு படிப்பிலும் அறிவிலும் உயர்ந்தவராக வேண்டும் என்று எண்ணுகிறாரோ அந்த அளவு தன் வாழ்க்கைத் துணையும் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்

தொழில்

 

v  செவ்வாய் ஆட்சி, உச்சம், திரிகோணம் போன்ற அமைப்புக்களில் இருந்து குருவின் பார்வையும், சூரியனின் அருளும் இருந்தால் கூட்டுத் தொழில், கான்ட்ராக்ட், ஏஜென்சி, கட்டிட தொழில்களில் நல்ல உயர் உச்ச நிலையை தொடலாம்.

v  கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள்  வேலையின்றி சும்மா உட்கார்ந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

v  எலக்டிரிகல் என்ஜினீயரிங், மருத்துவம், கணிதம், அன்னிய பாஷைகள் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகளாக விளங்குவர். அத்தகை தொழில் ஆர்வம் இருக்கும்.

v  தைரியஸ்தானமான 3ஆம் இடத்திற்கும், ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்என்பதால்  தைரியம், வெற்றி, சகோதர அனுகூலம், பெரிய பதவி, ராணுவம், போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றில் உத்தி யோகம், லக்ஷ்மிகடாக்ஷம் ஆகிய சுப பலன்களைக் கொடுப்பார்.

v  அரசு அலுவலகம் காவல், ராணுவம், மருத்துவம். தொழிற்சாலை, தீயணைப்பு படை,கட்டிடத்தொழில் பொறியியல்துறை. வங்கி,தபால், ஆகிய துறைகளில் உத்தியோகம் அமையலாம்

v  கும்ப லக்கினக்காரர்கள் பொதுவாக மக்களே ஆட்சி செலுத்தக்கூடிய துறைகளான காவல்துறை, பாதுகாப்புத்துறை போன்றவற்றில் உயர் பதவிகள் வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும்

v  செவ்வாய் வலுவாக அமைந்து, சூரியனுடன் சேர்ந்து நல்ல கிரகங்களின் பார்வை பெற்று இருந்தால் உயர் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகள் வகிப்பார்கள். மேலும் இவர் 3 -ல் ஆட்சியானாலூம் 10-ல் ஆட்சியானாலும் நல்ல உத்தியோகம் கிட்டும்.

v  புது புது ஐடியாக்களை வெளிப்படுத்துவதுடன், எதிர்கால தேவைக்கேற்றவாறு செயல்படுவதில் இவர்கள் வல்லவர்கள்.ஒரே தொழிலில் இல்லாமல் பல வேலைகளில் ஈடுபட விரும்புபவர்கள். எந்த வேலை செய்தாலும் அதில் புதிய நுணுக்கங்களை கண்டறிவதன் மூலம் இவர்களுக்கு புகழ் உண்டாகும்.

v  செவ்வாய் வலுக்க கட்டிடப்பொருள், தீப்பெட்டி, வீட்டுமனை,மண்ணெண்ணெய், மின் தளவாடங்கள், தங்கநகைம் மற்றும் பவழம் ஆகியவற்றின் வியாபாரம்  செய்து விருத்தி அடைவார்கள்

v  செவ்வாய், சூரியன், குரு, சந்திரன் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சமுதாயத்தில் மற்றவரால் மதிக்கப்படக்கூடிய அளவில் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.

v  செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று உடன் சந்திரன் ராகுவும் அமையப் பெற்றால் மருத்துவத்துறையில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

v  செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறந்த பொறியாளராகும் யோகம், கம்ப்யூட்டர் துறைகளில் சாதனை செய்யக்கூடிய திறன் உண்டாகும்.

v  10ல் ராகு , சனி சேர்ந்து இருந்து நல்ல கிரக பார்வை இல்லை என்றால்  சட்டத்திற்கு எதிரான தொழில்களில் ஈடுபடுவார்கள்.

v  செவ்வாய், ராகு, கேது  சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், செவ்வாய் பலமிழந்திருந்தாலும், சனி பார்வை 10ம் வீட்டிற்கு இருந்தாலும் வாழ்வில் ஒரு நிலையான தொழில் இல்லாமல் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும்

கிரகங்கள்

Ø  சூரியன் : 7க்குடையவர் சனிக்குத் தந்தை என்றாலும் இருவரும் பகைவர்கள் ஆனாலும் கேந்திராதிபதியான இவர் இந்த லக்னத்திற்குச் சுபர் என்பதே பெரும்பான்மையான கருத்து. மேலும் இவர்களுக்கு சூரியன் வலுப்பது நல்லது.

Ø  சந்திரன் : ரண, ருண, ரோக, சத்துருஸ்தானமான 6ஆம் இடத்துக்குடைய சந்திரன் பாபியாகிறார். இவர் வலுத்தால் ஆஸ்துமா, மார்பில் சளி, வயிற்றுவலி அப்பண்டிசிடிஸ், சைனஸ் போன்ற வியாதிகள் தொந்திரவு கொடுக்கும். இவர் 10-ல் நீசம் பெறுவது ஒரு விதத்தில் நல்லதே. இவர் லக்னாதிபதி சனியுடன் பரிவர்த்தனையாவது நல்லது என்ற கருத்தும் உள்ளது

Ø  புதன் : இவர் 5 மற்றும் 8 க்கு உடையவர். யோககாரர். ஆனால் புதனு ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண ஸ்தானமாக அமைவதால் அசுப ஆதிபத்தியமே வலுப் பெறுகிறது. ஆகையால் புதன் அந்த ஜாதகருக்கு பாபி என்பதே பல ல ஜோதிடரின் கருத்து ஆகும். பொதுவில் இவர் சுபர்களுடைய சம்பந்தம் பெறுவது நல்லது.

Ø  குரு: குரு 2, 11 க்கு உரியவர். தனம், லாபம் ஆகிய இரண்டு முக்கிய இடங்களுக்குக் குரு அதிபதியாகிறார். இவரே தனகாரகராவதால் இவரின் முக்கியத்துவம் கூடுகிறது. ஆனாலும் இவரைச் சுபர் என்றோ யோகாதிபதி என்றோசொல்ல முடியாது. குரு தனித்து இருந்தால் நன்மையை செய்ய முடியாது. ஆனால் இவருடன் சேர்ந்தக் கிரகத்தின் காரக பலனையும், இவர் பார்க்கும் பாவத்தையும் விருத்தி செய்வார்

Ø  செவ்வாய்: தைரியஸ்தானமான 3ஆம் இடத்திற்கும், ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் சுபராகவே சொல்லப்பட்டுள்ளது.

Ø  சுக்கிரன்: கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திற்கும் திரினேஸ்தானமான 9 ஆம் இடத்திற்கும் அதிபதியாவதால் சுக்கிரன் சிறப்பு விதிப்படி சிறந்த ராஜ யோககாரகராகிறார்.  கேந்திராதிபத்தியமும் கோனாதிபத்தியமும் ஒரே கிரகத்திற்கு ஏற்பட்டால் அந்த கிரகம் பிரபல ராஜயோகத்தைத் தரும். சுக்கிரன் வலுத்தால் நல்லது.

Ø  சனி: லக்னம்,விரயம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் சொந்தமான சனி சுபரே. காரணம் லக்னம் மூல திரிகோணஸ்தானமாக அமைவதே. இவர் வலுத்தால் தேகசுகம், கவுரவம், பெயர், புகழ், வருமானம் ஆகியவை ஏற்றம் பெறும், ஆயுள் விருத்தியடையும். இவர் கெடக்கூடாது

கும்பம்   லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி முதல் 2 பாதங்கள.

இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும்.

அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்

கும்பம் லக்கினம் - அவிட்டம் 3, 4 பாதங்கள்

அவிட்ட  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  செவ்வாய், சனி தாக்கத்துடன் இருப்பார்.

அவிட்டத்தின்   அதிபதி செவ்வாய் ஆவார். நல்ல  தோற்றத்துடனும், திடமனதுடன், கோப குணங்களுடன், செல்வமும், செல்வாக்கும் பிறரின்  வழிகாட்டுதலின் உதவியால் வருமானம் பெறுவார்கள். இவர்கள் காரியவாதிகள். இவர்கள்  புத்தி சாதுர்யத்தாலே அல்லது சூழ்ச்சியாலோ தனது காரியத்தில் வெற்றி பெறுவார்கள். நல்ல ஆடைகளை  அணிவார்கள். தனது குழ்ந்த்தையிடன் அன்பாக இருப்பார்கள். படிப்பில் ஆர்வம் இல்லை என்றாலும் பட்டம் பெறும் சாமர்த்தியசாலிகள்.

கும்பம் லக்கினம் சதயம்

சதய  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் ராகு, சனி  தாக்கத்துடன் இருப்பார்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.மற்றவர்களுக்கு உதவி செய்யத் தயங்கமாட்டீர்கள். நட்புக்கு மரியாதை தருவார்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை நீங்கள் நாசூக்காகச் சுட்டிக் காட்டித் திருத்துவார்கள்.படிப்பை விட விளையாட்டுகளில்தாம் ஆர்வம். சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் நலனுக்காகப் போராடுபவர்களாக இருப்பார்கள். குழந்தைப் பருவத்தில் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். மற்றவர்களை நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்க மாட்டார்கள். கடினமான காரியங்களையும் சவாலாக ஏற்று செய்து முடிப்பார்கள்

 

கும்பம் லக்கினம் - பூரட்டாதி  1, 2 பாதங்கள்

பூரட்டாதி  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு,  சனி  தாக்கத்தில்  இருப்பார்.

பூரட்டாதிநட்சத்திரத்தின் அதிபதி குரு ஆவார். இரக்க சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இயற்கையெழிலை ரசிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். நவீன ரக ஆடைகளையும் நகைகளையும் அணிவதில் விருப்பம் கொண்டிருப்பார்கள். எல்லோருடனும் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பார்கள். படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நட்புக்கு முக்கியத்துவம் தருவ ர்கள். வாழ்க்கைத்துணைக்குப் பூரண சுதந்திரம் கொடுப்பார்கள். அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டடார்கள். மற்றவர்கள் போற்றும்படி உயரிய பண்புகளைப் பெற்றிருப்பார்கள். பெற்றோர்களிடமும் உடன்பிறந்தவர்களிடமும் அன்பாக நடத்துவார்கள். உண்மையை நிலைநாட்ட போராடுவார்கள்.வருமானம் வரக்கூடிய தொழிலை சரியாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்

 

கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய சிவன் துதி மனதார சொல்லி வருவது நல்லது.

ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி

தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி

சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும்மலை போற்றி !

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நிழலே !

ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.