விருச்சிக லக்கினத்தின் பொது பலன்கள்

 




    • சில நூல்கள் சூரியன் , சந்திரன், சனி கூடியிருந்தால் நல்ல யோகம் சொல்கிறது.
    • செவ்வாய், புதன், சுக்கிரன் மாரகாதிபர்கள்.  குருவும், சனியும் புதனும் கொல்ல  மாட்டார்கள் என்று சில நுல்கள் சொல்கிறது.  மாரக ஸ்தானத்தில் பாவிகள் இருந்தால் கஷ்ட கண்டம் ஏற்படும்
    • விருச்சிக லக்கினத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள்
    • புதன் மற்றும் குருவின் சேர்க்கை அல்லது  பார்வை, புதன் நட்சத்திரத்தில் குரு இருப்பது அல்லது குரு நட்சத்திரத்தில் புதன் இருப்பது நல்லது.
    • புதன் வீட்டில் குரு இருப்பது  அல்லது குரு வீட்டில் புதன் இருப்பது நல்லது.
    • புதனுடன் ராகுவோ கேதுவோ இருப்பது அல்லது குருவுடன் ராகுவோ கேதுவோ இருப்பது நல்லது இல்லை 
    • புதனுக்கு அடுத்த வீட்டில் ராகுவோ கேதுவோ இருப்பது அல்லது குருவுக்கு அடுத்து ராகுவோ கேதுவோ இருப்பது நல்லது இல்லை 
    • சுக்கிரன் 3, 8 ஆம் பாவங்களில் அதிக நற்பலன் தருவதில்லை.
    • ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிக்கிழமை மாலை வேளையில் மரணமடைவார் என்று நூல்கள் சொல்கின்றன 

பொது பலன்கள் 

    • புத்திமான் , வஞ்சகன் , தனவான் , எடுத்திட காரியத்தை முடிப்பவன் , மனைவி மீது பிரியமுள்ளவன் , வரையற்ற விஷப்பிரியன், முன்கோபமுடையவன்
    • செவ்வாயின் அதிபதி பெற்ற விருச்சிக இலக்கினகாரர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராய் இருப்பார்கள்.
    • இவர்களுக்கு முன் கோபம் என்பது உடன் பிறந்ததாகும். எதையும் எடுத்த எடுப்பில் முடிக்க நினைப்பார்கள். அவசரகுணம் அதிகம் இருக்கும். எல்லாவற்றையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற இருப்பார்கள். பொறுமை என்பது இவர்களுக்கு மிகவும் குறைவு.
    • தேள் சின்னம்: இந்த லக்கினகாரர்கள் கொஞ்சம் தேள் போல் வார்த்தைகளால் கொட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது.  அவர்களுக்கு வேண்டியவர்க்காக எதையும் செய்வார்கள் 
    • விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் சுயமரியாதை மிகவும் முக்கியம் என நினைப்பவர்கள். இவர்கள் தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். யாருக்காவது இவர்கள் மூலம் காரியம் ஆகவேண்டும் என்றால் இவர்களை புகழ்ந்தால் போதும், காரியம் தன்னால் முடியும்
    • இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. அப்படியே யாரவது ஏமாற்றினாலும் அவர்களை நேரம் கிடைக்கும் போது பழிவாங்குவார்கள். பிறரை கேலியும் கிண்டலும் செய்வதில் வல்லவர்கள். 
    • எதிர்கள் அதிகமாக இருக்கும். எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள். சில சமயங்களில் இனம் புரியாத மனக் கவலைகளும் பதட்டமும் வந்து போகும்
    • இவர்கள் தங்களுடைய கடுமையான உழைப்பு, அறிவாற்றல், முயற்சிகளில், முன்னேற்றம் அடைவார்கள்.
    • எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் பெரியவர்களிடமும் - நண்பர்களிடமும் - உறவினர்களிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கக் கூடிய திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.
    • இது ஒரு ஸ்திர ராசியாகும். இவர்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், தீர்க்கமான கண்களும் இருக்கும்.
    • சுய சம்பாத்தியத்தில் விருப்பம் உள்ளவர்கள். இவர்களது வாழ்கையில் சுலபமான விஷயங்கள் கூட மிகுந்த போராட்டத்திற்கு பிறகே நடக்கும். பெரும்பாலும் இந்த லக்கினகாரர்களுக்கு தந்தையின் ஆதரவு கிடைப்பதில்லை.
    • கொண்ட குறிக்கோளை அடையும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும், செய்யும் தொழிலில் முன்னேறுவார்கள்.
    • விருச்சிக லக்னதில் பிறந்தவர் ஆண்களாக அல்லது பெண்களாக இருந்தாலும்  பெண்களின் மீது அன்பு, மரியாதை  வைத்திருப்பார்.
    • பெற்றோரிடம் பாசம் மிக்கவர். வாழ்க்கை துணையிடம் அன்பு, காதலுடையவர். நன்றாகப் பேச வல்லவர். இவர் பேச்சுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் மதிப்பு இருக்கும்.
    • எல்லாவற்றிற்கும் வாக்குவாதம் செய்பவர். குரூர சுபாவம் உள்ளவர். விரும்பாத பிறருடன் பகைமை பாராட்டுவார். எதிலும் அளவுக்கு மீறிய ஆசையுள்ளவர்

புலிபாணி ஜோதிடம்- பாடல் - 28

துலாம் லக்கினம்

தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற

செழுமதியும் கோணத்தில் சேரநன்று

அறிவித்தேன் அகம்பொருளும் அடிமை செம்பொன்

அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வன்

அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா

மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்

தெரிவித்தேன் போகருட கடாக்ஷத்தாலே

தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே


பொருள்:

இப்பாடலில் விருச்சிக லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

“விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்கள் சந்திரன் திரிகோண ஸ்தானங்களில் (5, 9) இருந்தால் மிக நல்ல பலனை தருவார். அதற்கு மாறாக கேந்திரத்தில் இருந்தால் நேர் மறையான பலனை தருவார். என்று எல்லா வல்ல போகரின் அருளால் கூறுகிறார் “

 விளக்கம்:

தேள் சின்னம் கொண்ட விருச்சிக லக்கினத்தில் பிறந்தோனுக்கு நன்மை செய்யத்தக்க சந்திர பகவான் திரிகோணத்தில் அமைவது நற்பலன்களை வாரி வழங்கும். இதனை உனக்கு நன்கு அறிவுறுத்துகிறேன். நல்ல வீடு அமைதலும் தனலாபம் பல்கிப் பெருகுதலும், அடிமைகள் வாய்த்தலும் சீரிய பொன்னாபரண சேர்க்கையும் அவனுக்குக் கிடைத்து இந்த பூமியில் வெகு புகழுடன் வாழ்வான். ஆனால் கேந்திர ஸ்தானத்தில் அவன் வீற்றிருப்பின் இதற்கு நேர்மாறான பலன்களை நீ கூறவும். இதையும் என் குருவான போகரது கடாட்சத்தாலேயே நான் குறித்துச் சொல்கிறேன். நன்றாக ஆய்ந்தறிந்து என் நூலின் சிறப்பினை உணர்ந்து கொள்க.

குறிப்பு:


சூரியன், சந்திரன், சனி கூடியிருந்தால் நல்ல யோகம் என்று சொல்கிறது.

திருமண வாழ்க்கை

  • விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்கக்கூடிய வாழ்க்கைத் துணை அமைத்து கொள்ளவார்கள்.  
  • முடிந்தவரை விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய வாழ்க்கைத் துணை அமையும். இவர்களும் வாழ்க்கைத்துணையை எங்குமே விட்டுக்கொடுக்காமல் நேசிப்பபார்கள் 
  • பொருளாதாரத்தில் மிகப்பெரிய நல்ல லாபம் என்பது திருமணத்திற்குப் பிறகு ஏற்படும்
  • விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  7ம் வீட்டு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இவர்களுக்கு அமையும் துணை அதிக செலவினை செய்யக் கூடியவராகவும் ஆடம்பரமாக வாழக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும் விட்டு கொடுத்து போவர்கள் 
  • மகிழ்வாகத் திருமண வாழ்வு அமையும். சுக்கிரன் கெட்டுவிட்டால், மகிழ்வு பாதிக்கப்படும். வாழ்க்கை கசக்கும்.
  • இரண்டாமிடமான, தனுசு பாபக் கிரகங்களைப் பெற்றிருந்தால் குடும்ப நன்மை இருக்காது. சுப கிரகமானால், குடும்பம் வளர்ச்சி அடையும். சுப கிரகமானால் வாழ்க்கை துணையிடம் எப்பொழுதும், பண நடமாட்டம் இருக்கும்.
  • சுக்கிரனை, குரு அல்லது புதன் பார்த்தால், வாழ்க்கை துணை  அழகும் சொத்தும் மிக்க  நாகரிக உடை உடுத்துபவராக  இருப்பார்கள் 
  • விருச்சிக இலக்கின கார்கள் ஆண்ணாக  இருக்கும் பட்சத்தில் சுக்கிரன், சனி , ராகு, கேது , செவ்வாய் முபகை நீச்சமடைந்தால்  மனைவி வீட்டு வேலைகளை கவனிக்காதவராகவும் , பொறுப்பற்றாகவும் இருப்பார். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் கணவன் வேலைக்கு கூட போகதவராக இருப்பர்கள் 

தொழில்

  • 7க்கு உரிய சுக்கிரன் அருள் காரணமாக கூட்டுத் தொழில் கை கொடுக்கும். கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்.
  • இந்த லக்கினகாரர்கள்  புதிதாக கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். மருத்துவம், மின்சார பொருட்கள் விற்பனை, மின்சாரம் தொடர்பான வேலை, ரசாயனம் தொடர்பான வேலைகள் செய்வது உகந்தது. வெளிநாட்டு வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதியில் இவர்களுக்கு நிச்சயமாக சிறப்பான லாபம் கிடைக்கும்.
  •  சூரியன்  செவ்வாயுடன் சேர்க்கை பெற்று வலுப்பெற்றால், ஆளுமை திறன் பெருமளவில் கொண்டவராக, பிறரை ஆட்சி செய்பவராக, நிலம் தொடர்பான தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவராக ஜாதகரின் வருவாய் ஈட்டும் அமைப்பு அமையும்.
  • சூரியன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று காரி (சனி), ஆட்சியில் உயர்வு நிலை பெற்றால், அரசியலில் வெற்றியாளராக ஜாதகர் வலம் வருவார்..
  • சூரியன் அதன் பகை கோள்களான சனி  அல்லது ராகு ஆகியவற்றுடன் சேர்க்கை பெற்றால், ஜாதகர் சட்டத்திற்கு எதிரான தொழில்களை செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டும் கீழ்த்தரமான நிலை ஏற்படும்.
  • சனி அல்லது ராகு ஆகியவற்றுடன் சூரியன் 8 அல்லது 12 ஆகிய மறைவிடங்களில் அமைந்தால், ஜாதகர் நிலையற்ற வருவாயுடன் வாழ்க்கையை நடத்தும் நிலை ஏற்படும்.
  • புதுப்புது யோசனைகள் வந்தபடி இருக்கும். ஒரேமாதிரியான விஷயங்களை திரும்பத் திரும்பச் செய்வது பிடிக்காது
  • சிலர்  கல்வி நிறுவனங்களை வைத்து நடத்துவார்கள். கல்வியில் ஆர்வம் அதிகம் 
  • இந்த இலக்கின காரர்கள் ஜாதகத்தில் சூரியனுடன் குரு நல்லபடி இருக்கும் பட்சத்தில் அமைச்சர், காவல்துறை அதிகாரி, பேராசிரியர், வங்கி மேலாளர் என்று சிறிய வயதிலேயே பெரிய பதவிகளில் அமர்வீர்கள்
  • "தான்  உண்டு தன் வேலையுண்டு’ என்று அலுவலகத்தில் ஏதேனும் வேலையைச் செய்தபடி இருப்பார்கள். எதையும் படைப்புத்திறனோடும், வித்தியாசமாகவும் செய்வார்கள்.
  • எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் முக்கியமான முதன்மைப் பதவியிலும், நிர்வாகத்திலும்தான் ஈடுபாடு காட்டுவார்கள். உயர்ந்த பதவிகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்கள்.
  • நாட்டின் நலத்திட்டங்கள் அனைத்திலும் பங்கு கொள்ள விரும்புவார்கள். குறைந்தபட்சமாக அதிகார மையத்திற்கு அருகிலாவது இருப்பார்கள்.

கிரகங்கள்  

சூரியன் :   10ம் வீட்டுக்கு உரியவர். யோககாரர். லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் மிகவும் செல்வச் செழிப்பான அல்லது பாரம்பரியமான பெயர் சொல்லக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்

சந்திரன் : 9 ம் வீட்டுக்கு உரியவர். மிகவும் யோககாரர். பிறந்ததிலிருந்தே தந்தையின் வளர்ச்சி உயரும். நீடித்த, நிலைத்த செல்வத்திற்கான வழி பிறக்கும். அதே சந்திரன் பாதகாதிபதியாக வருவதால், சில விஷயங்களில் தந்தையோடு முரண்படுவார்கள்.

செவ்வாய்:  மேஷ லக்கினாதிபதி மற்றும் அஷ்டமதிபதியும் ஆவார். விருச்சிக லக்னத்திற்கு லக்னத்தில் அமர்ந்து செவ்வாய் ருசக யோகத்தைத் தருவார். 
புதன் : இவர்  11 மற்றும் 8 க்கு உடையவர். 11க்கு உடையவராயினும் யோகமில்லதவர். மராகதிபதியும் ஆவார். அவர் தன் தசையில் மாரகம் ஒப்பான கண்டம் தரவார். 

குரு: இவர் 2 மற்றும் 5க்கு உரியவர். தன காரகன் குருவின் தன பஞ்சம ஸ்தானாதி பதியாக வருவதால் குருவின் பார்வை பலம் தொழில் யோகத்தை தரும். குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார்.

சுக்கிரன்: இந்த லக்னக்காரர்களுக்கு சப்தமாதிபதியாகவும் விரயாதிபதியாகவும் இருக்கிறார். சப்தமாதிபதியாகி, எடுத்த எல்லா காரியங்களிலும் வெற்றியைத் தருவார். ஆனால், கடைசிக் காலத்தில் எதுவும் கையில் இருக்காது. சுக்கிரன் 3, 8 ஆம் பாவங்களில் அதிக நற்பலன் தருவதில்லை.

சனி: இவர் 3  மற்றும் 4 க்கு உடையவர். செவ்வாய்க்கு எதிரி அல்ல. விருச்சிக லக்னத்திற்கு சனி நட்பும், எதிர்ப்பும் கலந்த சமத் தன்மை உடையவராகவே இருப்பார்.  


விருச்சிகம்   லக்கினம்  – நட்சத்திரம் 


விருச்சிக  லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது விருச்சிக  லக்கின பலன்கள்  பார்ப்போம்.
இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்


விருச்சிகம்  லக்கினம்   – விசாகம் 4 

விசாகம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு, செவ்வாய் தாக்கத்துடன் இருப்பார்.

விசாகத்தின்   அதிபதி குரு ஆவார். அனைவரிடமும் அன்பும் கருணையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். மன உறுதி மிக்கவர்களாக இருப்பார்கள். ஆழ்ந்த சிந்தனையும், அந்தச் சிந்தனையைச் செயல்படுத்தும் ஆற்றலும்கொண்டவர்களாக இருப்பார்கள்.  பழங்காலப் பொருள்களைச் சேகரித்து பொக்கிஷமாக பாதுகாப்பதில் விருப்பம்கொண்டிருப்பார்கள். `நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்று சொல்லும் வகையில் அழகும் பண்புகளும்கொண்ட வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். 

விருச்சிகம்  லக்கினம் – அனுஷம்   

அனுஷம்    நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சனி, செவ்வாய் தாக்கத்துடன் இருப்பார்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி ஆவார். நெற்றிக்கண் திறப்பினும் குற்றத்தைச் சுட்டிக்காட்டத் தவறமாட்டார்கள். மதப் பற்று மிக்கவராகவும் கூச்ச சுபாவம் உடையவராகவும் இருப்பார்கள்.கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரும்  இவர்களை விரும்புவார்கள். தெய்வ நம்பிக்கை உடையவர்கள். பெரியவர்களிடத்தில் விசுவாசமும் மரியாதையும் உள்ளவராக இருப்பார்கள். பலராலும் பாராட்டப்படும் செயல்களைச் செய்வார்கள். பலருக்கும் அவர்களுடைய துன்பத்தில் ஆதரவுக்கரம் நீட்டினாலும் தாங்களது  பிரச்னைகளை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். பல நல்ல காரியங்களில் தங்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

விருச்சிகம்  லக்கினம்   – கேட்டை 

விசாகம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  புதன் , செவ்வாய் தாக்கத்தில்  இருப்பார்.

விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி புதன்  ஆவார். புத்திமான், கடுமையான உழைப்பாளிகள். அதேசமயம் கொஞ்சம் கடுமையானவர்களும் கூட. இலக்கை குறித்து வைத்துக்கொண்டு பயணிப்பவர்கள். இடையில் எந்தத் தடை வந்தாலும் அதை தகர்த்தெறிந்து ஈட்டி போல செயல்படுபவர்கள். தன் முயற்சியில் யார் குறுக்கே வந்தாலும் தயவு தாட்சண்யமே காட்டாதவர்கள். ஏறி மிதித்து முன்னேறிச் சென்றுகொண்டே இருப்பார்கள். ஆனால் தர்மம் செய்வதில் அவர்களை மிஞ்ச முடியாது. மெத்தப் படித்த புத்திசாலிகள். அறிவாளிகள். அந்த அறிவாளித் தனத்தால் தனக்கென புதுப்பாதை போட்டு அதில் பயணிப்பவர்கள்..


மந்திரம் 

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய சிவ துதி மனதார சொல்லி வருவது நல்லது 


நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரையாக
ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல் அறாத
பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே !

ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்