Showing posts with label பூரம். Show all posts
Showing posts with label பூரம். Show all posts

சிம்ம லக்கினத்தின் பொது பலன்கள்

  





சில ஜோதிட நூல்கள் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் யோகம் என்பர்

 சிம்மம் லக்கினம்- சுப சேர்க்கை


            • குரு + சூரியன்
            • செவ்வாய் + சுக்கிரன்  (சில நூல்கள் கூறுகின்றன) 
            • சூரியனை குரு பார்த்தல் 
            • குருவை  சூரியன் பார்த்தல் 
    • சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் இருந்தால் நல்லது. 
    • சூரியனின் மகன் சனி. இருவர்க்கும் ஆகாது. பகை. மேலும் சனி மரகத்தையோ , அதற்கு ஒப்பான கண்டதையோ தனது திசையில் தருவார். 
    • புதன், சுக்கிரன், ராகு, கேது மறைந்தால் நல்லது. சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும் 

    பொது பலன்கள் 


    • கம்பிரமானவன், நல்ல பசியுடையவன், திட புத்தியுள்ளவன், பக்தியுடையவன், கபடி, வசியமுடையவன், கோபமுடையவன், தைரியவான் 
    • சிம்மம் என்ற உடன் அவற்றின் சின்னம் சிங்கம் என்பதால், இவர்கள் பேசுவது கனீர் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும். இந்த லக்னகாரர்கள் காடு மலை  சுற்றுவது மற்றும் தனிமை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். 
    • சிங்கம்  சின்னம்: பெயருக்கேற்ப பல சமயங்களில் மற்றவர்களுக்கு சிம்ம ஸ்வரூபமாகவே விளங்குவார்கள். 
    • தலைமை பண்பு, உயரிய மதிப்பு மிக்க இடத்தை விரும்புவார்கள். கலங்காத இதயத்தை கொண்டவர்கள்.
    • பிறரை அலட்சியமாக எண்ணுபவர்கள். அதே வேளையில் பொது நேர்மையை வாழ்வில் கொள்வார்கள்.
    • பொதுவாக எதிலும் தலைவணங்கி கால் பிடித்து முன்னேற இயலாது இவர்களுக்கு.
    • நாலு பேர்கள் சபையில் மதிக்க வேண்டும் என்பதற்காக வேண்டியாவது சில உதவிகளை செய்வதுண்டு. தனியாக கேட்டால் உதவி செய்யாவிடினும் சபையில் கேட்டால் முடியாது என மறுக்க மாட்டார்கள்.
    • எந்த நிலையில் இருந்தாலும் தனக்கு கீழ் ஒரு சிறிய கூட்டத்தை கட்டமைத்து இருப்பார்கள். கட்டிட தொழிலாளி நிலை ஆயினும் குறைந்த பட்சம் மேஸ்திரி ரேஞ்சுக்கு இருக்க முனைவார்கள்.
    • மனைவிக்கு முழுமைமாக கட்டுபட்டவர்கள் இந்த லக்னகாரர்கள் .மனைவியின் அன்பிற்கு அடங்கி போவதில் பெரும் விருப்பம் கொள்வார்கள்.
    • பெற்றோர்களில் யாராவது ஒருவரின் அன்பே இவர்களுக்கு முழுமையாக கிடைக்கும்.சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும்.பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திட புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் முன் கோபியாகவும் இருப்பார்கள் 
    • சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் வசதி வாய்புகளுடன் நன்றாக வாழ்வார்கள்.
    • இவர்களிடம் கோபமும், பிடிவாத குணமும் அதிகம் இருக்கும். அதுவே இவர்களின் பலமும், பலவீனமும் ஆகும். 
    • இவர்கள் கவர்ச்சியான மற்றும் எடுப்பான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
    • கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர்கள். எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையாக நடக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்.
    • சிம்ம லக்னத்தில் பிறந்த நீங்கள், உணர்ச்சிவசப்பட மாட்டார்கள் . வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக எடுத்துக் கொள்வார்கள்.
    • சில சமயங்களில் சில்லறைத்தனமாகவும் நடந்து கொள்வார்கள். இது இவர்களின் பெரிய  பலவீனமாகம் ஆகும் 

    புலிபாணி ஜோதிடம்- பாடல் - 26

    சிம்ம லக்கினம்

    பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு

    பவுமனுமே திரிகோண மேறிநிற்க

    சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி

    சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு

    வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க

    வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்

    கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே

    கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே


    பொருள்:

    இப்பாடலில் சிம்ம லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

    “சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் திரிகோணம் எனப்படும் 1, 5,7 யில் இருந்தால் மட்டும் மிக நல்ல பலனை தருவார் என்றும் மற்ற ஸ்தானங்களில் இருந்தால் துன்பம் ஏற்படும் தன் குருவான போக மகா முனிவரின் பேரருளால் கூறுகிறது.“

     விளக்கம்:

    சிம்மத்தில் பிறந்த அதாவது சிம்ம லக்கின ஜாதகருக்கு செவ்வாய் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும்: செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும். இவையும் சிவப்பரம்பொருளின் பேரருளே ஆகும். ஆனால் அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும். எனது சற்குருவாகிய போக மகாமுனிவரின் பேரருளால் கூறினேன். இக்குறிப்பினை அறிந்து ஜாதகனுக்குப் பலன் கூறுவாயாக.

    குறிப்பு:

    செவ்வாயுடன் சனி கூடினால் பாதக தன்மை அதிகமாக தருவார். கம்பீரமானவர், நல்ல பசி உடையவர், திட புத்தியுள்ளவர், பக்தியுடையவர், கபடி, ஜன வசியம் உடையவர், கோபம் உடையவர், தைரியமானவர். 

    சில ஜோதிட நூல்கள் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் யோகம் என்று கூறுகிறது 


    திருமண வாழ்க்கை

    • 6, 7க்குடையவர்  சனி. 7 – ஆம் அதிபதி உச்சமாகியிருந்தால் வரும் வாழ்க்கைத் துணையால்  பேரும் புகழும் கிடைக்கும்.
    • மனைவிக்கு முழுமைமாக கட்டுபட்டவர்கள் இந்த லக்னகாரர்கள். மனைவியின் அன்பிற்கு அடங்கி போவதில் பெரும் விருப்பம் கொள்வார்கள்.
    • சிம்ம லக்ன ஆண்கள் வீட்டில் மனைவி ராஜ்ஜியம் எனில் சிம்ம லக்ன பெண்கள் வீட்டில் கணவன் அதிகாரம் கிடையாது.அதே வேளையில் கணவன் மீது பிணைப்பு , ஈர்ப்பு உண்டுதான்.
    • திருமணம் நடந்த பிறகு தந்தை அல்லது மைத்துனர் ஒரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
    • வாழ்க்கை துணைக்கு கோவம் அதிகம் இருக்கும் மேலும் அவர்கள் அவர்களின் இளைய உடன்பிறப்புக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்
    • சிலர் திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார். 
    • வாழ்க்கைத் துணை கடும் உழைப்பாளிகள் இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
    • வாழ்க்கைத் துணை வாய் மூடி மௌனியாக வெளிப்படையாகப் பேசாத அழுத்தம் கொண்டவராக இருப்பார்.

    தொழில்


    • சிம்ம லக்னத்திற்கு தனக்காரகன்  அதாவது ஜீவனாதிபதி சுக்கிரன் கலை காரகன் என்பதாலும், சுக்கிரனே 3ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.
    • மற்ற லக்னகாரர்களை விட இவர்களுக்கு அமானுஷ்ய சக்தி எளிதாக கிட்டும். குறி சொல்லுதல், சாமியாடிகள் போன்ற ஆத்ம தொடர்புள்ள அமைப்புகள் சிம்மத்திற்கு உண்டு. 
    • வர்த்தகம் , அரசு துறை அரசு சார்ந்த பிற ஆதாயத்துறை, நேரடி கள அரசியல் என இவை அனைத்திலும் விருப்பம் உள்ளவர்கள்.
    • பாடல், இசை, சொற்பொழிவு, ஆன்மீகம் இவற்றில் விருப்பம் உண்டு.
    • பத்தாம் அதிபதியாக சுக்கிரன் பலமாக இருந்து புதன், குரு, சனி மூவரும் ஆகிய கிரகங்களின் யோக அம்சங்கள் சேரும் போது வியாபாரம், கூட்டுத் தொழில் லாபகரமாக அமையும்.
    • அரசு சம்பந்தப்பட்ட துறை, பெருந்தன்மை குணம், கௌரவமான  பதவிகள், அறிவாற்றல், பேச்சாற்றல், நேரம் தவறாதவர்கள், எழுத்தாற்றல் ஆகியவை சம்மந்தப்பட்ட தொழில் செய்யவார்கள்.
    • லக்னாதிபதி சூரியன் 10ம் வீட்டில் பலம் பெற்று செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்
    • செவ்வாய் பலமாக அமைந்திருந்தால் நல்ல நிர்வாகியாக பணிபுரிந்து எந்தத் துறையில் செயல்பட்டாலும், அதில் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக விளங்க முடியும். 
    •  சுக்கிரன் மறைவு ஸ்தானங்களிலிருந்தாலோ சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் இருந்தாலோ உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும்
    • சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று பகை வீடுகளில் அமைந்தால் நிலையான ஜீவனம் இல்லாமல அடிமைத் தொழில் செய்யக்கூடிய அமைப்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
    • உங்களுக்கு சுய முயற்சி மூலம் உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகம் எவ்வளவு சிறப்பாக செய்தாலும் அதில் உங்கள் பெயர் எப்போதும் பாதிப்பு இருக்கும்
    • ரகசியமாக பணம் உதவி அல்லது உத்தியோகம் பெற பணம் கொடுத்தால் அது பிரச்சனை ஆகி விடும்
    • இவர்களை பொறுத்தவரை படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது
    • சற்று முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப் போவது கடினமாகும். தொழில் எதிரிகளால் பிரச்சனை உண்டாகும்

    கிரகங்கள்  

    சூரியன் : லக்கினாதிபதியாகிய சூரியன் கண்டிப்பாக வலுத்திருக்க வேண்டும். நீசம் பெறின் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி தவிப்பார்கள் 

    சந்திரன் : 12ம் வீட்டுக்கு உரியவர். ஆனாலும் நட்பு கிரகம் தான். ஆனாலும் மனோகாரகன் சந்திரன் விரய ஸ்தானாதிபதி ஆவதால் அவர் 3, 6, 8ல் மறைதல் நலம்

    புதன் : இவர்  2 மற்றும் 11 க்கு உடையவர். யோகமில்லாதவர். ஆனாலும் 8வீட்டில்  அமர்ந்து நீசபங்கம் பெறுதல் சிறப்பு. அப்போது மட்டும் நல்லது செய்வார். மற்ற இடங்களில் இருந்தால் புதன் திசையில் மாராகத்திற்கு ஒப்பான கண்டம் கொடுப்பார்.

    செவ்வாய்: செவ்வாய் 4, 9 உரியவர். யோககாரரே. ஆனால் ஸ்திர லக்கினத்திற்கு  9ம் வீட்டு அதிபதி  பாதகாதிபதி. எனினும் செவ்வாய்  சிம்மத்திற்கு பாதகம் செய்வதில்லை பதிலாக நன்மையே  செய்வார்

    குரு: குரு 5, 8 க்கு உரியவர். மற்றும் யோகதிபதி ஆவார். ஆனாலும் முழு நன்மை  தரமுடியாது இவர் சுக்கிரனோடு சேர்ந்தால் மரணத்திற்கு நிகரான துன்பத்தை அவரின் தசா புத்திகளில் தருவார்

    சுக்கிரன்: சுக்கிரன் 3, 10-கும் உரியவர். சுகத்தையும் லாபதிபதியாகவும் செயல்படுவர் இருந்தாலும் சுக்கிரன் தன் தசா புத்திக்காலங்களில் பாதகத்தை செய்வார்

    சனி: சனி 6, 7, க்கு உடையவர். பகை ஆவரர். தசா புத்திக்காலங்களில் மாரகத்திற்கு சமமான பாதகத்தை தருவார்கள். சிலருக்கு மராகத்தையும் தர வல்லவர். 

    சூட்சுமங்கள்  


    • இவர்களுக்கு குரு 5 மற்றும் 8 உடையவர் என்றாலும் குரு யோகாரரே.
    • ராகு கேதுவைத் தவிர மற்ற கிரகங்களை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.ராகு மற்றும் கேதுக்களிடம் சூரியன் தன்னுடைய வலிமையை இழக்கும். 
    • சூரியனுடன் சனி, ராகு, கேது சேர்ந்தால் நல்லது அல்ல.
    • செவ்வாய் யோகாரரே. ஆனாலும் அவர் திரிகோணத்தில் இருந்தால் மட்டுமே நல்லது செய்வவார். மற்ற இடங்களில் இருந்தால் துன்பத்தை கொடுக்கவும் தயங்க மாட்டார்
    • சனி பகை கிரகம் என்றாலும் ஆறுக்குடையவர் என்ற வகையில்  சனி உச்சம் பெற்றால் நல்லதே நடக்கும்.

    தசா பலன்கள் - சூரியன் 

    சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன்.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • லக்கினாதிபதி சூரியன் என்பதால் நல்லதே நடக்கும். ஆனால் சூரியன் கெடக் கூடாது.
    • சுபச்செயல்கள் கைகூடும். பொருட்சேர்க்கை உண்டாகும்.
    • உடல் ஆரோக்கியம் மேம்படும்.வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
    • புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.மனதில் புதுவிதமான லட்சியம் உண்டாகும்.
    • அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
    • தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.வெளியூர்
    • தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும். 
    • சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் அந்தஸ்தையும் வெற்றியையும் பெறும் வாய்ப்பு வரும். 
    • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

     தசா பலன்கள் - சந்திரன் 

    சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்னாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திர திசையில் அடையலாம். 
    • சந்திரன் பலம் பெற்று இருந்தால் நல்ல மன வலிமை, தைரியம் துணிவு உண்டாகும். 
    • சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும், வளர்பிறைச் சந்திரனாக இருந்து 2, 11 ஆகிய ஸ்தானங்களில் அமைந்திருந்தாலும், நட்பு கிரக சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தாலும், அரசாங்க வழியில் அனுகூலம், பெயர், புகழ் உயர கூடிய அமைப்பு, திருமண சுப காரியங்கள் நடைபெறும் யோகம், சிறப்பான புத்திர பாக்கியம் அமையும் வாய்ப்பு, பூமி, மனை, வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகும்..
    • சந்திரன் கெட்டு இருக்கும் பட்சத்திம் பண விரயங்கள், மனக்குழப்பங்கள், எதிலும் தெளிவாக செயல்பட முடியாத நிலை, மனதில் துக்கம், கவலை போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
    • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

    தசா பலன்கள் -  செவ்வாய் 


    சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 

    • செவ்வாய் 4 மற்றும் 9 க்கு உரியவர். நட்பு கிரகம். மேலும் சிம்மம் ஸ்திர வீடு. 9 க்கு உரியவர்பாதகாதிபதி ஆனாலும் நன்மையே செய்வார் 
    • சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயமே  யோக காலம் ஆகும்.
    • பதவி உயர்வு, சொகுசு வாகனம் வாங்குதல் போன்றவை  இந்த திசையில் எளிதில் கை கூடும். 
    • பொதுவாக செவ்வாய் பலமிழந்து அமையப் பெற்று திசை நடைபெற்றால் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு, வீண் வம்பு வழக்குகள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். 
    • பொதுவாக இந்த திசை காலத்தில் உறவினர்களிடம் பிரச்சனை உண்டாகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன்னென்றால் செவ்வாய் பாதகதிபதியும் ஆவார்.
    • கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். கோபத்தினால் சில பிரச்சனைகளை வந்து போகும்.
    • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
    தசா பலன்கள் -  புதன் 
      சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

      • புதன்  சிம்ம லக்னத்திற்கு 2,11க்கு உடையவராக இருப்பதால் வருமானம், குடும்பம், வாக்கு, வித்தை போன்றவற்றையும், லாபத்தையும் தந்தாலும் புதன் இரண்டில் உச்சம் பெற்று அமர்ந்து இருந்து அவருக்கு புதன் தசா நடைபெற்றால் அவர் தன் வாழ்க்கைத் துணையை இழக்க நேரிடும் . 
      • 10ல்  புதன் பலம் பெறும் போது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்திரிகைத் துறை, புத்தக பதிப்பு, சொந்தமாக தொழில் இருப்பவர்கள் நல்ல நிலையும், சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
      • யோகம் இல்லாதவராகினும் புதன் திசையில் சிம்ம லக்கினகாரருக்கு நன்மையே செய்வார் என்பது தான் உண்மை
      • பேச்சியால் லாபம் உண்டு. எந்த முயற்சியிலும் வெற்றி உண்டு. முத்த சகோதரத்வம் சிறப்பாக இருக்கும் 
      • இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு திருமணம் நடைப்பெறும்.
      • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

       தசா பலன்கள் -  குரு  


        சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 

        • இவர்  5 மற்றும் 8 க்கு உரியவர். குரு நட்பு கிரகம்.  மேலும் இவர் யோகாரார்கள் ஆவார் 
        • சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயமே  யோக காலம் ஆகும்.
        • எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும் 
        • உத்தியோகத்தில் இடமாற்றம் சாதகமாக அமையும்.
        • திருமணத்திற்கு காத்து கொண்டு இருபவருக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் எதிர் பார்ப்பவருக்கு குழந்தை பாக்கியமும் கிட்டும். வயதுக்கு ஏற்ற நல்லது நடக்கும்.
        •  தந்தை, தந்தைவழியில் நன்மை கிடைக்கும். 
        • திரிகோண ஸ்தான 5ஆம் வீட்டிற்கும், மறைவு ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாவதால் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே குரு திசையில் முதலில் 60% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 40% தீமையான பலன்களும் தரவல்லார்.
        • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

        தசா பலன்கள் - சுக்கிரன்  

          சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
          • சுக்கிரன் 3 மற்றும் 10 க்கும் அதிபதி ஆவார்.  சூரியனுக்கு சுக்கிரன் பகை தன்மை வரும் ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய சிம்ம லக்னத்திற்கு 3,8ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும், எனவே மாரகாதிபதி தன்மையும் பெறுவதால் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் சுக்கிரனே 
          • காமம் சார்ந்த விசயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வியாதி, வழக்கு போன்றவை வரும் 
          • யாருக்கும் கடன் தர வேண்டாம். தாய் மாமன் , வேலையில் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும். உல்லாசம்  என்ற பெயரில் உடலையும் , பெயரையும் கெடுத்து கொள்ள வேண்டாம் 
          • சுக்கிரன் வலிமையாகத் தனியாக இருக்கும் அமைப்பில் முழுமையாக நன்மைகளைத் தர மாட்டார். இதுபோன்ற அமைப்பில் தனது வீடு, வாகனம், காம சுகம் போன்ற காரகத்துவங்களைக் கொடுத்து கெடுப்பார்.
          • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் - சனி 

            சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
            • சிம்ம லக்னத்திற்கு சனி 6,  7 க்கு உரியவர். மேலும் நல்லவர் கிடையாது. இவரே மராகாதிபதியும் ஆவார்.
            • சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் சனி தசை அல்லது புத்தி சிம்ம சொப்பனமாகத் தான் இருக்கும்.
            • சனி ஏழாம் வீட்டிற்கு அதிபதி என்பதால் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் போது சசமகா யோகத்தை தருகிறார். சச மகா யோகம் பெற்றிருப்பவர்கள் சனி தசை நடக்கும்போது  தலைமை பதவியை சனி தருவார். 
            •  சனி தனது திசையில் 30% நன்மையான பலன்களும் 70% தீமையான பலன்களையும் தரவல்லார் என்றாலும் திருமண வாழ்க்கை தீர்மானிப்பவர் அவரே.
            •  சனி தசையின் பொது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.  திருமண போன்ற சுப காரியங்கள் கைகூடும்
            • சூரியன் பலமாக இருந்தால் அரசு வழியில் அதிகாரமிக்க பதவிகளை பெறும் அமைப்பு, ஆடை, ஆபரண சேர்க்கை, தந்தைவழியில் சிறப்பு, உறவினர்களால் உதவி, எடுக்கும் காரியங்களில் வெற்றி, உடல்நிலையில் மேன்மை, தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் உண்டாகும்.
            • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  ராகு  

              சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • சூரியனுக்கு சந்திரனுக்கு  ராகு பகை. அந்த வகையில் பார்த்தால் ராகு திசை நல்ல திசை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 
              • வேற்று நாடு, மாநிலம் செல்ல நேரிடலாம். அத்தகைய மக்கள் தொடர்பு கிடைக்கும்.
              • திடீர் அதிஷ்டம் அடிக்கும் எனவே ஆசைகள் அதிகமாகும். இது நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆசையை குறைத்து கொள்ள வேண்டும் 
              • சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் பல கருத்து வேறுபாடுகள் வந்து நிம்மதியை கெடுக்கும். ஆனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள இருக்கும். அதனால் செலவும் உண்டு. 
              • கலைஞர்களுக்கு சிறப்பாக இருக்கும். இளைய சகோதரத்துவம் சிறப்பாக இருக்கும் 
              • குழந்தைகளால் தொல்லை இருக்கும். எந்த வயது குழந்தையைக் இருந்தாலும் அவர்களால் நிம்மதி குறையும் 
              • தொழிலில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டு.
              • இந்த திசை நடக்கும் போது எந்த கெட்ட பழக்கத்தையும் பழக வேண்டாம். பல பிரச்சனைகளை பார்க்க நேரிடும். இழப்பும் உண்டாகும்.
              • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              தசா பலன்கள் -  கேது  

                சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                • சூரியனுக்கு  கேது  பகை. இவர்களுக்கு கேது திசை நல்ல திசை இல்லை . 
                • கேது திசை வரும் போது சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் கேது கெடுதல் செய்வதில்லை. சுப வீடுகளில் கேது இருக்கும் போது வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் நன்மை மட்டும்  செய்வார்.
                • கலகங்கள், பிரச்சனைகள், பண பிரச்சனைகள், உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஜாதக படி துறவறம் போகும் அமைப்பு இருக்கும் பட்சத்தில் இந்த திசை துறவறம் ஏற்பார்கள் 
                • வேலையில் மாற்றம், வீடு மாற்றம், மன மாற்றம் என சிறிய மாற்றங்களை கேது ஏற்படுத்துவார்.
                • கேது நீச்ச ராசியான ரிஷபத்தில் இருந்தால், இந்த திசையில் கெட்ட எண்ணம், கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்களை தேடி கொள்வார்கள்
                • குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருக்கவும். 
                • கேது இருக்கும் வீட்டு அதிபதி உச்சம், ஆட்சி பெற்றால் மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பாக இருக்கும் 
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                சிம்மம் லக்கினம்  – நட்சத்திரம் 


                சிம்ம  லக்கினத்தில்  உள்ள நட்சத்திரங்கள் மகம், பூரம், உத்திரம் 1 பாதம்    ஆகியவை அடங்கும். இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
                அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம் 

                சிம்மம் லக்கினம்  – மகம்   

                மகம் நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன் , கேது   தாக்கத்துடன் இருப்பார்.

                மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள் என்பது உண்மை தான். இது கேது நட்சத்திரம். அவர்களுக்கு என்று ஒரு வரைமுறை வைத்திருப்பார்கள். இந்த  நட்சத்திரத்தில் லக்கினம் அமையப்பெற்றால் நற்பண்பாளர்கள், மனைவி சொல்வதை கேட்பார்கள், சிந்தித்து செயலில் இறங்குவான், மனக்கவலை இருக்கும், எந்நேரம் வியாதி  உடலில் இருக்கும், பரிசுத்தமானவர்கள், சாந்தசொரூபன், அதிக ஆசைகொண்டவன், தீயால் வடு உள்ளவன், களிப்புடையவன், செந்நிற அல்லது தங்க நிற விழியுடையவன், நெஞ்சழுத்தம் கொண்டவன், தோல் வியாதி கொஞ்சம் துன்பப்படுவதும், பேசுவதில் இனிமையிருக்கும், மற்றவர்கள் பார்க்கும் பொழுது கொஞ்சம் பயங்கரமாக இருப்பார்கள்,  ஆற்றல் மிக்கவர்கள், கொஞ்சம் கபட புத்தி இருக்கும்

                சிம்மம் லக்கினம்  – பூரம்   

                பூரம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன் , சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.

                இது ஒரு சுக்கிரன் நட்சத்திரம். இந்த நட்சத்திர சாரத்தில் லக்கனம் கொண்டு பிறப்பவர்கள் பலரால் அறியப்படுபவனாயிருப்பான், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், வீரன்,  வாணிகன், மதுர வார்த்தை பேசுபவன், பொன் பொருள் ஆசை இருக்கும், விவசாயி, பண்பாளன், குடியானவன், கோபக்காரன், ஒழுக்க வெறிகொண்டவன், சிறிய இல்லத்தில்  வசிப்பவன், சதா நீர்வேட்கை இருக்கும், வடு உடலில் இருக்கும், ரகசியம் மனதில் தங்காது, அதி உன்னதமானவன், நன்மைகள் பெறுபவன், பிறரை இகழ்வான், தெய்வ  வழிபாடு குறைவு, பெரும் செல்வம் இருக்காது, புகழாளன், தேவையற்ற கவலை கொள்பவன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போகலாம்

                சிம்மம் லக்கினம்  – உத்திரம் - 1  

                உத்திரம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சூரியனின் முழு தாக்கத்தில்  இருப்பார்.

                உத்திரம் முதல் பாதத்தில் பிறப்பவன் கற்கண்டைப்போல இனிமையாகப் பேசுபவன், புகழுடையவன், நன்னடத்தை கொண்டவன், பயப்படமாட்டான், இடம் பொருள்  ஏவல் அறிந்து நடப்பவன், உற்றார் மீது அதிக பாசம் கொண்டவன், நெருப்பாக தெரிவான் அனல் அன்பானவன். நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இருக்கும். ‘தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத குணமும் உண்டு. குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டிருப்பார்கள். எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார்கள்

                மந்திரம் 

                சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய அனுமன் துதி மனதார சொல்லி வருவது நல்லது

                விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
                உறைவார் முடிவே உணரா முதலோன்
                கரைவார் நிறைவே கருதாதவன் போல்
                உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

                கண்டேன் ஒரு சீதையையே
                கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்
                வென்றேன் எனவே விழைந்தானையே நான்
                கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !

                சரமே தொளையா சகமே மறவா
                சரீரா அனுமா ஜமதக் கினிநீ
                உரமே உறவே உறவோய் பெரியோய்
                உயர்வே அருள்வாய் திருமாருதியே !

                 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



                பூரம்

                நட்சத்திரம் - பூரம்


                பூரம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 11 வது பிரிவு ஆகும். நட்சத்திர கூட்டத்தின் பின் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூரத்தின் (δ, θ லியோனிசு) பெயரைத் தழுவியது. பூரத்தின் சமஸ்கிருத பெயரான பூர்வ பால்குனி (Purva Phalguni) என்பது "முந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் இரண்டு கால்கள்" ஆகும். மேலும் இரண்டு கண்களின் கருமணிகள் போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். “பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான்” என்று ஒரு வாக்கு இருக்கிறது.



                நட்சத்திர காரத்துவம்

                ஆளும் உறுப்புகள்

                முதுகெலும்பு, இதயம்

                பார்வை

                கீழ்நோக்கு.

                பாகை

                133.20 &  146.40

                தமிழ் மாதம்

                ஆவணி

                நிறம்

                 வெண்மை.

                இருப்பிடம்

                கிராமம்.

                கணம்

                மனுஷ கணம்

                குணம்

                உக்கிரம்/குரூரம்,  ராஜசம்

                மிருகம்

                பெண் எலி

                பறவை

                பெண் கழுகு

                மரம்

                பாலுள்ள பலா மரம்

                மலர்

                வெள்ளை அரளி

                தமிழ் அர்த்தம்

                பாராட்டத்தகுந்தது

                தமிழ் பெயர்

                கணை

                நாடி

                மத்திம நாடி, பித்தம்

                ஆகுதி

                பச்சைப் பயறு

                பஞ்சபூதம்

                நீர்

                நைவேத்யம்

                சியாமக அன்னம்

                தேவதை

                தேவர்களில் ஒருவரும், பத்ரி நாராயணனின் அம்சமுமான பகன்.

                அதி தேவதை

                ஸ்ரீகாஞ்சி காமாட்சி

                அதிபதி

                சுக்கிரன்

                நட்சத்திரம் தன்மைகள்

                அப சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

                உருவம்

                கட்டில் கால்களைப் போன்ற இரண்டு நட்சத்திரங்களின் தொகுப்பு.

                மற்ற வடிவங்கள்

                கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை

                மற்ற பெயர்கள்

                எலி, உமை,கணை,இடைசளி, துர்க்கை, நாவிதன்

                வழிபடவேண்டிய தலம்

                அக்னீசுரர் கற்பகாம்பிகை, கஞ்சனூர்

                அதிஷ்ட எண்கள்

                1, 4, 6

                வணங்க வேண்டிய சித்தர்

                பராசரா

                பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

                மோ, ட, டி, டு

                அதிஷ்ட நிறங்கள்

                இளஞ் சிவப்பு, வெள்ளை

                அதிஷ்ட திசை

                தென்கிழக்கு

                அதிஷ்ட கிழமைகள்

                வெள்ளி, செவ்வாய்

                அணியவேண்டிய நவரத்தினம்

                சிர்கான் (Zircon).

                அதிஷ்ட உலோகம்

                வெள்ளி (Sliver)

                வெற்றி தரும் நட்சத்திரங்கள்

                 ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம்.

                நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

                பார்வதி,மீனாட்சி,ஆண்டாள்

                குலம்

                க்ஷத்திரிய குலம்

                புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

                காமம்


                மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

                சுக்கிரன்




                கிரகங்கள் 12 வீடுகளில் (Twelveth House) இருந்தால் பலன் விவரங்கள்-சுக்கிரன் :

                எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.


                சுக்கிரன் சில குறிப்புகள் (Something About Venus-Sukiran):
                1. நட்சத்திரங்கள் (Stars): பரணி, பூரம், பூராடம்
                2. மொத்த திசை இருப்பு : 20 வருடம்
                3. தானியம் (Grains): மொச்சை (one of the Beans)
                4. புஷ்பம் (Flower): வெண்தாமரை (White Lotus)
                5. நிறம் (Color): வெண்மை
                6. ஜாதி (Caste) : பிராமண ஜாதி
                7. வடிவம் (Structure or Shape) : சம உயரமானவர்
                8. உடல் உறுப்பு (Part of the Bosy): மர்ம ஸ்தானம்
                9. உலோகம் (Metal) : வெள்ளி (Silver)
                10. மொழி (Language) : சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
                11. ரத்தினம் (Gem): வைரம (Diamond)்
                12. வஸ்திரம் : வெண்பட்டு
                13. தூப தீபம் : லவங்கம்
                14. வாகனம் : குதிரை (Horse),மாடு (Cow), விமானம், கருடன்
                15. மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 3, 8 ஆகும்
                16. சமித்து : அத்தி
                17. சுவை : புளிப்பு
                18. பஞ்பூதம் : அப்புக்கிரகம்
                19. நாடி : சிலோஷ்ம நாடி
                20. திசை: தென்கிழக்கு
                21. அதிதேவதை : லஷ்மி, இந்திரன், வருணன்
                22. சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்
                23. தன்மை : ஸ்திரக்கிரகம்
                24. குணம் : ராஜசம்
                25. ஆட்சி : ரிஷபம், துலாம் உச்சம் : மீனம் , நீசம் : கன்னி , மூல திரிகோணம் : துலாம்
                26. நட்பு வீடுகள்: மிதுனம், தனுசு, மகரம், கும்பம்
                27. பகை வீடுகள்: கடகம், சிம்மம், தனுசு
                28. பார்வை : 7 மட்டும்
                29. பலன் தரும் காலம் : மத்திம காலம்
                30. மாத்ருகாரகன் : களத்திரகாரகன்
                31. தத்துவம் : பெண் கிரகம்

                சுக்கிரன் 12 வீடுகளில் (Twelveth House) இருந்தால் பலன் விவரங்கள் :

                எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

                லக்கினத்தில் இருந்து

                1-ம் வீட்டில் ( First House) இருந்தால் :

                மேலும் படிக்க....