Showing posts with label ஜோதிட பாடம். Show all posts
Showing posts with label ஜோதிட பாடம். Show all posts

சுக்கிரன்




கிரகங்கள் 12 வீடுகளில் (Twelveth House) இருந்தால் பலன் விவரங்கள்-சுக்கிரன் :

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.


சுக்கிரன் சில குறிப்புகள் (Something About Venus-Sukiran):
  1. நட்சத்திரங்கள் (Stars): பரணி, பூரம், பூராடம்
  2. மொத்த திசை இருப்பு : 20 வருடம்
  3. தானியம் (Grains): மொச்சை (one of the Beans)
  4. புஷ்பம் (Flower): வெண்தாமரை (White Lotus)
  5. நிறம் (Color): வெண்மை
  6. ஜாதி (Caste) : பிராமண ஜாதி
  7. வடிவம் (Structure or Shape) : சம உயரமானவர்
  8. உடல் உறுப்பு (Part of the Bosy): மர்ம ஸ்தானம்
  9. உலோகம் (Metal) : வெள்ளி (Silver)
  10. மொழி (Language) : சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
  11. ரத்தினம் (Gem): வைரம (Diamond)்
  12. வஸ்திரம் : வெண்பட்டு
  13. தூப தீபம் : லவங்கம்
  14. வாகனம் : குதிரை (Horse),மாடு (Cow), விமானம், கருடன்
  15. மறைவு ஸ்தானம் : லக்கனத்திற்கு 3, 8 ஆகும்
  16. சமித்து : அத்தி
  17. சுவை : புளிப்பு
  18. பஞ்பூதம் : அப்புக்கிரகம்
  19. நாடி : சிலோஷ்ம நாடி
  20. திசை: தென்கிழக்கு
  21. அதிதேவதை : லஷ்மி, இந்திரன், வருணன்
  22. சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்
  23. தன்மை : ஸ்திரக்கிரகம்
  24. குணம் : ராஜசம்
  25. ஆட்சி : ரிஷபம், துலாம் உச்சம் : மீனம் , நீசம் : கன்னி , மூல திரிகோணம் : துலாம்
  26. நட்பு வீடுகள்: மிதுனம், தனுசு, மகரம், கும்பம்
  27. பகை வீடுகள்: கடகம், சிம்மம், தனுசு
  28. பார்வை : 7 மட்டும்
  29. பலன் தரும் காலம் : மத்திம காலம்
  30. மாத்ருகாரகன் : களத்திரகாரகன்
  31. தத்துவம் : பெண் கிரகம்

சுக்கிரன் 12 வீடுகளில் (Twelveth House) இருந்தால் பலன் விவரங்கள் :

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

லக்கினத்தில் இருந்து

1-ம் வீட்டில் ( First House) இருந்தால் :

மேலும் படிக்க....


ஜோதிடம் பாடம் -1 பக்கம் -3

பஞ்ச அங்கங்த்தின் ஐந்து அங்கங்கள்:

  1. திதி
  2. வாரம்
  3. நட்சத்திரம்
  4. யோகம்
  5. கரணம்
திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்



வளர்பிறை மற்றும் தேய்பிறைத் திதிகள்:

அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது.

தே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.

இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்க படுகிறது

இவைகள் அனைத்தும் ஜோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அஷ்டமி , நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

கரணம்:

கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது கரணம் என்பது 6 பாகைமணிகள் ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர



யோகம்

இதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனின் தூரத்தையும், சந்திரனின் தூரத்தையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை நாம யோகம் என்பார்கள்.

அவையாவன:

  1. விஷ்கம்பம்
  2. ப்ரீதி
  3. ஆயுஷ்மான்
  4. சௌபாக்யம்
  5. சோபனம்
  6. அதிகண்டம்
  7. சுகர்மம்
  8. திருதி
  9. சூலம்
  10. கண்டம்
  11. விருதி
  12. துருவம்
  13. வியாகாதம்
  14. ஹர்ஷணம்
  15. வஜ்ரம்
  16. சித்தி
  17. வியதிபாதம்
  18. வரீயான்
  19. பரீகம்
  20. சிவம்
  21. சித்தம்
  22. சாத்தீயம்
  23. சுபம்
  24. சுப்ரம்
  25. பிராம்யம்
  26. ஐந்திரம்
  27. வைதிருதி

மற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது (stars) நட்சத்திராத்தையும், யோகத்தையும் வைத்தே யோகம் (Yogam)கண்க்கிடப்படுகிறது. இன்னன்னகிழமைகளில் இன்னென்ன நட்சத்திரம் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நட்சத்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும். ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நட்சத்திரங்கள் வந்தால் அமிர்த யோகம்் வரும். மீதியுள்ள நட்சத்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம், பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நட்சத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும். சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம். மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.

முன்புறம்,    தொடர்ச்சி....

ஜோதிடம் பாடம் -1 பக்கம் - 2

யுகங்களை பற்றி பார்ப்போம். நமது கலாச்சாரப்படி மொத்தம் 4 யுகங்கள் உண்டு. ஒரு சதுர்யுகம் என்பது கீழ்வரும் 4 யுகங்களை கொண்டதுதான்


    • கிருதயுகம்.
    • திரேதாயுகம்
    • துவாபரயுகம்
    • கலியுகம்

ஒவ்வொரு தமிழ் ஆண்டுகளுக்கும் பெயர் உண்டு. மொத்தம் 60 ஆண்டுகள். 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.



இந்த நாள் முடிந்து அடுத்த நாள் பிறக்கிறது என்றால் இரவு 12.01 பிறகு 12.00 மறுநாள் இரவு முடிகிறது. ஆனால் நம்முடைய பண்டைய முறைப்படி சூரியன் உதயம் ஆகும் நேரம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை ஒரு நாள் ஆகும்

உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் என்றும் நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் என்ப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறுசூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.

சூரியயுதத்தை பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரியும். சூரியன் எத்தனை மணிக்கு உதயம் ஆகிறது? எத்தனை மணிக்கு அஸ்தமனம் ஆகிறது ? என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள்


இரண்டு வகையான பஞ்சாங்கங்கள் நம்மிடம் இருக்கிறது.


1. திருகணித முறை
2. வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறை



முன்புறம்,    தொடர்ச்சி....