மகர ராசி - குரு பெயர்ச்சி - 2025

  


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

ஐந்தாம் வீட்டில் இருந்து நல்ல பலன்களை தந்த  குருபகவான் மறைவு ஸ்தானமான ஆறாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இது நல்லது என்று சொல்ல முடியாது.என்றாலும் மகர ராசிக்கு  குரு மூன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார்.எனவே  ஒருபுறம் உங்கள் வேலையில் அதாவது தொழில்  நல்ல பலன்களைப் பெற முடியும்.

அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். என்றாலும்  மேலிடத்தின் ஆதரவு கிட்டும். உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடவேண்டாம். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை கட்டாயம் கேட்டக வேண்டும்.

வயிறு மற்றும் அமிலத்தன்மை, அஜீரணம், செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கொழுப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் கவனம் அவசியம்.

பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் பெரிய ஏற்றம் இருக்காது. பணம் பரிமாற்றத்தில் கவனம் அவசியம்.

குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். என்றாலும் வீட்டில் சுப நிகழ்வு தாமதப்படும்.

வாரிசுகளால் பெருமை சேரும். சகோதர உறவுகளிடம் வீண் சர்ச்சை வேண்டாம். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும்.

செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அயல்நாட்டு வர்த்தகத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் தங்கள் தொழில்  அலட்சியம் கூடாது. தரக்கட்டுப்பாட்டில் கவனம் தேவை. நிலம் தொடர்பான பழைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

பொதுவாக குரு பெயர்ச்சி 2025 உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் வருமானத்தில் அதிகரிப்பு மற்றும் உயர்வைக் காணலாம். உங்கள் முடிவெடுக்கும் திறன் நன்றாக இருக்கும்..

அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி நிச்சயம் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்திப் பேசவேண்டாம்.

மகர ராசி மாணவர்கள் சோம்பலை விரட்டினால், சாதனை செய்யலாம். வாகனத்தில் வேகம் கூடவே கூடாது.

வி.ஐ.பிகளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர், தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள்.

அக்டோபரில் குரு ஏழாவது வீட்டிற்குள் நுழைந்தவுடன், இவை அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார வளம் உண்டாகும். உங்கள் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். திருமண உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் அமையும். உங்கள் மனைவியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் முடிவெடுக்கும் திறனும் வலுவடையும் மற்றும் உங்கள் வியாபாரமும் முன்னேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.

வக்ர காலகட்டத்தில் டிசம்பர் மாதம் மீண்டும் ஆறாம் வீட்டில் குரு வக்ர நிலையில் நுழைவதால் உடல் நலக் குறைபாடுகளில் கவனம் தேவை.

குரு பார்வையின் பலன்கள்

ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக, முறையே பத்தாம்   வீடு  பன்னிரண்டாம் வீடு மற்றும் இரண்டாம்   வீடுகளை ,பார்க்கிறார். அதாவது தொழில் ஸ்தானம், விரைய ஸ்தானம் , வாக்கு,தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.

அதாவது  பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் சிறப்பாக இருக்கும். மேலும் இரண்டாம்  வீடு குருவின்  பார்வை பெறுவதால் குடும்ப வாழ்கையில் மகிழ்ச்சி இருக்கும். பொருளாதரத்தில் உள்ள பிரச்சனையின் தீவிரம் குறையும்.  வாழ்க்கை துணையின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு முறையே பத்து, பன்னிரண்டு, இரண்டாம் இடங்களை குரு  பார்ப்பதால் நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். என்றாலும் , நாவடக்கமும், உடல்நலத்தில் அக்கறையும் முக்கியம்.