மேஷம் ராசி - குரு பெயர்ச்சி - 2025

இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

மேஷ ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருந்த குரு 3ம் வீட்டுக்கு செல்கிறார்சிறந்த வீடுயான இரண்டாம் வீட்டில் இருந்து குரு செல்லவது நல்லது இல்லை என்றாலும் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்

ஏழரை சனி ஆரம்பிக்கும் போது  இந்த பெயர்ச்சி வருவதால் சற்று  சிரமங்கள் இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்

மேஷ ராசிக்கு ஒன்பதாம் வீட்டுக்கும் பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதி ஆவார். அவர் முன்றாம் வீட்டுக்கு செல்வதால்  சோம்பல் அதிகரிக்கும்சோம்பல் அதிகரிக்கும்

என்றாலும் நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நிறைவேறும்

திட்டமிட்ட செயல்களால் வருமானம் அதிகரிக்கும்மத விஷயங்களில் மற்றும் ஆன்மிகத்தில்  ஆர்வம் அதிகரிக்கும்.

பொதுவாக இந்த குரு பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணி இடத்தில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் பிரயாணம் சாத்தியமாகும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் எல்லா விஷயங்களிலும் கவனம் மிகவும் அவசியம். என்றாலும் எல்லா விஷயங்களிலும் கவனம் மிகவும் அவசியம். ஏழரை சனி ஆரம்பித்து விட்டதை நினைவில் வைத்து கொள்ளவும்.

அக்டோபர் 19 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் இருக்கும் போது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மற்றும் பூஜை அல்லது திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறலாம்.

டிசம்பர் மாதத்தில் குரு மூன்றாம் வீட்டில் வக்ர நிலையில் செல்வதால் உடன்பிறந்தவர்களுடன் கசப்பு ஏற்படலாம்பணியிடத்தில் சக ஊழியர்களின் நடத்தையில் சில தொந்தரவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

குரு பார்வையின் பலன்கள்




3ம் வீட்டில் இருக்கும் குரு தனது 5, 7,9ம் பார்வையாக முறையே ஏழாம் வீடு, ஒன்பதாம் வீடு, பதினொன்றாம் வீடுகளை பார்க்கிறார். இது மிகவும் நல்லது , முயற்சி, தைரியம் மற்றும் சகோதர ஸ்தானத்திற்கு வரும் குரு பகவான் 7ம் வீடான களத்திர ஸ்தானத்தையும் 9ம் வீடான தகப்பனார்   ஸ்தானத்தையும்மேலும், 11ம் வீடான லாப  ஸ்தானத்தையும், பார்ப்பது மிகவும் சிறப்பு எனலாம்

ஏழாம் வீடு, ஒன்பதாம் வீடு, பதினொன்றாம் வீடுகளில் குரு பகவானின் பார்வை இருப்பதால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்பரஸ்பர உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்குரு பார்வை மிக நல்ல பலன்களை தான் தருகிறது.