Showing posts with label குரு பெயர்ச்சி - 2025. Show all posts
Showing posts with label குரு பெயர்ச்சி - 2025. Show all posts

மீன ராசி - குரு பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 


குரு பெயர்ச்சி பொது பலன்கள்

மீன ராசிக்கு அதிபதியும் மற்றும் பத்தாம் வீட்டு அதிபதிமான குரு பகவான் நான்காம் வீட்டுக்கு வருகிறார். இது பெரிய தவறு இல்லை. என்றாலும் பெரிய நற்பலன்கள் கொடுக்காது. மேலும்  பெரிய ஏற்றம் எதுவும் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

வீடு, ரியல் எஸ்டேட் மற்றும் பராமரிப்பு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு  வளர்ச்சிகான  வாய்ப்புகள்கிடைக்கும் .

என்றாலும் முதலீடு , பங்கு சந்தை மற்றும் எல்லா பண விஷயத்தில் மிகவும்  கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நெருங்கியவரே பிரச்சனைகளை தரும் வாய்ப்பு உள்ளது.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஆனாலும் வேலை கட்டாயம் கிடைக்கும். என்றாலும் வருமானம் திருப்திகரமாக இருக்காது.

திருமணத்திற்கு காத்து இருப்பவர்களுக்கு திருமணம் சற்று தாமத படும்.

உடல் நலத்தில் பெரிய பிரச்சனைகள் வராது. என்றாலும் மன நலத்தை பாதுக்க வேண்டும். மன அழுத்தங்கள் ஏற்படலாம்.

மீன ராசி மாணவர்களுக்கு அதிக கவனம் மற்றும் பொறுமை இருந்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி கட்டாயம் உண்டு.

அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். நேர்மையான  உழைப்பும், நேரடி கவனமும் இருந்தால், எதிர்பார்க்கும் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் வரும்.

மீன ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் வியாபாரத்தில், வாடிக்கையாளர்களை  திருப்தி மற்றும் நம்பிக்கை பெற முயற்ச்சிக்க வேண்டும்.

யாருடைய தனிப்பட்ட தவறையும் பெரிதுபடுத்த வேண்டாம். அனுபவம் மிக்கவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சங்கடங்கள் தீரும். வரவு சீராகும். குழந்தைகளிடம்  வீண் கண்டிப்பு வேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

குரு பெயர்ச்சி 2025 அக்டோபர் மாதத்தில் குரு பகவான் ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கும் போது, ​​அந்த நேரம் குழந்தைகளுக்கும், பொருளாதார வளத்திற்கும் ஏற்றதாக இருக்கும். காதல் உறவுகளிலும் வெற்றிக்கான நேரம் இருக்கும்.

அதன் பிறகு, குரு வக்ர நிலையில் டிசம்பரில் மீண்டும் நான்காவது வீட்டிற்குள் நுழையும் போது, ​​குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக மாறும் மற்றும் நீங்கள் பணியிடத்திலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் அப்போதுதான் நீங்கள் வெற்றியைப் பெற முடியும்.

குரு பார்வையின் பலன்கள்




ஸ்தான பலத்தை விட பார்வை பலனை  அதிகம் பெற்ற குரு பகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக, முறையே எட்டாம்   வீடு  , பத்தாம்   வீடு மற்றும் பனிரெண்டாம் வீடுகளை  பார்க்கிறார். அதாவது துஸ்தானம் ர் ஸ்தானம், தொழில் ஸ்தானம் மற்றும்  விரைய மற்றும்  மோட்ச ஸ்தானத்தை  பார்க்கிறார். 

இந்த பார்வைகளால்   சாதகங்கள் அதிகரித்து சங்கடங்கள் குறையும். அதேசமயம் உங்கள் செயலிலும் வார்த்தையிலும் நிதானம் இருந்தால் மட்டுமே நல்லவை நிலைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

குருவின் பார்வைகளால், மீனம் ராசிக்காரர்களுக்கு சில சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம். பணப்புழக்கம், கௌரவம் மற்றும் குடும்பத்தில் அமைதி போன்ற பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


கும்ப ராசி - குரு பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு இரண்டாம் மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியாகும். குரு பெயர்ச்சி 2025 போது உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டில் குரு வருகிறார். இது மிகவும் சிறப்பு ஆகும்.குரு பெய்ரச்சியால் பல நன்மைகள் பெரும ராசியில் கும்ப ராசியும் ஒன்று ஆகும்.

இந்த பெயர்ச்சி உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகளை வழங்கும். திட்டங்களில் வெற்றி உண்டாகும் மற்றும் விரும்பிய ஆசைகள் நிறைவேறும்.

பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். உயரதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். பிறர் கட்டாயத்துக்காக அலுவலகப் பணி ரகசியம் எதையும் பகிர வேண்டாம்.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். மூன்றாம் நபர் தலையீட்டை முழுமையாகத் தவிருங்கள். பரஸ்பரம் மனம்விட்டுப் பேசுங்கள்.

பழைய கடன்களை  தீர்க்க முடியும். சுபகாரியங்கள் கைகூடி வரும். செய்யும் தொழிலில் ஏற்ற ஏற்படும். உழைப்புக்கு ஏற்ற வளர்ச்சி உண்டு.

புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல அருமையான காலகட்டம். நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கும்ப ராசி மாணவர்கள்  கல்வியில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். உயர்கல்வியிலும் உங்கள் வெற்றி அதிகரிக்கும்.

பணம் சம்பாதிக்க ஆசை அதிகமாகும். பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெற முடியும்.

அக்டோபர் மாதத்தில் குரு ஆறாவது வீட்டிற்குள் நுழையும் போது உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும் மற்றும் உங்கள் செலவுகளையும் அதிகரிக்கும். அதன்பிறகு டிசம்பர் மாதத்தில் குரு ஐந்தாவது வீட்டில் வக்ர நிலையில் நுழையும் போது ​​​​நீங்கள் காதல் உறவுகளில் உள்ள சிக்கல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் நிதி சவால்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில், வேலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

குரு பார்வையின் பலன்கள்



ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக, முறையே ஒன்பதாம்  வீடு  , பதினொன்றாம்   வீடு மற்றும் ராசியை  பார்க்கிறார். அதாவது தகப்பனர் ஸ்தானம், லாப ஸ்தானம் மற்றும் , ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம் ஆகிய ராசியை பார்க்கிறார். மிகவும் சிறப்பு ஆகும்

குரு பகவான் உங்களின் ஒன்பதாம் வீடு, பதினொன்றாம் வீடு மற்றும் முதல் வீட்டைப் பார்த்து உங்களில் நல்ல மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

மேலும் இந்த பார்வைகள்  உங்களுக்குப் பலவிதத்திலும் ஏற்றம் தரும் . அதேசமயம் எதிலும் வீண் தர்க்கமும் வேண்டாத ரோஷமும் தவிர்த்தால், நன்மைகள் நீடிக்கும்.

விருச்சிக ராசி - குரு பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் இரண்டாவது மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி ஆவார் . இந்த பெயர்ச்சியின் போது விருச்சிக ராசியின்  எட்டாவது வீட்டில் நுழைகிறார் . இந்த குரு பெயர்ச்சி 2025, உங்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்று  கருத முடியாது,, முக்கியமாக ,

கடன் கொடுக்கவோ வாங்கவோ இந்த சமயத்தில் கூடாது . என்னென்றால் பணம் கொடுக்கல் வாங்கலில்  வீண் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு.நிதி இழப்பு ஏற்படலாம்.

பணியிடத்தில் சில தடைகளை சந்திக்க வேண்டி வரும்.எனவே  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எட்டாம் வீட்டுக்கு வரும்  குருவால் உடல்நலக் குறைவு உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

வேலை செய்யும், அலுவலகத்தில் பணியில், சில தடைகள் இருந்தாலும்  ஏற்றத்துக்கான வாய்ப்புகள் வரும். எனவே அந்த  சமயத்திலும் தலை கனம் தவிர்த்து தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு பயண வாய்ப்பு வரலாம். பணி சம்மந்த பட்ட  விஷயங்களை, பற்றி  பிறரிடம் பேசுவதைத் தவிர்க்கவும்.

வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். தேவையற்ற ஆடம்பரத்திற்காக கடன்களை வாங்குவதை  தவிர்க்கவும். இதனால் சில பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சுபகாரியங்கள் ஈடேற குலதெய்வ வழிபாடு முக்கியம்.

வணிகத்தில் இருக்கும் விருச்சிக ராசிகாரர்களுக்கு அவர்கள் செய்யும் வர்த்தகத்தில் உழைப்புக்கு ஏற்றஉயர்வு கட்டாயம் உண்டு. என்றாலும்  கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு  நிதானம் முக்கியம்.

மேலும் புதிய முயற்சிகள் பெரிய வெற்றியை தராது. எனவே யோசித்து செயல்படவும்.வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். 

உற்றார் உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படும். மேலும் சனி சாதகமாக இல்லாததால்  தாயாருடன் மற்றும்  தாய்வழி உறவினர்களுடனும் கருத்து மோதல்கள் வரலாம். அல்லது தாயாரை பிரிந்து செல்ல நேரிடும். அல்லது தாயாரின் உடல்நிலை பாதிக்கலாம்.

அக்டோபரில் குரு ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சிப்பது அனைத்து பணிகளிலும் வெற்றியைத் தரும். அதிர்ஷ்டம் வலுவாக இருக்கும் மற்றும் நீங்கள் வெற்றியை அடைவீர்கள். வேலையில் மாற்றம் ஏற்பட்டு நல்ல பதவி உயர்வுடன் வேறு வேலை கிடைக்கலாம்.

அதன் வக்ர நிலையில் குரு மீண்டும் டிசம்பரில் எட்டாவது வீட்டிற்குள் நுழைவார். தற்போது பணம் மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

குரு பார்வையின் பலன்கள்



ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக முறையே இரண்டாம்    வீடு  , நான்காம்  வீடு மற்றும் ஆறாம்   வீடுகளை ,பார்க்கிறார்.

இந்த பார்வையால் மனதில் இருந்த வீண் பயங்கள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறையும்.இல்லத்தில் இனிய சூழல் நிலவும். உறவுகளிடையே உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும்

குரு பகவான் விருச்சிக ராசிக்கு  பன்னிரண்டாம் வீடு, இரண்டாம் வீடு மற்றும் நான்காம் வீடு பார்ப்பதால் வாழ்க்கை துணையின் வீட்டிலிருந்து சில நல்ல செய்திகள் வர வாய்ப்பு உண்டு.

ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக முறையே இரண்டாம்    வீடு  , நான்காம்  வீடு மற்றும் ஆறாம்   வீடுகளை ,பார்க்கிறார். அதாவது தனம்  மற்றும் குடும்ப ஸ்தானம், தாயார் ஸ்தானம் மற்றும் ரோக ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார் 

இந்த பார்வையால் மனதில் இருந்த வீண் பயங்கள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறையும்.இல்லத்தில் இனிய சூழல் நிலவும். உறவுகளிடையே உங்கள் பேச்சுதாய்ரர் ஸ்தானம்க்கு மரியாதை அதிகரிக்கும்

மேலும் குரு பகவான் விருச்சிக ராசிக்கு  பன்னிரண்டாம் வீடு, இரண்டாம் வீடு மற்றும் நான்காம் வீடு பார்ப்பதால் வாழ்க்கை துணையின் வீட்டிலிருந்து சில நல்ல செய்திகள் வர வாய்ப்பு உண்டு. அது மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

துலா ராசி - குரு பெயர்ச்சி - 2025


 இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

இந்தப் பெயர்ச்சியில் குரு பகவான் துலா  ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம்வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார் .

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஒன்பதாவது வீட்டிற்கு குரு பெயர்ச்சியான பிறகு  பொருளாதார வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உத்தியோகத்தில்அனுகூலமான சூழ் நிலை  நிலவும். உடனிருப்போர் ஆதரவு ஊக்கம் தரும்.  மேலதிகாரிகளிடம் பேசும்போது பணிவே நல்லது. இடமாற்றம், பதவி மாற்றம் வரும். அது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.

புதிய வேலைக்கான முயற்சியில் உள்ளவர்களுக்கு, உங்கள் திறமைக்கேற்ற சிறப்பான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உயர்வை அடையலாம்.

தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு பலவிதத்தில் லாபம், முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

புதிய சொத்து வாங்குதல், விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் ஏற்பட வாய்ப்புள்ளது.

குருவின் பெயர்ச்சியால் , சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல யோகமான காலம்.

வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விலகி இருந்த நட்பும் உறவும் வீடுதேடி வரும். யாரிடமும் கடுஞ்சொல் பேசவேண்டாம்.  நண்பர்கள் உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

திருமணத்திற்கு காத்து இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு, வாழ்க்கைத்துணையுடன் அன்யோன்யம் உருவாகும். குழந்தைகளால் பெருமை சேரும்.

புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச்சிதறல் கூடாது.

இந்த பெயர்ச்சியால், உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம்  அதிகரிக்கும். ஆன்மிக பயணங்கள், யாத்திரைகள் போவதற்கான சூழ்  நிலை அமையும்.

குரு துலா ராசிக்கு 3ம் வீட்டுக்கும், 6ம் வீட்டுக்கும் உடையவர் என்பதால்,இந்த பெயர்ச்சியால் எல்லா விசயங்களிலும் அதிக முயற்சி, போராட்டம் மேற்கொண்ட பின்னரே  வெற்றி கிட்டும். ஆனால் அதித வெற்றி கிடைக்கும்.

முத்த சகோதர மற்றும் சகோதரியால் சில பிரச்னைகள் உண்டாகும், மேலும் அவர்களின் உடல் நலம் பாதிக்கலாம். கவனம் அவசியம்

அக்டோபரில் குரு பத்தாம் வீட்டிற்குச் செல்வதால் பணியிடத்தில் சில குழப்பங்கள் இருக்கும். அதீத நம்பிக்கையால் சில பிரச்சனைகளை பார்க்க நேரிடும்.

வக்ர நிலையில், டிசம்பரில் குரு உங்கள் ஒன்பதாம் வீட்டில் நுழைவார். இந்த நேரத்தில் வேலையில் தடைகள் இருக்கலாம் மற்றும் தந்தைக்கு  உடல்நலப் பிரச்சினைகள் வந்து தொந்தரவு செய்யலாம்.

குரு பார்வையின் பலன்கள்



ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7,ஒன்பதாம் பார்வையாக முறையே ஒன்றாம்   வீடு அதாவது ராசி , முன்றாம் வீடு மற்றும் ஐந்தாம்  வீடுகளை பார்க்கிறார். அதாவது ராசி அதாவது உடல் நலம்  , தைரிய  ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானம் பார்க்கறார்.

குருவின் ஐந்தாம் பார்வை  ராசி மீது விழுவதால்  அனைத்து விதமான நன்மைகளும் கிட்டும். மேலும் தாராளமான பணப்புழக்கம் ஏற்படும்.

குரு பகவான் உங்கள் ராசியிலிருந்து முதல் வீடு, மூன்றாம் வீடு மற்றும் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் துலா ராசி மாணவர்களுக்கு கல்வி மற்றும் உயர்கல்வியில் நல்ல பலன் கிடைக்கும்.

குழந்தைக்காக காத்து இருப்பவர்களுக்கு  குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

கன்னி ராசி - குரு பெயர்ச்சி - 2025

   


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

குரு பகவான் கன்னி ராசிக்கு 9ம் வீட்டில் இருந்து 10ம் வீடான மிதுனத்திற்கு குரு வருகிறார். வீண் செலவுகள் ஏற்படும். பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது.

உற்றார் உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.  முக்கியமாக, வேலை செய்யக்கூடிய இடத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.புதிய முயற்சிகளை செய்யும் போது மிகுந்த கவனம் தேவை

பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.

மேலும் மேலாளர்களுடன் நல்ல உறவு பேணுதல் அவசியம். அத்துடன் பணி செய்யும் இடத்தில்  பொறுமையுடன் இருக்க வேண்டும்.உங்கள் தனிப்பட்ட பணிகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தாங்கள் செய்யும் தொழிலில் யாருடைய கட்டாயத்தாலும் சட்டப்புறம்பான செயல்களை செய்ய வேண்டாம். பிரச்சனை அதிகமாகும்.

திருமண வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் மிக  சிறப்பாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பும் பாசமும் உண்டாகும்.

கன்னி ராசி  மாணவர்கள்  படிப்பில்   நல்ல மதிப்பெண்களைப் பெறவார்கள். இந்த பெயர்ச்சி கன்னி ராசி மாணவர்களின் கல்வி வாழ்க்கையில் ஒரு சிறந்த  திருப்புமுனையாக  அமையும்.

நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியில் திடீர் பணவரவு உண்டு. அத்துடன் அநாவசிய செலவுகள் குறைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ஒன்பதாமிடத்தில் இருந்த குரு பல  நற்பலன் கொடுத்த குரு பகவான்பத்தாம்  வீட்டிற்கு வருவதால் , சில சோதனைகளை தருவார்.

பொதுவாக  எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்தல், பதவி பறிபோதல், உடல் நலம் கெடுதல் போன்ற தீய பலன்கள் தருவார்.

என்றாலும் ராகு, கேது பெயர்ச்சி, மற்றும் குருவின் பார்வை பலன்கள்ளால் பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். கவலை வேண்டாம்.

பண வரவு, பழைய கடன்கள் வசூலாதல் போன்றவற்றால் நிதி நிலை மேம்படும்.

குரு பெயர்ச்சி 2025 அக்டோபர் மாதத்தில் குரு உங்கள் பதினொன்றாவது வீட்டில் நுழையும் போது, ​​உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.

திருமண உறவுகள் வலுவடையும் மற்றும் காதல் உறவுகள் இனிமையாக மாறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். டிசம்பரில் குரு அதன் வக்ர நிலையில் மீண்டும் பத்தாவது வீட்டிற்குள் நுழைவார். எனவே அந்த நேரத்தில் நீங்கள் பணியிடத்தில் மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டும்.

குரு பார்வையின் பலன்கள்




ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது ஐந்தாம் பார்வையாக  கன்னி ராசியின்  இரண்டாவது வீட்டையும், ஏழாம்பார்வையாக  கன்னி ராசியின் நான்காவது  வீட்டையும்,ஒன்பதாம் பார்வையாக ஆறாவது வீட்டையும் பார்க்கிறார். அதாவது தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் , வாகனம், சொத்து , உயர்கல்வி மற்றும் தாயார் ஸ்தானம்    மற்றும் கடன், வியாதி மற்றும்  ரோக  ஸ்தானம் பார்க்கறார்

குரு இரண்டாம்  வீட்டையும் மற்றும் நான்காவது வீட்டையும்   பார்ப்பதால் செல்வம் சேரும். குடும்ப வாழ்க்கையை இனிமையாக்குவதிலும், பணம் சம்பாதிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவீர்கள். மேலும் ஒன்பதாம் பார்வையாக ரோக  ஸ்தானம்  பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம் ராசி - குரு பெயர்ச்சி - 2025

  


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

மிதுனம் ராசி

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

சிம்மராசிக்கு 10ம் வீட்டில் இருந்து 11ம் வீடான மிதுனத்திற்கு குரு வருகிறார். குரு பெயர்ச்சியால் மிகுந்த நற்பலன்கள் அனுபவிக்கும் ராசியில் சிம்ம ராசியும் ஒன்று ஆகும்.

இந்த பெயச்சியால் செய்யக்கூடிய வேலை, தொழில், வியாபாரத்தில் மிகச் சிறப்பான லாபம் கிடைக்கும். மேலும் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும்.

சரியான திட்டமிட்டு செயல்பட்டால் எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பலவகையில் பண வரவு உண்டாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு  திருமணம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்வு ஏற்படும்.

பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். என்றாலும் அஷ்டம சனி நடைபெறுவதால் முதலிடுகளில் மிகுந்த கவனம் அவசியம்.

சிம்மராசிக்கு 10ம் வீட்டில் இருந்து 11ம் வீடான மிதுனத்திற்கு குரு வருகிறார். குரு பெயர்ச்சியால் மிகுந்த நற்பலன்கள் அனுபவிக்கும் ராசியில் சிம்ம ராசியும் ஒன்று ஆகும்.

இந்த பெயச்சியால் செய்யக்கூடிய வேலை, தொழில், வியாபாரத்தில் மிகச் சிறப்பான லாபம் கிடைக்கும். மேலும் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும்.

சரியான திட்டமிட்டு செயல்பட்டால் எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பலவகையில் பண வரவு உண்டாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு  திருமணம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்வு ஏற்படும்.

பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். என்றாலும் அஷ்டம சனி நடைபெறுவதால் முதலிடுகளில் மிகுந்த கவனம் அவசியம்.

குரு பார்வையின் பலன்கள்


ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது ஐந்தாம் பார்வை சிம்ம ராசியின் 3ம் வீட்டையும், ஏழாம்பார்வை  சிம்ம ராசியின் 5ம் வீட்டையும்,ஒன்பதாம் பார்வை 7ம் வீட்டையும் பார்க்கிறார். அதாவது தைரிய ஸ்தானம் , புத்திர ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் பார்க்கறார்.

குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் குழந்தையைப் பெற விரும்புபவர்களுக்கு  குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மேலும் 7ம் வீட்டை குரு பார்ப்பதால் வாழ்க்கை துணையுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.  குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நிகழும்.

அஷ்டம சனி பாதிப்பு இருக்கும் இந்த சமயத்தில், குரு 3ம் வீட்டை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும்.