Showing posts with label கன்னி ராசி. Show all posts
Showing posts with label கன்னி ராசி. Show all posts

கன்னி ராசி - குரு பெயர்ச்சி - 2025

   


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

குரு பகவான் கன்னி ராசிக்கு 9ம் வீட்டில் இருந்து 10ம் வீடான மிதுனத்திற்கு குரு வருகிறார். வீண் செலவுகள் ஏற்படும். பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது.

உற்றார் உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.  முக்கியமாக, வேலை செய்யக்கூடிய இடத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.புதிய முயற்சிகளை செய்யும் போது மிகுந்த கவனம் தேவை

பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.

மேலும் மேலாளர்களுடன் நல்ல உறவு பேணுதல் அவசியம். அத்துடன் பணி செய்யும் இடத்தில்  பொறுமையுடன் இருக்க வேண்டும்.உங்கள் தனிப்பட்ட பணிகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தாங்கள் செய்யும் தொழிலில் யாருடைய கட்டாயத்தாலும் சட்டப்புறம்பான செயல்களை செய்ய வேண்டாம். பிரச்சனை அதிகமாகும்.

திருமண வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் மிக  சிறப்பாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பும் பாசமும் உண்டாகும்.

கன்னி ராசி  மாணவர்கள்  படிப்பில்   நல்ல மதிப்பெண்களைப் பெறவார்கள். இந்த பெயர்ச்சி கன்னி ராசி மாணவர்களின் கல்வி வாழ்க்கையில் ஒரு சிறந்த  திருப்புமுனையாக  அமையும்.

நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியில் திடீர் பணவரவு உண்டு. அத்துடன் அநாவசிய செலவுகள் குறைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ஒன்பதாமிடத்தில் இருந்த குரு பல  நற்பலன் கொடுத்த குரு பகவான்பத்தாம்  வீட்டிற்கு வருவதால் , சில சோதனைகளை தருவார்.

பொதுவாக  எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்தல், பதவி பறிபோதல், உடல் நலம் கெடுதல் போன்ற தீய பலன்கள் தருவார்.

என்றாலும் ராகு, கேது பெயர்ச்சி, மற்றும் குருவின் பார்வை பலன்கள்ளால் பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். கவலை வேண்டாம்.

பண வரவு, பழைய கடன்கள் வசூலாதல் போன்றவற்றால் நிதி நிலை மேம்படும்.

குரு பெயர்ச்சி 2025 அக்டோபர் மாதத்தில் குரு உங்கள் பதினொன்றாவது வீட்டில் நுழையும் போது, ​​உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.

திருமண உறவுகள் வலுவடையும் மற்றும் காதல் உறவுகள் இனிமையாக மாறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். டிசம்பரில் குரு அதன் வக்ர நிலையில் மீண்டும் பத்தாவது வீட்டிற்குள் நுழைவார். எனவே அந்த நேரத்தில் நீங்கள் பணியிடத்தில் மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டும்.

குரு பார்வையின் பலன்கள்




ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது ஐந்தாம் பார்வையாக  கன்னி ராசியின்  இரண்டாவது வீட்டையும், ஏழாம்பார்வையாக  கன்னி ராசியின் நான்காவது  வீட்டையும்,ஒன்பதாம் பார்வையாக ஆறாவது வீட்டையும் பார்க்கிறார். அதாவது தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் , வாகனம், சொத்து , உயர்கல்வி மற்றும் தாயார் ஸ்தானம்    மற்றும் கடன், வியாதி மற்றும்  ரோக  ஸ்தானம் பார்க்கறார்

குரு இரண்டாம்  வீட்டையும் மற்றும் நான்காவது வீட்டையும்   பார்ப்பதால் செல்வம் சேரும். குடும்ப வாழ்க்கையை இனிமையாக்குவதிலும், பணம் சம்பாதிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவீர்கள். மேலும் ஒன்பதாம் பார்வையாக ரோக  ஸ்தானம்  பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.