நட்சத்திரம் - உத்திராடம்

 உத்திராடம்/Uthra Ashaada-Uthraadam


உத்திராடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 21 வது பிரிவு ஆகும். உத்திராடம் தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்திராடத்தின் (ζ மற்றும் σ சாகிட்டேரீ) பெயரைத் தழுவியது. உத்திராடத்தின் சமஸ்கிருத பெயரான உத்தர ஆஷாட (Uttara Ashadha) என்பது "பிந்திய வெற்றி" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "யானைத் தந்த"மும் "கட்டில் பலகை"கள் ஆகும்.

நான்கு கால்களைக் கொண்ட கட்டிலில் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை ‘முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்கள் செய்ய உகந்தது என்பதால், ‘மங்கள விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். இதன் முதல் பாதம் தனுசிலும் மற்ற மூன்றும் மகர ராசியிலும் அமைகின்றன.

உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்ற பழமொழி உத்திராடத்தின் பெருமையை கூறுகிறது 

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

1-ம் பாதமானது உடல் உறுப்பில் தொடை, தொடை எலும்பு  2, 3, 4- ம் பாதங்கள் தோள், முட்டிகள்

பார்வை

மேல்நோக்கு

பாகை

266.40 & 280.00

தமிழ் மாதம்

தை

நிறம்

சிவப்பு

இருப்பிடம்

வெட்டவெளி, வண்ணான் துறை

கணம்

மனுஷ கணம்

குணம்

ஸ்திரம்

மிருகம்

மலட்டு பசு

பறவை

வலியன்

மரம்

பாலுள்ள பலா மரம்

மலர்

சம்மங்கி, 5 வகை புஷ்பங்கள்

தமிழ் அர்த்தம்

பிந்தைய வெற்றி

தமிழ் பெயர்

கடைகுளம்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

சிலேத்தும நாடி(சமான நாடி)

ஆகுதி

அரக்கு பொடி

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

5 வகை அன்னம்

தேவதை

விஸ்வம் என்னும் விஸ்வே தேவர்கள் (பத்து விசுவதேவர்கள்)

அதி தேவதை

சூரியபகவான், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ விநாயகர்

அதிபதி

சூரியன்

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

பாம்பு வடிவத்தில் உள்ள எட்டு நட்சத்திரங்களின் தொகுப்பு

மற்ற வடிவங்கள்

கட்டில்கால்

மற்ற பெயர்கள்

ஊர்தி, மனிதானம், முடி, முதம், மூர்க்கம்

வழிபடவேண்டிய தலம்

பிரம்மபுரீஸ்வரர், சிவகங்கை, சூரியனார்கோவில், ஆலங்குடி

அதிஷ்ட எண்கள்

 1,3, 4

வணங்க வேண்டிய சித்தர்

கஸ்யபா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

பே, போ, ஜ, ஜி

அதிஷ்ட நிறங்கள்

வெளிர்நீலம், வெளிர் மஞ்சள்

அதிஷ்ட திசை

தென்கிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

எமிதிஸ்ட்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

சல்லியன், ஏனாதி நாயனார், ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஆளவந்தார்

குலம்

 சூத்திர குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்


பூராடம் தொடர்ச்சி


பொதுவான குணங்கள் (Common 
Characteristics)

பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். ஆடை ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். பூராடம் போராடும் என்ற கூற்றிற்கேற்ப எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்படாமல் எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள். எந்த வொரு விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட ஒரு நளினம் இருக்கும். பூராடத்தில் நூலாடாது என்ற பழமொழி இருந்தாலும் இது தவறானதாகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாட நூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும்.

குடும்ப வாழ்க்கை (Family Life)

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் மீது அதிக பாசம் இருக்கும். அவர்களுக்காக வாழ்க்கை துணையையே ஒதுக்கி விடுவார்கள். சுவையான உணவை விரும்பி உண்பார்கள். எல்லோரிடமும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பழகுவர்கள். உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் பேசுவர்கள். பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பார்கள். அவர்களின் விருப்பங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவர்கள். குறிப்பாக தாயிடம் அதிக அன்பு செலுத்துவர்கள்.

நண்பர்கள் (Friends)

பல வருடங்கள் பழகிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மணிக்கணக்காகப் பேசினாலும் சொந்த விஷயங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர். சிலர், உங்களைப் பற்றி புறம் பேசுவார்கள். பிள்ளைகளையும் வாழ்க்கை துணையையும் நண்பராகவே நினைப்பார்கள். மேலும் நண்பர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள்.

நட்பு நட்சத்திரங்கள் (Benefit Stars)

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்(Disbenefit Stars or Stars to Avoid)

பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்கார்களின் நடப்பை தவிர்க்கலாம்

தொழில் (Business)

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளில் ஆர்வம் இருக்கும். கணக்கு வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலை தொடர்பு, சுற்று சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். எந்த வேலையில் ஈடுபட்டால் உங்கள் திறமை முழுவதையும் பயன்படுத்தி மிகச் சிறப்பாகச் செய்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவர்கள்.

சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்ப வராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகி அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். அயல் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு. அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும்.

தசா பலன்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் தசை முதல் தசையாக வரும். சுக்கிரன் தசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சுக்கிரன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


சுக்கிரன் தசை:

சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வாழ்வில் சுபிட்சம், கல்வியில் மேன்மை, சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சுக வாழ்வு பாதிப்படையும்.

 
சூரியன் தசை:


இரண்டாவதாக வரும் சூரிய தசை காலங்கள் 6 வருடமாகும். இந்த தசையில் சிறு சிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். பேச்சாற்றல் ஏற்படும்.

 
சந்திரன் தசை:


மூன்றாவதாக வரும் சந்திர தசையில் குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.

செவ்வாய் தசை:


அடுத்து வரும் நான்காவது செவ்வாய் தசை முன்னேற்றத்தை தரும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்று இருக்க வேண்டும்

ராகு தசை:


ஐந்தாவதாக வரும் ராகு தசை 18 வருடங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் முற்பாதி முன்னேற்றத்தையும், பிற்பாதியில் கண்டங்களையும் உண்டாக்கும்.மாரக தசை என்பதால் எதிலும் கவனம் தேவை

பொது பரிகாரம்

பூராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள வஞ்சி அல்லது நாவல் மற்றும் மா மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

ஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்களை பேசி தீர்த்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பூரட்டாதி, புனர்பூசம், உத்திரம், ரேவதி, உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, அஸ்தம் ஆகும்

பொருந்தா நட்சத்திரங்கள்:


பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. பூசம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் பஸ்சிமேசாய வித்ம ஹே
பாசஹஸ்தாய தீமஹி
தந்நோ வருண ப்ரசோதயாத்!! 

நட்சத்திரம் - பூராடம்

 பூராடம்  Poorva Ashaada/ Pooraadam



பூராடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 20 வது பிரிவு ஆகும். டி பூராட நட்சத்திர பிரிவு தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூராடத்தின் (δ மற்றும் ε சாகிட்டேரீ) பெயரைத் தழுவியது. பூராடத்தின் சமஸ்கிருத பெயரான பூர்வ ஆஷாடா (Purva Ashadha) என்பது "தொடக்க வெற்றி" அல்லது "வெல்ல முடியாதது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "விசிறி" அல்லது "முறம்" ஆகும். "பூர்வாஷாடா" என்றும் அழைக்கப்படும்.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

1, 2, 3-ம் பாதங்கள் - கணுக்கால்கள். 4-ம் பாதம் - கால், முன்னங்கால்.

பார்வை

கீழ்நோக்கு

பாகை

253.20 - 266.40

தமிழ் மாதம்

மார்கழி

நிறம்

கருமை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

மனுஷ கணம்

குணம்

உக்கிரம்

மிருகம்

ஆண் சிங்கம்

பறவை

உள்ளான்

மரம்

வஞ்சி அல்லது நாவல் மரம் (பாலுள்ள மாமரம்)

மலர்

எருக்கம் பூ

தமிழ் அர்த்தம்

 முந்தைய வெற்றி

தமிழ் பெயர்

உடைகுளம்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 ஸ்திரம்

நாடி

தட்சிண பார்சுவ நாடி

ஆகுதி

பூசணித் துண்டு

பஞ்சபூதம்

ஆகாயம்

நைவேத்யம்

தயிர், நெய் சாதம்

தேவதை

அஜைகபாதன் -  11 ருத்ரர்களில் ஒருவர்

அதி தேவதை

ஸ்ரீ லக்ஷ்மி குபேரன்

அதிபதி

 சுக்கிரன்

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

சதுர வடிவில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட தொகுப்பு

மற்ற வடிவங்கள்

கட்டில்கால்

மற்ற பெயர்கள்

நீர், புனல், பயம், அறல், கோ, பொய்வாவி,  உடைகுளம்

வழிபடவேண்டிய தலம்

ஆகாசபுரீஸ்வரர், தஞ்சாவூர்

அதிஷ்ட எண்கள்

2, 3, 7

வணங்க வேண்டிய சித்தர்

ஹரிதா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஸே, ஸோ, தா, தீ

அதிஷ்ட நிறங்கள்

ஊதா, கிரீம்

அதிஷ்ட திசை

வடகிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

மார்கா (மஞ்சள்)

அதிஷ்ட உலோகம்

வெண்கலம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், விசாகம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

குபேரன், கின்னரன், ராமகிருஷ்ண பரமஹம்சர்,நாராயண குரு, மறைமலையடிகள், காமராசர், கலிலியோ

குலம்

 பிரம்ம குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்



மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

மூலம் தொடர்ச்சி

நட்சத்திரம் - மூலம்



பொதுவான குணங்கள்

தனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். நல்லவர்கள்; வல்லவர்கள். அதேநேரம் கர்வமும் மிகுந்திருக்கும். போராடுவதற்குத் தயங்காதவர்கள். இந்த நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. ஆதலால், இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். "யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல்" எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். கேது சாரத்தில், குரு பகவான் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்கள், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்ற பழமொழி அல்ல. வீண் பழிமொழி என்று சொல்லாம். ஆனி மூலம் அரசாளும் அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனை பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது. எனவே மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல உடல் வாகும் பேச்சு திறமையும் சிறப்பாக இருக்கும் .

குடும்ப வாழ்க்கை

சிறு வயதில் கேது தசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு குடும்பத்தில் பிரச்சனைகளும் உண்டாகும் என்றாலும் வளர வளர குடும்பம் செழிக்கும் பெரியோர் தாய் தந்தை போன்றவர்களிடம் மரியாதை பாசமும் அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாடும். பிள்ளைகளை திட்டமிட்டு வளர்த்து படிக்க வைப்பார்கள். சுக்கிர தசை இளம் வயதில் வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் இளமையிலே திருமணம் நடைபெறும்.

பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தர் பீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள். 

நண்பர்கள்

மூல நட்சத்திரக்காரர்கள் அரசனுக்கு நண்பராக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. எதிரிகளை கூட மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நண்பர்களுக்கும் கொடுப்பார்கள் 

நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

ரோகிணி,திருவோணம், அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக இருந்தால், உங்கள் தொழிலுக்கும், உத்தியோகத்திற்கு நல்ல துணையாக இருப்பார்கள்.

பரணி, பூரம், பூராடம், திருவாதிரை, சுவாதி, சதயம் உண்மையான வர்களாகவும், முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் இருப்பார்கள்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்கள் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கிடைப்பது அதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் இவர்கள் கை உதவிக்கொண்டே இருக்கும். நீங்கள் உயர்வு அடையும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள். நல்ல நட்பின் அடையாளம் இவர்கள்தான். 

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்ப்பது நல்லது ஆகும்.

தொழில்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், சட்டம், ஆர்க்கிடெக்சர், கட்டிடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர் இராணுவம், காவல்துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களை கையாள்வதில் கை தேர்ந்தவர்கள். நாட்டை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று மூல நட்சத்திர காரர்களை கூறலாம். ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், ஷிப்பிங் கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருந்து கம்பெனி ஆகியவற்றால் பெருத்த லாபம் ஈட்டுவார்கள்.

கொடி நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் என வந்து விட்டால் மனதில் உற்சாகம் கொள்வார்கள். பணிபுரியும் நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மூத்த அதிகாரிகளுக்கு, கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக விளங்குவார்கள். தனது பதவிகளுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவார்கள். நல்ல அதிகாரமிக்க பதவிகளை வகிப்பார்கள். ஓய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். 

தசா பலன்கள் 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் திசையாக வரும். கேது தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேது தசை:

இந்த தசை காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலையும், தாய்க்கு பிரச்சனைகளும் உண்டாகும். 

சுக்கிரன் தசை:

இரண்டாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருடங்கள் நடைபெறும். இளம் வயதில் சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு உண்டாகும். இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் செல்வம் செல்வாக்கும் பெருகும். 

சூரியன் தசை: 

மூன்றாவதாக வரும் சூரியன் தசை 6 வருடங்கள் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். உடலில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். 

சந்திரன் தசை: 

அடுத்து வரும் நான்காவது தசை சந்திர தசை அதுவும் சூரிய தசை போல் தான் இருக்கும். அதாவது நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற முடியும். 

செவ்வாய் தசை:

ஐந்தாவதாக வரும் செவ்வாய் தசை 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் இது மாரக தசை ஆகும். செவ்வாய் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு உண்டாகும். 

பொது பரிகாரம்

மூல நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பாலுள்ள மாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மூல நட்சத்திரத்தில் திருமணம் செய்தல், கிரகப்பிரவேசம், வண்டி வாகனம் வாங்குதல், பயணம் மேற்கொள்வது, விதை விதைப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது, பரிகார பூஜை செய்வது, மருந்து உண்ணுதல் தானியம் வாங்குவது நல்லது.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது 

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. 

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.) 

சொல்ல வேண்டிய மந்திரம்


ஓம் தத் புருஷாய வித்மஹே

வாயு புத்ராய தீமஹி

தன்னோ மாருதி ப்ரசோயாத் 


மூலம்

 நட்சத்திரம் - மூலம்


மூலம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 19 வது பிரிவு ஆகும். மூல நட்சத்திரப் பிரிவு விருச்சிக விண்மீன் கூட்டத்தில் காணப்படும் 9 நட்சத்திரங்களைக் கொண்ட மூலத்தின் ε, ζ, η, θ, ι, κ, λ, μ மற்றும் ν இசுக்கோர்ப்பியோனிசு) பெயரைத் தழுவியது. மூலத்தின் சமஸ்கிரத பெயரான மூல (Mula) என்பது "மூலம்" அல்லது "வேர்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "வேர்களின் கட்டு" ஆகும்.

அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும். தனுசு ராசியில் பூரண நட்சத்திரம் இருக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும் என்பர். மூலம் நட்சத்திரத்தில் தான் அனுமன் மற்றும் ராவணன் பிறந்தார்கள். 

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

இடுப்பு, தொடை, நரம்புகள்

பார்வை

கீழ்நோக்கு

பாகை

240.00  & 253.20

தமிழ் மாதம்

மார்கழி

நிறம்

கருமை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

ராட்ஷ கணம்

குணம்

உக்கிரம்

மிருகம்

பெண் நாய்

பறவை

240.00 - 253.20

மரம்

பாலுள்ள மாமரம்

மலர்

அசோக புஷ்பம் (சிவப்பு)

தமிழ் அர்த்தம்

வேர்

தமிழ் பெயர்

குருகு

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

சரம்

நாடி

தட்சிண பார்சுவ நாடி

ஆகுதி

சர்க்கரைவள்ளி வேர்

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

தயிர் வடை

தேவதை

அஷ்டதிக்பாலர்களில் வடமேற்குக்கு  அதிபதியான நிருதி

அதி தேவதை

ஸ்ரீஆஞ்சநேயர்

அதிபதி

கேது

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், அலி நட்சத்திரம்

உருவம்

அங்குசம் போன்ற வடிவத்தில் ஆறு  நட்சத்திரக் கூட்டமைப்பு

மற்ற வடிவங்கள்

அங்குசம்,சிங்கத்தின் வால்,பொற்காளம்,யானையின் துதிக்கை

மற்ற பெயர்கள்

அசுரர், இராக்கதர், அவுணர், கொக்கு, தேட்கடை, ஆனி

வழிபடவேண்டிய தலம்

சிங்கீயஸ்வரர்,  திருவள்ளுவர்

அதிஷ்ட எண்கள்

5, 7, 9

வணங்க வேண்டிய சித்தர்

 குட்சா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

யே, யோ, பா, பீ

அதிஷ்ட நிறங்கள்

பழுப்பு, மஞ்சள்

அதிஷ்ட திசை

வடமேற்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், செவ்வாய்

அணியவேண்டிய நவரத்தினம்

வெண் ஓபல் (Opal)

அதிஷ்ட உலோகம்

பிளாட்டினம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

அனுமன்

குலம்

இராட்சச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்

மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

கேட்டை தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டினால் கட்டும், கேட்டை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும் என்ற பழமொழி உண்டு. இது அவரவர் வசதிக்கேற்ப அமைந்த கிரக நிலைகளின் படி அமையும். மேலும் கோட்டை கட்டி ஆள்கிறீர்களோ இல்லையோ, கோட்டையில் இருந்து ஆட்சி செய்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். மன தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். கேட்டையின் நட்சத்திர அதிபதி புதன் பகவான் என்பதால் வருங்காலத்தைப் பற்றி முன்கூட்டியே அறியும் திறன் இருக்கும். தான தர்மங்களை செய்வார்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு நல்ல அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, பொய்மை போன்றவை நிறைய இருக்கும்.

செல்வம் சேர்ப்பதில் துடிப்புடன் செயல்படுபவர்கள். அதே நேரத்தில் சில நேரங்களில், 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பதற்கேற்ப கிடைத்த அளவில் மனத் திருப்தி அடைந்து விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் உங்களைப் பற்றிப் பெருமை பேசுவார்கள்.. சில நேரங்களில் விரக்தியுடன் காணப்படுவார்கள். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யாமல் சுயமாகத் தொழில் செய்து பணம் ஈட்டுவார்கள்.

நீர் நிலைகளில் குளிப்பது அதிக ஆர்வமும், நொறுக்கு தீனி தின்பது அதிக விருப்பம் கொண்டவர்கள். அடிக்கடி எதையாவது கொரித்து கொண்டே இருப்பர்கள் ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் விவேகியாகவும் மாறுவார்கள். செய்த நன்றி மறவாதவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல் சமாதானத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். நல்ல நுண்ணறிவும் பேச்சு திறனும், மற்றவர்களின் மன நிலையை அறிந்து பேசும் திறமை சாலியாகவும், எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பவர் களாகவும், புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்து கொள்பவர் களாகவும் இருப்பார்கள். ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமில்லை. பெண்ணாக இருந்தால் திருமணத்திற்கு பின் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது தவறான ஒன்று


குடும்ப வாழ்க்கை

கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர கூடிய யோகம் கொண்டவர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நற்குணங்கள் நிறைய இருக்கும். தர்மம் தலை காக்கும் என்ற நம்பிக்கை உடையவர்கள் ஆதலால் நிறைய தான தர்மங்களை செய்வார்கள். முன்கோபியாக இருந்தாலும் மலர்ந்த முகமும் இனிமையான புன்னகையும் கொண்டவர்கள்.

வாழ்க்கை துணை, பிள்ளைகள் மீது அதிக அக்கறையும் உடன் பிறப்பு களிடையே நிறைய பாசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய இனம், உற்றார் உறவினர்களை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். நிறைய பேருக்கு காதல் திருமணம் நடைபெறும். உயர்ந்த இடத்தில் மட்டுமே சிநேகிதம் வைத்து கொள்வார்கள். இருப்பதை வைத்து திருப்தி அடைவார்கள்.

உறவினர்களால் மாற்றத்துக்கு உள்ளாகி வருத்தப்படுவார்கள். மற்றவர்கள் செய்த உதவியை கடைசி வரை மறக்க மாட்டார்கள்.


நண்பர்கள்

நண்பர்கள் அதிகமானாலும் யாராவது ஒருவரிடத்தில் மட்டும் தான் நெருக்கமாக இருப்பார்கள். அதாவது நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள்.


நட்பு நட்சத்திரங்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம் ஆகியவை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் ஆகும்.


தொழில்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பலர் கதாசிரியர் களாகவும், பத்திரிகை நிருபர் களாகவும், மனோ தத்துவ நிபுணர் களாகவும், நடிகர் நடிகை களாகவும், கட்டிட காண்டிராக்டர் களாகவும், அழகு கலை நிபுணர் களாகவும் பிரதிபலிப்பார்கள். புகைப்படம் எடுக்கும் துறை கம்ப்யூட்டர் துறை, எல்.ஐ.சி, அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஆர்வம் இருக்கும். பல இடங்களில் சிறந்த ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.


தசா பலன்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தசை முதல் திசையாக வரும். புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் புதன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


புதன் தசை:
புதன் பலம் பெற்று சுபர் சேர்க்கை பார்வையுடன் இருந்தால் நல்ல அறிவாற்றல் கல்வியில் மேன்மை, பேச்சாற்றலால் மற்றவர்களை கவரும் அமைப்பு கொடுக்கும். புதன் பலம் இழந்து இருந்தால் அடிக்கடி உடல் நல பாதிப்புகள், ஞாபக சக்தி குறைவு கல்வியில் மந்த நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கு குறையும்.
கேது தசை:
இரண்டாவதாக வரும் கேது தசை 7 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையை கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிப்படைந்து ஞாபக சக்தி குறையும்.
சுக்கிரன் தசை:
மூன்றாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். இல்லையெனில் மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.
சூரியன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சூரிய தசை. இந்த தசை நடைபெறும் 6 வருடம் சூரியன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும்
சந்திரன் தசை:
ஐந்தாவதாக வரும் சந்திர தசை 10 வருட காலங்கள். சந்திரன் நீசம் அடைந்தால் நல்லோர் நட்சத்திரம் ஏறி இருந்தாலும் நல்லோர் பார்வை பெற்று இருந்தாலும் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும்.
6 வதாக வரும் ராகு தசை மாரக தசையாக கூறப்படுகிறது.


பொது பரிகாரம்

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மரம் பாலுள்ள பராய் மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

ஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்குகளை பேசி தீர்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

கார்த்திகை 2, 3, 4, அஸ்தம், மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், அவிட்டம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. அஸ்வினி வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் பூவராஹாய வித்மஹே
வஜ்ர ருபாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்