ரோகிணி

நட்சத்திரம் -ரோகிணி


ரோகிணி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ஆகும். இது ரிஷப ராசியிலுள்ள பெரிய சிவப்புப் பேருரு நட்சத்திரம். இதனுடைய அறிவியற் பெயர் வழக்கிலுள்ள பொதுப்பெயர் அல்டிபாரன் (Aldebaran) ஆகும். இதை வானில் எளிதில் கண்டுபிடிக்க முடியும். Orion Belt என்று சொல்லப்படும் மூன்று நட்சத்திரங்களில் இடமிருந்து வலம் (வட அரைகோளத்தில்) சென்று அதே நேர்கோட்டில் முதலில் காணப்படும் பிரகாசமான நட்சத்திரம் ரோகிணி தான்.

வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. ரோகிணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

உரோகிணியுறுமீ னேற்றரியேகம்
முரண்மிகுகிங்கம் மூன்றேமீனும்

பொருள் : ரோகிணி உச்சத்திற்கு வரும்போது சிங்கராசியில் 3 1/4 நாழிகை யளவு தொடுவானத்திற்கு மேலே வந்திருக்கும் 

நட்சத்திர காரத்துவம்:

ஆளும் உறுப்புகள்

முகம், வாய், நாக்கு, கழுத்து

பார்வை

மேல்நோக்கு

பாகை

40.00 - 53.20

தமிழ் மாதம்

வைகாசி

நிறம்

மஞ்சள்

இருப்பிடம்

நிலம்

கணம்

மனுஷ கணம்

குணம்

ஸ்திரம்

மிருகம்

ஆண் நாகம்

பறவை

ஆந்தை

மரம்

பாலுள்ள நாவல் மரம்

மலர்

தாமரை

தமிழ் அர்த்தம்

சிவப்பானது

தமிழ் பெயர்

சகடு

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

சரம்

நாடி

கபம், வாம பார்சுவ நாடி

ஆகுதி

நவதானியங்கள்

பஞ்சபூதம்

பூமி

நைவேத்யம்

பால்

தேவதை

ஸ்ரீ கிருஷ்ணன், பிரம்மா

அதி தேவதை

பிரஜாபதி

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம்

அதிபதி

சந்திரன்

நட்சத்திரம் தன்மைகள்

சர நட்சத்திரம்

உருவம்

 தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்

மற்ற வடிவங்கள்

ஐம்மீண்

மற்ற பெயர்கள்

சகடு,  பார், உருள், வையம், சாகாடு, பண்டி

வழிபடவேண்டிய தலம்

பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில், காஞ்சீபுரம், ஜம்புநாதர் திருக்கோயில், நெல்லிக்கேடு,  ஜம்பு கேஸ்வரர் ஆலயம், செம்பாக்கம்

அதிஷ்ட எண்கள்

2, 7, 8

வணங்க வேண்டிய சித்தர்

அனுரோஹி, மச்சமுனி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஓ,வ,வி, வு 

அதிஷ்ட நிறங்கள்

 வெள்ளை, வெளிர் நீலம்

அதிஷ்ட திசை

மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

திங்கள், புதன்

அணியவேண்டிய நவரத்தினம்

முத்து

அதிஷ்ட உலோகம்

வெள்ளி

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

கிருஷ்ணன்,பீமசேனன்

குலம்

க்ஷத்திரிய குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்


பொதுவான குணங்கள்

ரோகிணி நட்சத்திரம் தாய்க்கும் தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படுத்தும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அது தவறான கருத்து ஆகும் சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியின் ஆளுகையின் கீழ் வருகிறது. சந்திரனின் சாரம் பெற்றுள்ள இந்த நட்சத்திரம், பால்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது.

சுதந்திரமானவர்கள் ஆனால் மற்றவர்களைச் சார்ந்து வாழ்பவார்கள். மிகவும் பாசமுள்ளவர்கள். பெண்கள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகவும் பொன் பொருள் மீது அதிக ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதி நுட்ப மதியுடனும் தெளிந்த அறிவுடனும் எந்த வொரு செயலையும் செய்வார்கள். பகைவர்களை கூட நண்பர்களாக்கி கொள்ளும் ஆற்றல் இருக்கும். இனிமையான பேச்சாற்றலும் பின்னால் நடப்பதை முன் கூட்டியே அறிவும் திறனும் உண்டு. பேச்சில் ஒளிவு மறைவு என்பதை இருக்காது. எப்பொழுதும் நேர்மையாக வாழ விரும்புவதால் தவறுகள் செய்ய தயங்குவார்கள். விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிலும் எப்பொழுதும் கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டே இருப்பார்கள். சுகபோக வாழ்க்கையை விரும்பும் இவர்களுக்கு சோம்பேறி தனமும் உடன்பிறந்ததாகும்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். எனவே சந்திரன் ரோகிணி மீது கொண்ட ஆசை காரணமாக துன்பம் அடைந்தது போல இவர்களும் சில சமயம் தங்கள் ஆசைகள் காரணமாக துன்பம் அடைவார்கள் 

குடும்ப வாழ்க்கை

வாழ்க்கை துணை அழகானவராகவும்,புத்திசாலியாகவும், மிகுந்த எதிர்பார்ப்புகள் உடையவர்களாகவும், உணர்ச்சி வசப்படுபவராக இருப்பார். கருத்து ஒற்றுமை அதிகம் இருக்கும். உங்களது குணம் மற்றவர்களை கவரும் வகையிலும் மென்மையாகவும் இருக்கும். உங்களது குடும்பத்தினர் மேல் அக்கறை காட்டுவார்கள். வீட்டு வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்வார்கள். இதனால் குடும்ப வாழக்கை இனிமையானதாக இருக்கும்.

இந்த நட்சத்திர காரர்களுக்கு விட்டு கொடுக்கும் குணம் உண்டு என்பதால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். சண்டையே வந்தாலும் இனிமையாக பேசி சமாளித்து விடுவீர்கள். காதலிலும் விடாபடியாக கடைசி வரை நின்று திருமணம் செய்வார்கள். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். 

நண்பர்கள்

தங்கள் எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவர்கள் பேச்சில் ஒளிவு மறைவு என்பதே இருக்காது. இரக்கம் குணம் உள்ளவர்கள். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்க்காதவர்கள். பொதுவாக ரோகிணி நடசத்திரகார்களை நண்பர்களாக பெற்றால் அவர்களிடமிருந்து அதிக உதவிகளையும் நன்மைகளையும் பெற்றிடலாம். 

நட்பு நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த நட்சத்திரக்காரர்களால் அதிக நன்மைகளும் உதவிகளும் கிடைக்கும். 

மேலும் வாழ்க்கை துணையாக கார்த்திகை மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரங்களை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை வரும் போது கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ரிஷப ராசி கார்த்திகை அதாவது கார்த்திகை 2,3, 4 மற்றும் ரிஷப ராசியில் வரும் மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். 

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த மூன்று நட்சத்திரங்களையும் அருகில் கூட சேர்க்கக் கூடாது. இந்த மூன்று நட்சத்த்திர நாட்களில் பயணங்கள் கூடாது. எந்த ஒன்றையும் தொடங்கக்கூடாது, ஒப்பந்தங்கள் போடக்கூடாது. முக்கிய சந்திப்புகளை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் ஒரு சதவீதம் கூட லாபம் இருக்காது. ஆனால் மற்றவர்கள் உங்கள் பேரைச்சொல்லி லாபம் அடைவார்கள்.

அஸ்வினி, மகம், மூலம் இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிந்தவரை இவர்களைத் தவிர்ப்பது நல்லது. பழகினால் ஏதாவதொரு சூழ்நிலையில் உங்களை சிக்கலில் சிக்கவிட்டுவிடுவார்கள். இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எந்த வேலையும் உங்களுக்கு எதிராகத் திரும்பும், முக்கியமாக வழக்குகள் இந்த நட்சத்திர நாட்களில் நடத்தினால் அது உங்களுக்கு எதிராகத் திரும்பும். 

தொழில்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை இருக்காது. ஆனாலும் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம் கொள்ளாமல் தொழிலாளர்களையும் தங்களுக்கு சமமாக நடத்துவார்கள். திறமையான சிற்பிகளாகவும், நடனம் மற்றும் இசை கலைஞர்களாகவும், படைப்பாற்றல் இயக்குநர்களாகவும், சமையல் கலை நிபுணர்களாகவும் இருப்பார்கள். விற்பனை செய்தல் போன்ற துறைகளிலும் இவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. விளம்பர துறை, கதை எழுதுதல், மார்க்கெட்டிங் மற்றும் நகை வடிவமைத்தல் உட்பட தொழில்களில் மிகப்பெரிய உச்சங்களை தொடுவும் வாய்ப்பு உண்டு

தசா பலன்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை முதல் திசையாக வரும். சந்திர தசை மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சந்திர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம

சந்திர தசை: 

சந்திர தசை காலங்களில் பிறப்பதால் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வலி உண்டாக்கும் வியாதிகள், தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகலாம். 

செவ்வாய் தசை:

7 வருடங்கள் நடக்கும் இந்த தசை காலங்களில் கல்வியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சற்று முன் கோபமும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். சிலருக்கு சொத்து நாசம் உண்டாகும். இந்த தசை முடிவு சிறப்பாக இருக்கும்.

ராகு தசை: 

மூன்றாவது திசையாக வரும் ராகு தசை காலங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று பொதுவாக சொல்ல முடியாது. நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். கல்வியில் தடை, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய அமைப்பு கொடுக்கும். தேவையற்ற நட்புகளாலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். முன் கோபமும் பிடிவாத குணமும் இருக்கும். ஆனால் ராகு நல்ல நிலையில் இருந்தால் இந்த நிலை மாறும்.

குரு தசை:

அடுத்தாக வரும் தசை குரு தசை ஆகும். இந்த 4-வதாக வரும் குரு தசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் வாழ்வில் பல சாதனைகள் செய்யும் அமைப்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எடுத்த காரியங்கள் கை கூடும்.

சனி தசை: 

5வதாக வரும் சனி தசை நல்லதசை என்றுதான் சொல்ல வேண்டும் குரு தசை மொத்தம் 19 வருட காலங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் பல சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் பெயரும் புகழும் உயரும். செல்வம் செல்வாக்கு பெருகும். ஆடை ஆபரண சேர்க்கை, அரசாங்கத்தால் நன்மை உண்டாகும் 

புதன் தசை: 

அடுத்தாக வரும் தசை அதாவது ஆறாவதாக வரும் புதன் தசை மாரகதசை என்றாலும் புதன் பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையுடனிருந்தால் நற்பலனை அடைய முடியும். மேற்கூறிய தசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரி கோணங்களில் சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் நற்பலனை அடையலாம். இல்லையெனில் சில சங்கடங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும


மேற்கூறிய அனைத்து தசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பொது பரிகாரம்

ரோகிணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நாவல் மரம். இம்மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களைப் பெற முடியும். .

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பரணி நட்சத்திர நாளில் அதாவது பரணி நட்சத்திரத்தில் இசை, ஓவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்குதல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல், நடன அரங்கேற்றம் செய்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், மூலிகை செடிகளை பயிரிடுதல் மற்றும் ரோஜா உள்ளிட்ட முற் செடிகளை நடுவது போன்றவை மிகவும் நல்லது.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

ரோகிணி நட்சத்திர நாளில் அதாவது ரோகிணி நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், பூ முடித்தல், திருமணம் சம்மந்தம் செய்தல், குழந்தையை தொட்டிலில் இடல், பெயர் சூட்டுதல், வாசக்கால் வைத்தல், புது மனை புகுதல், வங்கி கணக்கு தொடங்குதல், மாடுகள் வாங்குதல், கதிர் அறுத்தல், கல்வி கற்றல், புத்தகம் வெளியிடல், விதை விதைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புனித யாத்திரை செல்லுதல் நல்லது. 

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது அஸ்வனி நட்சத்திரத்திற்கு

பொருந்தும் நட்சத்திரங்கள்:

மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகியவை பொருந்த நட்சத்திரங்கள். சுவாதி வேதை ஆகும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

பிரஜாபதி சதுர்பாஹீ ; 

கமண்டலு அஷ ஸீத்ரத்ருத் வரா அபயகர ; 

ப்தே; ரோகிணி தேவதா அஸ்துமே