கார்த்திகை / கிருத்திகை

நட்சத்திரம் -கார்த்திகை


இருபத்தேழு நட்சத்திரங்களில் 3வது நட்சத்திரமாகவும், சூரியனின் முதல் நட்சத்திரமாக வருவது கார்த்திகை ஆகும். இந்திய ஜோதிடப்படி கால்பகுதி மேஷ ராசியிலும், முக்கால் பகுதி ரிஷப ராசியிலும் வருகிறது. அதாவது கிருத்திகை நட்சத்திரத்தின் 1ம் பாதம் மேஷ ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். மேலும் எளிதில் யாரும் வெறும் கண்ணால் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடியது. இதனுடைய அறிவியல் பெயர் எம்45 ஆகும். சாதாரண வழக்கில் பேசப்படும் பெயர் பிலேயடாசு ஆகும்.

பொருள்: கார்த்திகை ஆறு நட்சத்திரங்களைக் கொண்டது. அது உச்சத்தில் வரும்போது சிங்கராசி (கீழ்வானத்தில்) தோன்றி ஒரு நாழிகையாகி இருக்கும்.

வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. கார்த்திகை குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

                       கார்த்திகை யறுமீன் ஏற்றரியேகம்.

பொருள்: மூன்று நட்சத்திரங்கள் அடுப்பு போல அமைந்திருக்கும். இது உச்சத்திற்கு வரும் போது கடக ராசி உதித்து நான்கு நாழிகை ஆகியிருக்கும்.


நட்சத்திர காரத்துவம்


ஆளும் உறுப்புகள்

1 - ம்: முகம், கழுத்து, தாடை.2, 3, 4 பாதங்கள்: - முகம், கழுத்து, தாடை.

பார்வை

கீழ்நோக்கு.

பாகை

26.40 - 40.00

நிறம்

சிவப்பு

இருப்பிடம்

சூன்யப் பிரதேசம், காடு

கணம்

ராக்ஷஸ கணம்

குணம்

மிஸ்ரம்/சாதாரணம்

மிருகம்

பெண் ஆடு

பறவை

மயில்

மரம்

பாலுள்ள அத்தி மரம்

மலர்

மல்லிகை

தமிழ் அர்த்தம்

வெட்டுவது

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

வாம பார்சுவ நாடி, அந்த்யா நாடி

ஆகுதி

அன்னம்

பஞ்சபூதம்

நிலம்

நைவேத்யம்

தயிர் சாதம்

தேவதை

முருகன்

அதி தேவதை

அக்னி (இரண்டு முகங்களும் நான்கு கரங்களும் சிவந்த நிறமும் வாய்த்த அக்னி பகவான்)

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி. சதயம், பூசம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம்

அதிபதி

சூரியன்

நட்சத்திரம் தன்மைகள்

பெண் நட்சத்திரம், மிஸ்ர நட்சத்திரம், அந்தரங்கம் நட்சத்திரம்

உருவம்

கத்தி,கற்றை, வாள், தீஜ்வாலை, சவரக்கத்தி, சாவி, மண்வெட்டி

மற்ற வடிவங்கள்

தீக்கொழுந்துகள் எரிவது போன்ற வடிவமுடைய ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டம்.

மற்ற பெயர்கள்

எரி, அங்கி, ஆரல், அளவு, இனால், அழல், அறுமீன் 

வழிபடவேண்டிய தலம்

 காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில், கஞ்சா நகரம்

அதிஷ்ட எண்கள்

 1, 6, 9

வணங்க வேண்டிய சித்தர்

ரோமரிஷி சித்தர்

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

அ, இ, உ, எ

அதிஷ்ட நிறங்கள்

 மெரூன், வெளிர்சாம்பல்

அதிஷ்ட திசை

கிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

ஞாயிறு, வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

ரூபி

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணிஅஸ்தம்திருவோணம்சுவாதி. சதயம்பூசம்உத்திரட்டாதிஅசுவினிமகம்மூலம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

கார்த்திகேயன்

குலம்

 பிரம்ம குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்

பொதுவான குணங்கள்:

”‘தேஜஸ்வி...” அதாவது அழகானவர்கள் என்று யவன ஜாதகப் பாடலும், 'மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்' என்று பிருகத் ஜாதக நூலும், ‘கொள்ளும் ரச வர்க்கத்தில் பிரியன்; அற்ப நித்திரையன்; கூறுஞ் செஞ்சொல்...’ அதாவது இனிப்பை விரும்பி உண்பவர், ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர், அரசர்களுக்கு பிரியமானவர் என்று ஜாதக அலங்கார நூலும் இந்த நட்சத்திரத்தின் குணத்தை கூறுகிறது. கனவுலகத்தில் சஞ்சரிப்பது எல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள். தன் சக்திக்கு எது முடியுமோ அதை மட்டும் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலித்தனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். காரசாரமான விவாதங்களில் இவர்களுக்கு நிகர் இவர்களே. பசியை கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உணவு வகைகளை ரசித்து ருசித்து உண்பார்கள்.


குடும்ப வாழ்க்கை:

இந்த நட்சத்திரக்காரர்கள் காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். பொதுவாக காதல் விவகாரத்தில் ஒதுங்கியே இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் கராராக நடந்து கொள்வார்கள். ஆனால் வாழ்க்கை துணையிடம் அதிக நம்பிக்கை வைத்து இருப்பார்கள். பொதுவாக இவர்களுக்கு மனமொத்த வாழ்க்கைத் துணையே அமையும். வாழ்க்கை துணை, பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்பார்கள். தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள். அதிகமாக தெய்வ பக்தி உண்டு. ஆனால், தெய்வ பக்தியை காட்டிலும் தாய், தாய் நாடு, தாய்மொழியின் மீது அதிக பாசம் இருக்கும். 33 வயதிற்கு மேல் வாழ்வில் நல்ல ஏற்றம் உண்டாகும்.


நண்பர்கள்:

நண்பர்களிடம் மிக உண்மையாக இருப்பார்கள். அதேசமயம் நண்பர்கள் துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தாலும் அவர்கள் சுயநலகாரர்களாகவே அமைவார்கள்.


நட்பு நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் அதிக நன்மைகளை தரும். இந்த நட்சத்திரக்காரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். அஸ்வினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம் இந்த ஆறு நட்சத்திரங்களும் நன்மை தருவதாக இருக்கும்

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திர நாட்களில் சொத்துக்கள் வாகனங்கள் வாங்கவும். லாபகரமாக விற்பதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு சிறந்தது. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் தொழில் தொடங்க தேவையான கடன் உதவி பெறவும், வீட்டுக் கடன் வாங்கவும், கடன்களை திரும்ப அடைக்கவும் நல்லது. பொதுவாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரகாரர்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையாக வந்தாலும் அவஸ்தைகள் உடன் வாழ வேண்டும். இந்த நட்சத்திர நாட்களில் புதிய முயற்சிகள் செய்யக்கூடாது, பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. அறுவை சிகிச்சை செய்யக்கூடாது.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரகார்களுக்கு உங்களால் நன்மை அவர்களுக்கு உண்டு ஆனால் இவர்களுக்கு அவர்களால் எந்த நன்மையையும் கிடைக்காது. ஆயில்யம், கேட்டை, ரேவதி இவர்களுடன் ஏன் பழகினோம் என்று வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படும்.

வேதை என்னும் நெருப்பாய் இம்சை தரும் நட்சத்திரம்- விசாகம். முழுமையாக தவிர்க்க வேண்டும்.


தொழில்:

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். எனவே வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், நாட்டுக்காக அர்பணிக்கும் தொழிகளை செய்யலாம். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் செய்ய மாட்டார்கள்.


தசா பலன்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய தசை வரும். சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம்.

சூரிய தசை:
சூரிய தசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களையும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் பாதிப்புகள் குறையும்.
சந்திர தசை:
இரண்டாவது தசையாக வரும் சந்திர தசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறுபாடு மற்றும் ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் சுபர் பார்வை சேர்க்கையுடன் சந்திரன் இருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
செவ்வாய் தசை:
3வதாக வரும் தசை செவ்வாய் தசை, இது 7 வருடங்கள் நடைபெறும். இந்த தசா காலத்தில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும். ஆனால் முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.
ராகு தசை:
ராகு தசை 18 வருடங்கள் நான்காவது தசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஆனால் பொதுவாக சூரியனுக்கு ராகு பகை. எனவே இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய பிரச்சினை, மருத்துவ செலவுகள் போன்றவை அனுபவிக்க வேண்டி வரும். ராகு நல்ல பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றால் மிகுந்த நல்ல பலன்களை வாரி வழங்குவார் என்பது உண்மை.
குரு தசை:
குரு தசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆனாலும் நோய்கள், சிலருடன் விரோதங்கள், வீட்டில் சிறு சிறு சண்டைகள் ஏற்படும்
சனி தசை:
ஆறாவதாக வரும் சனி தசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என்பது எந்த ஐயமும் இல்லை.
பொது பரிகாரம்

கார்த்திகை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பரணி நட்சத்திரம் வரும் நாளில் அதாவது பரணி நட்சத்திரத்தில் கடன்களை பைசல் செய்ய, சிலம்பாட்டம் பயில சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள பழைய வாகனங்களை விற்பது, கிணறு மற்றும் சுரங்கம் வெட்டுதல், மனை விற்றல் போன்ற காரியங்களை செய்யலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது கார்த்திகை நட்சத்திரத்திற்கு

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வினி, பரணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

மிருகசிரீஷம், புனர்பூசம், ஆயில்யம், கேட்டை, அவிட்டம், புரட்டாதி, ரேவதி பொருந்தா நட்சத்திரங்கள் ஆகும். விசாகம் வேதையாகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

சண்முக காயத்திரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்


4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

கார்த்திகை 1ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு


முதல் பாதத்திற்கு நவாம்ச அதிபதியாக குரு இருப்பதால், இதில் பிறந்தவர்கள் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். ஆனால் செல்வத்தையும், புகழை விரும்புபவர்கள். அதையும் சேர்ப்பார்கள். நல்ல ஞானத்துடன் தந்திரத்தால் வெல்பவர்கள். ஆனால் கல்வியில் அதிக பற்று இருக்காது. சுய கௌரவம் அதிகமாக இருக்கும். முன் கோபம் அதிகமாக இருக்கும்.

கார்த்திகை 2ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி


நராசி நாதனாக சுக்கிரன் ஆள்வதால் இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் பரந்த மனதுடன் பழகுவார்கள். எல்லோரையும் எளிதாக நம்புவார்கள். அதனால் ஏமாறவும் செய்வார்கள். இந்தப் பாதத்திற்கு சனி பகவானின் அம்சம் உண்டு. இதில் பிறந்தவர்கள் ஆசை, பாசம், பற்றுள்ளவர்கள். உயரிய நோக்கங்களை அடைய போராடுபவர்கள். வீரம் மிக்கவர்கள், தற்பெருமை கொள்பவர்கள். ஆசார அனுச்டங்களிலும், வேத சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் நம்பிக்கை இல்லாதவர்கள். சிலர் மிகுந்த மூர்க்க தனத்துடன் இருப்பார்கள். கல்வி, கலைகளை பயிலுவதில் ஆர்வம் இருக்கும்

கார்த்திகை 3ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி


இந்த பாதமும் சனி பகவானின் அம்சம் உடையது. இதில் பிறந்தவர்களுக்கு பேராசை, பணவெறி, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற விடாமுயற்சி, கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பு போன்றவை இருக்கும். பிறருக்கு உபத்திரம் செய்யும் குணமும், மெதுவான குணமும் (புத்தி குறைவு) இருக்கும். வேடிக்கை, விளையாட்டில் இளமை கழிப்பார்கள். கூடா பழக்கவழக்கங்களுக்கு ஆளாக நேரும்.

கார்த்திகை 4ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு


இந்த பாதம் குருவின் ஆதிக்கம் உடையது. அடக்கம், ஒழுக்கம், நட்பு, பாசம் போன்ற நல்ல இயல்புகள் இதில் அடங்கும். தர்ம சிந்தனையும், இரக்க குணமும், தெய்வ பக்தியும் ஆகியவை இருக்கும். ஆனால் ஏழ்மை, ஆரோக்கிய குறைபாடு இருக்கும். மற்றும் பிறருடன் சண்டை செய்பவராகவும், கல்வியில் ஊக்கம் குறைந்தும் காணப்படும்.

இவையாவையும் பொது குணங்களே. இவை நல்ல கெட்ட கிரக பார்வைகளாலும், சேர்க்கைகளாலும் மாறுபடும். மேலும் லக்கினத்தை வைத்து தான் முழுவதையும் கணிக்க முடியும்