Showing posts with label பொதுவான குணங்கள். Show all posts
Showing posts with label பொதுவான குணங்கள். Show all posts

மூலம் தொடர்ச்சி

நட்சத்திரம் - மூலம்



பொதுவான குணங்கள்

தனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். நல்லவர்கள்; வல்லவர்கள். அதேநேரம் கர்வமும் மிகுந்திருக்கும். போராடுவதற்குத் தயங்காதவர்கள். இந்த நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. ஆதலால், இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். "யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல்" எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். கேது சாரத்தில், குரு பகவான் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்கள், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்ற பழமொழி அல்ல. வீண் பழிமொழி என்று சொல்லாம். ஆனி மூலம் அரசாளும் அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனை பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது. எனவே மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல உடல் வாகும் பேச்சு திறமையும் சிறப்பாக இருக்கும் .

குடும்ப வாழ்க்கை

சிறு வயதில் கேது தசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு குடும்பத்தில் பிரச்சனைகளும் உண்டாகும் என்றாலும் வளர வளர குடும்பம் செழிக்கும் பெரியோர் தாய் தந்தை போன்றவர்களிடம் மரியாதை பாசமும் அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாடும். பிள்ளைகளை திட்டமிட்டு வளர்த்து படிக்க வைப்பார்கள். சுக்கிர தசை இளம் வயதில் வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் இளமையிலே திருமணம் நடைபெறும்.

பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தர் பீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள். 

நண்பர்கள்

மூல நட்சத்திரக்காரர்கள் அரசனுக்கு நண்பராக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. எதிரிகளை கூட மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நண்பர்களுக்கும் கொடுப்பார்கள் 

நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

ரோகிணி,திருவோணம், அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக இருந்தால், உங்கள் தொழிலுக்கும், உத்தியோகத்திற்கு நல்ல துணையாக இருப்பார்கள்.

பரணி, பூரம், பூராடம், திருவாதிரை, சுவாதி, சதயம் உண்மையான வர்களாகவும், முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் இருப்பார்கள்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்கள் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கிடைப்பது அதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் இவர்கள் கை உதவிக்கொண்டே இருக்கும். நீங்கள் உயர்வு அடையும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள். நல்ல நட்பின் அடையாளம் இவர்கள்தான். 

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்ப்பது நல்லது ஆகும்.

தொழில்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், சட்டம், ஆர்க்கிடெக்சர், கட்டிடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர் இராணுவம், காவல்துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களை கையாள்வதில் கை தேர்ந்தவர்கள். நாட்டை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று மூல நட்சத்திர காரர்களை கூறலாம். ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், ஷிப்பிங் கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருந்து கம்பெனி ஆகியவற்றால் பெருத்த லாபம் ஈட்டுவார்கள்.

கொடி நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் என வந்து விட்டால் மனதில் உற்சாகம் கொள்வார்கள். பணிபுரியும் நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மூத்த அதிகாரிகளுக்கு, கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக விளங்குவார்கள். தனது பதவிகளுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவார்கள். நல்ல அதிகாரமிக்க பதவிகளை வகிப்பார்கள். ஓய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். 

தசா பலன்கள் 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் திசையாக வரும். கேது தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேது தசை:

இந்த தசை காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலையும், தாய்க்கு பிரச்சனைகளும் உண்டாகும். 

சுக்கிரன் தசை:

இரண்டாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருடங்கள் நடைபெறும். இளம் வயதில் சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு உண்டாகும். இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் செல்வம் செல்வாக்கும் பெருகும். 

சூரியன் தசை: 

மூன்றாவதாக வரும் சூரியன் தசை 6 வருடங்கள் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். உடலில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். 

சந்திரன் தசை: 

அடுத்து வரும் நான்காவது தசை சந்திர தசை அதுவும் சூரிய தசை போல் தான் இருக்கும். அதாவது நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற முடியும். 

செவ்வாய் தசை:

ஐந்தாவதாக வரும் செவ்வாய் தசை 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் இது மாரக தசை ஆகும். செவ்வாய் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு உண்டாகும். 

பொது பரிகாரம்

மூல நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பாலுள்ள மாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மூல நட்சத்திரத்தில் திருமணம் செய்தல், கிரகப்பிரவேசம், வண்டி வாகனம் வாங்குதல், பயணம் மேற்கொள்வது, விதை விதைப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது, பரிகார பூஜை செய்வது, மருந்து உண்ணுதல் தானியம் வாங்குவது நல்லது.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது 

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. 

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.) 

சொல்ல வேண்டிய மந்திரம்


ஓம் தத் புருஷாய வித்மஹே

வாயு புத்ராய தீமஹி

தன்னோ மாருதி ப்ரசோயாத் 


சுவாதி - தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

சுவாதி நட்சத்திர அதிபதி ராகு பகவான் என்பதால் முன்கோபம் அதிகம் இருந்தாலும் நல்ல அறிவுள்ள திறமைசாலிகள். நற்பண்புகள் உடையவர். மனித உரிமைகளைப் பற்றி அடிக்கடி சட்டம் பேசுவார்கள். பிறருக்காக அதிகம் உதவி செய்வார்கள். அனைவரையும் தன் வசம் இழுத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்கள். சில நேரங்களில் தான் சொல்வது தான் சரி என தவறான வழியையும் காட்டி விடுவார்கள். திடமான புக்தி உடையவர்கள் என்றாலும் அடிக்கடி தன் புக்தியை மாற்றி கொள்வார்கள். எளிதல் பயப்படும் குணம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரிடமிருந்தும் வித்தியாசப் படுவார்கள் எல்லா நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். விளையாட்டு குணம் அதிகம் இருக்கும். சுயமரியாதையை இழக்க விரும்ப மாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் தனக்கு சரியெனப் பட்டதை மட்டுமே செய்வார்கள். அதில் தவறுகள் நேர்ந்தால் பகிங்கிரமாக மன்னிப்பையும் கேட்பார்கள்.

அழகும், தெய்வ பக்தியும் மிகுந்தவர்கள். கூரிய அறிவு, ஞாபக சக்தி, கலைகளில் ஆர்வம், தன்னம்பிக்கை, தாராள மனப்பான்மை, இரக்க சிந்தனை கொண்டவர்கள். ஓரளவு தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அதேநேரம் கோபம், பாசம், சுயநலமும் இவர்களிடம் உண்டு. துலாக்கோல் போல நல்லது, கெட்டதை சீர்தூக்கிப் பார்த்து, தீயதை அகற்றி நல்லதைக் கடைப்பிடித்து, வாழ்வில் உயர்வார்கள். வயதான பிறகும் கூட விளையாட்டுப் பிள்ளையாக நடந்து கொள்வார்கள். குழந்தைகளுடன் இருப்பதை விரும்புவார்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளைக் கூட கவர்ந்து விடுவார்கள்.


குடும்ப வாழ்க்கை

பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு இரவு பகல் பாராமல் உழைப்பர்கள். உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். சுவையான உணவு வகைகளை ரசித்து சாப்பிடுவார்கள். உங்கள் சுதந்திரத்தில் வெளி நபர்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டார்கள்

உற்றார் உறவினர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். மண வாழ்க்கை சற்று தாமதமாகத்தான் அமையும். அதிக பிள்ளைகளை பெற்று கொள்ள விட்டால் பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை தாராளமாக செய்து கொடுப்பார்கள். முன் கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் கணவன் மனைவியிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.


நண்பர்கள்

நண்பர்கள் அதிகம் இல்லாவிட்டாலும் அனைவரிடமும் சமமாக பழகுவார்கள். சுவாதி நட்சத்திரக்காரர்கள் இனிமையாக பழகினாலும் கோபம் வரும் சமயம் துர் வார்த்தைகள் உபயோகிப்பார்கள். அது பல நேரங்களில் நட்பை கெடுத்து விடும்.


நட்பு நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தொழில்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகல விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் கற்றது கைமண் அளவு என்பதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகளாகவும், மார்கெட்டிங் துறையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். எப்பொழுதும் சுதந்திரமாகவே செயல்படுவார்கள். சகல சாஸ்திரங்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார்கள்.


தசா பலன்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை முதல் திசையாக வரும். ராகு தசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ராகு தசை:
இளம் வயதில் ராகு தசை நடைபெறும் என்பதால் ராகு நின்ற வீட்டின் அதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். அதுவே ராகு பாவ கிரக சேர்க்கை உடன் இருந்தால் பேச்சில் வேகம், கல்வியில் மந்த நிலை பிடிவாத குணம், பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
குரு தசை:
இரண்டாவதாக வரும் குரு தசை காலங்களில் வாழ்வில் முன்னேற்றம், கல்வியில் ஈடுபாடு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி. பெற்றோர் பெரியோர்களிடம் ஒற்றுமை குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, பணவரவுகள் தாராளமாக இருக்கும் யோகம் கொடுக்கும்.
சனி தசை:
மூன்றாவதாக வரும் சனி தசை 19 வருட காலங்கள் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் யோகமும் முன்னேற்றமும், சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.
புதன் தசை:
அடுத்து வரும் நான்காவது புதன்தசை எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
கேது தசை:
ஐந்தாவதாக வரும் கேது தசை 7 வருட காலங்கள் ஆகும். பொதுவாக கேது தசை யாருக்கு நல்லது செய்வது கிடையாது. உடல் மற்றும் மனதில் பிரச்சினைகள் வரும்.


பொது பரிகாரம்

சுவாதி நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் மருத மரமாகும். இம்மரம் அமைந்துள்ள திரு ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மாங்கல்யம் செய்தல், திருமணம் செய்தல், பெயர் சூட்டுதல், பூ முடித்தல், முடி களைதல், வீடு வாகனம் வாங்கல், கல்வி ஜோதிடம் மருத்துவம் கற்றல், அன்னதானம் ஆயுத பிரயோகம், சமுத்திர யாத்திரை செய்தல், பயிடுதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

புனர்பூசம், துலாம், விசாகம், பூரட்டாதி, கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. ரோகிணி வேதை ஆகும். (குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

உக்ரம் வீரம் மகாவிஷணும்
ஜீவலந்தம் ஸர்வதேமுகம்
ந்ருஸிம்ஹம் பிஷனம் பத்ரும்
ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம்!




மிருகசீரிஷம்

நட்சத்திரம் -மிருகசீரிஷம்


மிருகசீரிடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். இதனுடைய அறிவியல் பெயர் (பொதுவாக வழங்கப்படும் பெயர் Meissa). தற்கால வானியல் படி இது Orion என்ற விண்மீன் குழுவின் தலைப்பக்கம் காணப்படுகிறது. இந்திய வானியலின் பழைய மரபு படியும் ஜோதிட மரபுப்படியும் இது ரிஷப ராசியிலும் உள்ளது என்று கணக்கிடப்படுகிறது. மானின் தலை போலத் தோற்றமளிப்பதால் மிருகசீரிசம் எனப் பெயர் பெற்றது. அதாவது ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.


ஆளும் உறுப்புகள்

பாதம் -1,2 - முகம், கன்னம், நாக்கு பாதம் -3, 4 - தொண்டை, தோள், காது, நெஞ்செலும்பு

பார்வை

சம நோக்கு பார்வை( திரியங்முக நட்சத்திரம்)

பாகை

53.20 - 66.40

நிறம்

இளஞ்சிவப்பு

இருப்பிடம்

நகரம்

கணம்

தேவ கணம்

குணம்

தாமசம், மென்மை

மிருகம்

பெண் சாரை பாம்பு

பறவை

கோழி

மரம்

பாலில்லாத கருங்காலி மரம்

மலர்

வெள்ளை அல்லி

தமிழ் அர்த்தம்

மான் தலை

தமிழ் பெயர்

மான்றலை

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

ஸ்திரம்

நாடி

மத்திம நாடி

ஆகுதி

பயிறு, எள்

பஞ்சபூதம்

பூமி

நைவேத்யம்

பாயசம்

தேவதை

 நாக தேவதைகள்

அதி தேவதை

சோமன், சந்திர ஸூடேஸ்வரன்

அதிபதி

செவ்வாய்

நட்சத்திரம் தன்மைகள்

அலி நட்சத்திரம்,  அபசவ்விய நட்சத்திரம்

உருவம்

மானின் தலை வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள் சேர்ந்த நட்சத்திரக் கூட்டம்.

மற்ற வடிவங்கள்

மான்தலை,தேங்கைக்கண்

மற்ற பெயர்கள்

மான்றலை, தேங்காய், ஐந்தானம், மும்மீன், மிருகவதனம்

வழிபடவேண்டிய தலம்

ஆதிநாராயணப் பெருமாள் கோவில், முகூந்தனூர்

அதிஷ்ட எண்கள்

3, 7, 9

வணங்க வேண்டிய சித்தர்

ஸ்வேதயி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

வே, வோ, கா, சீ

அதிஷ்ட நிறங்கள்

மஞ்சள், பழுப்பு

அதிஷ்ட திசை

கிழக்கு, தெற்கு

அதிஷ்ட கிழமைகள்

செவ்வாய், வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

பவளம்

அதிஷ்ட உலோகம்

வெண்கலம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

கண்ணப்பர், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சேந்தமங்கலம் சுவாமிகள், புருஷமிருகம்

குலம்

வேடர் குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்


பொதுவான குணங்கள்

இதில் 1, 2 ம் பாதங்கள் சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும் 3, 4ம் பாதங்கள் புதனின் ராசியான மிதுனத்தில் அடங்கும். அதாவது முதல் இரண்டு பாதங்களில் பிறப்பவர்கள் ரிஷப ராசி காரர்களாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசி காரர்களாகவும் இருப்பார்கள்.
ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். மொழி, இனப்பற்று அதிகம் உடையவர்கள். கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தாய் நாட்டை மறக்காதவர்கள். யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுய சிந்தனையோடு எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். முன் கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும், தவறை கண்டால் தயக்கமின்றி தட்டி கேட்டுகும் தைரியம் இருக்கும். எப்பொழுதும் இளமையாக இருப்பவர்கள், உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள், புத்திக்கூர்மை, அளவுகடந்த ஊக்கம், பேச்சுத்திறமை உள்ளவர்கள். அன்பு, நட்பு, பாசம் உள்ளவர்கள். தனக்கென ஒரு தனிவழியைத் தேர்ந்தெடுத்து நடப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மேலும் தன்னை தானே வழி நடத்திக் கொள்ளும் திடமான நம்பிக்கை கொண்டவர்கள். எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பேச்சு ஆற்றலால் பகைவரையும் நண்பராக்கிக் கொள்வார்கள்

குடும்ப வாழ்க்கை

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் குடும்பத்தில் விட்டு கொடுக்கும் பண்பில்லாதவர்களாக இருப்பார்கள். இதனால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவாகவே இருக்கும் அடிக்கடி மன சஞ்சலங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். அதனால் மனக்கசப்பு ஏற்படும். வெளி நபர்களிடம் விட்டுக் கொடுக்கும் பண்பிருக்கும் அளவிற்கு வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடக்க மாட்டார்கள். உரிய வயதிலேயே திருமணம் முடியும். பிள்ளைகளுக்காக சொத்து சேர்ப்பார்கள். வீட்டில் அதாவது வாழக்கை துணை மற்றும் பிள்ளைகளிடம் கறாராக நடந்துகொள்வார்கள். வாழ்க்கை துணை வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார்

நண்பர்கள்

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டு இருப்பதாலும், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணத்தாலும் அதனால் உங்களைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் எப்போதும் இருப்பார்கள்.

நட்பு நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த நட்சத்திரக்காரர்கள் நட்பு வைத்துக் கொள்ளவும், திருமணம் செய்து கொள்வதும் நல்லது. அதே போல் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் காரியங்கள் செய்தால் வெற்றி பெறலாம்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம். சித்திரை நட்சத்திரக்காரர்கள் டென்ஷனை உருவாக்குவதுடன் மனம் சங்கடப்படும் நிலை உருவாக்குவார்கள். அவர்களுடன் பழகுவது, திருமணம் செய்து கொள்வதை தவிர்த்தல் நல்லது.

தொழில்

விவசாய இயந்திரத் தொழில், பூமி தொடர்பான இயந்திரங்கள் (பொக்லைன்) தொழில், விவசாய இடு பொருள் வியாபாரம், பதிப்பகம், அச்சுத்தொழில், பத்திரிகைத் தொழில், பேச்சுத் தொழில், நம்பிக்கை மற்றும் உற்சாகம் தரும் பேச்சு மற்றும் எழுத்துத் தொழில். உயர்தர உணவகங்கள், பெண்கள் விடுதிகள், உயர்தர மது விடுதிகள், மனமகிழ் மன்றம் போன்ற தொழில்கள் இவர்களுக்கு ஏற்றது எனலாம்

தசா பலன்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை முதல் திசையாக வரும். செவ்வாய் தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் செவ்வாய் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


செவ்வாய் தசை:
செவ்வாய் திசையில் எதிலும் துடிப்பு, ரத்த சம்பந்தபட்ட பாதிப்பு, கழுத்து மற்றும் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள் உண்டாகலாம். பொன் மற்றும் ஆடை சேர்க்கை உண்டாகும்
ராகு தசை:
அடுத்து வரும் 2வது தசையாக ராகு தசையாகும். இது மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். இளமை காலத்தில் ராகு தசை வருவதால் ராகு பலம் பெற்றிருந்தால் மட்டும் நல்ல கல்வி அறிவை பெற முடியும். ராகு பலம் இல்லாமல் இருந்தால் அல்லது கெட்ட கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் கல்வியில் மந்த நிலை, முன் கோபம் முரட்டு சுபாவம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் அவ பெயர்கள், பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடு ஆகியவை உண்டாகும்.
குரு தசை:
மூன்றாவதாக வரும் குரு தசை 7 மற்றும் 10 க்குடைய தசை என்பதால் இந்த காலங்களில் சற்று உயர்வுகளைப் பெற முடியும். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு குரு நன்மை தராது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் பொதுவாக இந்த தசையில் இவர்கள் பூமி மனை வாங்கும் யோகம் பொருளாதார மேன்மையும் செய்யும் உத்தியோகத்தில் உயர்வு ஆகிய நன்மைகள் உண்டாகும்.
சனி தசை:
நான்காவதாக வரும் சனி தசை மாரக தசை என்றாலும் சனி பலம் பெற்று அமைந்து விட்டால் சமுதாயத்தில் நல்ல உயர்வையும், வாழ்வில் அதிஷ்டத்தையும் அள்ளித் தருவார். வயிறு, கண் சம்மந்தப்பட்ட வியாதிகள் வர வாய்ப்பு உள்ளது. சனி நன்றாக இருப்பவருக்கு இரும்பு சம்மந்தப்பட்ட தொழில்களால் நன்மையையும், உடனிருக்கும் தொழிலாளர்களால் உயர்வும் உண்டாகும். நல்ல செல்வந்தர்களாக வாழக் கூடிய ஆற்றல் இருக்கும்.

பொது பரிகாரம்

மிருகசீரிஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் கருங்காலி மரமாகும். இம்மரத்தை வழிபடுவதால் நல்ல பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும் நாளில் அதாவது மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நட்சத்திரத்தில் திருமணம், காது குத்துதல், சீமந்தம் செய்தல் ஆபரணங்கள் செய்தல், தானியம் வாங்குதல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், யாத்திரை செல்லுதல், கல்வி கற்க தொடங்குதல் கால் நடைகள் வாங்குதல் போன்ற நல்ல காரியங்கள் செய்யலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி, ரேவதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, பரணி

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

விச்வேச்வராய நரகார்வை தாரணாய
கர்ணாம்ருதாய சசிகேகர தாரணாய
கர்பூரகந்தி தவளாய ஜடாதராய
தாரித்திய துக்க தஹணாய நமச் சிவாய.


4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

மிருகசீரிஷம்1ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சூரியன்

செல்வத்துடனும், திறமையுடனும், விசாலமான புத்தியுடனும், அழகுடனும் இருப்பார்கள். மன அழுத்தம் கொண்டவர்கள். பிறர் பொருட்களை அபகரிக்கும் குணம் இருக்கும் உடலில் சிரங்கு போன்ற வியாதிகள் வர வாய்ப்பு உண்டு. வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளை மிகவும் நேசிப்பார்கள். தாத்தா, பாட்டியின் மீது அதிக பாசம் இருக்கும்.

மிருகசீரிஷம்2ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி புதன்

உண்மை பேசுவதுடன், உண்மையாக அனைவரிடமும் பழகுவார்கள். சத்தியவான்கள். மிகவும் திறமை இருந்தாலும் முன்கோபம் அதிகம். ஆண்களாக இருந்தால் பெண்களிடம் அற்ப ஆசையோடு இருப்பார்கள். இரக்க சுபாவம் மிகுந்தவராக இருப்பார்கள். பகைவர்க்கும் அருளும் உள்ளம் கொண்டிருப்பார்கள். சுய முயற்சியால் முன்னேற விரும்புவார்கள். ஏழை மற்றும் பணக்காரன் என்கிற வர்க்க பேதம் பார்க்காமல் மனிதர்களின் நல்ல குணத்தையும், உள்ளத்தையும் மட்டுமே பார்த்து உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள். உலகின் விஷயங்களை பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருப்பார்கள்.

மிருகசீரிஷம்3ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி புதன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சுக்கிரன்

வாழ்க்கையை யதார்த்தமாகவும் சந்தோஷமாகவும் கழிப்பார்கள். சண்டை என்றாலே காத தூரம் ஓடுவீர்கள். எப்போதும் சமாதானத்தையே விரும்புவீர்கள். வாழ்வில் எத்தகைய கடினமான சூழ்நிலைகளை சந்தித்தாலும் சிறிதும் மனம் கலங்க மாட்டார்கள். இறைவழிபாடு ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு இருக்கும். பெற்றோர், மனைவி, பிள்ளைகளை மிகவும் நேசிப்பார்கள். அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்

மிருகசீரிஷம்4ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி புதன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி செவ்வாய்

திறமை உள்ளவராகவும், சாதுவாகவும், பிறர் மனதை புரிந்து கொண்டு அதன்படி நடப்பவராகவும் இருப்பார்கள். காம குணம், நெஞ்ச அழுத்தம், பிடிவாத குணம் இருக்கும். நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதால் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள். அதனால், மற்றவர்களால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள். வாழ்க்கைத்துணை தங்களிடம் அதிக பாசம் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பிள்ளைகளை மிகவும் கட்டுப்பாட்டுடனும் பொறுப்பு உணர்வுடனும் வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ரோகிணி

நட்சத்திரம் -ரோகிணி


ரோகிணி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ஆகும். இது ரிஷப ராசியிலுள்ள பெரிய சிவப்புப் பேருரு நட்சத்திரம். இதனுடைய அறிவியற் பெயர் வழக்கிலுள்ள பொதுப்பெயர் அல்டிபாரன் (Aldebaran) ஆகும். இதை வானில் எளிதில் கண்டுபிடிக்க முடியும். Orion Belt என்று சொல்லப்படும் மூன்று நட்சத்திரங்களில் இடமிருந்து வலம் (வட அரைகோளத்தில்) சென்று அதே நேர்கோட்டில் முதலில் காணப்படும் பிரகாசமான நட்சத்திரம் ரோகிணி தான்.

வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. ரோகிணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

உரோகிணியுறுமீ னேற்றரியேகம்
முரண்மிகுகிங்கம் மூன்றேமீனும்

பொருள் : ரோகிணி உச்சத்திற்கு வரும்போது சிங்கராசியில் 3 1/4 நாழிகை யளவு தொடுவானத்திற்கு மேலே வந்திருக்கும் 

நட்சத்திர காரத்துவம்:

ஆளும் உறுப்புகள்

முகம், வாய், நாக்கு, கழுத்து

பார்வை

மேல்நோக்கு

பாகை

40.00 - 53.20

தமிழ் மாதம்

வைகாசி

நிறம்

மஞ்சள்

இருப்பிடம்

நிலம்

கணம்

மனுஷ கணம்

குணம்

ஸ்திரம்

மிருகம்

ஆண் நாகம்

பறவை

ஆந்தை

மரம்

பாலுள்ள நாவல் மரம்

மலர்

தாமரை

தமிழ் அர்த்தம்

சிவப்பானது

தமிழ் பெயர்

சகடு

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

சரம்

நாடி

கபம், வாம பார்சுவ நாடி

ஆகுதி

நவதானியங்கள்

பஞ்சபூதம்

பூமி

நைவேத்யம்

பால்

தேவதை

ஸ்ரீ கிருஷ்ணன், பிரம்மா

அதி தேவதை

பிரஜாபதி

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம்

அதிபதி

சந்திரன்

நட்சத்திரம் தன்மைகள்

சர நட்சத்திரம்

உருவம்

 தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்

மற்ற வடிவங்கள்

ஐம்மீண்

மற்ற பெயர்கள்

சகடு,  பார், உருள், வையம், சாகாடு, பண்டி

வழிபடவேண்டிய தலம்

பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில், காஞ்சீபுரம், ஜம்புநாதர் திருக்கோயில், நெல்லிக்கேடு,  ஜம்பு கேஸ்வரர் ஆலயம், செம்பாக்கம்

அதிஷ்ட எண்கள்

2, 7, 8

வணங்க வேண்டிய சித்தர்

அனுரோஹி, மச்சமுனி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஓ,வ,வி, வு 

அதிஷ்ட நிறங்கள்

 வெள்ளை, வெளிர் நீலம்

அதிஷ்ட திசை

மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

திங்கள், புதன்

அணியவேண்டிய நவரத்தினம்

முத்து

அதிஷ்ட உலோகம்

வெள்ளி

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

கிருஷ்ணன்,பீமசேனன்

குலம்

க்ஷத்திரிய குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்


பொதுவான குணங்கள்

ரோகிணி நட்சத்திரம் தாய்க்கும் தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படுத்தும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அது தவறான கருத்து ஆகும் சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியின் ஆளுகையின் கீழ் வருகிறது. சந்திரனின் சாரம் பெற்றுள்ள இந்த நட்சத்திரம், பால்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது.

சுதந்திரமானவர்கள் ஆனால் மற்றவர்களைச் சார்ந்து வாழ்பவார்கள். மிகவும் பாசமுள்ளவர்கள். பெண்கள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகவும் பொன் பொருள் மீது அதிக ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதி நுட்ப மதியுடனும் தெளிந்த அறிவுடனும் எந்த வொரு செயலையும் செய்வார்கள். பகைவர்களை கூட நண்பர்களாக்கி கொள்ளும் ஆற்றல் இருக்கும். இனிமையான பேச்சாற்றலும் பின்னால் நடப்பதை முன் கூட்டியே அறிவும் திறனும் உண்டு. பேச்சில் ஒளிவு மறைவு என்பதை இருக்காது. எப்பொழுதும் நேர்மையாக வாழ விரும்புவதால் தவறுகள் செய்ய தயங்குவார்கள். விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிலும் எப்பொழுதும் கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டே இருப்பார்கள். சுகபோக வாழ்க்கையை விரும்பும் இவர்களுக்கு சோம்பேறி தனமும் உடன்பிறந்ததாகும்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். எனவே சந்திரன் ரோகிணி மீது கொண்ட ஆசை காரணமாக துன்பம் அடைந்தது போல இவர்களும் சில சமயம் தங்கள் ஆசைகள் காரணமாக துன்பம் அடைவார்கள் 

குடும்ப வாழ்க்கை

வாழ்க்கை துணை அழகானவராகவும்,புத்திசாலியாகவும், மிகுந்த எதிர்பார்ப்புகள் உடையவர்களாகவும், உணர்ச்சி வசப்படுபவராக இருப்பார். கருத்து ஒற்றுமை அதிகம் இருக்கும். உங்களது குணம் மற்றவர்களை கவரும் வகையிலும் மென்மையாகவும் இருக்கும். உங்களது குடும்பத்தினர் மேல் அக்கறை காட்டுவார்கள். வீட்டு வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்வார்கள். இதனால் குடும்ப வாழக்கை இனிமையானதாக இருக்கும்.

இந்த நட்சத்திர காரர்களுக்கு விட்டு கொடுக்கும் குணம் உண்டு என்பதால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். சண்டையே வந்தாலும் இனிமையாக பேசி சமாளித்து விடுவீர்கள். காதலிலும் விடாபடியாக கடைசி வரை நின்று திருமணம் செய்வார்கள். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். 

நண்பர்கள்

தங்கள் எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவர்கள் பேச்சில் ஒளிவு மறைவு என்பதே இருக்காது. இரக்கம் குணம் உள்ளவர்கள். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்க்காதவர்கள். பொதுவாக ரோகிணி நடசத்திரகார்களை நண்பர்களாக பெற்றால் அவர்களிடமிருந்து அதிக உதவிகளையும் நன்மைகளையும் பெற்றிடலாம். 

நட்பு நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த நட்சத்திரக்காரர்களால் அதிக நன்மைகளும் உதவிகளும் கிடைக்கும். 

மேலும் வாழ்க்கை துணையாக கார்த்திகை மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரங்களை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை வரும் போது கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ரிஷப ராசி கார்த்திகை அதாவது கார்த்திகை 2,3, 4 மற்றும் ரிஷப ராசியில் வரும் மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். 

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த மூன்று நட்சத்திரங்களையும் அருகில் கூட சேர்க்கக் கூடாது. இந்த மூன்று நட்சத்த்திர நாட்களில் பயணங்கள் கூடாது. எந்த ஒன்றையும் தொடங்கக்கூடாது, ஒப்பந்தங்கள் போடக்கூடாது. முக்கிய சந்திப்புகளை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் ஒரு சதவீதம் கூட லாபம் இருக்காது. ஆனால் மற்றவர்கள் உங்கள் பேரைச்சொல்லி லாபம் அடைவார்கள்.

அஸ்வினி, மகம், மூலம் இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிந்தவரை இவர்களைத் தவிர்ப்பது நல்லது. பழகினால் ஏதாவதொரு சூழ்நிலையில் உங்களை சிக்கலில் சிக்கவிட்டுவிடுவார்கள். இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எந்த வேலையும் உங்களுக்கு எதிராகத் திரும்பும், முக்கியமாக வழக்குகள் இந்த நட்சத்திர நாட்களில் நடத்தினால் அது உங்களுக்கு எதிராகத் திரும்பும். 

தொழில்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை இருக்காது. ஆனாலும் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம் கொள்ளாமல் தொழிலாளர்களையும் தங்களுக்கு சமமாக நடத்துவார்கள். திறமையான சிற்பிகளாகவும், நடனம் மற்றும் இசை கலைஞர்களாகவும், படைப்பாற்றல் இயக்குநர்களாகவும், சமையல் கலை நிபுணர்களாகவும் இருப்பார்கள். விற்பனை செய்தல் போன்ற துறைகளிலும் இவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. விளம்பர துறை, கதை எழுதுதல், மார்க்கெட்டிங் மற்றும் நகை வடிவமைத்தல் உட்பட தொழில்களில் மிகப்பெரிய உச்சங்களை தொடுவும் வாய்ப்பு உண்டு

தசா பலன்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை முதல் திசையாக வரும். சந்திர தசை மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சந்திர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம

சந்திர தசை: 

சந்திர தசை காலங்களில் பிறப்பதால் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வலி உண்டாக்கும் வியாதிகள், தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகலாம். 

செவ்வாய் தசை:

7 வருடங்கள் நடக்கும் இந்த தசை காலங்களில் கல்வியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சற்று முன் கோபமும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். சிலருக்கு சொத்து நாசம் உண்டாகும். இந்த தசை முடிவு சிறப்பாக இருக்கும்.

ராகு தசை: 

மூன்றாவது திசையாக வரும் ராகு தசை காலங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று பொதுவாக சொல்ல முடியாது. நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். கல்வியில் தடை, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய அமைப்பு கொடுக்கும். தேவையற்ற நட்புகளாலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். முன் கோபமும் பிடிவாத குணமும் இருக்கும். ஆனால் ராகு நல்ல நிலையில் இருந்தால் இந்த நிலை மாறும்.

குரு தசை:

அடுத்தாக வரும் தசை குரு தசை ஆகும். இந்த 4-வதாக வரும் குரு தசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் வாழ்வில் பல சாதனைகள் செய்யும் அமைப்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எடுத்த காரியங்கள் கை கூடும்.

சனி தசை: 

5வதாக வரும் சனி தசை நல்லதசை என்றுதான் சொல்ல வேண்டும் குரு தசை மொத்தம் 19 வருட காலங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் பல சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் பெயரும் புகழும் உயரும். செல்வம் செல்வாக்கு பெருகும். ஆடை ஆபரண சேர்க்கை, அரசாங்கத்தால் நன்மை உண்டாகும் 

புதன் தசை: 

அடுத்தாக வரும் தசை அதாவது ஆறாவதாக வரும் புதன் தசை மாரகதசை என்றாலும் புதன் பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையுடனிருந்தால் நற்பலனை அடைய முடியும். மேற்கூறிய தசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரி கோணங்களில் சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் நற்பலனை அடையலாம். இல்லையெனில் சில சங்கடங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும


மேற்கூறிய அனைத்து தசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பொது பரிகாரம்

ரோகிணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நாவல் மரம். இம்மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களைப் பெற முடியும். .

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பரணி நட்சத்திர நாளில் அதாவது பரணி நட்சத்திரத்தில் இசை, ஓவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்குதல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல், நடன அரங்கேற்றம் செய்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், மூலிகை செடிகளை பயிரிடுதல் மற்றும் ரோஜா உள்ளிட்ட முற் செடிகளை நடுவது போன்றவை மிகவும் நல்லது.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

ரோகிணி நட்சத்திர நாளில் அதாவது ரோகிணி நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், பூ முடித்தல், திருமணம் சம்மந்தம் செய்தல், குழந்தையை தொட்டிலில் இடல், பெயர் சூட்டுதல், வாசக்கால் வைத்தல், புது மனை புகுதல், வங்கி கணக்கு தொடங்குதல், மாடுகள் வாங்குதல், கதிர் அறுத்தல், கல்வி கற்றல், புத்தகம் வெளியிடல், விதை விதைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புனித யாத்திரை செல்லுதல் நல்லது. 

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது அஸ்வனி நட்சத்திரத்திற்கு

பொருந்தும் நட்சத்திரங்கள்:

மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகியவை பொருந்த நட்சத்திரங்கள். சுவாதி வேதை ஆகும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

பிரஜாபதி சதுர்பாஹீ ; 

கமண்டலு அஷ ஸீத்ரத்ருத் வரா அபயகர ; 

ப்தே; ரோகிணி தேவதா அஸ்துமே