மூலம் தொடர்ச்சி

நட்சத்திரம் - மூலம்



பொதுவான குணங்கள்

தனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். நல்லவர்கள்; வல்லவர்கள். அதேநேரம் கர்வமும் மிகுந்திருக்கும். போராடுவதற்குத் தயங்காதவர்கள். இந்த நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. ஆதலால், இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். "யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல்" எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். கேது சாரத்தில், குரு பகவான் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்கள், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்ற பழமொழி அல்ல. வீண் பழிமொழி என்று சொல்லாம். ஆனி மூலம் அரசாளும் அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனை பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது. எனவே மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல உடல் வாகும் பேச்சு திறமையும் சிறப்பாக இருக்கும் .

குடும்ப வாழ்க்கை

சிறு வயதில் கேது தசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு குடும்பத்தில் பிரச்சனைகளும் உண்டாகும் என்றாலும் வளர வளர குடும்பம் செழிக்கும் பெரியோர் தாய் தந்தை போன்றவர்களிடம் மரியாதை பாசமும் அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாடும். பிள்ளைகளை திட்டமிட்டு வளர்த்து படிக்க வைப்பார்கள். சுக்கிர தசை இளம் வயதில் வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் இளமையிலே திருமணம் நடைபெறும்.

பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தர் பீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள். 

நண்பர்கள்

மூல நட்சத்திரக்காரர்கள் அரசனுக்கு நண்பராக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. எதிரிகளை கூட மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நண்பர்களுக்கும் கொடுப்பார்கள் 

நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

ரோகிணி,திருவோணம், அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக இருந்தால், உங்கள் தொழிலுக்கும், உத்தியோகத்திற்கு நல்ல துணையாக இருப்பார்கள்.

பரணி, பூரம், பூராடம், திருவாதிரை, சுவாதி, சதயம் உண்மையான வர்களாகவும், முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் இருப்பார்கள்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்கள் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கிடைப்பது அதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் இவர்கள் கை உதவிக்கொண்டே இருக்கும். நீங்கள் உயர்வு அடையும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள். நல்ல நட்பின் அடையாளம் இவர்கள்தான். 

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்ப்பது நல்லது ஆகும்.

தொழில்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், சட்டம், ஆர்க்கிடெக்சர், கட்டிடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர் இராணுவம், காவல்துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களை கையாள்வதில் கை தேர்ந்தவர்கள். நாட்டை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று மூல நட்சத்திர காரர்களை கூறலாம். ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், ஷிப்பிங் கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருந்து கம்பெனி ஆகியவற்றால் பெருத்த லாபம் ஈட்டுவார்கள்.

கொடி நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் என வந்து விட்டால் மனதில் உற்சாகம் கொள்வார்கள். பணிபுரியும் நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மூத்த அதிகாரிகளுக்கு, கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக விளங்குவார்கள். தனது பதவிகளுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவார்கள். நல்ல அதிகாரமிக்க பதவிகளை வகிப்பார்கள். ஓய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். 

தசா பலன்கள் 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் திசையாக வரும். கேது தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேது தசை:

இந்த தசை காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலையும், தாய்க்கு பிரச்சனைகளும் உண்டாகும். 

சுக்கிரன் தசை:

இரண்டாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருடங்கள் நடைபெறும். இளம் வயதில் சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு உண்டாகும். இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் செல்வம் செல்வாக்கும் பெருகும். 

சூரியன் தசை: 

மூன்றாவதாக வரும் சூரியன் தசை 6 வருடங்கள் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். உடலில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். 

சந்திரன் தசை: 

அடுத்து வரும் நான்காவது தசை சந்திர தசை அதுவும் சூரிய தசை போல் தான் இருக்கும். அதாவது நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற முடியும். 

செவ்வாய் தசை:

ஐந்தாவதாக வரும் செவ்வாய் தசை 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் இது மாரக தசை ஆகும். செவ்வாய் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு உண்டாகும். 

பொது பரிகாரம்

மூல நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பாலுள்ள மாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மூல நட்சத்திரத்தில் திருமணம் செய்தல், கிரகப்பிரவேசம், வண்டி வாகனம் வாங்குதல், பயணம் மேற்கொள்வது, விதை விதைப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது, பரிகார பூஜை செய்வது, மருந்து உண்ணுதல் தானியம் வாங்குவது நல்லது.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது 

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. 

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.) 

சொல்ல வேண்டிய மந்திரம்


ஓம் தத் புருஷாய வித்மஹே

வாயு புத்ராய தீமஹி

தன்னோ மாருதி ப்ரசோயாத்