குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - தனுசு

 


தனுசு ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வருகிறார். தொழில் ஸ்தானம் (10ம்  வீடு), விரைய ஸ்தானம்(12ம்  வீடு), தனவாக்கு ஸ்தானம்(2ம்  வீடு) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • இத்தகைய அமைப்பினால் உங்கள் பணியிடம் மேன்மை பெறும். தொழிலமைப்பு சீராகும். 
  • வார்த்தையில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். 
  • அலுவலகத்தில் அனுகூல சூழல் நிலவும். 
  • எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் நிச்சயம் கைகூடும். 
  • அதேசமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் முக்கியம். 
  • மேலதிகாரிகளிடம் பேசும்போது அசட்டுத் துணிச்சல் வேண்டாம். 
  • செலவுகள் உண்டு.  செலவுகளை சுப செலவுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்
  • குடும்பத்தில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி மிகவும் மகிழ்ச்சியான, இணக்கமான சூழல் நிலவும். ஆனாலும் விட்டுக்கொடுத்தல் முக்கியம்
  • அசையும் அசையா சொத்து சேரும். கடன் வாங்கி  அசையா சொத்துக்கள் வாங்கும் அமைப்பு சிலருக்கு  உண்டு. இது நல்லது தான் 
  • வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். 
  • பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.
  •  ஆடம்பரத்திற்காக கையிருப்பை  கரைக்க வேண்டாம். 
  • பெண்களுக்கு செல்வாக்கு உயரும். செயல்களில் நிதானம்வேண்டும்
  • தொழிலில் தொடர்ச்சியாக லாபம் வரும். 
  • வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும்.
  • அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். 
  • பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது.
  • அரசுத்துறை சார்ந்த பணியில் உள்ளோர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும். 
  • சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம். 
  • மாணவர்கள் தவறான பாதையில் போக வேண்டாம். எதிர்பாலரிடம் வரம்புடன் பழகவும். 
  • கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திறமை வெளிப்படும் அளவுக்கு வாய்ப்புகள் வரும்.  
  • கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். பண விசயங்களில் கவனம் தேவை.
  • உடல் ஆரோக்கியம் முன்பை விட முன்னேறும். என்றாலும் உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும்.
  • மேலும் அடிவயிறு, கீழ் முதுகுத் தண்டுவடம், மன அழுத்த உபாதைகள் வரலாம். 

மூலம்

  • இந்த குரு பெயர்ச்சியால் வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும்.
  • பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. 
  • உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. 
  • விற்பனையில் லாபத்தை எதிர் பார்க்கலாம். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். 
  • பெற்றொர்கள், பெரியோர்களின்  சொல்படி நடப்பது நன்மை தரும். 
  • பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். 
  • எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம்.  நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். 
  •  காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும் என்றாலும் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூராடம்

  • இந்த குரு பெயர்ச்சியால் மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். 
  • தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். 
  • கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். 
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். 
  • குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. 
  • கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். 
  • பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். 
  • நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்

உத்திராடம் 1ம் பாதம்

  • இந்த குரு பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். 
  • கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. 
  • தெய்வ வழிபாடுகள் வெற்றி உண்டாகும். 
  • பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். 
  • மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். 
  • நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். 
  • இவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும். 
  • வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் லாபம் ஏற்படும்.

பரிகாரம்

முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும் மூலம்  கஷ்டங்கள் குறைந்து  மனதில் நிம்மதியை தரும் வியாழக்கிழமை தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபட்டு வர வாழ்க்கை சுகமாகும்.