குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - துலாம்

 

துலாம் ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது  எட்டாம் இடத்திற்கு வருகிறார்.துலா ராசியின் விரைய , தனவாக்கு மற்றும் சுக ஸ்தானம் அதாவது ராசிக்கு முறையே பன்னிரண்டு, இரண்டு, நான்காம் இடங்களை  பார்க்கிறார்.

  • இந்த அமைப்பின் காரணமாக உங்கள் முயற்சிகள் பலிதமாகும், வாக்கில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். 

  • எட்டில் குரு மறைவது பொதுவாக எதிர்மறையான விளைவுகளை, தாமதங்களை ஏற்படுத்தினாலும், துலாம் ராசிக்கு குரு மறைவு ஸ்தானத்தில் இருப்பது பல விஷயங்களில் சாதகமான பலன்களைத் தரும். 

  • ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் உண்டு. தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம்

  • அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். 

  • பதவி, ஊதியம் உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரலாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு தடைப்பட்டால் தளரவேண்டாம், அது நன்மைக்கே. 

  • வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். 

  • தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. பெண்கள் திடீர் அதிர்ஷ்டம்  வரும்  

  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிறிய முயற்சி கூட மிக பெரிய அளவுக்கு பலன் தரும். 

  • திருமணத்திற்கு காத்திருக்கும் துலாம் ராசியினருக்கு மிகச் சுலபமாக திருமணம் கைகூடும், காதலிப்பவர்களுக்கு திருமணம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும், குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். 

  • விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ பெறவோ வேண்டாம்.  பிறமொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் தவிருங்கள்.

  • வருமானத்திற்கு குறைவே இல்லை என்றால் கூட தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது. 

  • தொழில் மட்டும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு சில நெருக்கடிகளும் போட்டியும் இருந்தால் கூட, அதனை மிக எளிதாக எதிர்கொள்ளும் சூழலும் ஏற்படும். 

  • கூட்டு தொழில் செய்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

  • தொழில் வேலை விசயங்களில், புதிய முயற்சிக்கு  வெற்றி  கிடைக்கும். யாரேனும் ஒருவர்  உதவிக்கரம் நீட்டுவார். பணியிடத்தில் புரமோசன் கிடைக்கும். 

  • தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். அது தொடர்ச்சியாக இருக்க உழைப்பு மிக முக்கியம். 

  • தேவையற்ற  கடன்களைத் தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்கள் முகஸ்துதி நபர்களை ஒதுக்குவது முக்கியம்.

  • அரசுப்பணியில் உள்ளோர், நிதானமாகச் செயல்படுவது நல்லது. 

  • பணத்தைக் கையாள்வோர் நிதானத்துடன் இருப்பது முக்கியம். 

  • கலைஞர்கள், சினிமாத் துறையினர் வாய்ப்புகள்  வரும். 

  • மாணவர்களுக்கு மதிப்பு உயரும். 

  • இரவில் வெளி இடங்களில் தங்க வேண்டாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். 

  • ஏதேனும் நோய்வாய்ப்பட்டவர்கள் முறையாக மருந்து மாத்திரைகள், மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொண்டு உடல்நலத்தை கவனித்துக் கொள்வது அவசியம். 

  • நரம்பு, எலும்பு, முதுகுத் தண்டுவடம், கண், பற்களில் உபாதை வரலாம். 
 

சித்திரை 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். 

  • நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். ஆனாலும்  பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. 

  • பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம். 

  • தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். 

  • அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். 

  • எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். 

  • மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

சுவாதி


  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.

  •  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும்.  

  • சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது, மனதுக்கு இதமளிக்கும். 

  • பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. சற்று நிதானமாக பேசுவது நன்மை தரும். 

  • பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். 

  • அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும். 

  • நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. 

  • சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்


  • இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். 

  • பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். 

  • தேவையில்லாத பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. 

  • பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வால் அனைவருக்கும்  நன்மைகள் செய்து மனம் மகிழ்சசி  அடையும் 

  • பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை. 

  • சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை. வேலைகள் எளிமையாக தோன்றும். 

  • விருந்து கேளிக்கைகளில் கலந்துகொள்ளும் சுழல் வரும் . நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

பரிகாரம்  

குலதெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். காக்கைக்கு தினமும் சாதம் வைத்து வரவும் நல்லது. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு, சகல நன்மையும் தரும்