Showing posts with label சித்திரை. Show all posts
Showing posts with label சித்திரை. Show all posts

கன்னி லக்கினத்தின் பொது பலன்கள்

   




சில ஜோதிட நூல்கள் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் யோகம் என்பர்

கன்னி லக்கினம்- சுப சேர்க்கை

  • சில ஜோதிட நூல்கள் சுக்கிரன் துதியாதிபதியாகினும் கொல்லான் மேலும் சனி கொல்லவர் என்பர் 
  • வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் சித்திரை நட்சத்திரத்தில் வயிற்றில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது 
  • கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். (சனி கொல்லவான்  என்றும் சொல்லப்படுகிறது.)
  • புதன் மிகப் பெரிய யோகத்தை தருவார்.
  • எந்த தசை நடந்தாலும் அதில் வரும் சனி புக்தியோல், அந்தராத்தால் நல்ல பலன்களை அடையலாம் 
  • குரு, செவ்வாய், சந்திரன், சூரியன் மற்றும் கேதுவின் தசா வாழ்நாளில் வராமல் இருப்பது நல்லது.
  • குரு லாபாதிபதி சந்திரனுடன் சம்மந்தம் பெறும் பொழுது அசையும்-அசையா சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண வாழ்க்கையை தரும் மேலும் திருமண வாழ்வில் பாதகத்தையும், மாரகத்தையும் செய்ய தவறுவதில்லை.

பொது பலன்கள் 

  • அடக்கமானவன், தர்மவான், திறமைசாலி, ஆசாரமுடையவன், பிறால் தொழில் பெற்றவன், சனப்பிரியன், பின் வயதில் அதிக தனம் சம்பாத்தியமுடையவன், மனோவஞ்சகன், நன்மையையும், தீமையும் செய்ப்பவன்சிம்மம் என்ற உடன் அவற்றின் சின்னம் சிங்கம் என்பதால், இவர்கள் பேசுவது கனீர் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும். இந்த லக்னகாரர்கள் காடு மலை  சுற்றுவது மற்றும் தனிமை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். 
  • நிலையில்லாத தன்மை கொண்டவர்கள், ரகசிய மிக்கவர்.நிறையபேர் நோய்ப் பாதிப்பு இருக்கும், தோல் பிரச்னை இருக்கும், ஆரோக்கியத்தில் ஒருவித நடுக்கம் இருக்கும், பயம் இவர்களை துரத்தும்
  • கன்னி சின்னம்: ஒரு கன்னி பெண் கையில் விளக்கும் மற்றொரு கையில் நெற்கதிர் கொண்ட ஏந்தி இருப்பார்கள். கன்னியின் தன்மையும், ஒழுக்கமும், பொறுமையும் இவர்கள் உள்ளார்ந்து இருக்கும்.
  • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருப்பதுபோல் இவர்களின் குணம் மாறுபடும் . 
  • இவர்களின் மத்திய பருவத்தை விட குழந்தை பருவம் அதிக மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஆனாலும் வாழ்வின் மத்திய பகுதியில் இவர்கள் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களை காண்பார்கள். இதனால் நல்ல பேரும், புகழும் பெற்று விளங்குவார்கள். 
  • இவர்கள் மனதில் இருக்கும் விஷயங்களை பிறர் அறிந்து கொள்வது கடினம். நெருக்கமானவர்களிடம் மட்டுமே சகஜமாக பேசி பழகுவார்கள். 
  • உருண்டையான முகமும், நன்கு வடித்தெடுத்தாற் போன்ற உடற்கட்டும் அமைந்திருக்கும். மேலும் இந்த லக்கினகாரர்ர்கள் பலர் சிவந்த மேனியும், கறுமையான கண்களும் கேசமும் கொண்டு இருப்பார்கள். மிகவும் சுறுசுறுப்பானவர் லட்சியாவதியாகவும் இருப்பார்கள்
  • சற்று அடக்கமாகவே இருப்பார்கள். எதிலும் திறமைசாலிகளாக இருப்பார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இருக்கும். 
  • இவர்களது சாதுர்ய பேச்சால் நிறைய நண்பர்கள் கிடைக்க பெறுவார்கள். மெத்த படித்திருந்தாலும் மற்றவர்கள் தம்மை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் இருக்கும்.
  • அதிபதியாக புதன்  வருவதால் சென்சிடிவாக இருப்பதால் சட்டென்று முகம் காட்டுவார்கள். சின்னச் சின்ன அவமானங்களை பாசிட்டிவ்வாக மாற்றிக் கொள்வார்கள். 
  • ஏதோ சாதித்த உணர்வில் திரிந்து கொண்டிருப்பது தான் மிகப் பெரிய பலவீனம். பத்து படி மேலே ஏறினால் கொஞ்சம் தலை கிறுகிறுக்கும். அப்போதெல்லாம், ஜெயித்தவர்களின் வாழ்க்கையைப் பார்த்து அமைதியாக வேண்டும். 
  • பார்ப்பதற்கு மென்மையானவர் போல இருந்தாலும், அடிஆழத்தில் கனன்று கொண்டிருக்கும் ஒரு எரிமலையையே வைத்திருப்பார்கள். 
  • சிறிய உதவி செய்தால் கூட வாழ்வின் இறுதி வரையில் நினைவில் வைத்திருந்து சந்தர்ப்பம் பார்த்து கைமாறு செய்வார்கள் 
  • இவர்கள் பிறந்த பிறகு உங்கள் தந்தைக்கு சற்று வளர்ச்சி குறைவு ஏற்படும்.
  • வாழ்கையில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் கிடைக்கும் அதனால் சட்ட சிக்கல் வரும்.
  • இளமையான நபர்கள், புத்தி தந்திரம் உள்ளவர்கள், சமயோசித புத்தி உள்ளவர்கள்
  • புலிபாணி ஜோதிடம்- பாடல் - 27

    கன்னி லக்கினம்

    பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு

    பவுமனுமே திரிகோண மேறிநிற்க

    சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி

    சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு

    வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க

    வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்

    கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே

    கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே


    பொருள்:

    இப்பாடலில் கன்னி லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

    “கன்னி லக்னகாரர்களுக்கு குரு துன்பத்தை தருவார். என்றும் ஆனால் குருவும் சந்திரனும் திரிகோணத்தில் இருந்தால் மிகவும் நல்லது என்று சொல்கிறார் “


     விளக்கம்:

    கன்னியா லக்கினத்தில் உதித்த பேருக்கு குருவினால் வெகு துன்பம் வாய்த்திடும் உண்மையாகும். எவ்வாறெனில் பூர்வீக சொத்துகளும், நிலமும் சேதமாகும் என்பது உண்மையே, ஆனால் குருவும் மதியும் திரிகோண ஸ்தானத்தில் அமைவதில் பலனுண்டா? என நினைப்பின் எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ? எனினும் திருமகள் கணவனான திருமாலும் அவனது திருவான தேவியும் அவன் மனையில் வாழ்வார். அவர் தம் மனையில் தெய்வம் வாழும். எனவே இதனால் குற்றமில்லை என்பதை போகரது மாணாக்கனான புலிப்பாணி ஆகிய நான் இதைக் குறித்துச் சொன்னேன்.


    திருமண வாழ்க்கை

    • இவர்களிடம் பேச்சை விட செயலில் அதிக வேகம் இருக்கும். இவர்கள் கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடமும் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்டவர்களாக இருப்பார்கள்
    • கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்.
    • எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராக இருப்பார்.
    • பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் மிகுந்த யோகம் என்பது வந்து சேரும்.
    • பிறரை எடை போடுதல் குறைத்து கொண்டு (acceptance) ஏற்று  கொள்ளும் பழக்கத்தை பழகி கொள்ள வேண்டும். அதாவது படித்து புரிந்து கொண்டு படிப்பும் மனிதர்களும் ஒன்று அல்ல. மற்றவர்களை பற்றி  judgement செய்வதை குறைத்து கொண்டால் திருமண வாழ்வு சிறக்கும்
    • கன்னி லக்கினக்காரருக்கு மீன ராசி ஏழாமிடமாக வரும். திருமணம் ஏதோ ஒரு நிபந்தனையின் பேரில் அல்லது முக்கிய காரணத்தால் நடைபெறும். தெய்வானுகூலத்தால் தான் திருமண வாழ்வு நடந்து வரும். ஏதோ ஒருவித சிறுசிறு கவலைகள் இருவருக்குள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

    தொழில்

    • கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ம் அதிபதி புதன் பகவானாவார். லக்னாதிபதி புதன் பகவானே ஜீவனாதிபதியாகவும் இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் இவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 
    • சமயப் பணிகளில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். கடவுள் சம்பந்தமான பணிகளில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். 
    • அயல் நாடுகளுக்கு செல்லும் யோகம் இவர்களில் பல பேருக்கு உண்டு. 
    • இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பதிலும், பலவற்றைக் கற்பதிலும், மிகுந்த விருப்பம் இருக்கும்.
    • பெரும்பாலும் பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்களே
    • சுக்கிரனும், குருவும் நல்ல ஸ்தான பலத்தில் இருந்தால் கூட்டுத் தொழில், விவசாயம், ஏற்றுமதி இறக்குமதி, பல் தொழில் வித்தகர்களாக திகழ்வார்கள்.
    •  ஹீலிங் அல்லது மருத்துவத்தில் ஆர்வம் இருக்கும்.
    • புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று வலுப்பெற்றிருந்தால் கலை, இலக்கியம், சங்கீத துறையில் புகழ் பெறும் அமைப்பு உண்டாகும்.
    • சனி, புதன் சேர்க்கை பெற்று வலு இழந்திருந்தால் அடிமைத்தொழில் அமைப்பு, சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். 
    • கன்னி லக்னத்தில்  பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் முடிந்தவரை கூட்டு சேர்ந்து தொழில் செய்வதை தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதும், பிறரை சார்ந்து உத்தியோகம் செய்வதும் நல்லது
    • இந்த ஜாதகர்கள் நிறைய பேருக்கு விவசாயம் மற்றும்  ஆசிரியராக இருப்பார்கள்.
    • சொந்த தொழில் ஆர்வம் உண்டு. கூட்டு தொழில் வீழ்ச்சி உண்டு நண்பர்கள் மூலம் ஏமாற்றம் இருக்கும்
    • களத்திரம் வந்த பிறகு தொழில் மாற்றம் இருக்கும் வருமானம் படிப்படியாக உயரும்
    • உங்களுக்கு ரியல் எஸ்டேட் வாகனம் படிப்பு கற்று தருதல் மூலம் லாபம் கிடைக்கும் ஆனாலும்  கூட்டு தொழில் செய்தால் பாதிப்பு உப தொழில் ஆக செய்தால் லாபம் உண்டு.
    • உங்களுக்கு லாபம் எப்போதும் வெளி நபர்கள் மூலம் அல்லது வெளி மாநில நபர்கள் மூலம் கிடைக்கும்
    • இந்த  இலக்கினகாரர்கள் பெரும்பாலும் அறிவு சார்ந்த பணிகளிலேயே தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவார்கள்.
    • புதன், சுக்கிரன், சனி போன்ற நட்பு கிரக சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் சொந்தத்தொழில் செய்யும் யோகம், வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் அற்புத நிலை உண்டாகும்.
    • சனி, புதன் சேர்க்கை பெற்று வலு இழந்திருந்தால் அடிமைத்தொழில் அமைப்பு, சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

    கிரகங்கள்  

    சூரியன் :  கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் 12ம் அதிபதியாக விளங்குவதால் விரையம், அலைச்சல், பயணம் போன்ற கெடுபலனை தன் தசாவில்/புத்தியில் தருபவராக உள்ளார். இதனால் சூரியன் ஆட்சி அல்லது உச்சம் பெறுவது நல்லது அல்ல.

    சந்திரன் : 11ம் வீட்டுக்கு உரியவர். ஆனால் அவர் திசை நன்மையை தர மாட்டார்.  நீச சந்திரன் நல்லது என்று சில நூல்கள் மட்டும் சொல்கிறது.

    புதன் : இவர்  லக்கினாதிபதி  மற்றும் 10 க்கு உடையவர். எனவே யோகமானவர். பொதுவாக உடும்புப் பிடிபோல புதனின் அடிப்படை குணங்கள் இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் 

    செவ்வாய்: செவ்வாய் 3 , 8 உரியவர். யோகமில்லாதவர் மட்டும் இல்லை மாராகதிபதியும் ஆவார். முடிந்த வரை செவ்வாய் கிரகத்தால் கன்னி லக்கினகர்களுக்கு பிரச்னை ஏற்படும் 

    குரு: குரு 4, 7 க்கு உரியவர். புதன் குருக்கு பகை ஆகும். குரு நல்லவர் அல்ல. இந்த லக்கனக்காரர்களுக்கு ஒரு சிலருக்கு திருமண வாழ்க்கை  பாதிப்பு உண்டாக்குவார். குருவின் சுப பார்வை மட்டும் நன்மை தரும்.

    சுக்கிரன்: சுக்கிரன் 2, 9-கும் உரியவர். மிகவும் யோகமானவர். 2க்கு உரியவர் என்றாலும் காட்டாயம் கொல்ல மாட்டார். மிகுந்த நன்மை தருவார்
    சனி: சனி என்பவர் 5, 6கும் உரியவராக இருந்து நன்மை அளிப்பார். சிலருக்கு மாரகதிபதியும் ஆகிறார். 

    சூட்சுமங்கள்  

    • இவர்களுக்கு சுக்கிரன் யோகாரரே.
    • கன்னி லக்கின என்றால் சனி பகவான் சுக்கிர பகவான் இருவரும் நன்மைகள் அதிகம் செய்வார்கள். (5,9 அதிபதி என்பதால் )
    • கன்னி லக்னத்துக்கு லக்னம், மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது, பத்து, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்கும் கிரங்கல் நன்மைகளைச் செய்வார்
    •  11, 12 -ம் வீட்டில் இருக்கும் கேது அந்த வீட்டு அதிபதிகளான சூரிய, சந்திரர்களின் நிலையைப் பொறுத்து தனது தசை, புக்திகளில் ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூரமான இடங்களுக்கு அனுப்பி வைப்பார்.
    • செவ்வாய் மாராகதிபதி என்றாலும் சனியும் கொல்லவார் என்று சில நுல்கள் கூறுகின்றன
    • இவர்களுக்கு சுக்கிரன் யோகாரரே.
    • கன்னி லக்கின என்றால் சனி பகவான் சுக்கிர பகவான் இருவரும் நன்மைகள் அதிகம் செய்வார்கள். (5,9 அதிபதி என்பதால் )
    • கன்னி லக்னத்துக்கு லக்னம், மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது, பத்து, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்கும் கிரங்கல் நன்மைகளைச் செய்வார்
    •  11, 12 -ம் வீட்டில் இருக்கும் கேது அந்த வீட்டு அதிபதிகளான சூரிய, சந்திரர்களின் நிலையைப் பொறுத்து தனது தசை, புக்திகளில் ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூரமான இடங்களுக்கு அனுப்பி வைப்பார்.
    • செவ்வாய் மாராகதிபதி என்றாலும் சனியும் கொல்லவார் என்று சில நுல்கள் கூறுகின்றன

    தசா பலன்கள் - சூரியன் 

      கன்னி  லக்னத்திற்கு அதிபதி புதன்.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
      • கன்னி லக்கினத்திற்கு 12வீடு சிம்மம்.  ஆனால் சூரியன் சமமானவர். நல்ல ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருக்கும் பட்சம் நல்ல  பொருட் சேர்க்கை உண்டு. சந்திரன் யோகாரர் இல்லை மேலும் பகைவர் என்றாலும் சந்திர தசையில் 
      • வெளி நாடு, மாநிலம் அல்லது வெளி இடங்களில் படிப்புக்ககவோ அல்லது வேலை விஷயமாகவோ தங்க வேண்டி வரும். வெளி நாட்டுக்கு செல்ல எண்ணம் உள்ளவர்கள் இப்போது முயற்சி செய்யலாம்  
      • திருமணத்திற்கு காத்து இருப்பவருக்கு திருமணம் நடக்கும். மேலும் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இருந்தால் தற்சமயம் முயற்சி செய்யும் பச்சத்தில் அது நல்லபடி முடியும். தொழில் சிறப்பாக இருக்கும். 
      • செலவுகள் அதிகரிக்கும். அதனால் டென்சன் உண்டாகும். சுபர் பார்வை சேர்க்கை இருக்கும் பட்சத்தில் அது சுப செலவாகவும் இருக்கும் 
      • குழந்தைகள் சார்ந்த விசயம் மற்றும் காதல் சார்ந்த விஷயம் மிகுந்த டென்சன் தரும். மண நிம்மதி இதனால் இழக்க நேரிடும். கலைஞர்க்கு  இது சிறப்பான தசை இல்லை  
    • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

     தசா பலன்கள் - சந்திரன் 

    கன்னி  லக்னத்திற்கு அதிபதி புதன். சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்.
    • கன்னி லக்கினக்காரர்களுக்கு கடகம்  11 ம் இடம் என்பதால் சந்திரன் லாபாதிபதி என்பதால் சந்திர தசை சாதகமான பலன் தரும் எனலாம். சந்திரன் புதனுக்கு பகை என்றாலும் யோகமில்லதவர் என்றாலும் சந்திர தசையில் நல்ல பலனே தருவார் 
    • சந்திரன் 12ம் வீட்டில் இருந்தாலும் 12ம் அதிபதி சேர்க்கையோ தொடர்போ உண்டாகி இருந்தால் வெளியூர், வெளிநாடு பயணம், பயணமும் அதன் சார்ந்த விஷயங்கள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும்.
    • சந்திரன் நீசம் பெற்றோ, பகை பெற்றோ அமையப் பெற்று திசை நடைபெற்றாலும் சர்ப கிரகமும் என வர்ணிக்கப்படும் ராகு கேது சேர்க்கை பெற்று அமையப் பெற்று திசை நடைபெற்றாலும் மன குழப்பம், ஜல தொடர்புள்ள நோய்கள், பொருளாதார நெருக்கடி, தைரியம் இல்லாத நிலை உண்டாகும்.
    • வயதுக்கு ஏற்றவாறு முன்னேற்றம் உண்டாகும். திருமண வயது உள்ளாவருக்கு திருமணம் உண்டாகும் சூழல் அமையும். 
    • சந்திரன் சுபருடன் தொடர்பில் இருந்தால் மட்டும் நல்லது நடக்கும். இல்லை என்றால் குழப்பத்துடன் நல்ல விசயங்க்கள் நடக்கும் வாய்ப்பு உண்டாகும்.
    • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

    தசா பலன்கள் -  செவ்வாய் 


    சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும். 

    • கன்னி  லக்னத்திற்கு அதிபதி புதன். செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • செவ்வாய் 3 மற்றும் 8 க்கு உரியவர். நட்பு கிரகம். மேலும் அவர் மாரகதிபதி. செவ்வாய் புதன் பகை கிரகம். எனவே இந்த திசை நல்ல திசை கிடையாது 
    • மனைவி மற்றும் தாயார் வழியில் பிரச்சனைகள் தருவதாகவும் பொருளாதாரத்தில் இழப்பை  ஏற்படுத்துவதாகவும் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் முன்னேற்றம் உண்டாகும்
    • கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். கோபத்தினால் சில பிரச்சனைகளை வந்து போகும். வம்பு வழக்கு வர வாய்ப்பு அதிகம் 
    • கணவன்-மனைவியரிடையே அந்நியோன்னியம் சற்று குறைவாகவே இருக்கும் 
    • கன்னி  லக்கினகாரர்களுக்கு செவ்வாய் திசை வரமல் இருப்பது மிகவும் நல்லது. ஆனாலும் முதல் 3 வருடங்கள் சுமாரான  நல்ல பலன்களை தரவார் .
    • செவ்வாய் நன்றாக இருந்து சுப்பர் பார்த்தால் திடீர் அதிஷ்டம் உண்டாகும். சிலருக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு உண்டாகும்
    •  கட்டுபடுத்த வேண்டும். கோபத்தினால் சில பிரச்சனைகளை வந்து போகும்.
    • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
    தசா பலன்கள் -  புதன் 
      கன்னி  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

      • புதன்  கன்னி லக்கினத்திற்கு லக்கினதிபதியும்,10க்கு உடையவராக இருப்பதால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், உயர்வான அதிகாரம் பெற்று வாழம் அமைப்பு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு, புதுமையான வீடு, ஆடை ஆபரண கேர்க்கை போன்ற நற்பலன்கள் உண்டாகும் 
      • லக்கினாதிபதி என்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். புகழ் உண்டாகும். ஆற்றல், செய்திறன் மேம்படும். 
      • 10க்கு உடையவராக இருப்பதால் வேலை அல்லது தொழிலுக்கு முயற்சி செய்பவர்கள் நல்ல வேலை அல்லது தொழில் அமையும். நல்ல வேலை அல்லது தொழிலில் இருபவர்களுக்கு மேலும் முன்னேற்றம் கிடைக்கும் 
      • புத்தி, அறிவு மேம்படும். உடல் உழைப்பு விட முளை உழைப்பு உள்ள தொழில் இருப்பவர்கள் மேம்படுவார்கள் 
      • ஆனால் புதன் தீய கிரகத்துடன் சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் நல்லது நடக்கும் என்று சொல்ல முடியாது
      • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

       தசா பலன்கள் -  குரு  


        கன்னி லக்னத்திற்கு அதிபதி புதன். குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

        • இவர்  4 மற்றும் 7 க்கு உரியவர். குரு பகை கிரகம்.  பொதுவாக கன்னி லக்கினகாரர்களுக்கு குரு தசை அவ்வளவு சிறப்பாக இருக்காது. கட்டாயம் யோக பலனைத் தரமாட்டார். எனினும் குரு முழு சுப கிரகம் என்பதால் நல்ல பலன்களைத் தராவிட்டாலும், பெரியளவில் எந்த ஒரு கெடு பலனையும் தரமாட்டார்
        • கன்னி லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு குரு மறைதல் மிகவும் நல்லது. மேலும் லக்கினாதிபதி அல்லது யோக கிரகத்தின் பார்வை பெறும் போது குரு தசையின் பாதிப்பு குறையும் 
        • தொழிலுக்காக கடன் வாங்கும் சூழல் வரும். விரயம் இருப்பதால் கவனத்துடன் கையாள வேண்டும் .
        • விரயம், கடன் ஏற்படும். முத்த சகோதர சார்ந்த விசயங்களில் நல்லது நடக்கும். வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை வராது. ஆனால் கடன் வாங்கி செலவு சூழல் வரும்
        • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

        தசா பலன்கள் - சுக்கிரன்  

          கன்னி  லக்னத்திற்கு அதிபதி புதன். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
          • சுக்கிரன் 2 மற்றும் 9 க்கும் அதிபதி ஆவார். மிகவும் யோகமான தசை ஆகும் 
          • இந்த லக்னக்காரர்களுக்குச் சுக்கிரதசை வரும்போது, கலைகளில் ஆர்வம் இருக்கும். 
          • தன ஸ்தானத்துக்கும் பாக்கிய ஸ்தானத்துக்கும் அதிபதியாகிறார். வரவு - செலவு மிகவும் அதிகமாக இருக்கும்.
          • எல்லோரும் இவரைப் புகழ்வார்கள். ஆனால், அதற்கான தகுதி இவர்களுக்குப் பெரிதாக இருக்காது. 
          • ஏதேனும் புதிய வருமான ஆதாரத்தை உயர்த்த முயற்சித்திருந்தால், இப்போது சாதகமான பலன் கிடைக்கும். இந்த வருமானம்  நிதி நிலையை பலப்படுத்தும்.
          • விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சுப பயணம் மேற்கொள்வார்கள்.
          • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் - சனி 

            கன்னி லக்னத்திற்கு அதிபதி புதன்.  சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்.
            • கன்னி  லக்னத்திற்கு சனி 5, 6, க்கு உரியவர். சமமானவர். நல்லது அதிகமாக நடக்கும். திடீர் அதிஷ்டம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. 
            • கன்னி லக்னத்திற்கு  20 வயதை ஒட்டி சனி திசை நடந்து , அடுத்து லக்னாதிபதி திசை,  யோகாதிபதியான சுக்கிர திசை அடுத்தடுத்து வரும் பொழுது வாழ்வில் உன்னத நிலைக்கு ஓட்டிச் செல்லும். 
            • ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சுகபோக வாழ்க்கை, பகைவரை வெல்லும் ஆற்றல், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகள், வெளியூர் பயணங்களால் சம்பாதிக்கும் யோகம், போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்
            • சனி பலமாக இருந்தால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் மேன்மை, அரசு வழியில் அனுகூலம், வண்டி வாகனம் அசையா சொத்துக்கள் சேரும் யோகம், நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
            • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  ராகு  

              கன்னி லக்னத்திற்கு அதிபதி புதன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • சூரியனுக்கு சந்திரனுக்கு  ராகு பகை. அந்த வகையில் பார்த்தால் ராகு திசை நல்ல திசை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 
              • வேற்று நாடு, மாநிலம் செல்ல நேரிடலாம். அத்தகைய மக்கள் தொடர்பு கிடைக்கும்.
              • திடீர் அதிஷ்டம் அடிக்கும் எனவே ஆசைகள் அதிகமாகும். இது நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆசையை குறைத்து கொள்ள வேண்டும் 
              • சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் பல கருத்து வேறுபாடுகள் வந்து நிம்மதியை கெடுக்கும். ஆனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள இருக்கும். அதனால் செலவும் உண்டு. 
              • கலைஞர்களுக்கு சிறப்பாக இருக்கும். இளைய சகோதரத்துவம் சிறப்பாக இருக்கும் 
              • குழந்தைகளால் தொல்லை இருக்கும். எந்த வயது குழந்தையைக் இருந்தாலும் அவர்களால் நிம்மதி குறையும் 
              • தொழிலில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டு.
              • இந்த திசை நடக்கும் போது எந்த கெட்ட பழக்கத்தையும் பழக வேண்டாம். பல பிரச்சனைகளை பார்க்க நேரிடும். இழப்பும் உண்டாகும்.
              • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              தசா பலன்கள் -  கேது  

                கன்னி லக்னத்திற்கு அதிபதி புதன். கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                • புதனுக்கு  கேது  நட்பு . இவர்களுக்கு கேது திசை மிக நல்ல திசை இல்லை . கன்னி லக்ன காரர்களுக்கு சுமாரான பலன்களையே செய்வார்
                • கன்னி லக்னத்துக்கு லக்னம், மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது, பத்து, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்கும் இவர் நன்மைகளைச் செய்வார்.
                •  11, 12 -ம் வீட்டில் இருக்கும் கேது அந்த வீட்டு அதிபதிகளான சூரிய, சந்திரர்களின் நிலையைப் பொறுத்து தனது தசை, புக்திகளில் ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூரமான இடங்களுக்கு அனுப்பி வைப்பார். 
                • செவ்வாய் போல் கேது என்பதன் அடிப்படையில் கன்னி  லக்னத்துக்கு செவ்வாய் அட்டமாதிபதியாக விளங்குவதால் கேது சுபபலனைத் தர இயலாதவராக உள்ளார். 
                • சில நூல்களில்  மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு இடங்களில் இருக்கும் ராகு நன்மைகளைச் செய்வார் என்றும் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு பாவங்களில் இருக்கும் கேது நன்மைகளைச் செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                கன்னி லக்கினம்  – நட்சத்திரம் 


                கன்னி லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது கன்னி லக்கின பலன்கள்  பார்ப்போம்.
                இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 

                கன்னி லக்கினம்  – உத்திரம் 2, 3, 4ம்  பாதம்   

                உத்திரம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  புதன், சூரியன் தாக்கத்துடன் இருப்பார்.

                உத்தரத்தின் அதிபதி சூரியன் ஆவார்.இந்த உத்திரம் நட்சத்திரத்தில் 2,3,4 ம் பாதத்தில் லக்கினம் அமைந்திருப்பவர்கள் நேர்மை மிக்கவர்கள், பலவானாகவும்,   வறியவன், உடலில் எதாவது குறைபாடு இருக்கும், குற்றமுடன் உள்ளம் அலைபாயும், கல்வி சிறந்தவன், முன்கோபியாகவும் இருப்பார்கள், எந்தவித எதிர்பார்ப்பும்  இல்லாமல் மற்றவருக்கு உதவுவார்கள், பெண் மீது அன்பு கொண்டவன், சுத்தமற்றவன், உற்றார் உறவினரிடம் பாசம் இருக்கும், ரகசியம் இருக்கும், பெருஞ்சுயநலவாதி,  பேசுவதில் நேர்மை தெரியும், அதிர்ஷ்டசாலி, நன்றி மறக்கமாட்டார், யாரையாவது சார்ந்து இருப்பான், பேசுவதில் குதர்க்கம் தெரியும்

                கன்னி லக்கினம்  – அஸ்தம் 

                அஸ்தம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  புதன், சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.

                இந்த நட்சத்திரம் உடைபடாத நட்சத்திரம். சந்திரன் அதிபதி. இந்த நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்திருப்பவர்கள் அறியப் பண்பு மிக்கவர், இதமாகப் பேசுவார்கள்,  உத்தமர், அன்னை அரவணைப்பு குறைவாக இருக்கும், தெளிந்தவன், கலைகளை ரசிப்பவன், அதிகம் பேசுவான், கூச்ச சுபாவம், அமைதி மிக்கவர், விட்டுக்கொடுத்து  வாழ்வார்கள், வியாதி இருந்துகொண்டு இருக்கும், பகையுணர்ச்சி கொண்டவர், சூதுவாது கொண்டவன், வியாபாரி, தர்மவான், உண்மையானவன், புகழுடையவன், எந்த சண்டையிலும் சேரமாட்டார்கள், சந்தோஷமாக இருப்பான், அறநெறியானவன்.

                கன்னி லக்கினம்  – சித்திரை 1, 2   

                சித்திரை  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சந்திரன், புதன் தாக்கத்தில்  இருப்பார்.

                சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆவார். இந்த சித்திரை நட்சத்திரத்தில் 1,2 ம் பாதத்தில் லக்கனம் அமைந்திருப்பவர்கள் விரிவாக பேசும் தன்மை  கொண்டவன், தவம் பிடிக்கும், சமூக விரோத செயல்களைச் செய்வார், சிலருக்கு வறுமையில் இருப்பார்கள், நெடிந்துயரம் தோற்றம், மனம் ஒரு ஓட்டம் கொண்டது,  கண்ணில் குறைபாடு ஏற்படும், அலைந்து திரிபவன், ஒப்பற்ற பேச்சாளி, உடலை கவனமாகப் பார்த்துக்கொள்வான், அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் ஆர்வம் மிக்கவர்,  பிடிவாதம் இருக்கும்.மேற்கொண்ட அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும். இவற்றில் எந்தெந்த கிரகம் சேர்க்கை பார்வை பெற்றிருக்கிறது என்று பார்க்கவேண்டும். ஜாதகருக்கு அவரவர் ஜாதக  கட்டமும் தசை புத்தியும் கன்னி லக்கினத்திற்கு ஏற்ப கிரகங்களால் நல்லது கெட்டதும் என்று அதற்கேற்ப அதற்குரிய கிரகங்கள் ஆட்சி, உச்சம், மறைவு பெற்றால்  நன்மைகள் கிட்டும்.


                மந்திரம் 

                கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய கோவிந்தன் துதி மனதார சொல்லி வருவது நல்லது 


                ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,
                வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,
                தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
                மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.
                செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,
                நெடியானே ! வேங்கடவா ! நின்கோயி லின்வாசல்
                அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
                படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !
                 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



                செவ்வாய்




                கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் பலன் விவரங்கள் :-செவ்வாய்

                எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள், பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக பலன்கள் வேறுபடலாம்.

                செவ்வாய்


                செவ்வாய் (அங்காரகன்) சில குறிப்புகள் :

                1. நட்சத்திரங்கள் : மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
                2. மொத்த திசை இருப்பு : 7 வருடம்
                3. தானியம் : துவரை
                4. புஷ்பம் : சண்பகம்
                5. நிறம் : சிவப்பு
                6. ஜாதி : க்ஷத்திரிய ஜாதி
                7. வடிவம் : குள்ளமானவர்
                8. உடல் உறுப்பு : கை,தோள்
                9. உலோகம் : செம்பு
                10. மொழி : தெலுங்கு, தமிழ்
                11. ரத்தினம் : பவளம்
                12. வஸ்திரம் : நல்ல சிவப்பு (பவள நிறம் )
                13 தூப தீபம் : குங்கிலியம்
                14 வாகனம் : செம்போத்து (அன்னம்), சேவல்
                15 மறைவு ஸ்தானம் (சிறப்பு விதி) : லக்கனத்திற்கு 8, 12 ஆகும்
                16. சமித்து : கருங்காலி
                17. சுவை : உறைப்பு
                18 பஞ்பூதம் : பிருதிவிக் கிரகம்
                19 நாடி : பித்த நாடி
                20. திசை: தெற்கு
                21. அதிதேவதை : முருகர்
                22 சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 மாதம்
                23. தன்மை : சர கிரகம்
                24 குணம் : ராஜசம்
                25 ஆட்சி : மேஷம், விருச்சிகம் , உச்சம் : மகரம் , நீசம் : கடகம் , மூல திரிகோணம் : மேஷம்
                26 நட்பு வீடுகள்: சிம்மம், தனுசு, மீனம்
                27 பகை வீடுகள்: மிதுனம், கன்னி
                28 பார்வை : 4, 7 , 8 (4 , 8 விசேஷப் பார்வைகள் )
                29 பலன் தரும் காலம் : ஆரம்ப காலம்
                30. மாத்ருகாரகன் : ப்ராத்ருகாரகன் (சகோதர காரகன்)
                31. தத்துவம் : ஆண் கிரகம்


                லக்கினத்தில் இருந்து
                1-ம் வீட்டில் இருந்தால் (Rahu in First house) :

                மேலும் படிக்க ...