Showing posts with label பரிகாரம். Show all posts
Showing posts with label பரிகாரம். Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - ரிஷபம்

ரிஷப ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • தற்போதைய பெயர்ச்சியில் குருவானவர், சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்கு அதாவது ஜன்ம ராசியான ரிஷபத்திற்கு வருகிறார்.

  • 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சோதனை மிகுந்த காலம், மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும், ஆனாலும் பயப்பட தேவை இல்லை . குருவின் விசேஷ  பார்வையான 5,7,9ம் வீடுகளின் மீது விழுகிறது.

  • எனவே ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார், வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும்,எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், ஊதிய உயர்வும் உண்டு.

  • மேலும் குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும்.

  • குருவின் விசேஷ  பார்வையால், பூர்வ புண்ணிய பலம் அதிகரிக்கும்,பூர்வீக சொத்துகள் சேரும்

  • தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும், அதேசமயம் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது, வீண் ரோஷம் தவிர்ப்பது மிக அவசியம்

  • அலுவலகத்தில் உங்கள் திறமையால் முன்னேற்றங்களைக் காணலாம்

  • உயரதிகாரிகளிடம் பேசும்போது தர்க்கத்தைவிட தன்னடக்கமாக இருப்பது  நல்லது

  • பிறர் குறையை பெரிதுபடுத்து வேண்டாம், இந்த சமயத்தில் வேண்டாத கோபத்தால்  பெரும் சங்கடத்தை உருவாக்கிவிடலாம்

  • புதிய முதலீடுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது , அயல்நாட்டு ஒப்பந்தத்தில் அவசரம் வேண்டாம், வரவை சேமிக்கப் பழகுங்கள்

  • சுபகாரியங்களில் பெற்றோர், பெரியோர் ஆலோசனைகலைக் கேளுங்கள்

  • பிறமொழி நபர்களிடம் கவனமா பழகுங்கள், தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்

  • பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும், கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள்

  • அரசியலில் இருப்போர் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது

  • அரசாங்க ஊழியர்கள் வளர்ச்சி அதிகரிக்கும்

  • மாணவர்கள் படிப்பில் கவனச் சிதறலைத் தவிருங்கள்

  • சினிமா, கலைத்துறையினர் ரகசியங்களைப் பொது இடத்தில் பகிர வேண்டாம்

  • கழுத்து,மூட்டு, ரத்த அழுத்த மாற்றம், அலர்ஜி உபாதைகள் வரலாம்

கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள்

கார்த்திகை 2,3,4 ம் பாதங்களில்  பிறந்த  ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். 

  • உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவார்கள். 

  • உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து  சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். சக ஊழியர்களால் நன்மை அடைவார்கள்.  

  • பொதுவாக படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். 

  • வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். 

  • வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.


ரோகிணி 

ரோகிணி  நட்சத்திரத்தில்   பிறந்த  ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். 

  • உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவார்கள். 

  • உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து  சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். சக ஊழியர்களால் நன்மை அடைவார்கள்.  

  • பொதுவாக படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். 

  • வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். 

  • வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.



மிருகசீரிஷம் - 1,2 பாதங்கள்

மிருகசீரிஷம் - 1,2 பாதங்கள் பாதங்களில்  பிறந்த ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. 

  • குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 

  • வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். கணவன். மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகளுக்கு  தேவையானவற்றை மகிழ்ச்சி உடன் செய்வார்கள். 

  • சந்தோஷமான காரியங்கள் நடக்கும். ஆனாலும் மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். 

  • உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். 

பரிகாரம் 

அருகில் உள்ள  அம்மன் கோவில் உள்ள அம்மனுக்கு மல்லிகை பூ சாரம் அல்லது  மாலையை அணிவித்து வணங்கி வர மன கவலை நீங்கும்


Full Video 



குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மேஷம்



மேஷ ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், மேஷம் ராசிக்கு இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்திற்குச் செல்கிறார், இதனால்  மேஷ ராசிக்காரர்களின் வாக்கின், செல்வாக்கு அதிகரிக்கும், 

  • குருவின் விசேஷப் பார்வைகள்  மேஷ ராசிக்கு முறையே 6, 8, 10ம் இடங்களில் பதிகின்றன, இதனால் எதிரிகள் பயம் நீங்கும், ஆயுள் ஆரோக்யம் சீராகும், பணி, தொழிலமைப்பில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாகும், 

  • அலுவலகங்களில்  மேஷ ராசிக்காரர்களின் பெருமை பேசப்படும், மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும், பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும், பேச்சுக்கு மதிப்பு கூடும், 

  • ஜன்ம குருவில் இருந்து விடுதலை கிடைக்கும்  கடந்த காலத்தில் நடந்த பிரச்னைகள் தீரும் ,

  • வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும், மனம்  நிம்மதி அடையும் 

  • வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும், 

  • பணவரவு சீராகும், பழைய கடன்கள் சுலபமாக அடைபடும், 

  • வாரிசுகளால் பெருமை உண்டாகும், 

  • வீடு, வாகன யோகம் உண்டாகும்,

  • பொறுமையாக காரித்தை சாதிக்கலாம், 

  • பெண்கள் கட்டாயம் அடுத்தவர் விசயங்களில் தலையிட வேண்டாம் 

  • பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய  குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது, 

  • குருவின் பயணமும் பார்வையும் மேஷ ராசிகாரர்களுக்கு  அஷ்டலட்சுமி யோகத்தை தேடி தரப்போகிறது, பொதுவாக மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி   ஒரு பொன்னான காலகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும் , 

  • வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும், புதிய ஒப்பந்தங்களில் நிதானம் முக்கியம், அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம், 

  • அரசாங்கப் பணிபுரிபவர்கள் திறமைக்கு உரிய ஏற்றம் பெறுவார்கள், 

  • அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு அதிகரிக்கும், 

  • மாணவர்கள் சோம்பலை தவிர்க்கவும் 

  • பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் உண்டு,

  • சினிமா, இசை, படைப்புத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும், 

  • அடிவயிறு, முதுகு, அஜீரணம், நரம்பு உபாதைகள் வரலாம், 


அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 

  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் காரணமில்லாமல் மனதில் தைரியம் அஸ்வினி நடசத்திரக்காரர்களுக்கு குறையும். ஆனாலும்  தன்னம்பிக்கை உயரும். 

  • வாழ்க்கையில் முன்னேற, வேகம் காட்டுவது நல்லது. பண வரவுக்குக் குறைவு ஏற்படாது.

  • மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவார்கள். 

  • மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவார்கள். 

  • ஆனாலும் சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். 

  • எந்தக் காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.

வீடியோவில் பார்க்க 


பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 

  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் எல்லா காரியங்களிலும் அதிக கவனம் செலுத்துவதால்  வெற்றி இவர்களை தேடித் தரும். 

  • தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும், சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும், அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும்.

  • குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம், எனவே சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது,.

  • கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.

வீடியோவில் பார்க்க 



கார்த்திகை 1ம் பாதம் 

கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில்  பிறந்த  மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம்

  • இந்தக் குரு பெயர்ச்சியின் மூலம் பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும், அது நல்லதாக தான் இருக்கும்.

  • எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம், அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

  • வாழ்க்கை துணையின்  உடல்நலத்தில் கவனம் தேவை. 

  • இவர்களின்  புத்திக்கூர்மை  வெற்றியைத் தேடித் தரும்.

  • வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பார்கள்.

  • இவர்கள் தங்கள் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து எளிதாக தப்பித்துக்கொள்வார்கள்.

    வீடியோவில் பார்க்க 



பரிகாரம் 

செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும், முடிந்தால் அரளிப்பூ  மாலை, முருக உடைய  வேலுக்கு சாத்தி வணங்கி வருவது நல்லது 


Full Video 




What can we predict by astrology?

ஜோதிடம் மூலம் நாம் என்ன கணிக்க முடியும்?



ஜோதிடத்தில்  அனைத்தையும் ஒரு ஜோதிடரால் கணிக்க முடியும்.  ஆனாலும் 

"ஜோதிடர்கள் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு அவர்களால் இயன்ற  முன்கூட்டி அறிவிக்கிறார்கள். ஆயினும் நம்மை படைத்த பிரம்மனை தவிர வேறு யாராலும் திட்டவட்டமாக ‘இது தான் நடக்கும் என்று கூற முடியாது" 

                               --  என்று சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர் காளிதாசன் அவர்கள் தனது வாக்கில் கூறியுள்ளார்.

ஜோதிடத்தை பற்றி  இயற்பியலாளர் சுபாஷ் கக் கூறுகிறார் – 

“வேத தெய்வங்கள் பல நட்சத்திரக்கூட்டங்களின் தலைமை சக்தியாக கருதப்படுகின்றன. ..சோதிடம் எப்படி செயல்படுகிறது? கோள்களோ விண்மீன்களோ பௌதீக ரீதியாக மானுட வாழ்க்கையில் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ பாதிக்கின்றன என கருதமுடியாது ஆனால் நிர்ணயிக்கப்பட்ட சில ஆழ்ந்த ஒழுங்குமுறைகளின் வெளிப்படு தன்மையே சோதிடம் மூலமாக வெளிப்படுகிறது என கருதலாம். அதாவது சோதிடம் என்பது இயற்கையின் நிர்ணய சக்தியினை நாம் நம்க்கு புரியும்படியான சில குறியீடுகள் மூலம் அறிந்து கொள்ள முயற்சிக்கிறோம் என்பதே ஆகும்.”.

கடந்த, நிகழ், எதிர்காலம் என மூன்றையும் அறிந்தது பரம்பொருள் மட்டுமே. அனைத்தையும் மாற்றுவதற்கு அதிகாரமுள்ள அந்த மகாசக்தியால் ஒரு ஜோதிடரின் கணிப்பையும்  மாற்ற முடியும்.

ஒரு ஜோதிடரால், ஒரு ஜாதகத்தில் நூறு சதவிகித துல்லிய பலனைச் சொல்ல முடிந்தாலும் அவரை நாடி வரும் அனைவருக்கும் சரியான பலனைச் சொல்ல முடியுமா? என்றால் முடியாது எனபதுதான் பதில். ஒரு ஜாதகத்தைச் சரியாகக் கணிக்கலாம். அனைத்து ஜாதகத்தையும் நூறு சதவிகித வெற்றியுடன் கணிக்க முடியாது.

ஒரு ஜோதிடாரால் கணிக்க முடிந்தவை 

  1. ராசி கட்டம் (அ) சக்கரம், நவாம்ச கட்டம், பாவம் கட்டம், திரேக்காணம் கட்டம்,ஹோரா (ஓரை) கட்டம், சதுர்தாம்சம், சப்தாம்சம், சஷ்டியாம்சம், துவாதசாம்சம் , தசாம்சம், சோடாம்சம் , சஷ்டியாம்சம் , பஞ்சாம்ச கட்டம், அஷ்ட்டாம்ச கட்டம் அமைக்க முடியும். (அதாவது கணிக்க முடியும் )
  2. குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் கணிக்க அல்லது கண்டு பிடிக்க முடியும்.
  3.  குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா? என்றும் கணிக்க முடியும். (அது ஆணா அல்லது பெண்ணா என்று கணிக்க நல்ல திறமை வேண்டும். திறமை இருந்தால் கட்டாயம் கணிக்க முடியும்)
  4.  கிரகங்கள்  வீற்றிருக்கும் பாகை அறிதல் முக்கியமான ஒன்றாகும். 
  5. கிரகங்கள்  வீற்றிருக்கும் கிரகத்தின் நிலை அறிதல். அதாவது ஒரு ராசியில் ஒரு ஒரு கிரகம் இருக்கிறது என்றால் அது எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்பது தான். அந்த நட்சத்திரத்தின் அதிபதிதான் கிரகம் நிற்கும் கிரகம் (நட்சத்திரத்தின் அதிபதி)
  6. பொதுவான குணங்கள், குடும்ப வாழ்க்கை, நண்பர்கள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் நட்பு நட்சத்திரங்கள் மற்றும் தொழில் ஆகியவற்றை அறியலாம். 
  7.  நடக்கும் அல்லது நடக்க போகும் தசபுத்திகளை கண்டு அறிந்த அதனால் வாழ்க்கையில் வரும் நல்லது கெட்டது கணிக்க முடியும் 
  8. கோசரா பலன்களின் நிலையை கண்டு அறிதலும் ஒன்று ஆகும் 
  9. யோகமான நட்சத்திரம் மற்றும் அவயோகமான நட்சத்திரம் கண்டு அறிதல். 
  10. அஸ்தங்கம், வக்கிரம், வர்கோத்தமம், உச்சம், நீச்சம் போன்ற கிரக நிலைகளை அறிதல்.
  11. கட்ட அமைப்பு மூலம், ஜாதகரின் சாபம்,   கண்டம் மற்றும் மரணம்  தரும் கிரகங்களை அறிதல். ஆனால் மரணம் கணிப்பது மிக கடினமான ஒன்று.
  12. கட்ட அமைப்பு மூலம், ஜாதகர் பெறும் சிரமங்கள், இன்பங்கள், அலைச்சல்கள் தரும் கிரகங்களை அறிதல். 
  13. மேலும் இது தவிர, ஜாதகரின் கேள்விகளுக்கு ஏற்ப தகுந்த ஜோதிட விதிகளை ஆராய்ந்து பதில் அளிக்க முடியும். பரிகாரமும் சொல்ல முடியும் 
   மேலும் ஜோதிடருக்கு ஜோதிடரின் கருத்துக்கள் மாறுபடுகிறது. ஜோதிடம் ஒரு கடல். முத்து எடுப்பவரும் உண்டு, மீன் பிடிப்பவரும் உண்டு. பொதுவாக  ஜாதகம் கணிப்பவர் காசுக்காக செய்யக் கூடாது. தட்சணை கொடுத்தா வாங்கிக்கலாம். கெடுதல்களைசொல்லும் போது நாசூக்கு வேண்டும். ஜாதகர் தகுதிக்கும், நிலைக்கும் பொருத்தமற்ற பரிகாரங்கள் சொல்லக் கூடாது. இப்படிப் பல கட்டுப்பாடுகள் உண்டு. அதை மீறுபவர்கள் சொல்வது பலிக்காது.



மூலம் தொடர்ச்சி

நட்சத்திரம் - மூலம்



பொதுவான குணங்கள்

தனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். நல்லவர்கள்; வல்லவர்கள். அதேநேரம் கர்வமும் மிகுந்திருக்கும். போராடுவதற்குத் தயங்காதவர்கள். இந்த நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. ஆதலால், இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். "யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல்" எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். கேது சாரத்தில், குரு பகவான் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்கள், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்ற பழமொழி அல்ல. வீண் பழிமொழி என்று சொல்லாம். ஆனி மூலம் அரசாளும் அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனை பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது. எனவே மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல உடல் வாகும் பேச்சு திறமையும் சிறப்பாக இருக்கும் .

குடும்ப வாழ்க்கை

சிறு வயதில் கேது தசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு குடும்பத்தில் பிரச்சனைகளும் உண்டாகும் என்றாலும் வளர வளர குடும்பம் செழிக்கும் பெரியோர் தாய் தந்தை போன்றவர்களிடம் மரியாதை பாசமும் அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாடும். பிள்ளைகளை திட்டமிட்டு வளர்த்து படிக்க வைப்பார்கள். சுக்கிர தசை இளம் வயதில் வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் இளமையிலே திருமணம் நடைபெறும்.

பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தர் பீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள். 

நண்பர்கள்

மூல நட்சத்திரக்காரர்கள் அரசனுக்கு நண்பராக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. எதிரிகளை கூட மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நண்பர்களுக்கும் கொடுப்பார்கள் 

நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

ரோகிணி,திருவோணம், அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக இருந்தால், உங்கள் தொழிலுக்கும், உத்தியோகத்திற்கு நல்ல துணையாக இருப்பார்கள்.

பரணி, பூரம், பூராடம், திருவாதிரை, சுவாதி, சதயம் உண்மையான வர்களாகவும், முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் இருப்பார்கள்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்கள் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கிடைப்பது அதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் இவர்கள் கை உதவிக்கொண்டே இருக்கும். நீங்கள் உயர்வு அடையும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள். நல்ல நட்பின் அடையாளம் இவர்கள்தான். 

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்ப்பது நல்லது ஆகும்.

தொழில்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், சட்டம், ஆர்க்கிடெக்சர், கட்டிடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர் இராணுவம், காவல்துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களை கையாள்வதில் கை தேர்ந்தவர்கள். நாட்டை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று மூல நட்சத்திர காரர்களை கூறலாம். ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், ஷிப்பிங் கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருந்து கம்பெனி ஆகியவற்றால் பெருத்த லாபம் ஈட்டுவார்கள்.

கொடி நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் என வந்து விட்டால் மனதில் உற்சாகம் கொள்வார்கள். பணிபுரியும் நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மூத்த அதிகாரிகளுக்கு, கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக விளங்குவார்கள். தனது பதவிகளுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவார்கள். நல்ல அதிகாரமிக்க பதவிகளை வகிப்பார்கள். ஓய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். 

தசா பலன்கள் 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் திசையாக வரும். கேது தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேது தசை:

இந்த தசை காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலையும், தாய்க்கு பிரச்சனைகளும் உண்டாகும். 

சுக்கிரன் தசை:

இரண்டாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருடங்கள் நடைபெறும். இளம் வயதில் சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு உண்டாகும். இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் செல்வம் செல்வாக்கும் பெருகும். 

சூரியன் தசை: 

மூன்றாவதாக வரும் சூரியன் தசை 6 வருடங்கள் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். உடலில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். 

சந்திரன் தசை: 

அடுத்து வரும் நான்காவது தசை சந்திர தசை அதுவும் சூரிய தசை போல் தான் இருக்கும். அதாவது நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற முடியும். 

செவ்வாய் தசை:

ஐந்தாவதாக வரும் செவ்வாய் தசை 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் இது மாரக தசை ஆகும். செவ்வாய் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு உண்டாகும். 

பொது பரிகாரம்

மூல நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பாலுள்ள மாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மூல நட்சத்திரத்தில் திருமணம் செய்தல், கிரகப்பிரவேசம், வண்டி வாகனம் வாங்குதல், பயணம் மேற்கொள்வது, விதை விதைப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது, பரிகார பூஜை செய்வது, மருந்து உண்ணுதல் தானியம் வாங்குவது நல்லது.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது 

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. 

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.) 

சொல்ல வேண்டிய மந்திரம்


ஓம் தத் புருஷாய வித்மஹே

வாயு புத்ராய தீமஹி

தன்னோ மாருதி ப்ரசோயாத்