சிம்ம லக்கினத்தின் பொது பலன்கள்

  





சில ஜோதிட நூல்கள் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் யோகம் என்பர்

 சிம்மம் லக்கினம்- சுப சேர்க்கை


            • குரு + சூரியன்
            • செவ்வாய் + சுக்கிரன்  (சில நூல்கள் கூறுகின்றன) 
            • சூரியனை குரு பார்த்தல் 
            • குருவை  சூரியன் பார்த்தல் 
    • சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் இருந்தால் நல்லது. 
    • சூரியனின் மகன் சனி. இருவர்க்கும் ஆகாது. பகை. மேலும் சனி மரகத்தையோ , அதற்கு ஒப்பான கண்டதையோ தனது திசையில் தருவார். 
    • புதன், சுக்கிரன், ராகு, கேது மறைந்தால் நல்லது. சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும் 

    பொது பலன்கள் 


    • கம்பிரமானவன், நல்ல பசியுடையவன், திட புத்தியுள்ளவன், பக்தியுடையவன், கபடி, வசியமுடையவன், கோபமுடையவன், தைரியவான் 
    • சிம்மம் என்ற உடன் அவற்றின் சின்னம் சிங்கம் என்பதால், இவர்கள் பேசுவது கனீர் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும். இந்த லக்னகாரர்கள் காடு மலை  சுற்றுவது மற்றும் தனிமை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். 
    • சிங்கம்  சின்னம்: பெயருக்கேற்ப பல சமயங்களில் மற்றவர்களுக்கு சிம்ம ஸ்வரூபமாகவே விளங்குவார்கள். 
    • தலைமை பண்பு, உயரிய மதிப்பு மிக்க இடத்தை விரும்புவார்கள். கலங்காத இதயத்தை கொண்டவர்கள்.
    • பிறரை அலட்சியமாக எண்ணுபவர்கள். அதே வேளையில் பொது நேர்மையை வாழ்வில் கொள்வார்கள்.
    • பொதுவாக எதிலும் தலைவணங்கி கால் பிடித்து முன்னேற இயலாது இவர்களுக்கு.
    • நாலு பேர்கள் சபையில் மதிக்க வேண்டும் என்பதற்காக வேண்டியாவது சில உதவிகளை செய்வதுண்டு. தனியாக கேட்டால் உதவி செய்யாவிடினும் சபையில் கேட்டால் முடியாது என மறுக்க மாட்டார்கள்.
    • எந்த நிலையில் இருந்தாலும் தனக்கு கீழ் ஒரு சிறிய கூட்டத்தை கட்டமைத்து இருப்பார்கள். கட்டிட தொழிலாளி நிலை ஆயினும் குறைந்த பட்சம் மேஸ்திரி ரேஞ்சுக்கு இருக்க முனைவார்கள்.
    • மனைவிக்கு முழுமைமாக கட்டுபட்டவர்கள் இந்த லக்னகாரர்கள் .மனைவியின் அன்பிற்கு அடங்கி போவதில் பெரும் விருப்பம் கொள்வார்கள்.
    • பெற்றோர்களில் யாராவது ஒருவரின் அன்பே இவர்களுக்கு முழுமையாக கிடைக்கும்.சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும்.பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திட புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் முன் கோபியாகவும் இருப்பார்கள் 
    • சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் வசதி வாய்புகளுடன் நன்றாக வாழ்வார்கள்.
    • இவர்களிடம் கோபமும், பிடிவாத குணமும் அதிகம் இருக்கும். அதுவே இவர்களின் பலமும், பலவீனமும் ஆகும். 
    • இவர்கள் கவர்ச்சியான மற்றும் எடுப்பான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
    • கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர்கள். எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையாக நடக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்.
    • சிம்ம லக்னத்தில் பிறந்த நீங்கள், உணர்ச்சிவசப்பட மாட்டார்கள் . வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக எடுத்துக் கொள்வார்கள்.
    • சில சமயங்களில் சில்லறைத்தனமாகவும் நடந்து கொள்வார்கள். இது இவர்களின் பெரிய  பலவீனமாகம் ஆகும் 

    புலிபாணி ஜோதிடம்- பாடல் - 26

    சிம்ம லக்கினம்

    பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு

    பவுமனுமே திரிகோண மேறிநிற்க

    சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி

    சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு

    வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க

    வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்

    கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே

    கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே


    பொருள்:

    இப்பாடலில் சிம்ம லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

    “சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் திரிகோணம் எனப்படும் 1, 5,7 யில் இருந்தால் மட்டும் மிக நல்ல பலனை தருவார் என்றும் மற்ற ஸ்தானங்களில் இருந்தால் துன்பம் ஏற்படும் தன் குருவான போக மகா முனிவரின் பேரருளால் கூறுகிறது.“

     விளக்கம்:

    சிம்மத்தில் பிறந்த அதாவது சிம்ம லக்கின ஜாதகருக்கு செவ்வாய் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும்: செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும். இவையும் சிவப்பரம்பொருளின் பேரருளே ஆகும். ஆனால் அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும். எனது சற்குருவாகிய போக மகாமுனிவரின் பேரருளால் கூறினேன். இக்குறிப்பினை அறிந்து ஜாதகனுக்குப் பலன் கூறுவாயாக.

    குறிப்பு:

    செவ்வாயுடன் சனி கூடினால் பாதக தன்மை அதிகமாக தருவார். கம்பீரமானவர், நல்ல பசி உடையவர், திட புத்தியுள்ளவர், பக்தியுடையவர், கபடி, ஜன வசியம் உடையவர், கோபம் உடையவர், தைரியமானவர். 

    சில ஜோதிட நூல்கள் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் யோகம் என்று கூறுகிறது 


    திருமண வாழ்க்கை

    • 6, 7க்குடையவர்  சனி. 7 – ஆம் அதிபதி உச்சமாகியிருந்தால் வரும் வாழ்க்கைத் துணையால்  பேரும் புகழும் கிடைக்கும்.
    • மனைவிக்கு முழுமைமாக கட்டுபட்டவர்கள் இந்த லக்னகாரர்கள். மனைவியின் அன்பிற்கு அடங்கி போவதில் பெரும் விருப்பம் கொள்வார்கள்.
    • சிம்ம லக்ன ஆண்கள் வீட்டில் மனைவி ராஜ்ஜியம் எனில் சிம்ம லக்ன பெண்கள் வீட்டில் கணவன் அதிகாரம் கிடையாது.அதே வேளையில் கணவன் மீது பிணைப்பு , ஈர்ப்பு உண்டுதான்.
    • திருமணம் நடந்த பிறகு தந்தை அல்லது மைத்துனர் ஒரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
    • வாழ்க்கை துணைக்கு கோவம் அதிகம் இருக்கும் மேலும் அவர்கள் அவர்களின் இளைய உடன்பிறப்புக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்
    • சிலர் திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார். 
    • வாழ்க்கைத் துணை கடும் உழைப்பாளிகள் இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
    • வாழ்க்கைத் துணை வாய் மூடி மௌனியாக வெளிப்படையாகப் பேசாத அழுத்தம் கொண்டவராக இருப்பார்.

    தொழில்


    • சிம்ம லக்னத்திற்கு தனக்காரகன்  அதாவது ஜீவனாதிபதி சுக்கிரன் கலை காரகன் என்பதாலும், சுக்கிரனே 3ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.
    • மற்ற லக்னகாரர்களை விட இவர்களுக்கு அமானுஷ்ய சக்தி எளிதாக கிட்டும். குறி சொல்லுதல், சாமியாடிகள் போன்ற ஆத்ம தொடர்புள்ள அமைப்புகள் சிம்மத்திற்கு உண்டு. 
    • வர்த்தகம் , அரசு துறை அரசு சார்ந்த பிற ஆதாயத்துறை, நேரடி கள அரசியல் என இவை அனைத்திலும் விருப்பம் உள்ளவர்கள்.
    • பாடல், இசை, சொற்பொழிவு, ஆன்மீகம் இவற்றில் விருப்பம் உண்டு.
    • பத்தாம் அதிபதியாக சுக்கிரன் பலமாக இருந்து புதன், குரு, சனி மூவரும் ஆகிய கிரகங்களின் யோக அம்சங்கள் சேரும் போது வியாபாரம், கூட்டுத் தொழில் லாபகரமாக அமையும்.
    • அரசு சம்பந்தப்பட்ட துறை, பெருந்தன்மை குணம், கௌரவமான  பதவிகள், அறிவாற்றல், பேச்சாற்றல், நேரம் தவறாதவர்கள், எழுத்தாற்றல் ஆகியவை சம்மந்தப்பட்ட தொழில் செய்யவார்கள்.
    • லக்னாதிபதி சூரியன் 10ம் வீட்டில் பலம் பெற்று செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்
    • செவ்வாய் பலமாக அமைந்திருந்தால் நல்ல நிர்வாகியாக பணிபுரிந்து எந்தத் துறையில் செயல்பட்டாலும், அதில் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக விளங்க முடியும். 
    •  சுக்கிரன் மறைவு ஸ்தானங்களிலிருந்தாலோ சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் இருந்தாலோ உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும்
    • சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று பகை வீடுகளில் அமைந்தால் நிலையான ஜீவனம் இல்லாமல அடிமைத் தொழில் செய்யக்கூடிய அமைப்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
    • உங்களுக்கு சுய முயற்சி மூலம் உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகம் எவ்வளவு சிறப்பாக செய்தாலும் அதில் உங்கள் பெயர் எப்போதும் பாதிப்பு இருக்கும்
    • ரகசியமாக பணம் உதவி அல்லது உத்தியோகம் பெற பணம் கொடுத்தால் அது பிரச்சனை ஆகி விடும்
    • இவர்களை பொறுத்தவரை படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது
    • சற்று முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப் போவது கடினமாகும். தொழில் எதிரிகளால் பிரச்சனை உண்டாகும்

    கிரகங்கள்  

    சூரியன் : லக்கினாதிபதியாகிய சூரியன் கண்டிப்பாக வலுத்திருக்க வேண்டும். நீசம் பெறின் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி தவிப்பார்கள் 

    சந்திரன் : 12ம் வீட்டுக்கு உரியவர். ஆனாலும் நட்பு கிரகம் தான். ஆனாலும் மனோகாரகன் சந்திரன் விரய ஸ்தானாதிபதி ஆவதால் அவர் 3, 6, 8ல் மறைதல் நலம்

    புதன் : இவர்  2 மற்றும் 11 க்கு உடையவர். யோகமில்லாதவர். ஆனாலும் 8வீட்டில்  அமர்ந்து நீசபங்கம் பெறுதல் சிறப்பு. அப்போது மட்டும் நல்லது செய்வார். மற்ற இடங்களில் இருந்தால் புதன் திசையில் மாராகத்திற்கு ஒப்பான கண்டம் கொடுப்பார்.

    செவ்வாய்: செவ்வாய் 4, 9 உரியவர். யோககாரரே. ஆனால் ஸ்திர லக்கினத்திற்கு  9ம் வீட்டு அதிபதி  பாதகாதிபதி. எனினும் செவ்வாய்  சிம்மத்திற்கு பாதகம் செய்வதில்லை பதிலாக நன்மையே  செய்வார்

    குரு: குரு 5, 8 க்கு உரியவர். மற்றும் யோகதிபதி ஆவார். ஆனாலும் முழு நன்மை  தரமுடியாது இவர் சுக்கிரனோடு சேர்ந்தால் மரணத்திற்கு நிகரான துன்பத்தை அவரின் தசா புத்திகளில் தருவார்

    சுக்கிரன்: சுக்கிரன் 3, 10-கும் உரியவர். சுகத்தையும் லாபதிபதியாகவும் செயல்படுவர் இருந்தாலும் சுக்கிரன் தன் தசா புத்திக்காலங்களில் பாதகத்தை செய்வார்

    சனி: சனி 6, 7, க்கு உடையவர். பகை ஆவரர். தசா புத்திக்காலங்களில் மாரகத்திற்கு சமமான பாதகத்தை தருவார்கள். சிலருக்கு மராகத்தையும் தர வல்லவர். 

    சூட்சுமங்கள்  


    • இவர்களுக்கு குரு 5 மற்றும் 8 உடையவர் என்றாலும் குரு யோகாரரே.
    • ராகு கேதுவைத் தவிர மற்ற கிரகங்களை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.ராகு மற்றும் கேதுக்களிடம் சூரியன் தன்னுடைய வலிமையை இழக்கும். 
    • சூரியனுடன் சனி, ராகு, கேது சேர்ந்தால் நல்லது அல்ல.
    • செவ்வாய் யோகாரரே. ஆனாலும் அவர் திரிகோணத்தில் இருந்தால் மட்டுமே நல்லது செய்வவார். மற்ற இடங்களில் இருந்தால் துன்பத்தை கொடுக்கவும் தயங்க மாட்டார்
    • சனி பகை கிரகம் என்றாலும் ஆறுக்குடையவர் என்ற வகையில்  சனி உச்சம் பெற்றால் நல்லதே நடக்கும்.

    தசா பலன்கள் - சூரியன் 

    சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன்.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • லக்கினாதிபதி சூரியன் என்பதால் நல்லதே நடக்கும். ஆனால் சூரியன் கெடக் கூடாது.
    • சுபச்செயல்கள் கைகூடும். பொருட்சேர்க்கை உண்டாகும்.
    • உடல் ஆரோக்கியம் மேம்படும்.வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
    • புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.மனதில் புதுவிதமான லட்சியம் உண்டாகும்.
    • அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
    • தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.வெளியூர்
    • தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும். 
    • சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் அந்தஸ்தையும் வெற்றியையும் பெறும் வாய்ப்பு வரும். 
    • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

     தசா பலன்கள் - சந்திரன் 

    சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்னாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திர திசையில் அடையலாம். 
    • சந்திரன் பலம் பெற்று இருந்தால் நல்ல மன வலிமை, தைரியம் துணிவு உண்டாகும். 
    • சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும், வளர்பிறைச் சந்திரனாக இருந்து 2, 11 ஆகிய ஸ்தானங்களில் அமைந்திருந்தாலும், நட்பு கிரக சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தாலும், அரசாங்க வழியில் அனுகூலம், பெயர், புகழ் உயர கூடிய அமைப்பு, திருமண சுப காரியங்கள் நடைபெறும் யோகம், சிறப்பான புத்திர பாக்கியம் அமையும் வாய்ப்பு, பூமி, மனை, வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகும்..
    • சந்திரன் கெட்டு இருக்கும் பட்சத்திம் பண விரயங்கள், மனக்குழப்பங்கள், எதிலும் தெளிவாக செயல்பட முடியாத நிலை, மனதில் துக்கம், கவலை போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
    • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

    தசா பலன்கள் -  செவ்வாய் 


    சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 

    • செவ்வாய் 4 மற்றும் 9 க்கு உரியவர். நட்பு கிரகம். மேலும் சிம்மம் ஸ்திர வீடு. 9 க்கு உரியவர்பாதகாதிபதி ஆனாலும் நன்மையே செய்வார் 
    • சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயமே  யோக காலம் ஆகும்.
    • பதவி உயர்வு, சொகுசு வாகனம் வாங்குதல் போன்றவை  இந்த திசையில் எளிதில் கை கூடும். 
    • பொதுவாக செவ்வாய் பலமிழந்து அமையப் பெற்று திசை நடைபெற்றால் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு, வீண் வம்பு வழக்குகள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். 
    • பொதுவாக இந்த திசை காலத்தில் உறவினர்களிடம் பிரச்சனை உண்டாகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன்னென்றால் செவ்வாய் பாதகதிபதியும் ஆவார்.
    • கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். கோபத்தினால் சில பிரச்சனைகளை வந்து போகும்.
    • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
    தசா பலன்கள் -  புதன் 
      சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

      • புதன்  சிம்ம லக்னத்திற்கு 2,11க்கு உடையவராக இருப்பதால் வருமானம், குடும்பம், வாக்கு, வித்தை போன்றவற்றையும், லாபத்தையும் தந்தாலும் புதன் இரண்டில் உச்சம் பெற்று அமர்ந்து இருந்து அவருக்கு புதன் தசா நடைபெற்றால் அவர் தன் வாழ்க்கைத் துணையை இழக்க நேரிடும் . 
      • 10ல்  புதன் பலம் பெறும் போது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்திரிகைத் துறை, புத்தக பதிப்பு, சொந்தமாக தொழில் இருப்பவர்கள் நல்ல நிலையும், சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
      • யோகம் இல்லாதவராகினும் புதன் திசையில் சிம்ம லக்கினகாரருக்கு நன்மையே செய்வார் என்பது தான் உண்மை
      • பேச்சியால் லாபம் உண்டு. எந்த முயற்சியிலும் வெற்றி உண்டு. முத்த சகோதரத்வம் சிறப்பாக இருக்கும் 
      • இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு திருமணம் நடைப்பெறும்.
      • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

       தசா பலன்கள் -  குரு  


        சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 

        • இவர்  5 மற்றும் 8 க்கு உரியவர். குரு நட்பு கிரகம்.  மேலும் இவர் யோகாரார்கள் ஆவார் 
        • சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயமே  யோக காலம் ஆகும்.
        • எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும் 
        • உத்தியோகத்தில் இடமாற்றம் சாதகமாக அமையும்.
        • திருமணத்திற்கு காத்து கொண்டு இருபவருக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் எதிர் பார்ப்பவருக்கு குழந்தை பாக்கியமும் கிட்டும். வயதுக்கு ஏற்ற நல்லது நடக்கும்.
        •  தந்தை, தந்தைவழியில் நன்மை கிடைக்கும். 
        • திரிகோண ஸ்தான 5ஆம் வீட்டிற்கும், மறைவு ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாவதால் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே குரு திசையில் முதலில் 60% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 40% தீமையான பலன்களும் தரவல்லார்.
        • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

        தசா பலன்கள் - சுக்கிரன்  

          சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
          • சுக்கிரன் 3 மற்றும் 10 க்கும் அதிபதி ஆவார்.  சூரியனுக்கு சுக்கிரன் பகை தன்மை வரும் ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய சிம்ம லக்னத்திற்கு 3,8ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும், எனவே மாரகாதிபதி தன்மையும் பெறுவதால் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் சுக்கிரனே 
          • காமம் சார்ந்த விசயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வியாதி, வழக்கு போன்றவை வரும் 
          • யாருக்கும் கடன் தர வேண்டாம். தாய் மாமன் , வேலையில் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும். உல்லாசம்  என்ற பெயரில் உடலையும் , பெயரையும் கெடுத்து கொள்ள வேண்டாம் 
          • சுக்கிரன் வலிமையாகத் தனியாக இருக்கும் அமைப்பில் முழுமையாக நன்மைகளைத் தர மாட்டார். இதுபோன்ற அமைப்பில் தனது வீடு, வாகனம், காம சுகம் போன்ற காரகத்துவங்களைக் கொடுத்து கெடுப்பார்.
          • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் - சனி 

            சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
            • சிம்ம லக்னத்திற்கு சனி 6,  7 க்கு உரியவர். மேலும் நல்லவர் கிடையாது. இவரே மராகாதிபதியும் ஆவார்.
            • சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் சனி தசை அல்லது புத்தி சிம்ம சொப்பனமாகத் தான் இருக்கும்.
            • சனி ஏழாம் வீட்டிற்கு அதிபதி என்பதால் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் போது சசமகா யோகத்தை தருகிறார். சச மகா யோகம் பெற்றிருப்பவர்கள் சனி தசை நடக்கும்போது  தலைமை பதவியை சனி தருவார். 
            •  சனி தனது திசையில் 30% நன்மையான பலன்களும் 70% தீமையான பலன்களையும் தரவல்லார் என்றாலும் திருமண வாழ்க்கை தீர்மானிப்பவர் அவரே.
            •  சனி தசையின் பொது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.  திருமண போன்ற சுப காரியங்கள் கைகூடும்
            • சூரியன் பலமாக இருந்தால் அரசு வழியில் அதிகாரமிக்க பதவிகளை பெறும் அமைப்பு, ஆடை, ஆபரண சேர்க்கை, தந்தைவழியில் சிறப்பு, உறவினர்களால் உதவி, எடுக்கும் காரியங்களில் வெற்றி, உடல்நிலையில் மேன்மை, தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் உண்டாகும்.
            • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  ராகு  

              சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • சூரியனுக்கு சந்திரனுக்கு  ராகு பகை. அந்த வகையில் பார்த்தால் ராகு திசை நல்ல திசை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 
              • வேற்று நாடு, மாநிலம் செல்ல நேரிடலாம். அத்தகைய மக்கள் தொடர்பு கிடைக்கும்.
              • திடீர் அதிஷ்டம் அடிக்கும் எனவே ஆசைகள் அதிகமாகும். இது நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆசையை குறைத்து கொள்ள வேண்டும் 
              • சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் பல கருத்து வேறுபாடுகள் வந்து நிம்மதியை கெடுக்கும். ஆனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள இருக்கும். அதனால் செலவும் உண்டு. 
              • கலைஞர்களுக்கு சிறப்பாக இருக்கும். இளைய சகோதரத்துவம் சிறப்பாக இருக்கும் 
              • குழந்தைகளால் தொல்லை இருக்கும். எந்த வயது குழந்தையைக் இருந்தாலும் அவர்களால் நிம்மதி குறையும் 
              • தொழிலில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டு.
              • இந்த திசை நடக்கும் போது எந்த கெட்ட பழக்கத்தையும் பழக வேண்டாம். பல பிரச்சனைகளை பார்க்க நேரிடும். இழப்பும் உண்டாகும்.
              • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              தசா பலன்கள் -  கேது  

                சிம்ம  லக்னத்திற்கு அதிபதி சூரியன். கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                • சூரியனுக்கு  கேது  பகை. இவர்களுக்கு கேது திசை நல்ல திசை இல்லை . 
                • கேது திசை வரும் போது சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் கேது கெடுதல் செய்வதில்லை. சுப வீடுகளில் கேது இருக்கும் போது வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் நன்மை மட்டும்  செய்வார்.
                • கலகங்கள், பிரச்சனைகள், பண பிரச்சனைகள், உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஜாதக படி துறவறம் போகும் அமைப்பு இருக்கும் பட்சத்தில் இந்த திசை துறவறம் ஏற்பார்கள் 
                • வேலையில் மாற்றம், வீடு மாற்றம், மன மாற்றம் என சிறிய மாற்றங்களை கேது ஏற்படுத்துவார்.
                • கேது நீச்ச ராசியான ரிஷபத்தில் இருந்தால், இந்த திசையில் கெட்ட எண்ணம், கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்களை தேடி கொள்வார்கள்
                • குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருக்கவும். 
                • கேது இருக்கும் வீட்டு அதிபதி உச்சம், ஆட்சி பெற்றால் மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பாக இருக்கும் 
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                சிம்மம் லக்கினம்  – நட்சத்திரம் 


                சிம்ம  லக்கினத்தில்  உள்ள நட்சத்திரங்கள் மகம், பூரம், உத்திரம் 1 பாதம்    ஆகியவை அடங்கும். இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
                அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம் 

                சிம்மம் லக்கினம்  – மகம்   

                மகம் நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன் , கேது   தாக்கத்துடன் இருப்பார்.

                மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள் என்பது உண்மை தான். இது கேது நட்சத்திரம். அவர்களுக்கு என்று ஒரு வரைமுறை வைத்திருப்பார்கள். இந்த  நட்சத்திரத்தில் லக்கினம் அமையப்பெற்றால் நற்பண்பாளர்கள், மனைவி சொல்வதை கேட்பார்கள், சிந்தித்து செயலில் இறங்குவான், மனக்கவலை இருக்கும், எந்நேரம் வியாதி  உடலில் இருக்கும், பரிசுத்தமானவர்கள், சாந்தசொரூபன், அதிக ஆசைகொண்டவன், தீயால் வடு உள்ளவன், களிப்புடையவன், செந்நிற அல்லது தங்க நிற விழியுடையவன், நெஞ்சழுத்தம் கொண்டவன், தோல் வியாதி கொஞ்சம் துன்பப்படுவதும், பேசுவதில் இனிமையிருக்கும், மற்றவர்கள் பார்க்கும் பொழுது கொஞ்சம் பயங்கரமாக இருப்பார்கள்,  ஆற்றல் மிக்கவர்கள், கொஞ்சம் கபட புத்தி இருக்கும்

                சிம்மம் லக்கினம்  – பூரம்   

                பூரம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன் , சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.

                இது ஒரு சுக்கிரன் நட்சத்திரம். இந்த நட்சத்திர சாரத்தில் லக்கனம் கொண்டு பிறப்பவர்கள் பலரால் அறியப்படுபவனாயிருப்பான், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், வீரன்,  வாணிகன், மதுர வார்த்தை பேசுபவன், பொன் பொருள் ஆசை இருக்கும், விவசாயி, பண்பாளன், குடியானவன், கோபக்காரன், ஒழுக்க வெறிகொண்டவன், சிறிய இல்லத்தில்  வசிப்பவன், சதா நீர்வேட்கை இருக்கும், வடு உடலில் இருக்கும், ரகசியம் மனதில் தங்காது, அதி உன்னதமானவன், நன்மைகள் பெறுபவன், பிறரை இகழ்வான், தெய்வ  வழிபாடு குறைவு, பெரும் செல்வம் இருக்காது, புகழாளன், தேவையற்ற கவலை கொள்பவன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போகலாம்

                சிம்மம் லக்கினம்  – உத்திரம் - 1  

                உத்திரம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சூரியனின் முழு தாக்கத்தில்  இருப்பார்.

                உத்திரம் முதல் பாதத்தில் பிறப்பவன் கற்கண்டைப்போல இனிமையாகப் பேசுபவன், புகழுடையவன், நன்னடத்தை கொண்டவன், பயப்படமாட்டான், இடம் பொருள்  ஏவல் அறிந்து நடப்பவன், உற்றார் மீது அதிக பாசம் கொண்டவன், நெருப்பாக தெரிவான் அனல் அன்பானவன். நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இருக்கும். ‘தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத குணமும் உண்டு. குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டிருப்பார்கள். எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார்கள்

                மந்திரம் 

                சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய அனுமன் துதி மனதார சொல்லி வருவது நல்லது

                விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
                உறைவார் முடிவே உணரா முதலோன்
                கரைவார் நிறைவே கருதாதவன் போல்
                உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

                கண்டேன் ஒரு சீதையையே
                கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்
                வென்றேன் எனவே விழைந்தானையே நான்
                கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !

                சரமே தொளையா சகமே மறவா
                சரீரா அனுமா ஜமதக் கினிநீ
                உரமே உறவே உறவோய் பெரியோய்
                உயர்வே அருள்வாய் திருமாருதியே !

                 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



                கடக லக்கினத்தின் பொது பலன்கள்

                 



                2க்கு  உரியவனாகிய சூரியன் கொல்லான்.

                சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்வது நல்லது அல்ல.

                 கடகம் லக்கினம்- சுப சேர்க்கை

                    • சூரியன்+சுக்கிரன் 
                    • சூரியனை சுக்கிரன் பார்த்தல் 
                    • சுக்கிரனை சூரியன் பார்த்தல் 
                    • சுக்கிரன் சூரியன் நட்சத்திரம் ஏறுதல் 
                    • சூரியன், சுக்கிரன் நட்சத்திரம் ஏறுதல் 
                • கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசையும், செவ்வாய் திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும் 
                • மிதுன லக்கின சுபராக சுக்கிரனும்  அசுபராக குரு, செவ்வாய், சூரிய கிரகங்களும் மற்றும் சனி, சந்திரன் கொஞ்சம் குறைந்த அளவு நன்மை தருபவர், அதுதவிர இவருக்கு  அசுபராக  வருபவர் திசை நடக்கும் பொழுது மாரகம் நிகழும் என்று ஜாதக அலங்காரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது

                பொது பலன்கள் 

                • தனவான் , பிதாவுக்கு அடங்காதவன், குரு விசுவாசி, கபடம் உள்ள அவமானான களத்திரகாரகன், தான தர்மம் செய்வதில் தாரள மனப்பான்மை உடையவன், அற்ப புத்திரன் உடையவன்.
                • கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை அப்படியே நண்டுப் பிடியாகப் பிடித்துக்கொள்வார்கள். கூர்மையான பார்வை கொண்ட இவர்கள், விடாமுயற்சி, பிடிவாதம் கொண்டிருப்பார்கள். தெளிந்த அறிவும் சிந்திக்கும் திறனும் மிக்கவர்கள்.
                • நண்டு சின்னம்: நண்டின் தன்மை அது தன் எல்லா குட்டிகளை அரவணைத்துப் போல இந்த கடக லக்கின ஜாதகர்கள் அதிக பாசக்காரர்கள் மற்றும் அன்பால் அரவணைப்பவர்கள்.
                • "மாற்றானுக்கு இடம் கொடேல்’ (Never let your enemy to hurt and succeed you) என்றொரு பழமொழிக்கு ஏற்ப இந்த லக்கின காரர்களை மெல்லத் தன்னை நுழைத்துக்கொண்டு, முழுவதுமாக ஆக்கிரமிக்கும் கெட்டிக்காரர்கள்.
                • “நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் வளர வளர இடம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். தன் திறமைக்கு ஏற்ப வெவ்வேறு வேலைகளை கற்று மாறிக்கொண்டு இருப்பார்கள். 
                • கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையானவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள்.
                • வாக்கு சாதுர்யம் மிகுந்தவர்கள். இவர்கள் லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்பார்கள். புதிதாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.
                • கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாராள மனப்பான்மை மேலோங்கி இருக்கும். 
                • பெரிய பெரிய ஆசைகளை மனதில் பூட்டி வைத்திருப்பார்கள். அந்த ஆசையை அடைய கடுமையாக உழைக்கவும் தயங்க மாட்டார்கள். தானம் தர்மம் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். செல்வம் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கலைகளிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குவார்கள். 
                • செல்வ செழிப்புடன் வாழக்கையை வாழ ஆசைபடுவார்கள். பெரும்பாலோனோர் சற்று பலவீனமான உடலமைப்பை கொண்டவர்கள்
                • நண்பர்களிடையே விரோதத்தை வளர்த்து கொள்வார்கள். இவர்கள் . இவர்கள் சண்டை என்று வந்து விட்டால் ஒதுங்கி போகவே இருப்பார்கள். சிலசமயங்களில், இவர்கள் தைரியம் மிகுந்தவர்களாக காட்சியளிப்பர். துணிச்சலான காரியங்களை செய்ய கூடியவர்கள். ஆனால் இவர்கள் மனது அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.
                • இவர்கள் தண்ணீரில் அதிக விருப்பம் இருக்கும். தண்ணீரை கண்டால் சிறு குழந்தை போல மாறி விளையாடுவார்கள். தண்ணிரால் உடல் நலம் சிலருக்கு பாதிக்கும் 
                • செயல்களில் மந்தமாகவும், கவன குறைவாகவும் இருப்பர். இவர்கள் விவேகமான புத்திசாலிதனத்தை கொண்டவர்கள். கலைகளிலும், இசையிலும் மிகவும் விருப்பம் கொண்டவர். எதையும் ஆர்வமுடன் கற்பார்கள்.

                புலிபாணி ஜோதிடம்- பாடல் - 23

                கடக லக்கினம்

                கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு

                கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி

                வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து

                வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே

                சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க

                சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு

                கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா

                கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே


                பொருள்:

                இப்பாடலில் கடக லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

                “கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் சுக்கிரன் தீய பலனையே தருவார். ஆனால் திரிகோண ஸ்தானங்களில் (1, 5, 9) இருந்தால் மிக நல்ல பலனை தருவார். “

                 விளக்கம்:

                கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி என விளம்பும் சுக்கிராச்சாரியார்` மிகுதியான தீய பலன்களைத் தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரஜித்தும்  இக்சுக்ராசாரியினால் வகைதொகையாய் மாண்டதையும் அறிவாயன்றோ? ஆயினும் இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவப்பரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது. இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது

                குறிப்பு:

                கடக லக்கினத்திற்கு 4, 11 உடையவர் சுக்கிரன் என்றாலும் சுக்கிர தசா புத்தி களத்தில் நல்லது செய்ய மாட்டார். 5, 10 க்கு உரியவர் செவ்வாய் என்றாலும் செவ்வாய் இங்கு நீசம் அடைகிறார். 

                சுக்கிரன் இவர்களுக்கு மிகுதியான தீய பலன்களைத் தருவார். ஆயினும் சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானம் ஆகிய 1, 5 யில் நின்றால்  மிகவும் நல்லது.  மற்ற எந்த இடத்தில் சுக்கிரன் இருந்தாலும் நல்லதல்ல.


                திருமண வாழ்க்கை

                • 7, 8க்குடையவர்  சனி. திருமண வாழ்கையில் பல போரட்டங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்காது.
                • வழக்காடுவதில் வல்லவர்களாக இவர்களின் வாழ்க்கைத் துணை அமைவார்கள். மேலும் கொண்ட கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள்.
                • இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் தொழில் மிக மிகச் சிறப்பாக அமையும்.
                • திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவராக இருப்பார்கள்.
                • மகரம் என்பது கால புருஷ தத்துவப்படி 10-ஆம் வீடு எனவே , இந்த ராசி – லக்னத்தாரின் வாழ்க்கைத் துணைவர் மிகவும் கௌரவம் பார்ப்பவராக இருப்பார்.
                • திருமணம் ஆனவுடன் சிலருக்கு மாமனாரே நல்ல வேலை வாங்கிக் கொடுத்தோ அல்லது வியாபாரம் ஆரம்பித்துக் கொடுத்தோ பெருமைப்படுத்துவர்.
                • ராசிக்கு 7 – ஆம் அதிபதியான சனி உச்சமானால் , நல்ல சுகபோகத்துடன்- நிறைந்த கௌரவத்துடன் எல்லாரும் வந்து பணிவுடன் பேசும் அளவுக்கு பெரிய மனிதத்தன்மையோடு இருப்பர். ஆனால் நீசமானால் திருமணம் ஆனவுடன் வேலை போய் , கெளரவம் இழந்து மிகவும் கஷ்டப்படுவார்கள்.

                தொழில்

                • தனக்காரகன் செவ்வாய் என்றாலும் கடகத்தில் செவ்வாய் நீசம் ஆகிறார். ஆனாலும் செவ்வாய் யோககாராரே.
                •  கடன் கொடுத்தவர்களிடமிருந்து பேசி மீண்டும் பணத்தை திரும்பப் பெறும் திறன் உங்களுக்கு இருக்காது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்
                • எந்த வேலையைச் செய்தாலும் அதை நேர்த்தியாகவும் அழகுணர்வோடும் செய்து முடிப்ப்பார்கள். மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். 
                • கடல் சார்ந்த வேலைகளில் சிறந்து விளங்குவீர்கள். சரித்திரம் சார்ந்த பதிவுகளை துல்லியமாக எழுதும் திறமை உடையவர்களாக இருப்பீர்கள். எழுத்தாளர்கள், மரைன் பொறியாளர்கள், புத்தக வியாபாரிகள், பழைய புத்தகம் விற்பனை செய்பவர்கள், அரசியல்வாதிகள், டெய்லர், உணவு கடை நடத்துபவர்கள், நர்ஸ், ஆயாக்கள், சமையல்காரர்கள், நடிக நடிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகிய துறைகளில் உங்களால் ஜொலிக்க முடியும். 
                • ஐந்து, பத்துக்குடையவராக, ஒரு கோணத்திற்கும், கேந்திரத்திற்கும் ஆதிக்கம் செலுத்தும் செவ்வாய் இருக்கிறார். மற்றும் சூரியன், சந்திரன், குரு மூவரும் ஆகிய கிரகங்களின் பலம், பார்வை ஏற்பட்டால் தொழிலில் பல சாதனைகள் செய்யும் யோகம் உண்டாகும்.
                • மருத்துவம்,ஆன்மீகம், சினிமா போன்ற துறைகளில் சாதித்தவர்கள் பெரும்பாலும் கடக லக்னத்தில் பிறந்தவர்களே 
                • லக்னாதிபதி பலம் பெற்றால் விரைவான முன்னேற்றம். லக்னாதிபதி பலமிழந்தால் மந்தமான முன்னேற்றம். பொதுவில் இந்த லக்னக்காரர்கள் சோடை போக மாட்டார்கள் 
                • 2மிடத்து அதிபதியாக சூரியன் வருவதால் அரசு மற்றும் அரசியல் லக்னம் என்றே குறிப்பிடலாம்.  இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அரசினோடு எந்தவிதத்திலாவது தொடர்பினை வைத்துக் கொள்ள நேரிடும். 
                • 10மிடமாக செவ்வாய் வீடு வருவதும் ஆட்சி அதிகாரத்தினை பிடிப்பதற்கு செவ்வாய் பலமான உதவிகளை செய்து விடுகிறார். பண வருவாய் வாக்கு போன்ற இனங்களிலும் மேற்குறிப்பிட்ட பலன்களே.
                • மேலும் அழகு மற்றும் பேஷன், வங்கி மற்றும் நிதி, உயிரியல் மற்றும் தாவரவியல் துறையில் சிறப்பாக இருப்பார்கள்.
                • சூரியன், புதன் கிரகத்தோடு சேர்ந்திருந்தால் அரசு பள்ளியில் கணித ஆசிரியர், அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகாரி போன்ற பணிகளின் மூலம் வருமானம் உண்டாகும்.
                • சூரியன் செவ்வாய் கிரகத்துடன் சேர்ந்திருந்தால் பத்திரப்பதிவுத்துறை, அரசு சட்டக் கல்லூரி, பேராசிரியர், காவல்துறை, ராணுவம் அரசு கிடங்கு மற்றும் குழந்தைகள் தொடர்பான தொழில்கள், அரசு மருத்துவமனை பணி போன்ற வேலைகளில் மூலம் வருமானம் ஏற்படும்.

                கிரகங்கள்  

                சூரியன் : சூரியன் நட்புடன் 2-க்குரியவராகவும் தனம், வாக்கு தன்மையும் மற்றும் நேத்ரம் தொடர்பான வேலைகளை செய்வார்.

                சந்திரன் : 2ம் வீட்டுக்கு உரியவர். சந்திரன் சமம் நிலை அடைகிறார். இவர் மாராகதிபதி என்று சில நுல்களும், கொல்லான் என்று சில நுல்களும் சொல்கின்றான. ஆனாலும் அவர்களின் திசை, புத்தியில்  மாரகத்திற்கு ஒப்பான பாதகம் உண்டாக்கும் .
                புதன் : இவர்  3 மற்றும் 12 க்கு உடையவர். நல்லவர் அல்ல. தசா புத்திக்காலங்களில் மாரகத்திற்கு சமமான பாதகத்தை தருவார்கள் 
                செவ்வாய்: செவ்வாய் 5,10-க்கும் உரிய இவர் பூர்வ புண்ணியம் கர்மகாரகனாகவும் இருப்பார். இந்த இடத்தில் செவ்வாய் ஒரு கேந்திரதிபதியாகவும் திரிகோணாதிபதியாகவும் இருந்து ராஜ யோகாதிபதியாகவும் செயல்படுவார்.
                குரு: குரு ஆறுக்கும் ஒன்பதுக்கு உரிய வேலையான நோய், கடன், மற்றும் பாக்கியத்தை தருபவர். 
                சுக்கிரன்: சுக்கிரன் 4, 11-கும் உரியவர். சுகத்தையும் லாபதிபதியாகவும் செயல்படுவர் இருந்தாலும் சுக்கிரன் தன் தசா புத்திக்காலங்களில் பாதகத்தை செய்வார்
                சனி: சனி 7, 8, க்கு உடையவர். பகை ஆவரர். தசா புத்திக்காலங்களில் மாரகத்திற்கு சமமான பாதகத்தை தருவார்கள் 

                சூட்சுமங்கள்  

                • இவர்களுக்கு குரு , செவ்வாய் யோகமானவர்கள் ஆனால் செவ்வாய் கடகத்தில் நீசம் ஆகும். 
                • சனி 7 மற்றும் 8 உடையவர் என்றாலும் அவரே மராகாதிபதி ஆவார். 
                • சுக்கிரன் வீட்டில் தான் சந்திரன் உச்சம் அடைகிறார். ஆனாலும் சுக்கிரன் பகையே.
                • சந்திரன் நீசம் அடையும் வீடு விருச்சிகம். ஆனால் செவ்வாய் யோககாரகன். எனவே சந்திரனின் நீசத்தை அதிகமாக கணக்கு எடுத்து கொள்ளவது இல்லை.
                • சந்திரன் வளர்பிறை என்றால் நல்ல பலனையும் தேய்பிறையானால் தீய பலனையும் தர வல்லவர். 
                • கடக லக்கினகாரர்களுக்கு எங்கு சந்திரன் நின்றாலும் நல்லது என்று சில ஜோதிட நூல்கள் கூற்கின்றன 
                • .

                தசா பலன்கள் - சூரியன் 

                கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . சந்திரன் சூரியன் சமம்.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • சூரியன் 2க்கு உடையவர்.   அரசியல் தொடர்பு சிறப்பாக இருக்கும் 
                • குடும்ப நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
                • பொருளாதாரம் மேன்மை அடையும். புதிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
                • கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
                • செல்வாக்கு அதிகரிக்கும்.தனச்சேர்க்கை உண்டாகும்.
                • உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆதரவான சூழல் உண்டாகும்
                • கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். 
                • சூரியன் தந்தைக்காரகன் என்பதால் தந்தையின் பாசம் அபரிமிதமாக இருக்கும். தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். மன தைரியம் அதிகரிக்கும் 
                • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

                 தசா பலன்கள் - சந்திரன் 

                கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.
                • செய்யும் செயல்களால் கீர்த்தி அதிகரிக்கும்.  வீட்டில் சுபச்செயல்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
                • குடும்ப நபர்களிடம் ஆதாயமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் பெருந்தன்மையான குணத்தினால் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். நிம்மதியான உறக்கம் உண்டாகும்.
                • ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான லட்சியங்களை உருவாக்குவீர்கள்
                • சந்திரன் பலம் குறைந்து தன் தசாவையோ, புத்தியையோ, அந்தரத்தையோ நடத்தும் காலத்தில், கெடுபலன்கள் கொடுக்கும்
                • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  செவ்வாய் 

                கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • கடகத்தில் செவ்வாய் நீசம் அடைந்தாலும் அவர் 5 மற்றும் 10 க்கு உரியவர். ஆதலால் அவர் நன்மையே செய்வார்.
                • திருமணத்திற்கு காத்திருபவர்களுக்கு  திருமணமும், திருமணமானவர்களுக்கு குழந்தை பேரும் உண்டாகும். மேலும் குழந்தைகளால் மகிழ்ச்சி, பெருமை உண்டாகும்.
                • அதிஷ்டம் நல்ல வழியில் கிடைக்கும். 
                • படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். வேலைக்கு செல்வபவர்க்கு பதிவி உயர்வு, எதிர்பார்த்த இடம் மாற்றம் கிடைக்கும்.
                • தொழில் செய்பவருக்கும் மிக நல்ல பலனே நடக்கும் 
                • கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். கோபத்தினால் சில பிரச்சனைகளை வந்து போகும்.
                • செவ்வய்யுடன் சுபகிரகம் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் மிக நன்றாகவே இருக்கும்
                • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
                தசா பலன்கள் -  புதன் 
                  கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . சந்திரன் புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                  • புதன் கடக லக்கினத்திற்கு 12, 3ஆம் அதிபதி மேலும் பகை கிரகம். நல்லது செய்யாது. இது யோகமில்லாத கிரகம் ஆகும் .
                  • கடக புதன் எந்த ஒருவரை எதிலும் உயர் நிலையை எட்ட விடுவதில்லை. அதனால் கடக லக்கினகாரர்களுக்கு புதன் திசை மோசமான திசை என்ற சொல்லாம்.புதன் நல்ல இடத்தில் இருக்கும் பட்சத்தில் பிரச்சனை குறையும்.
                  • புதன் திசையில் பிரச்சனை தருவதுடன் சிக்கலில் மாட்டிவிட வாய்ப்பு அதிகம் கவனம் கட்டாயம் தேவை.  
                  • புதிய முயற்ச்சிகள் எடுக்க தோன்றும். ஆடம்பரத்தை மனம் விரும்பும் 
                  • கலையில் ஆர்வம் பிறக்கும். அந்த துறையில் இருப்பவருக்கு சிலருக்கு நமை உண்டாகும்.
                  • நல்லது, கெட்டது, நல்லவர், கெட்டவர் புரிந்து கொள்விர்கள். அனுபவத்தால் தான் சில விசயங்கள் புரியம் 
                  • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                   தசா பலன்கள் -  குரு  

                    கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                    • இவர்  6 மற்றும் 9 க்கு உரியவர். குரு நட்பு கிரகம். குரு கடகத்தில் உச்சம் பெறுகிறார்.  கடக லக்கினகாரர்களுக்கு குருவும்  செவ்வாயும் யோகாரார்கள் ஆவார் .
                    • கடக லக்னத்துக்குப் பாக்கியாதிபதியாக அமைந்து யோகம் தருவார் 
                    • உத்தியோகத்தில் இடமாற்றம் சாதகமாக அமையும்.
                    • வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
                    • வயதுக்கு ஏற்ற நல்லது நடக்கும். தந்தை, தந்தைவழியில் நன்மை கிடைக்கும். 
                    • வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் 
                    • கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு அது சுப செலவாகவும் இருக்கலாம். 
                    • 6க்கு உடையவர் என்ற வகையில் சில பிரச்சனைகள், கடன்கள் உண்டாகும் ஆனாலும்  செல்வம் அதிகரிக்கும்  
                    • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                    தசா பலன்கள் - சுக்கிரன்  

                      கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                      • கடக லக்னத்துக்கு சுக்கிரன் நான்காம் பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபராக வருகின்றார். அதாவது சுகாதிபதி மற்றும் லாபாதிபதி ஆக வருவார். ஆனாலும் கடக லக்கினாதிபதி சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகையானவர்கள் 
                      • கடக லக்கினக்காரர்களுக்கு ஏழாம் இடமாகிய மகர ராசியில் சுக்கிரன் இருந்து தசை நடத்தினால் களத்திர தோஷத்தை ஏற்படுத்துவார் 
                      • கடக லக்னத்திற்கு சுக்கிரன் நான்காமிடத்தில் ஆட்சியும் மூலத் திரிகோணமும் பெற்று யோகம் செய்வார். இங்கிருக்கும் சுக்கிரன் திக்பலமும் பெறுவார் என்பதால் இது ஒரு கூடுதலான நன்மைகளை  தரும் என்றாலும் சுக்கிரன் இந்த இடத்தில் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்படுவார் என்பதால் என்னதான் யோகம் செய்தாலும் சில நெருடல்களும் இருக்கும். மேலும் கடக, சிம்ம லக்னங்களுக்கு  நல்ல நிலைகளில் இருந்தாலும் சுக்கிரன் மனப்பூர்வமாக நன்மைகளைச் செய்வது இல்லை.
                      • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                      தசா பலன்கள் - சனி 

                        கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                        • கடக ராசி லக்னத்திற்கு சனி ரொம்ப நல்லவர் கிடையாது. மேலும் இவரே மராகாதிபதியும் ஆவார்.
                        • சனி ஏழாம் வீட்டிற்கு அதிபதி என்பதால் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் போது சசமகா யோகத்தை தருகிறார். சச மகா யோகம் பெற்றிருப்பவர்கள் சனி தசை நடக்கும்போது  தலைமை பதவியை சனி தருவார். 
                        • அஷ்டமாதிபதி இருக்கும் சனியால் சற்று கடும் பலன்கள் இருக்கும் என்று சொல்ல முடியும்  
                        • திடீர் என்று யோகம், அதிஷ்டம் உண்டாகும் வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்கும் அமைப்பு உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும்
                        •  எட்டுக்கு  உரியவர் என்ற வகையில் உடலில் அக்கறை வேண்டும். ஆனாலும் கெடுதல் நடக்காது. 
                        • சனி சம்மந்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு இந்த திசை நல்ல பலனே தரும். வேலை பளு இருந்தாலும் நல்லதே.
                        • வெளிநாடு சம்மந்தப்பட்ட விசயங்களில் நல்லதே நடக்கும். பொதுவாக மிதுன ராசி அல்லது இலக்கின காரர்களுக்கு சனி திசை நல்லதே செய்யும்  
                        • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                        தசா பலன்கள் -  ராகு  

                          கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                          • சந்திரனுக்கு  ராகு பகை. இவர்களுக்கு ராகு திசை நல்ல திசை இல்லை . 
                          • முதல் சில வருடங்கள் மிகுந்த போராட்டமாகவும், அலைச்சல் மிகுந்தாகவும் இருக்கும்.
                          • உடல் நலனில் அக்கறை கட்டாயம் வேண்டும் 
                          • ஆனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள இருக்கும். அதனால் செலவும் உண்டு. குடும்பம் பொருத்தவரை முன்னேற்றமாக தான் இருக்கும். வீடு , வீடு சார்ந்த விசயங்களும் நன்றாகவே இருக்கும் 
                          • குழந்தைகளால் தொல்லை இருக்கும். எந்த வயது குழந்தையைக் இருந்தாலும் அவர்களால் நிம்மதி குறையும் 
                          • தொழிலில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டு.
                          • இந்த திசை நடக்கும் போது எந்த கெட்ட பழக்கத்தையும் பழக வேண்டாம். பல பிரச்சனைகளை பார்க்க நேரிடும். இழப்பும் உண்டாகும்.
                          • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                          தசா பலன்கள் -  கேது  

                            கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                            • சந்திரனுக்கு  கேது  பகை. இவர்களுக்கு கேது திசை நல்ல திசை இல்லை . 
                            • கேது திசை வரும் போது சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் கேது கெடுதல் செய்வதில்லை. சுப வீடுகளில் கேது இருக்கும் போது வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் நன்மை மட்டும்  செய்வார்.
                            • சிலருக்கு கரும செய்யும் அமைப்பு ஏற்படும். அதாவது இறப்பு போன்ற விசயங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.
                            • வேலையில் மாற்றம், வீடு மாற்றம், மன மாற்றம் என சிறிய மாற்றங்களை கேது ஏற்படுத்துவார்.
                            • சுப வீடுகளில் கேது அமர்ந்து இருந்தால் ஞானிகள் தரிசனம் ஆன்மீக பயணங்களை ஏற்படுத்துவார்.
                            • ஆனாலும்  இந்த திசை காலத்தில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மனகுழப்பங்கள், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க கூடிய நிலை, இல்வாழ்வில் ஈடுபாடு இல்லாமை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
                            • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                            கடகம் லக்கினம்  – நட்சத்திரம் 


                            கடக லக்கினத்தில்  உள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்   ஆகியவை அடங்கும். இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
                            அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்  

                            கடகம் லக்கினம்  – புனர்பூசம் - 4  

                            புனர்பூசம்  4  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு, சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.
                            புனர்பூச நட்சத்திரம் குருவின் ஆதிக்கம் கொண்டது.  இந்த நட்சத்திர பாதத்தில் கிரகங்கள் வர்கோத்தமம் பெரும். குருவானவர் குருவின் சாரம் கொண்ட விசாகம், புரட்டாதி, புனர்பூசம் நான்காம் பாத காலில் நின்றாள் வாழ்வில் முக்கால் சதவீதம் ஜாதகர்கள் உச்சம் பெற்றவராக இருப்பார்கள் இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், செயலில் உறுதிமிக்கவர், மனம் மற்றும் உடலில் வீரம் குறைவாக இருக்கும், தெளிவான குணம் கொண்டவர்கள், களத்திரத்தில் கொஞ்சம் பிரச்னை உண்டு, அழகான உடல் அமைப்பு உடையவர்கள், பாராட்டுமிக்கவர்கள், சிலருக்கு தந்தை வழியில் பொருள் ஈழப்பு உண்டு, பூர்விக சொத்துகள் நீண்ட நாட்கள் பிறகு கிடைக்கும், அரசு சார்ந்த உதவி கிட்டும், படிப்பதில் அதிக ஆர்வம் மிக்கவர், விஞ்ஞானத் துறையில் மற்றும் ஆராய்ச்சில் சிறந்து விளங்குவார்கள்.

                            கடகம் லக்கினம்  – பூசம்  

                            பூசம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சனி , சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.

                            பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்டது. பூசம் நட்சத்திரத்தில் லக்கினம் அமையப்பெற்றவர்கள் புத்திக்கூர்மை, அதிக நினைவாற்றல் மிக்கவர்கள், மற்றவர் சொல்லுவதை மனதில் உள்வாங்கிக்கொள்பவர்கள், நின்று நிதானமாக செய்பவர்கள், அமைதியானவராகக் கட்டிக்கொள்வார்கள், சுதந்திரமாக வாழ நினைப்பவர்கள். கோபக்காரர்கள், கொஞ்சம் திருட்டுத் தனம் இருக்கும், பெற்றோரிடம் அன்பாக இருப்பார்கள், பொலிவுமிக்கவர்கள், அழகானவர்கள், மாற்றி மாற்றி பேசுவார்கள், சந்தனம் போன்ற இயற்கை வாசனை விரும்பிகள், பசி தாங்கமாட்டார்கள், படிப்பு கொஞ்சம் மந்தம், நிறைய பேறு பெற்றவர்கள், நல்ல பண்பு மிக்கவர்கள், கள்ளம் கபடமற்றவர்கள்


                            கடகம் லக்கினம்  – ஆயில்யம்  


                            ஆயில்யம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் புதன், சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.

                            ஆயில்யம் புதனின் ஆதிக்கம் கொண்டது. இந்த நட்சத்திர காலில் லக்கினம் அமையப்பெற்றால் மதி நூட்பமாக பேசுபவர்கள், பகைவர் என்றாலும் பாசமாக நடத்துவார்கள், தாய் தந்தையாருக்கு பிடித்தமாதிரி நடப்பவர்கள், கடவுள் பக்தி கொண்டவர்கள், கவலையாக இருப்பார்கள், கானகங்களில் சஞ்சரிப்பார், மென்மையான மனமுடையவர்,  கல்வி கற்பதில்  விரும்புவீர்கள், சாப்பிடுவது பிடிக்கும் ஆனால் வறியவன் போல் அற்பமாக சாப்பிடுவார்கள், எல்லாரையும் பரிகாசம் செய்வான், ஆற்றல் மிக்கவராய் கண்டு அஞ்சமாட்டேன், பேசுவதில் நகைச்சுவை தன்மை இருக்கும், திட்டமிடுதல் மூலம் எதிர்காலத்தைக் கணிப்பார்கள், குடும்பத்தாரை நேசம் கொண்டவர்கள், சரளமாகப் பேசுபவர்கள், உடல் மற்றும் மன வலுமைமிக்கவர் அழகான கண்புருவங்கள் உடன் பொலிவான தோற்றம் இருக்கும்  என்றெல்லாம் பல்வேறு நூற்களின் வாயிலாக கூறப்பட்டுள்ளது.

                            மந்திரம் 

                            கடக லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய நரசிம்மர் துதி மனதார சொல்லி வருவது நல்லது 

                            அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்
                            அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்
                            தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்
                            துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்
                            மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்
                            ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்
                            வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்
                            பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !

                             

                            ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



                            மிதுன லக்கினத்தின் பொது பலன்கள்




                            குருவும் சனியும் சேருமாயின் அவயோகமாகும்.

                            சந்திரன் துதியாதிபத்திய தோஷம் இருந்தாலும் மாரகம் கொடுக்க மாட்டான் என்றும் சொல்வர்.

                            குருவும், சனியும் தருமகருமாதிபதி ஆகையால் அவர்களும் யோகக்காரர் ஆவர்

                            மிதுனம் லக்கினம்- சுப சேர்க்கை

                            • சூரியன்+புதன்
                            • சூரியன்+சனி
                            • சூரியன்+சுக்கிரன்
                            • புதன்+சுக்கிரன்
                            • புதன்+சனி
                            • சுக்கிரன்+சனி

                            மிதுனம்  லக்கினம்-  தசைகள் 

                            • மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.
                            • மிதுன லக்கின சுபராக சுக்கிரனும்  அசுபராக குரு, செவ்வாய், சூரிய கிரகங்களும் மற்றும் சனி, சந்திரன் கொஞ்சம் குறைந்த அளவு நன்மை தருபவர், அதுதவிர இவருக்கு  அசுபராக  வருபவர் திசை நடக்கும் பொழுது மாரகம் நிகழும் என்று ஜாதக அலங்காரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது

                            பொது பலன்கள் 

                            • இனிய வார்த்தை பேசுபவர் , கபடி, மைதுன பிரியர், வாழ்க்கை துணை (பொதுவாக ஆண்கள்  மனைவி)சொல் கேள்பவர், புகழை உடையவர் . கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உடையவர். 
                            • மிதுன லக்கின ஜாதகர் குணங்கள் தனித்துப் பெற்றாலும் அவற்றோடு (லக்கினத்தோடு)சேர்ந்த கிரகங்கள் சுபத்துவ அதி வலுப்பெற்றால் அவர்களின் செயல்பாடு மற்றும் புகழ் நன்றாக வெளிப்படும்.
                            • இராட்டையர் சின்னம்:  இரவு வானில் விண்மீன் கூட்டங்களில் உள்ள பொலிவான விண்மீன் கூட்டங்களில் மிதுனமும் ஒன்று. 
                            • ரிஷப லக்கினகாரர்கள் பொதுவாக மிக அழகானவர்கள். அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்கள் செய்வார்கள், இளமையானவர்கள், பேச்சாளி, கணக்கில் ஆர்வ மிக்கவராகவும், அறிவு மிக்க சிறப்பான செயல் திறனாளி, வீடு, வாகனம், பணவரவு அதிகம் உண்டு அதற்கேற்ற செலவு, முயற்சி இருக்கும்.
                            •  புகழ், அம்மாவிடம் அன்பு,  பல தொழில் செய்பவராகவும், சுறுசுறுப்பும் அதேநேரம் எடுத்த காரியத்தை முடிப்பார்கள்.
                            • நுண்கலை வல்லுநர்கள், கதை ஆசிரியர்கள், சிற்பியாக, அதிகாரமிக்க வேலை அமையும்,  எதாவது ஒரு கலைகளில் வல்லுநராக இருப்பார்கள்.
                            • உபய லக்கினகாரர்கள் உபய ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு மிகவும் நிதானமானவர்கள். மேலும் இது காற்று  ராசி ஆகியதால் கெட்டிக்கார தனமும் நல்ல குணமும் நிறைந்து இருக்கும். 
                            • மாநிறமானவர்கள். நல்ல கம்பீரமான, எடுப்பான தோற்றமுடையவராகவர்கள் சூது நிறைந்தவர்கள்.  மற்றவர்களுக்கு உதவக்கூடிய  குணத்துடன் கவிதையுள்ளமும் நிறைந்தவர்கள். 
                            • நல்ல உணவை, மிகவும் விரும்புகிறவர். ஞான ரீதியில் எதையும் அணூகும் மனப்போக்குடையவர். 
                            • ஆரம்ப காலத்தில், உங்களுக்கு சில பிரச்சனைகள் அல்லது தொல்லைகள் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். அதாவது  32, 35 ஆம் வயதிலிருந்து, அதிருஷ்டவசமான ஒரு காலகட்டத்தில் செல்லும் யோகம் உண்டாகும்.
                            • பல வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். மிகவும் சுறுசுறுப்பானவர்கள். பல புத்தகங்களையும் படிப்பதில் விருப்பம் கொண்டவர்கள்  புகழை  தேடி ஓயாமல் பாடுபவார்கள்.  நீண்ட உடல் உறுப்புக்கள் இருக்கும்.
                            • ப்ளூயன்சா காய்ச்சல், மார்ச்சளி போன்ற நோய்கள் வாராமல் பார்த்து கொள்ளவது அவசியம். உணவில் கட்டுப்பாடு இருக்கும். இருந்தாலும் கட்டுபாட்டை கடைபிடிப்பது நல்லது.
                            •  நல்ல, சிறப்பான உடல்வாகும் உறுதியான மனநிலையும் கொண்டவர்கள். நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் 
                            .

                            புலிபாணி ஜோதிடம்- பாடல் - 24

                            ரிஷப & மிதுன லக்கினம்

                            கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

                            கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

                            ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

                            அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

                            கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

                            கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

                            தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

                            தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


                            பொருள்:

                            இப்பாடலில் ரிஷபம் மற்றும் மிதுனம் லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

                            “ரிஷபம் மற்றும் மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் உண்டு. ஆனால் குரு கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 வீடுகளில் இருந்தால்  நல்லதல்ல. அவரால் செல்வம் நாசம் அடையும். மேலும் அரசால் கெடுதலும், நோயும் உண்டாகும். ஆனால்  குருவும் சந்திரனும் திரிகோணமாகிய 1, 5, 9 இருந்தால் நன்மை நடக்கும்.“

                             விளக்கம்:

                            அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாக கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குரு பகவான் கேந்திரத்தில் நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம், உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக


                            திருமண வாழ்க்கை

                            • 7குடைய குருவும் நல்லவர் இல்லை. அது போல் உபய ராசி என்ற வகையில் குரு யோகமிள்ளதவரே. வாழ்க்கை துணை  அமைத்து கொள்ளும் பொது கவனம் தேவை. இல்லை என்றால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் 
                            • வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ பக்தி , ஞானம் , ஒழுங்குபடுத்தப்பட்ட வீரம் , கட்டுப்படுத்தப்பட்ட காமம் என்று இருப்பார்கள். மேலும் எல்லாமே ஒழுங்கு முறைப்படிதான் இருக்க வேண்டும்என்ற எண்ணம் இருக்கும் . ஏனெனில் , தனுசு என்பது தெய்வீக நெருப்பு ராசி.
                            • வாழ்கை துணையுடன் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வந்தாலும் , லக்ன 7 – ஆம் அதிபதிகள் சுப ராசி ஆதலால் பொறுத்துப்போய் விடுவர்.
                            • திருமணத்திற்கு பிறகு தொழில் மேம்படும். சில பேருக்கு அப்புறம் தான் தொழிலே அமையும் 
                            • காதல் திருமணம் செய்து கொள்ளும் லக்கினத்தில் மிதுனம் முதல் இடம் என்றால் மிகையாகாது.  
                            • திருமணக் காலத்தில் எதனையாவது விட்டுக் கொடுப்பார். சமயச் சம்பிரதாயங்கள், சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுக் கொடுத்தே திருமணம் அமையும்

                            தொழில்

                            • தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.
                            • கூட்டுத் தொழிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தை பெற முடியும்.
                            • இந்த லக்னக்காரர்கள் பொதுவாக வங்கி அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் ஆகிய துறைகளில் பணிபுரிவார்கள். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும் 
                            • சூரியன் நன்றாக இருந்தால் மக்களுக்கு தொண்டு செய்ய தக்க மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் போன்ற பொறுப்பான பதவிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். 
                            • சிறந்த அறிவாற்றல் கொண்டவராக, பள்ளி - கல்லூரிகளில் உயர்வான பொறுப்புகளில், பிறரை வழிநடத்தக் கூடிய, உயர்ந்த திறமை கொண்டவர்களாக விளங்குவர்.
                            • இந்த லக்னகாரர்களுக்கு, குரு வலு குறைந்து, அதனுடன் சனி  அல்லது ராகு போன்ற தீய கோள்கள் சேர்க்கை பெற்றால், நிலையற்ற வருவாய் கொண்டவர்களாக வாழ நேரிடும்.
                            • குரு, சனி  சுக்கிரனுடன் சேர்ந்து  இருக்கும் மிதுன லக்கினக்காரர்கள் , வண்டி வாங்கி விற்பது அல்லது போக்குவரத்து தொடர்புடைய தொழில் செய்வர்.  சிலர் கடல்கடந்த வெளிநாட்டு தொடர்பு ஏற்படுத்தி அதில் பெரும் செல்வம் ஈட்டுவர்.
                            • குரு பகவான் செவ்வாய் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட் துறைகளில் அனுகூலங்கள் உண்டாகி சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பும் உண்டாகும். 
                            • குரு சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றால் ஏஜென்ஸி, கமிஷன், உணவு வகைகள், ஜல தொடர்புடைய தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும்
                            • குருவுடன் சந்திரன் இணைந்து உடன் புதன் அல்லது செவ்வாய் இருந்தால் கடல் சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, உணவகம் நடத்தும் வாய்ப்பு அமையும்.
                            • பொடி வைத்து பேசுவதில் நிபுணர், சத்ருக்களை நேரடியாக எதிர்க்காமல் உறவாடி தந்திரமாக அழிப்பவர், ஜோதிட நிபுணர், கார்டூன், துணுக்கு எழுதுதல், ஸ்டெனோ கிராபர், ஆசிரியர், ஆடிட்டர், டெலிபோன், பத்திரிக்கை தொழில், தபால் துறை, சங்கீதம் முதலிய தொழில் செய்வார்.
                            • தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

                            கிரகங்கள்  

                            • சூரியன் : 3ம்  வீட்டுக்கு உரியவர் எனபதால் சூரியன் சமம் ஆனவர். சூரியன் நன்றாக இருந்தால் அரசு உயர் பதவிகள் தருவார். ஆனாலும் இவர் யோகமில்லதவர் உங்களுக்கு என்பதும் உண்மை. 
                            • சந்திரன் : 2ம் வீட்டுக்கு உரியவர். சந்திரன் சமம் நிலை அடைகிறார். இவர் மாராகதிபதி என்று சில நுல்களும், கொல்லான் என்று சில நுல்களும் சொல்கின்றான. ஆனாலும் அவர்களின் திசை, புத்தியில்  மாரகத்திற்கு ஒப்பான பாதகம் உண்டாக்கும் .
                            • புதன் : இவர்  1 மற்றும் 4 க்கு உடையவர். மிக நல்லவர். மிகவும் நல்லதே செய்வார். இவர்களை “இரண்டு தாய்களிடத்தில் வளர்பவன்” என்று சில ஜோதிட நுல் சொல்கிறது. 
                            • செவ்வாய்: 6, 12க்கு உடையவர். குறைந்த எண்ணிக்கையிலான சகோதர்களை பெற்று இருப்பார்கள். செவ்வாய் நல்லவர் இல்லை உங்களுக்கு.
                            • குரு: இவர்  7 மற்றும் 10 க்கு உரியவர். குரு ரிஷபத்திற்கு நல்லவர் அல்ல. இவர் மாரகதிபதி ஆவார் 
                            • சுக்கிரன்: சுக்கிரன் 5, 12க்கு உடையவர். எனவே நல்லைதியும் கெட்டதையும் கலந்தே தருவார். ஆனாலும் நல்லவரே. 
                            • சனி: சனி 8, 9க்கு உடையவர். சனியும் தருமகருமாதிபதி ஆகையால் அவர்களும் யோகக்காரர் ஆவர்

                            தசா பலன்கள் - சூரியன் 

                            ரிமிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் சூரியன் சமம்.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                            • சூரியன் மிதுன லக்கினகாரர்க்கு யோகமில்லதவர். மேலும் 3க்கு உடையவர்.   
                            • மிதுனம் ஜன்ம லக்னமாகி இதில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் தர்ம காரியங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் இவர்களுடைய கதவைத் தட்டும்.  கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும் எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள்.. 
                            • தாய், தாய் சார்ந்த விஷயம், வீடு, வீடு சார்ந்த விஷயம் பிரச்சனை இருக்கும்   
                            • பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். சூரியன் திசையின் முதல் பகுதியில் சிறப்பாக இருக்கும். 
                            • இளைய சகோதர, குழந்தைகளால் வகையில் நன்மை   உண்டாகும். தொழிலில் partnership வகையில் பிரச்சனை உண்டாகலாம்  
                            • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

                             தசா பலன்கள் - சந்திரன் 

                              சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்
                              • மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன்க்கு சந்திரன் பகை என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                              • புதனுக்கு சந்திரன் பகை என்றாலும் சந்திரனுக்கு புதன் நட்பு ஆகும். மேலும் 2ம் வீட்டுக்குரியவர் ஆகையால் நன்மையை தருவார்.
                              • தனஸ்தானாதிபதி என்பதால் இந்த திசை வரும் போது பணம் சேர்க்கை உண்டாகும். ஆனால் சந்திரன் வளர்பிறையாக இருத்தல் வேண்டும் 
                              • இந்த திசை வரும் போது திருமணத்திற்கு எதிர்பார்த்தல் திருமணமும், குழந்தை பேறுக்கு எதிர்பார்த்தால் குழந்தை கிடைக்கும் 
                              • பேச்சு சம்மந்தப்பட்ட தொழில் உதாரணமாக வக்கீல் உள்ளவர்கள் சிறப்பு அடைவார்கள்.  ஜல தொழில் செய்பவர்களுக்கும் நல்லது தான் இந்த திசை செய்யும் .
                              • தாய், தாய் வழி சொந்தங்களால் லாபம் உண்டாகும். 
                              • பயணத்தால் நன்மை தான். தொழில் சம்மந்தப்பட்ட் பயணம் என்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்
                              • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                              தசா பலன்கள் -  செவ்வாய் 

                                மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். செவ்வாய் பகை மேலும் செவ்வாய் 6, க்கு உடைவன் . செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                                • இது யோகமான திசை இல்லை. கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். இல்லை எனில் பல பிரச்னைகளை பார்க்க நேரிடும். 
                                • முதல் திருமணம் முறிந்து 2வது திருமண செய்ய சூழ்நிலை உள்ளவர்களுக்கு 2வது திருமணம் கைக்கூடும் 
                                • முத்த சகோதர சகோதிரியால் நன்மை உண்டு. எதிரிகள் அழிவார்கள் அல்லது அடங்குவார்கள் 
                                • பயணங்களில் கவனம் தேவை. இரத்த காயங்கள் உண்டாகும் அல்லது உண்டாக்குவிர்கள் 
                                • வீடு, வீடு சார்ந்த விஷயம் அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.
                                • குடும்ப வாழ்க்கையுலும் கவனம் தேவை வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு வரும் வாய்ப்பு உண்டு. கோபம் குறைக்க விட்டால் பிரிவில் தான் முடியும் 
                                • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
                                தசா பலன்கள் -  புதன் 
                                  மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                                  • புதன் ரிஷப லக்கினத்திற்கு 2, 5 ஆம் அதிபன் ஆகிய யோகாதிபதி ஆவார். 
                                  • தாய், தாய் வழியில் ஆதாயம். சொத்து சம்மந்த பட்ட விசயங்களும் ஆதாயமே. 
                                  • புதன் எந்த இடத்தில் இருந்தாலும் நல்லதே செய்வார். ஆனாலும் புதன் 4ம் வீட்டில் தனித்து இருந்தால்  கேந்திர ஆதிபத்திய தோஷம் உண்டாகும். புதன் 4ல் தனித்திருக்க கூடாது.
                                  • உடல் ஆரோக்கியம் மேம்படும். புகழ் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்விர்கள். சேமிப்பு அவசியம் என்பதை மறக்க வேண்டும்  
                                  • சகோதர வழியில் சில தொல்லைகள் , செலவுகள் உண்டாகும். தொழில் Partnership பிரச்சனைகள் தலை தலை தூக்கும்  
                                  • படிப்பு மேம்படும். அறிவால் செய்யக்கூடிய வேலை, படிப்பு  கிடைக்கும்.  வெளி நாட்டு படிப்பு, தொழில் அமைய வாய்ப்பு உண்டாகும் 
                                  • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                                   தசா பலன்கள் -  குரு  

                                  மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதனுக்கு குரு பகை  என்ற நிலையில் இருக்கிறது. குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். . 
                                  • இவர்  7 மற்றும் 10 க்கு உரியவர். குரு ரிஷபத்திற்கு நல்லவர் அல்ல. இவர் மாரகதிபதி ஆவார்
                                  • தாய்க்கு உடல் கெடுதல், சகோதர வழியில் தொல்லை, குடும்பத்தில் பிரச்சனை என்று இருக்கும் 
                                  • தொழில் சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாக இருக்கும்வெளிநாட்டு வேலை விசயங்கள் அலைச்சல் இருந்தாலும் நன்மையாக இருக்கும்.
                                  • குழந்தைகளால் நன்மை உண்டு. உல்லாசத்தை மனம் நாடும். மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். இதனால் குடும்பத்தில் பிரச்சனை வராமல் பார்த்து கொள்ளவும் 
                                  • வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு வரும். எதிர்களின் பலம் கூடும் கவனம் தேவை.
                                  • தொழிலில் முன்னேற்றம் இருக்கும் ஆனாலும் தொழிலில் செலவு கூடும்.  உல்லாசத்தில் மனம் நாட்டம் இருக்கும் போது கவனம் இல்லை என்றால் தொழிலும் நஷ்டம் உண்டாகும் 
                                  • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                                  தசா பலன்கள் - சுக்கிரன்  

                                    மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். சுக்கிரன் புதன் நட்பு. சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                                    • சுக்கிரன் 5, 12 க்கு உடையவர். 5 க்கு உரியவர்.
                                    • 5 க்கு உடையவன் என்ற வகையில் புதனுக்கு நட்பு கிரகம் என்றா வகையில் இந்த திசை மிக நல்ல திசை தான் என்பதில் ஐயம் இல்லை. 
                                    • திருமண வயதில் வந்தால் திருமணமும், குழந்தைக்காக ஏங்கும் போது வந்தால் திருமணம் அல்லது குழந்தை பேறு கிடைக்கும் 
                                    • அனனவரிடமும் அன்பாக இருப்பிர்கள் 
                                    • சுக்கிரன் நன்றாக இருக்கும் பட்சத்தில் நல்லதே நடக்கும்.
                                    • 12குரியவர் என்ற வகையில் சுப செலவுகள் உண்டு. வீடு வாங்குதல், திருமணம், குழந்தை பேறு , வாகனம் வாங்குதல் ஆகியவற்றால் செலவு உண்டு.
                                    • 12குரியவர் என்ற வகையில் இந்த திசை முடிவதற்குள் ஒரு பெரிய உண்மை புரிய வைப்பார் 
                                    • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                                    தசா பலன்கள் - சனி 

                                      மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் சனி நட்பு. சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                                      • மிதுன லக்னத்திற்கு சனிபகவான் எட்டு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி ஆவர். 
                                      • 9க்குடையர்வர் என்ற வகைகில் வயது ஏற்ப நல்ல பலன் தரும். செல்வம் பெருகும். குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும் 
                                      • தந்தையால் நன்மை, தந்தைக்கு நன்மை உண்டாகும் 
                                      • திடீர் என்று யோகம், அதிஷ்டம் உண்டாகும் வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்கும் அமைப்பு உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும்
                                      •  எட்டுக்கு  உரியவர் என்ற வகையில் உடலில் அக்கறை வேண்டும். ஆனாலும் கெடுதல் நடக்காது. 
                                      • சனி சம்மந்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு இந்த திசை நல்ல பலனே தரும். வேலை பளு இருந்தாலும் நல்லதே.
                                      • வெளிநாடு சம்மந்தப்பட்ட விசயங்களில் நல்லதே நடக்கும். பொதுவாக மிதுன ராசி அல்லது இலக்கின காரர்களுக்கு சனி திசை நல்லதே செய்யும்   
                                      • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                                      தசா பலன்கள் -  ராகு  

                                        மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                                        • ராகு திசை மிக நல்ல திசை இவர்களுக்கு. இந்த திசை வரும் பொது இவர்கள் ஆசை பட்ட வாழ்க்கை அமையும் 
                                        • வெளி நாடு சம்மந்தப்பட்ட விசயங்கள் நல்லதே நடக்கும். வெளி நாடு செல்லும் யோகமும் உண்டாகும் . அங்கு தங்கி இருக்கும் சூழல் அமையும். 
                                        • உழைக்காமல் வருமானம் கிடைக்கும் கிடைக்கும். திடீர் அதிஷ்ட வாய்ப்பு கட்டாயம் உண்டு. 
                                        • மிதுன லக்கினத்திற்கு ராகு முழுமையான யோக கிரகம் ஆகும். ஏன் எனில் மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகிய திரிகோண ஸ்தானத்தில் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, ஸ்வாதி மற்றும் சதயம் நட்சத்திரம் முழுமையாக உள்ளது. மிதுன லக்கினத்திற்கு முழு யோகம் செய்யும் கிரகமாக ராகு வருகிறார்.
                                        •  மிதுன லக்கினகாரார்களுக்கு அவர் வீட்டின் அதிபதி போல் நல்லது செய்வார்.
                                        • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                                        தசா பலன்கள் -  கேது  

                                          மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                                          • முதல் 3 வருடங்கள் நல்லதே செய்வார். அடுத்து நல்லது நடக்கும்
                                          • இளைய சகோதரால் நன்மை அல்லது இளைய சகோதரக்கு நன்மை உண்டாகும். பயணங்களால் நன்மை உண்டு.
                                          • சிலருக்கு கரும செய்யும் அமைப்பு ஏற்படும். அதாவது இறப்பு போன்ற விசயங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.
                                          • குழந்தைகளால் பல சிரமங்களை சந்திக்க் நேரிடும்.
                                          • தொழிலில் நல்ல வாய்ப்பு, சூழல் உருவாகும். வேளையில் முன்னேற்றம் உண்டு.
                                          • கடன் வாங்கும் சூழல் உருவாகும். இல்லை என்றால் உடல் நலம் பாதிக்கும். 
                                          • உல்லாசத்தில் மனம் ஈடுபடும் அதனால் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் உண்டாகும். கெட்ட பழக்கம் அதிகரிக்கும் அல்லது புதிதாக உண்டாக வாய்ப்பு உண்டு கவனம் தேவை 
                                          • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                                          மிதுனம் லக்கினம்  – நட்சத்திரம் 

                                          மிதுனத்தில் உள்ள நட்சத்திரங்கள் மிருகசீரிஷம் 3, 4-ம் பாதங்களும், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தின் 1,2,3 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும்.
                                          அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம் 

                                          ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

                                          மிதுனம் லக்கினம்  – மிருகசிரிஷம்  3,4 பாதங்கள்  

                                          மிருக சிரிஷம் 3,4  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சுக்கிரன், செவ்வாய்  தாக்கத்துடன் இருப்பார்.
                                          மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு செவ்வாயானவர் ஆதிக்கம் செலுத்துகிறார், இவற்றின் வடிவம் மானின் தலை கொண்டது. இந்த நட்சத்திரத்தில் பொதுவான குணநலன்கள் என்றால் சுறுசுறுப்பானவர், மன அழுத்தம் மிக்கவர், ஞாபக சக்தி உள்ளவர்கள், பிடிவாத குணம், எதாவது ஒரு துறையில் சிறப்பறிவு உடையவர்கள், உள்ளத்தில் பகையுணர்ச்சி உடையவர்கள், உள்ளுணர்வுகளைப் பதுக்கி வைப்பவர்கள் முக்கியமாக வெளியில் தெரியாத அளவு கோபம் இருக்கும், உள்ளங்கையில் வேல் போன்ற ஆயுத ரேகை உடையவர்கள், எண்ணியதை முடிப்பவர்கள், யாருக்கும் பயப்படாதவர்கள், கீழ்ப்படியாதவர்கள், சுய சிந்தனையாளர்கள், வசீகரமான தோற்றம் கொண்டவர்கள், பிறர் பொருள் மீது கொஞ்சம் ஆசை இருக்கும், தர்மவான், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், பிறருக்கு உபதேசம் செய்வார்கள்.

                                          மிதுனம் லக்கினம்  – திருவாதிரை

                                          திருவாதிரை   நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், ராகு   தாக்கத்துடன் இருப்பார்.
                                          திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு  மனித தலை, வைரம் வடிவம், கண்ணீர்த்துளி ஆகும். என் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். திருவாதிரையில் ராகுவின் ஆதிக்கம் உண்டு அதன்படி லக்கின புள்ளியின் பொதுவான குண நலன்கள் - உடல் பலமானவர்கள்,  முரட்டுப் பிடிவாதம், பண விஷயத்தில் சாதூர்யமானவர்கள், உண்மைக்குப் புறம்பானவர், உயரமானவர்கள், கண்டிப்பானவர், புத்தாடையில் அவ்வளவு நாட்டம் இருக்காது, தற்புகழ்ச்சியைப் பிடிக்கும், கலகம் மற்றும் ஆத்திரம் இருக்கும், எதிலும் அவசரமாக முடிவெடுப்பார்கள், ஏதாவது நோய் இருந்துகொண்டிருக்கும் முக்கியமாக மூட்டு வியாதி இருக்கும். பல்வேறு நட்புகள் உண்டு, பந்துகள் விரோதம் இருக்கும், சாடல் என்று யோசனை வந்துகொண்டேயிருக்கும், நீதி நேர்மை குறைவானவர்கள், எந்த வேலையும் செய்யும் திறன் கொண்டவர்கள், தனம் ஈட்டுவதற்காக நாட்டம் கொண்டவர்கள், ஆன்மீக வழிபாடு செய்வார்கள்.

                                          மிதுனம்  லக்கினம்  –புனர்பூசம்  1,2,3 பாதங்கள்   



                                          மந்திரம் 

                                          மிதுன  லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய பெருமாள் துதி மனதார சொல்லி வருவது நல்லது  

                                                                              திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
                                                                              அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
                                                                              பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
                                                                              என்னாழி வண்ணன்பால் இன்று !
                                                                              தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
                                                                              சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
                                                                              திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
                                                                              இரண்டுருவு மொன்றாய் இசைந்து !

                                           ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்


                                          ரிஷப லக்கினத்தின் பொது பலன்கள்

                                           


                                          அதிபதிசுக்கிரன்
                                          யோககாரகர்கள்சூரியன், சனி, புதன்
                                          யோகமில்லாதவர்கள்குரு, சந்திரன்
                                          மாரக அதிபதிசந்திரன்,குரு , செவ்வாய்
                                          நோய்காய்ச்சல் ,கழுத்தில் வியாதி, சிரங்கு, நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல்இருக்கக்கூடும்.
                                          ஆயுள்சுபர் பார்க்க 77வயது வரை இருப்பர்

                                          சனி ஒருவனே நல்ல ராஜயோகத்தை தருவார்

                                          சில ஜோதிட நுல்கள் சந்தரன், குரு, செவ்வாய் கொல்லான் என்றும் கூருகிறது

                                          ரிஷபம் லக்கினம்- சுப சேர்க்கை

                                          • சூரியன்+புதன்
                                          • சூரியன்+சனி
                                          • சூரியன்+சுக்கிரன்
                                          • புதன்+சுக்கிரன்
                                          • புதன்+சனி
                                          • சுக்கிரன்+சனி

                                          ரிஷபம்  லக்கினம்- ஆகாத தசைகள் 

                                          • இந்த லக்னத்திற்கு குரு செவ்வாய் மாரகன் சந்திரன் குரு அசுபன் சனி ஒன்பதாம் அதிபதி என்றவகையில் பாதகாதிபதி.
                                          • 9, 10-க்குடைய சனி ஒருவனே உத்தம ராஜ யோககாரகன். சுக்கிரன் 6க்குடையவன் ஆனாலும் லக்னாதிபதியாகையால் அசுபம் குறைவு.
                                          • சந்திரன் 3 குடையவன் அதனால் அசுபன். சூரியன் 4க்குடையவன் ஆகிலும் அசுபனே.
                                          • செவ்வாய் 7, 12-க்குடையவன் ஆகையால் அசுபன். குரு 8 ,11-க்குடையவர் ஆகையால் அசுபன்

                                          பொது பலன்கள் 

                                          • சூரியன், சனி ஒன்று சேர்ந்து,கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ராஜ யோகத்தைக் கொடுக்கும். 
                                          • ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, ஆடம்பர பிரியன், பொறுமைசாலி , பிறர் சொத்தை அபகரிக்க வல்லவன், கபடி, அகிமையுள்ளன, பிற்பகுதியில் புத்திரன் உடையவன், எதிர்ப்பால் நட்புகளை விரும்புபவன்
                                          • எருது சின்னம்:  கிருத்திகை -2, 3 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் -1, 2 பாதங்கள் வரை - வானவெளி கூட்டத்தில் எருது  உருவம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. ரிஷபம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் ‘எருது’ என்று பொருள். 
                                          • ரிஷப லக்கினகாரர்கள் எருதின் அமைப்பும் மற்றும் ஸ்திர தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். கொஞ்ச நடுத்தர உயரம், கம்பீரமாகத் தோற்றம், குனிந்தும், மிருதுவான காதுமடல் கொண்டவராகவும், தோல்கள் கடினத்தன்மையும், மெதுவான நடையும், விரிவான மூக்கும், பற்கள் சிறுத்தும் வரிசையாகவும், நெற்றி அகன்றும் காணப்படும். இதுதவிர பஞ்ச பூதங்களில் பிருத்வி(நிலம்) தத்துவத்திலும் ரிஷப லக்கின ஜாதகர் குணநலன்கள் பார்த்தால் பேச்சில் தேனாகவும், வசீகரத் தோற்றம் இருக்கும்
                                          • ரிஷப லக்கினகாரர்கள் முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும். தற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், சதைப்பற்றுமிக்கவன்
                                          • ரிஷப லக்கினகாரர்கள் ஸ்திர ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு நிதானம் உறுதியும்  இருக்கும். மேலும் இது நில ராசி ஆகும் 
                                          • கடின உழைப்பாளியாகவும், கோபம் தெரியாவண்ணம் இருக்கும். ஆனால் கோபம் அதிகமானால் அவர்கள் செயல் அதிரடியாக இருக்கும்..
                                          • அலங்காரப்பிரியராகவும், அழகும் கவர்ச்சியும், கலைநயம் கொண்டவராகவும், சரியான நேரத்தில் அறிவானது வெளிப்படும், ஞாபகசக்தி,  சகிப்புத் தன்மை, பிடிவாத குணம்,  மெதுவாக சாத்வ குணமாக தெரியும், எதிராளி பேசுவதை கவனமாக கேட்பார்கள்.
                                          • சிவபூஜையில் சிந்தை செலுத்துபவன், உண்மை பேசுபவன், உணவு குறைவாக உண்பவன், கொஞ்சம் குண்டானவன், பிறர்க் கீழே வேலை செய்பவன், புளிப்பு இவர்களுக்குப் பிடிக்கும், கணித வல்லுநர், உயர்ந்த ஆடை ஆபரணம் அணிபவன், புத்திசாலி, விளையாட்டுத்தனம் இருக்கும், பேராசை கொண்டவன், இருமல், கபம், கழுத்தில் வியாதி இவருக்கு இருக்கும் , மழலையர் பேசுவதைக் கேட்பவன், சிறுவயதில் அக்னி பயத்திற்கு ஆட்படுவான் என்று ஜாதக அலங்கார  நூலில் கூறப்படுகிறது.
                                          • நடுத்தரமான சதைப்பற்றுள்ள தோற்றம் உள்ளவர். அகன்ற நெற்றி, கருகருவென சுருள் சுருளான மயிர், பெரிய கண்கள், அழகிய முகம், வட்டமானது, சிவந்த பளபளக்கும் மேனி, ஆண்களும், பெண்களும் நளினத்தையும், அழகு, கவர்ச்சி இவற்றையும் உடையவர்.

                                          புலிபாணி ஜோதிடம்- பாடல் - 24

                                          ரிஷப & மிதுன லக்கினம்

                                          கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

                                          கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

                                          ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

                                          அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

                                          கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

                                          கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

                                          தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

                                          தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


                                          பொருள்:

                                          இப்பாடலில் ரிஷபம் மற்றும் மிதுனம் லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

                                          “ரிஷபம் மற்றும் மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் உண்டு. ஆனால் குரு கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 வீடுகளில் இருந்தால்  நல்லதல்ல. அவரால் செல்வம் நாசம் அடையும். மேலும் அரசால் கெடுதலும், நோயும் உண்டாகும். ஆனால்  குருவும் சந்திரனும் திரிகோணமாகிய 1, 5, 9 இருந்தால் நன்மை நடக்கும்.“

                                           விளக்கம்:

                                          அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாக கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குரு பகவான் கேந்திரத்தில் நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம், உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக


                                          திருமண வாழ்க்கை

                                          • ரிஷப லக்னத்தின் 7 மற்றும் 12ம் அதிபதி செவ்வாய். இவர்களுடைய இல்லற வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கக் கூடிய செவ்வாய் மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது. செவ்வாய் ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களை வாழ வைக்கவும் வைப்பார்.  செவ்வாய் முடிவெடுத்து விட்டால் ஜாதகரை கீழே வீழ வைக்கவும்  செய்வார்
                                          • இதில் பிறந்த ஆண்கள் நல்ல வீட்டு வாழ்வு உடையவர்கள். எல்லாம் வசதியும் செய்து வைப்பார்கள்.
                                          • இந்த ராசி பெண்கள் “மனைக்கு விளக்கம் மடவார்” என்ற வாக்கிற்கு உதாரணமாய் இல்லத்தரசிகளின் சிறந்தவர்கள்.
                                          • ரிஷப லக்கினக்காரருக்கு, விருச்சிக ராசி ஏழாமிடமாக அமைவதால் முழுப் பொறுப்பும் மனைவியிடமே அமையும். இன்றேல், வீண் தகராறுகள் விளையும்.
                                          • இவர்களின் வாழ்க்கை துணை பொதுவாக நல்ல தைரியசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பார். ஆனாலும் சிறு சிறு சண்டைகள் அடிக்கடி தோன்றி மறையும்.

                                          தொழில்

                                          • இவர்கள் நளின உழைப்பினர். சொகுசு வேலைகளை செய்ய விரும்புவார்கள்.
                                          • உல்லாச பொருள்கள், வாணிகம், கம்பளி, பட்டு, வியாபாரம், சோப்பு, சென்ட் போன்ற வாசனைப் பொருட்கள் இவற்றின் மூலம் நிறைய பொருள் ஈட்டுவர்.
                                          • பேங்க் நிர்வாகம், நீதித்துறை அலுவல்கள், பந்தயம் நடத்துபவர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், ரேஸ் என்று வெல்லுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உண்டு.
                                          • உழவு விவசாயம் இவற்றிலும் இவர்களுக்கு லாபம் உண்டு என்பதை இவர்கள் ராசி (மண்) ராசியகையாலும் இந்த ராசியின் உருவம் காளை என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
                                          • இவர்கள் இடைத்தரகர் போன்ற தொழில் செய்தால் அந்தத் தொழிலில் இவர்களை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. பேச்சுத் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். எப்படிப்பட்ட விஷத்தையும் பேசியே ஜெயித்து விடுவார்கள். 
                                          • பொதுவாக அரசுத்துறையில் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்
                                          • ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் 9ம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவான் ஆவார். ரிஷப லக்னத்திற்கு 9 ஆம் வீடு பாதகஸ்தானம் ஆகும் எனவே சனி பாதகாதிபதி தன்மையையும் அடைகிறார் இருந்தாலும் பெரிய பாதகங்களை செய்ய மாட்டார் ஏன்னென்றால் ரிஷப லக்னாதிபதி சுக்கிரனுக்கு இவர் தீவிர நண்பர்,  அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு இவரே தொழில் வெற்றி, புகழ், அதிர்ஷ்டங்கள், முன்னேற்றத்தையும் தரவல்லார்.
                                          • அறிவிப்பாளர், பொது பேச்சாளர் (Public speaker), வரவேற்பாளர் (Receptionist), கணக்காளர் (Accountant), கல்வியாளர், என்ஜினியர் (Engineering), வக்கீல் (Lawyer), வடிவமைப்பாளர் (Designer), நிலம் தொடர்பான வேலை, சமையல் தொழில் (culinary profession) ஆகியவை சிறப்பாக இருக்கும். 
                                          • பெண்கள் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் பூமி,மனை போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில், பணம், கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் லாபம் சிறப்பாக அமையும் என்றாலும் கூட்டாளிகளை நம்பி எதையும் ஒப்படைப்பது கூடாது (நல்ல கூட்டாளிகள் அமைப்பு இல்லை)

                                          கிரகங்கள்  

                                          • சூரியன் : 4ம்  வீட்டுக்கு உரியவர் எனபதால் சூரியன் நல்லவர் ஆனாலும் சுக்கிரன் & சூரியன் பகைவர்கள் அனைவரும் அறிந்தே. சூரியனின் பகை வீடுகளில் ரிஷபம் ஒன்றாகும். எனவே சூரியன் இவர்களுக்கு அவ்வளவு நன்மை செய்யாது 
                                          • சந்திரன் : 3ம் வீட்டுக்கு உரியவர். சந்திரன் இங்கு உச்சம் அடைகிறார். ஆனாலும் சந்திரன் பகைவரே. இவர் மாரகதிபதி ஆவார். சந்திர திசையில் மரகத்திற்கு ஒப்பான கெடுதலை செய்வார் 
                                          • புதன் : இவர்  2 மற்றும் 5 க்கு உடையவர். மிக நல்லவர். மிகவும் நல்லதே செய்வார். சனியை போல் இவரும் நன்மையே செய்வார்.
                                          • குரு: இவர்  8 மற்றும் 11 க்கு உரியவர். குரு ரிஷபத்திற்கு நல்லவர் அல்ல. இவர் மாரகதிபதி ஆவார் 
                                          • சுக்கிரன்: சுக்கிரன் லக்கினாதிபதியும் 6க்கு உடையவரும் அவர். எனவே நல்லைதியும் கெட்டதையும் கலந்தே தருவார். ஆனாலும் நல்லவரே. 
                                          • சனி: ரிஷப லக்னத்திற்கு சனி ஒருவரே நல்லவர் என்று சில நூல்கள் சொல்கிறது. 
                                          • ராகு & கேது : ரிஷப லக்னத்திற்கு ராகு & கேது நல்லவரே. ஆனாலும் ராகு தான் கேதுவை காட்டிலும் நல்லவர் 

                                          சூட்சுமங்கள்  

                                          • ரிஷப லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள்  என்றால் புதன், சனி மற்றும் சுக்கிரன் 
                                          • சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அடைந்ததாலும் இவர் மராகாதிபதி ஆவார். 
                                          • மீனத்தில் சுக்கிரன் உச்சம் அடைந்தாலும் குருவும் மாராகதிபதி ஆவரர்.
                                          • சுக்கிரன் நல்லவர் என்றாலும் 6க்கு உடையவரும் ஆவரே.
                                          • குரியனும் பகைவரே ஆவார்.  

                                          தசா பலன்கள் - சூரியன் 

                                          ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன் . சுக்கிரனுக்கு சூரியன் பகை.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                                          • சூரியன் நல்ல ஆதிபத்தியம் பெற்று சூரிய தசை நடக்கும் என்றால் மனதிற்கு பிடித்த வகையில் சொந்த வீடுகள் அமையும். புதிய வாகன சேர்க்கை உண்டாகும். தாய் வழி சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும்.
                                          • மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். 
                                          • உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். 
                                          • பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும் 
                                          • விவசாயம் தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும் 
                                          • அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சிறு தடைகளுக்கு பின்பே எண்ணிய வெற்றி கிடைக்கும்.சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

                                           தசா பலன்கள் - சந்திரன் 

                                            ரிஷப  லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்கு  சந்திரன் பகை என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                                            • 3ம் அதிபதி என்பதால் சந்திரன் அமையும் இடத்தைப் பொறுத்து சாதகமான பலனை உண்டாக்குவார். 
                                            • ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். செவ்வாயின் ராசியில் சந்திரன் இருப்பதால் வர்த்தகத்தில் சிறு சிறு பிரச்சினை உண்டாகும்
                                            • காது தொடர்பான சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். 
                                            • மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
                                            • சிறு தூர பயணம் ஏற்படும். அது நல்ல விதமாக இருக்கும் 
                                            • தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் மேம்படும். பகைவர்களால் பிரச்சனைகள் இருக்கும். மிகவும் கவனமாக செயல்பட்டால் வெற்றி காணலாம் 
                                            • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                                            தசா பலன்கள் -  செவ்வாய் 

                                              ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன், செவ்வாய் பகை மேலும் செவ்வாய் 7க்கு உடைவன்  . செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                                              • வாழ்க்கை துணையின் தாய்வழியில் சொத்துக்கள் கிடைக்கும். லாபம் உண்டு  
                                              • குழந்தகைளை ஜாக்கிரதையாக பாத்துக்கொள்ள வேண்டும். 
                                              • குழந்தைகள், தந்தையுடன் கருத்து வேறுபாடு தோன்றும்
                                              • தொழிலில் ஜாக்கிரதை தேவை. புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம். வேலைக்கு செல்லும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
                                              • எதிரிகள், தாய்மாமன், தந்தை ஆகியவர்களின் விசயங்களிலும், அவர்களை சார்ந்த விசயங்களிலும் எச்சரிக்கை தேவை குடும்பத்தில் சில சில சலசலப்பு தோன்றி மறையும். 
                                              • வீடு, வீடு சார்ந்த விஷயம் சாதகமாக இருக்கும். வீடு சம்மந்த பட்ட விசயங்கள் சாதாகமாகும். பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்
                                              • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
                                              தசா பலன்கள் -  புதன் 
                                                ரிஷப லக்னத்திற்கு அதிபதி  சுக்கிரன். சுக்கிரன் நட்பு கிரகம் புதன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                                                • புதன் ரிஷப லக்கினத்திற்கு 2, 5 ஆம் அதிபன் ஆகிய யோகாதிபதி ஆவார். 
                                                • திருமண வயது உடையவருக்கு திருமணமும், குழந்தையை எதிர்பார்ப்பவருக்கு குழந்தை பேரும் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழும் சூழ்நிலை உண்டாகும். 
                                                • பொருளாதாரம் மேம்படும். வாக்கு தொழில் சிறப்பாக இருக்கும். ஜோதிடம், வான்வெளி தொழில் இருப்பர்வர்கள் சிறப்பு பெறுவார்கள். பொதுவாக தொழில் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சிறக்கும். 
                                                • இன்பம், ராஜ மாரியாதை, மனதில் சந்தோஷம், பந்து சேர்க்கை ஆகியவை கிடைக்கும் 
                                                • புதன் கெட்டால் இருக்குமிடம் பெயர்தல், சண்டை சச்சரவு உண்டாகுதல், தலைவலி, அன்னியர் விரோதம், ரத்த சோகை, பெண்களால் சண்டை உண்டாகும். பொதுவாக புதன் திசை ரிஷப லக்கினத்திற்கு நல்லதே செய்வார் 
                                                • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                                                 தசா பலன்கள் -  குரு  

                                                மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு குரு நட்பு என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                                                • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
                                                • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
                                                • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
                                                • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
                                                • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
                                                • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
                                                • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
                                                • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
                                                • ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன்க்கு குரு பகை  என்ற நிலையில் இருக்கிறது. குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

                                                • குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்று வர வாய்ப்பு உண்டு. ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்
                                                • குழந்தைகளால் செலவு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப செலவாகவும் இருக்கலாம்
                                                • இளைய சகோதர சகோதரி வகையில் பிரச்சனை வரலாம். 
                                                • Documentation பிரச்சனை மற்றும்  கேரண்டி கையழுத்து போட்டால் பிரச்சனை உண்டாகும். யாருக்கும் கேரண்டி கொடுக்க வேண்டாம். 
                                                • வெளி நாட்டு பயணம், தொழில் அலைச்சல் ஆகியவை அதிகமாக இருக்கும். அலைச்சல் இல்லை என்றால் விரயம் இருக்கம் வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
                                                • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                                                தசா பலன்கள் - சுக்கிரன்  

                                                  ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். மேலுமே அவர் 6க்கு உரியவர்  சுக்கிரன் செவ்வாய்க்கு சமம். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                                                  • சுக்கிரன் தனது தசையில் நல்லது கெட்டது கலந்து தான் தருவார் 
                                                  • வெளிநாடு பயணங்கள், வெளிநாட்டு கல்வி சார்ந்த விசயங்கள் ஆதாயமாக இருக்கும்
                                                  • தொழிலில் பிரச்சனை வரலாம். 
                                                  • இளைய சகோதர சகோதரி வழியில் சில பிரச்னைகள் தோன்றும் 
                                                  • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அல்லது வழக்கு வர வாய்ப்பு உண்டு 
                                                  • உடலில் இருந்த சோர்வு நீங்கி  சுறுசுறுப்பு  உண்டாகும்.
                                                  • பொருளாதாரம், குடும்பம் மற்றும் தொழில் கவனம் தேவை
                                                  • தொழில் விரயம் தவிர்க்க கவனம் தேவை. 
                                                  • உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணியில் பிரச்னைகள் தோன்றும் 
                                                  • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                                                  தசா பலன்கள் - சனி 

                                                    ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன்,  சனி நட்பு.  சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                                                    • ரிஷபம் லக்கினம் ஸ்திர லக்கினம். 9ம் வீடு பாதாகதிபதி. சனி 9, 10க்கும் உரியவர். சுக்கிரன் சனி நட்பு கிரகம். ஆனாலும் சனி பாதாகதிபதியும் ஆவார். ஆனால் சனி நல்ல யோகாரகன் ஆவர்.
                                                    • ரிஷபம் லக்னம்/ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும். 
                                                    • சனிதசை வரும் போது அதிகம் ஆசைப்படாமல், இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைந்து, நேர் வழியில் சம்பாதித்தால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம். மாறாக அதிகம் ஆசைப்பட்டால் அதற்குரிய பாதிப்புகளை சந்தித்தே தீர வேண்டும். 
                                                    • நல்ல வருமானம் உண்டு. அதனால் கெட்ட பழக்கங்கள், கெட்டவர்களின் தொடர்ப்பு வர வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 
                                                    • வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்கும் அமம்ப்பு உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும் 
                                                    • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                                                    தசா பலன்கள் -  ராகு  

                                                      ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                                                      • ராகு, கேதுக்கு உச்சம் நீசம் இல்லை என்று ஒரு ஜோதிட நூலும், சில நூல்கள் ரிஷபத்தில் ராகு உச்சம் , விருச்சிகத்தில் நீச்சம் என்றும், மேலும் சில நூல்கள் ரிஷபத்தில் இரண்டும் உச்சம் , விருச்சிகத்தில் இரண்டும் நீசம் என்றும் கூறகிறது. எதுவாக இருந்தாலும் ராகு ரிஷபத்திற்கு நல்லவரே.
                                                      • தந்தை, தந்தை சார்ந்த விஷயம், தாய், தாய் சார்ந்த விஷயம், வீடு, வீடு சார்ந்த விஷயங்களில் நன்மையே உண்டாகும்.
                                                      • மன அழுத்தம் அதிக இருக்கும். தியானம் மிக அவசியம்.  
                                                      • குழந்தைகள் சார்ந்த விசயங்களில் மற்றும் வாழ்க்கை துணை சார்ந்த விஷங்களில் டென்ஷன் அதிகமாக இருக்கும்.
                                                      • தொழிலில், செல்லும் வேலையில் சிறப்பு இருக்கும். தொழில் சார்ந்த விசங்களில் நல்ல லாபமே 
                                                      • பலமிக்க கிரகத்துடன் இணைந்திருக்கும் ராகு அக்கிரகத்தின் ஆதிபத்தியத்தை ராகு திசையில் ராகுவே அப்பலன்களை செய்வார் என்பது ஒரு சோதிட விதி. 
                                                      • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                                                      தசா பலன்கள் -  கேது  

                                                        ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன், கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                                                        • பணம் விரையம் ஆகும். சுப யோகமாக மாற்றி கொள்ளுவது தனிப்பட்டவர்களின் திறமை.
                                                        • தந்தை, தாய், குழந்தைகள் , வாழ்க்கை துணை, இளய சகோதர சகோதிரி  மற்றும் வீடு ஆகிய அவற்றின் சார்ந்த விஷயங்களில் பிரச்சனை தரும். கேது பகவான் ஞானகாரகன். கேது ஆன்மீக புத்தியை புகட்டுபவர்.
                                                        • வேலை பளு அதிகாமாக இருந்தாலும் நல்ல வருமானம் இருக்கும் . உடl நலனில் பிரச்சனை  உண்டாகி மறையும். 
                                                        • மற்றவர்கள் உங்களை பற்றி புறம் கூற வாய்ப்பு உண்டு. ஜாக்கிரதையாக இருக்கவும்.
                                                        • போட்டிகளில் வெற்றி, நிலபுலன்களை வாங்கும் அமைப்பு, சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். ஒருவேளை செவ்வாயும், கேதுவும் கெட்டு இருந்தால், இதற்கு எதிர்மறையானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
                                                        • கோவில்கள், புனித ஸ்தல்ங்கள், யாத்திரைகள் மற்றும் சித்தர் வழிபாடு செல்ல சூழநிலையை அமைத்து தருவார். 
                                                        • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 
                                                        ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் என்றால் அந்த லக்கினம் கிருத்திகை பாதம் – 2,3,4 , ரோகிணி, மிருகசிரிஷம் 1, 2 என்ற இந்த முன்று நட்சத்திரத்தில் இருக்கலாம்.  அதாவது லக்கினம் ஏறிய நட்சத்திரம்.
                                                        அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம் 

                                                        ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

                                                        ரிஷபம் லக்கினம்  – கிருத்திகை 

                                                        கிருத்திகை 2,3,4  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன், செவ்வாய்  தாக்கத்துடன் இருப்பார்.
                                                        கிருத்திகை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் கொண்டவர்கள். ரிஷப கிருத்திகையில் பிறந்தவர்கள் குணநலன்கள் பார்த்தால் சாஸ்திரம் தெரிந்தவர்கள், மகிழ்ச்சியைத் தேடிச் செல்பவர்கள்,   தேவையற்ற சினம் கொண்டவர்கள், வெற்றியுடையவர்களை சினேகமாகக் கொண்டவர், நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்கள், நண்பர்கள் கூட்டம் உண்டு, ஒழுக்கம் கடைப்பிடிக்கத் தவறியவன், நேசமும் நட்பும் உள்ளவர்கள், சுதந்திரத்தை விருபதக்கவர், ஒருசிலர் தீமை செய்பவராகவும் மற்றும் மற்றவர்களை மதிக்காதவராகவும் இருப்பார்கள். படிப்பு குறைவாக இருக்கும், பொறுமையற்றவர், எதாவது ஒருவகை துக்கம் இருக்கும், நல்ல தோற்றம் உள்ளவர்கள், சட்டென கோபம் வந்துவிடும், நேர்மையான எதிரிகள் உண்டு, கர்வம் கொஞ்சம் இருக்கும். முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும், சகோதர உறவுகளில் சச்சரவு உடையவர்,  கல்வியில் தடங்கல் உடையவர். ற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், அரக்கக் குணம் கொண்டவன், கோபக்காரன், கொஞ்சம் பொய் பேசுவான் கவர்ச்சியானவன், ஒழுக்கம் குறைவு, பெண்களை கவர்பவன், அன்பு கொண்டவன், முன் யோசனையாளி, நியாவழக்கு தொடுப்பான், தாய்நாட்டை மறக்காதவர்கள், சுய சிந்தனையோடு அதிகம் உண்டு, அபார நினைவாற்றல் இருக்கும்

                                                        ரிஷபம்  லக்கினம்  – ரோகிணி 

                                                        ரோகிணி  நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார். சந்திரனுக்கு மிக பிடித்த நட்சத்திரம் என்று புராண கதைகள் சொல்கின்றன.

                                                        இந்த நட்சத்திரம் விண்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சௌபாக்கியமும், சௌந்தர்யமும்,  முரட்டுத்தன்மை இருக்கும், சிலருக்கு சிறு வியாதி இருந்துகொண்டு இருக்கும், கவிதை கற்பனையில் இருந்துகொண்டு இருப்பார். சினிமா துறை என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று, தன்மானமிக்கவன், கருணை அமைதி மிக்கவன், ஒழுக்கமானவன், வாய்மை மிக்கவன், சாந்த சொரூபி, ஜீவநேயம் கொண்டவன், குருவின் ஆசிர்வாதமிக்கவன், இசையில் ஆர்வ மிக்கவன், சூட்சம மந்திரம் ஜெபிப்பவன், இலக்கிய ஆர்வம் குறைவு, தெளிவான ஆராய்ச்சி ஈடுபடுவான், எல்லாரிடமும் இதமாக பேசி நோக்கை அடைவான்.பிறருக்கு சொல்லிக்கொடுப்பதில் வல்லவர்கள். பெரிய பதவி நோக்கிச் செல்பவர்கள், பெண்களுக்குப் பிரியமானவராகவும், அறிவுரைகளைக் கேட்பார்கள், வருங்காலத்தை பற்றி யோசிப்பார், மெல்லிய குரலில் பேசுவார்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள், செல்வம் அதிகப்படுத்துவதில் ஆர்வம், பிள்ளைகள் மீது அதிக அன்பு கொண்டவர், பாராட்டு பெறுவார்கள், சுகபோக வாழ்க்கையை வாழபிடிக்கும், சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கும். 


                                                        ரிஷபம்  லக்கினம்  –மிருகசிரிஷம் 1,2 பாதங்கள்   

                                                        மிருக சிரிஷம் 1,2  நட்சத்திர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், செவ்வாய்தாக்கத்துடன் இருப்பார்.
                                                        மானின் தலை போலத் தோற்றமளிப்பதால் மிருகசீரிசம் எனப் பெயர் பெற்றது. அதாவது ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். முதல் இரண்டு  பாதங்கள் ரிஷபத்திலும் மற்றவை மிதுனத்தில் இருக்கும். இது செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் இந்த லக்கினத்தில் துணிச்சல் அதிகம் இருக்கும்,  திடமான நம்பிக்கை அதைவிட அதிகம் இருக்கும், சுறுசுறுப்பானவர், செல்வமுடையவன், சுறுசுறுப்பானவர்கள், மரியாதையுடன் நடப்பவர்கள், தற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், சதைப்பற்றுமிக்கவன், அரக்கக் குணம் கொண்டவன், கோபக்காரன், கொஞ்சம் பொய் பேசுவான் கவர்ச்சியானவன், ஒழுக்கம் குறைவு, பெண்களை கவர்பவன், அன்பு கொண்டவன், முன் யோசனையாளி, நியாவழக்கு தொடுப்பான், தாய்நாட்டை மறக்காதவர்கள், சுய சிந்தனையோடு அதிகம் உண்டு, அபார நினைவாற்றல் இருக்கும், மகிழ்ச்சியானவர். முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும், சகோதர உறவுகளில் சச்சரவு உடையவர்,  கல்வியில் தடங்கல் உடையவர்.

                                                        மந்திரம் 

                                                        ரிஷப  லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய முருகன் துதியை மனதார சொல்லி வருவது நல்லது 
                                                                                                          பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
                                                        பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
                                                        பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
                                                        பெருமான் என்னும் பேராளா!
                                                        சேரா நிருதர் குல கலகா!
                                                        சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
                                                        தேவா ! தேவர் சிறைமீட்ட
                                                        செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
                                                        பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
                                                        பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
                                                        வா, வா, என்று உன்னைப் போற்றப்
                                                        பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
                                                        வாராது இருக்க வழக்கு உண்டோ !
                                                        வடிவேல் முருகா ! வருகவே !
                                                        வளரும் களபக் குரும்பை முலை
                                                        வள்ளி கணவா ! வருகவே !

                                                         ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்