நட்சத்திரம் - ரேவதி

 ரேவதி / Revathi


ரேவதி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 27 வது பிரிவு ஆகும். ரேவதி நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் ரேவதியின் ( ζ ) ரேவதியின் சமஸ்கிருதப் பெயரான ரேவதியே ஆகும். இதற்கு என்பது "வளம் பொருந்தியது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடுகள் "மீன்", "முரசு" என்பனவாகும்.

 

ஆளும் உறுப்புகள்

கால்கள்

பார்வை

சமநோக்கு

பாகை

346.40  & 360.00

தமிழ் மாதம்

பங்குனி

நிறம்

தாமரை மலரின் நிறம்

இருப்பிடம்

நீருள்ள இடம்

கணம்

தேவ கணம்

குணம்

மென்மை

மிருகம்

பெண் யானை

பறவை

வல்லூறு

மரம்

பாலுள்ள இலுப்பை மரம்

மலர்

மந்தாரை

தமிழ் அர்த்தம்

செல்வம் மிகுந்தது

தமிழ் பெயர்

தோணி

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

மாம்பழம்

பஞ்சபூதம்

ஆகாயம்

நைவேத்யம்

எள் பொடி கலந்த அரிசி மாவு

தேவதை

ஆதித்தர்களில் ஒருவரான பூஷா

அதி தேவதை

ஸ்ரீரங்கநாதர்

அதிபதி

புதன்

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

மீன் வடிவத்தில் 32 நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்

மற்ற வடிவங்கள்

மீன்,படகு

மற்ற பெயர்கள்

ஓடம், நால்வாய், தோணி, பாதை,தாலம், கடைமீன், மரக்கலம்

வழிபடவேண்டிய தலம்

கைலாசநாதர், திருச்சி

அதிஷ்ட எண்கள்

1, 5, 9

வணங்க வேண்டிய சித்தர்

சந்தாயணா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

தே, தோ, ச, சீ

அதிஷ்ட நிறங்கள்

மெரூன், ரோஸ்

அதிஷ்ட திசை

தென்மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

திங்கள், வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

அபடைட்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், புனர்பூசம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

அபிமன்யு, ஏயர்கோன் கலிக்காம நாயனார், கலிக்கம்ப நாயனார், வாயிலார் நாயனார், குரு கோவிந்த சிங்

குலம்

க்ஷத்திரிய குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்

 


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

திருவோணம் தொடர்ச்சி




 பொதுவான குணங்கள்

திருவோண நட்சத்திர அதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள். அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வள்ளலார் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இதமாகப் பேசி பழகுவார்கள். ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் பெயர் புகழை பெறுவார்கள். எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொறுத்து கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளை விரும்பி அணிவார்கள்

குடும்ப வாழ்க்கை

வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பார்கள். வாழ்க்கை துணைக்கு பயந்து நடப்பார்கள் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள். அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுவார்கள். எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சாதனை படைப்பார்கள். செல்வத்துக்கும் அந்தஸ்துக்கும் குறைவேயில்லை என்று சொல்லும்படி அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெறுவர்கள். தாயின் மீதும் அதிக பாசம் இருக்கும். பழி பாவத்திற்கு அஞ்சுவார்கள்.

நண்பர்கள்

நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். நல்ல நண்பர்களை தேர்ந்து எடுப்பதில் கவனம் தேவை.

நட்பு நட்சத்திரங்கள்

அவிட்டம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த ஆறு நட்சத்திரக்காரர் நண்பர்களும் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வார்கள். எந்த பிரதிபலனும் பாராமல், குடும்ப நலன் பேசுபவர்களாகவும், பொருளாதார உதவிகளை செய்பவர்களாகவும், சுக துக்கங்களில் பக்கத் துணையுடனும் இருப்பார்கள். நீங்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் உங்களுக்கு உதவி செய்வதை அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் இந்த நட்சத்திரங்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். கார்த்திகை (மேஷம்) உத்திரம் (கன்னி) உத்திராடம் (தனுசு) மிருகசீரிடம் (மிதுனம்), சித்திரை(துலாம்) அவிட்டம் (கும்பம்) இந்த நட்சத்திரங்களையும் தவிர்க்க வேண்டும்.

தொழில்

பொதுவாக இவர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்கள் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் நிச்சயமாக தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அதில் கூட்டு தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். கூட பணிபுரிபவர்கள், நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்கள் என யாருடனாவது கூட்டாக தொழில் செய்வார்கள். மற்றவர்கள் வியக்கும் படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர், வங்கி பணி, எழுத்தாளர் பேராசியர்களாகவும் ஜொலிப்பார்கள்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள். மக்களை நேசிப்பவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர் களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஓவியம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள்.

தசா பலன்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை முதல் தசையாக வரும். சந்திரன் தசை மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சந்திர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சந்திரன் தசை:


இந்த தசை காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகள், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.


செவ்வாய் தசை:


இரண்டாவதாக வரும் செவ்வாய் தசை மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.


ராகு தசை:


மூன்றாவதாக வரும் ராகு தசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.


குரு தசை:


நான்காவதாக வரும் குரு தசை காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதார மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள்


சனி தசை:


ஐந்தாவதாக வரும் சனி தசை காலங்கள் சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயர் உண்டாகும்.

பொது பரிகாரம்

திருவோண நட்சத்திரத்தின் தலவிருட்சம் பாலுள்ள எருக்கு மரம். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிடுதல், மொட்டையடித்து காது குத்துதல்,புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு தொடங்குதல் மாடு ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசக்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல் கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்க தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், உத்திரட்டாதி ஆகும்.

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. திருவாதிரை வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்
ச்ரவண நட்சத்திர வல்லடம்
விஷணும் கமலபத்ராஷம்
தீயா யேத் கருட வாகனம்


 

நட்சத்திரம் -திருவோணம்

திருவோணம் -Shraavan/Thiruvonam


திருவோணம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 22 வது பிரிவு ஆகும். திருவோண நட்சத்திர பிரிவு அக்கிலா விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட திருவோணத்தின் (α, β and γ அக்குயிலய்) பெயரைத் தழுவியது. திருவோணத்தின் சமஸ்கிருதப் பெயரான ஷ்ரவன (Shravana) என்பது "கேட்டல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காது" ஆகும். ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளாவில் வாமன அவதாரத்திற்கு காரணமான மகாபலியை போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரில் மற்றும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, மகாவிஷ்ணு அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்த அசுர சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு. திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சுரப்பி, முட்டிகள்

பார்வை

மேல்நோக்கு

பாகை

280.00 - 293.20

தமிழ் மாதம்

தை

நிறம்

கருமை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

தேவ கணம்

குணம்

மென்மை

மிருகம்

பெண் குரங்கு

பறவை

நாரை

மரம்

பாலுள்ள எருக்கு மரம்

மலர்

ஜாதி பூ

தமிழ் அர்த்தம்

படிப்பறிவு உடையது, காது

தமிழ் பெயர்

முக்கோல்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 சரம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

சிவப்பு அரிசி

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

பால் ஏடு - அக்காரஅடிசில்

தேவதை

அம்பிகை, வெங்கடேச பெருமாள், ஸ்ரீமகாவிஷ்ணு.

அதி தேவதை

கருடவாகனத்தில் எழுந்தருளி இருக்கும் திருமால்.

அதிபதி

சந்திரன்

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

அம்பு போன்ற வடிவில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பு.

மற்ற வடிவங்கள்

பூங்கொத்து,மூலிகைகொத்து

மற்ற பெயர்கள்

சோனம், உலக்கை, சித்ரம், ரஷகன், மால், மாயன், மாதவன்

வழிபடவேண்டிய தலம்

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள், திருப்பாற்கடல், திருப்பதி, திங்களூர்

அதிஷ்ட எண்கள்

2, 6, 8

வணங்க வேண்டிய சித்தர்

அத்ரி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஜு, ஜே, ஜோ, கா

அதிஷ்ட நிறங்கள்

மயில் நீலம், வெளிர்ச் சிவப்பு

அதிஷ்ட திசை

மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

புதன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

முத்து, வைரம்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

பொய்கையாழ்வார், விபீஷணன், சுவாமி நரசிம்ம பாரதி, வேதாந்தாசார்யர், பிள்ளை லோகாசார்யர், விக்ரம் சாராபாய், கார்ல்மார்க்ஸ்.

குலம்

நீச்ச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்


உத்திராடம் தொடர்ச்சி


 
பொதுவான குணங்கள்

உத்திராடத்தின் நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடையவர்கள். இந்த உலகத்தில் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பேச்சில் பதிலடி தர தயங்க மாட்டார்கள். மனத்தில் பட்டதை சட்டென்று வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிடுவர். அறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை, வாய்மை மிகுந்தவர்கள்.நல்ல தோற்றம், பேச்சுத் திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை இவர்களின் பொதுவான குணங்கள்.

சமூக நலனுக்காக பாடுபடும் குணம் உடையவர்களாதலால் விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பாடுபடுவார்கள். நல்ல அறிவாளி, கோபித்தும் கொஞ்சியும் தனது காரியங்களை சாதித்து கொள்வார்கள். மன வலிமையும், வைராக்கியமும் உடையவர்கள். வீண் விவாதத்துக்கு வந்தால், கொஞ்சம் கூட சளைக்காமல் அவர்களுக்கு பதிலடி தருவர்கள். செய்த நன்றியை மறக்க மாட்டார்கள். கண்ணால் கண்ட உண்மைகளை மறக்காமல் பேசுவார்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்பதற்கேற்ப நிலம், பூமிகளை வாங்கி சேர்ப்பார்கள். வயோதிக வயதிலும் இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள். நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். வாழ்க்கைத் துணையிடம் அளவுக்கதிகமான பாசம் கொண்டிருப்பார்கள். அடிமட்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எப்படியாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்து விடுவார்கள்

உற்றார் உறவினர்களால் நற்பலன் கிட்டும். அனைவருக்கும் உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர். சகிப்பு தன்மையும் விட்டு கொடுக்கும் சுபாவமும் இளமையிலேயே இருக்கும். அகங்காரம் அதிகம் இருப்பதால் சில நேரங்களில் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். தன்னுடைய தவறுகளை சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள் ஒரே நேரத்தில் பலவிதமாக யோசிப்பதால் மதில் மேல் பூனை போல மனம் அலை பாயும். குடும்பத் தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். அனைவரும் மெச்சும்படி வாழ்வார்கள்.

நண்பர்கள்

எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். நண்பர்களுடன் அடிக்கடி விவாதங்களில் ஈடுபடுவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மூலம் ஆகியவை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

புனர்பூசம், உத்திரம், விசாகம், கார்த்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்ப்பது நல்லது.

தொழில்

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல கலைகளையும் கற்றுக் தேர்ந்திருப்பார்கள். சமூகநலப் பற்று உடையவர்கள். மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியம் போன்ற துறைகளில் சாதிப்பார்கள். பூமியை ஆதாரமாகக் கொண்ட தொழில், மந்திர தந்திரம், நாடகத்துறை, நடிப்பு, திரைப்பட தயாரிப்பு போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். நீச்சல் போட்டிகளிலும் மிளிர்வார்கள். ராணுவத்தில் படை தலைமை வகிப்பார்கள் பலருக்கும் பயிற்சி அளிப்பார்கள். நீதி மன்றங்களில் திறமையாக வாதாடும் வக்கீல் களாகவும் இருப்பார்கள். பொருளாதார ரீதியாக எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. நாட்டில் எங்கு தவறு நேர்ந்தாலும் அதை தயங்காமல் கேட்கும் குணம் கொண்டவர்கள்.

தசா பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் தசை முதல் தசையாக வரும். சூரியன் தசை மொத்தம் 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சூரியன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூரியன் தசை:


சூரியன் பலம் பெற்றிருந்தால் தந்தைக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு உண்டாகும்.


சந்திரன் தசை:

இரண்டாவதாக வரும் சந்திர தசை 10 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பலமிழந்திருந்தால் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படும்.

செவ்வாய் தசை:


மூன்றாவதாக வரும் செவ்வாய் தசை 7 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

 
ராகு தசை:


அடுத்து வரும் நான்காவது தசை ராகு தசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பல வகையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

 
குரு தசை:


ஐந்தாவதாக வரும் தசை குரு தசை. இந்த தசையில் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.
அடுத்து வரும் சனி தசையும் குரு தசை போல் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.

பொது பரிகாரம்

உத்திராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள பலாமரமாகும் இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

உத்திராட நட்சத்திரத்தில் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், குழந்தையைத் தொட்டிலிடுதல் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துதல், பெயர் சூட்டுதல் அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். புது மனை புகுதல், வீடு வாகனம் வாங்குதல், வாஸ்து படி வீடு கட்டுதல் வான், நீர், நில வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், வங்கி கணக்கு தொடங்குதல், வியாபாரம், புது வேலையில் சேருதல், நாட்டிய அரங்கேற்றம் பத்திர பதிவு, உயில் எழுதுதல் போன்ற நல்ல காரியங்களை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, மிருகசீரிஷம், அஸ்தம், பூராடம் ஆகியவை பொருத்தமான நட்சத்திரங்கள் ஆகும்.

பொருந்தா நட்சத்திரங்கள்:

புனர் பூசம், உத்திரம், விசாகம், கிருத்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. புனர்பூசம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்