தனுசு (Sagittarus)


ராசியின் தன்மைகள் :


ஆண்  ராசி அல்லது ஒற்றை    ராசி

உபய ராசி ( மந்தமான தன்மையை குறிக்கும்)

ஜலராசிகள்(Watery Signs)

தெற்கு ராசி (South)

அதிபதி : குரு 

நெருப்பு ராசி 

தூர அளவு : 240" to 270"

நட்சத்திரங்கள் : முலம் , பூராடம் , உத்திராடம் பாதம் - 1 

ஆட்சி (அதிபதி )பெறும் கிரகம் : குரூ(Jupiter)

உருவம் : வீல் 

நிறம் : சிகப்பு 

ஜாதி :   க்ஷத்திரிய ஜாதி


உடல் அமைப்பு (Type of Body or structure of Body):

நல்ல விகித சாரத்தில் நல்லபடியான வளர்ச்சி உடைய உடல் இருக்கும். பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். நடக்கும் போதும், நிற்கும்போதும் ஒரு பக்கம் சாய்ந்திருப்பார்கள். நீண்ட அகன்ற நெற்றி நீண்டமூக்கு, வாசிகரத் தோற்றம் ஆகியவை இருக்கும் 

குணங்கள் (General Characteristics):

பேசும் போதும் சத்தமாக பேசும் குணம் படைத்தவர்கள் என்பதால் பேசுவது மற்றவர் பார்வைக்கு கட்டளையிடுவது போல இருக்கும். பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். தனக்கு சமமாகவும் அல்லது உயர் அங்தஸ்து, பதவி, செல்வம் உடையவர்களின் நட்பை கொள்ளுவார்கள். அதே போல் தங்களுக்கு கீழோரிடம் வெறுப்பை பெறுவார்கள். வெளியே சுற்றும் பழக்கம் இருக்கும்.

மணவாழ்க்கை (Marriage Life):

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாக அமைவதுதான் நல்லது. சீக்கிரமாக மண வாழ்க்கை அமைந்தால் பலவகையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் அடிக்கடி பாதிப்படையும். இதனால் குடும்பத்தில் பிரிவும் துயரமும் ஏற்படும். வாழ்க்கை துணையால் துன்பமும் தொல்லையும் அதிகம் ஏற்படும். 

பொருளாதாரம் (Economy):

நடுத்தர வயது அடையும் போது சில சிரமங்களை அனுபவிக்க நேரிடும். ஆனால் பிந்திய வயதில் அபார கீர்த்தி சந்தோசம், செல்வ செல்வாக்குடன் பூமி வீடு, வண்டி போன்ற சொத்துக்களுடன் ஆனந்தமாக வாழ்வார்கள்

புத்திரபாக்கியம் (Children):

குறைந்த புத்திரர்கள் தான் இருக்கும்.  ஆனால் பிள்ளைகளால் நற்பலன்களும், இறுதி வரை பாசம் நேசமும் பெற்றவராக இருப்பார்கள். பிள்ளைகளால் சமுதாயத்தில் நற்பலன்களையே பெறுவார்கள். 

தொழில்கள் (Business or Jobs):

இவர்கள் தங்களுது கல்வி, அறிவு, திறமையால் உயர்பதவி, அரசாங்க பதவி பெறுவார்கள். மந்திரி, விலங்கு பயிற்சியாளர், ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், மக்கள் தொடர்பு, பயிற்சியாளர், பயணத்துடன் சமந்தப்பட்ட எதாவது ஒரு வேலை போன்றவை சொல்லாம்

நோய்கள்:

இருப்பு பாதிப்புகள் (இடுப்பு பகுதியில் சதை ), கை கால் இயங்கும் தசைகளில் இணக்கம் இன்மை, நுரையீரல் சம்மந்த பட்ட தொந்தரவுகள், தோள்பட்டை எலும்பு முறிவு போன்ற பிரச்னை வர வாய்ப்பு உள்ளது.