கடக ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 



இந்த ராகு , கேது பெயர்ச்சியில்  ராகு,  கடக ராசிக்கு   8ம்  வீடான கும்பத்திற்கும், கேது ,,கடக ராசியின்  2ம் வீடான சிம்மத்திற்கும்  செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • ஜோதிட சாஸ்திரத்தின் படி ,   8ல் ராகு மற்றும் 2ல் கேது  பெயர்ச்சி ஆவது  நல்லதாக கருத படுவது கிடையாது. வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு உண்டாகும். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மற்றும்,உறவில் ஒற்றுமை நீடிக்க வெளிப்படையாக கருத்துகளை பரிமாறுவது நல்லது.தகவல்தொடர்புகளில் கவனம் செலுத்துங்கள். 
  • திருமணத்திற்கு தயாராக உள்ள கடக ராசிகாரர்களுக்கு தக்க துணைகண்டு அறிய அதிக முயற்சி தேவைபடும்.
  • என்றாலும் உங்கள் பெற்றோரிடமிருந்து, குறிப்பாக  தந்தையின் ஆதரவை நன்றாக இருக்கும் . கடந்த கால பிரச்சனைகளில் இருந்து  விடுபடுவீர்கள். இரத்த உறவுகளுக்குள் தொடர்பு மற்றும் புரிதல் மேம்படும், மேலும் இது  வலுவான பிணைப்பை வளர்க்கும். இந்த பெயர்ச்சி குடும்பத்தில் நெருக்கம் மற்றும் ஆதாரவை வளர்க்கும் என்று தான் சொல்ல வேண்டும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களின் முன்னேற்றத்திற்கு உதவும்
  • 8 விட்டிற்கு ராகு வருவதால் ,ஆன்மீக சிந்தனை வளரும். இறை வழிபாடு மற்றும் சித்தர் வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். 
  • பொருளாதாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடன்  வாங்குவதையும், பிறர்க்கு கொடுப்பத்தையும் தவிர்த்தல் நல்லது.
  • கடக ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும், சாலை விபத்துகளில் சிக்க வாய்ப்பு உண்டு. வண்டியில் சாகசம் செய்ய ஆர்வமுடைய கடக ராசிக்காரர்கள் முடிந்தவரை வண்டியை தொடாமல் இருப்பது நல்லது.
  • ஊக முதலீடுகளில் எச்சிரிக்கை கட்டாயம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நல பிரச்சினை ஏற்பட்டு செலவுகள் வரலாம்.
  • கடக ராசிக்கு தன ஸ்தானத்தில் கேதுவின் சஞ்சாரம் செய்வதால், வியாபாரம் செய்யபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.. பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்ட வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • இந்த பெயர்ச்சி கடக ராசி மாணவர்கள், தங்கள் கல்வியில் கவனம் மற்றும் விடாமுயற்சி அவசியம் ஆகும். மாணவர்கள் படிப்பில் மெதுவான முன்னேற்றம் அல்லது தெளிவின்மை இருக்கும்.ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருக்கும் மாணவர்களுக்கு இது சாதகமான நேரமாக இருக்கும். 
  • கடக ராசிக்காரர்களுக்கு ராகு எட்டாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. இந்த  ராகுவின் பெயர்ச்சி பொறுத்தவரை  சாதகமானது இல்லை என்றாலும் சில சமயங்களில் திடீரென்று நல்ல பலனைத் தரும். 
  • சரியான இல்லாத  உணவுப் பழக்கம் உள்ள கடக ராசிகாரர்களுக்கு ஏதேனும் தொற்று நோய் ஏற்படலாம் அல்லது உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். சரியான நேரத்தில் மருத்துவம் செய்து பெரிய சிக்கலில் இருந்து வெளி வர முடியும்.
  • மேலும் எட்டாவது வீட்டிற்கு வரும் ராகுவால் திடீர் என்று உடல் நல தொந்தரவுகள் வர வாய்ப்பு உண்டு. மேலும் செரிமானம் பிரச்சனை மற்றும் மன அழுத்தம் உண்டாகலாம்.
  • வாழ்க்கை துணையின் சொந்தங்களிடம் இருந்து சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. என்றாலும் உற்றார் உறவினர்களுடன் நல்ல உறவு இருக்கும்.
  • பங்குச் சந்தையில் முதலீடு  செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும்.  இல்லையெனில், நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். 
  • என்றாலும் இந்த பெயர்ச்சியால்  எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெறலாம். மேலும் சில சொத்துக்கள் அல்லது பரம்பரை சொத்து அடையும் வாய்ப்பு உண்டாகும்.மேலும்  எதிர்பாராத சில வழிகளில் பணம் வரவு உண்டு. 
  • ஆராய்ச்சி, காப்பீடு, அமானுஷ்ய அறிவியல் அல்லது நிதித்துறையில் உள்ளவர்கள் எதிர்பாராத முன்னேற்றங்களைக் காணலாம். என்றாலும் மறைமுக எதிரிகள் அல்லது தவறான புரிதல்கள் வர வாய்ப்பு உண்டு.
  • 8 ஆம் வீட்டில் ராகுவால் கடக ராசி மாணவர்களுக்கு கல்வியில் கவனச்சிதறல் வரும். எனவே கல்வியில்  முழு கவனம் செலுத்த வேண்டும்.
  • ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இது உங்களின் மன அழுத்ததை குறைக்க உதவும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு கேது  ராசியிலிருந்து இரண்டாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. இரண்டாவது வீடு என்பது பணம், பேச்சு மற்றும் குடும்பத்தை குறிக்கும் வீடு ஆகும்.  இந்த வீட்டில் கேது பெயர்ச்சியால்  வாழ்க்கை  சில ஏற்றத் தாழ்வுகள் நிறைந்து இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
  • உங்களின் வார்த்தைகளை கவனம் அவசியம். உங்களின் வார்த்தைகளால் சிலரை நீங்கள் புண்படுத்தலாம். 
  • மேலும் குடும்பத்தை விட்டு விலகி இருக்க விரும்புவீர்கள். என்றாலும் பிரிந்து இருந்த உறவுகள் மீண்டும் இணைய வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.
  • இந்த பெயர்ச்சியின் போது, ​​வாய் புண்கள், பல்வலி போன்ற பிரச்சனைகள்  தொந்தரவு செய்யலாம். கேது பெயர்ச்சி 2025 போது, உங்களின் வாழ்க்கை துணைக்கும் உடல்நலப் பிரச்சினைகள்  வர வாய்ப்பு உண்டு  எனவே அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். 
  • போட்டி தேர்வில் பங்கு ஏற்கும் கடக ராசி மாணவர்களுக்கு சிறந்த வெற்றி கிடைக்கும். மேலும் இந்த கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு  சாதகமானவே இருக்கும். 
  • வியாபாரத்தில் வாடிக்கையார்களிடம்  வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். 


மிதுன ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 


இந்த ராகு  கேது பெயர்ச்சியில்  ராகு,மிதுன ராசிக்கு   ராகு, 9ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மேஷ ராசியின்  3ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.


ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • மிதுன ராசியினருக்கு ராகு  கேது பெயர்ச்சியினால் எல்லாத் துறைகளிலும் வெற்றி கிட்டும் . தைரியமும் மன உறுதியும் அதிகரிக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்.  
  • பணியிடத்திலும் கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் மரியாதை கிடைக்கும். மேலும் வாட்டி வந்த நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் .  குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றத்தின் காலம் தொடங்கும்.
  • மிதுன ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் கேது அமர உள்ளார். இதன் காரணமாக எல்லா துறைகளிலும் சிறப்பான வெற்றி தேடி வரும். உங்கள் செயலில் வீரமும், தைரியமும் அதிகரிக்கும். 
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் காணலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • குடும்பத்தனருடன் போதிய நேரத்தை செலவழிப்பீர்கள். வீடு, வாகனம் வாங்கும்  கனவும் நிறைவேறும்.
  • பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அபாயகரமான எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். 
  • நண்பர்கள், உறவினர்கள், உடன்பிறந்தவர்களுடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
  • வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து உங்களின் கருத்துகளை பற்றி பேசவும். குழந்தைப் பேற்றிற்காக திட்டமிடும் தம்பதிகளுக்கு, சிறிது தாமதம் ஏற்படலாம். இந்த பெயர்ச்சியில் ஆரோக்கியம் மேம்படும். 
  • தந்தை மற்றும் இளைய உடன்பிறந்த உறவுகள் தேவையற்ற மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் உண்டு. சற்று விட்டு கொடுத்து போகவும்.
  • பங்கு சந்தை மூலம் நல்ல லாபம் மற்றும் ஆதாயம் உண்டு. இதனால் நிதிநிலை மேம்படும். என்றாலும் ஆடம்பரமாக வாழும் எண்ணம் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டும்.
  • தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவாக்க சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான இது சரியான நேரம் என்று தான் சொல்ல வேண்டும். 
  • கூட்டுதொழில் இந்த காலக்கட்டத்தில் நல்ல பலன் அளிக்கும். என்றாலும் ஆவணம் மற்றும் ஒப்பந்தப் பத்திரங்களில் கையொப்பமிடுவதற்கு முன் யோசித்து செய்ய வேண்டும்.
  • உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. சில கூடுதல் பொறுப்புகள் கூட வரலாம். உங்களின் திறமைகளை பயன்படுத்தும் நேரம் இது என்பதால் பயன்படுத்தி கொள்ளவும்.
  • வெளிநாட்டு வேலை, உயர்கல்வி அல்லது பயணம் மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதை உள்ளடக்கிய துறைகளில் வெற்றி உண்டாகும்.
  • சில சமயங்களில் ராகுவின் தாக்கம்  மன அமைதியையும் பொறுமையும் இழக்க செய்யும். இதனால் வழக்கமான பணிகளில் சிரமம் ஏற்படலாம். 3 ஆம் வீட்டில் கேது சில சமயங்களில் சக ஊழியர்களுடன் உறவுகளில்  பிரச்சனைகளை கொண்டு வரலாம். சனி மற்றும் குரு பெயர்ச்சியால் இந்த நிலையில் பெரிய பிரச்சினை இருக்காது. கவலை வேண்டாம்.

  • மிதுன ராசிக்கு ராகு ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால், நீண்ட தூரப் பயணங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. 
  • இந்த பெயர்ச்சியின் போது தந்தைக்கு சில உடல்நல பிரச்சனைகளால்  தொந்தரவு உண்டாகலாம். எனவே அவரது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்  மற்றும் தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி அவருக்கு சிகிச்சை அளிக்கவும்.
  • மனத்தில்  ஆடம்பர எண்ணங்கள் தோன்றும். எனவே சிக்கனத்தை நாட வேண்டும். இல்லையெனில்,  நிதி ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.
  • மேலும் இந்த  ராகுவின் பெயர்ச்சியின் விளைவாக பணித் துறையிலும் சில ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு  விரும்பாத இடத்திற்கு மாற்றப்படலாம். பொறுமையை கடை பிடிக்கவும்.
  • என்றாலும்  குறைவான உழைப்பைக் கொடுத்து அதற்கு இரட்டிப்பான பலன்களைப் பெறும் யோகம் உண்டாகும்.  புதிய வண்டி, புதிய வாகன யோகம் உண்டு.
  • சுபமான செய்தி வரும். வீட்டில்  திருமணம் உள்ளிட்ட   அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். புத்திசாலித்தனமாக  செயல்பட்டு நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். 

  • கேது  மூன்றாம் வீட்டிற்கு  பெயர்ச்சிக்கிறார்.கேது மூன்றாவது வீட்டில் பெயர்ச்சிப்பது சாதகமாக கருதப்படுகிறது. 
  • 3 ஆம் வீட்டில் உள்ள கேது தன்னம்பிக்கை மற்றும் தைரியமும் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையையும் முழு நேர்மையுடனும் கடின உழைப்புடனும் செய்வீர்கள். 
  • மனம் ஆன்மிகத்தில் ஈடுபடும். எனவே ஆன்மிக சுற்றலாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பிர்கள்.  மேலும் சில குறுகிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.  
  • உங்கள் பணியிடத்திலும், பணியிலும் மிகவும் ஆர்வம் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். 
  • இந்த காலகட்டத்தில், உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு சில உடல் பிரச்சனைகள் வந்து  தொந்தரவு செய்யலாம். எனவே உங்களின் உதவி அவர்களுக்கு தேவை படலாம். 
  • இந்தப் பெயர்ச்சியால்  நீங்கள் ஆசை பட்ட  சொத்துகளை வாங்குவீர்கள் .  மேலும்  3ம் வீட்டில் உள்ள கேது, பொறுப்பான செலவுகள், திட்டமிட்ட முதலீடுகளால் உங்கள் சேமிப்பை அதிகரிக்கும். 
  • வெளிநாட்டு சந்தைகளில் நீண்டகால முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள். மேலும் ஊக நிதிகளில் முதலிடு செய்யும் போது மிகவும் கவனம் அவசியம். முடிந்தளவு தவிர்க்கவும்.
  • மேலும் சுவாச அல்லது நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்கள் சற்று  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


ரிஷப ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  



இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 



இந்த பெயர்ச்சியில்  ராகு, ரிஷப  ராசிக்கு 10ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மேஷ ராசியின்  4ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்


  • இந்த ராகு மற்றும் கேது  பெயர்ச்சி காலக்கட்டத்தில்  ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். பொதுவாக ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்கு நன்றாக இருக்கும் என்றாலும் தவறான புரிதல்களால் தாயுடனான உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கவனம் அவசியம். மேலும் வாழ்க்கை  துணையைச் அனுசரித்தும் நடந்து கொள்வதின் மூலம் உறவு வலுப்படும். மேலும் தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
  • இந்த பெயர்ச்சி தந்தை மற்றும் அவர்களது உடன்பிறப்புகளுக்கு இடையே அதிக ஆதரவையும் புரிதலையும் தரும்.
  • இந்த பெயர்ச்சியில் , பொருளாதாரத்தை பொறுத்தவரை இந்த பெயர்ச்சி நன்மை தான் தரும் என்று சொல்லாம். என்றாலும் நிலத்தில் முதலீடு செய்யும் முன் யோசிக்கவும். எச்சிரிக்கை அவசியம்.
  • மேலும்  தொழில்  முயற்சிகள் சீராக இயங்கும் மற்றும் இந்த காலகட்டத்தில் லாபம் ஈட்ட முடியும். மேலும் முந்தைய நிதி சிக்கல்களுக்கு இந்த பெயர்ச்சியில் நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் வெளிநாட்டில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும் 
  • தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் வெற்றி பெற இரண்டிற்கும் சமமான உரிமையை கொடுக்க வேண்டும்.  ரிஷப ராசி பெண்களுக்கு ஆளுமை திறமை அதிகரிக்கும்.
  • காதல் உறவுகளில் தவறான புரிதள் வர வாய்ப்பு உள்ளது. அதற்கு கட்டாயம் தீர்வு காண வேண்டும். அலச்சியம் வேண்டாம்.
  • ரிஷப ராசி மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் கல்வி கற்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலகட்டம் சாதகமாக  மேலும் தொழில் சார்ந்த கல்வி கற்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் வரும் பயன்படுத்தி கொள்ளவும்.
  • வியாபாரிகள்  தங்கள் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதில் கவனம் தேவை. மேலும் வியாபாரத்தில் திடீர் முடிவுகள் தவிர்க்கவும்.
  • மன அமைதிக்கு ஆன்மிகம் உதவும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். மேலும் பொருள் சார்ந்த விஷயத்தில் உங்களின் விருப்பங்களை சமன் படுத்த இது உதவும்.


  • ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு பத்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். பத்தாம் வீட்டில் ராகு இருப்பது நல்ல பலனைத் தருவதாகக் கருதப்பட்டாலும், உங்கள் பணியிடத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
  • மேலும் ராகு உங்களை குறுக்குவழிகளைப் பின்பற்றச் செய்வார். வேலையில் தவறுகள் செய்யும் வாய்ப்புகளை அதிகரிக்கும் மற்றும் அவசரமாக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேலையை மற்றவர்களுக்கு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டிய அவசியம்.
  • மற்றவர்களுக்கு கடினமான பணி என்றாலும் நீங்கள் எந்த வேலையை எடுத்தாலும், அதை நீங்கள் விரைவாக முடித்துவிடுவீர்கள்
  • ரிஷப ராசிக்கு  2025ல் ராகுவின் மாற்றத்தால் பல விதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.  மேலும் பணியிடத்தில் உங்களின் வேலைகள் சிறப்பான வெற்றி இலக்கை அடைய முடியும். 
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். என்றாலும் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.  குடும்பத்துக்கு நேரங்கள் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

  • கேது   நான்காவது வீட்டில் பெயர்ச்சிக்கும் போது குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற பதற்றம் மற்றும் தவறான புரிதல்கள் அதிகரிப்பதால், குடும்ப சூழ்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். 
  • தாயார் உடல்நலக் குறைவால் சிரமப்படக்கூடும். மேலும் இந்த கேது பெயர்ச்சி போது  மார்பு அல்லது நுரையீரல் தொற்று ஏற்படலாம். கவனம் அவசியம்.
  • 4 ஆம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால், ரிஷப ராசி மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவதில் குறைபாடு அல்லது  சில உணர்ச்சி ரீதியான கவனச்சிதறல்கள் ஏற்படக்கூடும், இதனால் மாணவர்கள் ஒழுக்கமாகவும், இலக்கை நோக்கியும் இருப்பது அவசியம். 
  • இந்த  கேது பெயர்சசியால்  வியாபாரத்தில் நீண்டகால வெற்றியைத் தக்கவைக்க வாடிக்கையாளர் திருப்தி படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மேலும் இந்த  கேது  உங்களின் சுயபரிசோதனை, தியானம் மற்றும் உள் அமைதிக்கான தேடலை வளர்க்கிறார் புனித யாத்திரை மேற்கொள்ள இது ஒரு சாதகமான நேரம் ஆகும்.

மேஷ ராசி ராகு - கேது பெயர்ச்சி - 2025

  



இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 



இந்த பெயர்ச்சியில்  ராகு, மேஷ ராசிக்கு 11ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மேஷ ராசியின்  5ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

 ராகு , கேது பெயர்ச்சி பொது பலன்கள்

  • இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சியை பொறுத்தவரை மேஷ ராசிகாரர்களுக்கு வேலை வாய்ப்பு பொறுத்தவரை  வேலையில் நல்ல முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
  • மேலும்  வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து வருமானம் கூடும். எனவே பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.
  • சிலருக்கு சில தடைகள் வரலாம், கவனமாக இருக்க வேண்டும். ம் ராகு கேது பெயர்ச்சி சிலருக்கு சில தடைகள், சவால்களை தரலாம், எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும்  உங்கள் வேலையை சரியாக திட்டமிட்டு செய்வதும், அர்ப்பணிப்புடன் செய்வதும் அவசியம்.
  • 11 ஆம் வீட்டில் ராகு புதிய நட்புகள் அமையும் ,  தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடும். என்றாலும் குருட்டு நம்பிக்கையில் ஆபத்தானா வியாபார முடிவுகளை தவிர்க்க வேண்டும்.
  • 5 ஆம் வீட்டில் கேது இருப்பதால் காதல் உறவுகளில் சில தவறான புரிதால் சற்று  இடைவெளி ஏற்படலாம். குழந்தைகளை கவலைகள் உண்டாகும் 
  • மேஷ ராசியில் உள்ள மாணவர்கள் இந்த பெயர்ச்ச   கலவையான பலன்களை தரும் எனலாம். உயர்கல்வி அல்லது படைப்புத் துறைகளில் ஈடுபடுபவர்கள்.  தங்களின் வேலைகளை  தள்ளிப்போடுவதைத் தவிர்த்தால் சிறந்து விளங்க வாய்ப்புகள் உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மேஷ ராசி மாணவரகள்  கூடுதல் கவனம் செலுத்துவேண்டும்.
  • உங்களுக்கும், உங்கள் வாழ்க்கை துணை இடையே ஆதரவாகவும் இணக்கமாகவும் இருக்கும். சில தம்பதிகளுக்கு கருத்தரிப்பதில் சிறிது தாமதம் ஆகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
  • குடும்ப வாழ்க்கை செழித்தோங்கும் என்றாலும்  காதல் உறவுகள் தற்போது நிறைவாக இருக்காது. காதல் துணையை தேர்ந்து எடுக்கும் போது சற்று கவனம் அவசியம்.

மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராகு பதினொன்றாவது வீட்டில் கும்பத்தில் பெயர்ச்சிக்கிறார். பதினொன்றாவது வீட்டில் ராகு மிகவும் சாதகமாக கருதப்படுவதால், உங்கள் ராசிக்கு மிகவும் சாதகமான பெயர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். 
ராகு  மனதில் உள்ள ஆசை மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற உதவுவார்.   நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த திட்டங்கள் இப்போது சீராக செயல்பட  தொடங்கும். 
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மேலும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதையும் விரும்புவீர்கள் என்று தான் சொல்ல வேண்டும் . புதிய நண்பர்களை ஏற்று கொள்ளும் முன் அவர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தவறானவரின் நட்பு வர வாய்ப்பு உண்டு.
குடும்ப வாழ்க்கையை விட உங்கள் நண்பரகளின்  வட்டத்திற்கு அதிக முக்கியத்துவம்கொடுப்பதால்  குடும்பத்தை விட வீட்டிற்கு வெளியே அதிக நேரம்செலவிடுவீர்கள்.
இதனால் உடல்நலத்தில் அக்கறை காட்ட மாட்டீர்கள். எனவே உடல் நிலை பாதிக்க படல்லாம்.
வணிகர்கள் ராகுவின் இந்த பெயர்ச்சியால் சாதகமான பலன்களைப் பெறலாம் மற்றும் பொருளாதார நிலையம்  வலுவடையும். என்றாலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும்.
வேலைக்கு செல்லும் மேஷ ராசிகாரர்களுக்கு பணியில் பல  வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு . மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை கிடைக்கும்.

மேஷ ராசிக்கு கேது  வீடு ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சியாக போகிறார். எனவே கேதுவின் பெயர்ச்சி மேஷ ராசிக்கு  சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
படைப்பாற்றல், சுய வெளிப்பாடு மற்றும் அன்பு மூலம் ஆன்மீக விழிப்புணர்வை இந்த கேது பெயர்ச்சியால் நடைபெறும் .
தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் மிகவும் உண்மையான மற்றும் நிறைவான முடிவுகளை எடுக்கும் திறனை கேது தருவார்.
என்றாலும் குழந்தைகளின் விஷயத்தில்  எச்சிரிக்கை உணர்வு வேண்டும்.
கேது 5 ஆம் வீட்டில் இருப்பதால் ஆரோக்கியற்ற உணவுகளை உண்ண துண்டும். இதனால் ஆரோக்கியம் பாதிக்கலாம். கவனம் அவசியம்.
கேது பற்றின்மை கொண்ட கிரகம் என்பதால், அனைவருக்கும் சேவை செய்யும் மனபான்மையை  வளர்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும்.
.

மீன ராசி - குரு பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 


குரு பெயர்ச்சி பொது பலன்கள்

மீன ராசிக்கு அதிபதியும் மற்றும் பத்தாம் வீட்டு அதிபதிமான குரு பகவான் நான்காம் வீட்டுக்கு வருகிறார். இது பெரிய தவறு இல்லை. என்றாலும் பெரிய நற்பலன்கள் கொடுக்காது. மேலும்  பெரிய ஏற்றம் எதுவும் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

வீடு, ரியல் எஸ்டேட் மற்றும் பராமரிப்பு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு  வளர்ச்சிகான  வாய்ப்புகள்கிடைக்கும் .

என்றாலும் முதலீடு , பங்கு சந்தை மற்றும் எல்லா பண விஷயத்தில் மிகவும்  கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நெருங்கியவரே பிரச்சனைகளை தரும் வாய்ப்பு உள்ளது.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஆனாலும் வேலை கட்டாயம் கிடைக்கும். என்றாலும் வருமானம் திருப்திகரமாக இருக்காது.

திருமணத்திற்கு காத்து இருப்பவர்களுக்கு திருமணம் சற்று தாமத படும்.

உடல் நலத்தில் பெரிய பிரச்சனைகள் வராது. என்றாலும் மன நலத்தை பாதுக்க வேண்டும். மன அழுத்தங்கள் ஏற்படலாம்.

மீன ராசி மாணவர்களுக்கு அதிக கவனம் மற்றும் பொறுமை இருந்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி கட்டாயம் உண்டு.

அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். நேர்மையான  உழைப்பும், நேரடி கவனமும் இருந்தால், எதிர்பார்க்கும் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் வரும்.

மீன ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் வியாபாரத்தில், வாடிக்கையாளர்களை  திருப்தி மற்றும் நம்பிக்கை பெற முயற்ச்சிக்க வேண்டும்.

யாருடைய தனிப்பட்ட தவறையும் பெரிதுபடுத்த வேண்டாம். அனுபவம் மிக்கவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சங்கடங்கள் தீரும். வரவு சீராகும். குழந்தைகளிடம்  வீண் கண்டிப்பு வேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

குரு பெயர்ச்சி 2025 அக்டோபர் மாதத்தில் குரு பகவான் ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கும் போது, ​​அந்த நேரம் குழந்தைகளுக்கும், பொருளாதார வளத்திற்கும் ஏற்றதாக இருக்கும். காதல் உறவுகளிலும் வெற்றிக்கான நேரம் இருக்கும்.

அதன் பிறகு, குரு வக்ர நிலையில் டிசம்பரில் மீண்டும் நான்காவது வீட்டிற்குள் நுழையும் போது, ​​குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக மாறும் மற்றும் நீங்கள் பணியிடத்திலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் அப்போதுதான் நீங்கள் வெற்றியைப் பெற முடியும்.

குரு பார்வையின் பலன்கள்




ஸ்தான பலத்தை விட பார்வை பலனை  அதிகம் பெற்ற குரு பகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக, முறையே எட்டாம்   வீடு  , பத்தாம்   வீடு மற்றும் பனிரெண்டாம் வீடுகளை  பார்க்கிறார். அதாவது துஸ்தானம் ர் ஸ்தானம், தொழில் ஸ்தானம் மற்றும்  விரைய மற்றும்  மோட்ச ஸ்தானத்தை  பார்க்கிறார். 

இந்த பார்வைகளால்   சாதகங்கள் அதிகரித்து சங்கடங்கள் குறையும். அதேசமயம் உங்கள் செயலிலும் வார்த்தையிலும் நிதானம் இருந்தால் மட்டுமே நல்லவை நிலைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

குருவின் பார்வைகளால், மீனம் ராசிக்காரர்களுக்கு சில சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம். பணப்புழக்கம், கௌரவம் மற்றும் குடும்பத்தில் அமைதி போன்ற பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


கும்ப ராசி - குரு பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு இரண்டாம் மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியாகும். குரு பெயர்ச்சி 2025 போது உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டில் குரு வருகிறார். இது மிகவும் சிறப்பு ஆகும்.குரு பெய்ரச்சியால் பல நன்மைகள் பெரும ராசியில் கும்ப ராசியும் ஒன்று ஆகும்.

இந்த பெயர்ச்சி உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகளை வழங்கும். திட்டங்களில் வெற்றி உண்டாகும் மற்றும் விரும்பிய ஆசைகள் நிறைவேறும்.

பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். உயரதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். பிறர் கட்டாயத்துக்காக அலுவலகப் பணி ரகசியம் எதையும் பகிர வேண்டாம்.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். மூன்றாம் நபர் தலையீட்டை முழுமையாகத் தவிருங்கள். பரஸ்பரம் மனம்விட்டுப் பேசுங்கள்.

பழைய கடன்களை  தீர்க்க முடியும். சுபகாரியங்கள் கைகூடி வரும். செய்யும் தொழிலில் ஏற்ற ஏற்படும். உழைப்புக்கு ஏற்ற வளர்ச்சி உண்டு.

புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல அருமையான காலகட்டம். நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கும்ப ராசி மாணவர்கள்  கல்வியில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். உயர்கல்வியிலும் உங்கள் வெற்றி அதிகரிக்கும்.

பணம் சம்பாதிக்க ஆசை அதிகமாகும். பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெற முடியும்.

அக்டோபர் மாதத்தில் குரு ஆறாவது வீட்டிற்குள் நுழையும் போது உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும் மற்றும் உங்கள் செலவுகளையும் அதிகரிக்கும். அதன்பிறகு டிசம்பர் மாதத்தில் குரு ஐந்தாவது வீட்டில் வக்ர நிலையில் நுழையும் போது ​​​​நீங்கள் காதல் உறவுகளில் உள்ள சிக்கல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் நிதி சவால்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில், வேலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

குரு பார்வையின் பலன்கள்



ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக, முறையே ஒன்பதாம்  வீடு  , பதினொன்றாம்   வீடு மற்றும் ராசியை  பார்க்கிறார். அதாவது தகப்பனர் ஸ்தானம், லாப ஸ்தானம் மற்றும் , ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம் ஆகிய ராசியை பார்க்கிறார். மிகவும் சிறப்பு ஆகும்

குரு பகவான் உங்களின் ஒன்பதாம் வீடு, பதினொன்றாம் வீடு மற்றும் முதல் வீட்டைப் பார்த்து உங்களில் நல்ல மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

மேலும் இந்த பார்வைகள்  உங்களுக்குப் பலவிதத்திலும் ஏற்றம் தரும் . அதேசமயம் எதிலும் வீண் தர்க்கமும் வேண்டாத ரோஷமும் தவிர்த்தால், நன்மைகள் நீடிக்கும்.

மகர ராசி - குரு பெயர்ச்சி - 2025

  


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

ஐந்தாம் வீட்டில் இருந்து நல்ல பலன்களை தந்த  குருபகவான் மறைவு ஸ்தானமான ஆறாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இது நல்லது என்று சொல்ல முடியாது.என்றாலும் மகர ராசிக்கு  குரு மூன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார்.எனவே  ஒருபுறம் உங்கள் வேலையில் அதாவது தொழில்  நல்ல பலன்களைப் பெற முடியும்.

அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். என்றாலும்  மேலிடத்தின் ஆதரவு கிட்டும். உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடவேண்டாம். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை கட்டாயம் கேட்டக வேண்டும்.

வயிறு மற்றும் அமிலத்தன்மை, அஜீரணம், செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கொழுப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் கவனம் அவசியம்.

பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் பெரிய ஏற்றம் இருக்காது. பணம் பரிமாற்றத்தில் கவனம் அவசியம்.

குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். என்றாலும் வீட்டில் சுப நிகழ்வு தாமதப்படும்.

வாரிசுகளால் பெருமை சேரும். சகோதர உறவுகளிடம் வீண் சர்ச்சை வேண்டாம். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும்.

செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அயல்நாட்டு வர்த்தகத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் தங்கள் தொழில்  அலட்சியம் கூடாது. தரக்கட்டுப்பாட்டில் கவனம் தேவை. நிலம் தொடர்பான பழைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

பொதுவாக குரு பெயர்ச்சி 2025 உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் வருமானத்தில் அதிகரிப்பு மற்றும் உயர்வைக் காணலாம். உங்கள் முடிவெடுக்கும் திறன் நன்றாக இருக்கும்..

அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி நிச்சயம் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்திப் பேசவேண்டாம்.

மகர ராசி மாணவர்கள் சோம்பலை விரட்டினால், சாதனை செய்யலாம். வாகனத்தில் வேகம் கூடவே கூடாது.

வி.ஐ.பிகளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர், தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள்.

அக்டோபரில் குரு ஏழாவது வீட்டிற்குள் நுழைந்தவுடன், இவை அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார வளம் உண்டாகும். உங்கள் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். திருமண உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் அமையும். உங்கள் மனைவியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் முடிவெடுக்கும் திறனும் வலுவடையும் மற்றும் உங்கள் வியாபாரமும் முன்னேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.

வக்ர காலகட்டத்தில் டிசம்பர் மாதம் மீண்டும் ஆறாம் வீட்டில் குரு வக்ர நிலையில் நுழைவதால் உடல் நலக் குறைபாடுகளில் கவனம் தேவை.

குரு பார்வையின் பலன்கள்

ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக, முறையே பத்தாம்   வீடு  பன்னிரண்டாம் வீடு மற்றும் இரண்டாம்   வீடுகளை ,பார்க்கிறார். அதாவது தொழில் ஸ்தானம், விரைய ஸ்தானம் , வாக்கு,தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.

அதாவது  பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் சிறப்பாக இருக்கும். மேலும் இரண்டாம்  வீடு குருவின்  பார்வை பெறுவதால் குடும்ப வாழ்கையில் மகிழ்ச்சி இருக்கும். பொருளாதரத்தில் உள்ள பிரச்சனையின் தீவிரம் குறையும்.  வாழ்க்கை துணையின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு முறையே பத்து, பன்னிரண்டு, இரண்டாம் இடங்களை குரு  பார்ப்பதால் நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். என்றாலும் , நாவடக்கமும், உடல்நலத்தில் அக்கறையும் முக்கியம்.

தனுசு ராசி - குரு பெயர்ச்சி - 2025



இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு ராசி  மற்றும் நான்காவது வீட்டின் அதிபதி ஆவார். இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போதைய பெயர்ச்சியில் ஏழாம் இடத்திற்கு வருகிறார்.

பணியிடத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் வரும். என்றாலும்  சிலருக்கு அயல்பநாட்டு வாய்ப்புகள் கைநழுவிப் போகலாம், கவலை வேண்டாம். அது உங்களின் நன்மைக்காக இருக்கலாம். பொறுப்புகளில் நேரம் தவறாமை முக்கியம்.

திருமண உறவு இனிமையாக இருக்கும். உங்களுக்கும் உங்களின் வாழ்க்கை துணைக்கும் இடையே இருந்த சச்சரவுகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். பலகாலக் கனவுகள் நிறைவேறும்

குரு பெயர்ச்சி 2025 உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் வருமானத்தில் அதிகரிப்பு மற்றும் உயர்வைக் காணலாம். உங்கள் முடிவெடுக்கும் திறன் நன்றாக இருக்கும்.

எந்த தொழில் செய்தால் அதிலும் நல்ல வெற்றியை பெறலாம்.அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும்.

அதேசமயம் புதிய பொறுப்புகளும் அதிகரிக்கும். வேலைகளை திட்டமிட்டு, நேரம் தவறாமல் செய்து முடிப்பது முக்கியம். மேலும் நீங்கள் மூன்றாம் நபர் விஷயத்தில்  தலையிட வேண்டாம்.

இந்த குரு பெயர்ச்சியினால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். சிலருக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.

அரசுத் துறையினருக்கு செல்வாக்கு உயரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளும் அதனால் ஆதாயமும் வந்து சேரும்.

செய்யும் தொழிலில் பிரச்னைகள் குறையும். என்றாலும்  புதிய ஒப்பந்தக்களில் அவசரம் வேண்டாம். பிறர் கட்டாயத்திற்காக முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். சிலருக்கு திடீர்ப் பொறுப்புகள் திக்குமுக்காடச் செய்யும்.

பல வகையில் நன்மைகள் உண்டானாலும் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உங்களுக்கு கழுத்து, முதுகு, அடிவயிறு, இடுப்பு உபாதைகள் வரலாம். குல தெய்வ வழிபாடு அவசியம்.

அக்டோபரில் குரு எட்டாவது வீட்டிற்குச் செல்லும்போது, ​​நீங்கள் ஆழ்ந்த ஆன்மீக அனுபவங்களை அனுபவிக்கலாம். உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து  சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆனால் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். மேலும்  எதிர்களின் பலம்  அதிகரிக்கும். என்றலும் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

வக்ர காலகட்டத்தில் குரு மீண்டும் டிசம்பரில் ஏழாவது வீட்டிற்குள் நுழைவார். தற்போது திருமண உறவுகளில் பரஸ்பர நல்லிணக்கம் இல்லாததால் தொந்தரவு ஏற்படலாம் மற்றும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

குரு பார்வையின் பலன்கள்



ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவான்,தனது ஐந்தாம் பார்வை  தனுசு ராசியின் 9ம் வீட்டையும், ஏழாம்பார்வை   தனுசு ராசியின் ராசியை ,ஒன்பதாம் பார்வை 3ம் வீட்டையும் பார்க்கிறார். அதாவது தகப்பனர் ஸ்தானம் , உடல்  ஸ்தானம் மற்றும்  தைரிய  ஸ்தானம் பார்க்கறார்.

இந்த  குருபார்வை உங்கள் ராசியில் பதிவது விசேஷம். இந்த அமைப்பு உங்களுக்கு உன்னதமான பலன்கள்  அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். அதேசமயம் செயல்களில் நிதானமும் வாக்கில் இனிமையும் முக்கியம்.