Showing posts with label மிதுன ராசி. Show all posts
Showing posts with label மிதுன ராசி. Show all posts

மிதுன ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 


இந்த ராகு  கேது பெயர்ச்சியில்  ராகு,மிதுன ராசிக்கு   ராகு, 9ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மேஷ ராசியின்  3ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.


ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • மிதுன ராசியினருக்கு ராகு  கேது பெயர்ச்சியினால் எல்லாத் துறைகளிலும் வெற்றி கிட்டும் . தைரியமும் மன உறுதியும் அதிகரிக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்.  
  • பணியிடத்திலும் கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் மரியாதை கிடைக்கும். மேலும் வாட்டி வந்த நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் .  குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றத்தின் காலம் தொடங்கும்.
  • மிதுன ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் கேது அமர உள்ளார். இதன் காரணமாக எல்லா துறைகளிலும் சிறப்பான வெற்றி தேடி வரும். உங்கள் செயலில் வீரமும், தைரியமும் அதிகரிக்கும். 
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் காணலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • குடும்பத்தனருடன் போதிய நேரத்தை செலவழிப்பீர்கள். வீடு, வாகனம் வாங்கும்  கனவும் நிறைவேறும்.
  • பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அபாயகரமான எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். 
  • நண்பர்கள், உறவினர்கள், உடன்பிறந்தவர்களுடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
  • வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து உங்களின் கருத்துகளை பற்றி பேசவும். குழந்தைப் பேற்றிற்காக திட்டமிடும் தம்பதிகளுக்கு, சிறிது தாமதம் ஏற்படலாம். இந்த பெயர்ச்சியில் ஆரோக்கியம் மேம்படும். 
  • தந்தை மற்றும் இளைய உடன்பிறந்த உறவுகள் தேவையற்ற மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் உண்டு. சற்று விட்டு கொடுத்து போகவும்.
  • பங்கு சந்தை மூலம் நல்ல லாபம் மற்றும் ஆதாயம் உண்டு. இதனால் நிதிநிலை மேம்படும். என்றாலும் ஆடம்பரமாக வாழும் எண்ணம் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டும்.
  • தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவாக்க சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான இது சரியான நேரம் என்று தான் சொல்ல வேண்டும். 
  • கூட்டுதொழில் இந்த காலக்கட்டத்தில் நல்ல பலன் அளிக்கும். என்றாலும் ஆவணம் மற்றும் ஒப்பந்தப் பத்திரங்களில் கையொப்பமிடுவதற்கு முன் யோசித்து செய்ய வேண்டும்.
  • உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. சில கூடுதல் பொறுப்புகள் கூட வரலாம். உங்களின் திறமைகளை பயன்படுத்தும் நேரம் இது என்பதால் பயன்படுத்தி கொள்ளவும்.
  • வெளிநாட்டு வேலை, உயர்கல்வி அல்லது பயணம் மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதை உள்ளடக்கிய துறைகளில் வெற்றி உண்டாகும்.
  • சில சமயங்களில் ராகுவின் தாக்கம்  மன அமைதியையும் பொறுமையும் இழக்க செய்யும். இதனால் வழக்கமான பணிகளில் சிரமம் ஏற்படலாம். 3 ஆம் வீட்டில் கேது சில சமயங்களில் சக ஊழியர்களுடன் உறவுகளில்  பிரச்சனைகளை கொண்டு வரலாம். சனி மற்றும் குரு பெயர்ச்சியால் இந்த நிலையில் பெரிய பிரச்சினை இருக்காது. கவலை வேண்டாம்.

  • மிதுன ராசிக்கு ராகு ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால், நீண்ட தூரப் பயணங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. 
  • இந்த பெயர்ச்சியின் போது தந்தைக்கு சில உடல்நல பிரச்சனைகளால்  தொந்தரவு உண்டாகலாம். எனவே அவரது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்  மற்றும் தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி அவருக்கு சிகிச்சை அளிக்கவும்.
  • மனத்தில்  ஆடம்பர எண்ணங்கள் தோன்றும். எனவே சிக்கனத்தை நாட வேண்டும். இல்லையெனில்,  நிதி ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.
  • மேலும் இந்த  ராகுவின் பெயர்ச்சியின் விளைவாக பணித் துறையிலும் சில ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு  விரும்பாத இடத்திற்கு மாற்றப்படலாம். பொறுமையை கடை பிடிக்கவும்.
  • என்றாலும்  குறைவான உழைப்பைக் கொடுத்து அதற்கு இரட்டிப்பான பலன்களைப் பெறும் யோகம் உண்டாகும்.  புதிய வண்டி, புதிய வாகன யோகம் உண்டு.
  • சுபமான செய்தி வரும். வீட்டில்  திருமணம் உள்ளிட்ட   அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். புத்திசாலித்தனமாக  செயல்பட்டு நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். 

  • கேது  மூன்றாம் வீட்டிற்கு  பெயர்ச்சிக்கிறார்.கேது மூன்றாவது வீட்டில் பெயர்ச்சிப்பது சாதகமாக கருதப்படுகிறது. 
  • 3 ஆம் வீட்டில் உள்ள கேது தன்னம்பிக்கை மற்றும் தைரியமும் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையையும் முழு நேர்மையுடனும் கடின உழைப்புடனும் செய்வீர்கள். 
  • மனம் ஆன்மிகத்தில் ஈடுபடும். எனவே ஆன்மிக சுற்றலாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பிர்கள்.  மேலும் சில குறுகிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.  
  • உங்கள் பணியிடத்திலும், பணியிலும் மிகவும் ஆர்வம் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். 
  • இந்த காலகட்டத்தில், உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு சில உடல் பிரச்சனைகள் வந்து  தொந்தரவு செய்யலாம். எனவே உங்களின் உதவி அவர்களுக்கு தேவை படலாம். 
  • இந்தப் பெயர்ச்சியால்  நீங்கள் ஆசை பட்ட  சொத்துகளை வாங்குவீர்கள் .  மேலும்  3ம் வீட்டில் உள்ள கேது, பொறுப்பான செலவுகள், திட்டமிட்ட முதலீடுகளால் உங்கள் சேமிப்பை அதிகரிக்கும். 
  • வெளிநாட்டு சந்தைகளில் நீண்டகால முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள். மேலும் ஊக நிதிகளில் முதலிடு செய்யும் போது மிகவும் கவனம் அவசியம். முடிந்தளவு தவிர்க்கவும்.
  • மேலும் சுவாச அல்லது நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்கள் சற்று  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


மிதுன ராசி - குரு பெயர்ச்சி - 2025


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

மிதுன ராசிக்கு 12 வீட்டில் இருக்கும்  குரு பகவான், ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் ,பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக யோசித்து தான் செய்ய வேண்டும். திருமணத்திற்கு முயற்சி  செய்யும் மிதுன ராசிகாரர்களுக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும்.  ஜன்மத்தில் குரு வந்தால், எல்லாமே சங்கடம்தான் என்று சொல்வது உண்டு . புதன், குருவின் நட்பு கிரகம். எனவே நட்பு வீட்டுக்கு வரும் குரு நல்லதையே செய்வார் என்று சொல்லாம். இந்த அடிப்படையில்  உழைப்புக்கு ஏற்ப உயர்வுகளைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

கல்வி பயிலும்ம் மாணவர்கள் நல்ல இலக்குகளை அடைவார்கள். மேலும் அதிகமாக கற்றுக்கொள்ளவும் விரும்புவார்கள்.  திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் குறைவாக இருக்கும், மேலும் பரஸ்பர நல்லிணக்கம் மேம்படும். இது திருமண இன்பத்திற்கு வழிவகுக்கும். நன்மை பயக்கும் வணிக வளர்ச்சிக்கு வாய்ப்புகள் இருக்கும். சமூகத்தில் செல்வாக்கு மிக்க மற்றும் மதிக்கப்படும் நபர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். இதன் விளைவாக பொருளாதார வருவாய் அதிகரிக்கும் மற்றும் சமூக முன்னேற்றமும்  ஏற்படும்.

மேலும் 10 ம் வீட்டில் பெயர்ச்சியாகி இருக்கும் சனி பகவானும்  உங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக லாபகரமானதாக இருக்கும். தொழிலில் பெரும் வெற்றி கிடைக்கும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இந்த நேரத்தில், எதிர்பாராத பல நல்ல செய்திகளை வரும்.

சிலருக்கு ஒரு புதிய வணிக ஒப்பந்தம் கிடைக்கும். பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். ஆன்மீக பயணங்களும் செல்லும் வாய்ப்பு உண்டு என்று தான் சொல்ல வேண்டும். குடும்ப வாழக்கையில் இருந்த, பிரச்சனை குறைந்து, குடும்ப உறுப்பினர்களுடன் பரஸ்பர ஒற்றுமை உண்டாகும்.

என்றாலும் ஜென்ம குருவால் சில பிரச்சனைகளை குடும்பத்தில் பார்க்க நேரிடும்.அக்டோபர் மாதத்தில் குரு இரண்டாவது வீட்டிற்குச் செல்வதன் மூலம் பணம் தொடர்பான சிக்கல்கள் நீங்கும். செல்வம் சேரும்.   மற்றும் வேலையில் அதிக வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாகும். டிசம்பர் மாதத்தில் வக்ர நிலையில் உங்கள் ராசிக்கு குரு வருகையால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம் மற்றும் திருமண உறவுகள் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குரு பார்வையின் பலன்கள்



1ம் வீட்டிற்கு  அதாவது ஜென்ம ராசிக்கு  வரும் , குரு ,தனது 5, 7,ஒன்பதாம் பார்வையாக முறையே  5, 7,ஒன்பதாம்  வீடுகளை பார்க்கிறார். அதாவது புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானமாகிய   தகப்பனர்  ஸ்தானம் பார்க்கிறார். இது மிகவும் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

இது  குழந்தைகளைப் பற்றிய மிக நல்ல  செய்திகளைக் கொண்டுவரும். குழந்தையைப் பெற விரும்புபவருக்கு , அவர்களின்  ஆசை நிறைவேறும்.  கல்விப் படிப்பில் வெற்றி கிட்டும்.

ஜென்ம குரு என்றால் உறவுகள் மேம்படும். எனவே உங்களின் மரியாதை அதிகரிக்கும். 7ம் வீட்டை குரு பார்ப்பதால் நெருங்கிய உறவுகளில் புரிதலையும் வளர்ச்சியையும் கொடுக்கும். மேலும் காதல் உறவுகள் வலுப்படும்.வாழ்க்கை துணையுடன்நல்லுறவு இருக்கும்

இந்த குருவின் பார்வையால் நிலையான வருமான வளர்ச்சி உண்டு என்றாலும் பண வரவு சற்று திருப்திகரமாக இருக்காது. தொழில் முன்னேற்றங்கள் அல்லது புதிய கூட்டு  தொழில்  மூலம் நிதி வளர்ச்சி ஏற்படலாம். பணத்தை சேமித்தல், திட்டம் போட்டு செலவுகள் கட்டு படுத்தல் ஆகியவை மிகவும் முக்கியம்



சனி பெயர்ச்சி- 2025- மிதுன ராசி


மிதுன  ராசிக்கு கர்ம சனி ஆரம்பம்.

கர்ம சனி சனி என்றால் என்ன?

  • சனி பகவான் ஜீவ காரகன் மற்றும் கர்ம அதிபதி. ஆதலால் கர்மாவை நிர்ணயிப்பதில் சனி பகவானுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஒரு ராசிக்கு 10ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்ம சனி என்று அழைக்கப்படும். 10ஆவது இடம் என்பது கர்ம ஸ்தானம் அல்லது தொழில் ஸ்தானம் ஆகும்.
  • கர்ம சனியைப் பொறுத்த வரையில் நன்மைகள் பெரும்பாலும் நடக்காது என்று தான் சொல்லப்படுகிறது. கர்மச் சனி காலங்களில் நன்மைகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும், தீமைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.
  • பல தடை, தாமதங்களைத் தாண்டி தான் வாழ்க்கையில் முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். ஆனால் கிடைக்கும் என்பது தான் சிறப்பு அம்சம் ஆகும்.
  • சிலருக்கு அடிமையாக இருக்க கூடிய சூழல் கூட உருவாகலாம். திடீரென்று வேலை போகும்.தொழிலில் கடினமான சூழல் இருப்பினும் லாபம் உண்டாகும்.
  • உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஜீவனத்தில் பிரச்சனை கூட வரலாம். பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். நிதி நெருக்கடியால் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பம். பிரச்சனை மேல் பிரச்சனை வரலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
  • பயப்பட வேண்டாம். இந்த கர்ம சனி பொறுப்புணர்ச்சி அதிகரிக்க செய்யும். பயனுள்ள காரியங்களைச் செய்ய துண்டும்.
  • திறமையை பயன்படுத்தி கடினமாக உழைப்பதன் மூலம் முயற்சிகளுக்கான பாராட்டும் அங்கீகாரமும்கட்டாயம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும். அது போல் சனி எந்த ராசிக்கு கர்ம சனியாக வருகிறார் என்பதை பொறுத்து நல்ல பலன்களை வாரி வழங்குவார்.

பொது கண்ணோட்டம்

  • சனி பெயர்ச்சிக்கு பிறகு மிதுன ராசிக்கு கர்ம சனி ஆரம்பகிறது. மிதுன ராசிக்கு சனி அஷ்டமாதிபதியாக இருந்தாலும், அவர்தான் பாக்கியாதிபதியும் ஆவரே. பாக்கியாதிபதி ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் வீட்டுக்கு வருவது தர்ம கர்மாதிபதி யோகம். அதனால் ..
  • என்றாலும் 2025 முதல் ஜூன் 2025 வரை, எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் உங்கள் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் பல விஷயங்கள் தவறாக நடக்கக்கூடும். உடல்நலப் பிரச்சினைகள், அதிகரித்த மன அழுத்த நிலைகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம்.
  • படிக்கும் மாணவர்கள் நண்பர்களின் விசயங்களில் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ,  நல்ல  முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும். பல விஷயங்கள்  சாதகமாக மாறத் தொடங்கும், மேலும் கடின உழைப்பு பஏற்ற பலன் உண்டு. ஆச்சரியப்படும் விதமாக,  விரும்பும்  கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைக்கும்.  உங்கள் சாதனைகளைப் பற்றி  குடும்பத்தினர் பெருமைப்படுவார்கள்.
  • இது நாள் வரை கைகூடாத முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உங்கள் திறமையை அனைவரும் பாராட்டி அங்கீகரிப்பார்கள். பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தைரியம் அதிகரிக்கும்.
  • உள்நாடு மற்றும் வெளிநாடு இரண்டிலும் சிறப்பான வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உறுதியாக நடக்கும்.
  • என்றாலும் 10ம் இடத்தில்  இருக்கும் சனி தனது 3,7,10ம்  பார்வையாக 2, 4 மற்றும் 7 ஆம் வீடுகளை பார்ப்பார். சனி பார்வை துக்கத்தின் தரத்தை குறைக்கும். மேலும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு இடையூறுகளையும் தரும்.
  • தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் கடின உழைப்பு அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்
  • குடும்ப உறவுகள் இனிமையாக இருந்தாலும் சில சமயங்களில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். மனதில் சில குழப்பங்கள் உண்டாகலாம், ஆனால் உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும். மேலும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த பணம் விரைவில் வந்து சேரும்.
  • குடும்பத்தில், குறிப்பாக மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து, ஒற்றுமை நிலவும்.
  • பலருக்கு வேலை செய்யும் இடத்தில் இடத்தில் ஏற்பட்டு வந்த அழுத்தங்கள் குறைந்து, சாதகமான  சூழல் அமையும்.
  • பொதுவாக தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது உங்களுடைய மதிப்பை உயர்த்தும்.
  • தாய் வீட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சம வயதினரிடம் போட்டி மனப்பான்மையை விட்டுவிட்டு அன்புடன் பழக வேண்டும்.

குடும்ப வாழ்க்கை

  • திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை கண்டு கொள்ளலாம். திருமணம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கைகூடும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும்.
  • தந்தையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் தாயுடன் சுமுக உறவை பராமரிப்பது கடினமாக இருக்கலாம். எனவே பொறுமையாக செயல்பட வேண்டும்.
  • சனி 7ம் வீட்டை பார்ப்பதால், வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். வெளி ஊர் பயணங்களால் குடும்பத்தை பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம்.
  • எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம். ஜூலை 2026க்கு மேல் சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், புதிய வீட்டை வாங்கிச் செல்வதற்கும் சிறந்த நேரம் என்று சொல்லாம்.
  • காதலில் இருப்பவர்கள் 2026ம் ஆண்டின்  முதல் பாதியில் உணர்ச்சி, அதிர்ச்சி, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படலாம்.
  • என்றாலும் பிற்பகுதியில் நல்ல சுமுகமான வாய்ப்புகள் வரும். அதை கவனமாகப் பயன்படுத்திக் கொள்வதும், உறவைப் பாதுகாக்க விரைவில் திருமணம் செய்யது கொள்ளவது
  • இந்தக் காலகட்டம் திருமணத்திற்கு ஒரு நல்ல காலமாகும் பெற்றோர்களின் சம்மந்தமும் கிடைக்கும் எனலாம்.
  • மிதுன ராசி பெண்களை பொறுத்தவரை தாயுடன் சிறிய சண்டைகள் ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • தம்பதியினர் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, மனதில் ஏற்படும் குழப்பங்களை வெளிப்படுத்தி தீர்வு காண்பதால் மன நிம்மதி கிடைக்கும் என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.
  • உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும். வீட்டில் சில மாற்றங்களை மேற்கொள்ள விரும்பும் நிலை உண்டாகலாம்.
  • வெளியூர் பயணத்தின் போது கவனம் அவசியம்
  • பொதுவாக, சனி பகவான் பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும். ஆனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள்  ஏற்படும்.

>ஆரோக்கியம்

  • இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் சந்திக்கும் , சாத்தியம் உண்டு. எனவே ஆரோக்கியத்திற்கு மிகுந்த  முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
  • மேலும் தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
  • வயதான மிதுன ராசிக்காரர்களின் உடல் நிலை சீராக நேரம் எடுக்கலாம். குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது அவசியம்.
  • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யும் சூழ்நிலை வரலாம். அறுவை சிகிச்சை அவசியமா என்று நன்கு ஆராய்ந்து பிறகு முடிவு எடுக்கவும்.
  • உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை கட்டாயம் தேவை.
  • ஜூலை 2025 மற்றும் நவம்பர் 2025 மாதங்களுக்கு இடையில்குடும்பத்தில் உள்ள  வயதானவர்கள், குறிப்பாக பெற்றோரின் ஆரோக்கியத்தை அக்கறை மிக அவசியம்.
  • என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும். இந்த சனி பெயர்ச்சியை பொறுத்தவரை, உடல் ஆரோக்கியத்தில் , சோதனையான கட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்  என்று சொல்ல முடியாது .

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழம். பணிபுரியும் இடத்தில் இருந்த அழுத்தங்கள் மற்றும் மனக்கசப்புகள்  குறையத் தொடங்கும்.
  • சக ஊழியர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகும். பணி மாற்றம் தொடர்பான தாமதங்கள் நீங்கி, எதிர்பார்த்த பதவியை பெறலாம்.
  • அதே போல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஊதியம் விரைவில் கிடைக்கும். நீதித்துறை சார்ந்த விஷயங்களில்  நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • பொதுவாக உத்யோகத்தில் நல்ல உயர்வு, மாற்றம் வரும். பதவி, சம்பளம் உயர்வு வரும்.
  • சொந்தத் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். கூட்டாளிகளுடன் நெருக்கமாகப் பழகி, சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் வியாபாரத்தை சிறப்பாக்க முடியும்.
  • வாகன சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். கைத்தொழில் செய்பவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் என்றாலும் வருமானம் சுமாராக தான் இருக்கும்.
  • சமூக சேவை துறையில் உள்ளவர்களுக்கு பொதுமக்களின்  ஆதரவை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு  தொண்டர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகி ஒற்றுமை ஏற்படும். பொறுமையாக இருந்து தொடர்ந்து உழைப்பதன் மூலம் வெற்றி கட்டாயம் கிடைக்கும்.
  • உத்தியோகத்தை பொறுத்தவரை முன்னேற்றங்கள் இருந்தாலும் சில சவால்களை சந்திக்க நேரும். எனவே  கடின உழைப்பு அவசியம் தேவை.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும் என்றாலும் மிகுந்த  கவனமுடன் செயல்பட வேண்டும். முதலீடு மட்டும் இன்றி பணம் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. முதலீட்டில் புதியவர்களை நம்புவதை தவிர்க்கவும்.
  • என்றாலும் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும். திடீர் நிதி ஆதாயங்கள்  ஏற்படும். செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும்.
  • சனி பகவான்பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும் என்று தன் சொல்ல வேண்டும்.
  • பொதுவாக சனி பெயர்ச்சி 2025 போது மிதுன ராசிகார்ர்களின்  தொழிலில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும்.

பரிகாரம்

  • சனிக்கிழமையன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தானம் செய்வதும், முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்வதும் நல்லது.
  • சனிக்கிழமைகளில் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும் செய்தால் கர்ம சனியின் சிரம்மங்கள் குறையும்
  • சனி காயத்ரீ மந்திரத்தை 108 உச்சரிப்பதால் சனி பகவானின் அருள் பெறலாம்.
  • சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்த்து, நாய்கள், பறவைகளுக்கு முக்கியாக காக்கைக்கு உணவு கொடுக்கலாம்.
  • மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நிதி நிலையில் உள்ள சிரமங்கள் குறையும்.
  • யோகா மற்றும் தியானம் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.