கார்த்திகை / கிருத்திகை

நட்சத்திரம் -கார்த்திகை


இருபத்தேழு நட்சத்திரங்களில் 3வது நட்சத்திரமாகவும், சூரியனின் முதல் நட்சத்திரமாக வருவது கார்த்திகை ஆகும். இந்திய ஜோதிடப்படி கால்பகுதி மேஷ ராசியிலும், முக்கால் பகுதி ரிஷப ராசியிலும் வருகிறது. அதாவது கிருத்திகை நட்சத்திரத்தின் 1ம் பாதம் மேஷ ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். மேலும் எளிதில் யாரும் வெறும் கண்ணால் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடியது. இதனுடைய அறிவியல் பெயர் எம்45 ஆகும். சாதாரண வழக்கில் பேசப்படும் பெயர் பிலேயடாசு ஆகும்.

பொருள்: கார்த்திகை ஆறு நட்சத்திரங்களைக் கொண்டது. அது உச்சத்தில் வரும்போது சிங்கராசி (கீழ்வானத்தில்) தோன்றி ஒரு நாழிகையாகி இருக்கும்.

வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. கார்த்திகை குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

                       கார்த்திகை யறுமீன் ஏற்றரியேகம்.

பொருள்: மூன்று நட்சத்திரங்கள் அடுப்பு போல அமைந்திருக்கும். இது உச்சத்திற்கு வரும் போது கடக ராசி உதித்து நான்கு நாழிகை ஆகியிருக்கும்.


நட்சத்திர காரத்துவம்


ஆளும் உறுப்புகள்

1 - ம்: முகம், கழுத்து, தாடை.2, 3, 4 பாதங்கள்: - முகம், கழுத்து, தாடை.

பார்வை

கீழ்நோக்கு.

பாகை

26.40 - 40.00

நிறம்

சிவப்பு

இருப்பிடம்

சூன்யப் பிரதேசம், காடு

கணம்

ராக்ஷஸ கணம்

குணம்

மிஸ்ரம்/சாதாரணம்

மிருகம்

பெண் ஆடு

பறவை

மயில்

மரம்

பாலுள்ள அத்தி மரம்

மலர்

மல்லிகை

தமிழ் அர்த்தம்

வெட்டுவது

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

வாம பார்சுவ நாடி, அந்த்யா நாடி

ஆகுதி

அன்னம்

பஞ்சபூதம்

நிலம்

நைவேத்யம்

தயிர் சாதம்

தேவதை

முருகன்

அதி தேவதை

அக்னி (இரண்டு முகங்களும் நான்கு கரங்களும் சிவந்த நிறமும் வாய்த்த அக்னி பகவான்)

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி. சதயம், பூசம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம்

அதிபதி

சூரியன்

நட்சத்திரம் தன்மைகள்

பெண் நட்சத்திரம், மிஸ்ர நட்சத்திரம், அந்தரங்கம் நட்சத்திரம்

உருவம்

கத்தி,கற்றை, வாள், தீஜ்வாலை, சவரக்கத்தி, சாவி, மண்வெட்டி

மற்ற வடிவங்கள்

தீக்கொழுந்துகள் எரிவது போன்ற வடிவமுடைய ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டம்.

மற்ற பெயர்கள்

எரி, அங்கி, ஆரல், அளவு, இனால், அழல், அறுமீன் 

வழிபடவேண்டிய தலம்

 காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில், கஞ்சா நகரம்

அதிஷ்ட எண்கள்

 1, 6, 9

வணங்க வேண்டிய சித்தர்

ரோமரிஷி சித்தர்

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

அ, இ, உ, எ

அதிஷ்ட நிறங்கள்

 மெரூன், வெளிர்சாம்பல்

அதிஷ்ட திசை

கிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

ஞாயிறு, வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

ரூபி

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணிஅஸ்தம்திருவோணம்சுவாதி. சதயம்பூசம்உத்திரட்டாதிஅசுவினிமகம்மூலம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

கார்த்திகேயன்

குலம்

 பிரம்ம குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்

பொதுவான குணங்கள்:

”‘தேஜஸ்வி...” அதாவது அழகானவர்கள் என்று யவன ஜாதகப் பாடலும், 'மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்' என்று பிருகத் ஜாதக நூலும், ‘கொள்ளும் ரச வர்க்கத்தில் பிரியன்; அற்ப நித்திரையன்; கூறுஞ் செஞ்சொல்...’ அதாவது இனிப்பை விரும்பி உண்பவர், ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர், அரசர்களுக்கு பிரியமானவர் என்று ஜாதக அலங்கார நூலும் இந்த நட்சத்திரத்தின் குணத்தை கூறுகிறது. கனவுலகத்தில் சஞ்சரிப்பது எல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள். தன் சக்திக்கு எது முடியுமோ அதை மட்டும் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலித்தனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். காரசாரமான விவாதங்களில் இவர்களுக்கு நிகர் இவர்களே. பசியை கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உணவு வகைகளை ரசித்து ருசித்து உண்பார்கள்.


குடும்ப வாழ்க்கை:

இந்த நட்சத்திரக்காரர்கள் காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். பொதுவாக காதல் விவகாரத்தில் ஒதுங்கியே இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் கராராக நடந்து கொள்வார்கள். ஆனால் வாழ்க்கை துணையிடம் அதிக நம்பிக்கை வைத்து இருப்பார்கள். பொதுவாக இவர்களுக்கு மனமொத்த வாழ்க்கைத் துணையே அமையும். வாழ்க்கை துணை, பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்பார்கள். தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள். அதிகமாக தெய்வ பக்தி உண்டு. ஆனால், தெய்வ பக்தியை காட்டிலும் தாய், தாய் நாடு, தாய்மொழியின் மீது அதிக பாசம் இருக்கும். 33 வயதிற்கு மேல் வாழ்வில் நல்ல ஏற்றம் உண்டாகும்.


நண்பர்கள்:

நண்பர்களிடம் மிக உண்மையாக இருப்பார்கள். அதேசமயம் நண்பர்கள் துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தாலும் அவர்கள் சுயநலகாரர்களாகவே அமைவார்கள்.


நட்பு நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் அதிக நன்மைகளை தரும். இந்த நட்சத்திரக்காரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். அஸ்வினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம் இந்த ஆறு நட்சத்திரங்களும் நன்மை தருவதாக இருக்கும்

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திர நாட்களில் சொத்துக்கள் வாகனங்கள் வாங்கவும். லாபகரமாக விற்பதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு சிறந்தது. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் தொழில் தொடங்க தேவையான கடன் உதவி பெறவும், வீட்டுக் கடன் வாங்கவும், கடன்களை திரும்ப அடைக்கவும் நல்லது. பொதுவாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரகாரர்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையாக வந்தாலும் அவஸ்தைகள் உடன் வாழ வேண்டும். இந்த நட்சத்திர நாட்களில் புதிய முயற்சிகள் செய்யக்கூடாது, பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. அறுவை சிகிச்சை செய்யக்கூடாது.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரகார்களுக்கு உங்களால் நன்மை அவர்களுக்கு உண்டு ஆனால் இவர்களுக்கு அவர்களால் எந்த நன்மையையும் கிடைக்காது. ஆயில்யம், கேட்டை, ரேவதி இவர்களுடன் ஏன் பழகினோம் என்று வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படும்.

வேதை என்னும் நெருப்பாய் இம்சை தரும் நட்சத்திரம்- விசாகம். முழுமையாக தவிர்க்க வேண்டும்.


தொழில்:

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். எனவே வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், நாட்டுக்காக அர்பணிக்கும் தொழிகளை செய்யலாம். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் செய்ய மாட்டார்கள்.


தசா பலன்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய தசை வரும். சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம்.

சூரிய தசை:
சூரிய தசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களையும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் பாதிப்புகள் குறையும்.
சந்திர தசை:
இரண்டாவது தசையாக வரும் சந்திர தசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறுபாடு மற்றும் ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் சுபர் பார்வை சேர்க்கையுடன் சந்திரன் இருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
செவ்வாய் தசை:
3வதாக வரும் தசை செவ்வாய் தசை, இது 7 வருடங்கள் நடைபெறும். இந்த தசா காலத்தில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும். ஆனால் முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.
ராகு தசை:
ராகு தசை 18 வருடங்கள் நான்காவது தசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஆனால் பொதுவாக சூரியனுக்கு ராகு பகை. எனவே இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய பிரச்சினை, மருத்துவ செலவுகள் போன்றவை அனுபவிக்க வேண்டி வரும். ராகு நல்ல பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றால் மிகுந்த நல்ல பலன்களை வாரி வழங்குவார் என்பது உண்மை.
குரு தசை:
குரு தசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆனாலும் நோய்கள், சிலருடன் விரோதங்கள், வீட்டில் சிறு சிறு சண்டைகள் ஏற்படும்
சனி தசை:
ஆறாவதாக வரும் சனி தசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என்பது எந்த ஐயமும் இல்லை.
பொது பரிகாரம்

கார்த்திகை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பரணி நட்சத்திரம் வரும் நாளில் அதாவது பரணி நட்சத்திரத்தில் கடன்களை பைசல் செய்ய, சிலம்பாட்டம் பயில சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள பழைய வாகனங்களை விற்பது, கிணறு மற்றும் சுரங்கம் வெட்டுதல், மனை விற்றல் போன்ற காரியங்களை செய்யலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது கார்த்திகை நட்சத்திரத்திற்கு

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வினி, பரணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

மிருகசிரீஷம், புனர்பூசம், ஆயில்யம், கேட்டை, அவிட்டம், புரட்டாதி, ரேவதி பொருந்தா நட்சத்திரங்கள் ஆகும். விசாகம் வேதையாகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

சண்முக காயத்திரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்


4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

கார்த்திகை 1ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு


முதல் பாதத்திற்கு நவாம்ச அதிபதியாக குரு இருப்பதால், இதில் பிறந்தவர்கள் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். ஆனால் செல்வத்தையும், புகழை விரும்புபவர்கள். அதையும் சேர்ப்பார்கள். நல்ல ஞானத்துடன் தந்திரத்தால் வெல்பவர்கள். ஆனால் கல்வியில் அதிக பற்று இருக்காது. சுய கௌரவம் அதிகமாக இருக்கும். முன் கோபம் அதிகமாக இருக்கும்.

கார்த்திகை 2ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி


நராசி நாதனாக சுக்கிரன் ஆள்வதால் இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் பரந்த மனதுடன் பழகுவார்கள். எல்லோரையும் எளிதாக நம்புவார்கள். அதனால் ஏமாறவும் செய்வார்கள். இந்தப் பாதத்திற்கு சனி பகவானின் அம்சம் உண்டு. இதில் பிறந்தவர்கள் ஆசை, பாசம், பற்றுள்ளவர்கள். உயரிய நோக்கங்களை அடைய போராடுபவர்கள். வீரம் மிக்கவர்கள், தற்பெருமை கொள்பவர்கள். ஆசார அனுச்டங்களிலும், வேத சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் நம்பிக்கை இல்லாதவர்கள். சிலர் மிகுந்த மூர்க்க தனத்துடன் இருப்பார்கள். கல்வி, கலைகளை பயிலுவதில் ஆர்வம் இருக்கும்

கார்த்திகை 3ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி


இந்த பாதமும் சனி பகவானின் அம்சம் உடையது. இதில் பிறந்தவர்களுக்கு பேராசை, பணவெறி, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற விடாமுயற்சி, கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பு போன்றவை இருக்கும். பிறருக்கு உபத்திரம் செய்யும் குணமும், மெதுவான குணமும் (புத்தி குறைவு) இருக்கும். வேடிக்கை, விளையாட்டில் இளமை கழிப்பார்கள். கூடா பழக்கவழக்கங்களுக்கு ஆளாக நேரும்.

கார்த்திகை 4ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு


இந்த பாதம் குருவின் ஆதிக்கம் உடையது. அடக்கம், ஒழுக்கம், நட்பு, பாசம் போன்ற நல்ல இயல்புகள் இதில் அடங்கும். தர்ம சிந்தனையும், இரக்க குணமும், தெய்வ பக்தியும் ஆகியவை இருக்கும். ஆனால் ஏழ்மை, ஆரோக்கிய குறைபாடு இருக்கும். மற்றும் பிறருடன் சண்டை செய்பவராகவும், கல்வியில் ஊக்கம் குறைந்தும் காணப்படும்.

இவையாவையும் பொது குணங்களே. இவை நல்ல கெட்ட கிரக பார்வைகளாலும், சேர்க்கைகளாலும் மாறுபடும். மேலும் லக்கினத்தை வைத்து தான் முழுவதையும் கணிக்க முடியும்

பரணி

நட்சத்திரம் - பரணி


பரணி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் ஆகும். இது ஒரு மங்கலான நட்சத்திரம். பரணி நட்சத்திரம் மூன்று நட்சத்திரங்களுடன் முக்கோண வடிவத்தில் காணப்படும்

வடமொழியில் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் பரணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

                       பரணி மும்மீன் அடுப்புப் போல,
                       திரண்மிகு கடகத்தொரு நாற்காலாம்

பொருள்: மூன்று நட்சத்திரங்கள் அடுப்பு போல அமைந்திருக்கும். இது உச்சத்திற்கு வரும் போது கடக ராசி உதித்து நான்கு நாழிகை ஆகியிருக்கும்.


  1. ஆளும் உறுப்புகள்: தலை, மூளை, கண் பகுதி

  2. பார்வை: கீழ்நோக்கு

  3. பாகை: 13.20 - 26.40

  4. தமிழ் மாதம: ் சித்திரை

  5. நிறம்: வெண்மை

  6. இருப்பிடம்: கிராமம்.

  7. கணம்: மனுஷ கணம்

  8. குணம: ் உக்கிரம்

  9. மிருகம: ் ஆண் யானை

  10. பறவை: காக்கை

  11. மரம்: பாலில்லாத நெல்லி

  12. மலர்: கருங்குவளை

  13. தமிழ் அர்த்தம்: தாங்கிப்பிடிப்பது

  14. தமிழ் பெயர் : அடுப்பு

  15. சராதி நட்சத்திரப்பிரிவுகள்: ஸ்திரம்

  16. நாடி: மத்திம நாடி, பித்தம்

  17. ஆகுதி: தேன், எள்

  18. பஞ்சபூதம்: பூமி

  19. நைவேத்யம்: வெல்ல அப்பம்

  20. தேவதை: சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தர்மதேவன் - எமன்.

  21. அதி தேவதை: துர்கையம்மன்

  22. அதிபதி: சுக்கிரன்

  23. நட்சத்திர தன்மைகள்: பெண் நட்சத்திரம், சவ்விய நட்சத்திரம்

  24. உருவம்: முக்கோண வடிவ நட்சத்திரக் கூட்டம்.

  25. மற்ற வடிவங்கள்: யோனி,அடுப்பு,முக்கோணம்

  26. மற்ற பெயர்கள்: அட்டுதல், சுதிதலம்,தாழி, தராசு, பூதம், சுங்கல், கிழவன், சேறு

  27. வழிபடவேண்டிய தலம்: தன்வந்திரி, ஸ்ரீ ரங்கம்

  28. அதிஷ்ட எண்கள்: 2, 6, 9.

  29. வணங்க வேண்டிய சித்தர்: ரிஷிபத்தன்யா

  30. பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் : லீ, லு, லே, லோ

  31. அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வெள்ளை

  32. அதிஷ்ட திசை: தென்கிழக்கு

  33. அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

  34. அணியவேண்டிய நவரத்தினம்: வைரம்

  35. அதிஷ்ட உலோகம் : வெள்ளி

  36. வெற்றி தரும் நட்சத்திரங்கள் : உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

  37. நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்: துரியோதனன், மகேந்திரவர்ம பல்லவன்.

  38. குலம்: நீச்ச குலம்

  39. புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்: ஆர்த்தம்

பொதுவான குணங்கள்

பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவர்களை கவர கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். நட்சத்திர மாலை எனும் நூலில், ‘தானங்கள் பலவுஞ் செய்வான்; தந்தை தாய்தனைப் பேணும்...’ என்று பரணி நட்சத்திரக்காரர்கள் குணத்தை குறிப்பிடுகிறது. தாயையும் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காப்பார்கள். மேலும் அதாவது தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும் ஆனால் சுயநலம் அதிகமாக இருக்கும். வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு, சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம், தோல்வியைத் தாங்கமுடியாத பயம், பாசமும் நேசமும் உள்ள பண்பு ஆகிய குணங்களை பெற்று இருப்பார்கள்.

அழகாக உடை உடுத்துவது, அணிகலன்களை அணிந்து கொள்வது மற்றவர்களின் பார்வை எப்பொழுதும் தான் மீது படும்படி நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். நடனம், பாட்டு, இசை இவற்றிலும் அதிக ஈடுபாடு இருக்கும்.

எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க கூடிய இயல்பு கொண்டவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கு போனாலும் சமயம் வரும்போது சரியாக காலை வாரி விடுவார்கள். சாதுவாக இருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பார்கள். புத்தகப் புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமுண்டு.


குடும்ப வாழ்க்கை

“பரணி, தரணி ஆளும்” என்ற பழமொழிக்கு ஏற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். வாழ்க்கை துணை, பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல பாதுகாப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதோடு சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது

குடும்பத்தை அதிகம் நேசிப்பார்கள். மேலும் அவர்கள் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க விரும்ப மாட்டார்கள் குடும்பத்தாரின் தேவைகளை தீர்ப்பதையே முக்கியமாக கருதி அதிக பணத்தை செலவழிப்பார்கள். வாழ்க்கை துணையிடம் இருந்து அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெற்று அழகான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

நண்பர்கள்

நண்பர்களை விட குடும்பத்தை அதிகம் நேசிப்பார்கள். சுற்றியிருப்பவர்களை எப்போதும் சிரிக்க வைப்பார்கள். உல்லாசப் பயணம் போவதென்றால் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மலை, அருவி, பூங்காவைப் பார்த்தால் அதனுடன் ஒன்றியும் போவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் ஆதாயம் தரக்கூடிய, ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களாக அமைவார்கள்.

மிருகசீரிடம், சித்திரை நட்சத்திர நண்பர்களால் லாபம் தரக்கூடிய நட்பு சாத்தியமாகும் என்பது உறுதி.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கை துணையாக வருவது மிகுந்த நன்மையைத் தரும். நட்பாக இருந்தாலும் மிக உத்தமமான பலன்களும் பலமும் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி,சதயம். இவர்கள் உங்களிடம் பழகுவதே உங்களிடம் ஆதாயம் பெறுவதற்காக மட்டுமே. ரோகிணி, அஸ்தம், திருவோணம். தவிர்ப்பதே நல்லது. பூசம், அனுஷம், உத்திரட்டாதி இந்த நட்சத்திரக்காரர்கள் நெருங்கிய உறவாக, வாழ்க்கைத் துணையாக இருந்துவிட்டால் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

தொழில்

பெரிய பதவியை எளிதாக அடைவார்கள். உங்களுக்குக் கீழே இருப்பவர்களை சாதுர்யமாக வேலை வாங்குவதுடன் சலுகைகளை வாரி வழங்குவார்கள். மூடக்கூடிய நிலையில் உள்ள நிறுவனமாக இருந்தாலும், பொறுப்புடன் போராடி அதனை நல்ல உயர்நிலைக்கு கொண்டு வருவார்கள். மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.

வயதான காலத்திலும் கௌரவப் பதவிகள், சமூகப் பொறுப்புகள் வரும்

தசா பலன்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை முதல் தசையாக வரும். மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சுக்கிர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சுக்கிர தசை:
பிறக்கும் போதே சுக்கிர தசை என்பதால் இளமை வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று அமைந்தோ இருந்தால் மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியில் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

சூரிய தசை:
இரண்டாவது தசையாக வரும் சூரிய தசை 6 வருட காலங்களில் சுமாரான நற்பலன்களைப் பெற முடியும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள்

சந்திர தசை:
மூன்றாவதாக வரும் சந்திர தசை 10 வருடம் நடைப் பெறும். இந்த தசையில் சற்று மனக்குழப்பம், ஜல தொடர்புடைய பாதிப்புகள் கொடுக்கும். சற்று சிரமப்பட்டு முன்னேற வேண்டியிருக்கும்.

செவ்வாய் தசை:
7 வருடங்கள் வரும் செவ்வாய் தசையில் பூமி மனை வாங்கும் யோகம் வாழ்க்கை துணை வழியில் அனுகூலம் உண்டு. இது மிகவும் நல்ல தசை என்றே கூறலாம்

ராகு தசை:
ராகு தசை 6வது தசையாக 18 வருடங்கள் நடைபெறும் ராகு தசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், செல்வம் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெற முடியும்.

குரு தசை:
ஆறாவது தசையாக வரும் குரு திசை. இதை பரணி நட்சத்திரகாரர்களுக்கு மாரக தசை ஆகும். ஆனால் குரு தசை காலங்களில் குரு முன்னேற்றத்தை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குரு சிறப்பாக இருந்தால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்ய கூடிய அமைப்பு தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.

மேற்கூறிய அனைத்து தசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பொது பரிகாரம்

பரணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் நெல்லி மரமாகும். நெல்லி மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பரணி நட்சத்திர நாளில் அதாவது பரணி நட்சத்திரத்தில் இசை, ஓவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்குதல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல், நடன அரங்கேற்றம் செய்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், மூலிகை செடிகளை பயிரிடுதல் மற்றும் ரோஜா உள்ளிட்ட முற் செடிகளை நடுவது போன்றவை மிகவும் நல்லது.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது அஸ்வனி நட்சத்திரத்திற்கு


பொருந்தும் நட்சத்திரங்கள்:

அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், மகம், சித்திரை 3, 4, விசாகம், மூலம், உத்திராடம், ரேவதி


பொருந்தா நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூசம், பூராடம் அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரஜ்ஜு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் கார்த்யாயின்யை ய வித்மஹே
சன்ய குமாரி தீமஹி
தள்நோ துர்கி பிரசோதயாத்



4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

பரணி1ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சூரியன்


பருத்த உடலுடன், நல்ல குணம் மற்றும் நல்ல செய்கையுடனும், நன்றியுடனும் இருப்பார்கள். எதிரிகளை சுலபமாக வெற்றி கொள்வார்கள். ஆனால் காம பிரியராகவும், அகங்கார குணத்துடனும் இருப்பார்கள்.

நவாம்ச அதிபதியாக சூரியன் இருப்பதால் ராஜ தந்திரம் அதிகம் இருக்கும். மேலும் தெரியாத விஷயமாக இருந்தாலும் அறிந்தவரை போல அதனுடைய சிறப்பை விளக்கி மற்றவர்களை நம்ப வைத்துவிடும் சாமர்த்தியம் இருக்கும்.

பரணி2ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி புதன்


நல்ல திறமைகள், மற்றவர்களை புரிந்து கொள்ளும் தன்மை, நல்ல பழகும் குணத்துடன் இயல்பாகவே தானம் தர்மம் செய்யும் குணத்தை பெற்று இருப்பார்கள். எதிரிகளை வெல்லும் ஆற்றல் பெற்று இருப்பார்கள். மேலும் மற்றவர்களால் புகழும், கீர்த்தியும் பெறுவார்கள்.

நவாம்ச அதிபதியாக புதன் இருப்பதால் எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவதுடன் புத்தி கூர்மையால் எந்த வேலையையும் செய்து முடிக்கும் வல்லமை பெற்று இருப்பார்கள். ஆனாலும் சோம்பலுடன் அதாவது சோம்பேறியாக இருப்பார்கள்.

பரணி3ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சுக்கிரன்


அதிஷ்ட தேவதைகளின் அருளினால் எக்காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். சந்தோஷங்களுடன் செளகர்யங்களுக்கு குறைவில்லாமலும் திடகாத்திர உடலுடனும், பெரிய கண்களுடனும் சிவந்த நிறத்துடனும் இருப்பார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகம் பணம் செலவழிப்பார்கள். 30 வயது வரை அதிகமாக செலவழித்து விட்டு, அதன் பிறகு சேமிக்கத் தொடங்குவீர்கள். 40 வயதுக்கு மேல் புகழ்பட வாழ்வார்கள். பெற்றோரை அதிகம் நேசிப்பார்கள்.

பரணி4ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சந்திரன்


பருத்த உடலுடனும் தோற்றத்துடனும், துன்மார்க்க குணத்துடனும், பிடிவாத சுபாவத்துடனும், வஞ்ச நெஞ்சம் பெற்றவராக இருப்பார்கள். அடிமை வாழ்க்கை அல்லது சாதாரண தொழில் அல்லது வேலை செய்பவராகவும் இருப்பார்கள் ஆனாலும் தன்னுடைய காரியங்களை சாதிக்கும் சாமர்த்தியம் இருக்கும்

அடுத்தவர்களின் வளர்ச்சியை அவர்களின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். வாழ்க்கை துணையிடம், பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்கள் செய்த உதவிக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் பதில் உதவி செய்யாவிட்டால் வருத்தப்படுவார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால், பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்துக்கும் நீதிமன்றத்தை நாடுவார்கள். எதற்கும் அஞ்சமாட்டார்கள். 37 வயதுக்கு மேல் நல்லது நடக்கும். சிறு வயதில் ஏற்பட்ட ஏமாற்றங்களால் முதுமையில் யாரையும் நம்ப மாட்டார்கள்.

அஸ்வனி


அஸ்வினி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) இருக்கும் 27 நட்சத்திரங்களில் முதலாவது நட்சத்திரம் ஆகும். இது மேஷ ராசியில் (Aries) உள்ள மிகப் பிரகாசமான நட்சத்திரம். இதனுடைய அறிவியல் பெயர் - Arietis ஆகும். மேற்கத்திய நாடுகளில் இதை "ஹாமல்" (Hamal) என்பர்.

பிரசவம் என்பது மருத்துவர் (பழைய காலத்தில் மருத்துவச்சி) உதவியுடன் தாய் மற்றும் குழந்தை என்னும் இரட்டை உயிர்களை பிரித்தெடுப்பது தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த இரட்டை உயிர் அம்சம்தான் அஸ்வினி குமாரர்கள். இவர்களின் பெயர் நாசத்யா மற்றும் தஸ்ரா ஆகும். இரட்டையர்களாக அழைக்கும் போது தான் அஸ்வினி குமாரர்கள் என்று அழைப்பார்கள். பாண்டவர்களில் நகுலனும் சகாதேவனும் இந்த அஸ்வினி குமாரர்களுக்குப் பிறந்தவர்கள் என்று மகாபாரதத்தில் சொல்லப்படுகிறது. நகுலன் குதிரை பற்றிய அனைத்து விவரங்களை அறிந்தவர் என்றும் சகாதேவன் ஜோதிடம் மற்றும் மருத்துவம் அறிந்தவர் என்றும் கூறும் போதே அஸ்வினி நட்சத்திரத்திற்கும் அஸ்வினி தேவர்களுக்குமான தொடர்பு நமக்கு புரியும்.

இது சூரியனின் குறுக்களவு விட 18 பங்கு பெரியது. சூரியனைப்போல் 4.5 பங்கு கனமுள்ளது. 55 பங்கு ஒளியுடையது. பூமியிலிருந்து 65.9 ஒளி ஆண்டுகள் தூரத்தில் தான் இருப்பதால் இதன் தோற்ற ஒளிப்பொலிவு (apparent magnitude) 2.01 ஆகும்.

இரவில் நட்சத்திரங்களை கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் அஸ்வினி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

அச்சுவனி அறுமீன் குதிரைத் தலைபோல்
மெச்சிடு கடகத்திரு கடிகையதாம்

பொருள்: அஸ்வினி(அச்சுவனி) ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட. அவைகள் சேர்ந்த உருவம் குதிரைத் தலை போல் இருக்கும். அச்சுவனி உச்சத்தில் வரும்போது கீழ்வானில் கடக ராசி உதித்து இரண்டு நாழிகை இருக்கும்.


நட்சத்திர காரத்துவம்:

அஸ்வனி நட்சத்திரத்தைப் பற்றியும் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை பற்றியும் பார்ப்போம் (இது பொது பலன்களே, ஜாதகத்தை வைத்துதான் சரியான பலன்களை சொல்ல முடியும் என்பதை தயவு செய்து நினைவில் வைத்துக் கொள்ளவும்)


  1. ஆளும் உறுப்புகள்: தலை பாகம், மூளை.

  2. பார்வை: சமநோக்கு.

  3. பாகை 0.00 - 13.20.

  4. தமிழ் மாதம்: சித்திரை.

  5. நிறம்: மஞ்சள்.

  6. இருப்பிடம்: நகரம்.

  7. கணம்: தேவ கணம்.

  8. குணம்: எளிமை, தாமசம்.

  9. மிருகம்: ஆண் குதிரை.

  10. பறவை: ராஜாளி.

  11. மரம்: பாலில்லாத எட்டி மரம் (விஷமூட்டி மரம்).

  12. மலர்: நீலோத்பலம்.

  13. தமிழ் அர்த்தம்: குதிரைத்தலை.

  14. தமிழ் பெயர்: புரவி.

  15. சராதி நட்சத்திரப்பிரிவுகள்: சரம்.

  16. நாடி: தட்சிண பார்சுவ நாடி, வாத நாடி.

  17. ஆகுதி: அரசு, ஆல்..

  18. பஞ்சபூதம்: நிலம்.

  19. நைவேத்யம்: பாலேடு.

  20. தேவதை : இரண்டு முகங்களும் நான்கு கரங்களும், சிவந்த நிறமும் வாய்த்த அக்னி பகவான்.

  21. அதி தேவதை: எமன், முருகப்பெருமான், விநாயகர், மகாவிஷ்ணு.

  22. அதிபதி : கேது.

  23. நட்சத்திரம் தன்மைகள் : ஆண் நட்சத்திரம், இரட்டையர்கள் (இரட்டை நட்சத்திரம்), சவ்விய நட்சத்திரம் (சவ்வியம் என்றால் வலதுபாகமாக சஞ்சரிப்பது)

  24. உருவம்: குதிரை முகம்.

  25. மற்ற வடிவங்கள் :
    பல உரு பொருட்கள் அஸ்வினி வடிவத்திற்கு உள்ளன. அதில் முதன்மையானது, இரண்டாக வெட்டி பிரிக்கும் கத்தரிக்கோல் முதன்மையானது. தாய் சேய் என்னும் ஒரே உயிராக இருந்ததை இரண்டாகப் பிரிக்கும் தொப்புள் கொடியை வெட்டி விடுவது இந்த கத்திரிக்கோல் தான். எனவே முதல் அடையாளம் இந்த கத்தரிக்கோல்.

  26. மற்ற பெயர்கள்:.
    ஈரலை, பரி, கிள்ளை, வாசி, கொக்கு, மா, காச்சி, பரதேசி, கோடகம், சென்னி குதிரை, ஐப்பசி.

  27. வழிபடவேண்டிய தலம்: வைத்தீஸ்வரன் கோயில், ஸ்ரீரங்கம், கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில்.

  28. அதிஷ்ட எண்கள்: 1, 3, 9.

  29. வணங்க வேண்டிய சித்தர்: காத்யாயனா.

  30. பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்: கு,சே, சோ, ல.

  31. அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பழுப்பு..

  32. அதிஷ்ட திசை: வடகிழக்கு..

  33. அதிஷ்ட கிழமைகள்: வடகிழக்கு..

  34. அணியவேண்டிய நவரத்தினம்: பவளம்.

  35. அதிஷ்ட உலோகம்: தாமிரம், பஞ்சலோகம்..

  36. வெற்றி தரும் நட்சத்திரங்கள்: ரோகிணி,அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், உத்திரட்டாதி, ரேவதி..

  37. நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்: அஸ்வத்தாமன்.

  38. குலம்: வைசியகுலம்.

  39. புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்: தர்மம்


பொதுவான குணங்கள்:

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகன் கேது என்பதால் ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடும் ஆற்றல் இருக்கும். எடுக்கும் காரியங்களை விதி முறைக்குட்பட்டே செய்து முடிக்கும் மனசாட்சி உள்ளவர். சிறந்த சிந்தனையாளர் அதிகாரத்திற்கு பெயர் போன செவ்வாயின் ராசியான மேஷத்தில் இருப்பதால் தன்மானமும் சுய கௌரவமும் அதிகமிருக்கும். எதையும் சுயமாக சிந்தித்தே செயல்படுத்துவார்கள். பிடிவாத குணம் இருக்கும் அடுத்தவர் சொல்லுக்கு கட்டுப்படாதவர்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் சொத்தாக கொண்டவர்கள். வம்பு சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். இவர்களிடம் வாதிட்டு வெற்றி பெறுவது என்பது அரிது. மேடை பேச்சுகளில் பாராட்டுதலையும் கைதட்டுதல்களையும் பெறாமல் இறங்க மாட்டார்கள்.

“வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” எனப் பேசுவது, அந்த நொடியிலேயே முடிவெடுப்பது, குதிரையின் வேகம் அதாவது பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாத செயல்களில் அவசரம், முடிவெடுத்துவிட்டால் பின்வாங்காத குணம், அச்சம் என்பது துளிகூட இல்லாமல் இருப்பது, தோல்வி ஏற்பட்டால் கூட குதிரையின் வேகத்தில் சட்டென்று சுதாரித்து மீண்டும் எழுந்து ஓடும் திறமை முயற்சிகளில் அதிதீவிரம், எளிதில் கை நீட்டி தாக்கும் குணம், அடுத்தவரை அலட்சியமாக பேசி காயப்படுத்துதல், தாய் மீது அளவு கடந்த பாசம், வாழ்க்கைத் துணை மீது அதிகாரம் செலுத்துதல் ஆகியவை இந்த நட்சத்திரத்தின் குணம் ஆகும்.

சகோதர ஒற்றுமை குறைவாக இருக்கும். சில அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு தங்கள் சகோதர் உடன் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும். இளைய சகோதரர் இவரை விட அதிகம் படித்தவராக இருப்பார். அதேசமயம் சகோதரியாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அதிக காரமான உணவுகளை மற்றும் சூடான உணவை விரும்புவார்கள். பொதுவாக இவர்கள் உணவு பிரியர்கள் எனலாம். புதிய வகை உணவுகளை அதிகம் விரும்புவார்கள்.

உடையில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். அதாவது உடைகளை சரியாக தேர்ந்து எடுக்க முடியாதவராகவும் இருக்கலாம்.

அஸ்வனி நட்சத்திரத்தின் மரம் எட்டி ஆகும். எட்டியின் கசப்பு அனைவரும் அறிந்ததே. இவர்கள் ஏதோரு சூழ்நிலை அல்லது ஒரு கட்டத்தில் மற்றவர்களால் ஒதுக்கப்படுவார்கள்


குடும்ப வாழ்க்கை:

வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிட்டாலும் அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையும் இருக்காது. பூர்வீகச் சொத்தில் சிறிதேனும் அனுபவிப்பார்கள்.

காதலிக்கும் யோகம் இருந்தாலும் சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் அமையும். இல்லையென்றால் பெற்றவர்கள் பார்த்து செய்யும் வாழ்க்கை துணையையே பெற முடியும். வாழ்க்கைத் துணையாக வருபவர் நச்சரிப்பு செய்பவராக இருப்பார். ஆனால் அதிக பாசம் பற்று உடையவராக இருப்பார். சிற்றின்ப ஆர்வம் சற்று அதிகமாக இருக்கும். வாழ்க்கை துணை பிள்ளைகளின் மீது அதிக அக்கறையும் பிரியமும் இருக்கும். அவர்களையும் தன்னை போலவே நீதி, நேர்மை தவறாமல் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள்.

வேதை என்னும் எதிர்மறையான செய்கை தரும் நட்சத்திரம். அஸ்வினிக்கு கேட்டை தான் வேதை ஆகும். இந்த கேட்டை நட்சத்திரக்காரர்களிடம் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திருமணத்தில் வாழ்க்கை துணையாக இந்த கேட்டை நட்சத்திர காரர்களை அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டும். ஆலோசனை, மறுபரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளக் கூடாது.
(திருமண பொருத்தத்தில் வேதை மட்டும் மிக முக்கியம்.)

பொதுவாக இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிகம் இருப்பர்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எதிலும் முதலிடத்தில் இருக்கவே விரும்புவார்கள்

நண்பர்கள்>

கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை சுற்றி எப்பொழுதும் நண்பர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருந்தாலும் நல்லவர்களாக தேர்ந்தெடுத்தே பழகுவார்கள். மேலும் நண்பர்களுக்கு அவர்கள் அளவாக தான் உதவி செய்வார்கள்.

நட்பு நட்சத்திரங்கள்:

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் நட்சத்திரகாரர்கள் பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆவார். இந்த நட்சத்திரங்களில் இல்லாதவர்கள் அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் நண்பர்களாக இருந்தால் அந்த நட்பு நீடிக்காது அல்லது கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

மேற்கூரிய நட்சத்திர நண்பர்களையே கூட்டு தொழிலுக்கும் சேர்த்துக்கொள்ளலாம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்>

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் முதலான நட்சத்திரக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது

அஸ்வினி நட்சத்திரக்காரர்களை வீண் பிரச்சினைகளில் சிக்க வைக்கும் நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் ஆகும். எனவே இவர்களிடம் அளவோடு, ஒரு எல்லைக் கோடு போட்டு பழக வேண்டும்.

மிருகசீரிடம், சித்திரை அவிட்டம் நட்சத்திரக்காரர்களிடம் பெரிய பிரச்சினைகள் இருக்காது ஆனால் நச்சரிப்பு இருக்கும். அதாவது அடிக்கடி உதவி கேட்கலாம்.

தொழில்>

பணியிடத்தில் அதிகாரம் செய்வது, அதிகபட்சம் அதிகாரப் பதவிகளில் இருப்பது போன்ற நிலை இருக்கும்.

சொந்தத் தொழில் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். கூட்டுத்தொழில் செய்வதில் ஈடுபடுவார்கள். சிறிய அளவிலாவது வட்டி தொழில் செய்வார்கள்.

கட்டிடத்தொழில், கட்டுமான பொருட்கள் விற்பனை, உணவகம் தொடர்பான தொழில் செய்வார்கள். மருத்துவத்தில் உயர்நிலை பணியில் இருப்பார்கள். மருந்துக்கடை, இறைச்சி வியாபாரம். ஆடு, மாடு, கோழி பண்ணை என ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

பூமி தொடர்பான இயந்திரத் தொழில் (ஜேசிபி, பொக்லைன்) அகழ்வாராய்ச்சி. தூதரக பணி. அரசு பணி, அரசியல் ஆர்வம் கொண்டிருப்பார்கள்

தசா பலன்கள் >

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் திசையாக வரும். கேது தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேது தசை:
கேது தசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். தாயின் உடல் நிலையும் பாதிப்படையும் சோம்பல் தனம், பிடிவாத குணம் இருக்கும்.

சுக்கிர தசை:
அடுத்தாக வரும் தசை சுக்கிர தசை 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரன் கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்து இருந்தால் மட்டுமே இந்த தச காலங்கள் மேன்மையான நற்பலன்களையும், சுகவாழ்வு சொகுசு வாழ்வையும் பெற முடியும். வாழ்க்கை தரமும் உயர்வடையும்.

சூரிய தசை:
மூன்றாவது வருவது சூரிய தசை ஆகும். பொதுவாகவே மூன்றாவது தசை முன்னேற்றத்தை நல்லபடியாக தரும் என்று சொல்ல முடியாது சுமாராகத் தான் இருக்கும் என்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டுத்தான் முன்னேற வேண்டி இருக்கும். தந்தையிடம் மன சஞ்சலங்களையும் பிரச்சனைகளையும் கொடுக்கும், உஷ்ண சம்பந்தபட்ட ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும்.

சந்திர தசை:
சந்திர தசை நான்காவது தசையாக வருகிறது சந்திரன் கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்து, தசை நடைபெறும் இந்த இக்காலங்களில் மனக்குழப்பங்கள், தாயிடம் கருத்து வேறுபாடு மனம் அலை பாய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் வாழ்வில் நல்ல பல முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் அடைய முடியும்.

செவ்வாய் தசை:
7 வருடங்கள் செவ்வாய் தசை ஐந்தாவதாக வரும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாவது தசையாக வரும் செவ்வாய் தசை மாரக தசை என்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடன் இருந்தால் பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும் உண்டாக்கும்.

ராகு தசை:
ராகு தசை 6வது தசையாக 18 வருடங்கள் நடைபெறும் ராகு தசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், செல்வம் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெற முடியும்.

மேற்கூறிய தசை காலங்களின் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ் நாளில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

பொது பரிகாரம்>

அஸ்வினி நட்சத்திர காரர்களுக்கு எட்டி மரம் பரிகார விருட்சமாகும். இந்த மரத்தை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்>

அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் அதாவது அஸ்வனி நட்சத்திரத்தில் மனை முகூர்த்தம் செய்தல், புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குதல், சாஸ்திர பயிற்சி தொடங்குதல், விதை விதைத்தல், மரக்கன்றுகள் நடுதல், கடல் வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், தானியங்கள் வாங்குதல், பசு தொழுவம் அமைத்தல், திருமணம், பூ முடிப்பது,குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டை அடித்து காது குத்துவது போன்றவற்றை செய்வது நல்லதுஅஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் அதாவது அஸ்வனி நட்சத்திரத்தில் மனை முகூர்த்தம் செய்தல், புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குதல், சாஸ்திர பயிற்சி தொடங்குதல், விதை விதைத்தல், மரக்கன்றுகள் நடுதல், கடல் வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், தானியங்கள் வாங்குதல், பசு தொழுவம் அமைத்தல், திருமணம், பூ முடிப்பது,குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டை அடித்து காது குத்துவது போன்றவற்றை செய்வது நல்லது

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:>

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது அஸ்வனி நட்சத்திரத்திற்கு

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. கேட்டை வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்>

                                  சரஸ்வதி தேவியின் காயத்ரி மந்திரம்

ஓம் வாக் தேவியை ச வித்மஹே
விரிஞ்சி பந்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்!


4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

அஸ்வினி 1ம் பாதம்:

நட்சத்திர அதிபதி கேது
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி செவ்வாய்


அஸ்வினி 1ம் பாதத்தின் தன்மையை ஆராயும் போது அது நவாம்சத்தில் எங்கு வருகிறது என்று பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது அஸ்வனி 1 ம் பாதம் எனில் நவாம்சத்தில் சந்திரன் மேஷத்திலே இருப்பார். எனவே நவாம்ச அதிபதி செவ்வாய் ஆகும். இவர்களின் குணத்தை ஆராயும் போது

“செவ்வாய் (ராசி அதிபதி) + கேது (நட்சத்திர அதிபதி) + செவ்வாய் (நவாம்ச அதிபதி) “

என்று வைத்து ஆராய வேண்டும்.

இவர்கள் மன சஞ்சலம் உடையவர்களாக இருப்பார்கள். அழகாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். எல்லோரிடமும் அன்பாக இருப்பார்கள். புத்தியால் புகழையும் செல்வத்தையும் பெறுவார்கள். ஆனால் அற்பமான எண்ணங்களும், புறம் பேசும் குணமும் இருக்கும். சிறு வயதில் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கும். சகோதரர்களால் பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிட்டாலும் அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையும் இருக்காது. நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள்.

அஸ்வினி 2ம் பாதம்>
நட்சத்திர அதிபதி கேது
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சுக்கிரன்

பிறரை எடை போடுவதில் வல்லவர்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு அன்புடன் பழகுவார்கள். விவாதத்திலும், ஆடம்பரத்திலும் பிரியர்கள். மற்றவர்களை கவரும் படியான தோற்றத்துடன் காணப்படுவார்கள். தாயிடம் பாசம் வைத்து இருப்பார்கள். உயர்கல்வி யோகம், காதல் திருமண யோகம் உண்டு

அஸ்வினி 3ம் பாதம்>

நட்சத்திர அதிபதி கேது
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி புதன்

இவர்கள் கணிதத்தில் அதிக ஆர்வமுடையவராக இருப்பார்கள். நல்ல கூரிய அறிவு உடையவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்கள் போல் நல்லவற்றை பிறருக்கு போதிப்பார்கள். உஷ்ண உடலும், மூல வியாதியும் பெற்று இருப்பார்கள். வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பால் சிலருக்கு திருமணம் தாமதப்படும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் எளிமையாக இருக்க விரும்புவார்கள்.

அஸ்வினி 4ம் பாதம்:

நட்சத்திர அதிபதி கேது
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சந்திரன்

திறமையும் நல்ல புத்தி கூர்மையும், தெய்வீக வழிபாட்டில் நம்பிக்கையும் பெற்றவர்கள். மிகுந்த அறிவாளிகளாகவும் சகல கலைகளையும் அறிந்தவர் களாகவும் இருப்பார்கள். காம உணர்ச்சி அதிகம் இருக்கும். எதற்கும் அஞ்சாதவர்கள். அழகிய தேக அமைப்பு பெற்றிருப்பதுடன் சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும். தாயிடம் அதிக பாசம் உண்டு எப்போதும் பரபரப்பாகவே காணப்படுவார்கள்.

குறிப்பு: அஸ்வினி 1ம் பாதம் நவாம்சத்தில் மேஷத்திலும், 2ம் பாதம் ரிஷபத்திலும், 3ம் பாதம் மிதுனத்திலும், 4ம் பாதம் கடகத்திலும் இருக்கும். இந்த வகையில் தான் எல்லா கிரகங்களின் நட்சத்திரம் நவாம்சத்தில் குறிக்கப்படும்

நட்சத்திரங்கள்- 27

ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன என்பது அறிந்தே. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. மேலை நாடுகளில் சூரியனை மையமாக கொண்டு ஜோதிடம் கணிக்கப்படுகிறது. நம்முடைய ஜோதிடத்தில் பராசர மகரிஷி, ஜைமினி மகரிஷி மற்றும் தாஜக் முறை மூன்று பிரிவுகளைக் கொண்டு உள்ளதாக கூறலாம். இந்த முன்று முறைகளிலும் லக்கினத்திற்கு அடுத்ததாக சந்திரன் தான் மையமாக வைத்து ஜோதிடம் சொல்லப்படுகிறது. கோள்களின்(Planets) நகர்வை வைத்துக் கொண்டு வருங்காலத்தை கணிக்க முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிடம். ஜோதிடம் என்பது கடல். நம்மால் சில முத்துக்களை தான் எடுக்க முடிகிறது.

“ஜோதிடர்கள் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு அவர்களால் இயன்ற முன்கூட்டி அறிவிக்கிறார்கள். ஆயினும் நம்மை படைத்த பிரம்மனை தவிர வேறு யாராலும் திட்டவட்டமாக ‘இது தான் நடக்கும்’ என்று கூற முடியாது “

என்று சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர் காளிதாசன் அவர்கள் தனது வாக்கில் கூறியுள்ளார் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
எல்லா ரிஷி, சித்தர்களின் பாதங்களை வணங்கி பராசரமகரிஷி முறைப்படி நட்சத்திரத்தின் பலன்கள் விவரங்களை இந்த நூலில் தந்து உள்ளேன்.

வாருங்கள்!!...ஜோதிட முத்துக்களில் 27 நட்சத்திரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்

                        நட்சத்திரங்கள்

விண்மீன் அல்லது நட்சத்திரம் என்பது விண்வெளியில் காணப்படும் ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இந்து ஜோதிடத்தில் குறிப்பிட்ட விண்மீன் கூட்டம் அல்லது நட்சத்திரம் என்பது ராசிச் சக்கரத்தை (கட்டத்தை) 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு ராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இந்த பெயர் குறிக்கிறது.

(எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் ராசி சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.)

சூரியனை மையமாக வைத்து நீள வட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீள வட்டமான பாதை தான் ராசி மண்டலம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்களாகப் பிரித்து அதற்கு பெயர் இட்டனர். அந்தப் பெயரால் தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றன .

மீனம் (Pisces)


 

ராசியின் தன்மைகள் :

பெண் ராசி அல்லது இரட்டை ராசி
நீர் ராசி
உபய ராசி ( மந்தமான தன்மையை குறிக்கும்)
தெற்கு ராசி (South)
அதிபதி : குரு
ஊமை ராசி
தூர அளவு : 330" to 360"
நட்சத்திரங்கள் : புரட்டாதி 4 பாதம் , உத்திரட்டாதி , ரேவதி
ஜாதி : பிராமண ஜாதி
உருவம் : மீன்
நிறம் : பச்சை
உடல் அமைப்பு (Type of Body or structure of Body):

அழகிய அங்கலட்சணத்துடனும், தோற்றத்துடனும் இருப்பார்கள். நடுத்தர உயரம் உடையவர்கள். ஏர் நெற்றி, நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். கண்கள் மீன் போன்று புருவங்கள் வில் போன்றும் அழகாக இருக்கும். கனிந்த பார்வையுடனும் மலர்ந்த முகத்துடனும் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள்.

குணங்கள் (General Characteristics):

தான் செய்த காரியங்கள், செய்ய போகும் காரியங்கள் எதையும் வாய்விட்டு சொல்ல மாட்டார்கள். எவரிடமும் மனம் விட்டு பழக மாட்டர்கள். பயந்த சுபாவம் உடையவர்கள். கல்வி அறிவு, தெய்வ வழிபாடுகள், ஆசார அனுஷ்டங்கள் ஆகியவை பற்றி நன்கு அறிந்து இருப்பர், என்றாலும் அதை வாழ்க்கையில் கடைபிடிக்க மாட்டார்கள். பிறர் பொருள்களை அபகரிக்கும் குணம் உடையவர்கள். கற்பனை உலகில் மிதப்பவர்கள். மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைப்பார்கள். கெட்ட பழக்கங்கம், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகி விடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஓருவரிடம் அன்பாக பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகி விடவும் செய்வார்கள்.

மணவாழ்க்கை (Marriage Life):

விருப்பத்திற்கேற்றவாறே மணவாழ்க்கையும் அமையும். திருமணம் நடைபெற சற்று தாமதமாகும். தாமதப்பட்ட மணவாழ்க்கை நல்லது. பெரும்பாலான இந்த ராசி ஆண்களுக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

பொருளாதாரம் (Economy):

நல்ல செல்வம், செல்வாக்கு சந்தோஷங்கள் பெற்று இருந்தாலும் எதிர்பாராதவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டு சிரமமான வாழ்க்கையை வாழ நேரிடும். புகழ்ச்சிக்கு இவர்கள் அடி பணிவதால் இவரை புகழ்ந்தால் போதும். மற்றவர்களுக்கு அள்ளி கொடுத்துவிடுவார்கள். எத்தகைய துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தம் வாழ்வின் வசதிகளை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களையே விரும்பி அணிவார்கள். நடனம், நாடகம், லாட்டரி, ரேஸ் முலம் லாபம் கிட்டும். இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகவே எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்றாலும் கடன்களாலும் அடிக்கடி தொல்லைகளை எதிர்கொள்வார்கள்.

புத்திரபாக்கியம் (Children):

குழந்தை பாக்கியம் குறைவாக இருக்கும். சிலருக்கு பெண் குழந்தைகள் பிறக்கும். புத்திரர்களால் பேரும், புகழும், செல்வம், செல்வாக்கும், மீன ராசிக்காரர்கள் பெற்றிடுவார்கள். சிலர் பிள்ளையே பிறக்காத நிலையால் தத்து பிள்ளைகளை எடுத்து வளர்ப்பதும் உண்டு.

தொழில்கள் (Business or Jobs):

இவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்கலாம். தெய்வீக, ஆன்மீக காரியங்களில் ஈடுபாட்டுடன் செயல்படுவதால் அதன் மூலமும் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். பேங்க், வட்டிக்கடை, நகை வியாபாரம், அரசு அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். ஜோதிடர்கள் பெரும்பாலும் மீன ராசியினராக இருப்பார்கள். இரக்கம் மற்றும் பச்சாதாபம் தேவைப்படும் துறைகளில் இவர்களின் உள்ளுணர்வு உதவுகிறது. கலைஞர், செவிலியர், உடல் சிகிச்சை, வள்ளல், கால்நடை மருத்துவர், உளவியலாளர் சிறந்த வேலைகள் எனலாம்.

நோய்கள்:

நோய் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள், சித்த பிரமை, குடிபழக்கத்தால் வரும் நோய்கள் ஆகியவை உண்டாகும்.