ஜோதிடம் பாடம் -2 பக்கம் -2




தசாபுத்தியை பற்றி இந்த படத்தில் பார்ப்போம் .

நமது இந்து (Hindu) மதம் மறு பிறவியை (Rebirth) வலியுறுத்துகிறது. உடலுக்குத்தான் (body)அழிவே தவிர ஆன்மாவிற்கு (Soul)இல்லை. உடலில் இருந்து உயிர்போன பின்பு உடல் அழிக்கப் படுகிறது.ஆனால் ஆன்மாவோ வேறு வடிவம் எடுக்கிறது. இது தான் நமது இந்து மத தர்மம் (Hindu Dharama). இந்தப் பிறவியில் நாம் வாழ்வதோ தாழ்வதோ போனபிறப்பில் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்தே அமைகிறது. நாம் அனுபவிக்கும் நல்லது, கெட்டதை தான் ஊழ்வினை என்பர்.

ஒரு ஜாதகர் பிறக்கும் நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசை தான் அந்த ஜாதகரின் ஆரம்ப தசை ஆகும் பிறகு தசை சில ஆண்டுகள் அல்லது மாதங்களில் அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் . ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்


போன பிறவியில் (Before this birth) ஒருவர் சூரிய திசையில் இறந்தால் மறுபிறவில் அதே திசையில் பிறந்து இந்த பிறவியின் பிரயாணத்தைத் தொடருவார் என்பது ஒரு ஆதிகம் . எனவே திச-புத்தி மிக முக்கியம் ஆகும்.அதே போன்று போனஜென்மத்தில் செய்த நற்காரியங்களுக்கு இப்பிறவியில் நல்ல பிறப்பு , நற்பயன்கள் எற்படும் . போன ஜென்மத்தில் ந்ல்லது செய்தோமா இல்லையா என்பதை ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லிவிடலாம்.
பிறப்பு இருப்பு திசை என்று உங்கள் ஜாதகத்தில் குறித்து இருப்பார்கள்




ஜோதிடம் பாடம் -2




சூரியன் (Sun) முன்பு பூமி(Earch) சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு லக்கினம் (Laginam)எனப்படும்.
ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

லக்கினம் எப்படி கணிப்பது என்பது பெரிய கணிதம். நாம் அவற்றை பின்னால் பார்க்கலாம். நமது ஜாதகத்தை எடுத்தல் "ல" என்று போட்டு இருப்பதுதான் லக்கினம்.

லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால் ஒவ்வொரு ராசியும் 2, 3, 4 ,5 ,6, 7, 8, 9, 10, 11, 12 என்று வரிசைப்படி வரும். லக்கினத்தை வைத்துதான் ஜாதகம் கணிக்கப் படுகிறது

ராசி (Rasi)கட்டம் :

எந்த ஜாதகத்தை கையில் எடுத்துப் பார்த்திர்கள் என்றால் அதில் பொதுவாக இரண்டு கட்டங்கள் போடப்பட்டிருக்கும் அவற்றில் ஒன்று ராசிகட்டம் (Rasi) மற்றொன்று அம்சம் கட்டம் (அம்சம் என்பது நவாம்சம்) (Amsam or NavaAmsam) என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்த ராசிச் கட்டத்தில் "ல" என்று குறிப்பிடப்பட்டு குறுக்கு வாக்கில் ஒரு கோடு போட்டிருப்பார்கள் இதைத்தான் லக்கினம் என்று குறிப்பிடப்படுகிறது.
மேஷம் (Mesham) முதல் மீனம் (Meenam) வரையில் எங்கு சந்திரன் (Moon) இருக்குகிறாரோ அதுதான் ராசியாகும் . உதாரணத்திற்கு ஒரு ராசி (Zodiac) கட்டம் பார்க்கவும் .


நவாம்ச (Nava Amsam)கட்டம் :

ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம். குறிப்பாக திருமணத்தின் (For Marriage Time) போது இந்த கட்டத்தை பார்ப்பார்கள் அதாவது இது கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்.

நவாம்சம் இல்லாமல் ஜோதிடரால் துல்லியம்மாகப் பலன் சொல்ல முடியாது. எனவே ராசி கட்டத்திற்கு அடுத்தபடி நவாம்ச கட்டம் மிக முக்கியம் .
கட்டத்தை சக்கிரம் என்று ஜோதிடத்தில் சொல்வார்கள் .மேலும் ஜோதிடத்தை மிக துல்லியமாக சொல்வதற்கு மேலும் சில கட்டங்கள் (சக்கிரங்கள்) உள்ளன .

    • பாவம்
    • திரேக்காணம்
    • ஓரை
    • திரிசாம்சம்
    • சப்தாம்சம்
    • சஷ்டியாம்சம்.


பாடம் - 1

ஜோதிடம் பாடம் - 1

ஜோதிட வாய்ப்பாடுகள்

முதலில் ஜோதிட கலையின் அடிப்படையான சிலவற்றை அறிந்து கொள்வோம்

ஜோதிட வாய்ப்பாடுகள்

1 நாள் 60 நாழிகை 24 மணி துளிகள்
1 நாழிகை 60 விநாழிகை 24 நிமிடங்கள்
1 விநாழிகை 60 தற்பரை 24வினாடிகள்


ஒரு ராசி மண்டலம் என்பது 12 ராசிகள் அதாவது 360 பாகைகள்

1 ராசி (30 பாகைகள் )யில் 2 1⁄4 நட்சத்திரங்கள் இடம் பெறும் .
1 நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள். நட்சத்திரம் 1 பாததிற்கு 3 பாகை 20கலை விகிதம்
13 பாகை 20 காலை கொண்டது.
1 பாகை என்பது 60 கலை மற்றும் 1 கலை என்பது 60 விகலை ஆகும்


நட்சத்திரத்தின் மொழிதான் ஜோதிடம் அவை 9 கிரகங்கள் மூலமாக ஜோதிடத்தில் குறிப்பார்கள்





இப்போது எத்தனை நட்சத்திரங்கள் உள்ளது என்பதை பார்ப்போம். வானத்தில் ப லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளது. அதை ஜோதிடத்தில் 27 பாகங்களாக பிரித்தது அதற்கு பெயர் வைத்து உள்ளது.
அந்த பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப் படுகிறது . ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன



இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன

தொடர்ச்சி....

ஜோதிடம் பாடம் -1 பக்கம் -4


அடுத்தாக ராசியைப் பற்றியும் ராசி அதிபதிகளின் பெயர் பார்ப்போம்.

12 ராசிகளில் (12 zodiac) 27 நட்சத்திரங்கள் (27 Nakshatras-Stars) நாம் முன்னோர்கள் அடைத்து வைத்தார்கள்.

(Rahu, Kethu) ராகு கேதுக்கு சொந்த வீடு (Own houses or Place in zodiac) கிடையாது. அவர்கள் ஜாதகத்தில் அவர்கள் இருக்கும் வீடுதான் அவர்களுக்கு சொந்த வீடு . எந்த வீட்டுக்கு யார் அதிபதி என்பதை நாம் மறக்காமல் இருக்க வேண்டும்


ஒரு கிரகம் சொந்த வீட்டில் இருந்தால் அது அதிக பலம் உள்ளதாகக் கருதப் படுகிறது. அதிக பலம் உள்ள கிரகம் தன் சொந்த தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்யும் கிரகங்களின், உச்ச, மூலத் திரிகோண, மற்றும் நீச்ச வீடுகளைப் பற்றி பார்ப்போம் .

ஒரு கிரகம் (Planet) எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெறுகிறார். உதாரணமாக சூரியன் (Sun)மேஷத்தில் (Mesham) உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார்.

முன்புறம்

ஜோதிடம் பாடம் -1 பக்கம் -3

பஞ்ச அங்கங்த்தின் ஐந்து அங்கங்கள்:

  1. திதி
  2. வாரம்
  3. நட்சத்திரம்
  4. யோகம்
  5. கரணம்
திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்



வளர்பிறை மற்றும் தேய்பிறைத் திதிகள்:

அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது.

தே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.

இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்க படுகிறது

இவைகள் அனைத்தும் ஜோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அஷ்டமி , நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

கரணம்:

கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது கரணம் என்பது 6 பாகைமணிகள் ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர



யோகம்

இதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனின் தூரத்தையும், சந்திரனின் தூரத்தையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை நாம யோகம் என்பார்கள்.

அவையாவன:

  1. விஷ்கம்பம்
  2. ப்ரீதி
  3. ஆயுஷ்மான்
  4. சௌபாக்யம்
  5. சோபனம்
  6. அதிகண்டம்
  7. சுகர்மம்
  8. திருதி
  9. சூலம்
  10. கண்டம்
  11. விருதி
  12. துருவம்
  13. வியாகாதம்
  14. ஹர்ஷணம்
  15. வஜ்ரம்
  16. சித்தி
  17. வியதிபாதம்
  18. வரீயான்
  19. பரீகம்
  20. சிவம்
  21. சித்தம்
  22. சாத்தீயம்
  23. சுபம்
  24. சுப்ரம்
  25. பிராம்யம்
  26. ஐந்திரம்
  27. வைதிருதி

மற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது (stars) நட்சத்திராத்தையும், யோகத்தையும் வைத்தே யோகம் (Yogam)கண்க்கிடப்படுகிறது. இன்னன்னகிழமைகளில் இன்னென்ன நட்சத்திரம் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நட்சத்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும். ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நட்சத்திரங்கள் வந்தால் அமிர்த யோகம்் வரும். மீதியுள்ள நட்சத்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம், பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நட்சத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும். சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம். மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.

முன்புறம்,    தொடர்ச்சி....

ஜோதிடம் பாடம் -1 பக்கம் - 2

யுகங்களை பற்றி பார்ப்போம். நமது கலாச்சாரப்படி மொத்தம் 4 யுகங்கள் உண்டு. ஒரு சதுர்யுகம் என்பது கீழ்வரும் 4 யுகங்களை கொண்டதுதான்


    • கிருதயுகம்.
    • திரேதாயுகம்
    • துவாபரயுகம்
    • கலியுகம்

ஒவ்வொரு தமிழ் ஆண்டுகளுக்கும் பெயர் உண்டு. மொத்தம் 60 ஆண்டுகள். 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.



இந்த நாள் முடிந்து அடுத்த நாள் பிறக்கிறது என்றால் இரவு 12.01 பிறகு 12.00 மறுநாள் இரவு முடிகிறது. ஆனால் நம்முடைய பண்டைய முறைப்படி சூரியன் உதயம் ஆகும் நேரம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை ஒரு நாள் ஆகும்

உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் என்றும் நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் என்ப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறுசூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.

சூரியயுதத்தை பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரியும். சூரியன் எத்தனை மணிக்கு உதயம் ஆகிறது? எத்தனை மணிக்கு அஸ்தமனம் ஆகிறது ? என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள்


இரண்டு வகையான பஞ்சாங்கங்கள் நம்மிடம் இருக்கிறது.


1. திருகணித முறை
2. வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறை



முன்புறம்,    தொடர்ச்சி....

ஜோதிடம் கற்றுக் கொள்வது தேவையா?

ஜோதிடம் கலை 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகயும் மற்றும் பராசரர், வராகமிகிரர், ஜெய்மினி போன்ற மாமுனிவர்களால் வளர்க்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் என்பதிலிருந்து பிறந்தது

கோள்களின் நகர்வை வைத்துக் கொண்டு வருங்காலத்தை கணிக்க முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிடம் . மிக சரியாக கணிக்க முடியுமா? ஜோதிடம் என்பது கடல் . நம்மால் சில முத்துக்களை தான் எடுக்க முடிகிறது.


எனவே ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று ஒரு சாரின் கருத்து ஆகும்.

நம்புவருக்கு சிவன்.. நம்பாதவருக்கு வெறும் சிலைதான்


ஜோதிடத்தை பற்றி எனக்கு தெரிந்தை எந்த blog யில் பதிவு ஏற்றியுள்ளேன்.

தவறுகள் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் Comments தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்

வருக வருக என்று எந்த blog வரவேற்பதில் மகிழ்ச்சி !!!

நன்றி!!