கும்ப லக்கினத்தின் பொது பலன்கள்

 






v  செவ்வாயும், சுக்ரனும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள்.

v  குரு மாரகம் கொடுக்க மாட்டார். செவ்வாய், சந்திரனுடன் கூடி இருந்தால் மாரகம் கொடுப்பார். மாரகதிபதிகள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்

v  கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புத திசையும், சனி திசையும், சுக்கிர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்

v  சித்திரை மாதம், பஞ்சமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், வியாழக்கிழமை மாலை மரணம் ஏற்படலாம்.

v  சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை நல்லது அல்ல. மேலும்   சுக்கிரன், செவ்வாய், ராகு  மற்றும் சுக்கிரன், சூரியன், செவ்வாய்  சேர்க்கை இருந்தால் உடல் நலம் பாதிக்கும்

 பொது பலன்கள்

v  குடம் சின்னம்: கும்பம் என்பது ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீரினை குறிப்பதாகும். இதனை நீர் தாங்கி சின்னம் என்றும் சொல்வது உண்டு.

v   பெண்களிடத்தில் பிரியமுடையவன், அகன்ற வயிறுடையவன், தன்னையே புகழ்ந்து பேசுபவன் , பிறர் செய்யும் உதவியை உடனே மறப்பவன் , அற்ப கல்வியுடையவன்.

v  இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் பிறருடன் அன்பாகவும்,பெருந்தன்மையுடனும் பழகுவார்கள். நம்பிக்கை மற்றும் நட்புக்கு பாத்திரமானவர்கள். அதிக நினைவாற்றல் உள்ளவர்கள். உள்ளத்தில் தோன்றிதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவார்கள். சிலர் குடும்ப பொறுப்பை சிறு வயதிலே ஏற்பார்கள். வாழ்க்கை வசதி நன்கு அமையும். இவர்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.

v  பழைய சம்பிரதாயங்களில் ஆர்வம் காட்டாது சமூகசீர்திருத்த கொள்கையில் நாட்டம் கொண்டவர்கள். இவர்கள் எதையும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்து விளக்கம் காண்பவர்கள். எதையும் ஆழ்ந்து நோக்கும் தன்மையும் தீர ஆலோசித்து செயல்படும் தன்மை உண்டு. கும்ப லக்னத்தில் தோன்றியவர்கள் நியாயம் அநியாயம் இவற்றைத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துச் சொல்வார்கள்.

v  வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை இவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். பெண்களுக்கு கும்ப லக்னம் உகந்தது. இந்த லக்னத்தில் பிறந்த பெண் ஒருவருக்கு வாழ்க்கை துணைவியாக கிடைக்க பெற்றால் வாழ்வு சிறக்கும்.

v  எலக்டிரிகல் என்ஜினீயரிங், மருத்துவம், கணிதம், அன்னிய பாஷைகள் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகளாக விளங்குவர்

v  இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள். கல்வியில் தேர்ச்சி இல்லாதவர்கள். நன்றி மறப்பவர்கள், பழி பாவத்திற்கு அஞ்சாத குணம் உடையவர்கள். சிவந்த கண்களையுடையவர்கள்.

v  நேர்மை, ஒழுக்கம், நற்குணம், அறிவுத்திறன், வாக்கு வன்மை இவை உள்ளவர். சிற்றின்ப இச்சையும் அதிகம் உள்ளவர்.

v  பல கஷ்டங்கள் இருந்தாலும் அச்சமின்றி செயல்படுவார்கள் சமயோசிதமாக செயல்படக் கூடியவார்கள். புத்திர, மித்திரர் மேல் பாசம் வைப்பவர். எல்லாரையும் பகைத்துக் கொள்வதால் வேண்டாதவர்களே அதிகம் இருப்பர். கலை, இலக்கியம், நாட்டியப் பயிற்சி, சிற்பக் கலைகளில் தேர்ச்சி பெறுவார். மனித இனத்திற்குச் சேவை செய்யும் மனப்பான்மையும் உண்டு.

v  இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதி வழங்குவதில் சமர்த்தர். இதனால், நீதிபதி போன்ற பதவிகளையும் வகிப்பார். எழுத்துத் தொழில், வேதாந்தம், தத்துவம், ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு உண்டு. விஞ்ஞானத் துறைகளிலும் ஈடுபாடு உண்டு.

v  தியானம், யோகம், ஆசனம், ஜபம், பூஜை, பிராணயாமம் இவற்றில் பற்று அதிகம். மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் பிறருக்கு உதவி செய்வார்.

v  வலுவான  உடற்கட்டையுடையவார்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவார்கள். பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விருப்பம் அதிகம்  அதன் விளைவாய் அவப் பெயரும் ஏற்படு வாய்ப்பு உண்டு.

v  வாழ்வின் பிற்பகுதியில் தான் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அந்த சமயத்தில் செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும்.

திருமண வாழ்க்கை

 

v  கும்ப லக்கினத்தில் பிறந்தவருக்கு இல்லறம் இவர்களுக்கு பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை. விசித்திரமான ஜோடி பொருத்தமற்ற திருமணமே அமையலாம்.

v  இவர்களின் 7-ம் வீடு சிம்மம். அதிபதி சூரியன். இவர்களின் வாழ்க்கைத் துணைவர் மிக கம்பீரமானவராக கோபமுடையவராக யாருக்கும் அஞ்சாதவராக தான் எனும் எண்ணம் கொண்டவராக இருப்பார். மேலும் சிம்ம ராசி வறண்ட ராசியாகும எனவே வாழ்வில் போதிய திருப்தி அமையாது.

v  கும்ப லக்ன ஜாதகரை அவரின் வாழ்க்கைத் துணைவர் அடக்கி ஆள்வார் . கும்ப லக்ன 7 – ஆம் அதிபதி உச்சமானால் சொல்ல முடியாத வீரத்தோடும் புகழோடும் செல்வாக்கோடும் இருப்பார். அவரே நீசமாகிவிட்டால் அதிர்ஷ்டம் இல்லாதவராகவும் , திறமை இல்லாதவராகவும் அமைந்துவிடுவார் .

v  பொதுவாக தம்பதியர்க்கு சினிமா, நாடகம், நாட்டியம் முதலிய கலைகளில் ஆர்வம் அமையும். கும்ப லக்கினகாரர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் மனைவி  நற்குணங்களும், பெருந்தன்மையும் உடையவராகக் கணவனைக் கவர்வார்கள்.

v  இவர்களுடைய வாழ்க்கைத் துணை சற்று உயரமாகவும், எடுத்த முடிவுகளில் மாறாதவராகவும், தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்லக்கூடிய அளவிற்கு தங்களை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.

v  தான் எந்த அளவு படிப்பிலும் அறிவிலும் உயர்ந்தவராக வேண்டும் என்று எண்ணுகிறாரோ அந்த அளவு தன் வாழ்க்கைத் துணையும் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்

தொழில்

 

v  செவ்வாய் ஆட்சி, உச்சம், திரிகோணம் போன்ற அமைப்புக்களில் இருந்து குருவின் பார்வையும், சூரியனின் அருளும் இருந்தால் கூட்டுத் தொழில், கான்ட்ராக்ட், ஏஜென்சி, கட்டிட தொழில்களில் நல்ல உயர் உச்ச நிலையை தொடலாம்.

v  கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள்  வேலையின்றி சும்மா உட்கார்ந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

v  எலக்டிரிகல் என்ஜினீயரிங், மருத்துவம், கணிதம், அன்னிய பாஷைகள் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகளாக விளங்குவர். அத்தகை தொழில் ஆர்வம் இருக்கும்.

v  தைரியஸ்தானமான 3ஆம் இடத்திற்கும், ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்என்பதால்  தைரியம், வெற்றி, சகோதர அனுகூலம், பெரிய பதவி, ராணுவம், போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றில் உத்தி யோகம், லக்ஷ்மிகடாக்ஷம் ஆகிய சுப பலன்களைக் கொடுப்பார்.

v  அரசு அலுவலகம் காவல், ராணுவம், மருத்துவம். தொழிற்சாலை, தீயணைப்பு படை,கட்டிடத்தொழில் பொறியியல்துறை. வங்கி,தபால், ஆகிய துறைகளில் உத்தியோகம் அமையலாம்

v  கும்ப லக்கினக்காரர்கள் பொதுவாக மக்களே ஆட்சி செலுத்தக்கூடிய துறைகளான காவல்துறை, பாதுகாப்புத்துறை போன்றவற்றில் உயர் பதவிகள் வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும்

v  செவ்வாய் வலுவாக அமைந்து, சூரியனுடன் சேர்ந்து நல்ல கிரகங்களின் பார்வை பெற்று இருந்தால் உயர் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகள் வகிப்பார்கள். மேலும் இவர் 3 -ல் ஆட்சியானாலூம் 10-ல் ஆட்சியானாலும் நல்ல உத்தியோகம் கிட்டும்.

v  புது புது ஐடியாக்களை வெளிப்படுத்துவதுடன், எதிர்கால தேவைக்கேற்றவாறு செயல்படுவதில் இவர்கள் வல்லவர்கள்.ஒரே தொழிலில் இல்லாமல் பல வேலைகளில் ஈடுபட விரும்புபவர்கள். எந்த வேலை செய்தாலும் அதில் புதிய நுணுக்கங்களை கண்டறிவதன் மூலம் இவர்களுக்கு புகழ் உண்டாகும்.

v  செவ்வாய் வலுக்க கட்டிடப்பொருள், தீப்பெட்டி, வீட்டுமனை,மண்ணெண்ணெய், மின் தளவாடங்கள், தங்கநகைம் மற்றும் பவழம் ஆகியவற்றின் வியாபாரம்  செய்து விருத்தி அடைவார்கள்

v  செவ்வாய், சூரியன், குரு, சந்திரன் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சமுதாயத்தில் மற்றவரால் மதிக்கப்படக்கூடிய அளவில் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.

v  செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று உடன் சந்திரன் ராகுவும் அமையப் பெற்றால் மருத்துவத்துறையில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

v  செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறந்த பொறியாளராகும் யோகம், கம்ப்யூட்டர் துறைகளில் சாதனை செய்யக்கூடிய திறன் உண்டாகும்.

v  10ல் ராகு , சனி சேர்ந்து இருந்து நல்ல கிரக பார்வை இல்லை என்றால்  சட்டத்திற்கு எதிரான தொழில்களில் ஈடுபடுவார்கள்.

v  செவ்வாய், ராகு, கேது  சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், செவ்வாய் பலமிழந்திருந்தாலும், சனி பார்வை 10ம் வீட்டிற்கு இருந்தாலும் வாழ்வில் ஒரு நிலையான தொழில் இல்லாமல் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும்

கிரகங்கள்

Ø  சூரியன் : 7க்குடையவர் சனிக்குத் தந்தை என்றாலும் இருவரும் பகைவர்கள் ஆனாலும் கேந்திராதிபதியான இவர் இந்த லக்னத்திற்குச் சுபர் என்பதே பெரும்பான்மையான கருத்து. மேலும் இவர்களுக்கு சூரியன் வலுப்பது நல்லது.

Ø  சந்திரன் : ரண, ருண, ரோக, சத்துருஸ்தானமான 6ஆம் இடத்துக்குடைய சந்திரன் பாபியாகிறார். இவர் வலுத்தால் ஆஸ்துமா, மார்பில் சளி, வயிற்றுவலி அப்பண்டிசிடிஸ், சைனஸ் போன்ற வியாதிகள் தொந்திரவு கொடுக்கும். இவர் 10-ல் நீசம் பெறுவது ஒரு விதத்தில் நல்லதே. இவர் லக்னாதிபதி சனியுடன் பரிவர்த்தனையாவது நல்லது என்ற கருத்தும் உள்ளது

Ø  புதன் : இவர் 5 மற்றும் 8 க்கு உடையவர். யோககாரர். ஆனால் புதனு ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண ஸ்தானமாக அமைவதால் அசுப ஆதிபத்தியமே வலுப் பெறுகிறது. ஆகையால் புதன் அந்த ஜாதகருக்கு பாபி என்பதே பல ல ஜோதிடரின் கருத்து ஆகும். பொதுவில் இவர் சுபர்களுடைய சம்பந்தம் பெறுவது நல்லது.

Ø  குரு: குரு 2, 11 க்கு உரியவர். தனம், லாபம் ஆகிய இரண்டு முக்கிய இடங்களுக்குக் குரு அதிபதியாகிறார். இவரே தனகாரகராவதால் இவரின் முக்கியத்துவம் கூடுகிறது. ஆனாலும் இவரைச் சுபர் என்றோ யோகாதிபதி என்றோசொல்ல முடியாது. குரு தனித்து இருந்தால் நன்மையை செய்ய முடியாது. ஆனால் இவருடன் சேர்ந்தக் கிரகத்தின் காரக பலனையும், இவர் பார்க்கும் பாவத்தையும் விருத்தி செய்வார்

Ø  செவ்வாய்: தைரியஸ்தானமான 3ஆம் இடத்திற்கும், ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் சுபராகவே சொல்லப்பட்டுள்ளது.

Ø  சுக்கிரன்: கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திற்கும் திரினேஸ்தானமான 9 ஆம் இடத்திற்கும் அதிபதியாவதால் சுக்கிரன் சிறப்பு விதிப்படி சிறந்த ராஜ யோககாரகராகிறார்.  கேந்திராதிபத்தியமும் கோனாதிபத்தியமும் ஒரே கிரகத்திற்கு ஏற்பட்டால் அந்த கிரகம் பிரபல ராஜயோகத்தைத் தரும். சுக்கிரன் வலுத்தால் நல்லது.

Ø  சனி: லக்னம்,விரயம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் சொந்தமான சனி சுபரே. காரணம் லக்னம் மூல திரிகோணஸ்தானமாக அமைவதே. இவர் வலுத்தால் தேகசுகம், கவுரவம், பெயர், புகழ், வருமானம் ஆகியவை ஏற்றம் பெறும், ஆயுள் விருத்தியடையும். இவர் கெடக்கூடாது

கும்பம்   லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி முதல் 2 பாதங்கள.

இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும்.

அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்

கும்பம் லக்கினம் - அவிட்டம் 3, 4 பாதங்கள்

அவிட்ட  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  செவ்வாய், சனி தாக்கத்துடன் இருப்பார்.

அவிட்டத்தின்   அதிபதி செவ்வாய் ஆவார். நல்ல  தோற்றத்துடனும், திடமனதுடன், கோப குணங்களுடன், செல்வமும், செல்வாக்கும் பிறரின்  வழிகாட்டுதலின் உதவியால் வருமானம் பெறுவார்கள். இவர்கள் காரியவாதிகள். இவர்கள்  புத்தி சாதுர்யத்தாலே அல்லது சூழ்ச்சியாலோ தனது காரியத்தில் வெற்றி பெறுவார்கள். நல்ல ஆடைகளை  அணிவார்கள். தனது குழ்ந்த்தையிடன் அன்பாக இருப்பார்கள். படிப்பில் ஆர்வம் இல்லை என்றாலும் பட்டம் பெறும் சாமர்த்தியசாலிகள்.

கும்பம் லக்கினம் சதயம்

சதய  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் ராகு, சனி  தாக்கத்துடன் இருப்பார்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.மற்றவர்களுக்கு உதவி செய்யத் தயங்கமாட்டீர்கள். நட்புக்கு மரியாதை தருவார்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை நீங்கள் நாசூக்காகச் சுட்டிக் காட்டித் திருத்துவார்கள்.படிப்பை விட விளையாட்டுகளில்தாம் ஆர்வம். சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் நலனுக்காகப் போராடுபவர்களாக இருப்பார்கள். குழந்தைப் பருவத்தில் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். மற்றவர்களை நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்க மாட்டார்கள். கடினமான காரியங்களையும் சவாலாக ஏற்று செய்து முடிப்பார்கள்

 

கும்பம் லக்கினம் - பூரட்டாதி  1, 2 பாதங்கள்

பூரட்டாதி  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு,  சனி  தாக்கத்தில்  இருப்பார்.

பூரட்டாதிநட்சத்திரத்தின் அதிபதி குரு ஆவார். இரக்க சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இயற்கையெழிலை ரசிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். நவீன ரக ஆடைகளையும் நகைகளையும் அணிவதில் விருப்பம் கொண்டிருப்பார்கள். எல்லோருடனும் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பார்கள். படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நட்புக்கு முக்கியத்துவம் தருவ ர்கள். வாழ்க்கைத்துணைக்குப் பூரண சுதந்திரம் கொடுப்பார்கள். அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டடார்கள். மற்றவர்கள் போற்றும்படி உயரிய பண்புகளைப் பெற்றிருப்பார்கள். பெற்றோர்களிடமும் உடன்பிறந்தவர்களிடமும் அன்பாக நடத்துவார்கள். உண்மையை நிலைநாட்ட போராடுவார்கள்.வருமானம் வரக்கூடிய தொழிலை சரியாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்

 

கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய சிவன் துதி மனதார சொல்லி வருவது நல்லது.

ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி

தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி

சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும்மலை போற்றி !

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நிழலே !

ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

 

 

தனுசு லக்கினத்தின் பொது பலன்கள்

 


    • சூரியன் பாக்யாதிபதியாகவும், செவ்வாய் பூர்வ புண்ணியாதிபதியாகவும் வருகிறார் சூரியனை விட செவ்வாயே இன்னும் அதிகமாக நன்மை செய்வார் 
    • செவ்வாய் சூரியனோடு இருந்து விட்டால் அதிகாரமுள்ள பதவிகளைத் தருவார்.
    • குருவும் செவ்வாயும்  சேர்ந்திருந்தால் குரு மங்கள யோகம் கிடைக்கும்.
    • பாக்கியாதிபதி சூரியன்  எட்டில் மறைந்து சனியோடு சேர்க்கை பெற்று இருந்தால  தியாகசீலராகவும், போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் செல்ல நேரிடும் 
    • சந்திரனும் சுக்கிரனும்  சேர்ந்த இருந்தால்    தனுசு லக்னத்திற்கு ஆசையை தூண்டி  சுகவாழ்விற்கு கடனை வாங்க செய்து  அதன் மூலம் அசிங்கம்,அவமானம் போன்ற கெடுபலனை சந்திர அல்லது சுக்கிர தசையில்  தரும்.
    • புதனும் சந்திரனும்  இணைந்தால் ஏதேனும் ஒரு கிரகத்தின் தசா நடந்தாலும் வேதனை தரும் 
    • ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்து இருந்தால் கடன், பகை, வழக்கு, நோய், அவமானம் என்று புதன், சுக்கிர தசா முழுவதும் நிகழும்.
    • ஆனி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிக்கிழமை மாலை இயற்கை எய்தலாம் என்று நூல்கள் சொல்கின்றன 
    •  

பொது பலன்கள் 

    • சத்தியவான், நல்ல குணமுடையவன், நன்றாக பேசுபவன் , தனவான் , பழகுவதற்கு இனியவன் , வித்தையுடையவன்
    • இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரம் உள்ளவர்கள், நல்ல பலமுள்ள உடலமைப்பு உள்ளவர்கள், வட்டமான நெந்தி, தீண்ட அழகான மூக்கு நீண்ட அல்லது சற்று உருண்டையான முகம்,   அழகிய பல்வரிசை  உள்ளவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்கள் தன்னம்பிக்கையுள்ளவர்கள், தீர்க்கதரிசி எதையும் எளிதில் கிரகிக்கும் சக்தியுள்ளவர்கள், சுய கவுரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
    • இடுப்புக்கு கீழ் குதிரையும், இடுப்புக்கு மேல் வில் பிடித்த மனிதன் சின்னம்: அந்த சின்னத்திற்கு ஏற்றபோல் திறமைசாலிகள, தானதர்ம சிந்தனை கொண்டவர்கள், எந்த செயலிலும் குறிக்கோளுடன் செயல்படுவார்கள்.
    • எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்கமாட்டார்கள், தான் சரியென்று எண்ணியதை அடித்துச் சொல்லுவார்கள், உரத்த அதிகாரமும் கட்டளை இடுவதும் போன்ற குரலில் பேசுவார்கள் பண்பும் ஆசாரமும் உள்ளவர்கள் முன் கோபி, ஆனாலும் இரக்ககுணம் உள்ளவர்கள். பேச்சி கெட்டிக்காரர்கள். எல்லோரிடமும் பிரியமாகப் பழகுவார்கள். கொஞ்சம் தற்பெருமை உள்ளவர்கள். ஆன்மீகத்திலும், ஜோதிடத்திலும் ஈடுபட்டுப் புகழ்பெறக் கூடியவர்கள்.
    • தனுசு லக்னத்தின் அதிபதி குரு பகவனாவார். தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகள் மற்றும் விவேகம் மிக்கவர்கள். இவர்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செய்து பொருள் ஈட்டுவார்கள். இவர்கள் வயதில் மூத்தவர்களையும், படித்தவர்களையும் மதித்து மரியாதை செலுத்துவார்கள். சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்கள். 
    • இவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் செல்வச் செழிப்பு அதிகம் பெற்று இருப்பார்கள்.
    • தாராள மனது கொண்டவர்கள். இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவராவும், துணிச்சல்மிக்கவராகவும் இருப்பார்கள். விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். புகழ்ச்சியில் அதிக விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்கள். 
    • ஆலய மற்றும் பொது ஸ்தாபனங்களுக்கு  பொது ஸ்தாபனங்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வார்கள்.
    • பழைமையான விஷயங்களிலும், வேதம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். வீண் பகட்டு இவர்களிடம் இருக்காது. 
    • பிறரிடம் உண்மையாக இருக்க விரும்புவார்கள். மற்றவர்களும் அதே போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தயாள மற்றும் ஈகை உள்ளம் கொண்டவர்கள்.
    • நல்ல ஒழுக்கமுடையவர்கள். மனிதாபிமானத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இவர்களால் இவர்களின் சகோதர, சகோதரிகள் தான் பயனடைவார்களோ தவிர அவர்களால் இவர்களுக்கு எந்த பயனும் இல்லை. உறவினர்கள் இவர்களை மோசம் செய்தால் அவர்களின் உறவை துண்டித்து கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல இனிமையான குரல் வளம் கொண்டிருப்பார்கள்.
    • இவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். எப்பேற்பட்ட கஷ்டங்கள், எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டடாலும் அவைகளை வாழ்கையின் ஒரு அங்கமாக ஏற்று கொண்டு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வார்கள். தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.
    • இவர்கள் எல்லோருக்கும் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருப்பார்கள்.  எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக இருப்பார்கள். இவர்களிடம் ரகசியம் மட்டும் எதையும் சொல்ல கூடாது. தன்னுடைய சொந்த கருத்துகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பார்கள். ஆனால் எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் வல்லவர்கள்.

புலிபாணி ஜோதிடம்- பாடல் - 30

துலாம் லக்கினம்

பாரப்பா வில்லதனில் உதித்தபேர்க்கு

பகருவேன் புந்தியுமே பகையுமாவர்

சீரப்பா சென்னல் விளை பூமிதோப்பும்

சிவசிவா செம்பொன்னும் சேதமாகும்

நீரப்பா நெடுமாலும் கோணமேற

நீணிலத்தில் பேர்விளங்கும் நிதியுமுள்ளோன்

ஆரப்பா போகருட கடாக்ஷத்தாலே

அப்பனே புலிப்பாணி பாடினேனே


பொருள்:

இப்பாடலில் தனுசு  லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

“தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் புதன் பகை ஆவார். ஆனால் திரிகோண ஸ்தானங்களில் (1, 5, 9) இருந்தால் மிக நல்ல பலனை தருவார் என்று குரு அருளால் உரைக்கிறார்

 விளக்கம்:

ராசி மண்டலந்தன்னில் வில்லைத் தன் இலச்சினையா கொண்ட தனுசு ராசியை இலக்கினமாகக் கொண்டு ஜனித்த ஜன்மனுக்கு கணக்கன் என்றும் புந்தி என்றும் புகழப்படும் புதபகவான் பகையானவர். அவரால், செம்பொன் விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யா வசத்தால் பெற்ற அருந்திரவியங்களும் சேதமாகும். ஆனால் அதே புதன் ஆகிய திரிகோண ஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக் கூடிய பெருநிதி படைத்தோனாக அச்சாதகன் விளங்குவான் என்பதையும் குருவருளால் குருவாணை கொண்டு குவலயத்திற்கு புலிப்பாணி உரைத்தேன்.


திருமண வாழ்க்கை

  • தனுசு இலக்கினகாரர்கள் திருமணம் தாமதப்படும். சற்று தாமதமாக நடந்தால் நல்லது.
  • தனுசு லக்ன, ஜாதகர்க்கு மிதுன ராசி ஏழாமிடமாகும். புதன் நீச்சமாயிருந்தாலும், பகையாக இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.  ஒருசில குழந்தைகளே இருக்கும்
  • திருமணமே வேண்டாமென்று வாதாடி. பிறகு செய்து கொள்வார்கள். திருமண வகையில், பயணச் செலவும், உறவினர் கூடிப் பங்கு பெறுவதற்கும் பெரும் பாடு ஏற்படும். உறவுக்குள்ளேயே திருமணம் அமையலாம். திருமணம் படிப்பை உத்தேசித்து நிச்சயிக்கப்படும்.
  • தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும் - சாமர்த்தியம் உடையவர்களாகவும் இருப்பார்கள்
  • வாழ்க்கைப் போராட்டங்கள் பல அமையினும், வாழ்க்கை துணை அதற்கு ஏற்ப நடந்து கொள்ளவார்கள் 
  • புதன் நல்லபடி காணப்பட்டால், வாழ்க்கைத் துணை மூலமாக மிகப் பெரிய நன்மைகள் வந்து சேரும். புதன் கெட்டிருந்தால், வாழ்க்கை துணைக்கு ஞாபக மறதி ஏற்படும். மேலும் ஏதேனும் குற்றம் கண்டு பிடித்தவண்ணம் இருப்பார். வாழ்க்கை துணை அதிகம் பேசக் கூடியவராவார்.
  • தனது துணையை முழுவதுமாக முழுவதும் நேசிப்பர். தனது துணையை சமமாக எண்ணுவர். 
  • 7 – ஆம் அதிபதி உச்சமானால், தனுசு லக்னக்காரருக்கு திருமணம் ஆனவுடன் மிகப்பெரிய கௌரவம் கிட்டும்
  • காதல் வெற்றி அடையும்.ஆனால் காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார்

தொழில்

  • பாரம்பரியத்தில் பற்றுள்ளவர். ஆசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொருளாதார நிபுணர், நீதிபதி, புரோகிதம், வங்கித்துறை, மடாதிபதி, மத தலைமை, கல்வித்துறை, பதிப்புத்துறை போன்ற தொழில்கள் அமையலாம்.
  • புதனுடன் 9,12 க்கு அதிபதிகளான சூரியன், செவ்வாய் இணைந்து 9,12 ல் சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும்.
  • புதன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாய தொடர்புடைய தொழில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 
  • புதனுடன் சனி சேர்க்கைப் பெற்றால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக்கூடிய வாய்ப்பும், சனி பலமிழந்திருந்தால் அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழிலில் அரசாங்க ஜீவனம் உண்டாகும்.
  • சனி வலிமை பெற்று, 10 ல் சூரியன் செவ்வாய் இருந்தால் அரசாங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும் 
  • தனுசு லக்னம் உபய லக்னம் என்பதாலும், புதன் 10ம் அதிபதி மட்டுமின்றி 7ம் அதிபதியாகவும் இருப்பதாலும், உபய லக்னத்திற்கு 7ம் அதிபதி பாதகாதிபதி என்பதாலும், திரிகோணங்களில் அமைந்தால் மட்டும் கூட்டால் நற்பலனை பெறமுடியும்.
  • தனுசு லக்னத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத் தொழில் செசய்வதைத் தவிர்த்து, எதிலும் தனித்து செயல்படுவது, உத்தியோகம் செய்வது உத்தமம். 
  • புதன் 10க்கு உரியவர் என்ற வகையில் கம்ப்யூட்டர், கணிதம், வங்கிப் பணி, பங்குச் சந்தை போன்றவற்றில் அனுகூலமும்,  குரு போன்ற சுபர் பார்வை பெற்றால் நூல் ஆசிரியர், பதிப்பகம், பத்திரிகைத் துறை, புத்தக வெளியீடு, ஆசிரியர் பணி போன்ற துறைகளில் புகழ் பெறக்கூடிய யோகமும் அமையும். புதன் கெட்டால் எந்த தொழிலும் சிரமம் ஏற்படும் 
  • புதன் ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபடக்கூடிய அவலநிலை ஏற்படும்.
  • 7 ஆம் இடம் பாதக ஸ்தானமாகவும் மாரகஸ்தானமாகவும் அமைவதால் பாதகாதிபதியாகிறார். நான்காம் இடத்தில் நீசம் பெற்றால் ஜீவன பாவம் வலுக்கும்
  • கிரகங்கள்  

    சூரியன் :    9 வீட்டுக்கு உரியவர். யோககாரர் தான் . லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் மிகவும் செல்வச் செழிப்பான அல்லது பாரம்பரியமான பெயர் சொல்லக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்

    சந்திரன் : தனுசு லக்னத்திற்கு அவமானம், அவப்பெயர், கண்டம் போன்ற கெடு பலனைத் தரும் அட்டமாதிபதியாக சந்திரன் விளங்குவதால்  சந்திரன் தன் தசா புத்திகளில் வேதனையை தர தவறமாட்டார்.

    செவ்வாய்:  சிறந்த யோககாரரே  . 12, 5 க்கு உரியவர். சூரியனை விட செவ்வாயே அதிகமாக நன்மை செய்வார்  

    குரு:  இவர் 2 மற்றும் 5க்கு உரியவர். தன காரகன் குருவின் தன பஞ்சம ஸ்தானாதி பதியாக வருவதால் குருவின் பார்வை பலம் தொழில் யோகத்தை தரும். குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார்..

    புதன் : புதன் 7க்கு  மற்றும் 10 க்கு உரியவர். யோகாரர் ஆவார் ஆனாலும் தனுசு லக்னாத்திற்கு புதன் பாதகாதிபதியாக செயல்படுவதால் தன் தசா/புத்தியில்  யோகமான பலனை வழங்க மாட்டார்

    சுக்கிரன்: தனுசு லக்ன அதிபதி குருவிற்கு  சுக்கிரன் பகை கிரகம்.  தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் ஆறாம் அதிபதியாகவும், பதினொராம் அதிபதியாகவும் விளங்கும் சுக்கிரன் ஏதோ ஒரு வகையில் லாபத்தை சுக்கிரன் தன் தசா/புத்தியில் தனுசு லக்னத்தில் பிறந்தோருக்கு வழங்கினாலும் கடன்,வம்பு,வழக்கு,நோய் போன்ற கெடுபலனையும் வழங்க தவறுவதில்லை. சுக்கிர தசா  பொதுவாக முழுமையான சுபபலனை வழங்காது .

    சனி:  தனுசு லக்னத்திற்கு 2 மற்றும் 3க்கு  அதிபதியாக  சனி இருந்தாலும்  தன் தசா/புத்தியில் தனுசு லக்னத்தாற்கு  நன்மையும்,தீமையும் கலந்தே தருவார்.   எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் மூன்றாம் அதிபதியோ/மூன்றில் அமர்ந்த கிரகமோ தன் தசா/புத்தியில் நன்மையைத் தராது.

    ராகு & கேது  : குரு அணிக்கு சர்ப கிரகங்களை சுப பலனை வழங்காது. மேலும் சனியைப்போல் ராகு என்ற அடிப்படையிலும் சுபப் பலனை தனுசு லக்னத்தில் பிறந்தோருக்கு தராத நிலையில் ராகு, கேது உள்ளது.


    தனுசு   லக்கினம்  – நட்சத்திரம் 


    தனசு  லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: மூலம், பூராடம், உத்திராடம்-1 நட்சத்திரங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது தனசு   லக்கின பலன்கள்  பார்ப்போம்.
    இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
    அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்


    தனுசு  லக்கினம்   – மூலம்  

    மூலம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு, கேது தாக்கத்துடன் இருப்பார்.

    இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். கேது சாரத்திலும், குருபகவானின் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்களிலும் ஆன்மீக தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்டதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாகும். ஒய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். சிலர் சுய தொழில் தொடங்குவார்கள். பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தபீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள்.

    தனுசு  லக்கினம் – பூராடம்  

    பூராடம்    நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், குரு தாக்கத்துடன் இருப்பார்.

    பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள்.  சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும். அமைதியை அதிகம் விரும்புவதால் பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையை கண்டால் மனதை பறி கொடுப்பார்கள் உற்றார் உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் இருக்கும். சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்பவராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாதவர்களிடம் மட்டும் பழகுவார்கள்

    தனுசு  லக்கினம்   – உத்திராடம் -1 

    உத்திராடம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன், குரு  தாக்கத்தில்  இருப்பார்.

    குடும்பத்தில் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும்.  கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பல கலைகளையும் கற்றுத் தேர்ந்திருப்பார்கள். எதிலும் எளிமையை விரும்புவார்கள். ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். எந்த ஒரு காரியத்தையும் நேர்மையாக, தெளிவாக சிந்தித்து செயலாற்றுவார்கள். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கமாட்டார்கள். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். ஆனால் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கள். ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையையும், மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பினையும் கொண்டவர்கள். இவர்களை எளிதில் எடை போட முடியாது. மர்மமான மனிதர்களாக இருப்பார்கள். எப்போதும் பொருளாதார ரீதியாக பஞ்சம் இருக்காது.அகங்கார குணம் கொண்டவர் என்பதால் குடும்பத்தில் சில நேரங்களில் குழப்பங்கள் ஏற்படும். தான் செய்கின்ற தவறுகளை மிக சமார்த்தியமாக சமாளித்து விடுவார்கள்.


    மந்திரம் 

    தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய துர்க்கை துதி மனதார சொல்லி வருவது நல்லது  


    இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,
    விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,
    திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,
    அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே

    ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்