கேட்டை தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டினால் கட்டும், கேட்டை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும் என்ற பழமொழி உண்டு. இது அவரவர் வசதிக்கேற்ப அமைந்த கிரக நிலைகளின் படி அமையும். மேலும் கோட்டை கட்டி ஆள்கிறீர்களோ இல்லையோ, கோட்டையில் இருந்து ஆட்சி செய்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். மன தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். கேட்டையின் நட்சத்திர அதிபதி புதன் பகவான் என்பதால் வருங்காலத்தைப் பற்றி முன்கூட்டியே அறியும் திறன் இருக்கும். தான தர்மங்களை செய்வார்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு நல்ல அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, பொய்மை போன்றவை நிறைய இருக்கும்.

செல்வம் சேர்ப்பதில் துடிப்புடன் செயல்படுபவர்கள். அதே நேரத்தில் சில நேரங்களில், 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பதற்கேற்ப கிடைத்த அளவில் மனத் திருப்தி அடைந்து விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் உங்களைப் பற்றிப் பெருமை பேசுவார்கள்.. சில நேரங்களில் விரக்தியுடன் காணப்படுவார்கள். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யாமல் சுயமாகத் தொழில் செய்து பணம் ஈட்டுவார்கள்.

நீர் நிலைகளில் குளிப்பது அதிக ஆர்வமும், நொறுக்கு தீனி தின்பது அதிக விருப்பம் கொண்டவர்கள். அடிக்கடி எதையாவது கொரித்து கொண்டே இருப்பர்கள் ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் விவேகியாகவும் மாறுவார்கள். செய்த நன்றி மறவாதவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல் சமாதானத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். நல்ல நுண்ணறிவும் பேச்சு திறனும், மற்றவர்களின் மன நிலையை அறிந்து பேசும் திறமை சாலியாகவும், எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பவர் களாகவும், புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்து கொள்பவர் களாகவும் இருப்பார்கள். ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமில்லை. பெண்ணாக இருந்தால் திருமணத்திற்கு பின் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது தவறான ஒன்று


குடும்ப வாழ்க்கை

கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர கூடிய யோகம் கொண்டவர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நற்குணங்கள் நிறைய இருக்கும். தர்மம் தலை காக்கும் என்ற நம்பிக்கை உடையவர்கள் ஆதலால் நிறைய தான தர்மங்களை செய்வார்கள். முன்கோபியாக இருந்தாலும் மலர்ந்த முகமும் இனிமையான புன்னகையும் கொண்டவர்கள்.

வாழ்க்கை துணை, பிள்ளைகள் மீது அதிக அக்கறையும் உடன் பிறப்பு களிடையே நிறைய பாசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய இனம், உற்றார் உறவினர்களை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். நிறைய பேருக்கு காதல் திருமணம் நடைபெறும். உயர்ந்த இடத்தில் மட்டுமே சிநேகிதம் வைத்து கொள்வார்கள். இருப்பதை வைத்து திருப்தி அடைவார்கள்.

உறவினர்களால் மாற்றத்துக்கு உள்ளாகி வருத்தப்படுவார்கள். மற்றவர்கள் செய்த உதவியை கடைசி வரை மறக்க மாட்டார்கள்.


நண்பர்கள்

நண்பர்கள் அதிகமானாலும் யாராவது ஒருவரிடத்தில் மட்டும் தான் நெருக்கமாக இருப்பார்கள். அதாவது நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள்.


நட்பு நட்சத்திரங்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம் ஆகியவை நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் ஆகும்.


தொழில்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பலர் கதாசிரியர் களாகவும், பத்திரிகை நிருபர் களாகவும், மனோ தத்துவ நிபுணர் களாகவும், நடிகர் நடிகை களாகவும், கட்டிட காண்டிராக்டர் களாகவும், அழகு கலை நிபுணர் களாகவும் பிரதிபலிப்பார்கள். புகைப்படம் எடுக்கும் துறை கம்ப்யூட்டர் துறை, எல்.ஐ.சி, அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஆர்வம் இருக்கும். பல இடங்களில் சிறந்த ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.


தசா பலன்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தசை முதல் திசையாக வரும். புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் புதன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


புதன் தசை:
புதன் பலம் பெற்று சுபர் சேர்க்கை பார்வையுடன் இருந்தால் நல்ல அறிவாற்றல் கல்வியில் மேன்மை, பேச்சாற்றலால் மற்றவர்களை கவரும் அமைப்பு கொடுக்கும். புதன் பலம் இழந்து இருந்தால் அடிக்கடி உடல் நல பாதிப்புகள், ஞாபக சக்தி குறைவு கல்வியில் மந்த நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கு குறையும்.
கேது தசை:
இரண்டாவதாக வரும் கேது தசை 7 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையை கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிப்படைந்து ஞாபக சக்தி குறையும்.
சுக்கிரன் தசை:
மூன்றாவதாக வரும் சுக்கிரன் தசை 20 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். இல்லையெனில் மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.
சூரியன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சூரிய தசை. இந்த தசை நடைபெறும் 6 வருடம் சூரியன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும்
சந்திரன் தசை:
ஐந்தாவதாக வரும் சந்திர தசை 10 வருட காலங்கள். சந்திரன் நீசம் அடைந்தால் நல்லோர் நட்சத்திரம் ஏறி இருந்தாலும் நல்லோர் பார்வை பெற்று இருந்தாலும் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும்.
6 வதாக வரும் ராகு தசை மாரக தசையாக கூறப்படுகிறது.


பொது பரிகாரம்

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மரம் பாலுள்ள பராய் மரமாகும். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

ஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்குகளை பேசி தீர்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

கார்த்திகை 2, 3, 4, அஸ்தம், மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், அவிட்டம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. அஸ்வினி வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் பூவராஹாய வித்மஹே
வஜ்ர ருபாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்

கேட்டை

நட்சத்திரம் - கேட்டை


Astrology

கேட்டை என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 18 வது பிரிவு ஆகும். இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்கள் தழுவி இடப்பட்டவை. இதன்படி கேட்டை நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக விண்மீன் கூட்டத்தில் காணப்படும் மூன்று நட்சத்திரங்களை கொண்ட கேட்டை நட்சத்திரத்தின் (α, σ, τ இசுக்கோர்ப்பியோனிசு) பெயரைத் தழுவியது. கேட்டையின் சம்ஸ்கிருதப் பெயரான ஜியேஷ்ட்டா (Jyeshta) என்பது "மூத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காதணி"யும் "குடை"யும் ஆகும்.

கேட்டைய வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பு தான். விருச்சிக ராசியை சேர்ந்து ஆகும்.


நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சிறு குடல், குதம், பிறப்பு உறுப்புகள், கருப்பை

பார்வை

சமநோக்கு

பாகை

226.40 - 240.00

தமிழ் மாதம்

ஐப்பசி

நிறம்

மஞ்சள்

இருப்பிடம்

வெட்டவெளி

கணம்

ராட்ஷ கணம்

குணம்

உக்கிரம்

மிருகம்

கலைமான்

பறவை

சக்கரவாகம்

மரம்

பாலுள்ள பராய் மரம்

மலர்

புடலை பூ

தமிழ் அர்த்தம்

மூத்தது

தமிழ் பெயர்

துளங்கொளி

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 உபயம்

நாடி

தட்சிண பார்சுவ நாடி

ஆகுதி

சேனைக் கிழங்கு

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

சித்ரான்னம்

தேவதை

தேவேந்திரன்

அதி தேவதை

ஸ்ரீவராகர்

அதிபதி

புதன்

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

குண்டல வடிவத்திலிருக்கும்     மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பு

மற்ற வடிவங்கள்

குடை,குண்டலம்,ஈட்டி

மற்ற பெயர்கள்

அளிகீடம், அதம், வல்லாரை, ஒளி,நாழி

வழிபடவேண்டிய தலம்

வரதராஜப்பெருமாள், தஞ்சாவூர்

அதிஷ்ட எண்கள்

1, 6, 9

வணங்க வேண்டிய சித்தர்

கௌசிகா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள்

நோ, யா, யீ, யூ

அதிஷ்ட நிறங்கள்

மெரூன், ஆரஞ்சு

அதிஷ்ட திசை

வடக்கு

அதிஷ்ட கிழமைகள்

வெள்ளி, ஞாயிறு

அணிய வேண்டிய நவரத்தினம்

ஜேட்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், விசாகம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

தொண்டரடிப்பொடி ஆழ்வார், கலிய நாயனார், கோட்புலி நாயனார்

குலம்

 வேடர் குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

அனுஷம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

அனுஷ நட்சத்திர அதிபதி சனி பகவான் என்பதால் எப்பொழுதும் மாறுபட்ட மனநிலை கொண்டிருப்பார்கள். எறும்புக்கும் தீமை நினைக்க மாட்டார்கள் என்றாலும் கொண்ட கொள்கைக்காக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டார்கள். பலருக்கு சுமை தாங்கியாக விளங்கினாலும், தங்களுடைய மனக்குறைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். யார் தவறு செய்தாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என தயங்காமல் எடுத்துரைப்பார்கள்.

பெற்றோரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்கள். கடைசிவரை அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். தெய்வபக்தி மிகுந்தவர்களாக காணப்படுவார்கள். சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பார்கள். அப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று தங்கள் குடும்பத்தினரையும் வலியுறுத்துவார்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு. ஆனால், ஆழ்ந்த அறிவு உண்டு.

சட்டென கடின வார்த்தைகளை பேசினாலும் உடனே அதை சரி செய்து விடுவார்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். பசியை பொறுக்க மாட்டார்கள். இரவு பகல் பாராது உழைப்பார்கள். ஜாதி, மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்து அனைவரிடத்திலும் அன்பாக பழகுவார்கள் கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து இழுப்பார்கள்.. பேச்சில் வித்தகர்கள். தெளிவாக பேசுவார்கள். தாம்பூல பிரியர்கள்.


குடும்ப வாழ்க்கை

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர்கள். வாழ்க்கை துணைக்கு மரியாதை கொடுப்பார்கள். பெற்றோரை பேணி காப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்கு எதையும் விட்டுக் கொடுப்பார்கள். பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். வாழ்க்கைத் துணைக்கு சம உரிமை கொடுப்பார்கள்

ஆண்களாக இருந்தால் பெண்களாலும், பெண்களாக இருந்தால் ஆண்களாலும் விருப்பப்படுவார்கள். இவர்களின் குணநலன்களில் தொடர்ந்து முரண்பாடுகளும், ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இவர்களுக்கு காதலில் நம்பிக்கை அதிகம் இருக்கும் அதற்காக எதையும் தியாகம் செய்வார்கள். காதலில் இவர்களுக்குள் எப்பொழுதும் மறைமுக ஆர்வம் அதிகம் இருக்கும்


நண்பர்கள்

இந்த நட்சத்திரக்காரர்கள் நிரந்தர நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அமையாது. பல நேரங்களில் தான் நினைப்பது போல் நடப்பதால் அடுத்தவர்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது இல்லை.


நட்பு நட்சத்திரங்கள்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம் ஆகியவை நட்பு நட்சத்திரம் ஆகும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பரணி, பூசம், பூராடம், உத்திரட்டாதி, பூரம் நட்சத்திரக்காரர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.


தொழில்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்கு இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். பலர் நாட்டிய பேரொளி களாகவும், சிறந்த பாடகர் மற்றும் வசன கர்த்தாவாகவும் இருப்பார்கள். வாய் பேச்சில் வித்தகர்கள். மருத்துவம், வங்கி, காவல்துறை, தீயணைப்பு துறை, உளவுத்துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். ஒரு சிலர் கட்டிடக்கலை, காண்ட்ராக்ட் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். அடுத்தவரிடம் வேலை செய்வதை விரும்ப மாட்டார்கள்.


தசா பலன்கள்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தசை முதல் திசையாக வரும். சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சனி தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


சனி தசை:
சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் மேன்மை, பெற்றோருக்கு உயர்வு, அசையா சொத்து சேர்க்கை அமையும். பலமிழந்திருந்தால் குடும்பத்தில் சோதனையும் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடும் கல்வியில் மந்த நிலையும், சோம்பல் உண்டாகும்.
புதன் தசை:
இரண்டாவதாக வரும் புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும், கல்வியல் மேன்மையும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.
கேது தசை:
மூன்றாவதாக வரும் கேது தசை காலங்களில் அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உடல் நிலையில் பாதிப்பு, திருமண வாழ்வில் பிரச்சனை வாழ்வில் முன்னேற்றம் இல்லதா நிலை உண்டாகும்.
சுக்கிரன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சுக்கிரன் தசை. இந்த தசை நடக்கும் 20 வருட காலங்களில் நல்ல மேன்மைகளை அடைய முடியும். பொருளாதார உயர்வு அசையும் அசையா சொத்து சேர்க்கையும் உண்டாகும். பொன் பொருள் சேரும்.
சூரியன் தசை:
ஐந்தாவதாக வரும் சூரிய தசை 6 வருட காலங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தந்தைக்கு சோதனைகள் ஏற்படும்.


பொது பரிகாரம்

இந்த நட்சத்திர காரர்களின் ஸ்தல மகிழம்பூ மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

அனுஷ நட்சத்திர நாளில் மஞ்சள் நீராட்டுதல், திருமணம், சீமந்தம் வாஸ்து படி வீடு கட்ட தொடங்குதல், புது ஆடை ஆபரணம் அணிதல் உபநயனம் செய்தல், கல்வி கற்க தொடங்குதல், புது மனை புகுதல், தானியம் சேர்த்தல், விதை விதைத்தல், கதி வறுத்தல், தெய்வ பிரதிஷ்டை செய்தல் வாசற் கால் வைத்தல் போன்றவற்றை செய்யலாம்


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம், கேட்டை, சதயம், ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம்,சுவாதி ஆகும்

பொருந்தா நட்சத்திரங்கள்:

பரணி, பூசம், பூராடம்,உத்திரட்டாதி, பூரம் ஆகிய ஆண் பெண் நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. பரணி வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு பிரசோதயாத்

அனுஷம்

நட்சத்திரம் - அனுஷம்


அனுஷம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 17 வது பிரிவு ஆகும். இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்கள் தழுவி இடப்பட்டவை. இதன்படி அனுஷ நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக (விண்மீன்) நட்சத்திர கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட அனுச நட்சத்திரத்தின் (β, δ, π இசுக்கோர்ப்பீ) பெயரைத் தழுவியது. அனுசத்தின் சமஸ்கிருத பெயரான அனுராத (Anuraadha) என்பது "தெய்வீக ஒளியின் சீடர்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "தாமரை" ஆகும். மேலும் அனுஷ நட்சத்திரத்திற்கு ம்ருதுதாரா என்ற பெயரும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை ‘வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம் என்று கூறுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்கு சொந்த மானதாகும்


நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சிறுநீர்ப் பை, பிறப்பு உறுப்பு, குதம், இடுப்புப் பகுதி எலும்புகள்.

பார்வை

சமநோக்கு

பாகை

213.20 - 226.40

தமிழ் மாதம்

ஐப்பசி

நிறம்

வெண்மை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

தேவ கணம்

குணம்

சுபம்

மிருகம்

பெண் மான்

பறவை

வானம்பாடி

மரம்

பாலில்லாத மகிழ மரம்

மலர்

செந்தாமரை

தமிழ் அர்த்தம்

வெற்றி

தமிழ் பெயர்

பனை

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

ஸ்திரம்

நாடி

மத்திம நாடி

ஆகுதி

மத்திம நாடி

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

நெய்ப் பாயசம்

தேவதை

துவாதச ஆதித்தர்களில் ஒருவரும் சூரியனின் அம்சமுமான மித்ரன். 

அதி தேவதை

ஸ்ரீலட்சுமிநாராயணன்

அதிபதி

சனி

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

கவிழ்ந்த தாமரை மலரைப் போன்ற   வடிவமுடைய மூன்று நட்சத்திரத் தொகுப்பு.

மற்ற வடிவங்கள்

குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்

மற்ற பெயர்கள்

புல், பனை, நீலம், தாழி, போந்தை,பெண்ணை, தேன்

வழிபடவேண்டிய தலம்

மகாலட்சுமீஸ்வரர், திருநின்றியூர்

அதிஷ்ட எண்கள்

1, 6, 9.

வணங்க வேண்டிய சித்தர்

மைத்ரேயா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ந, நி, நு, நே

அதிஷ்ட நிறங்கள்

மெரூன், ரோஸ்

அதிஷ்ட திசை

தெற்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

ஸ்பினல் (Spinel)

அதிஷ்ட உலோகம்

பிளாட்டினம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், விசாகம்,ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

பூசலார் நாயனார், ஸ்ரீமந் நாதமுனிகள், நந்தனார், காஞ்சி மகாபெரியவர், தாதாபாய் நௌரோஜி, நீல்ஆர்ம்ஸ்ட்ராங், லியோ டால்ஸ்டாய், ஜார்ஜ் பெர்னாட்ஷா, ரொனால்ட் ரீகன்

குலம்

க்ஷத்திரிய குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

 தர்மம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

விசாகம் தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

விசாகம் நட்சத்திர அதிபதி குரு பகவான் என்பதால் தான தருமங்கள் செய்வதில் வல்லவராகவும், வேண்டியவர் வேண்டாதவர் என பிரித்து பார்க்காத குணம் கொண்டு இருப்பார்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குண சாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைப்பார்கள். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த மகேசனே வந்து சொன்னாலும் மாற்றி கொள்ள மாட்டார்கள். சூட்சும புக்தி உடையவர்கள் என்பதால் கலகமும் செய்வார்கள். சற்று பொறாமை குணமும் இருக்கும்.

எந்தப் பாகுபாடும் பார்க்காமல், எவர் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு ஆதரவு தருவார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மன அடக்கமும் புலனடக்கமும் கொண்டிருப்பார்கள். மற்றவர்களை கவரும் அழகிய தோற்றம் பெற்றிருப்பார்கள். கொண்ட கொள்கையில் இருந்து எவருக்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். வேத சாஸ்திரங்களில் புலமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் சிலர் ஆன்மீக வாதிகளாகவும் பிரசித்தி பெற்று விளங்குவர். ஒரு விஷயத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார்கள். பல துறைகளிலும் ஞானம் பெற்றிருந்தும் தன்னடக்கத்துடன் இருப்பர்கள். எப்போதும் சத்தியத்தையே பேசுவர்கள். சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாகவும் மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படியும் பேசுவர்கள்


குடும்ப வாழ்க்கை

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று காலம் கடந்து தான் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் நிறைய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சரியான பொருத்தத்தையும், ஜாதகத்தையும் ஆராய்ந்து மணம் முடிப்பது நல்லது. சிலருக்கு வயதில் மூத்தவர்களை (ஆண்களாக இருந்தாலும்) திருமணம் செய்ய கூடிய நிலையும், ஏற்கனவே மணமானவர்களை மணம் முடிக்க கூடிய நிலையும் உண்டாகும். ஆனாலும் வாழ்க்கை துணையையும் குழந்தைகளையும் அதிகம் நேசிப்பார்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் உறவினர்களிடம் சண்டை போட கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் நலத்தை பேணுவதில் அக்கறை எடுக்க மாட்டார்கள். எதையும் அடக்கி ஆளும் வல்லமை இருக்கும். அடிக்கடி நோய் வாய்ப்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வார்கள். சற்று கஞ்சனாகவும் சிறந்த பக்திமானாகவும் இருப்பார்கள்.


நண்பர்கள்

எப்போதும் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் சேர்ந்திருக்க விரும்புவார்கள்.. அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம் கொண்டவர் ஆதலால் உங்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பர். மற்றவர்களிடம் நேசத்துடனும்,மரியாதையுடனும் பழகுவர்கள். உங்கள் உதவி ஒருவருக்கு தேவைப்பட்டால் தயங்காமல் சென்று உதவுவார்கள்


நட்பு நட்சத்திரங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை ஆகும்


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

கிருத்திகை, உத்திரம்,புனர்பூசம், பூரட்டாதி ஆகியவை தவிர்க்க வேண்டிய நட்சத்திரம் ஆகும்.


தொழில்

விசாக நட்சத்திர காரர்கள் நல்ல கல்வி மான்களாகவும், அறிவாற்றல் உடையவராகவும் இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோயில் அறநிலையத் துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் வங்கியில் பணிபுரிபவர்களாகவும், ரேஸ், ரெவின்யூ பெரிய கம்பெனிகளில் வர்த்தக ரீதியாக பிரதி நிதிகளாகவும் பணிபுரிவார்கள் நீதி துறையிலும், கல்லூரி பேராசியர்களாவும், அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும். தேவை அதிகரிக்கும் போது தான் பணம் மீது அதிக நாட்டம் உண்டாகும். மத குரு சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு இருக்கும். அடிக்கடி வேற்று மாநிலம், வேற்று நாடுகளுக்குச் சென்று வருவார்கள். வாழ்க்கையின் முற்பகுதியைவிட பிற்பகுதியில் பட்டம், பதவி, பணம் யாவும் இவர்களைத் தேடி வரும். ்கள்.


தசா பலன்கள்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு தசை முதல் திசையாக வரும். குரு தசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் குரு தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குரு தசை:
பிறக்கும் போதே சுப கிரகமான குருவின் தசை வருவதால் கல்வியில் மேன்மை குடும்பத்தில் சுபிட்சம், பெரியவர்களை மதிக்கும் பண்பு போன்ற யாவும் சிறப்பாக இருக்கும்.
சனி தசை:
இரண்டாவதாக வரும் சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அசையா சொத்துக்களின் சேர்க்கை வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் அடிக்கடி நோய் வாய்ப்பட நேரிடும்.
புதன் தசை:
மூன்றாவதாக வரும் புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
கேது தசை:
நான்காவது கேது தசை 7 வருட காலங்கள் நடைபெறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும்.
சுக்கிரன் தசை:
ஐந்தாவதாக வரும் சுக்கிரன் தசை காலங்கள் இருபது வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். சொகுசான வாழ்க்கையும் அமையும்.


பொது பரிகாரம்

விசாக நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் விளா மரமாகும். இம் மரம் உள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் விளையும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

விவாகம், சீமந்தம், பூ முடித்தல், புதிய ஆபரணம் வாங்குதல், பெயர் சூட்டுதல், பந்த கால் நடுதல் கிரகப்பிரவேசம், வியாபாரம் தொடங்குதல், மாடு வாங்குதல், அதிகார பதவிகளை ஏற்று கொள்ளுதல், வேத சாஸ்திரங்களை கற்றல் போன்றவற்றை புனர்பூச நட்சத்திரத்தில் செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. உத்திராடம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தசரத குமாராய வித்மஹே
ஸ்தா வல்லபாய தீமஹி
தன்னோ ராம ப்ரசோத யாத்