Showing posts with label பூரம் உத்திரம். Show all posts
Showing posts with label பூரம் உத்திரம். Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - சிம்மம்


 சிம்ம ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25


  • குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். அவரது விசேஷப் பார்வைகள் தனவாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம், ரண ருண ரோக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

  • இதனால்  வாக்கு வன்மை அதிகரிக்கும். பூர்வீகப் பிரச்னைகள் தீரும்.தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்

  • தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். மாற்றம் இல்லாதவர்களுக்கு செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும்.

  • சிம்ம ராசிக்கு பத்தாம் இடத்தில் வரும் குரு பெயர்ச்சி வேலையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். 

  • தொழில் காரகன் சனி களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

  • வேலை தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். 

  • அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் உயர்வு கட்டாயம் உண்டு . உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும். 

  • அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள். வீட்டில் இன்சொல் பேசுவது அவசியம் 

  • ஆரோக்கியத்தில் படிப்படியான நிலையான முன்னேற்றம் இருக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும்.

  • குருவின் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். 

  • அசையும் அசையா சொத்து சேரும். அத்துடன்  செலவுகள் ஏற்படும். அதை சுப செலவுகளாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு உண்டாகும் 

  • சிலருக்கு வேலை தேடாமல்  வேலை வாய்ப்பு கிடைக்கும் உண்டு, அதை ஏற்றுக் கொண்டால்  அனுகூலமான பலன்களையே  தரும். 

  • வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத்தடைகள் நீங்கும்.  

  • அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும். 

  • அரசாங்கப் பணிபுரிவோர் மேலான நன்மைகளைப் பெறுவர். 

  • சினிமா, கலைத்துறையினர் வாய்ப்புகளை தொடர்ச்சியாக கிடைக்கும் . 

  • மாணவர்களுக்கு சோம்பலை தவீர்க்கவும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு சாதகமான வாய்ப்புகளும்  கிடைக்கும்.

  • வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது.  

  • சிம்ம ராசி பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சில விஷயங்களில் சோதனை காலமாக அமையும் ஆனால்  அமைதியால் அதிக நன்மைகளைப் பெறலாம். 

  • அவசியமில்லாத கடன் வாங்குவதை , கொடுப்பதை முடித்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது.

  • மன அமைதியை கருத்தில் கொண்டு, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

மகம்

  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். 

  • பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். 

  • எதிலும் கவனமாக இருப்பது நல்லது. 

  • வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும்.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. 

  • கடிதப் போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கவலை குறையும். 

  • சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். 

  • நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். 

  • அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவார்கள். மனநிம்மதி உண்டாகும்.

பூரம்  

  • இந்த பெயர்ச்சியால் சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. 

  • நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

  • வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். 

  • வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

  • தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

  • பொதுவான விஷயங்களில்  உங்கள் கருத்துக்களை மற்றவர்களால் ஏற்று கொள்ளப்படும் . வியாபாரப் போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.

உத்திரம்  - 1 பாதம்

  • இந்த குரு பெயர்ச்சியால் இவர்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

  • குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவார்கள். 

  • அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். 

  • பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது மிகவும் நல்லது .

  • எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். 

  • அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். 

  • நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். 

  • கோபத்தால் சின்ன சின்ன  சண்டைகள் ஏற்படலாம். 

  • பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.


பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வருவது, பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும், சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் திருவண்ணாமலை சுவாமி, அம்பாள் வழிபாடு ஆகியவை  வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்

Full Video