Showing posts with label Guru peyarchi palan. Show all posts
Showing posts with label Guru peyarchi palan. Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மிதுனம்

 


மிதுன ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • விரைய ஸ்தானத்திற்கு வரப்போகும் குருவால்  சில சோதனைகள் நடந்தாலும் நன்மைகளும் அதிகம் நடைபெறும்.

  • வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும், புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

  • குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றி கொள்ள வேண்டும் 

  • விரைய ஸ்தானத்திற்கு வரப்போகும் குரு, இந்த அமைப்பில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 4,6,8ம் இடங்களை பார்க்கறார். 

  • இதனால் முன்னேற்றத் தடைகள் நீங்கும், மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அதேசமயம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

  • அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். 

  • எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்று கொள்ளங்கள். நல்லதே நடக்கும்.

  • பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது 

  • வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். 

  • கடன் தருவது, பெறுவதை மிக கவனம் தேவை. சீனிமாத்துறையினர் வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள். 

  • பெண்கள் சமையலறையில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம். 

  • அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். 

  • தொழிலமைப்பில் லாபம் சீராகும்,பணிபுரியும் யாரிடமும் வீண் தகராறு வேண்டாம்.

  • தொழிலில், வியாபாரம் தொய்வின்றி செல்லும், பெயரும், புகழும் கிடைக்கும் 

  • அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே நல்லது. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு.

  • அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்கு  சீரான நன்மைகளை கிடைக்கும்.

  • முதலிட்டில் கவனம் தேவை, உழைப்பு கான பலன் உடனடியாக கிடைக்காது 

  • தூக்கம் பாதிக்கும், உடல் நலனில் அக்கரை தேவை 

  • மாணவர்கள் நன்கு படித்து , அவர்களின் மதிப்பெண் உயரும்.

  • கலைஞர்கள், சிறிய பயணத்தில்  கவனம் தேவை .

  • காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம்.

மிருகசீரிஷம்  3,4 ம் பாதங்கள்

மிருகசீரிஷம் 3,4 ம் பாதங்களில்  பிறந்த   மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

  • சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும்.

  • பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். 

  • விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வார்கள். 

  • உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவார்கள்.

  • உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பார்கள்.
  

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த   மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • இந்த குரு பெயர்ச்சியின் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

  • தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.

  • பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

  • எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

  • மனதிருப்தியுடன் செயலாற்றுவார்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். 

  • கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
  •   

புனர்பூசம்  1,2,3 ம் பாதங்கள்

புனர்பூசம்  1,2,3 ம் பாதங்களில்  பிறந்த   மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • இந்த குரு பெயர்ச்சியால் பாராட்டு கிடைக்கும். ஆனாலும் மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். 

  • ஆன்மீக நாட்டமும், மன தைரியமும்  உற்சாகத்தைக் கொடுக்கும்.

  • தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவார்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். 

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.

  • புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

  • குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். 


பரிகாரம் 

புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மதுரை மீனாட்சி,  விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.


Full Video