திருவாதிரை - 2

நம் தமிழ் - திருவாதிரை

நட்சத்திரம் -திருவாதிரை தொடர்ச்சி




குடும்ப வாழ்க்கை

கண்டதை கவிதையாக்கும் கற்பனை வளம் கொண்டவர்கள் ஆதலால் காதல் இவர்களுக்கு கை வந்த கலையே. வாழ்க்கை துணை, பிள்ளைகளை அதிகம் நேசிப்பார்கள். வாழ்க்கையை ரசித்து, ருசித்து இன்பமாக வாழ்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள முடியும்

நண்பர்கள்

உறவினர்களை விட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆகவே நட்பு வட்டம் பெரிதாக இவர்களுக்கு இருக்கும். ஆனாலும் அடிக்கடி நண்பர்களுடனும், பிறருடன் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். தங்களின் உறவினர், நண்பர்களை முகமலர்ச்சியோடு வரவேற்று அவர்களின் வயிறும், மனமும் குளிரும் வகையில் சிறப்பாக உபசரிப்பார்கள். உறவினர்களின் ஆதரவை மிகவும் விரும்புவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம், ரோகிணி தவிர்ப்பது நல்லது

தொழில்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவாற்றலும் திறமையும் இருக்கும். தங்களின் பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவதுடன் குறுகிய காலத்திலேயே உயர்ந்த நிலைக்கு வருவார்கள். 39 வயதிற்கு மேல் சகல வசதி வாய்ப்புகளையும் பெற்று செல்வம் செல்வாக்குடனும், சமுதாயத்தில் நல்ல உயர்வுடனும் வாழ்வார்கள்.

மக்கள் தொடர்பு, காவல், சுற்றுலா, தொலைபேசி, கனரக மின் ஆற்றல், நிலக்கரிச் சுரங்கம் ஆகிய துறைகளில் பெரிய பதவிகளை வகிப்பார்கள். வாகனம், வாகன உதிரி பாகம், ஹார்ட்வேர் பொருள் ஆகியவற்றை விற்பவர்களாக இருப்பார்கள். நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதி ஆகியவற்றைப் பெரிய அளவில் இவர்களில் பலர் நடத்துவார்கள். அரசுப் பணி, தனியார் துறை எதுவாக இருந்தாலும், மிக உன்னிப்பாக கவனித்து வேலை செய்யக்கூடியவர்கள்

தசா பலன்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை முதல் திசையாக வரும். ராகு தசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் ராகு தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்

ராகு தசை:
ராகு தசை காலங்களில் பிடிவாதம், முன்கோபம், தந்தையுடன் கருத்து வேறுபாடு, பெரியவர்களை மதிக்காத குணம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை, கல்வியில் மந்த நிலை, உடலில் வியாதிகளால் தொல்லை போன்றவை ஏற்படும். ராகு பலம் பெற்றிருந்தால் கெடுதிகள் குறைந்து நற்பலன்களை அடைய முடியும். மேலும் செல்வ நிலை உயரும். குரு தசை:
இரண்டாவதாக வரும் தசை குரு தசை ஆகும். இந்த காலங்களில் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அறிவாற்றலை மென் மேலும் பெருக்கி கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வாய்ப்பு எதிர்பாராத திடீர் தன வரவுகள் மற்றும் பொருளாதார மேன்மைகள் உண்டாகும். சனி தசை:
மூன்றாவதாக வரும் சனி தசை என்றாலும் சனி நல்ல பலம் பெற்று அமைந்திருந்தால் இந்த தசா காலத்தில் எதிலும் முன்னேற்றம், வேலையாட்களின் ஒத்துழைப்பு ஆகியவை ஏற்படும். ஆனால் சனி பலமிழந்திருந்தால் அதாவது தீய நட்சத்திரம் பார்வை அல்லது சேர்க்கை பெற்று இருந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட நேரிடும். உடல் ஆரோக்கியத்திலும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், அக்கினியால் பயம் ஆகியவை ஏற்படும். புதன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை புதன் தசை ஆகும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும் இந்த தசை காலங்களில் நல்ல மேன்மைகள், அசையும் அசையா சொத்து சேர்க்கைகள், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். மேலும் ராசி அதிபதியின் தசை ஆகும். பல நன்மைகள் ஏற்படும். கேது தசை:
ஐந்தாவதாக வரும் கேது தசை 7 வருட காலங்கள் நடைபெறும். பொதுவாக அனைவருக்கும் கேது தசை நன்மை தராது. எனவே இக்காலங்களில் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் ஏற்படும்.

பொது பரிகாரம்

திருவாதிரை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் செங்கரு மரமாகும். இம்மரத்தை வழிபட்டு வந்தால் நல்ல பலன்களை பெற முடியும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் தெய்வ பிரதிஷ்டை செய்வது, மந்திரங்கள் ஜெபிப்பது, வேத பரிகாரங்கள் செய்வது, நீண்ட நாட்களாக பூட்டியுள்ள கதவுகளைத் திறப்பது, சூளைக்கு நெருப்பிடுவது, குழந்தையை தொட்டிலில் இடுத்தல், காது குத்துவது போன்ற காரியங்களை செய்யலாம்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம் 1 2 3, பூரம், சித்திரை 1 2, விசாகம் 4, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர, பிரசோதயாத்


4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

திருவாதிரை 1ம்பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு

திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் மீது குரு பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். எனவே ஆசார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பார்கள். எதிலும் ஒழுங்கையும் நேர்மையையும் விரும்புவார்கள். சற்று முரட்டு குணமும் இருக்கும். தலைமைப் பதவிகளை பெறுபவர்களாக இருப்பார்கள். புதிதாகப் பார்ப்பவர்களிடம் கூட பல காலம் பழகியவரைப்போல் எளிதில் நட்பு கொண்டுவிடுவார்கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற ரீதியில் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவார்கள். சிலர் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இருப்பார்கள். தன் வயதை ஒத்தவர்களை விட, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களின் நட்பையே அதிகம் பெற்றவராக இருப்பார்கள். பிற மொழிகளில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பார்கள் \. வயதானாலும் குழந்தைகளுடன் விளையாடுவதில் மகிழ்ச்சியடைவீர்கள்.

திருவாதிரை 2ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி

திருவாதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகம் சனி பகவான் இருக்கிறார் எனவே இந்தப் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நேர்மை குணம் மற்றும் செயல்பாடு இருக்கும் இந்த சூழ்நிலையிலும் சட்டதிட்டங்களை மீறாமல் நடப்பார்கள் இவர்களில் சிலருக்கு கூச்ச சுபாவம் உடையவராக இருப்பார்கள். பேசும்போது சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு படபடப்பாக பேசி, மற்றவர்களின் மன வருத்தத்துக்கு ஆளாவார்கள். பேசும்போது கூடுமானவரை பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. பெரும்பாலும் தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். அவ்வளவு சுலபத்தில் மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். விளையாட்டுகளில் ஆர்வமும், தான் சார்ந்திருக்கும் அணியின் வெற்றிக்காக கடுமையாக படுபாடுவார்கள்

திருவாதிரை 3ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி

மூன்றாம் பாதத்திற்கு நவாம்ச அதிபதி சனி என்பதால், ஏமாற்றங்களை அதிகம் சந்திப்பார்கள். வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பல கஷ்டமான சூழ்நிலைகளை சந்திக்கும் நிலை அமையும். பிறரை பற்றி இகழ்வாக புறம் பேசுவார்கள். உடல் நோயுடன் அழுக்கு ஆடைகளை அணிந்து இருக்கும் அமைப்பு வரும். பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் சண்டைகளை காண்பதில் விருப்பம் பெற்றிருப்பார்கள். உடன் பிறந்த சகோதரர்களை விட சகோதரிகளே அதிகம் உதவி செய்வார்கள். மூலிகைகள் பற்றி அறிந்து கொள்வதிலும், மூலிகைகளைத் தேடி அலைவதிலும் அலாதி பிரியம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்கள் உங்கள் மனதில் உள்ளதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தமான ஆளாக இருப்பார்கள்.

திருவாதிரை 4ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு

இந்த நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ கடாட்சம் நிரம்பியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திடீர் அதிஷ்டங்கள், யோகங்கள் மூலம் பணம் மற்றும் லாபங்கள் ஏற்படும். பந்துஜன விரோதங்களுடன், காரியவாதியாகவும், பைத்தியக்காரன் போன்ற செயல்களுடன் நீதி நேர்மை இல்லாதவராகவும், காமாந்தகாராகவும் இருப்பார்கள். கணிதத்தில் திறமை, எழுதுவதில் சாமார்த்தியமும் இருக்கும்

பொதுவான குணங்கள்

இந்த நட்சத்திரத்தின் ராசி மிதுனம். மிதுனம் என்பது இரட்டையைக் குறிக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒட்டியும் பேசுவார்கள்; வெட்டியும் பேசுவார்கள். ஒரு கருத்துக்கு ஆதரவும் தெரிவிப்பார்கள்; அதே கருத்தை மற்றொரு சமயம் மறுத்தும் பேசுவார்கள். அதிபதி ராகு என்பதால் முன் கோபமும் முரட்டு தனமும் அதிகமிருக்கும். காரிய வாதியாக திகழும் இவர்கள் தங்களுடைய நன்மைக்காக பொய் சொல்லவும் தயங்க மாட்டார்கள். உற்றார் உறவினர்களை அடிக்கடி பகைத்து கொள்ள நேரிடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல பேசுவதால் இவர்களை இரட்டை நாக்கு உள்ளவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும், எடுக்கும் காரியங்களை முடிக்காமல் விடாத பிடிவாத குணமும் நிரம்பியிருக்கும்.

"இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரும் சோடை போனதில்லை" என்று ஜாதக அலங்காரம் என்ற நூல் கூறுகிறது. உங்கள் திறமையின் மீது சற்று கர்வம் இருக்கும். பள்ளி பருவத்தில் ஆசிரியர் சொல்வதையும் மேலும் யார் எதை சொன்னாலும் அதை கிரகிக்கும் ஆற்றல் உண்டு

நல்ல தோற்றம், அழகு, உடல் வலிமை, திடசித்தமும் உள்ளவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு கடினமான நபர்களை போல் காணப்பட்டாலும், இவர்களிடம் நன்கு பழகிய பின்பு அவர்களின் இனிமையான குணங்களை பலர் தெரிந்து கொள்வார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சிப்பார்கள். தன்னை நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். தனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றாலும் அது குறித்து தெரிந்ததை போல் பேசி சமாளிப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை

கண்டதை கவிதையாக்கும் கற்பனை வளம் கொண்டவர்கள் ஆதலால் காதல் இவர்களுக்கு கை வந்த கலையே. வாழ்க்கை துணை, பிள்ளைகளை அதிகம் நேசிப்பார்கள். வாழ்க்கையை ரசித்து, ருசித்து இன்பமாக வாழ்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள முடியும்

நண்பர்கள்

உறவினர்களை விட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆகவே நட்பு வட்டம் பெரிதாக இவர்களுக்கு இருக்கும். ஆனாலும் அடிக்கடி நண்பர்களுடனும், பிறருடன் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். தங்களின் உறவினர், நண்பர்களை முகமலர்ச்சியோடு வரவேற்று அவர்களின் வயிறும், மனமும் குளிரும் வகையில் சிறப்பாக உபசரிப்பார்கள். உறவினர்களின் ஆதரவை மிகவும் விரும்புவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம், ரோகிணி தவிர்ப்பது நல்லது

தொழில்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவாற்றலும் திறமையும் இருக்கும். தங்களின் பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவதுடன் குறுகிய காலத்திலேயே உயர்ந்த நிலைக்கு வருவார்கள். 39 வயதிற்கு மேல் சகல வசதி வாய்ப்புகளையும் பெற்று செல்வம் செல்வாக்குடனும், சமுதாயத்தில் நல்ல உயர்வுடனும் வாழ்வார்கள்.

மக்கள் தொடர்பு, காவல், சுற்றுலா, தொலைபேசி, கனரக மின் ஆற்றல், நிலக்கரிச் சுரங்கம் ஆகிய துறைகளில் பெரிய பதவிகளை வகிப்பார்கள். வாகனம், வாகன உதிரி பாகம், ஹார்ட்வேர் பொருள் ஆகியவற்றை விற்பவர்களாக இருப்பார்கள். நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதி ஆகியவற்றைப் பெரிய அளவில் இவர்களில் பலர் நடத்துவார்கள். அரசுப் பணி, தனியார் துறை எதுவாக இருந்தாலும், மிக உன்னிப்பாக கவனித்து வேலை செய்யக்கூடியவர்கள்

தசா பலன்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை முதல் திசையாக வரும். ராகு தசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் ராகு தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்

ராகு தசை:
ராகு தசை காலங்களில் பிடிவாதம், முன்கோபம், தந்தையுடன் கருத்து வேறுபாடு, பெரியவர்களை மதிக்காத குணம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை, கல்வியில் மந்த நிலை, உடலில் வியாதிகளால் தொல்லை போன்றவை ஏற்படும். ராகு பலம் பெற்றிருந்தால் கெடுதிகள் குறைந்து நற்பலன்களை அடைய முடியும். மேலும் செல்வ நிலை உயரும்.

குரு தசை:
இரண்டாவதாக வரும் தசை குரு தசை ஆகும். இந்த காலங்களில் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அறிவாற்றலை மென் மேலும் பெருக்கி கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வாய்ப்பு எதிர்பாராத திடீர் தன வரவுகள் மற்றும் பொருளாதார மேன்மைகள் உண்டாகும்.

சனி தசை:
மூன்றாவதாக வரும் சனி தசை என்றாலும் சனி நல்ல பலம் பெற்று அமைந்திருந்தால் இந்த தசா காலத்தில் எதிலும் முன்னேற்றம், வேலையாட்களின் ஒத்துழைப்பு ஆகியவை ஏற்படும். ஆனால் சனி பலமிழந்திருந்தால் அதாவது தீய நட்சத்திரம் பார்வை அல்லது சேர்க்கை பெற்று இருந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட நேரிடும். உடல் ஆரோக்கியத்திலும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், அக்கினியால் பயம் ஆகியவை ஏற்படும்.

புதன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை புதன் தசை ஆகும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும் இந்த தசை காலங்களில் நல்ல மேன்மைகள், அசையும் அசையா சொத்து சேர்க்கைகள், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். மேலும் ராசி அதிபதியின் தசை ஆகும். பல நன்மைகள் ஏற்படும்.

கேது தசை:
ஐந்தாவதாக வரும் கேது தசை 7 வருட காலங்கள் நடைபெறும். பொதுவாக அனைவருக்கும் கேது தசை நன்மை தராது. எனவே இக்காலங்களில் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் ஏற்படும்.

பொது பரிகாரம்

திருவாதிரை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் செங்கரு மரமாகும். இம்மரத்தை வழிபட்டு வந்தால் நல்ல பலன்களை பெற முடியும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் தெய்வ பிரதிஷ்டை செய்வது, மந்திரங்கள் ஜெபிப்பது, வேத பரிகாரங்கள் செய்வது, நீண்ட நாட்களாக பூட்டியுள்ள கதவுகளைத் திறப்பது, சூளைக்கு நெருப்பிடுவது, குழந்தையை தொட்டிலில் இடுத்தல், காது குத்துவது போன்ற காரியங்களை செய்யலாம்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம் 1 2 3, பூரம், சித்திரை 1 2, விசாகம் 4, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர, பிரசோதயாத்


4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

திருவாதிரை 1ம்பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு

திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் மீது குரு பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். எனவே ஆசார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பார்கள். எதிலும் ஒழுங்கையும் நேர்மையையும் விரும்புவார்கள். சற்று முரட்டு குணமும் இருக்கும். தலைமைப் பதவிகளை பெறுபவர்களாக இருப்பார்கள். புதிதாகப் பார்ப்பவர்களிடம் கூட பல காலம் பழகியவரைப்போல் எளிதில் நட்பு கொண்டுவிடுவார்கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற ரீதியில் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவார்கள். சிலர் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இருப்பார்கள். தன் வயதை ஒத்தவர்களை விட, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களின் நட்பையே அதிகம் பெற்றவராக இருப்பார்கள். பிற மொழிகளில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பார்கள் \. வயதானாலும் குழந்தைகளுடன் விளையாடுவதில் மகிழ்ச்சியடைவீர்கள்.

திருவாதிரை 2ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி

திருவாதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகம் சனி பகவான் இருக்கிறார் எனவே இந்தப் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நேர்மை குணம் மற்றும் செயல்பாடு இருக்கும் இந்த சூழ்நிலையிலும் சட்டதிட்டங்களை மீறாமல் நடப்பார்கள் இவர்களில் சிலருக்கு கூச்ச சுபாவம் உடையவராக இருப்பார்கள். பேசும்போது சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு படபடப்பாக பேசி, மற்றவர்களின் மன வருத்தத்துக்கு ஆளாவார்கள். பேசும்போது கூடுமானவரை பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. பெரும்பாலும் தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். அவ்வளவு சுலபத்தில் மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். விளையாட்டுகளில் ஆர்வமும், தான் சார்ந்திருக்கும் அணியின் வெற்றிக்காக கடுமையாக படுபாடுவார்கள்

திருவாதிரை 3ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி

மூன்றாம் பாதத்திற்கு நவாம்ச அதிபதி சனி என்பதால், ஏமாற்றங்களை அதிகம் சந்திப்பார்கள். வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பல கஷ்டமான சூழ்நிலைகளை சந்திக்கும் நிலை அமையும். பிறரை பற்றி இகழ்வாக புறம் பேசுவார்கள். உடல் நோயுடன் அழுக்கு ஆடைகளை அணிந்து இருக்கும் அமைப்பு வரும். பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் சண்டைகளை காண்பதில் விருப்பம் பெற்றிருப்பார்கள். உடன் பிறந்த சகோதரர்களை விட சகோதரிகளே அதிகம் உதவி செய்வார்கள். மூலிகைகள் பற்றி அறிந்து கொள்வதிலும், மூலிகைகளைத் தேடி அலைவதிலும் அலாதி பிரியம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்கள் உங்கள் மனதில் உள்ளதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தமான ஆளாக இருப்பார்கள்.

திருவாதிரை 4ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு

இந்த நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ கடாட்சம் நிரம்பியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திடீர் அதிஷ்டங்கள், யோகங்கள் மூலம் பணம் மற்றும் லாபங்கள் ஏற்படும். பந்துஜன விரோதங்களுடன், காரியவாதியாகவும், பைத்தியக்காரன் போன்ற செயல்களுடன் நீதி நேர்மை இல்லாதவராகவும், காமாந்தகாராகவும் இருப்பார்கள். கணிதத்தில் திறமை, எழுதுவதில் சாமார்த்தியமும் இருக்கும்

முதல் பக்கத்தை அறிய அமுக்கவும்