Showing posts with label ரிஷபம் ராசி - குரு பெயர்ச்சி - 2025. Show all posts
Showing posts with label ரிஷபம் ராசி - குரு பெயர்ச்சி - 2025. Show all posts

ரிஷபம் ராசி - குரு பெயர்ச்சி - 2025

 

இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள்

பொதுவாக ரிஷப ராசிக்காரர்களின்  மதிப்பு மற்றும் மரியாதை  அதிகரிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த பெயர்ச்சிக்கு பிறகு  பணியிடத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் விரும்பிய முறையில் முடிக்க முடியும் . குருவின் செல்வாக்கால் திருமண வாழ்க்கையில் அன்பும் நம்பிக்கையும் நிலவும். உறவுகள் முன்பை விட வலுவாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படும்.

மேலும் 11ம் வீட்டில் பெயர்ச்சியாகி இருக்கும் சனி பகவானும் உங்களுக்கு பல நல்லதை தர உள்ளார் என்பது மிக மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

இது ஒரு அற்புதமான காலகட்டம். நல்ல நேரம்  பயன்படுத்தி கொள்ளவும். வெற்றி மேல் வெற்றி கிட்டும் . உங்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு.  வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

2025ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை கடின உழைப்புக்கு ஏற்றவாறு நல்ல லாபத்தைப் பார்க்க முடியும் .  இந்த குருவின் பெயர்ச்சிக்கு பிறகு கிடைத்த லாபத்தை சேமிக்க முடியும். பொருளாதரத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு மிக சிறப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

காதலை பொறுத்தவரை 5ம் வீட்டை சனி பார்கிறார். இது நல்லது அல்ல. காதல் உறவில் சில பிரச்சனைகள் இருக்கும். கேது நான்காம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் கவலை வேண்டாம். காதல் திருமணத்தை விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். நான்காம் வீட்டிற்கு வரும் கேதுவால் சில பிரச்னைகள் இருந்தாலும்  இந்த ஆண்டு பொதுவாக குடும்ப  வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கும்.  இந்த ஆண்டு நிலம் மற்றும் கட்டிடங்கள் மற்றும்  ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். சர்ச்சைக்குரிய நிலத்தை வாங்குவதையும், புதிய மற்றும் பழைய வாகனங்களை   வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். இந்த சனி மற்றும் குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்கும் என்றுதான் சொல்ல வேண்டும் .

குரு பார்வையின் பலன்கள்



2ஆம் வீட்டிற்கு வரும்  குரு தனது  5, 7, 9ம் பார்வையாக முறையே ஆறாம்  வீடு, எட்டாம் வீடு மற்றும் பத்தாம்  வீடுகளை பார்க்கிறார்.  அதாவது ரோகஸ்தானம், துஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானமாகிய  கர்ம ஸ்தானம் பார்க்கிறார். இந்த அடிப்படையில் தற்போதைய குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்கு  உன்னதமான காலகட்டமாக இருக்கும்.

ஆறாம்  வீடு, எட்டாம் வீடு மற்றும் பத்தாம்  வீடுகளை குரு பார்ப்பதால்  மே மாதத்திற்கு பிறகு தொழில், வியாபாரம் போன்றவற்றில் பல வழிகளில் மங்களகரமாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும். அதேசமயம் வார்த்தைகளில் நிதானமும், உடல்நலத்தில் அக்கறையும் மிகமிக முக்கியமானதாக இருக்கும்.

குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும். செல்வ செழிப்பு ஏற்படும். வீடு வாகன யோகம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.