தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - தனுசு

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு, சூரியன், பத்தாம் இடத்தில் கேது, முன்றாம் இடத்தில் சனி, செவ்வாய் நான்காம் இடத்தில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு தனுசு ராசிகாரர்களுக்கு கவனமாகச் செயல்பட்டால் கணிசமான நன்மைகள் கிட்டும்



  • இந்த குரோதி புத்தாண்டு அறிவுசார் மற்றும் செயல்திறன் கூடக்கூடிய காலமாக இருக்கும்.

  • அலுவலகத்தில் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும். எந்த சமயத்திலும் அலட்சியமும் அவசரமும் கூடாது. மேலதிகாரிகளிடம் பேசும்போது வீண் ரோஷம் வேண்டாம். இப்போதைய பொறுமையே எதிர்கால ஏற்றம்.

  • இல்லத்தில் நல்லவைக்குக் குறைவிருக்காது. அவை நிலைக்க நாவடக்கம் முக்கியம்.

  • திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு ஆசை நிறைவேறும்.

  • தம்பதியர் பிரச்னையில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம்.

  • பயணங்கள் அதிகரிக்கும். தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு மனை வாங்கலாம்.

  • சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை பத்திரமாக வையுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும்.

  • செய்யும் வர்த்தகம் வாணிபத்தில் முறையான உழைப்பு இருந்தால் நிலையான முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம்.

  • நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து பயணம் செய்வது சிறப்பான அம்சமாகும். வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.

  • அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்ட நடைமுறைகளில் அலட்சியம் கூடாது. அரசு,அரசியல் சார்ந்தவர்கள் அடக்கமாகச் செயல்படுவது நல்லது. பொது இடத்தில் வாக்குறுதிகள் தரும் முன் யோசியுங்கள். யாருக்கும் ஜாமீன், ஜவாப் தரவேண்டாம்.

  • கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் நிச்சயம் வரும். படைப்பு சார்ந்த ரகசியங்களை ஜம்பத்துக்காகப் பகிர வேண்டாம்.

  • தனுசு ராசி பெண்களுக்கு நெருக்கமானவர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்

  • மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்ணும் பெறுவீர்கள்.

  • இரவில் வெளி இடங்களில் தங்குவதை இயன்றவரை தவிருங்கள். வாகத்தில் கவனச் சிதறல் கூடாது. வயிறு தொடர்பான பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ள என்பதால், பிறர் தரும் உணவு, பானம் தவிருங்கள். உணவை முறைப்படுத்துங்கள்.

  • அடிவயிறு, கழிவு உறுப்பு, முக உறுப்பு, ரத்த நாள உபாதைகள் வரலாம்.

  • கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் நிச்சயம் வரும். படைப்பு சார்ந்த ரகசியங்களை ஜம்பத்துக்காகப் பகிர வேண்டாம்.

  • தனுசு ராசி பெண்களுக்கு நெருக்கமானவர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்

  • மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்ணும் பெறுவீர்கள்.

  • இரவில் வெளி இடங்களில் தங்குவதை இயன்றவரை தவிருங்கள். வாகத்தில் கவனச் சிதறல் கூடாது. வயிறு தொடர்பான பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ள என்பதால், பிறர் தரும் உணவு, பானம் தவிருங்கள். உணவை முறைப்படுத்துங்கள்.

  • அடிவயிறு, கழிவு உறுப்பு, முக உறுப்பு, ரத்த நாள உபாதைகள் வரலாம்.

  • நட்சத்திர பலன்கள்



  • மூல நட்சத்திரத்தில் பிறந்த தனுசு ராசி இந்த குரோதி வருட தமிழ் புத்தாண்டு குதூகலமான இருக்கும்.தடைபட்ட பணிகள் துரிதமாகும். அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகனம் என சுப பலன்கள் நடக்கும். சிலரின் வாழ்க்கைத் துணை தொழிலுக்காக கடல்கடந்து செல்ல வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகள் உண்டு ஜாக்கிரதையாக இருக்கவும்

  • பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த தனுசு ராசி இந்த குரோதி வருட தமிழ் புத்தாண்டு மன நிறைவு, மன நிம்மதி மகிழ்ச்சியை அதிகரிக்கும் வருடமாக அமையும். உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

  • உத்திராடம் 1 பாதத்தில் பிறந்த தனுசு ராசி இந்த குரோதி வருட தமிழ் புத்தாண்டு தடைகள் விலகும். பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவதால் சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி, நல்ல வருமானம் கிடைக்கும் கணவன்- மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். சுருக்கமாக அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

  • பரிகாரம்



  • வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

  • வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கக் கூடிய குரு பகவானை வழிபாடு செய்து வர செயல்பாடுகளில் இருந்து வந்த தாமதம், தடை விலகும்.

  • செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ வைத்து, வழிபட்டு உங்களின் கோரிக்கையை சொல்லி வர அனைத்து காரியங்களும் சிக்கீரம் நடக்கும்.